TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நின்னைச் சரணடைந்தேன்

Go down

நின்னைச் சரணடைந்தேன் Empty நின்னைச் சரணடைந்தேன்

Post by udhayam72 Tue May 21, 2013 10:49 am

நின்னைச் சரணடைந்தேன்





எழுந்ததிலிருந்தே உள்ளுக்குள் பதற்றமாகவே இருந்தான் சித்தார்த். அன்று தான் ரமேஷிற்குத் திருமணம். முதல் நாளே வரச்சொல்லி நண்பனிடமிருந்து அழைப்பு.. ஆனாலும் போக மனமில்லாது தங்கிவிட்டான். காரணம் சாஹித்யா. ரமேஷின் தங்கை. ஒரு காலத்தில் சித்தார்த்தின் காதலி. என்னதான் சித்தார்த்தின் காதலை ஏற்க மறுத்திருந்தாலும் மானசீகமாக மனைவியாக நினைக்கப்பட்டவள்.

கிட்டத்தட்ட நான்கு வருடங்களாகி விட்டது. சாஹித்யாவின் திருமணத்திற்கு கூட ரமேஷ் அழைத்திருந்தான். தன் காதலியின் திருமணத்தைப் பார்க்கும் தைரியம் யாருக்கு தான் இருக்கும்?? ஏதோ சாக்குகள் சொல்லி வரமறுத்துவிட்டான். காலத்தைக் கட்டுப்படுத்தும் வலிமை சித்தார்த்தின் கரங்களுக்கு எப்போதும் இருந்ததில்லை. ஆரம்ப நாட்களில் சாஹித்யாவின் நினைவலைகளில் மூழ்கி மீளமுடியாமல் தவித்து, சுயநினைவின்றி அலைந்து, வேறு வழியின்றி சூழ்நிலையின் பிடியில் சிக்கிக்கொண்டான். இதோ காயத்ரியின் கழுத்தில் புதிதாய் இவனது மாங்கல்யம், அம்மாவின் கடைசி ஆசை என்பதால் மறுக்க முடியவில்லை.

“என்னங்க..“ ஏதோ யோசனையில் இருந்தவனை காயத்ரியின் குரல் கலைத்தது. என்ன, என்பதுபோல அவளைப் பார்த்தான். திருமணமான இந்த 15 நாட்களில், ஏறிட்டு மனைவியின் முகத்தைப் பார்ப்பது சொர்ப்பமாகவே இருந்தது சித்தார்த்துக்கு. சாஹித்யாவின் இடத்தில் வேறொரு பெண்ணை அவனால் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. திருமணமான நாள் முதலாய் இவனது பட்டும்படாமலுமான பேச்சுக்களும் ஒதுங்கிப்போன நடவடிக்கையும், காயத்ரிக்கு ஒன்றும் புரியாமலில்லை. காரணம் தெரியாதெனினும் அவனுடைய இனிமையான குணங்கள், காயத்ரியை கணவனின் மனமாற்றத்திற்குக் காத்திருக்கச் செய்தது.

“இதுல எந்தப் புடவையங்க கட்ட” கையில் சில புடவைகளை வைத்துக்கொண்டு ஆவலாய் கேட்ட காயத்ரியை எந்தச் சலனமுமில்லாமல் பார்த்தான். காயத்ரி, ரமேஷுக்கு தூரத்து உறவினரின் மகள் என்பதால் இந்தத் திருமணத்திற்கு செல்வதிலான ஆர்வம் அவள் முகத்தில் தெரிந்தது. அதைப் பொருட்படுத்தாது புடவைகளைப் பார்த்தான். பளிச்செனத் தென்பட்டது அந்த சிவப்பு நிற பட்டுப்புடவை.

சிவப்பு நிற உடைகள் சாஹித்யாவிற்கு எப்போதும் எடுப்பாக இருக்கும். அவனே பலமுறை இதை சாஹித்யாவிடம் சொல்லியிருக்கிறான். பதிலுக்கு லேசான புன்னகையை உதிர்த்துச் செல்வாள். அந்தச் சிரிப்பு...

சட்டென மனதினுள் லேசான வலி தோன்றி மறைந்தது. கணவனின் பதிலுக்காக நின்றிருந்தவளிடம் “உன் இஷ்டம், எதையாவது கட்டிகிட்டு கிளம்பு“ என எங்கோ பார்த்தபடி சொல்லிவிட்டு குளியளறைக்குள் புகுந்தான். சாத்திய பாத்ரூம் கதவை சில நொடிகள் பார்த்துவிட்டு ஏமாற்றமாய்ப் பெருமூச்சொன்றை உதிர்த்தாள் காயத்ரி. பின் சகஜநிலைக்கு வந்தவளாய் கிளம்ப ஆயத்தமானாள். உள்ளே ஷவரைத் திறந்து, கண்மூடி நின்ற சித்தார்த்தினுள் பழைய நினைவுகள் ஓடத் துவங்கின.

ஒரு தலையாய் சாஹித்யாவைக் வருடக்கணக்காய் காதலித்து, கற்பனைகளை வளர்த்த நாட்களும், காதலை சொல்ல முடியாமல் தவித்துக்கிடந்த நாட்களும் மட்டுமல்ல.. காதலை வெளிப்படையாக அவளிடம் தெரிவித்த அந்த நிமிடத்தில் புழுவை விடக் கேவலமாகப் பார்த்த அவளுடைய பார்வையையும் அவனால் மறக்க முடிவதில்லை.

“ஸாரி சித்தார்த், அண்ணாவோட ப்ரெண்டுங்குற முறைல தான் உங்ககிட்ட பேசினேன். மத்தபடி என் மனசுல எதுவுமில்ல. அதுமட்டுமில்லாம எனக்கு கணவரா வரப்போகிறவர்க்கு சில தகுதிகள் இருக்கணும்னு கற்பனை பண்ணிருக்கேன். அழகு, படிப்பு, உத்தியோகம், அந்தஸ்துனு நிறைய விஷயம் எதிர்பாக்குறேன். நா எதிர்பாக்குற தகுதி உங்ககிட்ட இல்ல. உங்கள காயப்படுத்துறதுக்கு என்ன மன்னிச்சிடுங்க. இனிமே நமக்குள்ள எந்தப் பேச்சும் வேணாம். இன்னொரு தடவை காதல் அப்படி இப்படினு பேசி வீணா உங்க மரியாதைய கெடுத்துக்காதீங்க“ என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிட்டுச் சென்றவளை, நிமிர்ந்து பார்க்க திராணியின்றி திரும்பி வந்தான்.

சாஹித்யாவின் திருமணத்தன்று, கண்ணாடி முன் நின்று, தான் கதறிய அழுகையிலிருந்து இன்றுவரை அவனால் மீள முடியவில்லை. ஒரு முறை தற்கொலைக்கு முயன்றும் கூட, விதி துரதிருஷ்டவசமாக அவனைக் காப்பாற்றி விட்டது. அந்தளவிற்கு அவளைக் காதலித்ததாலோ என்னவோ காயத்ரியை அவனால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது.

காயத்ரியிடமும் குறை என்று எதுவுமேயில்லை.. லட்சணமானவள், நல்ல குணம்.. வந்ததிலிருந்து அவனுடைய மனப்போக்கை அணுமானித்து தன்னைத் தானே சமாதானித்துக் கொண்டவள். அம்மாவின் பிடிவாத்ததினால் திருமணத்திற்கு சம்மதித்தாலும், முழு மனதோடு ஏற்றுக்கொள்ள முடியாமல், தன் பழைய காதலின் உறுத்தல் சித்தார்த்தை தடுத்தது. நினைவு திரும்பியவனாய், குளித்துவிட்டுக் கிளம்ப ஆரம்பித்தான். உள்ளூர சாஹித்யாவைப் பார்க்கப் போகும் படபடப்பு இருந்தாலும், வெளிக்காட்டிக் கொள்ளாது, காயத்ரியுடன் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தான் சித்தார்த்.

“சாஹித்யாவைப் பார்த்தால் என்ன பேசுவது?? எப்படி அவள் கண்களை நேருக்கு நேராகப் பார்ப்பது?? என்னிடம் அவள் சகஜமாகப் பேசுவாளா? கடவுளே.. கூடுமானவரை அவள் என் கண்ணில் படாமல் இருக்க வேண்டும். அவளுடனான சந்திப்பை ஏற்படுத்தி என்னைக் கூனிக்குறுக வைத்துவிடாதே..“ மனதுக்குள் முணுமுணுத்தபடி தயக்கமாய் மண்டபத்தினுள் நுழைந்தான் சித்தார்த்.
வாசலில் சம்பிரதாய வரவேற்புகள்.. காதைக் கிழிக்கும் ஸ்பீக்கர்கள்.. அனைத்தையும் கடந்து உள்ளே சென்றனர் சித்தார்த்தும் காயத்ரியும். அப்போது தான் மாங்கல்யம் தந்துனானே வாசித்திருந்தார்கள் போலும்.. சராசரியான விசாரிப்புகளுக்கு பதில் சொல்லிவிட்டு மேடையேறினர். சித்தார்த்தின் கண்கள் மட்டும் தயக்கமாய் மேடையை சுற்றி வந்தது.. சாஹித்யா தென்படாதிருந்தது அவனுக்கு ஆறுதலாக இருந்தது.

இருவரும் மணமக்கள் அருகில் சென்று தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து, வாங்கி வந்திருந்த பரிசுப்பொருளையும் கொடுத்தனர். வந்திருந்தவர்களில் பாதி, காயத்ரியின் உறவினர்கள் என்பதால் அவர்களோடு அரட்டையடிக்க உட்கார்ந்து விட்டாள். சித்தார்த்தும் தன் பழைய நண்பர்களின் வட்டத்துடன் சேர்ந்து கொண்டான்.

திருமணச் சடங்குகள் ஓரளவு குறைந்தவுடன், மணமக்கள் சம்பிரதாய உடைகளை மாற்றச் சென்றனர். அவர்கள் வரும்வரை வீடியோ கிராஃபர், கூட்டத்தினைப் பதிவு செய்துகொண்டிருந்தார்.

வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சித்தார்த்தின் இதயத் துடிப்பு திடீரென கூடுதலாகாத் துடித்தது.

“அது.. அது... சாஹித்யாவின் குரல்... அவளே தான்..“. மெதுவாக குரல் வந்த பக்கம் தலையைத் திருப்பினான். யாரைப் பார்க்கக்கூடாதென வேண்டிக்கொண்டிருந்தானோ அவள்..

அங்கே.. சாஹித்யா யாருடனோ பேசிக்கொண்டு நின்றிருந்தாள். இந்த நான்கு வருடத்தில் அவளிடம் பெரிதாக ஒன்றும் மாற்றமில்லை.. கையில் ஒரு ஆண் குழந்தை,

“அவளுடையதாக இருக்குமோ.. அதற்கு என் பெயர் வைத்திருப்பாளா? என்னையே வேண்டாமென்றவள்.. என் பெயரையா வைத்திருப்பாள்..“
“ச்சே நான் ஏன் இப்படி அல்லாடுகிறேன்.. அவள் என்னை நியாபகம் வைத்திருப்பாளா?“

“என்னைப் பார்த்துவிட்டால் என்ன செய்வது? அவளுடைய கண்களை நேருக்கு நேராக சந்திக்கும் தைரியம் எனக்கில்லை. அவளுடைய ஏளனமான பார்வையை எதிர்நோக்கும் சக்தி எனக்கில்லை.“

“அவளை மறக்க முடியால் நான் தவித்துக்கொண்டிருப்பது அவளுக்குத் தெரியுமா?? ஒருவேளை இந்த மண்டபத்தில் என்னைத் தேடியிருப்பாளா? என்னைப் பார்க்கும் ஆவல் அவளுக்கும் இருக்குமா??“

“ஆண்டவா.. எனக்கேன் இந்த நிலைமை? அவளுடைய பார்வையில் நான் பட்டுவிடக்கூடாது. ஒரு புழுவை விடக் கேவலமாக என்னை அவள் நோக்குவதை என்னால் தாங்க முடியாது.“

சாஹித்யா தன்னைப் பார்ப்பதற்குள் கிளம்பிவிடலாமென முடிவு செய்து காயத்ரியைத் தேடினான். அவளைக் காணவில்லை.

“ச்சே.. இந்த நேரம் பார்த்து காயத்ரி எங்கே போய்விட்டாள்..“ தன்னையே நொந்து கொண்டவனாய் சுற்றும் முற்றும் தேடினான்.

உள்ளுக்குள் வேதனையிருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல், சாஹித்யாவின் பார்வையில் பட்டுவிடாதபடி முடிந்தவரை விலகிச் சென்றான்.
“இந்த காயத்ரி எங்க தான் போனாளோ.. சொந்தக்காரவுங்கள பாத்துட்டா போதுமே.. உலகத்தயே மறந்துட்டா போல“ மெல்லிய கோபம் எட்டிப்பார்க்க, அவளைத் துலாவினான்.

மேடையில் குட்டி குட்டி வாண்டுகள் இங்குமங்குமாய் ஓடிக்கொண்டிருந்தன. கூட்டத்திலுள்ளவர்கள் தனித்தனி வட்டங்களாகப் பிரிந்துகொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். எல்லோரும் சராசரியாய் இருக்க, சித்தார்த்துக்கு மட்டும் இருப்புக்கொள்ளவில்லை. மண்டபத்திலிருந்து கிளம்புவதே அவனுடைய எண்ணமாக இருந்தது.

காயத்ரியைத் தேடியவாறு மேடையை ஒட்டி நடந்து சென்றவன் சட்டென நின்றான். பார்வை மணமகன் அறைக்குள் ஊடுருவி நின்றது. அங்கே ரமேஷும் காயத்ரியும் பேசிக்கொண்டிருந்தது தெரிந்தது. இவள் இங்கே என்ன செய்கிறாள்??

தான் இங்கே அல்லல்பட்டுக் கொண்டிருக்க, இவள் சாவகாசமாக ரமேஷிடம் பேசிக்கொண்டிருக்கிறாளே என் எரிச்சலடைந்தான். அறை நோக்கி வேகமாக நடந்தவனின் அடி, அவர்களின் பேச்சுச் சத்தம் கேட்டு மெதுவாகக் குறைந்தது.
அது சகஜமான உரையாடல் இல்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது சித்தார்த்துக்கு. அப்படி என்ன பேசுகிறார்கள்.. காதைத் தீட்டினான். சற்றும் எதிர்பார்க்காத அவர்களின் அந்த உரையாடல் அவனை அதிர்ச்சியில் மூழ்கடித்தது.
“இந்த கல்யாணத்துக்கு நீ வரமாட்டேனு நெனச்சேன் காயத்ரி. அந்த அளவுக்கு என் மேல உனக்குக் கோவமிருக்கலாம். என்ன மன்னச்சிடு. ஆனா என்னோட சூழ்நிலையையும் நீ புரிஞ்சுக்குவனு நம்புறேன்” ரமேஷின் குரல் தெளிவாய்க் கேட்டது சித்தார்த்துக்கு. மெல்லிய குழப்பம் அவனை சூழ்ந்து கொள்ள, தொடர்ந்து வந்த காயத்ரியின் குரலைக் கேட்க ஆயத்தமானான்.

“இதுல கோவப்பட்றதுக்கு ஒன்னுமேயில்ல ரமேஷ். சின்ன வயசுலருந்தே, பெரியவங்க பேசி வச்சதுனால உங்கள என் மனசுல நெனச்சிருந்தது வாஸ்தவம் தான். ஆனா அது உங்கள பாதிக்கலைங்கும்போது உங்க மேல கோவப்பட என்ன இருக்கு? இதுல உங்களுக்கு எந்தவித குற்ற உணர்ச்சியும் வேண்டாம்” காயத்ரியின் சலனமில்லாத பதில் சித்தார்த்தைக் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

அப்படியானால்.... காயத்ரி ரமேஷை காதலித்தாளா??

அதிர்ச்சியாய் நின்றவனின் காதுகளில் விழுந்தது.. மீதமான உரையாடல்..

“நிஜமா தான் சொல்றியா காயத்ரி?? உனக்கு இந்த கல்யாணத்துல எந்த வருத்தமும் இல்லையே? இல்ல எனக்காக பொய் சொல்றியா? உன்கிட்ட, காதல்... கல்யாணம் அப்டி இப்டினு இதுவரைக்கும் நா பேசினதே இல்ல.. எனக்கந்த எண்ணமும் உன் மேல இருந்ததில்ல. அதுனால தான் நீ அன்னைக்கு என்கிட்ட வந்து உன் காதல சொன்னப்ப கூட என்னால ஏத்துக்க முடில. ஆனா ப்ளீஸ் காயத்ரி உனக்கு என்மேல கோபம் இருந்தா ஆசை தீர என்னைத் திட்டிரு“ குனிந்த தலையுடன் ரமேஷ் சொல்வதை வெளியிலிருந்து அமைதியாய் சித்தார்த் கேட்டுக்கொண்டிருந்தான்.

ஏனோ அவனது இதயம் அவனுக்கே பாரமாகத் தோன்றியது. சாஹித்யாவை நினைத்து, தான் அடைந்த வேதனைகள், ரமேஷை நினைத்து காயத்ரிக்கும் தோன்றியிருக்குமா?? அப்படியெனில் இந்த நிமிடம் என்னைப் போல அவளும் தவித்துக்கொண்டிருக்கிறாளா?? கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாக அவனைக் குழப்பியபடியிருக்க காயத்ரி பேச ஆரம்பித்தாள்.

“இதோ பாருங்க ரமேஷ்.. பெரியவங்க சின்ன வயசுலயே பேசி வச்சிருந்ததால உங்கள மனசுல நெனச்சிருந்தேன். ஒருதலையா காதலிச்சுமிருக்கலாம். ஆனா, எப்ப என்னோட காதல் உங்களுக்குப் புரியலையோ, ஏத்துக்க மறுத்திட்டீங்களோ.. அப்பவே உங்க மேலயிருந்த காதல் முடிஞ்சுபோச்சு. உங்களுக்கு என்னைப் பிடிக்கலைங்குறதுக்காக, அந்தக் காதல் கேவலமானதுனு சொல்ல முடியாது. அதுக்காக வாழ்க்கை முழுசும் உங்களையே நெனச்சுகிட்டு அழுது புலம்பிகிட்டு இருக்குறது நியாயமில்ல. என்னோட காதல் உண்மையானது, அதை நீங்க ஏத்துக்ல.. சொல்லப்போனா என்னோட தூய்மையான காதலயும், என்ன மாதிரியான ஒரு மனைவியையும் நீங்க இழந்துட்டீங்கனு தான் சொல்லனும். அதுக்காக நா உங்கமேல பரிதாபப்பட்றேன். சுருக்கமா சொல்லப்போனா என்னோட காதலைப் புரிஞ்சுக்காம அலட்சியப்படுத்துன யாரோ ஒருத்தருக்காக நா எதுக்காக கவலைப்படணும்?? அந்த கண்களப் பாக்குறதுக்கு நா எதுக்கு வெட்கப்படணும்?? மறைஞ்சு ஓடி ஒழியிற அளவுக்கு என்மேல என்ன தப்பு இருக்கு?? இப்ப எனக்குக் கல்யாணமாய்டுச்சு. கட்டாயம் என்னப்பத்தி முழுமையா அவரும் தெரிஞ்சுக்குவாரு. என் ஒட்டுமொத்தக் காதலையும் அனுபவிக்க, எனக்குனு ஒருத்தர் இருக்காருனு நெனைக்கும்போது அதை விட சந்தோசம் வேறெதுவும் இல்ல. உங்க மேல எனக்கெந்த கோபமும் இல்ல. அதுனால எந்தவிதமான உறுத்தலுமில்லாம நீங்க சந்தோசமா இருக்கலாம்“ என்றவள் “சரி நாங்க கிளம்புறோம், அவர் எனக்காக காத்துகிட்டிருப்பாரு...“ மெல்லிய புன்னகையுடன் சொல்லிவிட்டு விருட்டென வெளியேறினாள்.

சாட்டையடியாய் அவளுடைய வார்த்தைகள்... நிதானமான பக்குவமான அவளுடைய முடிவு.... ஒவ்வொரு வார்த்தைகளும் தனக்காகவே செதுக்கப்பட்டிருந்தது போல உணர்ந்தான் சித்தார்த்...

வெளியே, அறையை விட்டுக் கொஞ்சம் தள்ளி நின்ற கணவனிடம் “என்னங்க நேரமாய்டுச்சு கிளம்பலாமா?” என்ற காயத்ரியை முதன் முறையாகக் காதலுடன் பார்த்தான் சித்தார்த். சாஹித்யா மெல்ல மெல்ல அவன் நினைவுகளிலிருந்து மறைந்துகொண்டிருந்தாள்.


(முற்றும்)
udhayam72
udhayam72
பண்பாளர்
பண்பாளர்

Posts : 282
Join date : 07/10/2012
Location : MUMBAI

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum