Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:02 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
Basement weak,building strong
2 posters
Page 1 of 1
Basement weak,building strong
உள்ளதச் சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது.
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையால் மறைக்கும் கபடம் தெரியாது.
Basement weak,building strong
உண்மை கசக்கவே செய்யும்.அதனால் முதலில் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். தமிழன் எப்படி வாழ்ந்தான்,வீர மறத் தமிழனாய்,நீதிக்காக உயிரையும் கொடுப்பவனாக,இனமானம் காக்கும் தன்மானத் தமிழனாய் தலை நிமிர்ந்து வாழ்ந்த இந்த தமிழன், இன்று எப்படி வாழ்கிறான் என்ற ஒரு சிறிய ஆய்வு தான் இது. பழம் பெருமை பேசிப் பயனேன்ன என்று எண்ணம் ஏற்படினும் கூட சில எடுத்துக் காட்டுக்களை உங்கள் முன் வைத்தால் ஒரு வேளை கவுண்டமணி சொல்வது போல் சூடு சுரணை இருப்பவர்கள் சிந்திக்கலாம்,அதனால் சிறிதாவது இன்றைய நிலையை புரிந்து கொள்ளலாம் என்ற ஒரு சிறிய நப்பாசை தான்.
பணத்திற்காக புகழுக்காக பதவிக்காக சுயநலவாதிகளாக மாறி தன் இன மானத்தையே தூக்கி எறிந்து, தான் மட்டுமே வாழ வேண்டும் என்று வாழ முயற்சிக்கும் தமிழன், தன் இனத்தை,மொழியை,பண்பாட்டை,கலாச்சாரத்தை மறந்து விடுவது ஏன்? சுயநலம் மட்டும் தான் காரணமா இல்லை Globalisation தவிர்ந்த வேறு காரணங்கள் உண்டா?
globalisation ஆல் கலாச்சாரம்,பண்பாடு மாறலாம், ஆனால் இன மொழி உணர்வு கூட மாறுமா?
"மலையாளி,மார்வாடி யாவருமே இங்கு முதலாளி ஆகிடவோ,தமிழ்த் தொழிலாளி நாட்டினில் வீட்டுக்கு வீடு மலவாளி தூக்கிடவோ"
தொடர் வண்டியில் சென்றால் பிரயாண சீட்டு சோதகர்களாக வருவது அனேகமானோர் மலையாளிகள்.பலருக்கு தமிழ் பேச வரவில்லை,தமிழ்நாட்டில் தமிழன் படும்பாடு,கேரள குப்பைகள் தமிழ்நாட்டுக்குள் அடக்கம்,சினிமாவில் தமிழும் இல்லை, தமிழ் நடிகர்களும் இல்லை. தமிழர்களை ஓட ஓட விரட்ட, டாம் 999, சினிமாப்பாடமும் வந்து விட்டது. கலையாக பாருங்கள் என்கிறார்கள்.
தண்ணீர் இல்லை,அரிசி,முதல் மண்ணும் கடத்தலாகி தமிழனை அழிக்கிறது. தமிழனே தமிழை அழிக்கிறான்.தொலைக்காட்சியில்,வானொலியில்,ஊடகங்களில்,சினிமாவில் தமிழ் இல்லை,ஏன் தமிழர்களும் இல்லை. அரை குறை தமிழில் தொகுப்பாளர்கள் நிகழ்ச்சிகளை தருகிறார்கள். கிராமத்து தாத்தா பாட்டிக்கு, ஊமைப்படங்கள் தான் தொலைக்காட்சிகளில் காட்சியாகிறது.
தென்றிசையைப் பார்க்கின்றேன்; என்சொல்வேன் என்றன்
சிந்தையெலாம் தோள்களெலாம் பூரிக்குதடா!
அன்றந்த லங்கையினை ஆண்ட மறத்தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்!
குன்றெடுக்கும் பெருந்தோளான் கொடைகொடுக்கும் கையான்!
குள்ளநரிச் செயல்செய்யும் கூட்டத்தின் கூற்றம்!
என்தமிழர் மூதாதை! என்தமிழர் பெருமான்
இராவணன்காண்! அவன்நாமம் இவ்வுலகம் அறியும்!
என்று பூரிப்புடன் கவி பாடிய பாரதிதாசன்......................
என்தமிழர் படமெடுக்க ஆரம்பஞ் செய்தார்;
எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்துநூறாக!
ஒன்றேனும் தமிழர்நடை யுடைபா வனைகள்
உள்ளவாய் அமைக்கவில்லை, உயிர்உள்ள தில்லை!
ஒன்றேனும் தமிழருமை உணர்த்துவதாயில்லை!
ஒன்றேனும் உயர்நோக்கம் அமைந்ததுவா யில்லை!
ஒன்றேனும் உயர்நடிகர் வாய்ந்ததுவா யில்லை!
ஒன்றேனும் வீழ்ந்தவரை எழுப்புவதா யில்லை!
வடநாட்டார் போன்றஉடை, வடநாட்டார் மெட்டு!
மாத்தமிழர் நடுவினிலே தெலுங்குகீர்த் தனங்கள்!
வடமொழியில் ஸ்லோகங்கள்! ஆங்கில ப்ரசங்கம்!
வாய்க்குவரா இந்துஸ்தான்! ஆபாச நடனம்!
என்று கவலை கண்ணீருடன் கவியை முடிக்கிறான்.
வெளிநாடுகளில் அவர்கள் மொழியில் மட்டுமே சினிமா வசனங்கள்,பாடல்கள். ஆங்கிலம் தவிர்ந்த,சீன,ஜப்பான்,ஐரோப்பிய மொழிப் படங்களில் ஆங்கில சொற்களை தேடினாலும் கண்டு பிடிக்க முடியவில்லை.தனுஷின் கொலைவெறிப் பாடலுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. இந்தப் புகழுக்காக, பணத்திற்காக, பாராட்டுக்களுக்காக, விருதுகளுக்காக நம் தமிழ் தாசியாக்கப்படுகிறது. ஆனாலும் நமக்கு உறைக்கவில்லை. கை தட்டி ரசிகர் மன்றம் அமைக்கின்றோம்.தீக்குளிக்கிறோம்.
மீனவர்கள் கொல்லப்படுகிறார்கள்,தாக்கப்படுகிறார்கள், கடிதங்கள் பறக்கின்றன,பதிலும் இல்லை, பாசமும் இல்லை, இந்தியன் என்ற பற்றும் இல்லை,தொடர்கிறது இன அழிப்பு. கூடவே வருகிறது, எல்லையை தாண்டினால் அனுமதி ரத்து என்ற அறிவிப்பு.உயர்நீதிமன்ற தீர்ப்பு குப்பை தொட்டியில் தூங்குகிறது. சட்டமும்,நீதியும் தூங்கினால் யாரிடம் சென்று முறையிடுவேன் என்கிறான் அப்பாவி தமிழன்.
ஈவு இரக்கமின்றி தமிழ் இனத்தை அழித்தார்கள். கண்டு கொள்ள யாரும் இல்லை. இராணுவ அதிகாரிக்கு 3 வருட சிறை என்றதுமே துடிக்கிறது அமெரிக்க நாடு. தமிழர்கள் உயிர் எனும் போது அந்த துடிப்பு எங்கே மறைந்து போய் விடுகிறது.
இந்திரா காந்தி சுடப்பட்ட போது 3000 சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள், சோமாலியா கடற் கொள்ளையர்களை எதிர்க்க ஓடுகிறது இந்தியா. ஆனால் தமிழர்களை,தமிழ் மீனவர்களைக் காக்க முன்வராது,கண்ணை மூடிக் கொள்ளுகிறதே ஏன்?
நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிரன்றே;
மன்னன் உயிர்த்தே,மலர் தலை உலகம்;
அதனால், யான்உயிர் என்பது அறிகை;
வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே. ............ என்கிறது புறநானூறு.
ஆனால் அரசும்,அரசியல்வாதிகளும் சுயநலவாதிகளாய் தமிழனையும்,மக்களையும் உயிரற்ற ஜடங்களாக எண்ணி கொன்றொழிக்கிறார்கள்,வதைக்கிறார்கள்.
அன்று தமிழர்கள் துன்பப்பட்ட போது,தமிழர்களை தூற்றிய போது, ஓடுகிறது சோழர் கடற்படை இலங்கைக்கும்,சேரன் செங்குட்டுவன் படை வடக்கிற்கும்.சிங்களக் கைதிகளை கொண்டு வந்து கல்லணை கட்டுகிறான் சோழன்,கனக விசயரை வென்று கண்ணகிக்கு கோயில் கட்டுகிறான் செங்குட்டுவன். அந்தக் கோயில் கேரளாவில் உள்ள கொடுங்கல்லூர் பகவதி கோயில் என்கிறார்கள்.
"பால குமரன் மக்கள் மற்றவர்
காவா நாவிற் கனகனும் விசயனும்
விருந்தின் மன்னர் தம்மொடும் கூடி
அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர் ஆங்குஎனக்
கூற்றம் கொண்டுஇச் சேனை செல்வது;
நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி ஆங்குக்
கங்கைப் பேர்யாறு கடத்தற்கு ஆவன
வங்கப் பெருநிரை செய்க தாம்எனச்....."
வருபெறந் தானை மறக்கள மருங்கின்
ஒருபகல் எல்லை உயிர்த்தொகை உண்ட
செங்குட் டுவன்தன் சினவேல் தானையொடு
கங்கைப் பேர்யாற்றுக் கரைஅகம் புகுந்து
பால்படு மரபிற் பத்தினிக் கடவுளை
நூல்திறன் மாக்களின் நீர்ப்படை செய்து......."
மாவீரர்களை வணங்குதல் தமிழர் மாண்பு! தமிழர் நிலத்திலும் மனத்திலும் மாவீரர்கள் என்றும் வாழ்வர்! என்று படை முடித்து வந்த செங்குட்டுவன், மறைந்த வீரர்களுக்கும்,காயமடைந்தவர்களுக்கும் மரியாதை செய்கிறான்.
"வாழ்க எங்கோ! மாதவி மடந்தை
கானல் பாணி, கனக விசயர்தம்
முடித்தலை நெரித்தது;......" ஆனால் இன்று.................
காரணம் என்ன? அன்றைய ஆரிய ஆக்கிரமிப்பு, தமிழர்களிடம் இராமாயணம்,பாரதத்தை திணித்தது, கோயில்களில் வடமொழி, பதவி பணம் கொடுத்து கம்பனை விலைக்கு வாங்கியது இப்படி பல சொல்லிக் கொண்டே போகலாம். இரத்தத்தில் ஊறி விட்ட கம்பனின் இராமகாதை தமிழை தமிழனை மறக்க வைத்தது. தமிழர்கள் எல்லாம் உண்மையை அறியாது,சீர்தூக்கி பார்க்காது இராமகாதையை தமிழனின் சொத்தாக்கி, அதுவே வேதம் என்றாக்கி விட்டதால் தான் இந்த விபரீதம்.எத்தனை சரித்திர ஆராய்ச்சிகள், எடுத்து உரைத்தாலும் கற்றவர்கள் கூட மூழ்கிப் போவது தான் தமிழனின் இன்றைய நிலைக்கு காரணம்,அது தான் எழுதப்படாத விதியா?
இதற்கு சிவகுமாரும் விதி விலக்காகி விடவில்லை. கம்ப இராமாயணத்தை படித்து விட்டு தமிழனுக்கு ஓதுவது சரியானதா, என்பதை எண்ணிப் பார்க்க ஏன் மறக்கிறார்கள்?
மனிதன் முதுமை அடையும் போது தன்னை யாரும் திரும்பிப் பார்ப்பதில்லை என்ற உணர்வை பெறுகிறான்.அதை ஈடு செய்ய பல வழிகளில் முயற்சி செய்கிறான். அதில் ஒன்று நடிகர் சிவகுமாரின் தற்போதய பேச்சுக்கள். செம்மொழி மாநாட்டில் எதையோ தொடங்கி எதிலோ முடித்த அவர் தற்போது பேசி வரும் பேச்சுக்கள் தமிழர்களின் சில கலாச்சாரங்களை எடுத்துக் கூறிய போதும் கூட, அவர் இராமாயணத்தில் ஊறிப் போனவராதலால்,வட மொழிக் கலாச்சாரம் தலை தூக்கி,தமிழர்களின் கலாச்சாரத்தை கொச்சை படுத்துவது போல் இருந்து வருவதை காண முடிகிறது.அதில் ஒன்று....
அவர் சென்னையில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில், பேசிய பேச்சின் ஒரு சிறிய பகுதி இது தான்.இதை விட அவர் கல்லூரிகளில் உள்ள தற்போதய சீர்கெட்ட நிலைகள் பற்றியும்,காதல் பற்றியும் தெரிவித்த கருத்துக்களும்,தமிழர்களிடையே ஒரு சிலரிடம் வெறுப்பை கொடுத்திருக்கிறது என்பது உண்மையே.இந்த கருத்து தற்போது சிலரிடம் சர்ச்சைக்குள்ளாகி கேள்விக் குறியாகவும் இருந்து வருகிறது.
''பிளவுபாடாத சென்னை மாநகரிலே ஒரு பெரிய நடிகர் இருந்தாரு,அவர் நல்லா பாடுவாறு,ஆடுவாறு,நல்ல தேஜஸ்,அவர் ஒரு கச்சேரி பண்ணினா,முடியும் போது குடும்பப் பெண்கள் கேட்பாங்க அவங்க புருஷன் கிட்டே, ஐயா உங்களுக்கு 3 குழந்தை பெற்றேன்,அது வேஸ்ட்,இவரு மகா புருஷன்,இந்த மகான் கிட்டே போய் ஒரு குழந்தை பெத்துகிறேன்,நம்ம வீட்டுலே ஒரு மகா புருஷன் இருக்கோணும்...........''
ஆரியமும்,வடக்கும் சொல்வதை வேதவாக்காக ஏற்றுக் கொண்டதால் இன்று தமிழன் செத்துக் கொண்டிருக்கிறான்,.அலட்சியப் படுத்தப்படுகிறான்.எண்ணிப் பார்ப்பது எப்போது?தமிழனாய் வாழ்வது எப்போது?
வடமொழி வேதங்கள் நம்முடையவை அல்ல என்றும்,கோயில்களில் தமிழில் ஓதுவதும்,பூசைகளும் நடத்த வேண்டும் என்று செயல்பட்டு வரும் ஐயா சத்தியவேல் முருகனாருக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
வாணிகர், தம் முகவரியை வரைகின்ற பலகையில், ஆங் கிலமா வேண்டும்?
'மாணுயர்ந்த செந்தமிழால் வரைக' என அன்னவர்க்குச் சொல்ல வேண்டும்!
தெலுங்குதமிழ் நாட்டினிலேன்? செத்த வட மொழிக்கிங்கே என்ன ஆக்கம்?
இலங்கும் இசைப் பாட்டுக்கள் பிறமொழியில் ஏற்படுத்த இசைய லாமோ?
உயிர்போன்ற உங்கள்தமிழ் கடவுளுக்கே உவப்பாதல் இல்லை போலும்!
உயிர்போன்ற உங்கள்தமிழ் உரைத்தக்கால் கடவுளதை ஒப்பார் போலும்!
பயிரழிக்கும் விட்டிலெனத் தமிழ்மொழியைப் படுத்தவந்த வடம றைதான்
செயிர்தீர வாழ்த்துதற்கும் தேவையினைச் சொல்லுதற்கும் உதவும் போலும்!
மடிகட்டிக் கோயிலிலே மேலுடையை இடுப்பினிலே வரிந்து கட்டிப்
பொடிகட்டி இல்லாது பூசியிரு கைகட்டிப் பார்ப்பா னுக்குப்
படிகட்டித் தமிழரெனப் படிக்கட்டின் கீழ்நின்று தமிழ்மா னத்தை
வடிகட்டி அவன்வடசொல் மண்ணாங்கட் டிக்குவப்பீர் "மந்தரம்" என்றே.
மூட நம்பிக்கையை பரிகசித்து முடி துறந்து,அடிகளாகி, சிலப்பதிகாரம் தந்தவர் இளங்கோ அடிகள்.ஆனால் இன்று சாயிபாவா படத்தில்,சிறீபெரும்புத்தூரில், இருந்து குங்குமம் வருகிறதென்று கையெடுத்து வணங்குகிறோம்.என்ன மடமை.
இன்று தமிழனின் பலம் வாய்ந்த அடித்தளமான மானம், வீரம், கலாச்சாரம், பண்பாடு, கல்வி அறிவு அனைத்தும் பலவீனமாகி, போலியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்.ஆமாம் வடிவேலு சொல்வது போல், தமிழன் நிலை
Basement weak ஆகிப் போய் building மட்டும் தான் strong காக இருக்கிறது.டாம் 999 சொல்வது போல், basement,அணை உடையுமானால் building சுக்கு நூறாகி விடும்.
இளைஞர் நாம் கண் மூடி இருந்தால், நாளை வருவோர் நம்மீது காறி உமிழ்வர்.
இனமானம் காப்போம்,தமிழனாய் வாழ்வோம்.
மீண்டும் வருகிறேன்................................சக்தி.
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையால் மறைக்கும் கபடம் தெரியாது.
Basement weak,building strong
உண்மை கசக்கவே செய்யும்.அதனால் முதலில் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். தமிழன் எப்படி வாழ்ந்தான்,வீர மறத் தமிழனாய்,நீதிக்காக உயிரையும் கொடுப்பவனாக,இனமானம் காக்கும் தன்மானத் தமிழனாய் தலை நிமிர்ந்து வாழ்ந்த இந்த தமிழன், இன்று எப்படி வாழ்கிறான் என்ற ஒரு சிறிய ஆய்வு தான் இது. பழம் பெருமை பேசிப் பயனேன்ன என்று எண்ணம் ஏற்படினும் கூட சில எடுத்துக் காட்டுக்களை உங்கள் முன் வைத்தால் ஒரு வேளை கவுண்டமணி சொல்வது போல் சூடு சுரணை இருப்பவர்கள் சிந்திக்கலாம்,அதனால் சிறிதாவது இன்றைய நிலையை புரிந்து கொள்ளலாம் என்ற ஒரு சிறிய நப்பாசை தான்.
பணத்திற்காக புகழுக்காக பதவிக்காக சுயநலவாதிகளாக மாறி தன் இன மானத்தையே தூக்கி எறிந்து, தான் மட்டுமே வாழ வேண்டும் என்று வாழ முயற்சிக்கும் தமிழன், தன் இனத்தை,மொழியை,பண்பாட்டை,கலாச்சாரத்தை மறந்து விடுவது ஏன்? சுயநலம் மட்டும் தான் காரணமா இல்லை Globalisation தவிர்ந்த வேறு காரணங்கள் உண்டா?
globalisation ஆல் கலாச்சாரம்,பண்பாடு மாறலாம், ஆனால் இன மொழி உணர்வு கூட மாறுமா?
"மலையாளி,மார்வாடி யாவருமே இங்கு முதலாளி ஆகிடவோ,தமிழ்த் தொழிலாளி நாட்டினில் வீட்டுக்கு வீடு மலவாளி தூக்கிடவோ"
தொடர் வண்டியில் சென்றால் பிரயாண சீட்டு சோதகர்களாக வருவது அனேகமானோர் மலையாளிகள்.பலருக்கு தமிழ் பேச வரவில்லை,தமிழ்நாட்டில் தமிழன் படும்பாடு,கேரள குப்பைகள் தமிழ்நாட்டுக்குள் அடக்கம்,சினிமாவில் தமிழும் இல்லை, தமிழ் நடிகர்களும் இல்லை. தமிழர்களை ஓட ஓட விரட்ட, டாம் 999, சினிமாப்பாடமும் வந்து விட்டது. கலையாக பாருங்கள் என்கிறார்கள்.
தண்ணீர் இல்லை,அரிசி,முதல் மண்ணும் கடத்தலாகி தமிழனை அழிக்கிறது. தமிழனே தமிழை அழிக்கிறான்.தொலைக்காட்சியில்,வானொலியில்,ஊடகங்களில்,சினிமாவில் தமிழ் இல்லை,ஏன் தமிழர்களும் இல்லை. அரை குறை தமிழில் தொகுப்பாளர்கள் நிகழ்ச்சிகளை தருகிறார்கள். கிராமத்து தாத்தா பாட்டிக்கு, ஊமைப்படங்கள் தான் தொலைக்காட்சிகளில் காட்சியாகிறது.
தென்றிசையைப் பார்க்கின்றேன்; என்சொல்வேன் என்றன்
சிந்தையெலாம் தோள்களெலாம் பூரிக்குதடா!
அன்றந்த லங்கையினை ஆண்ட மறத்தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்!
குன்றெடுக்கும் பெருந்தோளான் கொடைகொடுக்கும் கையான்!
குள்ளநரிச் செயல்செய்யும் கூட்டத்தின் கூற்றம்!
என்தமிழர் மூதாதை! என்தமிழர் பெருமான்
இராவணன்காண்! அவன்நாமம் இவ்வுலகம் அறியும்!
என்று பூரிப்புடன் கவி பாடிய பாரதிதாசன்......................
என்தமிழர் படமெடுக்க ஆரம்பஞ் செய்தார்;
எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்துநூறாக!
ஒன்றேனும் தமிழர்நடை யுடைபா வனைகள்
உள்ளவாய் அமைக்கவில்லை, உயிர்உள்ள தில்லை!
ஒன்றேனும் தமிழருமை உணர்த்துவதாயில்லை!
ஒன்றேனும் உயர்நோக்கம் அமைந்ததுவா யில்லை!
ஒன்றேனும் உயர்நடிகர் வாய்ந்ததுவா யில்லை!
ஒன்றேனும் வீழ்ந்தவரை எழுப்புவதா யில்லை!
வடநாட்டார் போன்றஉடை, வடநாட்டார் மெட்டு!
மாத்தமிழர் நடுவினிலே தெலுங்குகீர்த் தனங்கள்!
வடமொழியில் ஸ்லோகங்கள்! ஆங்கில ப்ரசங்கம்!
வாய்க்குவரா இந்துஸ்தான்! ஆபாச நடனம்!
என்று கவலை கண்ணீருடன் கவியை முடிக்கிறான்.
வெளிநாடுகளில் அவர்கள் மொழியில் மட்டுமே சினிமா வசனங்கள்,பாடல்கள். ஆங்கிலம் தவிர்ந்த,சீன,ஜப்பான்,ஐரோப்பிய மொழிப் படங்களில் ஆங்கில சொற்களை தேடினாலும் கண்டு பிடிக்க முடியவில்லை.தனுஷின் கொலைவெறிப் பாடலுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. இந்தப் புகழுக்காக, பணத்திற்காக, பாராட்டுக்களுக்காக, விருதுகளுக்காக நம் தமிழ் தாசியாக்கப்படுகிறது. ஆனாலும் நமக்கு உறைக்கவில்லை. கை தட்டி ரசிகர் மன்றம் அமைக்கின்றோம்.தீக்குளிக்கிறோம்.
மீனவர்கள் கொல்லப்படுகிறார்கள்,தாக்கப்படுகிறார்கள், கடிதங்கள் பறக்கின்றன,பதிலும் இல்லை, பாசமும் இல்லை, இந்தியன் என்ற பற்றும் இல்லை,தொடர்கிறது இன அழிப்பு. கூடவே வருகிறது, எல்லையை தாண்டினால் அனுமதி ரத்து என்ற அறிவிப்பு.உயர்நீதிமன்ற தீர்ப்பு குப்பை தொட்டியில் தூங்குகிறது. சட்டமும்,நீதியும் தூங்கினால் யாரிடம் சென்று முறையிடுவேன் என்கிறான் அப்பாவி தமிழன்.
ஈவு இரக்கமின்றி தமிழ் இனத்தை அழித்தார்கள். கண்டு கொள்ள யாரும் இல்லை. இராணுவ அதிகாரிக்கு 3 வருட சிறை என்றதுமே துடிக்கிறது அமெரிக்க நாடு. தமிழர்கள் உயிர் எனும் போது அந்த துடிப்பு எங்கே மறைந்து போய் விடுகிறது.
இந்திரா காந்தி சுடப்பட்ட போது 3000 சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள், சோமாலியா கடற் கொள்ளையர்களை எதிர்க்க ஓடுகிறது இந்தியா. ஆனால் தமிழர்களை,தமிழ் மீனவர்களைக் காக்க முன்வராது,கண்ணை மூடிக் கொள்ளுகிறதே ஏன்?
நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிரன்றே;
மன்னன் உயிர்த்தே,மலர் தலை உலகம்;
அதனால், யான்உயிர் என்பது அறிகை;
வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே. ............ என்கிறது புறநானூறு.
ஆனால் அரசும்,அரசியல்வாதிகளும் சுயநலவாதிகளாய் தமிழனையும்,மக்களையும் உயிரற்ற ஜடங்களாக எண்ணி கொன்றொழிக்கிறார்கள்,வதைக்கிறார்கள்.
அன்று தமிழர்கள் துன்பப்பட்ட போது,தமிழர்களை தூற்றிய போது, ஓடுகிறது சோழர் கடற்படை இலங்கைக்கும்,சேரன் செங்குட்டுவன் படை வடக்கிற்கும்.சிங்களக் கைதிகளை கொண்டு வந்து கல்லணை கட்டுகிறான் சோழன்,கனக விசயரை வென்று கண்ணகிக்கு கோயில் கட்டுகிறான் செங்குட்டுவன். அந்தக் கோயில் கேரளாவில் உள்ள கொடுங்கல்லூர் பகவதி கோயில் என்கிறார்கள்.
"பால குமரன் மக்கள் மற்றவர்
காவா நாவிற் கனகனும் விசயனும்
விருந்தின் மன்னர் தம்மொடும் கூடி
அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர் ஆங்குஎனக்
கூற்றம் கொண்டுஇச் சேனை செல்வது;
நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி ஆங்குக்
கங்கைப் பேர்யாறு கடத்தற்கு ஆவன
வங்கப் பெருநிரை செய்க தாம்எனச்....."
வருபெறந் தானை மறக்கள மருங்கின்
ஒருபகல் எல்லை உயிர்த்தொகை உண்ட
செங்குட் டுவன்தன் சினவேல் தானையொடு
கங்கைப் பேர்யாற்றுக் கரைஅகம் புகுந்து
பால்படு மரபிற் பத்தினிக் கடவுளை
நூல்திறன் மாக்களின் நீர்ப்படை செய்து......."
மாவீரர்களை வணங்குதல் தமிழர் மாண்பு! தமிழர் நிலத்திலும் மனத்திலும் மாவீரர்கள் என்றும் வாழ்வர்! என்று படை முடித்து வந்த செங்குட்டுவன், மறைந்த வீரர்களுக்கும்,காயமடைந்தவர்களுக்கும் மரியாதை செய்கிறான்.
"வாழ்க எங்கோ! மாதவி மடந்தை
கானல் பாணி, கனக விசயர்தம்
முடித்தலை நெரித்தது;......" ஆனால் இன்று.................
காரணம் என்ன? அன்றைய ஆரிய ஆக்கிரமிப்பு, தமிழர்களிடம் இராமாயணம்,பாரதத்தை திணித்தது, கோயில்களில் வடமொழி, பதவி பணம் கொடுத்து கம்பனை விலைக்கு வாங்கியது இப்படி பல சொல்லிக் கொண்டே போகலாம். இரத்தத்தில் ஊறி விட்ட கம்பனின் இராமகாதை தமிழை தமிழனை மறக்க வைத்தது. தமிழர்கள் எல்லாம் உண்மையை அறியாது,சீர்தூக்கி பார்க்காது இராமகாதையை தமிழனின் சொத்தாக்கி, அதுவே வேதம் என்றாக்கி விட்டதால் தான் இந்த விபரீதம்.எத்தனை சரித்திர ஆராய்ச்சிகள், எடுத்து உரைத்தாலும் கற்றவர்கள் கூட மூழ்கிப் போவது தான் தமிழனின் இன்றைய நிலைக்கு காரணம்,அது தான் எழுதப்படாத விதியா?
இதற்கு சிவகுமாரும் விதி விலக்காகி விடவில்லை. கம்ப இராமாயணத்தை படித்து விட்டு தமிழனுக்கு ஓதுவது சரியானதா, என்பதை எண்ணிப் பார்க்க ஏன் மறக்கிறார்கள்?
மனிதன் முதுமை அடையும் போது தன்னை யாரும் திரும்பிப் பார்ப்பதில்லை என்ற உணர்வை பெறுகிறான்.அதை ஈடு செய்ய பல வழிகளில் முயற்சி செய்கிறான். அதில் ஒன்று நடிகர் சிவகுமாரின் தற்போதய பேச்சுக்கள். செம்மொழி மாநாட்டில் எதையோ தொடங்கி எதிலோ முடித்த அவர் தற்போது பேசி வரும் பேச்சுக்கள் தமிழர்களின் சில கலாச்சாரங்களை எடுத்துக் கூறிய போதும் கூட, அவர் இராமாயணத்தில் ஊறிப் போனவராதலால்,வட மொழிக் கலாச்சாரம் தலை தூக்கி,தமிழர்களின் கலாச்சாரத்தை கொச்சை படுத்துவது போல் இருந்து வருவதை காண முடிகிறது.அதில் ஒன்று....
அவர் சென்னையில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில், பேசிய பேச்சின் ஒரு சிறிய பகுதி இது தான்.இதை விட அவர் கல்லூரிகளில் உள்ள தற்போதய சீர்கெட்ட நிலைகள் பற்றியும்,காதல் பற்றியும் தெரிவித்த கருத்துக்களும்,தமிழர்களிடையே ஒரு சிலரிடம் வெறுப்பை கொடுத்திருக்கிறது என்பது உண்மையே.இந்த கருத்து தற்போது சிலரிடம் சர்ச்சைக்குள்ளாகி கேள்விக் குறியாகவும் இருந்து வருகிறது.
''பிளவுபாடாத சென்னை மாநகரிலே ஒரு பெரிய நடிகர் இருந்தாரு,அவர் நல்லா பாடுவாறு,ஆடுவாறு,நல்ல தேஜஸ்,அவர் ஒரு கச்சேரி பண்ணினா,முடியும் போது குடும்பப் பெண்கள் கேட்பாங்க அவங்க புருஷன் கிட்டே, ஐயா உங்களுக்கு 3 குழந்தை பெற்றேன்,அது வேஸ்ட்,இவரு மகா புருஷன்,இந்த மகான் கிட்டே போய் ஒரு குழந்தை பெத்துகிறேன்,நம்ம வீட்டுலே ஒரு மகா புருஷன் இருக்கோணும்...........''
ஆரியமும்,வடக்கும் சொல்வதை வேதவாக்காக ஏற்றுக் கொண்டதால் இன்று தமிழன் செத்துக் கொண்டிருக்கிறான்,.அலட்சியப் படுத்தப்படுகிறான்.எண்ணிப் பார்ப்பது எப்போது?தமிழனாய் வாழ்வது எப்போது?
வடமொழி வேதங்கள் நம்முடையவை அல்ல என்றும்,கோயில்களில் தமிழில் ஓதுவதும்,பூசைகளும் நடத்த வேண்டும் என்று செயல்பட்டு வரும் ஐயா சத்தியவேல் முருகனாருக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
வாணிகர், தம் முகவரியை வரைகின்ற பலகையில், ஆங் கிலமா வேண்டும்?
'மாணுயர்ந்த செந்தமிழால் வரைக' என அன்னவர்க்குச் சொல்ல வேண்டும்!
தெலுங்குதமிழ் நாட்டினிலேன்? செத்த வட மொழிக்கிங்கே என்ன ஆக்கம்?
இலங்கும் இசைப் பாட்டுக்கள் பிறமொழியில் ஏற்படுத்த இசைய லாமோ?
உயிர்போன்ற உங்கள்தமிழ் கடவுளுக்கே உவப்பாதல் இல்லை போலும்!
உயிர்போன்ற உங்கள்தமிழ் உரைத்தக்கால் கடவுளதை ஒப்பார் போலும்!
பயிரழிக்கும் விட்டிலெனத் தமிழ்மொழியைப் படுத்தவந்த வடம றைதான்
செயிர்தீர வாழ்த்துதற்கும் தேவையினைச் சொல்லுதற்கும் உதவும் போலும்!
மடிகட்டிக் கோயிலிலே மேலுடையை இடுப்பினிலே வரிந்து கட்டிப்
பொடிகட்டி இல்லாது பூசியிரு கைகட்டிப் பார்ப்பா னுக்குப்
படிகட்டித் தமிழரெனப் படிக்கட்டின் கீழ்நின்று தமிழ்மா னத்தை
வடிகட்டி அவன்வடசொல் மண்ணாங்கட் டிக்குவப்பீர் "மந்தரம்" என்றே.
மூட நம்பிக்கையை பரிகசித்து முடி துறந்து,அடிகளாகி, சிலப்பதிகாரம் தந்தவர் இளங்கோ அடிகள்.ஆனால் இன்று சாயிபாவா படத்தில்,சிறீபெரும்புத்தூரில், இருந்து குங்குமம் வருகிறதென்று கையெடுத்து வணங்குகிறோம்.என்ன மடமை.
இன்று தமிழனின் பலம் வாய்ந்த அடித்தளமான மானம், வீரம், கலாச்சாரம், பண்பாடு, கல்வி அறிவு அனைத்தும் பலவீனமாகி, போலியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்.ஆமாம் வடிவேலு சொல்வது போல், தமிழன் நிலை
Basement weak ஆகிப் போய் building மட்டும் தான் strong காக இருக்கிறது.டாம் 999 சொல்வது போல், basement,அணை உடையுமானால் building சுக்கு நூறாகி விடும்.
இளைஞர் நாம் கண் மூடி இருந்தால், நாளை வருவோர் நம்மீது காறி உமிழ்வர்.
இனமானம் காப்போம்,தமிழனாய் வாழ்வோம்.
மீண்டும் வருகிறேன்................................சக்தி.
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Similar topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
» Infosys Building in Kuwait ...
» Stock Photo - Body Building
» புத்தகத்தைஅலமாரியில் அடிக்கி பார்த்திருப்போம்ஆனால் இங்கு ?Wow! it like book stand building...!
» Building Demolition in Saudi Arabia-video
» Infosys Building in Kuwait ...
» Stock Photo - Body Building
» புத்தகத்தைஅலமாரியில் அடிக்கி பார்த்திருப்போம்ஆனால் இங்கு ?Wow! it like book stand building...!
» Building Demolition in Saudi Arabia-video
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum