TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இரத்தம் கண்டுதல் (கட்டிபடுதல்) பற்றி விரிவாக பார்க்கலாம்

Go down

இரத்தம் கண்டுதல் (கட்டிபடுதல்) பற்றி விரிவாக பார்க்கலாம்  Empty இரத்தம் கண்டுதல் (கட்டிபடுதல்) பற்றி விரிவாக பார்க்கலாம்

Post by மாலதி Sun May 05, 2013 8:07 pm

தனக்கே தனது முகத்தைப் பார்க்கச் சகிக்கதலாலோ என்னவவோ முகத்தை துணியால்
மூடி கண்கள் மட்டும் வெளியே தெரியுமாறு வந்தாள் ஒரு பெண்மணி. நிதானமாக அதை
அகற்றினாள். பால்நிலவான அவளது அழகிய முகமானது கிரகணத்தால் மூடுப்பட்ட
சந்திரன் போல பாதி கறுத்துக் கிடந்தது. நெத்தியில் ஒரு கொழுக்கட்டை வேறு.



[You must be registered and logged in to see this image.]




நேற்று இரவு விழுந்து விட்டாள். வெளிக்காயம் எதுவும் கிடையாது. இரத்தம்
கண்டிவிட்டதாம். மயக்கம் வாந்தி எவையும் இல்லை என்பதுடன் நாடித் துடிப்பு,
கருவிழி, பிரஷர், போன்றவற்றைப் பரிசோதித்து ஆபத்து இல்லை என்பதை
நிச்சயப்படுத்தினேன்.



[You must be registered and logged in to see this image.]

இரத்தம் கண்டுதல் எவ்வாறு?

இரத்தம் கண்டுதல் என பேச்சு வழக்கில் சொல்வது உண்மையில் இரத்தமானது இரத்தம்
குழாய்க்கு வெளியே உறைந்து கட்டி படுவதாகும். கட்டிபடுதல்தான் பேச்சு
வழக்கில் கண்டலாயிற்று என எண்ணுகிறேன். மருத்துவத்தில் hematoma என்போம்.



[You must be registered and logged in to see this image.]

இதன் அளவானது ஒரு குண்டுசித் தலையின் குட்டி சைஸ் முதல் பந்துவரை பெரிதாகவும் இருக்கலாம்.



[You must be registered and logged in to see this image.]

விழுதல் அடிபடுதல் போன்றவற்றின் போது பொதுவாக ஏற்படுகிறது. வெளிக்காயங்கள்
இல்லாதிருந்தாலும் இரத்தக் குழாய் சேதமுற்று குருதியானது அருகில் உள்ள
திசுக்களுக்குள் கசியும்போது குருதி உறைந்துவிடும்.

கசிவு அதிகமாக இருந்தால் உறையும் இரத்தமானது கட்டிபோலத் திரளும். நாளம்,
நாடி மயிர்துளைக் குழாய்கள் என எந்தவிதமான இரத்தக் குழாய்கள்
சேதமுறுவதாலும் இவ்வாறு கண்டல் ஏற்படலாம். பாராதூரமான அடிபடிதலில்தான்
இரத்தம் கண்ட வேண்டும் என்றில்லை.

மிகச் சாதரண தும்மலின் வேகம் சிலரின் நாசி இழையங்களைத் தாக்குவதால் இரத்தக் கசிவு ஏற்படக் கூடிய சாத்தியம் உண்டு.



[You must be registered and logged in to see this image.]


இரத்தம் தொடர்ந்து வெளியேறுவதைத் தடுக்கவே குருதி உறைதல் உதவுகிறது. மிகக்
குறைந்தளவு இரத்தம் மட்டுமே வெளியேறிய குருதி உறைந்தால் அது ஒரு சிறிய
சிவத்த புள்ளி போலவே தோன்றும். அதனை மருத்துவத்தில் Petechiae என்பார்கள்.



[You must be registered and logged in to see this image.]

அதிகம் வெளியேறி கட்டிபோலத் தோன்றினால்தான் அதை கண்டல் எனச் சொல்கிறோம்.

இரத்தக் குழாய்கள் சேதமுறுவதால் குருதிப் பெருக்கும் ஏற்படலாம். அதன்போது
குருதி உறையாமல் தொடர்ந்து வெளியேறிக் கொண்டேயிருக்கும். இதனை
மருத்துவத்தில் Hemorrhage என்பார்கள்.

ஏன் ஏற்படுகிறது.

பொதுவாக ஏதாவது விபத்துத்தான் காரணமாக இருக்கும். விபத்து என்பது வீதி
விபத்துப்போல தீவிரமானதாக இருக்க வேண்டும் என்றில்லை. தடக்கி விழுதல், தலை
கால் போன்ற அங்கங்கள் மேசை கட்டில் போன்றவற்றில் அடிபடுதல் போல மிகச்
சாதாரணாகக் கூட இருக்கலாம்.

இப்பொழுது பலர் குருதி உறைதலைத் தடுப்பதற்கான மருந்துகளை உபயோகிக்கின்றனர்.
இருதய நோயுள்ளவர்கள், இருதய நோய் எற்பட வாய்ப்புள்ளவர்கள் ஆகியோர் குறைந்த
அளவில் அஸ்பிரின் மாத்திரைகளை (Aspirin
75mg or 100 mg)
உட்கொள்கின்றனர். வேறு சிலர் Clopidogril
75 mg
உபயோகிக்கின்றனர். வேறு சிலர் Warfarin உபயோகிக்கின்றனர். பக்கவாதம் வந்த சிலர் Persantine உபயோகிக்கின்றனர்.

இவை யாவுமே இரத்தம் உறைதலைக் குறைக்கினறன. குருதியின் உறையும் தன்மையைக்
குறைக்க செய்வது அவர்களது பிரச்சனைகளுக்கு மிக அவசியமானதே. ஆனால் அதன்
விளைவாக இவர்களுக்கு சிறிய விபத்தினால் கூட இரத்தக் கசிவு ஏற்படலாம்.
கண்டலும் ஏற்படலாம். எனவே அவதானமாக இருப்பது அவசியம்.

அறிகுறிகளும் மாற்றங்களும்

கண்டல்கள் பொதுவாகக் கடும் வேதனையைக் கொடுப்பதில்லை. வீக்கமும் சிறியளவு
வலியும் இருக்கலாம். இருந்தபோதும் சில இடங்களில் ஏற்படும் கண்டல்கள் அதிக
வலியைக் கொடுக்கும்.

ஆரம்ப நிலையில் தொடுகைக்கு கடுமையானதாகத் தோன்றும் கண்டல்கள் சிறிது
சிறிதாக மெதுமையடைந்து மறைந்து போகும். வீக்கத்திற்கு ஏற்ப மறைவதற்கு ஒரு
நாளோ பல நாட்களோ எடுக்கலாம்.

அளவு குறைந்து செல்லும்போது அதன் வடிவமும் நிறமும் மாறுவதுண்டு. கடும்
நீலம் அல்லது கத்தரி நிறமாக இருந்தது பின் சற்று மஞ்சள் பூத்து, பிறவுண்
நிறமாகி இறுதியில் வழமையான தோல் நிறத்தை அடையும்.

சில வேளைகளில் கண்டல் ஓரிடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாறுவதுமுண்டு.
உதாரணத்திற்கு முற் கூறிய பெண்ணிற்கு நெற்றியில் தோன்றிய கண்டல் பின்னர்
புவியீர்ப்பு விசை காரணமாக கீழ் நோக்கி நகர்ந்து கன்னத்திற்கும் பின்னர்
கழுத்திற்கும் இறங்கியது.

சில விசேட கண்டல்கள்

நகதின் கீழ்ப் பகுதியில் குரதிக் கசிவு ஏற்பட்டால் கடினமான நகம்
ஒருபுறமும், மறுபுறம் எலும்பும் அழுத்துவதால் கண்டல் விரிவடைவதற்கு இடம்
அளிக்காது. இதனால் ஏற்படும் அழுத்தம்; கடும் வலியை ஏற்படுத்தும்.



[You must be registered and logged in to see this image.]

மூக்கில் அடிபட்டால் சில வேளை அதன் நடுவில் இருக்கும் மென்சவ்வான ளநிவரஅ
த்தில் கண்டல் ஏற்படலாம். இது பெரிதாகவும் இரு பக்க நாசியையும் அடைக்குமளவு
பெரிசானால் மூச்செடுப்பதில் சிரமம் ஏற்படுவதுண்டு. இதை அவசரமாக
மருத்துவரிடம் காட்டி அகற்ற வேண்டும். இல்லையேல் குருதி ஓட்டம் தடைப்பட்டு
மூக்கின் மென்சவ்வு பழுதடைந்துவிடும். மூக்கு சப்பையாகிவிடும்

இதேபோல காது மடலிலும் மென் சவ்வுகள் உள்ளன. அங்கும் கண்டல் ஏற்பட்டால்
அதற்கான குருதி ஓட்டம் தடைப்பட்டும். உடனடியாகக் காது மருத்துவரிடம் காட்டி
கண்டலை அகற்றுவது அவசியம். இல்லையேல் காது சளிந்து வளைந்துவிடும்.



[You must be registered and logged in to see this image.]

மலவாயிலிலும் கண்டல் ஏற்படலாம். குதத்திற்கு அருகில் உள்ள இரத்தக்
குழாய்கள் வெடிப்பதால் திடீரென வலியுடன் கூடிய கட்டி நாவல்பழக் கலரில்
ஏற்படும். வலியைக் குறைப்பதற்கான பூச்சு மருந்து மாத்திரைகளை உபயோகிக்க சில
நாட்களில் தானே தணிந்துவிடும். கடும் வலியாயின் மயக்கம் கொடுக்காமலே,
விறைப்பதற்கு ஊசி போட்டு கண்டல் இரத்தத்ததை அகற்றுவதன் மூலம்
குணப்படுத்தலாம்.


[You must be registered and logged in to see this image.]

தலையில் அடிபட்டால் எல்லோரும் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வருவார்கள்.
காரணம் மண்டையில் கண்டல் பட்டால் அது மூளைக்குள் ஏதாவது ஆபத்தை
ஏற்படுத்துமா என்ற பயம்தான். வெளியில் ஏற்படும் கண்டல்கள் மூளைக்குள்
எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆயினும் தலையில் பட்ட அடியால் மண்டை
ஓட்டின் உட்புறம் ஏதாவது இரத்தக் கசிவு அவ்வது உறைதல் ஏற்பட்டால் அது
மிகவும் ஆபத்தானதே.



[You must be registered and logged in to see this image.]

தலையில் அடிப்பட்ட பின்னர் மயக்கம், கடுமையான தலைவலி, வாந்தி போன்ற
அறிகுறிகள் சேர்ந்திருந்தால் தாமதிக்காது மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

நீங்கள் செய்யக் கூடியவை

மேற் கூறிய சில விசேட வகைக் கண்டல்களுக்கு மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் பற்றி வலியுறுத்தினேன்.

ஆயினும் ஆபத்த சாதாரண கண்டல்களை நீங்களாகவே குணப்படுத்தலாம். இதற்கான மருத்துவத்தை RICE எனக் குறியீடாக் கூறுவார்கள்.

R என்பது Rest யைக் குறிக்கும். ரெஸ்ட் என்பது மூடிக் கட்டிக் கொண்டு
படுத்துக் கிடப்பது என அர்த்தப்படாது. பாதிக்கப்பட்ட பகுதிக்கு அதிக வேலைப்
பளுவைக் கொடுக்காமல் சற்று ஆறுதல் கொடுப்பதாகும்.

I என்பது Ice யைக் குறிக்கும். கண்டல் பட்ட இடத்தின் மேல் சிறிது ஐஸ்கட்டியை ஒரு பையினுள் வைத்து டவல் துணியால் கட்டிவிடலாம்.


  • ஆயினும் அவ்வாறு ஐஸ்கட்டியை 10 நிமிடங்களுக்கு அதிகமாக ஒரே தடவையில் வைக்கக் கூடாது.
  • தேவைப்படால் 10 நிமிடங்களின் பின் எடுத்து விட்டு சற்று நேரம் கழிய மீண்டும் வைக்கலாம்.
  • அத்துடன் வலியைத் தணிக்க பரசிட்டமோல் மாத்திரைகளைக் கொடுக்கலாம். அஸ்பிரினை அவ் வேளையில் தவிர்ப்பது நல்லது.




[You must be registered and logged in to see this image.]

C என்பது Compression யைக் குறிக்கும். துணியால் அல்லது பன்டேஜ்சால் அதன் மேல் கட்டுவதானது வீக்கம் அதிகரிக்காமல் இருக்க உதவும்.



E என்பது Elevation யைக் குறிக்கும். அடிபட்ட இடத்தைத் தொங்கவிடாது உயர்த்தி வைத்தால் விக்கம் வேதனை விரைவில் குறையும்.

இறுதியாகச் சொல்வதானால் பெரும்பாலான கண்டல்கள் ஆபத்தற்றவை. இருந்தபோதும்
அவை ஏற்படாமல் இருப்பதற்கு நாம் அவதானமாக இருக்க வேண்டும். பிள்ளைகள்
இளைஞர்கள் விளையாட்டின் போது விழுந்து காயம் படுவதற்கான சாத்தியம் அதிகம்.

அதேவேளை முதியவர்கள் சமநிலை தளும்பலாலும், காலில் ஏற்படும் விறைப்புத்
தன்மைகளாலும் விழுவதற்கும் காயம் படுவதற்குமான சாத்தியம் அதிகம். அத்துடன்
அவர்கள் குருதி உறைதலைத் தடுக்கும் மருந்துகளையும் உபயோகிக்க நேர்வதால்
காயங்களும் கண்டல்களும் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

எம்மை நாமே பாதுகாப்பதின் மூலமே இது ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
-hainallama.blogspot.-
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» விண்மீன்களின் உலகத்தைப் பற்றி படங்களுடன் விரிவாக சொல்லும் பயனுள்ள தளம்.
» நமது இரத்தம் பற்றி கொஞ்சம் தெரிஞ்சி வச்சிப்போமா?
»  உயிர்தானத்திற்கு இணையான இரத்த தானம் - இரத்தம் பற்றி அறிந்திருக்க வேண்டிய விஷயங்கள்!
» வேலன்:-பைல்களை விரைவாக-விரிவாக தேட
» உலகில் உள்ள அனைத்து தாவரங்களின் விபரங்களையும் படங்களுடன் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum