TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:48 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 11:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


"ஈழத்து இயற்கை மருத்துவம் "

Go down

"ஈழத்து இயற்கை மருத்துவம் " Empty "ஈழத்து இயற்கை மருத்துவம் "

Post by logu Thu Jun 13, 2013 10:21 pm

[You must be registered and logged in to see this image.]
"ஈழத்து இயற்கை மருத்துவம் "

“நோயற்றவன் பத்தியத்தை கடைப்பிடித்தால் மருந்து தேவையில்லை. பத்தியத்தை கைவிட்டால் மருந்தால் ஆவதொன்றுமில்லை.
- பழமொழி.
பத்தியமும் அபத்தியமும்
ஆயுர்வேதம் தனது வைத்திய முறைகளில் உணவுக்கு தனி முக்கியத்துவம் கொடுக்கிறது. மருந்துடன், வியாதிக்கேற்ற பத்திய உணவையும் பரிந்துரைக்கிறது. இந்த பத்திய உணவு முறைகளை கடைபிடிக்காவிட்டால், மருந்துகளால் மட்டும் பயனிருக்காது.
ஆயுர்வேதம், வாதம், பித்தம், கபம் என்ற மூன்றின் சமநிலை கெட்டால் வியாதிகள் உண்டாகும் என்ற அடிப்படை கருத்தை கொண்டது. பத்திய உணவு, தகுந்த மருந்துடன் இனணந்து, நோயை களைய, உதவுகிறது. நம்மில் பலர், பத்தியம் என்றாலே பயப்படுகிறார்கள். ஆங்கில முறை வைத்தியத்தில் மருந்துகளுக்கு பத்தியம் இல்லை. மருந்துகள் மட்டும் சாப்பிட்டால் போதாதா என்று நினைப்பவர்கள் இங்கு அதிகம். ஆனால் பத்தியமின்றி நோயைக் குணப்படுத்த இயலாது.
சாதாரணமாக அஜீர்ணம் ஜுரத்தை உண்டாக்கும். இயற்கை வெளிபாடுகளை தவிர்ப்பது, நீண்ட பிரயாணம், போன்ற காரணங்களால் உண்டாகும். இந்த நோய்க்கு, சூடாக வெந்நீர் சாப்பிட்டால் நல்லது. வெந்நீரை சிறிது சிறிதாக குடித்து வந்தால், உடலின் இயற்கை சூடு அதிகமாகிறது. வாயு தோஷம் கெட்டிருப்பதை வெந்நீர் நேர்ப்படுத்துகிறது. உடல் லேசாகிறது. இங்கு வெந்நீர் பத்தியம்.
பத்திய முறைகள்:
1. உப்பில்லா பத்தியம்- ‘உப்பில்லா பண்டம் குப்பையிலே’ என்பார்கள். இப்போது உப்புள்ள பண்டம் தான் குப்பையிலே. உப்பு உடலுக்கு தேவையான பொருள் தான். வயிற்றில் ‘அக்னி’, உப்பால் வளருகிறது. உணவில் ருசி கூட்டுவது உப்பு. ஒரு நாளைக்கு ஒரு கிராம் உப்பு தான் மனித உடலுக்கு தேவை. நாம் சாப்பிடும் உணவுகள், காய்கறிகளிலிருந்தே உடலுக்கு தேவையான உப்பு கிடைக்கும். எனவே தனியாக உப்பு சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. அதிக உப்பு ஆபத்து. இதன் விளைவுகள்.
• அதிக உப்பு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இதயநோய் ஏற்படும். சிலருக்கு சோடியம் உப்பை வெளியேற்ற முடியாது. அப்போது தேங்கிய உப்பு இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இரத்தக் குழாய்களில் உப்பு சேர்ந்து, குழாய்களில் உட்புறத்தில் படிந்து, இரத்தம் முழுவதுமாக ஒட முடியாமல் தடை செய்யும்.
• உடலிலிருந்து உப்பு வியர்வையாகவும், சிறுநீராகவும் வெளியேறும். மஹோதரம் போன்ற வியாதிகளில் உப்பு, குடலின் வெளியே சவ்வுகளிடம் தேங்கி விடும். இந்த மாதிரி சமயங்களில் உப்பில்லா பத்தியம் பலனளிக்கும். மகோதரத்திலும், வேறு காரணங்களாலும் அதிக அளவில் சிறுநீர் போவதால் சிறுநீரகம் பாதிக்கப்படும். இந்த பாதிப்பை உப்பு அதிகமாக்கும். உப்பை நிறுத்துவது தான் வழி.
• உடல் அரிப்பு, படை, அக்கி போன்ற தோல் வியாதிகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளும் உப்பை தவிர்க்க வேண்டும்.
• உப்பில்லா பத்தியம் மனநிலைமையும் சரிவர இருக்க உதவுகிறது. வியர்வை தோன்றாது. அசதி குறையும்.
உப்பில்லா பத்தியத்தை கடைப்பிடிக்கும் போது, பால், மோர், இவை
சேர்ந்த அன்னம், பொங்கல் போன்றவற்றை சாப்பிடலாம். புளி, மிளகாய், எண்ணை, முற்றிய காய்கறிகள், இவைகளை உப்பின்றி சமைத்து உண்பதால் கேடுகள் விளையும் உப்பை நிறுத்துவதின் முக்கிய காரணம் நுண்ணிய ரத்தக் குழாய்களில் எற்பட்ட அடைப்பை நீக்குவதே.
உப்பை அறவே குறைக்க முடியாதவர்கள் இந்துப்பை சேர்த்துக்
கொள்ளலாம். நல்ல தரமுள்ள இந்துப்பு கிடைப்பது கடினம். உப்பை வறுத்து சேர்ப்பதும் உண்டு. மாதத்தில் பல நாட்கள் உப்பை முழுவதும் தவிர்த்து இதர நாட்களில் உப்பை வறுத்தும் உபயோகிக்கலாம்.
2. புளிப்பில்லாத பத்தியம்
புளி, அரிசி, துவரை, உளுந்து இவற்றை செரிக்க உதவுகிறது. குடலில்
வாயுவையும் மலத்தையும் தேங்காமல் வெளியேற்ற உதவும். புளியை தவிர எலுமிச்சை, நாரத்தை போன்றவைகளும் புளிப்புச் சுவை உள்ளவை.
அதிக அளவில் புளியை உபயோகித்தால், இரப்பை நோய்கள், வயிற்றில் புண், ஜீரணக் குறைவு, நெஞ்செரிச்சல் போன்றவை தோன்றும். தோல் வியாதிகளும் உண்டாகலாம். சிறுநீரக கோளாறுகளுக்கும் புளி காரணமாகலாம். இந்த நிலைமைகளில், புளியை தவிர்க்க வேண்டும். புளி மட்டுமல்ல எலுமிச்சம் பழம், தக்காளி, புளித்த மோர் இவற்றையும் தவிர்க்க வேண்டும். பழுத்த புளியை 6-7 மாதங்கள் ஜாடியில் வைத்து, எடுத்து உபயோகிக்கும் போது, அனலிலிட்டு வாட்டிய பின் உபயோகித்தால் புளியால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். பத்திய உணவுகளுக்காக புளி பதப்படுத்தப்பட்டு உபயோகமாகிறது.
வாய்வு பதார்த்தங்களை தவிர்க்கும் பத்தியம்
கிழங்கு வகைகள், வாழைக்காய், கொத்தவரங்காய், பூசணி, பரங்கி, பருப்பு இவை வாய்வை உண்டாக்குபவை. இவை ஜீரணமாக தாமதமாகும். வயிறு முழுவதும் வாயு சேர்ந்து, மேலேறி விலாவில் வலியை உண்டாக்கும். மூட்டுவலி உண்டாக்கும். இந்த வாய்வுப் பண்டங்களுக்கில்லாத பத்திய உணவு மேற்கொண்டால், வாய்வின் அழுத்தம் குறைந்து, பாதிப்புகள் நீங்குகின்றன.
கரப்பான் போன்ற தோல் வியாதிகள் உள்ளவர்கள், இட்லி, தோசை, முட்டைக்கோஸ், கருணைக்கிழங்கு, வெங்காயம், கீரை, தக்காளி, நல்லெண்ணை, மாங்காய், புதிய அரிசி, புளித்த தயிர், மீன் இவற்றை தவிர்க்க வேண்டும்.
தவறான உணவு சேர்க்கைகள் (விருத்தாஹாரங்கள்)
சில உணவுகள் ஒன்றுக்கொன்று சேராதவை. இவற்றை தனித்து உண்ண வேண்டும். ஆயுர்வேதம் இவற்றை தனித்துக் கூறும். இந்த ஒவ்வாத கலவை உணவுகளை தொடர்ந்து உபயோகித்தால் கெடுதல் ஏற்படும்.
இவை பின்வருமாறு
உணவு
1. தயிர்
2. உருளைக் கிழங்கு கத்திரிக்காய், மிளகாய்
3. பால்
4. முட்டை
5. எலுமிச்சை
6. மாங்காய்
7. முள்ளங்கி
8. மிளகு
9. தேன்
10. சூடான உணவு
இத்துடன் சேர்க்கக் கூடாத உணவு
வாழைப்பழம், மீன், மாங்காய், கோழிக்கறி
வெள்ளரி, தயிர், பால்
புளித்தமாவு பண்டங்கள் (இட்லி) மீன், பச்சை முள்ளங்கி
பால் மாமிசம், வாழைப்பழம், மீன்
தயிர், தக்காளி, பால், வெள்ளரி, பால், பால் சேர்த்த டீ
வெள்ளரி, சீஸ், தயிர்
உளுந்து
மணத்தக்காளி
சூடான உணவு, நெய், நல்லெண்ணை
தயிர்.
இச்சாபத்தியம்
எந்த நோயின் தாக்குதலும் இல்லாத நிலையில், உடல் ஆரோக்கியத்திற்காக விரும்பி, கடைப்பிடிக்கும் பத்தியம் இச்சாபத்தியம் எனப்படும். வாரத்தில் ஓரிரு நாட்களை தேர்ந்தெடுத்து அந்த நாட்களில் பத்தியம் இருப்பது நல்லது. இச்சாபத்தியத்தின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் கொத்தவரங்காய், அகத்திக்கீரை, பாகற்காய், நல்லெண்ணை, கடுகு, எள் கடலை, பலாப்பழம், பெருங்காயம், பூண்டு, புகையிலை, கள், இறைச்சி (கோழி, பன்றி, நண்டு, மீன்)
உணவை வயதிற்கேற்ப அமைத்துக் கொள்ளவும். வயதானால் லேசான உணவை உட்கொள்வது அவசியம். முதுமை நெருங்கும் போதே, உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். வாய்வு இல்லாத உணவுகள் நல்லது.
காலையில் ஏற்ற உணவுகள்- பருப்பு வகைகள் (கடலை, துவரை, உளுந்து, பயறு, காராமணி, மொச்சை) தோஷ சம திரவியங்கள் (மிளகு, சுக்கு, பெருங்காயம், கடுகு)
பகலில் ஏற்ற உணவுகள்- கிழங்குகள், பழங்கள், மசாலாக்கள், தயிர், கீரை போன்ற மெதுவாக ஜீரணமாகும் உணவுகள்
இரவில் ஏற்ற உணவுகள்- மோர், பிஞ்சு காய்கறிகள், அவரை, முருங்கை போன்றவை மணத்தக்காளி வற்றல் போன்றவை.
பத்திய உணவு, ஆயுர்வேதம், மருந்துடன், வாதம், பித்தம், கபம், வியாதிகள், அஜீர்ணம், ஜுரத்தை, நோய்க்கு, பத்திய முறைகள், உப்பில்லா பத்தியம்,
ரத்த அழுத்தம், இதயநோய், சிறுநீரகம், உடல் அரிப்பு, படை, அக்கி, தோல் வியாதிகளால், புளிப்பில்லாத பத்தியம், இரப்பை நோய்கள், வயிற்றில் புண், ஜீரணக் குறைவு, நெஞ்செரிச்சல், இச்சாபத்தியம்,
பத்திய உணவு “நோயற்றவன் பத்தியத்தை கடைப்பிடித்தால் மருந்து தேவையில்லை. பத்தியத்தை கைவிட்டால் மருந்தால் ஆவதொன்றுமில்லை.
- பழமொழி.
பத்தியமும் அபத்தியமும் ஆயுர்வேதம் தனது வைத்திய முறைகளில் உணவுக்கு தனி முக்கியத்துவம் கொடுக்கிறது. மருந்துடன், வியாதிக்கேற்ற பத்திய உணவையும் பரிந்துரைக்கிறது. இந்த பத்திய உணவு முறைகளை கடைபிடிக்காவிட்டால், மருந்துகளால் மட்டும் பயனிருக்காது. ஆயுர்வேதம், வாதம், பித்தம், கபம் என்ற மூன்றின் சமநிலை கெட்டால் வியாதிகள் உண்டாகும் என்ற அடிப்படை கருத்தை கொண்டது. பத்திய உணவு, தகுந்த மருந்துடன் இனணந்து, நோயை களைய, உதவுகிறது. நம்மில் பலர், பத்தியம் என்றாலே பயப்படுகிறார்கள். ஆங்கில முறை வைத்தியத்தில் மருந்துகளுக்கு பத்தியம் இல்லை. மருந்துகள் மட்டும் சாப்பிட்டால் போதாதா என்று நினைப்பவர்கள் இங்கு அதிகம். ஆனால் பத்தியமின்றி நோயைக் குணப்படுத்த இயலாது. சாதாரணமாக அஜீர்ணம் ஜுரத்தை உண்டாக்கும். இயற்கை வெளிபாடுகளை தவிர்ப்பது, நீண்ட பிரயாணம், போன்ற காரணங்களால் உண்டாகும். இந்த நோய்க்கு, சூடாக வெந்நீர் சாப்பிட்டால் நல்லது. வெந்நீரை சிறிது சிறிதாக குடித்து வந்தால், உடலின் இயற்கை சூடு அதிகமாகிறது. வாயு தோஷம் கெட்டிருப்பதை வெந்நீர் நேர்ப்படுத்துகிறது. உடல் லேசாகிறது. இங்கு வெந்நீர் பத்தியம்.பத்திய முறைகள்:1. உப்பில்லா பத்தியம்- ‘உப்பில்லா பண்டம் குப்பையிலே’ என்பார்கள். இப்போது உப்புள்ள பண்டம் தான் குப்பையிலே. உப்பு உடலுக்கு தேவையான பொருள் தான். வயிற்றில் ‘அக்னி’, உப்பால் வளருகிறது. உணவில் ருசி கூட்டுவது உப்பு. ஒரு நாளைக்கு ஒரு கிராம் உப்பு தான் மனித உடலுக்கு தேவை. நாம் சாப்பிடும் உணவுகள், காய்கறிகளிலிருந்தே உடலுக்கு தேவையான உப்பு கிடைக்கும். எனவே தனியாக உப்பு சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. அதிக உப்பு ஆபத்து. இதன் விளைவுகள்.
• அதிக உப்பு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இதயநோய் ஏற்படும். சிலருக்கு சோடியம் உப்பை வெளியேற்ற முடியாது. அப்போது தேங்கிய உப்பு இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இரத்தக் குழாய்களில் உப்பு சேர்ந்து, குழாய்களில் உட்புறத்தில் படிந்து, இரத்தம் முழுவதுமாக ஒட முடியாமல் தடை செய்யும்.
• உடலிலிருந்து உப்பு வியர்வையாகவும், சிறுநீராகவும் வெளியேறும். மஹோதரம் போன்ற வியாதிகளில் உப்பு, குடலின் வெளியே சவ்வுகளிடம் தேங்கி விடும். இந்த மாதிரி சமயங்களில் உப்பில்லா பத்தியம் பலனளிக்கும். மகோதரத்திலும், வேறு காரணங்களாலும் அதிக அளவில் சிறுநீர் போவதால் சிறுநீரகம் பாதிக்கப்படும். இந்த பாதிப்பை உப்பு அதிகமாக்கும். உப்பை நிறுத்துவது தான் வழி.
• உடல் அரிப்பு, படை, அக்கி போன்ற தோல் வியாதிகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளும் உப்பை தவிர்க்க வேண்டும்.• உப்பில்லா பத்தியம் மனநிலைமையும் சரிவர இருக்க உதவுகிறது. வியர்வை தோன்றாது. அசதி குறையும்.உப்பில்லா பத்தியத்தை கடைப்பிடிக்கும் போது, பால், மோர், இவைசேர்ந்த அன்னம், பொங்கல் போன்றவற்றை சாப்பிடலாம். புளி, மிளகாய், எண்ணை, முற்றிய காய்கறிகள், இவைகளை உப்பின்றி சமைத்து உண்பதால் கேடுகள் விளையும் உப்பை நிறுத்துவதின் முக்கிய காரணம் நுண்ணிய ரத்தக் குழாய்களில் எற்பட்ட அடைப்பை நீக்குவதே.உப்பை அறவே குறைக்க முடியாதவர்கள் இந்துப்பை சேர்த்துக் கொள்ளலாம். நல்ல தரமுள்ள இந்துப்பு கிடைப்பது கடினம். உப்பை வறுத்து சேர்ப்பதும் உண்டு. மாதத்தில் பல நாட்கள் உப்பை முழுவதும் தவிர்த்து இதர நாட்களில் உப்பை வறுத்தும் உபயோகிக்கலாம்.2. புளிப்பில்லாத பத்தியம்புளி, அரிசி, துவரை, உளுந்து இவற்றை செரிக்க உதவுகிறது. குடலில் வாயுவையும் மலத்தையும் தேங்காமல் வெளியேற்ற உதவும். புளியை தவிர எலுமிச்சை, நாரத்தை போன்றவைகளும் புளிப்புச் சுவை உள்ளவை. அதிக அளவில் புளியை உபயோகித்தால், இரப்பை நோய்கள், வயிற்றில் புண், ஜீரணக் குறைவு, நெஞ்செரிச்சல் போன்றவை தோன்றும். தோல் வியாதிகளும் உண்டாகலாம். சிறுநீரக கோளாறுகளுக்கும் புளி காரணமாகலாம். இந்த நிலைமைகளில், புளியை தவிர்க்க வேண்டும். புளி மட்டுமல்ல எலுமிச்சம் பழம், தக்காளி, புளித்த மோர் இவற்றையும் தவிர்க்க வேண்டும். பழுத்த புளியை 6-7 மாதங்கள் ஜாடியில் வைத்து, எடுத்து உபயோகிக்கும் போது, அனலிலிட்டு வாட்டிய பின் உபயோகித்தால் புளியால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். பத்திய உணவுகளுக்காக புளி பதப்படுத்தப்பட்டு உபயோகமாகிறது.வாய்வு பதார்த்தங்களை தவிர்க்கும் பத்தியம் கிழங்கு வகைகள், வாழைக்காய், கொத்தவரங்காய், பூசணி, பரங்கி, பருப்பு இவை வாய்வை உண்டாக்குபவை. இவை ஜீரணமாக தாமதமாகும். வயிறு முழுவதும் வாயு சேர்ந்து, மேலேறி விலாவில் வலியை உண்டாக்கும். மூட்டுவலி உண்டாக்கும். இந்த வாய்வுப் பண்டங்களுக்கில்லாத பத்திய உணவு மேற்கொண்டால், வாய்வின் அழுத்தம் குறைந்து, பாதிப்புகள் நீங்குகின்றன. கரப்பான் போன்ற தோல் வியாதிகள் உள்ளவர்கள், இட்லி, தோசை, முட்டைக்கோஸ், கருணைக்கிழங்கு, வெங்காயம், கீரை, தக்காளி, நல்லெண்ணை, மாங்காய், புதிய அரிசி, புளித்த தயிர், மீன் இவற்றை தவிர்க்க வேண்டும்.தவறான உணவு சேர்க்கைகள் (விருத்தாஹாரங்கள்) சில உணவுகள் ஒன்றுக்கொன்று சேராதவை. இவற்றை தனித்து உண்ண வேண்டும். ஆயுர்வேதம் இவற்றை தனித்துக் கூறும். இந்த ஒவ்வாத கலவை உணவுகளை தொடர்ந்து உபயோகித்தால் கெடுதல் ஏற்படும். இவை பின்வருமாறுஉணவு1. தயிர்2. உருளைக் கிழங்கு கத்திரிக்காய், மிளகாய்3. பால்4. முட்டை5. எலுமிச்சை6. மாங்காய்7. முள்ளங்கி8. மிளகு9. தேன்10. சூடான உணவுஇத்துடன் சேர்க்கக் கூடாத உணவுவாழைப்பழம், மீன், மாங்காய், கோழிக்கறி வெள்ளரி, தயிர், பால்புளித்தமாவு பண்டங்கள் (இட்லி) மீன், பச்சை முள்ளங்கிபால் மாமிசம், வாழைப்பழம், மீன்தயிர், தக்காளி, பால், வெள்ளரி, பால், பால் சேர்த்த டீவெள்ளரி, சீஸ், தயிர்உளுந்துமணத்தக்காளிசூடான உணவு, நெய், நல்லெண்ணைதயிர்.இச்சாபத்தியம் எந்த நோயின் தாக்குதலும் இல்லாத நிலையில், உடல் ஆரோக்கியத்திற்காக விரும்பி, கடைப்பிடிக்கும் பத்தியம் இச்சாபத்தியம் எனப்படும். வாரத்தில் ஓரிரு நாட்களை தேர்ந்தெடுத்து அந்த நாட்களில் பத்தியம் இருப்பது நல்லது. இச்சாபத்தியத்தின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் கொத்தவரங்காய், அகத்திக்கீரை, பாகற்காய், நல்லெண்ணை, கடுகு, எள் கடலை, பலாப்பழம், பெருங்காயம், பூண்டு, புகையிலை, கள், இறைச்சி (கோழி, பன்றி, நண்டு, மீன்) உணவை வயதிற்கேற்ப அமைத்துக் கொள்ளவும். வயதானால் லேசான உணவை உட்கொள்வது அவசியம். முதுமை நெருங்கும் போதே, உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். வாய்வு இல்லாத உணவுகள் நல்லது. காலையில் ஏற்ற உணவுகள்- பருப்பு வகைகள் (கடலை, துவரை, உளுந்து, பயறு, காராமணி, மொச்சை) தோஷ சம திரவியங்கள் (மிளகு, சுக்கு, பெருங்காயம், கடுகு) பகலில் ஏற்ற உணவுகள்- கிழங்குகள், பழங்கள், மசாலாக்கள், தயிர், கீரை போன்ற மெதுவாக ஜீரணமாகும் உணவுகள் இரவில் ஏற்ற உணவுகள்- மோர், பிஞ்சு காய்கறிகள், அவரை, முருங்கை போன்றவை மணத்தக்காளி வற்றல் போன்றவை.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum