TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:01 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தொல்லை கொடுக்கும் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுதல்

Go down

தொல்லை கொடுக்கும் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுதல் Empty தொல்லை கொடுக்கும் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுதல்

Post by மாலதி Sun May 05, 2013 8:14 pm

வருடத்திற்கு மூன்று தடவைகளாவது தலையிடியோடு அவனைத் தாயார் அழைத்து வருவாள்.

அவனது தலையிடிக்கான காரணம் இப்பொழுது அவனுக்கும் தெரியும். அவனது தாயாருக்கும் நன்றாகத் தெரியும்.



[You must be registered and logged in to see this image.]

வகுப்பில் முதல் மாணவன். ஆனாலும் தவணைப் பரீட்சை வரும்போது தனது முதலாம்
இடம் தப்பிவிடக் கூடாது என்பதால் ஏற்படும் மனஅழுத்தம் தலையிடியாக அவனில்
வெளிப்படுகிறது.

மற்றொரு குடும்பத் தலைவியின் மண்டைவலி கடுமையானது. பாராத மருத்துவர்கள்
இல்லை. செய்யாத பரிசோதனைகள் மிச்சமில்லை. மூளைக்குள் கட்டி, சைனஸ் சளி,
சொத்தைப் பல் போன்ற நோய்கள் காரணமாக இருக்கலாம் என மருத்துவம்
செய்துவிட்டாள்.



[You must be registered and logged in to see this image.]

ஆனால் அடிப்படைக் காரணம் மனஅழுத்தம்தான். கணவன் பல வருடங்களாக வெளி
நாட்டில். அவன் இங்கு வரவும் முடியாது, இவர்கள் அங்கு போகவும் முடியாது.
வளர்ந்த பெண் பிள்ளைகளுடனும், விடலைப் பயலுடனும் அல்லாடும் மனஅழுத்தம்
அவளுக்கு.

மன அழுத்தம்

தலைவலி மட்டுமல்ல, நெஞ்சு வலி, வயிற்று வலி, சோர்வாக இருக்கு, பசியின்மை,
அடங்காத பசி, பாலியல் குறைபாடு, தூக்கக் குழப்பம், மாதவிடாய்ப் பெருக்கு
போன்ற பிரச்சனைகளுடன் வரும் பலருக்கு மனஅழுத்தமே அடிப்படைக் காரணமாக
இருக்கிறது.



[You must be registered and logged in to see this image.]


Stress என
ஆங்கிலத்தில் வழங்கும் மன அழுத்தத்தை உளநெருக்கீடு என்று இப்பொழுது
சொல்கிறார்கள். சாக்கடையை என்ன பெயர் சொல்லி அழைத்தாலும்; அதன் தாக்கம்
எப்பொழுதும் நாற்றம்தான். அதேபோல மனஅழுத்தத்தை என்ன பெயர் சொல்லி
அழைத்தாலும் பாதிப்புற்றவருக்கு பொறுக்க முடியாததுதான்.

பாதிப்புகள்

எரிச்சல், கோபம், சினம், படபடப்பு, ஒழுங்காகத் தனது கடமைகளைச் செய்ய
முடியாத நிலை போன்றவை மனஅழுத்தம் காரணமாக ஏற்படலாம். வேண்டாத வார்த்தைகளை
பொருத்தமற்ற வேளைகளில் உதிர்த்து விடுகிறார்கள். இதனால் குடும்ப மற்றும்
நட்பு உறவுகளில் விரிசல் அடைதல் போன்ற சிக்கல்களை நாளாந்தம் எதிர் கொள்ள
நேர்கிறது.



[You must be registered and logged in to see this image.]

ஆனால் இவற்றிக்கு மேலாக பல உடல்நோய்களைக் கொண்டு வருகின்றன. மேலும்
பலநோய்களைத் தீவிரப்படுத்துகின்றன. உயர் இரத்த அழுத்தம், சுவாசப்
பிரச்சனைகள், சமிபாட்டுப் பிரச்சனைகள், இருதயத் துடிப்பில் மாற்றங்கள்,
தசைப் பிடிப்புகள் போன்றவை சில உதாரணங்களாகும்.

விடுபட உதவும் வழிமுறைகள்

மன அழுதத்திலிருந்து விடுபட வேண்டுமாயின் அதற்கான காரணம் நீங்க வேண்டும்.
ஆனால் அது எப்பொழுதும் சாத்தியமானதல்ல. ஆனால் அதன் தொல்லையை நீக்க
வேண்டுமாயின் வேறு விடயங்களில் எமது மனதைச் செலுத்த வேண்டும். வாசிப்பு,
சினிமா, விளையாட்டு, சமையல், ஆன்மீகம் என தனக்குப் பிரியமான விடயங்களைத்
தேர்ந்தெடுக்க வேண்டும்.



[You must be registered and logged in to see this image.]



நெருக்கமானவர்களுடன் தனது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது அவசியம், மது,
போதை, மற்றும் புகைத்தலில் மாட்டுப்படக் கூடாது. கோப்பி தேநீர் போன்றவையும்
அதிகம் கூடாது.

மருத்துவ ரீதியாகவும் பல வழிகளைச் சொல்லித் தருகிறார்கள். உடல் உழைப்பு, உடற் பயிற்சிகள், தியானம், யோகாசனம், சாந்த வழி முறைகள்
(Relaxation techniques), Tai chi எனும் சீன உடற் பயிற்சி முறை போன்ற பல உள்ளன. இவற்றைச் சொல்லித் தரும் நபர்களும், நிலையங்கள் பலவும் இப்பொழுது இருக்கின்றன.

மேற் கூறியவற்றை பயில முடியாதவர்கள், எமது பாரம்பரியத்தில் வந்த சில முறைகளைத் தாங்களாகவே வீட்டிலிருந்து முயற்சிக்க முடியும்.

சுவாசப் பயிற்சி

மன அழுத்தங்களிலிருந்து விடுபட சுவாசப் பயிற்சி கைகொடுக்கும்.

அங்குமிங்கும் சஞ்சரிச்சு உளைச்சலடையும் மனதை ஒருமுகப்படுத்த யோகாசனப்
பயிற்சியின் ஒரு அங்கமாகச் சுவாசப் பயிற்சி செய்யப்படுகிறது. அது
பத்மாசனத்திலிருந்து செய்யப்படுவது.


[You must be registered and logged in to see this image.]

காலத்திற்கு ஏற்ற வகையில் இதனை விஞ்ஞான பூர்வமாகவும் இலகுவான முறையில் செய்யலாம்.

  • இரு பாதங்களும் தரையில் இருக்குமாறு ஒரு நாற்காலியில் முதுகை நிமிர்த்தியபடி உட்காருங்கள்.
  • உள்ளங் கைகள் இரண்டையும் வயிற்றில் படுமாறு உங்கள் தொடைகளில் தளர்ச்சியாக வையுங்கள்.
  • ஒன்று இரண்டு மூன்று நாலு என மனதிற்குள் எண்ணிக்கொண்டு மெதுவாக
    மூக்கினால் மூச்சை உள்ளெடுங்கள். அவ்வாறு செய்யும்போது உங்கள் வயிறு
    உயர்வதை அவதானத்தில் எடுங்கள்.
  • ஒரு செகண்ட் நேரத்திற்கு மூச்சைப் பிடியுங்கள்.
  • முற் கூறியவாறு எண்ணிக்கொண்டு வாயினால் மூச்சை வெளியே விடுங்கள். மூச்சை விடும்போது உயர்ந்த வயிறு தளர்வதை அவதானியுங்கள்.
  • உங்கள் அவதானம் முழுவதும் உங்கள் சுவாசத்தில் மட்டுமே இருக்க வேண்டும்.
    மனம் அடங்காமல் அலைந்தால் அதன் பாட்டிற்கு விட்டுக் கொடுத்து மீண்டும்
    சுவாசத்தில் ஒன்ற வைக்க முயலுங்கள். தொடர்ந்து பயின்று வர ஒழுங்கான
    முறையில் செய்ய முடியும்.
  • இப் பயிற்ச்சியை 10 தடவைகள் மீளச் செய்யுங்கள்.


சாவசனம்


[You must be registered and logged in to see this image.]

யோகாசனத்தில் சாவசனம் என்றெரு பயிற்சி உள்ளது. பெயரைக் கேட்டுப் பயப்படாதீர்கள். இதுவும் நல்லதொரு பயிற்சியாகும்.

  • காற்றோட்டமுள்ள வசதியான ஆளரவமற்ற அமைதியான இடத்தில் படுத்திருங்கள்.
    தரை கட்டில் பாய் எதுவானாலும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப
    தேர்ந்தெடுங்கள்.
  • தளர்ச்சியான உடைகளைத் தேர்ந்தெடுங்கள்.
  • கை கால்களைத் தளர்ச்சியாக நீட்டியபடி படுத்திருங்கள்.
  • இப்பொழுது பாதத்திலிருந்து ஒவ்வொரு உறுப்பாக மனத்தில் நினைக்க வேண்டும்.
  • முதலில் கால் பெருவிரல்களில் ஆரம்பியுங்கள்.
  • அவற்றை தளரச் செய்யுங்கள்.
  • அவை ஆரோக்கியமாக நல்ல நிலையில் இருப்பதாகவும் நன்றாகச் செயற்படுவதாகவும் நினைத்து மனதைச் சாந்தப்படுத்துங்கள்.
  • பின் அருகில் உள்ள ஏனைய விரல்களையும் தளரச் செய்து அவை பற்றி முற் கூறியவாறு நினைத்துச் சாந்தப்படுங்கள்.
  • பாதம், கணுக்கால், கெண்டை, முழங்கால், தொடை, பிறப்புறுப்புகள்,
    அடிவயிறு, மேல் வயிறு, இருதயம், நெஞ்சறை, கைகள், கழுத்து, தாடை, முகம்,
    காது, மூக்கு, கண், நெற்றி, தலை எனப் படிப்படியாக மேல் நோக்கித் தளர்த்திச்
    செல்லுங்கள்.
  • இறுதியாக மூளையையும் அவ்வாறே தளரத்தி அமைதி கொள்ளுங்கள்.





இது ஒரு ஆனந்த நிலையைக் கொடுக்கும்.

சில நிமிடங்கள் அவ்வாறு அமைதியாகப் படுத்து இருங்கள்
பின்னர் உங்கள் உடல் உறுப்புகளை மெதுவாக இயக்கி எழுந்திருங்கள்.



[You must be registered and logged in to see this image.]


உங்களுக்கு உகந்த முறையைத் தேர்ந்தெடுத்து தொடர்ந்து செய்து வாருங்கள். மன
அழுத்தத் தொல்லையிலிருந்து விடுபட்டு உடல் நலமும் உள நிறைவும் பெற்று வாழ
முடியும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தொல்லை கொடுக்கும் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுதல் Empty திடீரென மயக்கமாக வருவது ஏன்? ஆபத்தும் உண்டா?

Post by மாலதி Sun May 05, 2013 8:17 pm

ஆபீசில் வேலை செய்து கொண்டிருந்த நண்பர் திடீரென தலையைச் சுற்றிக் கொண்டு வருகிறது என்று மேசையிலேயே படுத்துவி்ட்டார்.





சக
ஊழியர்கள் அவரை அவசர அவசரமாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பொது மருத்துவ நிபுணர், காது மூக்கு தொண்டை நிபுணர் என பல்வேறு மருத்துவ
நிபுணர்கள் பார்த்தார்கள்.


[You must be registered and logged in to see this image.]



செய்யாத
மருத்துவ ஆய்வு கூட பரிசோதனைகள் மிச்சமில்லை. MRI உட்பட மூளையைப்
படமெடுத்துப் பார்த்துவி்டார்கள். எதுவும் பிடிபடவில்லையாம்.


மயக்கம்
வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. வயதானவர்களும் பிரஷர் குறைவாக
உள்ளவர்களும் உட்கார்ந்த அல்லது படுக்கை நிலையிலிருந்து திடீரென எழுந்து
நின்றால் மயக்கம் வருவதுண்டு.


திடீரென ஏற்படும் கடும் வலிகள் கூட அவ்வாறு ஏற்படுத்தலாம்.


காரணம் எது என நீங்கள் நினைத்தாலும் ஒரு மருத்துவரைக் கலந்தாலோசித்து காரணத்தைக் கண்டறிய முயல வேண்டும்.


சில தருணங்களில் மருத்துவர்களால் கூட ஒருவருக்கு ஏன் மயக்கம் ஏற்பட்டது என்பதைத் துல்லியமாக கணடறிய முடியாதிருக்கலாம்.




கீழ் கண்டவை மயகத்தைத் தூண்டுவதற்கான முக்கய காரணிகளாக இருக்கக் கூடும் என அமெரிக்க குடும்ப மருத்துவ சங்கம் சொல்கிறது.




  • சடுதியாக எழுந்து நிற்பது.
  • கடுமையான வெப்பம் உள்ள சூழலில் தீவிரமான உடற பயிற்சி செய்தல் அல்லது கடுமையாக வேலை செய்தல்.
  • மிக வேகமாகச் சுவாசித்தல். இந்த hyperventilating என்பது நோய்களின் போதும் ஏற்படலாம், மன உளைச்சலாலும் நிகழலாம்.
  • மிகக்
    கடுமையான மனத் தாக்கம் அல்லது துயரம் உடலை மட்டுமின்றி ஒருவரது இரத்த
    அழுத்தத்தையும் பாதிக்கும்போது அவ்வாறு மயக்கம் ஏற்படுவதுண்டு.

  • சில பிரஷர் மருந்துகளை உட்கொள்ளும்போது திடீரென எழும்போது இரத்த அழுத்தம் குறைவதுண்டு. இது திடீர மயக்கத்திற்குக் காரணமாகலாம்.

காரணம் என்பதைக் கண்டறிந்து மீண்டும் நிகழ்வதைத் தடுங்கள்.


இல்லையேல்
ஆபத்தில் மாட்டிக் கொள்ள நேர்வதுடன், தேவையற்ற மருத்துவப் பரிசோதனைகள்,
சிகிச்சைகள், பணச் செலவு மற்றும் மன உளைச்சலைத் தவிர்துக் கொள்ளலாம்.


திடீர் மயக்கங்கள் சில ஆபத்தான நிலையின் அறிகுறியாகவும் இருக்கலாம்.




[You must be registered and logged in to see this image.]





  • குறுகிய கால நேரத்திற்குள் பல தடவைகள் ஏற்படுதல்.
  • வேறு எந்த அறிகுறிகளும் இல்லாமல் திடீரென ஏற்படல் (களைப்பு, வாந்தி, காய்ச்சல், நித்திரைக் குறைவு போன்றவை சில உதாரணங்கள்)
  • குருதிப் பெருக்கு
  • மூச்செடுப்பதில் சிரமம்
  • நெஞ்நு வலி
  • இருதயம் வேகமாகத் துடித்தல்
  • முகம் அல்லது உடலின் ஒரு பக்கத்தில் மரப்பது போன்ற உணர்ச்சி


மேற் கூறிய அற்குறிகள் இருந்தால் மயக்கத்திற்கு அடிப்படையான வேறு ஏதோ
ஆபத்தான காரணம் இருப்பதாகக் கொள்ளலாம். உடனடியாக மருத்துவரை காணுங்கள்
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum