TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:11 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 4:36 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:15 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:17 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 6:45 am

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 5:22 am

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 5:19 am

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 5:14 am

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 5:08 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 5:56 am

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 2:45 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:01 am

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 8:49 am

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:28 am

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 2:56 am

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 12:45 am

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Thu Aug 11, 2022 11:58 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:18 am

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Thu Jul 21, 2022 10:44 pm

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Thu Jul 14, 2022 11:29 pm

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 2:46 am

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 2:37 am

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 4:17 am

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 2:34 am

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Sun Dec 12, 2021 5:14 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 9:44 am

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 2:39 am

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 3:15 am

» மனசு அமைதி பெற .......
by veelratna Sun Nov 07, 2021 10:43 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:41 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Sun Nov 07, 2021 10:36 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Sun Nov 07, 2021 10:34 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:28 pm

» புது வரவு விளையாட்டு
by veelratna Sun Nov 07, 2021 10:26 pm

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Mon Oct 25, 2021 11:21 pm

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Mon Oct 25, 2021 11:18 pm

» மெல்லிசை பாடல்
by veelratna Sun Oct 24, 2021 11:05 pm

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Sun Oct 24, 2021 11:01 pm

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:23 am


சமூகத்தின் கறைகள் 17 நீங்க வயதிற்கு வந்திட்டீங்களா? அப்போ படியுங்க

Go down

சமூகத்தின் கறைகள் 17  நீங்க வயதிற்கு வந்திட்டீங்களா? அப்போ படியுங்க Empty சமூகத்தின் கறைகள் 17 நீங்க வயதிற்கு வந்திட்டீங்களா? அப்போ படியுங்க

Post by sakthy Thu Aug 25, 2011 12:09 am

சமூகத்தின் கறைகள் 17 நீங்க வயதுக்கு வந்திட்டீங்களா அப்போ படியுங்க.ஒரு டீன்ஏஜ் ஜின் மனக் குமுறல். பெற்றோர்களே சிந்தியுங்கள்.

உள்ளதைச் சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது.
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையால் மறைக்கும் கபடம் தெரியாது.

ஒரு நல்ல சமுதாயமோ, நாடோ உருவாக வேண்டுமானால் முதலில் அந்த சமூகத்தில் உள்ள கறைகள் அகற்றப்பட வேண்டும். கறைகள் அகற்றப்படாத சமூகம் என்றும் நல்ல நாடாக உருவாக முடியாது., இன்று நம்மிடையே உள்ள சாதி,ஆரியமத மூட நம்பிக்கைகள்,முட்டாள்த்தனமான சோதிட நம்பிக்கைகள், குழந்தைத் திருமணங்கள்,பாலியல் வல்லுறவுகள்,சிறுவர் துஷ்பிரயோகம்,குழந்தைத் தொழிலாளர்கள்,வியாபாரக் கல்வி, கிராமங்கள் புறக்கணிப்பு போன்ற அனைத்திலும் படிந்திருக்கும் கறைகள் அகற்றப்படாது நாட்டை,சமூகத்தை முன்னேற்ற,ஏன் வல்லரசாக்கவும் முடியாது.சோவியத் யூனியன் சரிந்து ரஷ்யா வானது,அமெரிக்கா சரிந்து கொண்டிருக்கிறது,இது வரலாறு தரும் பாடங்களாயினும்,எண்ணிப் பார்ப்பவர்கள் ஏனோ இருப்பதில்லை. . இதனால் தான் விடுதலைபுலிகளின் தலைவர் முதலில் சாதி சமய மூடநம்பிக்கைகள் அற்ற தமிழ் ஈழம் உருவாக வேண்டும் என்ற கனவுடன் செயல்பட்டார்.
இன்று நம்மிடையே உள்ள குழந்தைத் திருமணங்கள் இன்னமும் குறைந்தபாடாக இல்லை. சமீபத்தைய கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 48 வீதமான குழந்தைத் திருமணங்கள் நடந்து வருகின்றன என்று தெரிவிக்கிறது. இதற்கு நேரெதிராக வளர்ச்சி அடைந்த நாடுகளிலும்,நகரப் புறங்களிலும் திருமண வயது பின் தள்ளப்பட்டு வருகிறது.உலக நாடுகளின் இன்றைய திருமண வயது ஆண்/பெண் 25/22 ஆகவும்,அமெரிக்காவில் 27/25 ஆகவும் ஐரோப்பிய நாடுகளில் 30/28 ஆகவும்,இந்தியாவில் 26/21 ஆகவும் சீனாவில் 33/29 ஆகவும் உள்ள நிலையிலும் கூட. இந்தியாவில் புறநகர,கிராமப் பகுதிகளில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்தே காணப்படுகிறது.
வேலையின்மை,வரதட்சணை, கல்வியில் அதிக ஈடுபாடு,காதல்,திருமணத்திற்குப் பின் வசதியாக வாழ வேண்டும் என்ற முன்யோசனை,வெளிநாடுகளில் வேலைவாய்ப்பை தேடி செல்வது போன்ற பல காரணங்களால் திருமணங்கள் பின்தள்ளிப் போவதாக சொல்லப்படுகிறது. அநேகமான உலக நாடுகளில் ஆண்களின் திருமண வயது 18 ஆகவும்,பெண்களின் வயது 16 ஆகவும்,ஒரு சில இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் வயது 15 ஆகவும் இருந்து வருகிறது. சில நாடுகளில் 15,16 வயதாக இருப்பினும் நீதித்துறை,பெற்றோர் அனுமதியுடன் தான் இந்த வயதுள்ளவர்கள் மணம் செய்ய முடியும் என்ற கட்டுப்பட்டும் இருந்து வருகிறது.. இந்த வயதிற்கு குறைந்தவர்கள்,குழந்தைத் திருமணங்களால், மருத்துவ,உளவியல் பிரச்சனைகள் மட்டுமல்லாது திருமண முறிவுகளையும் எதிர்கொள்வதாக கல்வியாளர்கள் தெறிவிக்கின்றனர்.
பெண் குழந்தைகள் 8முதல் 14 வயதிற்கிடைப்பட்ட காலத்திலும்,ஆண் குழந்தைகள் 9 முதல் 15 வயதிற்கிடைபட்ட காலத்திலும் ஐந்து கட்டமாக பருவ வளர்ச்சியை பெறுகிறார்கள். ஆனாலும் பெண் குழந்தைகளை மட்டுமே நாம் பூப்படைந்து விட்டாள்(attained of age,puberty) என்று பல சடங்குகளையும் நடத்துகிறோம். பெண்களின் உடலமைப்பு காரணமாக, சிறுவர்களை விட பெண் குழந்தைகள் மீது அதிக அக்கறை காட்டப்படுகிறது.உடலமைப்பை மட்டும் கருத்தில் கொள்ளாது, இந்த teenage என்று கூறப்படும் 13 – 19 வயதில், உளவியல் வழியிலும் ஆண் பெண் வேறுபாடின்றி சற்று பெற்றோர்கள் கவனம் செலுத்துவது அவசியம்.செய்கிறார்களா?தோளுக்கு மிஞ்சினால் தோழன்!
சிறுவர்களின் பருவ வளர்ச்சி 9 வயதில் தொடங்கி 15 வயதிற்குள் நடைபெற்றாலும்,11 -13 வயதிற்குள் அவன் பருவமடைகிறான். அதே போல் சிறுமி 8 வயதில் தொடங்கி 14 வயதிற்குள் பருவ வளர்ச்சி நடந்தாலும் கூட,12 - 13 வயதில் பருவமடைகிறாள். இது பொதுவானதாக இருந்தாலும் சிலரின் வயதெல்லை,நாட்டிற்கு நாடு வித்தியாசப் படுவதும்,பரம்பரை,உணவு போன்றவற்றாலும் மாற்றமடைகிறது. இந்த பருவ மாற்றம் ஆரம்பமாகும் போது அவர்களின் மூளை gonadotropin-releasing hormone, or GnRH என்ற விசேட ஹார்மோனை வெளியிட்டு, மூளையில் உள்ள pituitary gland ஐ ஊக்குவித்து, அதன்மூலம் அதிக ஹார்மோன்களை வெளியிட்டு பருவமாற்ற மாற்றத்தை ஆரம்பிக்கிறது.ஆனாலும் ஒரு சிறுவனோ சிறுமியோ 12 வயதில் பருவமடைந்தாலும்,முற்றான பருவ வளர்ச்சி ஏற்பட மேலும் இரண்டிலிருந்து நான்கு ஆண்டுகள் தேவைப்படுகின்றன. சிறுவர்கள் விஷயத்தில் இதை நாம் அதிகமாக அறிந்து கொள்ள முடியா விட்டாலும்,சிறுமிகளின் உடலமைப்பின் மாற்றத்திலும்,அவர்களுக்கு ஏற்படும் முதல் மாதவிடாயை( first menstrual period,menarche )வைத்தும் அறிந்து கொள்ளப்படுகிறது. வழமையாக மாதவிடாய் ஒரு சாதாரண பெண்ணிற்கு 28 நாட்களாக இருக்கும் போது,பருவமடைந்த சிறுமியரின் இந்த சுற்று சற்று நீண்ட இடைவெளியாக21 -35 நாட்கள் வரை ஒழுங்கற்றதாக இருக்கும். ஒரு பெண்குழந்தை பிறக்கும் போது அதன் உடலில்1-2 மில்லியன் முட்டைகள் இருப்பதும், அவள் பருவமடையும் போது 400,000 வரையானவை முதிர்ச்சிக்கு தயாராக இருப்பதும், அவற்றில் மாதந்தோறும் 1000 வரை அழிவடைய, ஒன்று மட்டுமே கருத்தரிக்க தயாராகிறது என்பதும் நீங்கள் அறிந்ததே.இதை வைத்து பெண் எத்தனை ஆண்டுகள் வரை கருத்தரிக்க(menopause) முடியும் என்று கணக்கிடுகிறார்கள்.(400,000/1000=400/12=33,33) இதன்படி 33-34 ஆண்டுகள் அதாவது 16+33, 49, (முற்றான பருவ வளர்ச்சி அடைந்த பெண்ணின் வயது-16 உடன் 33,33 ஐ கூட்ட வருவது), வயது வரை பெண்கள் கருத்தரிக்க முடியும்.நாடு,உணவு,குடும்பம்,உடல்நிலை,இனம்,போன்ற பல காரணங்களால் பொதுவாக 45 - 55 என கண்டறியப்பட்டுள்ளது.
ஆண்களை பொறுத்தவரை வயது வரையறை இல்லாவிட்டாலும் உயிரணுக்களின் தரமும், எண்ணிக்கையும் 50 ற்குப் பின் குறைவடைகிறது,அவ்வளவே. ஒரு சிறுவன் பருவ வயதை அடையும் போது தான், பல மில்லியன் அளவிலான உயிரணுக்களின் உற்பத்தி ஆரம்பமாகிறது என்பதையும்,. ஒரு ஆண் தன்னுடைய உயிரணுக்கள் கருத்தரிக்க உகந்தவையா இல்லையா என்பதை வீட்டில் இருந்தே தெரிந்து கொள்ளவும் இன்றைய தொழில்நுட்பம் வழி செய்து தந்துள்ளது. படைப்பின் அற்புதமும்,தொழில்நுட்ப வளர்ச்சியும் வியக்க வைக்கிறது.
பெண்களுக்கு ஏற்படும் இந்த இயற்கை உபாதை போல் பருவமடைந்த சிறுவர்களுக்கு இரவு நேரங்களில் நித்திரையின் போதும் அதிகாலையிலும் ஏற்படுவதுண்டு. இதை wet dreams அல்லது nocturnal emission என சொல்லப்படுகிறது.இது நோயில்லை என்பதால் இது பற்றி எந்த சிறுவர்களும் கவலைப்பட வேண்டியதில்லை.
ஒரு பெண் குழந்தை 12 வயதில் பருவமடைந்தால்,அவளின் முற்றான பருவ வளர்ச்சி 4 ஆண்டுகளாயின்(இது உடலமைப்பைப் பொறுத்து வேறுபடும்) அவள் மருத்துவ ரீதியில் பெண் என்ற அந்தஸ்திற்கு 16 வயதில் செல்கிறாள். இந்த கணிப்பை வைத்தே அநேகமான நாடுகளில் பெண்களின் திருமண வயதை 16 வயதாக ஏற்றுக் கொண்டார்கள். இது அடிப்படை வயதாக இருந்தாலும் கூட, ஒரு பெண் இந்த வயதுக் கட்டுப்பாட்டை கருத்தில் கொள்ளாது,திருமண வயதை பின் தள்ளிப் போடுவதே மருத்துவ ரீதியிலும்,உளவியல் ரீதியிலும் சிறப்புடையதாகும். இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டாலும், சில நாடுகளில் பெண்களின் திருமண அடிப்படை வயதை மீறி ,சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக மணம் செய்யும் பெண்களுக்கு, நீதித்துறையின் அல்லது பெற்றோர்களின் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்ள சட்டம் அனுமதி கொடுக்கிறது.இந்த முறை சில இஸ்லாமிய நாடுகளிலும் நடைமுறையில் இருந்த போதிலும்,இலங்கையில் உள்ள இஸ்லாமிய சட்ட விதிகளின் படி,இஸ்லாமிய நீதித்துறை தலைவர் அனுமதியுடன் மணம் செய்ய அனுமதிக்கும் பெண்களின் வயது 12 ஆக இருப்பது விந்தையாகவே உள்ளது.வேறு எந்த இஸ்லாமிய நாடுகளிலும் இந்த அடிப்படை வயது இல்லாததும்,சமீபத்தில் இலங்கையில் இஸ்லாமியர் அல்லாதோரின் இந்த வயதை 18 இல் இருந்து 15 ஆக குறைக்க, பல எதிர்ப்புகள் இருந்தும், மாற்ற முனைவது ஏன் என்பது புரியவில்லை.
இதே போலவே சிறுவர்கள் விசயத்திலும் பருவ மாற்றம் 13 ஆக கருத்தில் கொண்டு, முற்றான பருவ வளர்ச்சி ஏற்படும் 4 ஆண்டுகளைக் கணக்கில் கொண்டு, திருமண அடிப்படை வயதை 17 ற்குப் பின்,பெண்கள் ஆண்கள் வயது சமநிலையை தவிர்ப்பதற்காக, 18 ஆக நிர்ணயித்தார்கள். இது உலகின் எல்லா நாடுகளிலும் நடைமுறையில் இருந்து வருவதை நாம் காணலாம்.
இந்தியாவின் திருமண வயது 21/18 ஆக இருப்பதும்,பல வெளிநாடுகளில் 18/16 இருந்த போதும் கூட, நமது கலாச்சார பண்பாடுகளை மையப்படுத்தி இன்றைய இளைஞர்களை குழந்தைகளாக நம் பெற்றோர்களும் ஆசிரியர்களும் பார்ப்பதன் காரணம் அன்பா,பாசமா,அல்லது வேறு காரணங்களா?.திருமணம் செய்து கொள்வதற்கு அனுமதிக்கும் பெற்றோர்கள்,நமது முடிவுகளை நாமே முடிவெடுப்பதற்கு தடையாக இருப்பதும்,அனுமதிக்காது இருப்பதும் விந்தையே,என்கிறார்கள் இளைஞர்கள். அன்பு பாசம் காட்டுவதாக நினைத்து, கொடுக்க வேண்டிய உரிமைகளை மறுப்பதும்,சிந்தனைகளுக்கு தடை போடுவதும் சரியானதா என்பதை பெற்றோர்கள் சிறிது எண்ணிப் பார்க்க வேண்டும்.
சமீபத்தில் சென்னையில் ஒரு உள்ள கல்லூரியில் நடந்த பேச்சரங்கத்தில் 16 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களின் கருத்துக்கள் உதாசீனப்படுத்தப்பட்டன. ஒரு மாணவன், "ஊர் சுற்றும் போது தடை போடுங்கள்,சினிமாப் பைத்தியமாக சுற்றும் போது கண்டியுங்கள்,தவறு செய்யும் போது எடுத்து சொல்லி திருத்துங்கள்,ஆனால் ஏன் நாம் விரும்பும் துறையில்,எமக்கு ஏற்ற ஆர்வமுள்ள துறையில் படிப்பதற்கும்,எமக்கு ஏற்ற வேலையை தேர்ந்தெடுக்கவும் தடை போடுகிறீர்கள்? என் திறமை என்னவென்பதை கண்டறியாது உங்கள் ஆசையை ஏன் என் மீது திணிக்கிறீர்கள்" என்று கேட்ட கேள்வி, சிறிது சிந்திக்கவே வைத்தது. அதே சமயம் இந்த மாணவர்கள் கேள்விகள் அனைத்தையும் ஆசிரியர்களும்,பெற்றோர்களும் நீங்கள் குழந்தைகள் உங்களுக்கு ஒன்றும் தெரியாது,அதனால் தான் நாம் முடிவு செய்கிறோம், என்று கொடுத்த பதில் கூட நம்மை சிந்திக்கவே வைத்தது.நடுவரும் ஒரு பெற்றோராக இருந்ததால்,தீர்ப்பு பெற்றோர் பக்கமே சென்றது.திருமணத்திற்கு 18/16 ஏற்றுக் கொள்ளப்பட்டு குழந்தைகளை பெற்று வளர்க்க அனுமதி தரும் பெற்றோர்,மேல் படிப்புக்கும் வேலைக்கும், திருமணத்தின் போதும் குழந்தைகள் என்று ஒதுக்கி வைப்பது ஏன் என்ற கேள்வி வைக்கப்படுகிறது.
எதையெல்லாம் செய்யக் கூடாதோ அதை எல்லாம் செய்கிறார்கள்,எதை எல்லாம் செய்ய வேண்டுமோ அதை செய்வதில்லை. குழந்தைகள் என்று புறக்கணிக்கப்பட்டு, வீட்டிலோ,நாட்டிலோ,கல்வி நிலையங்களிலோ,வெளியிலோ நடப்பவற்றை பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்வதில்லை. . எங்களிடம் இருக்கும் வரை எந்தக் கஸ்டத்தையும் என் பிள்ளை அடையக் கூடாது என்று மறைக்கிறார்கள் பெற்றோர்கள். அவர்களுக்குப் பின் பிள்ளைகள் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை என்பது அதன் பொருளா? பெற்றோர்களின் அன்பு,பாசம்,ஆசை புரிந்து கொள்ளக் கூடியது தான்,கூடவே சிந்திக்க வேண்டியதும் என்பதை பெற்றோர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.ஆனாலும் அப்பாவும் அம்மாவும் சண்டை போடும் போது மட்டும் பிள்ளைகள் முன்னால் அடிபட்டுக் கொள்கிறார்கள். அவர்களை ஒதுக்கித் தள்ளி விட்டு பிரிந்தும் போய் விடுகிறார்கள். மதுவை அருந்து குடிமகன்களாகி, ஊதியும் தள்ளுகிறார்கள். குழந்தைகளும் குடும்பத்தின் உறுப்பினர்கள் என்று, பல விஷயங்களில் அவ்ர்களை அணைத்து பேசிக் கொள்வதில்,அவர்களின் கருத்தை,விருப்பத்தை கேட்டுக் கொள்வதில் என்ன குறைந்து போய் விடும்?இன்றைய இளைஞர் சமூகம் வெகு வேகமாக எல்லாவற்றிலுமே முன்னேறிக் கொண்டிருக்கிறது. அவர்களின் கையில் அப்படியே கொடுக்க, கலாச்சாரம் பண்பாடு தடையாக இருந்தாலும் கூட,அவர்களின் எண்ணங்களை, விருப்பத்தை கேட்பதில் எந்தத் தவறோ,தன்மானப் பிரச்சனையோ இருப்பதாக தெரியவில்லை. அன்பு பாசத்தைக் காட்டி, குழந்தைகளாக்கி விடுவதால்,அவர்களின் மனதில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் வடு தான் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பத் தூண்டுகிறதா என்ற சந்தேகமும் எழவே செய்கிறது.நம்மிடையே இருக்கும் இளைஞர் சமூகம் இன்னமும் பெற்றோர்களுக்கு மதிப்பைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.பெற்றோர்களுக்கு தெரியாதா பிள்ளைகளின் நல்லது கெட்டது என்று சொல்லி,அவர்களை குழந்தைகளாக்கி அவர்களின் மனத்தை புரிந்து கொள்ளாது நடந்து கொள்வதில் இருந்து எப்போது வெளியே வரப் போகிறார்கள்?கல்வி,தொழில் மட்டுமல்ல உண்மையான காதலும் பிரிக்கப் படுவதால்,பின்னால் வரும் மன,குடும்ப உறவு,திருமண பிரிவு சிக்கல்களில் இருந்து அவர்களை காப்பாற்ற வேண்டுமாயின்,முதலில் அவர்களை புரிந்து கொள்ள வேண்டும்.இந்த புரிந்துணர்வுடன் எப்போது அவ்ர்களை தோழனாக,தோழியாக பார்க்கப் போகிறார்கள்?.
ஆனால் பல வெளிநாடுகளில் பெற்றோர்களிடம் உள்ள அன்பும்,பாசமும், அதனால் ஏற்பட்ட ஆசை,நல்ல நிலைக்கு தங்கள் பிள்ளைகளை கொண்டு வர வேண்டும் என்ற ஏக்கம்,அதை தவறாக நோக்கும் பிள்ளைகளிடத்தில், கட்டுபாட்டை தோற்றுவிக்க,அவர்கள் பெற்றோர்களைப் பிரிந்து, தனித்து வாழவும், இல்லையேல் தெருக்களில் வாழவும் சென்று விடுகிறார்கள்.மேல் நாடுகளைப் பார்த்து மெல்லத் திசை திரும்பும் நவநாகரீகம்,தெருக்களுக்கோ,சிறுவர் குற்ற செயல்களுக்கோ,பெற்றோர்கள் மீது வெறுப்பு ஏற்படுவதற்கோ இடமளிக்கும் அபாயத்தில் இருந்து காப்பாற்ற பெற்றோர்கள் சிறிது சிந்திப்பது நல்லதே.மறைத்து வைக்கப்படும் எந்த பொருளையும் கண்டு கொள்ளவும்,அடக்குமுறைக்கு உட்படுத்தும் போது பொங்கி எழுவதும் இளைஞர்களிடம் மட்டுமல்ல, இயற்கையிடமும் உள்ள செயலாகும்.எரிமலை வெடிப்பதும்,கூண்டில் இருந்து வெளிவரும் கிளி இறக்கை அடித்து குதூகலித்து பறப்பதும்,அடக்கப்பட்ட இனம் பொங்கி எழுந்து போராடுவதும் இயற்கையே.புனிதமான அன்பும்,அற்புதமான பாசமும் கொண்ட பெற்றோர்கள், இன்றைய இயந்திர அவசர உலகை கருத்தில் கொண்டு பிள்ளைகளின் மன உணர்வுகளை மதித்து செயல்படுவதன் அவசியத்தை உணர்ந்தால், குடும்பம் ஒரு பல்கலைக்கழகமாக செயல்படும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
அணுசக்தி பெரும் தொழில்நுட்பம் என்று மகிழ்ச்சிக்குள்ளான உலகம் இன்று அணு உலைகளை முற்றாக மூட எண்ணிக் கொண்டிருக்கிறது.சமீப காலமாக ஒரு சிலரின் பயங்கர நடவடிக்கைகளால்,சமூக வலைத்தளங்கள் பற்றிய அச்சம் வளர்ந்து கொண்டிருக்கிறது. பாலியல்கல்வி அவசியம் என்று முன்னிலைபடுத்திய மேல்நாடுகள், இன்று அதில் உள்ள அபாயத்தை எண்ணி கல்விமான்களின் ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளது. பாலியல் கல்வியின் தரம், கொடுக்கப்பட வேண்டிய வயதெல்லை பற்றி ஆராயும் உலகம்,இவற்றை சட்டமாக்கு முன்னரே ஆய்வுக்குட்படுத்தி செயல்பட்டிருக்க வேண்டும். பாலியல் கல்வியின் அவசியத்தை உணரும் மனநலவியலாளர்களும்,கல்வியாளர்களும் அதன் தரம் பற்றியே சந்தேகம் கொள்கிறார்கள். எந்தக் கல்வி சீர்திருத்தங்களும் நடைமுறைக்கு வரு முன் நன்கு ஆராயப்பட வேண்டியதன் அவசியத்தை இன்று உணருகிறார்கள்.இவை தனிப்பட்ட குரோதங்கள்,கருத்துக்களுக்கு அப்பால் பொதுநலன் கருதியே சிந்திக்கப்பட வேண்டும். இன்று தமிழ்நாட்டில் சமச்சீர்க்கல்வியின் அடிபாட்டு நிலை பற்றி எண்ணிப் பார்ப்பது சாலப் பொருந்தும்.யார் கொண்டு வந்தார்கள் என்பதை விட மக்களுக்கு நன்மை பயக்குமா என்பதையே முதலில் எண்ணிப் பார்க்க வேண்டும். மதிப்பெண்களுக்கான கல்விமுறை பற்றியும், வருங்கால இளைஞர் சமூகத்தைப் பற்றியும்,இன்றைய கல்வியின் தரம் பற்றியும்,பொதுநலன் பற்றியும், அரசியலை மறந்து ஒன்றுபட்டு சிந்திப்பார்களா?
மீண்டும் அடுத்த வாரம்........ Dr. சக்தி


avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 25/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum