TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நெடுங்குன்றம்

2 posters

Go down

 நெடுங்குன்றம் Empty நெடுங்குன்றம்

Post by mravikrishna Wed Jun 27, 2012 1:31 pm

அருணாசலம் என்பதை திருவண்ணாமலை என்றும் ; வெங்கடாசலம் என்பதைத் திருப்பதி என்றும் ; தணிகாசலம் என்பதைத் திருத்தணி என்றழைக்கப்படும் திருத்தணிகையும் ; கழுகாசலம் என்பதைத் திருக்கழுக் குன்றம் எனப்படும் திருக்கழுகுக்குன்றம் என்றும் வழங்கப்படுவது ஆன்மீக அன்பர்கள் அறிந்திருப்பார்கள். இதைப் போல தீர்க்காசலம் என்பதை நெடுங்குன்றம் என்றழைக்கப்படுகிறது. அசலம் என்றால் மலை; குன்று என்றழைக்கப்படும்.

இங்கு எழுந்தருளியுள்ள தீர்க்காசல ஈசுவரர் கோயிலேயே சண்டேசுவரர் எதிரில் உள்ள திருச்சுற்றுச் சுவரில் நெடுங்குன்றம் நாயனார் என்று கல்வெட்டில் பொறிக்கப் பட்டுள்ளது. நாயனார் என்றால் கடவுள் என்று பொருள்.

” இறைந்தார் புரமெய்த வில்லிமை
நல்லிம வான்மகட்கு
மறைந்தார் கருங்குன்றம் வெண்குன்றம்
செங்குன்றம் மன்னற்குன்றம்
நிறைந்தார் நெடுங்குன்றம் நீள்கழுக்குன்றம்
என் தீவினைகள்
குறைத்தார் முதுகுன்ற மேகம்பர்
குன்றென்று கூறுமினே! “

எனப் பட்டினத்தார் தொன்மையான இத்திருத்தலத்தைப் பாடியுள்ளார்.
பிறவி அறுபட வேண்டி , இருப்பவர்களைத் தானே, இத்தலத்து இறைவன் அழைத்து தரிசனம் கொடுப்பார் என்பதனை சுகர் பிரம்மரிஷி வரலாறு அறிந்தவர்களுக்குத் தெரியும்.

இவ்வூருக்கு கிழக்கே குன்று ஒன்று உள்ளது. அதன் உச்சியின் பரப்பளவு
60 X 40 சதுர அடி இருக்கும். இக்குன்றே சிவபெருமான் அம்சமாகும்.
சத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம் என்னும் ஐந்து முகம் கொண்ட விசுவரூப சிவபெருமான் சிலை முன்னர் இருந்தது. ஆனால், இப்பொழுது இல்லை. இங்கு பெரிய சுனை ஒன்று உள்ளது. இம்மலைத் தொடர் குன்று ஒன்றில் தான் சுகர் ரிஷி தவம் செய்தார். சிவபெருமான் அவருக்கு வேதத்தை ஓதி உணர்த்தியருளினார். இதனால் சுகர் பிரம்மரிஷி பர்வதம் என்ற பெயரும் இக்குன்றிற்கு உண்டு.

சுகம் என்றால் கிளி என்று பொருள். அதனால், இம்மலைக்கு கிளிமலை என்றொரு பெயருமுண்டு.


சிவபெருமானே மலையாக உருவெடுத்துள்ளதையும் , சுகர் ரிஷி தவம் செய்து முத்தி அடைந்ததையும், “திருமூலவர்க்கம்” என்ற மகரிஷி அறிந்து, இத்தலத்தில் தவம் செய்து முத்திப் பேறு பெற்றார் என்ற தகவலை மிகப்பழமையான சித்தர் ஞானக்கோவை எனும் நூலில் “மகான்களில் கிருபை பொருந்தியத் தலங்கள் “ என்றத் தலைப்பில் நெடுங்குன்றம் என்று குறிக்கப்பட்டுள்ளதைக் கொண்டு பழம் பெருமை வாய்ந்த அறியப்படாத திருத்தலமாக இருப்பதனை உணரலாம்!

தீவினைகள் அறுபட்டு, உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மயமான இறைவனை அடைய உதவும் புண்ணியத் தலங்கள் பலவற்றில் இதுவும் ஒன்று.

இம்மலையின் பாதி உயரத்தில் ‘ கந்தப்பாறை சுனை ‘ ஒன்று உள்ளது. இந்த இடத்தில் , மலையாக உருவெடுத்த சிவபெருமானை மீண்டும் நினைவூட்டும் வகையில் சிவலிங்கம் ஒன்று உள்ளது. அதில் வள்ளி. தெய்வானை, திருமுருகன் என்ற மூன்று கற்றிரு மேனி சிலைகள் உள்ள முற்றுப்பெறாத அஷ்ட பந்தனம் பெறாத சுப்ரமணியர் ஆலயம் ஒன்று உள்ளது.

இம்மலையின் அடிவாரத்தில் ஊருக்கு ஈசான்ய மூலையில் ஆகம விதிப்படி“ தீர்க்காசலேசுவரர் “ ஆலயத்தில் எழுந்தருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

இக்கோயிலின் நுழைவாயிலின் வலப்புறம் விக்கினங்களைத் தீர்க்கும் விக்கினேசுவரர், இடப்புறம் வள்ளி, தெய்வானையுடன் ஆறுமுகப்பெருமான் காட்சி அளிக்கின்றனர்.

கருவறையில் தீர்க்காசலேசுவரர் லிங்கம் மிகச் சிறப்பாக உள்ளது.
அரு வுருவமான சிவலிங்கத்தின் அடிபாகத்தை பிரம்ம பாகம் என்றும், அதற்கு மேல் உள்ளதை விஷ்ணு பாகம் என்றும், மேலே உள்ள பாகத்தை உருத்திர பாகம் என்றும் அழைப்பர்.

தாமலை மலரின் மேல் வீற்றிருக்கும் பிரம்மனை நினைவூட்டுவது போல, பிரம்ம பாகத்தினைச் சுற்றித் தாமரை இதழ்கள் விரிந்துள்ளது போல உள்ளது. அடுத்து கோமுகத்தைக் கொண்ட விஷ்ணு பாகமும், மேலே உள்ள உருத்திர பாகமும் வட்ட வடிவமான முறையில் கலை நுணுக்கத்தோடு அமைந்துள்ளது உள்ளத்தைக்கவரும்.

வில்வமரத்தின் கீழ் உமையவளோடு கூடிய சிவபெருமான் சன்னதி, வினாயகர், ஆறுமுகப்பெருமான், வெங்கடேசப்பெருமான் சன்னதிகளும் உள்ளன.

வேதங்களைம் முறைமைப் படுத்திய மறைமுதல்வர் வேத வியாசரின் புதல்வரே சுகர். கிளியின் முகங்கொண்ட , பிறக்கும் போதே, மஹா ஞானியாகப் பிறந்தவர் சுகர். இதனை உணர்ந்த நாரத மஹரிஷி , ஞானம் பெறும் வழியை சுகருக்கு கூறினார். உலகமே மாயை என்பதனை தன் அறிவுத் தெளிவு பெற்று மென் மேலும் ஞானம் பெற தன் தந்தையை விட்டுப் பிரிய எண்ணினார்.

போகுமிடம் இன்ன இடமென தனக்கே புரியாமல் புறப்பட்டார்.செல்லும் வழியில் பன்னிரெண்டு தேவருலகப் பெண்களெல்லாம் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தனர்.
சுகர் அவ்வழியே நடந்து வருவகைக் கண்டாலும் எந்த வித அச்ச உணர்வும் இல்லாமல் நீராடிக் கொண்டிருந்தனர். தன் பிள்ளை சுகரை பின் தொடர்ந்து வேத வியாசரும் வந்தார். அவரைக் கண்டதும் தேவருலக அப்சரசுகள், தங்கள் அவசர அவசரமாக தங்கள் சேலைகளை எடுத்து உடுத்தினர்.

சுகர் வியாசரைக் காட்டிலும் பற்றற்று இருந்ததனையும், வியாசரை விட மேம்பட்ட ஞானியாக இருந்ததனையும் இச்சம்பவத்தின் மூலம் அறியலாம்.
இந்த நிலைக்கு வந்த போதும் பரிபூரண ஞானத்தைத் தேடி அலைந்து திரிந்து, சிவபெருமானே நெடுங்குன்றாய் இருக்கும் இம்மலைச் சாரலை அடைந்தார்.
சுகர் முன் இறைவனும் தோன்றினார்.

இறைவனைக் கண்ணுற்றதும், சுகர் அழுது தொழுது புலம்புகிறார்.
எந்தப் பிறவியில் என்ன பாவம் செய்தேனோ, தங்களின் திருவடியை விட்டு நீங்கி, இப்பிறவி எடுத்து விட்டேன். எனக்கு முக்திப் பேறு அளிக்க வேண்டும் இறைவா! என வேண்டுதல் விடுத்தார்.


சுக மகரிஷியின் வேண்டுகோளைக் கேட்ட பின்னர் , இறைவன் கூறலானார் :

“ இந்த உலகம் உய்யும் பொருட்டும் , தத்துவ ஞானமுடைய முனிவர்கள், தேவர்கள் , மகிழவும், தரும தேவதை பெருமைப் படவும், உலகத்தில் சகோதர பாசத்தை விளக்கவேண்டியும் , பிறரின் பொருளை விரும்புதல் தகாது அது துன்பம் தரும் என்பதனை உலக மக்களுக்கு உணர்த்த ,

சுபானு வருடத்தில் சித்திரை மாதம் பூர்வபட்சத்து நவமி திதியில் புனர்வசு நட்சட்சத்திர நான்காம் பாதத்தில் , புதன் கிழமையில், கடக லக்கினத்தில் பகற் பொழுது பதினான்கு நாழிகைக்கு மேல் திருமாலானவர் ஸ்ரீ ராமனாக அவதரித்துள்ளார்.

தேவர்களுக்கு திருமால் அளித்த வாக்குறுதியின் படி, சக்கராயுதத்தின் அம்சமாக , பூசத்தில் மீன லக்கினத்தில் பரதனாகவும்,

ஆயில்ய நட்சத்திரத்தில் ஆதிசேஷன் அம்சமாக இலட்சுமணனும் ,

மகம் நட்சத்திரத்தில் சத்ருக்கனும் அவதரித்துள்ளனர். இவர்களில், இராமனும் இலட்சுமணனும் சீதையை இலங்கையில் இருந்து மீட்டு இவ்வழியே வருவார்கள். மலை வடிவில் இருக்கும் எமைக் கண்டு தரிசிப்பார்கள். அது சமயம் , “ நான் கொடுக்கும் இந்த வேதச் சுவடியை ஸ்ரீ ராம பிரானிடம் கொடுப்பாயாக” . பிறகு சனகரிடம் சென்று ஞான உபதேசம் பெற்று , உன் பணி முடிந்து , தேகத்தினை விடுத்து , முத்திப் பேறு அடைவாய்” என்று கூறி வேதச் சுவடியை சுகரிடம் கொடுத்தார்.

இம்மலையில் தங்கி தவம் செய்வாயாக.... இப்பர்வதம் சுகர் பிரம்மரிஷி பர்வதம் என விளங்கட்டும் என்று மன மகிழ ஆசிர்வதித்தார்.

“பெருமானே.... என்னை ஆசிர்வதித்தது போல, உமது சன்னிதானம் கண்டு மனமுருகி வேண்டுவோருக்கு உரிய பலனளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அப்படியே ஆகட்டுமென ஆசிர்வதித்து தீர்க்காசலேசுவரராக சிவலிங்க வடிவில் காட்சி தந்தார்.

மஹாவிஷ்ணுவின் அம்சமான மானுட அவதாரமெடுத்த ஸ்ரீ ராமரின் வருவதனை எதிர்பார்த்தவராய் , தவத்தில் ஆழ்ந்தார்.

காலங்கள் சென்றன. இறைவன் கூறியவாறே ராமச்சந்திரமூர்த்தியும் இலட்சுமணன், சீதாபிராட்டியோடு வந்தார்.

சுகர் , ஸ்ரீ சீதா ராம லட்சுமணரை தரிசித்து வணங்கி , இறைவன் கொடுத்த சுவடி கொடுத்து , மக்கள் எல்லா நலமும் பெற்று வாழ , இந்த வேதத்தைப் படிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

எம்மன்னவனான இராமச்சந்திர மூர்த்தி, ரிஷியின் வார்த்தையினை சிரமேற்கொண்டவராய் , பத்மாசனமிட்டு ,

இடக்கரமானது இடப்பக்க முழங்கால் மேல் படிந்தவாறிருக்க, வலக்கரத்தை ஞான முத்திரையோடு மார்பின் மேல் வைத்துக் கொண்டார்.
( இந்தக் கோலத்தில் தான் , இராமச்சந்திர மூர்த்தியின் ஆலயத்தில் மூலவர் விக்கிரகம் உள்ளது)
இலட்சுமணன் வல்து புறத்திலிருக்க , அன்னை சீதையை வலதுபுறம் பூசைக்குரிய தாமரை மலரை கையிலேந்தி, இடது கரத்தைனை கடிகாஸ்தமாக வைத்து கொண்டு அண்ணலின் அருகில் பத்மாசனமிட்டு அமர்ந்த நிலையில் இருக்க , சுகரை வணங்கி , தாம் பெற்ற ஓலைச் சுவடியினை படிக்கத் தன்னுடைய தாசனாம் அனுமனிடம் படிக்கக் கட்டளையிட்டுக் கொடுத்தார். பயபக்தியுடன் பெற்றுக் கொண்ட அனுமனும்,
தாயாரின் எதிரில் பத்மாசனம் இட்டு , அமர்ந்து வேதச் சுவடியை படிக்கலானார்.

பிழையின்றி கணீரென்றக் குரலில் அனுமன் படிக்க, இராமச்சந்திரப் பெருமான் வேதத்தின் உட்பொருளை அனைவருக்கும் புரியும் வண்ணம் விளக்கமாக எடுத்துரைத்தார்.

ஆனந்தப் பட்ட, சுகர் இராமச் சந்திர மூர்த்தியிடம், நீங்கள் அமர்ந்த இக்கோலத்தினை அடியேன் கண்டது போலவே, உலக மக்கள் உனைக்காண வரும்போதும் காண வேண்டும். உமது நல்லாசி பெறவேண்டும். வேதம் படித்த அனுமனைத் தரிசிக்க , நோயிலிருந்து மீட்கும் சஞ்சீவியாய் வீற்றிருந்து அருள் பாலிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததனை , இராமச்சந்திர மூர்த்தியும் ஏற்றார். இக்கோரிக்கையின் படியே, இன்றும் கண்கொள்ளாக் காட்சியாய் இவரது திருக்கோலத்தினை இவ்வாலயத்தில் காணலாம்!.

இதற்கு அத்தாட்சியாக, நெடுங்குன்றின் வலது புறமுள்ள சிறுமலையில் ஸ்ரீராமச் சந்திர மூர்த்தியின் திருவடிகள் உள்ளன. பெருமாள் பாறை சுனை என்ற பெயரில் மக்களும் அழைக்கின்றனர்.

இத் திரு ஆலயத்திறு, ஊழ்வினை நீங்க வேண்டி , வருந்தும் மக்களுக்கான ஒரு பரிகாரத் தலமாகவும் , பிறப்பு நீங்க வேண்டுபவர்களுக்கு வேண்டுதல் தலமாகவும் அமைகிறது. வயதான காலத்தில், அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும் நிலையில் இருப்பவர்களுக்கு, இங்குள்ள சஞ்சீவி அனுமனுக்கு பாலாபிஷேகம் செய்வித்து, 54 / 108 வெற்றிலை மாலை அணிவித்து, நெஞ்சினில் வெண்ணெய் சார்த்தி , அர்ச்சனை செய்து, ஐந்து நெய் தீபமேற்றி வழிபட வேண்டும். அர்ச்சனை செய்த வாழைப்பழத்தினை பசுவிற்கும், தேங்காயினை முதியோர்களுக்கும் வழங்கிட வேண்டும்.

இருபது நிமிடம் அமர்ந்திருக்கும் வேளையில், பஜ கோவிந்தம் படிக்கவும். இருபத்தோராவது நிமிடம் , கோயிலை விட்டு வெளியேறி, இல்லம் திரும்பவும். - இவ்வாலயத்தில் நோய் நீங்கிட, அனுமனிடம் மட்டுமே பரிகாரம் செய்திடல் வேண்டும். அர்ச்சனை மற்றும் நெய் தீபம் ஏற்றிய பின்னர், பத்து சுற்றுகள் இட வலம் வருதல் வேண்டும்.
நெடுங்குன்றம் என்றத் திருப்பெயர் தற்பொழுது நெடுங்குணம் என்ற
பெயரில் திருவண்ணாமலை மாவட்டம்
-
வந்தவாசி - போளூர் செல்லும் சாலையில்
சேத்துப்பட்டு எனும் ஊருக்கு பத்து கி.மீ. தூரத்தில் உள்ளது.



mravikrishna
mravikrishna
உதய நிலா
உதய நிலா

Posts : 15
Join date : 11/10/2011
Location : Vellore

http://www.krishnaalaya.com

Back to top Go down

 நெடுங்குன்றம் Empty Re: நெடுங்குன்றம்

Post by ஜனனி Wed Jun 27, 2012 4:53 pm

பயனுள்ள தகவல்  நெடுங்குன்றம் 28284
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum