TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


திருந்தி வாழ்வதே வாழ்க்கை!

Go down

திருந்தி வாழ்வதே வாழ்க்கை! Empty திருந்தி வாழ்வதே வாழ்க்கை!

Post by udhayam72 Tue May 21, 2013 10:53 am

திருந்தி வாழ்வதே வாழ்க்கை!


ஜோசளினும் வில்லியம்ஸும் காதலித்து மணம் புரிந்து கொண்டார்கள்.

அவர்களது திருமண விழாவின் இறுதியில், ஜோசளினின் அன்னை அவர்களுக்கு வங்கி சேமிப்பு கணக்கு புத்தகமொன்றை ஆரம்பித்து பரிசளித்தார். அதில் $1,000 போடப்பட்டிருந்தது.

ஜோசளினின் அன்னை:
"ஜோசளின் இந்த சேமிப்பு புத்தகத்தை உங்கள் திருமண வாழ்கையின் பதிவேடாக பாவித்து கவனமாக வைத்துக்கொள்.

எப்போதெல்லாம் நீ மகிழ்ச்சியான தருணங்களை சந்திக்கிறாயோ, அப்போதெல்லாம் உன் மகிழ்ச்சியின் அளவிற்கேற்ப பணத்தினை வைப்பு செய்... அதனருக்கில் காரணத்தை எழுத மறந்துவிடாதே.

இதுதான் நான் உனக்கு தரும் திருமணப் பரிசு... இன்றைய தினத்தை நினைவு கூறும் வகையில் நான் ஒரு சிறிய தொகையை சேமிப்பில் போட்டிருக்கிறேன்.

மீதியை நீ வில்லியம்சுடன் சேர்ந்து சேமிக்க வேண்டும்.

பின்னொரு காலத்தில் இந்த சேமிப்பு புத்தகத்தை பார்க்கும் போது, அது உன் திருமண வாழ்க்கை உனக்கு கொடுத்த மகிழ்ச்சியை நினைவுறுத்தும்."

தன் கணவனுடன் தனித்திருக்கையில், ஜோசளின் தன் தாயின் பரிசினைப் பற்றி வில்லியம்ஸ்க்கு கூறினாள்.
இருவருக்கும் ஜோசளினின் தாய் அளித்த பரிசும் அவர் கொடுத்த விளக்கமும் பிடித்திருந்தது.
தாங்கள் இருவரும் சேர்ந்து சேமிக்கவிருக்கும் முதல் தருனத்திற்காக ஆவலுடன் காத்திருந்தனர்...
வில்லியம்ஸின் பிறந்தநாள் வந்தது... திருமணமான பின் வந்த முதல் பிறந்தநாள்... அவர்களுக்கு சிறப்பான, மகிழ்ச்சியான நாளாக அமைந்தது. அன்றே அவர்கள் முதல் தொகையாக $100 செமித்தார்கள்.

பின்பு...
தேன் நிலவிற்காக சென்ற போது $300.
ஜோசளினுக்கு வருமானம் கூடிய போது $100.
ஜோசளின் கருவுற்ற போது $2,000.
வில்லியம்சுக்கு பதவி உயர்வு கிட்டிய போது $1,000.

இவ்வாறு வங்கிக் கணக்கும் அவர்களது காதலைப் போல் வளர ஆரம்பித்தது.

சில வருட திருமண வாழ்கையின் பின், அவர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் தோன்ற ஆரம்பித்தது.
சிறிய விஷயங்களுக்கு கூட அவர்களுக்குள் பெரிய மோதலே ஏற்படும்.
அவர்கள் பேசிக்கொள்வதே சிறிது சிறிதாக குறைந்து அடியோடு நின்றே விட்டது.
காதலும் புரிந்துணர்வும் இல்லாத வாழ்கையை வெறுத்தார்கள்.
தாம் இணைந்ததை நினைத்து வருந்தத் தொடங்கினார்கள்.
இது படிப் படியாக அவர்களை விவாகரத்து வரை இழுத்துச் சென்றது.

ஒரு நாள் தன் தாயிடம் சென்ற ஜோசளின்,
"அம்மா, என்னால் இனிமேலும் வில்லியம்சுடன் இணைந்து வாழ முடியாது... எப்படித்தான், இவரை ஒருகாலத்தில் விரும்பியதாக நினைத்தேனோ தெரியவில்லை. அவருடன் சேர்ந்திருக்கும் ஓவ்வொரு நொடியும் நரக வேதனையை அனுபவிக்கிறேன்... ஆதலால், விவாகரத்து பெறுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளோம். "
என்று கூறினாள்.



தன் மகள் கூறுவதை பொறுமையாக செவிமடுத்த அந்த தாய்,
"நீ கூறுவது உண்மை ஜோசளின். சேர்ந்து வாழ்வது துன்பமெனில், விவாகரத்து ஒன்றே சரியான தீர்வு. ஆனால், அதற்கு முன்பாக ஒரு காரியம் செய்... உனக்கு நினைவிருக்கிறதா, உன் திருமண நாளன்று நான் ஆரம்பித்து தந்த சேமிப்பு கணக்கு... அதனை மூடிவிடு. சேமித்த பணத்தையெல்லாம் எடுத்து செலவழித்து விடு. விவாகரத்திற்குப் பின் இந்த கசப்பான திருமணத்தின் சான்றுகள் எதுவும் உன்னுடன் இருக்கக் கூடாது."
என்று அறிவுறுத்தினாள்.


ஜோசளினுக்கும் தன் தாய் சொல்வது சரியாகவே பட்டது.
உடனடியாக வங்கிக்கு சென்று, கணக்கை மூடுவதற்காக காத்திருந்தாள்.
அவள் வங்கிக்கு சென்ற வேளை, நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று... அப்படி வரிசையில் காத்திருந்த போது, தன் கையில் இருந்த கணக்கு புத்தகத்தையும் அதிலிருந்த பதிவுகளையும் பார்வையிட்டாள்.
அதனை படிக்கும் போது, வில்லியம்சுடன் களித்த மகிழ்ச்சியான தருணங்கள் அவள் நினைவிற்கு வந்தது...
அவளை அறியாமலே, அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது...
தான் வில்லியம்ஸ் மீது வைத்திருக்கும் காதலை புரிந்து கொண்டாள்.
வங்கிக் கணக்கை மூடாமலேயே வீடு திரும்பிவிட்டாள்.

வீட்டிற்க்கு சென்றதும், கணக்கு புத்தகத்தை வில்லியம்ஸிடம் கொடுத்து, விவாகரத்து பெறும் முன் பணம் முழுவதையும் செலவழித்து விடுமாறு கூறினாள்.

மறு நாள், வில்லியம்ஸ் அந்த சேமிப்பு புத்தகத்தை ஜோசளினிடம் திருப்பி கொடுத்தான்.

அதில் புதியதொரு பதிவாக $5,000 போடப்பட்டிருந்தது.
அதன் கீழ்,
"உன் மேல் நான் வைத்திருந்த காதலையும், உன்னால் நான் அனுபவித்த சிறு சிறு சந்தோஷங்களையும், இன்று தான் நான் உணர்ந்து கொண்டேன்."
என்று பதியப்பட்டிருந்தது.



இருவரும் ஒருவரையொருவர் கட்டிக்கொண்டார்கள்... தங்கள் அன்பை முத்தங்களாலும் கண்ணீராலும் பரிமாறிக் கொண்டார்கள்.

அந்த சேமிப்பு புத்தகம் மீண்டும் ஒரு பாதுகாப்பான இடத்தில் வைக்கப் பட்டது.

அவர்களது இறுதிக் காலம் வரை அந்த வங்கிக் கணக்கினை தொடர்ந்தார்கள்.

அவர்கள் எவ்வளவு சேர்த்தார்கள் என்பதை யாரும் அறிய முற்படவில்லை.

ஒவ்வொரு தடவை நீ கீழே விழும் போதும்,
விழுந்த இடத்தில் என்ன பிழை நடந்தது என்பதை பற்றி ஆராச்சி செய்யாதே...
அதற்குப் பதிலாக,
பிழை எங்கே ஆரம்பித்தது என்பதை கண்டறிந்து திருந்(த்)திவிடு!
திருந்தி வாழ்வதே வாழ்க்கை!
udhayam72
udhayam72
பண்பாளர்
பண்பாளர்

Posts : 282
Join date : 07/10/2012
Location : MUMBAI

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum