TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:04 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 01, 2024 7:37 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


எருமைச் சீமாட்டி - பெருமாள் முருகன் - சிறுகதை

Go down

எருமைச் சீமாட்டி - பெருமாள் முருகன் - சிறுகதை  Empty எருமைச் சீமாட்டி - பெருமாள் முருகன் - சிறுகதை

Post by logu Fri May 17, 2013 3:49 pm

[You must be registered and logged in to see this image.]
எருமைச் சீமாட்டி









ம்மாவின் கத்தல் சத்தம் கேட்டு எல்லாரும்
எழுந்துவிட்டார்கள். கோடை நிலவின் குளிர் ஒளியில் வாசலில் கட்டில் போட்டுப்
படுத்திருந்தார்கள். ''அம்மா... என்னம்மா... என்னம்மா...'' என்று பெரியவன்
உலுக்கிக் கேட்ட தும் அழத் தொடங்கினார். ''எருமப் பித்துப் புடிச்சுக்
கத்துறாடா உங்கம்மா'' என்று சலிப்போடு சொல்லிவிட்டு, அப்பா அவர் கட்டிலில்
போய் உட்கார்ந்து பீடியைப் பற்றவைத்தார். அம்மாவின் முகத்தை நிமிர்த்தி,
''அழுவாத சொல்லும்மா... எதுனா கனாக் கண்டயா'' என்றான் பெரியவன். சின்னவனும்
பயந்து அழ ஆரம்பித் தான். அவனை வாரித் தன்னோடு சேர்த்துக்கொண்ட அம்மா,
''எருமச் சீமாட்டி வந்து கத்திக் கூப்ட்டாடா'' என்றாள்.


''ஆமா... எரும வந்து கூப்ட்டா, எமன் வந்து கூப்ட்டான்னு
அர்த்தம். அது வாலப் புடிச்சுக்கிட்டே போய்ச் சேரு சீக்கிரம்'' என்று
முனகியபடி எச்சிலைக் காறித் துப்பினார் அப்பா. நள்ளிரவில் தூக்கம் முற்றா
கக் கலைந்துவிட்ட எரிச்சல் அவருக்கு. இடையில் விழிப்பு வந்து விட்டால்,
மறுபடியும் அவ்வளவு சீக்கிரம் அவருக்குத் தூக்கம் வராது.

''கெழட்டெரும நெனப்புலயே இருந்திருப்ப... அதான் அப்பிடிக் கெனா வந்திருக்கு'' என்று சமாதானம் சொன்னான் பெரியவன்.

''இல்லடா... கூப்ட்டாடா. தீனி போடச் சொல்லிக் கேக்குற குரல்லயே கூப்ட்டா...'' என்று அழுத்திச் சொன்னாள் அம்மா.

கிழட்டெருமையை விற்று ஒரு வாரமாகிவிட்டது. வாங்கிய
ஏவாரி வெள்ளிக்கிழமை பொழுதிருக்கவே பிடித்துச் சென்றுவிட்டார். அப் போது
அம்மா வீட்டில் இல்லை. ஏதோ வேலை யாகக் காட்டுப் பக்கம் போவதுபோல மத்தியா
னம் கிளம்பியவள் வரவேயில்லை. கயிற்றில் கோத்திருந்த திருகாணியைக்
கழற்றிக்கொண்டு எருமையைப் பிடித்து ஏவாரி கையில் கொடுத் தார் அப்பா.
மறுநாள் சனிக்கிழமை. மணியனூர் மாட்டுச் சந்தை. எருமையைச் சந்தைக்கு
அனுப்புவதன் வேதனை அப்பன் முகத்திலும் தெரிந்தது. வீட்டு மனுஷி அது. ஆனால்,
என்ன செய்வது?

கல்யாணமாகி வந்தபோது அம்மா தன்னோடு சீராகக்
கொண்டுவந்தார். அப்போது ஒரு வருஷக் கன்றுக்குட்டி. மேல் முழுக்கச்
செம்பட்டை மயிர்கள் படர்ந்திருக்கும். வயிறு மட்டும் தாழி போலப்
பெருத்திருக்கும். தீனியில் கெட்டி. எதைப் போட்டாலும் தின்றுவிடும். இங்கே
வந்து அம்மா பட்ட கஷ்டங்கள், சந்தோஷங்கள் எல்லாம் அதற்குத் தெரியும். அதன்
கழுத்தைக் கட்டிக்கொண்டு ஆசை ஆசையாகப் பேசுவார் அம்மா. ''இவ எரும இல்லடா...
என்னயக் காப்பாத்த வந்த சீமாட்டி'' என்பாள். ''என்ன குடுத்துக்
காப்பத்துனா?'' என்றால், அம்மாவுக்கு முகம் இறுகிவிடும். அப்படிக்
கேட்டவர்களைத் தண்டிப்பது மாதிரி கொஞ்ச நேரம் எதுவும் பேச மாட்டார்.
அப்புறம் பேச ஆரம்பித்தால், பெருவேகக் காற்று சுழன்றடிக்கும்.

[You must be registered and logged in to see this image.]

''எல்லாம் குடுத்தவ அவதான். இவ இருக்கறப்ப ஒண்ணும்
கொண்டுவராதவனு என்னய ஆராச்சும் ஒரு வார்த்த பேச முடியுமா? தன்
கன்னுவளுக்குப் பாலு குடுத்தாளோ இல்லயோ, என் பசவளுக்கு அவதான் இன்னைக்கு
வரைக்கும் பாலு குடுக் கறா. அவளாலதான் பட்டி பெருகுச்சு. வரத் தரயாக்
கெடந்த கட்டுத்தர நெறஞ்சுச்சு. இந்தக் குடிய ஒசத்தினது அவதான். என் தாயா
நின்னு என்ன யத் தாங்கறவதான் இந்தச் சீமாட்டி'' என்று ஆவேசத்தோடு
பேசிவிட்டு அழுவாள். எந்தப் பேச்சையும் அழுகையில்தான் அம்மா முடிப்பார்.

''சிந்தித் தடவித் தடவி செவுரு முழுக்கச் சளி ஒழுவிக்
கூரையெல்லாம் ஊளமூக்காக் கெடக்குது. எங்கிருந்துதான் வருமோ இவளுக்கு. பன
மரத்துப் பாள ஊறறாப்பல'' என்று அப்பன் பேசும் ஏகடியத்தைச் சட்டைசெய்ய
மாட்டார் அம்மா.

''எம் பாரத்த மூக்கச் சிந்தித்தான் கொறைக் கோணும்.
சீமாட்டி மட்டும் எங்கூட வல்லீனா, இங்கயா இருந்திருப்பன். எப்பவோ
வாழாவெட்டியா எங்கூருக்குப் போயி, அங்க மூக்கச் சிந்திக்கிட்டு
இருந்திருப்பன்...'' என்பார்.

வந்த இடத்துக்கு ஒரு குறையும் வைக்கவில்லை அது.
அம்மாவைப் போலவே, கன்று ஈன்ற பின் நாலாம் மாதம் பயிராகிவிடும். சினை
உறுதியான பின் பாலுக்கு நிற்காமல் உதைத்துக்கொண்டு போயிற்று என்னும் பேச்சே
இல்லை. அடுத்த கன்று ஈனும் வரைக்கும்கூடப் பீய்ச்சிக்கொண்டே இருக்கும்.
ஏழாம் மாதம் முடிந்ததும் 'பாலு அப்பிடியே சீய்யாட்டம் வருது. ஆனாலும்
நிக்கறா பாரு. சீமாட்டின்னாலும் எருமைங்கறது சரியாத்தான் இருக்கு...''
என்று செல்லமாகத் திட்டிக்கொண்டே பீய்ச்சாமல் நிறுத்திவிடுவார் அம்மா.

[You must be registered and logged in to see this image.]இதுவரைக்கும்
வீட்டுக்குப் பால், தயிர், மோர், நெய் எல்லாம் அது கொடுத்ததுதான். மூன்று
மாதம் கறவை இல்லாத சமயத்தில் தவித்துப்போவார்கள். அது தரும் பாலின் வாசம்
பழக்க மானதில், வேறு கறவைகளின் பால் வாசனையே பிடிப்பது இல்லை. அம்மா வேறு
எங்கு போய்ச் சாப்பிட்டாலும் பாலோ, தயிரோ வேண்டாம் என்று சொல்லிவிடுவார்.
''சீமாட்டி பால் குடிச்ச வாயிக்கு மத்ததெல்லாம் காமாட்டி பாலுதான்''
என்பார்.

இதுவரைக்கும் அது ஈன்ற கன்றுகளில் மூன்று மட்டும் கிடா.
மற்ற எல்லாமே கிடாரிதான். எல்லாக் கன்றுகளையும் வளர்ப்பார்கள். ஏதாவது ஒரு
காரணத்தால் அவற்றை விற்க நேரும். ஆனால், ஒருபோதும் சீமாட்டியை விற்கும்
எண்ணம் யாருக்கும் வந்தது இல்லை. இப்போது கட்டுத்தரையில் நிற்பவை எல்லாம்
அதன் வர்க் கம்தான். இளம் வர்க்கம் பெருகப் பெருகச் சீமாட்டியை அம்மாவைத்
தவிர எல்லாரும் 'கெழட்டெரும’ என்று சொன்னார்கள். ஆனால், அம்மா ஒருபோதும்
அப்படிச் சொன்னது இல்லை. ''சொல்றவிய ஆருக்கும் வயசாவாமலா போயிரும்?''
என்பதோடு நிறுத்திக்கொள்வார்.

போன ஈற்றுச் சினையான பின் அது பட்ட பாட்டைக் கண்கொண்டு
பார்க்க முடியவில்லை. வயிற்றுச் சுமையோடு படுத்து எழுவதற்குள் கண்களில்
நீர் முட்டிக்கொண்டது. தீனி எடுத்துக் கடிக்க முடியவில்லை. பற்கள்
சிதைந்துவிட்டன. கன்றுக்குச் சரியான ஆகாரம் போய்ச் சேரவில்லை. எலும்பும்
தோலுமாகக் கன்றை ஈன்றுவிட்டு அதற்குப் பால் கொடுக்கக்கூட எழுந்து
நிற்கவில்லை. சுடுதண்ணி வைத்துக் கழுவிவிட்டார் அம்மா. கம்பை வேக வைத்துத்
தின்னக் கொடுத் தார். அருகில் உட்கார்ந்துகொண்டு கையில் எடுத்து எடுத்து
ஊட்டினார். ''எங்காலம் முடியங்காட்டி அநாதயா வுட்டுட்டுப் போயிராத'' என்று
அழுதார்.

ஒருவழியாக எழுந்து பால் கொடுப்பதற்குள் கன்று பசியால்
நுரை தள்ளிவிட்டது. ஆனால், எருமை அடுத்த நான்கு மாதத்தில் சினைக்குக் கத்த
ஆரம்பித்தது. ''கெழடாகியும் இன்னம் ஒடம்பு கேக்குதா உனக்கு'' என்று
கோபத்துடன் திட்டியதோடு, இனிமேல் அது சினையாக வேண்டாம் என்று அம்மா
முடிவுசெய்துவிட்டார். கிடா சேர்க்கக் கொண்டுபோகவில்லை. அது இரண்டு மூன்று
நாள் கத்திக் கத்தி ஓய்ந்தது. ஆறேழு மாதங்களுக்குப் பின் மீண்டும்
கத்தியது. அப்போது பாலும் குறைந்தது. அதை என்ன செய்வது என்று அம்மாவுக்குப்
புரியவில்லை. ''வித்துர்லாம்'' என்று அப்பன் சொன்ன அன்றைக்கே அம்மா அழத்
தொடங்கினார்.

[You must be registered and logged in to see this image.]கிட்டத்தட்ட
ஒரு மாதம் இருவருக்கும் இதே பேச்சுதான். தினமும் முன்னிரவில் சண்டை
தொடங்கி, அழுகை... அடி என்று ஓயும். ''கெழட்டு எருமயக் கட்டுத்தரயில
வெச்சிக்கிட்டுப் பாவன பாக்க நம்மால முடியுமா?'' என்றார் அப்பா. பால்
குறைந்துபோனதால் காலையில் மட்டும் பீய்ச்சினார் அம்மா. ஒரு படிக்கு வரும்.
பருத்திக்கொட்டைக் குழம்புபோல் இருக்கும். படிக்குப் படி எனச் சரியாகத்
தண்ணீர் சேர்ப்பார். அப்பவும் தண்ணீர் கலந்த மாதிரியே தெரியாது.

கடைசியில் ஒரு படி பாலோடு ஏவாரிக்குவிற்று விட்டார்
அப்பன். சனிச் சந்தைக்குப் போன எருமை கறிவெட்டுக்குப் போயிற்றோ, வத்தப்பால்
பீய்ச்ச யாராவது வாங்கிப் போனார்களோ தெரிய வில்லை. அது போன பின்
கட்டுத்தரை வெறுமை யாகக் கிடந்தது. கட்டுத்தரைப் பூவரசின் அடியில் போய்
உட்கார்ந்து எங்கேயோ வெறித்துப் பார்த்திருப்பார் அம்மா. யாரிடமும் சரியான
பேச்சு இல்லை. எதைக் கேட்டாலும் சட்டெனக் கண்ணீர் திரண்டுவிடும். இரவுத்
தூக்கத்தில் திடீர் திடீரென்று இப்படிக் கத்திக்கொண்டு எழுவார். அப்புறம்
அவரைச் சமாதானப்படுத்த வெகுநேரம் ஆகும்.

''நல்லா எங் காதுல கேட்டுது. நம்ம சீமாட்டிதான் கனச்சா'' என்றார் அம்மா.

''பேசாத படும்மா. எல்லாங் காத்தால பாத்துக்கலாம்'' என்று பெரியவன் அவளைப் பிடித்துச் சாய்த்துக் கட்டிலில் படுக்கவைத்தான்.

''இல்லடா... எனக்கு நல்லாக் கேட்டுது'' என்று முனகினார்
அம்மா. எல்லாருக்கும் தூக்கம் வந்து கண் ணைச் செருகிய நேரத்தில்
திரும்பவும் அம்மா கத்திக்கொண்டு எழுந்தார். ''அவதான்... எனக்கு நல்லாக்
கேட்டுது. அவளேதான்...'' என்று பிதற்றினார்.

பெரியவனும் சின்னவனும் பிடிக் கப் பிடிக்கக் கையை உதறிக்கொண்டு கட்டுத்தரையை நோக்கி ஓடினார்.

''எருமப் பைத்தியம் புடிச்சே இவளக் கொண்டுட்டுப்
போயிருமாட்டம்'' என்று சலித்து, மறுபடி பீடியைப் பற்றவைத்தார் அப்பா.
அம்மாவின் பின்னாலேயே இருவரும் ஓடினார்கள். கட்டுத்தரைப் பூவரசின் அடியில்
எருமை படுத்து அசைபோட்டுக் கொண்டிருந்தது. மூன்று பேருமே அப்படியே
நின்றுவிட்டார்கள்.

''அவதான்டா வந்துட்டா. என்னயத் தனியா வுட்டுட்டுப் போவ மாட்டா...'' என்றார் அம்மா மகிழ்ச்சிக் குரலில்.

[You must be registered and logged in to see this image.]அவர்களைப்
பார்த்துச் சற்றே ஓங்கிய குரலில் கனைத்தது அது. கண்களை நன்றாகத்
தேய்த்துவிட்டுக்கொண்டு பார்த்தபோதும் எருமை தெரிந் தது. அம்மா ஓடிப்போய்
அதன் கழுத்தைக் கட்டிக்கொண்டார். அம்மாவை நக்கிக் கொடுத்தது. அப்பாவும்
வந்துவிட்டார். எல்லாருக்கும் ஆச்சர் யம். அம்மா தீனியை அள்ளிக்கொண்டு
வந்து போட்டார். அதைச் சீண்டவில்லை. வரும் வழியில் எங்கேயோ மேய்ந்து
வயிற்றை நிரப்பிக்கொண்டிருந்தது. சுகமாக அசை போட்டபடியே எல்லாரையும்
பார்த்துக் கனைத்தது. தனக்குரிய இடத்தை வந்தடைந்துவிட்ட நிம்மதி அதன்
கனைப்பில் தெரிந்தது.

பூவரசு மர நிழல் இருளில் அதன் கண்கள் மினுங்கின.
அவர்களின் சத்தம் கேட்டுக் கொஞ்சம் தூரக் காடுகளில் குடியிருந்த ஆட்கள்
எல்லாம் வந்துவிட்டனர். பல கன்றுகள் ஈன்ற எருமை எங்கோ விற்கப்பட்டு, வீடு
தேடி வந்துவிட்டது சாதாரண விஷயமாக இல்லை. யார் வாங்கிப் போயிருப்பார்கள்,
எவ்வளவு தூரத்தில் இருந்து தடம் கண்டுபிடித்து வந்திருக்கும் எனப் பேசிக்
கொண்டார்கள்.

கன்றுக் குட்டியாக இருந்தபோது இந்த ஊருக்கு வந்த எருமை
ஊர் எல்லையைத் தாண்டிப் போன சந்தர்ப்பங்கள் குறைவு. பக்கத்து ஊர்க்
கரடுகளுக்கு மேய்ச்சலுக்குப் போய்த் திரும்பியிருக்கிறது. கிடா
சேர்த்துவதற்காக இரண்டு ஊர்கள் தாண்டியிருக்கிற மணியாரர் வீடு வரை சில
தடவையும் நகரத்துக் கால் நடை மருத்துவமனை வரை ஓரிரு முறையும் போனது உண்டு.
கட்டுத் தரையும் மேட்டுக்காடுமே அது சுற்றிச் சுழன்ற இடங்கள்.

மணியனூர் சனிச் சந்தை பத்துக் கல் தொலைவு. அவ்வளவு
தூரம் டெம்போ வைத்துதான் ஏவாரி ஏற்றிப்போனார். சந்தையில் இருந்து வாங்கி
வந்தவர்கள் பக்கத்து ஊர்க்காரர்களாக இருப்பார்களோ? வாங்கிப்போனவர்கள்
கயிற்றைக்கூட மாற்றவில்லை. திருகாணி கோத்திருந்தார்கள். கயிறு அறுபடவில்லை.
இழுப்பில் அவிழ்த்துக்கொண்டிருக்கலாம். இழுத்து அவிழ்க்க எருமைக்கு
வலுவில்லை. சரியாக முடிச்சிட்டுக் கட்டியிருக்க மாட்டார்கள்.

ஒரு வாரத்தில் வயிறு ஒட்டிப்போயிருந்தது. முகச் சோர்வு
நிலவொளியில் தென்பட்டது. வண்டி, சந்தை, புதுக் கட்டுத்தரை என்று
அலைந்தாலும் ஒருவழியாக வந்து சேர்ந்துவிட்ட ஆசுவாசத்தை அது உணர்வதை அசை
போடல் காட்டியது. போன செல்வமெல்லாம் ஒருசேரத் திரும்பிவிட்ட மாதிரி அம்மா
உணர்ந்தார். ''வாங்கினவங்க தேடிக்கிட்டு வருவாங்க'' என்று யாரோ
சொன்னார்கள். அதைக் கேட்டதும் அம்மாவின் முகம் வாடிப்போயிற்று. அப்படி
யாரும் வரக் கூடாது என்று நினைத்தாள்.

அடுத்த பத்து நாள் வரை ஒருவரும் வரவில்லை.
வரத்தட்டுகளைக் கடிக்க முடியாது என்று சோகைகளை மட்டும் இணுக்கிச் சேர்த்து
எருமைக்குத் தின்னக் கொடுத்தார் அம்மா. பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு
குழந்தைக்கு ஊட்டுவதுபோல எடுத்து எடுத்து வாயில் வைத்தார். பெரியவனை
விரட்டி எங்கெங்கோ அலைந்து தினமும் சிறுகூடை நிறையப் பச்சைப் புல் வெட்டி
வரச் செய்தார். பச்சையைப் பால் மணக்கக் கொரித்துத் தின்றது. கொஞ்சம் தேறிய
மாதிரி தெரிந்தது. அரைப்படி அளவாகக் குறைந்திருந்த பால் பழையபடி
திரும்பியது. வீடு முழுக் கப் பழைய வாசனை வந்து சேர்ந்திருந்தது.

எருமையைத் தேடி இனி யாரும் வரப்போவது இல்லை என்று
நினைத்திருந்தபோது, அந்தப் பதினோராவது நாள் எங்கிருந்தோ ஏழெட்டுப் பேர்
சேர்ந்து வந்து கட்டுத்தரையில் நின்றுகொண் டார்கள்.

''சந்தயில வாங்கியாந்து கட்டுத்தரையில கட்டியிருந்த
எருமய ராத்திரியோட ராத்திரியா களவாடிக்கிட்டு வந்துட்டா வுட்ருவமா?
ஞாயத்தக் கேக்க எங்களுக்கும் நாலு பேரு இல்லாதயா போயிருவாங்க. திருட்டுப்
பொழப்புக்கு நாண்டுகிட்டுச் சாவலாம். கொழந்தப் பாலுக்கு வேணுமின்னு வத்தக்
கறவயாப் பாத்து இந்தக் கெழட்டெருமய வாங்கியாந்தம். இதப் போயித்
திருடிக்கிட்டு வந்திருக்காங்களே!''

யாரையும் அவர்கள் பேசவே விடவில்லை. முந்தானையை வாயில்
பொத்திக்கொண்டு அம்மா அழுதுகொண்டிருந்தார். எருமை எதையும் உணராமல்
எல்லாரையும் உற்றுப் பார்த்தபடி நின்றது. அதனருகே போய்ப் பாதுகாவல்போலச்
சின்னவன் நின்றுகொண்டான். அவனை மீறி யாரும் எருமைக்குப் பக்கத்தில் போய்விட
முடியாதாம். பெரியவன் நகம் கடித்தபடி நடப்ப தைப்
பார்த்துக்கொண்டிருந்தான். அப்பன் அப்போது இல்லை.

[You must be registered and logged in to see this image.]எருமை
திருட்டுப்போய்விட்டது என்று முடிவு செய்து பத்து நாட்களாகவே ஆளாளுக்குச்
சுற்று வட்டார ஊர்களுக்கு எல்லாம் போய் நோட்டம் பார்த்திருக்கிறார்கள். கள்
குடிக்க வருபவர்போல ஒருவர் இந்தப் பக்கமும் வந்து கட்டுத்தரையில் எருமை
நிற்பதைப் பார்த்துவிட்டார். தனியாள் கேட்டால் தட்டி அனுப்பிவிடுவார்கள்
என்று, ஊருக்குப் போய் உடனே ஆட்களைக் கூட்டி வந்திருக்கிறார். கிடா
மீசையோடு வெள்ளையும் சொள்ளையுமாக இருந்த ஒருவர் எவரையும் பேச விடாமல் அவரே
பேசிக்கொண்டிருந்தார். பெரும் களவைக் கண்டுபிடித்துவிட்ட சாகசமும் அதைச்
செய்தவர்களைத் தண்டிக்கும் உரிமை தனக்கு இருக்கும் திமிருமாக அவர்
பேசினார்.

கண்களைத் துடைத்துக்கொண்ட அம்மா பெரியவனை அருகே
அழைத்து, ''உங்கொப்பன் எங்காச்சும் காட்டுல கள்ளுக் குடிச்சுப்புட்டு
உருண்டுகெடப்பான். எழுப்பிக் கூட்டியா...''என்று அனுப்பினார். அதற்குள்
பக்கத்துக் காடுகளில் இருந்தெல்லாம் ஆட்கள் வந்து குழுமிவிட்டார்கள்.

''என்ன ஒரு தெகிரியம் இருந்தா, வூட்டுக்கிட்டக்
கட்டியிருந்த எருமய உள்ள வந்து அவுத்துக்கிட்டு வந்திருப்பாங்க. எருமைக்கு
முன்னால நிக்கறானே இந்தச் சின்னப் பயன்... இவன் மூஞ்சியப் பாத்தாலே
திருட்டுக் கள தெரியுது'' என்றார் அவர்.

ராமக்கா பாட்டிதான் குரலெடுத்துப் பேசினார். ''அட...
சும்மா தொறக்காத. ஆரு வூட்டுக்கு வந்து என்ன பேச்சுப் பேசற... கன்னுப்
போட்டதுல இருந்து இந்தக் கட்டுத்தரயில இருக்கற எரும இது. ஊருக்கே தெரியும்.
என்னமோ அளக்கற. உன் எருமைங்கறதுக்கு என்ன அடையாளம்? சொல்லு பாப்பம்''
என்று பாட்டி எகிறியதும்தான் வழிக்கு வந்தார்கள்.

சனிச் சந்தையில் ஏவாரியிடத்தில் அவர்கள் வாங்கிய விவரம்
தெரிந்தது. பழைய பாளையத்துக் காரர்கள். ஏழெட்டுக் கல் தொலைவு. சந்தையில்
வாங்கிய எருமையை இந்த வழியாகத்தான் கொண்டுபோயிருக்கிறார்கள். எருமை தடம்
பார்த்துக்கொண்டது. தானாகவே வந்து சேர்ந்துவிட்டது என்பதை அவர்கள்
நம்பவில்லை. ஊரே சொல்லும்போது மறுக்கவும் முடியவில்லை.

''செரி... எருமய அவுத்துக் குடுக்கச் சொல்லுங்க. இன்னமே
அவுத்துக்கிட்டு வராத பாத்துக்கறம்'' என்று அவர் இறங்கி வழிக்குவந்தார்.
சின்னவன் எருமையை நெருங்கி அதனோடு ஒட்டி நின்றுகொண்டான். கண்ணீரை
முந்தானையில் துடைத்துக்கொண்டு அம்மா எழுந்தார். எல்லாரையும் பொதுவாகப்
பார்த்துச் சத்தமாகப் பேசினார்.

''வித்த எரும என் கட்டுத்தரயத் தேடித் தானாவே
வந்திருச்சு. நான் வளத்த சீமாட்டி அவ. என்னய வுட்டுப் போவ மாட்டேங்குறா.
தேடி வந்து கட்டுத்தரயில நின்னவள வெரட்டி வுட மாட்டன். வாங்குன பணத்தத்
திருப்பிக் குடுத்தர்றன். வாங்கிக் கிட்டுப் போவச் சொல்லுங்க. எருமதான்
வேணுமின்னா, என் சவத்து மேல ஏறிப் போயிப் புடிச்சுக்கிட்டுப் போவட்டும்!''

பேச்சற்று எல்லாரும் அம்மாவையே பார்த்தார்கள்.







நன்றி - விகடன்
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum