TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வரலாற்று நகைச்சுவைகள் மற்றும் சுவையான சம்பவங்கள்

2 posters

Go down

வரலாற்று நகைச்சுவைகள் மற்றும் சுவையான சம்பவங்கள் Empty வரலாற்று நகைச்சுவைகள் மற்றும் சுவையான சம்பவங்கள்

Post by Rikaz Sat Mar 13, 2010 7:50 pm

வரலாற்று நகைச்சுவைகள் மற்றும் சுவையான சம்பவங்கள்
வரலாற்றில் மன்னர்களைப் பற்றி வீரம் மிகுந்தவர்கள், ராஜதந்திர்கள், வள்ளல்கள் என ஓவராக மக்களுக்கு பொய் சொல்லிவிட்டு சில நகைச்சுவை சம்பவங்கள் மற்றும் கிறுக்குதனங்கள் ஆகியவற்றை மறைத்து வைத்து விட்டனர். இதையெல்லாம் சேர்த்திருந்தால் வரலாறே பிடிக்கதே மக்கள் அதன் மீது முழு ஈடுபாட்டுடன் இருந்திருப்பார்கள்.எப்போதுமே வெறும் ஆண்டுகளையும் அரசன் ஆண்ட பகுதிகளையும் மட்டுமே சொல்லி கொடுத்து நம்மை அலறவைக்கும் ஆசிரியர்கள் இதைப் படித்தாலாவது திருந்தட்டும்.

நாம் மன்னன் ஆண்ட ஆண்டு, அவருடைய சாதனை என்பதையெல்லாம் மறந்து ஜாலியாக ஒரு டூர் போவோம். மன்னரெல்லாம் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல நம்மைப் போன்ற சாதாண மனிதர்கள் என்று நீங்கள் உணர்ந்து சமூக அறிவியல் புத்தகத்தினை தேடிப் போனால் அதுவே வெற்றி. வாருங்கள் பயணத்தினை ஆரமிப்போம்.


தைமூர் –:

தைமூர் இந்தப் பெயர் வரலாற்று ஆசிரியர்களிடையே மிகவும் பிரபலம். இந்தியாவிற்கு வந்து பலவித சேதங்களை ஏற்படுத்திய கொடூரன்.என்னத்தான் பெரிய ஆள் பயங்கர கொலைகாரன் என்று வரலாற்று ஆசிரியர்கள் சொன்னாலும்.அவன் செய்த ஒரு காரியம் நம்மை 23ம் புலிகேசிசியே தேவலை என்று நினைக்கத் தோன்றும்.அப்படி அவன் என்னதான் செய்தான்

டெல்லியை கைப்பற்ற வந்து அதையும் செய்தவனுக்கு ஒரு இந்திய விசயம் பிடித்துப் போனது.அது தான் யானை.பல இந்து அரசர்களிடம் யானைப் படை இருந்தது குறிப்பிடதக்கது.அதைப் பார்த்த அவன் சுமார் நூற்றி இருபது யானைகளை படைக்காக வரவழைத்தான்.டெல்லியையே கைப்பற்றியிருந்தாலும் அவன் தங்கியது அரண்மனைக்கு முன் டென்ட் அடித்து.(துரைக்கு அரண்மனையில தங்கனுமுன்னு கூட அறிவில்லை. அதுக்கு பின்னாடி பண்ணினார் பாரு ஒன்னு.)வந்திருந்த யானைகளை குளிப்பாட்டி மஞ்சள்,பச்சை,நீளம்,சிகப்பு என உடல் முழுக்க வண்ணம் பூசி கூடாரத்தை சுற்றி நிற்க வைத்தான்.(நினைச்சு பார்க்கவே சிரிப்பு சிரிப்பா வருது).


மாலிக் கபூர் –:

மன்னன் அலாவுதின் கில்ஜியை கொண்றுவிட்ட தளபதி மாலிக் கபூர். அலாவுதினின் மகனை கொல்ல ஆட்களை அனுப்புகிறார்.அரண்மனை சிறையிலிருக்கும் இளவரசர் முபாரக் தான் அணிந்திருந்த ஆபரத்திலிருந்த வைரம் போன்ற விலையுயர்ந்த கற்களை அவர்களை நோக்கி வீச வந்தவர்கள் அதையெல்லாம் பொறுக்கிக் கொண்டு மாலிக் கபூரை கொன்றுவிட்டனர்.பல காலம் தளபதியாக இருந்து எல்லா காய்களையும் சரியாக நகர்த்தி ஆட்சிக்கு வந்த 36ம் நாளே மாண்டு போனான் மாலிக்.(ஒரே பீலிங்கா இருக்குதப்பா)

மாலிக் கபூர் ஒரு அலி (திருநங்கை) என்றாலும் அரசன் அலாவுதினின் மூன்றாவது மனைவியை அதற்குள் திருமணமும் செய்திருந்தான்.(என்ன கொடுமை சார் இது.ஆமா பஸ்ட் நைட்டுல என்ன பண்ணிருப்பாரு.)


முபாரக் –:

அவமானச்சின்னம் என்று முஸ்லீம்கள் கூறுவது இவனைதான்.அப்படி என்ன செய்தான் முபாரக்...

பெண்களெல்லாம் சலித்துப் போக இருதியில் குஸ்ரூகான் என்ற என்ற இளைஞனுடன் அந்தப்புறத்தில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டான். (ஓ இப்ப இதுக்கு அனுமதி கொடுத்துட்டாங்க) இவன் தான் முதல் ஓரினச் சேர்க்கை சுல்தான்.அந்தப்புறத்தில் இருந்த அழகிகலெல்லாம் சும்மா இவர்களின் கூத்தை பார்த்தபடி என்கிறது வரலாறு.(வெறென்ன செய்ய முடியும்).


துக்ளக் –:

ஜோக், நகைச்சுவை என்பது மட்டும் பிடிக்காது துக்ளக்கிற்கு. ஆனால் கோமாலித்தனம் என்றதுமே நினைவுக்கு வருகின்ற முதல் சுல்தான் இவர்தான். (துக்ளக் லக் இல்லாத மனுசன் போல) வரலாறு முழுக்க தேடிப்பார்த்தாலும் இவர் நடத்திய காமெடிகள் போல யாரும் செய்யவில்லை.( ஐயோ பாவம்)

சீன நாட்டினைப் பார்த்து பணத்தினை அச்சடித்தார். அவரை விட அறிவாளியான நம் மக்கள் கள்ள பணத்தினை அச்சடித்தார்கள்.(அப்பவேவா).அதன் பின்பு பணம் அச்சடிப்பதை சுல்தான் நிறுத்திவிட்டார்.டெல்லியிலிருந்து தேவகிரி என்ற ஊருக்கு தலை நகரை மாற்றினார்.பின்பு மீண்டும் டெல்லிக்கே போனார்.(அட போங்கப்பா)இப்படி ஒன்று செய்வதும் பின்பு அதையையே மாற்றி பழைய நிலைக்கே வருவதும் என காமெடி செய்து கொண்டிருந்தவர் செத்தும் ஒரு காமெடியே.... எப்படி தெரியுமா

மசாலா மீனை தின்றவர் அது ஒத்துக் கொள்ளாமல் போக நோயால் அவதிப்பட்டு இறந்துபோனார்.வீரமரணம், இயற்கை மரணம் என்ற இரண்டுக்கும் இடம் கொடுக்காமல் இவர் இறந்த்து வியப்பு என்றாலும் இவரை மிஞ்சும் வகையில் இறந்த சுல்தான்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்(இதுக்கும் மேலையா).


குத்புதின் –:

நான்கு ஆண்டுகள் டெல்லியை ஆண்டவர் குத்புதின்.குதுப்மினாரை கட்டிய புண்ணியவான் என்றால் எல்லோருக்கும் தெரியலாம்.இதிலென்ன காமெடி இருக்கிறதென்றால் ஒருமுறை போலோ என்ற விளையாட்டில் ஈடுபட்டிருந்த சுல்தான் குதிரையிலிருந்து இடறி விழுந்து செத்து போனார். எதிரிகளால் பழி தீர்க்கப்பட்டு மரணமடைந்தவர்கள், வீரமரணம் அடைந்தவர்கள், நோயின் மூலம் இறந்தவர்கள் என பல மன்னர்களைப் பற்றி படித்திருந்தாலும் இப்படி கீழே விழுந்து செத்துப் போன மன்ன்ன் வரலாறும் இருக்கத்தான் செய்கின்றது.(இதுக்கு துக்ளக்கே தேவலாம்)


பாபர் –:

பாபர் என்ன தான் பெரிய முகலாய அரசனாக இருந்தாலும் இரவுகளில் திருப்தி அடையாத அவர் முதல் மனைவி அவரை விட்டு ஓடிவிட்டார்.ஆனால் அதனை பாபரை விட்டு விலகிவிட்டார் என்று மென்மையாக சொல்கின்றன வரலாற்று நூல்கள்.(அதான்னே பார்த்தேன், அரசர்களின் வாழ்க்கையில் நடந்தவற்றை மறைப்பதே வேளையாகப் போய்விட்டது).


ஹூமாயூன் –:

மூட நம்பிகையின் மொத்த உருவம் இந்த மன்னர்.பாபரின் வாரிசு என்றாலும் எதற்கெடுத்தாலும் ஜோதிடம் பார்ப்பவர்.அதை கணிக்கும் திறமையும் இருந்த்தாக சொல்கின்றனர். எங்கு கிளம்பினாலும் வலது காலை முன் வைத்தே நடக்க கூடியவராக இருந்தார்.ஒரு அமைச்சா இடதுகாலை எடுத்து வைத்து உள்ளே வர, அவரை வெளியே அனுப்பி மீண்டும் வலது காலை முன்வைத்து வரச்சொல்லிய மகா அறிவாளி.

அவருடைய மரணம் கூட சற்று சோகமான காமெடி தான்.மந்திரியுடன் பேசிக் கொண்டு படிகளில் கீழிரங்கியவரின் காதுகளில் தொழுகைக்கான அழைப்புவிழ, உடனே திரும்ப முயன்று கால் இடறி மாடிப்படிகளில் உருண்டு கோமா நிலைக்கு போய் இறந்தார்.( ஐயோ பாவம்)


அக்பர் –:

முகலாய பெரும் சக்கிரவர்த்தி என்றே எல்லோறும் கூறினாலும் என் முகமதிய நண்பன் ஒருவன் அக்பர் முஸ்லிமே இல்லை என கூறுகிறான்.அந்த அளவிற்கு மற்ற மதங்களின் மீதும் மதிப்பு கொண்டிருந்தார் அக்பர்.

பீர்பாலைப் பற்றி யாருக்கும் சொல்ல தேவையில்லை.அவருடைய கதைகளை நாடே அறியும்.ஆனால் பீர்பால் இல்லாமலே அக்பர் தனியாக ஒரு காமெடி செய்தார் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா.

அக்பருக்கு 54 வயதாகிவிட்டதே நினைவில் இல்லை.ஏதோ தன்னை இளைஞனாக நினைத்துக் கொண்டு ஒரு பௌணர்னமி இரவில் மானைப் பிடிக்க சென்றிருக்கிறார்.மான் கையில் மாட்டிக் கொண்டதும் அக்பருக்கு சந்தோசம்.மான் என்ன நினைத்த்தோ அவர் கைகளிலிருந்து திமிர அந்த மானின் கொம்பு பதம் பார்த்த்தோ அக்பரின் மர்ம உறுப்பில் இருக்கும் கொட்டைகளை.அந்த விபத்திருந்து மீண்டுவர அக்பருக்கு இரண்டு மாதம் ஆனதாம்.

சக்ரவர்த்தியின் பிரத்யோகமான அந்த காயத்திற்கு மருந்து போடும் பாக்கியம் எனக்கு கிடைத்து என்று உணர்ச்சிபூர்வமாக எழுதியிருக்கிறார் அப்துல் ஃபஸல்.(ஐயோ கருமம், கருமம்)

காமடிகள் மட்டுமல்ல “இந்துக்களிடையே இறந்தவருக்கு கூட குடி தண்ணீர் தருகின்ற பழக்கமிருக்கு, நீ ஒரு சிறந்த முஸ்லிம். உயிரோடு இருக்கும் தந்தைக்கு குடி தண்ணீர் தர மறுக்கலாமா” – ஷாஜகானான் ஔரங்கசிப்பிடம் அனுப்பிய கடிதம், முகமதியர்கள் அரண்மனையை கைப்பற்றியதும் தீக்குளித்து மாண்டு போன ராஜபுத்திர பெண்கள், கோயிலை காப்பாற்றுவதற்காக போராடி மாண்டு போன சாதாரண இந்து குடி மக்கள் போன்ற நெஞ்சத்தினை உருக்கும் கனமான சம்பவங்களும் உண்டு
Rikaz
Rikaz
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 662
Join date : 28/01/2010

Back to top Go down

வரலாற்று நகைச்சுவைகள் மற்றும் சுவையான சம்பவங்கள் Empty Re: வரலாற்று நகைச்சுவைகள் மற்றும் சுவையான சம்பவங்கள்

Post by navas Tue Jun 08, 2010 2:45 am

//என் முகமதிய நண்பன் ஒருவன் அக்பர் முஸ்லிமே இல்லை என கூறுகிறான்.அந்த அளவிற்கு மற்ற மதங்களின் மீதும் மதிப்பு கொண்டிருந்தார்
அக்பர்.//


ஐயா அக்பரை முஸ்லிமேயில்லை என்று சொல்ல காரணம் அவர் தீன் இலாகி என்ற தனி மதம் உருவாக்கியதாலேயன்றி அவர் மற்ற மதங்களை மதித்தார் என்கிற காரணத்தால் அல்ல இஸ்லாமியர்கள் அவ்வளவு கீழ்தனமான எண்ணமுடையவர்கள் அல்லர் மாறாக இஸ்லாம் மற்ற மதங்களை மதிக்க சொல்கிறது நபிகளார் உங்கள் தாயை நீங்கள் ஏசாதீர்கள் என்று தோழர்களுக்கு உபதேசம் செய்தார்கள் அப்போது ஒருவர் எங்கள் தாயை நாங்கள் ஏசுவதில்லையே என்று கேள்வி கேட்டார் அதற்கு நீங்கள் மற்றவரின் தாயை ஏசினால் அவர் உங்கள் தாயை ஏசுவார் நீங்கள் மற்றவர்களின் கடவுளை ஏசினால்அவர் உங்கள் கடவுளை ஏசுவார் என்று நபிகளார் பதிலளித்தார்கள் இது போன்று ஏராளமான சான்றுகளை கூறலாம்
வைகோவை தி.மு.க காரர் என்றும் கருணாவை விடுதலைப்புலி என்றும் கூறுவது எப்படி முட்டாள்தனமோ அதுபோன்று அக்பரை முஸ்லிம் என்று கூறுவதும் முட்டாள்தனம்

அன்புடன்
இஸ்லாமிய மார்க்கத்தில் மட்டுமே நம்பிக்கை கொண்டு அனைத்து மதங்களையும்,அவற்றை உண்மையாக பின்பற்றும் மக்களையும் மதிக்கும்

தேங்கை நவாஸ்
navas
navas
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 291
Join date : 24/03/2010
Location : dubai and india

http://indianrailwaytimes.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum