TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தினை,ராகி, கம்பு, சோளம்-எப்படி சாப்பிடலாம்?என்ன பயன்?

4 posters

Go down

தினை,ராகி, கம்பு, சோளம்-எப்படி சாப்பிடலாம்?என்ன பயன்? Empty தினை,ராகி, கம்பு, சோளம்-எப்படி சாப்பிடலாம்?என்ன பயன்?

Post by மாலதி Tue Apr 19, 2011 9:37 am

தினை,ராகி, கம்பு, சோளம்-எப்படி சாப்பிடலாம்?என்ன பயன்? Ragi

ஒவ்வொரு முறை உணவைப் பற்றி எழுதும் போதும் சிறு தானியங்களைச்
சாப்பிடுங்கள் என எழுதுகிறீர்களே அது என்ன சிறுதானியம்? சின்னதாய்
இருக்குமா? எங்கே கிடைக்கும்? என வாசக நண்பர்கள் கேட்பதுண்டு. அவர்கட்காக
இந்த கட்டுரை சிறுதானிய ஸ்பெஷல். அரிசி கோதுமை-யை தானிய சமூகத்தில்
மேல்தட்டு மக்கள் எனலாம். அதற்கிருந்த வனப்பும் வணிகமும், அந்த தானியங்களை
ஒய்யாரத்தில் உட்கார வைத்துவிட்டது. அப்போதிருந்த நிலச்சுவான்தாரர்களும்,
உயர்குடி மக்களும் போற்றி பாரட்டியதில் தினம் தோறும் அன்றாட உணவாய்
அரிசியும் கோதுமையும் அலங்கரிக்கப்பட்டுவிட்டது. ஓடியாடி உழைத்த
குடியானவன் முதலாளி முன் கூனிக் குறுகி உட்கார்வது போல், இந்த மண்நலம்
காத்து பயிர்சுழற்சி(crop diversity) உயிர்சுழற்சி(biodiversity) போற்றிய
தினை, ராகி, கம்பு, சாமை, குதிரைவாலி, காடைகண்ணி முதலான சிறுதானியங்கள்
ஏழை வீட்டுக்கு மட்டும் இடம்பெயர்ந்துவிட்டது. அட அவருக்காவது நலம்
நிற்கட்டுமே என்றால், சமீபத்திய அரசியல் லஞ்சங்களான இலவசங்களில் அதுவும்
தொலைந்து போய், ஒரு ரூபாய் அரிசிக்கு ஏழைக் குடியானவனும் சிறுதானியங்களை
மறக்கத் துணிந்து விட்டது இன்னுமொரு துயரம்.

தினை,ராகி, கம்பு, சோளம்-எப்படி சாப்பிடலாம்?என்ன பயன்? Thinaiசிறுதானியங்கள்
பயிராக்க அதிக தண்ணீர் தேவையில்லை. உரமோ, பூச்சிக்கொல்லியோ ஒரு போதும்
தேவையில்லை. இப்படி இன்னமும் இயற்கையோடு இயைந்து நமக்கு பசியாற்றும் போதே
நோய் ஆற்றும் மகத்தான பணி செய்யக் காத்துக் கிடப்பது இந்த சிறுதானியங்கள்
தாம். தினையின் பீட்டா கரோட்டின் சத்து தினசரி கண்பார்வையை சீராக
வைத்திருக்க உதவும் அதன் லோகிளைசிமிக் தன்மை சர்க்கரை நோயாளிக்கு நற்பயன்
அளித்திடும். கம்பு-இரும்பு சத்து அதிகம் கொண்ட ஒரே தானியம். சிறுசோளம்,
வரகரிசி னார் சத்தும் புரத சத்தும் நிறைய கொண்ட
சிறுதானியங்கள்.வேனிற்காலத்தில் கம்பங்கூழ் வெங்காயத்துடன் சாப்பிடுவது
என்பது ’அய்ர்ன் டானிக் கலந்த கூல் டிரிங்க்ஸ்’ சாப்பிடுவது போன்றது! இந்த
சிறுதானியங்களை எப்படி சமைப்பது.?.அரிசி கோதுமைன்னா தெரியும்..இவர்றை
எப்படி சமைக்க முடியும் என்போருக்கு இதோ தொடர்ச்சியான ஹெல்த்தி
ரெசிபிக்க்கள்...


சிறுதானிய சிறப்பு இட்லிhref="http://2.bp.blogspot.com/-rLtvDyC0wRo/TapTVBAN5SI/AAAAAAAAAy0/r0bbkzEi8YI/s1600/thinai%2Bitli.jpg">தினை,ராகி, கம்பு, சோளம்-எப்படி சாப்பிடலாம்?என்ன பயன்? Thinai%2Bitli

3 கப் தினை அல்லது கம்பு அல்லது சோளம்

1/2 கப் உளுத்தம்பருப்பு

2 தேக்கரண்டி வெந்தயத்தூள்


சிறு தானியங்களை உளுந்து, வெந்தயத்துடன் சேர்த்து 12 மணி நேரம் ஊற
வைத்து பின் இட்லிக்கு அரைப்பது போல அரைத்து எடுங்கள். தேவைக்கேற்ற
உப்பைச் சேர்த்துக் கொள்ளுங்கள். லேசாக புளிக்க 4-5 மணி நேரம் வெளியிலும்
பின் 8 மணி நேரம் ஃப்ரிட்ஜிலும் வைத்திருந்து பின் இட்லி வார்த்து
எடுங்கள். சாதாரண இட்லியைக் காட்டிலும் 5 நிமிடங்கள் கூடுதலாய் வேக
வேண்டும்.

சிறுதானிய தோசை


3 கப் தினை அல்லது கம்பு அல்லது சோளம்

1/2 கப் உளுத்தம் பருப்பு

2 தேக்கரண்டி வெந்தயத்தூள்


சிறு தானியங்களை உளுந்து, வெந்தயத்துடன் சேர்த்து 12 மணி நேரம் ஊற
வைத்து பின் இட்லிக்கு அரைப்பதை காட்டிலும் இன்னும் ரவைபோல் போல அரைத்து
எடுங்கள். தேவைக்கேற்ற உப்பைச் சேர்த்துக் கொள்ளுங்கள். லேசாக புளிக்க 4
முதல் 5 மணி நேரம் வெளியிலும், பின் 8 மணி நேரம் ஃப்ரிட்ஜிலும்
வைத்திருந்து பின் தோசை வார்த்து எடுங்கள். சாதாரண தோசையை விட மொறுமொறு
கூடுதலாய் இருக்கும். சூடாய்ப் பரிமாறுவது சிறப்பு.


தினை அடைதினை,ராகி, கம்பு, சோளம்-எப்படி சாப்பிடலாம்?என்ன பயன்? Adai-ragi


1 கப் தினை

1/2 கப் கடலை பருப்பு

1/2 கப் உளுத்தம்பருப்பு

2 தேக்கரண்டி உளுந்து

1/2 தேக்கரண்டி பெருங்காயம்

1/2 கப் முட்டைகோஸ்துருவல்

1/2 கப் தேங்காய் துருவல்

3 காய்ந்த மிளகாய் வற்றல்

உப்பு தேவைக்கேற்றபடி


தானியங்களை 3 மணி நேரம் ஊற வைத்துப் பின் தேங்காய் துருவல், கோஸ் துருவல், மிளகாய் வற்றலை கலந்து நல்லெண்ணெயில் அடை சுடுங்கள்.

சூப்பர் அடை உங்கள் ஆரோக்கிய அடுப்பங்கரையில் மணக்கும்.


தினை எள்ளோதரை (தினை எள்ளு சாதம்)


150 கிராம் எள்

½ கப் தினை

100 g உளுத்தம்பருப்பு

6 வற்றல்

50 நிலக்கடலை


தாளித்தெடுக்க

கடுகு

மஞ்சள்

கடலைப்பருப்பு

பெருங்காயம்

உப்பு

செக்கிலாட்டிய நல்லெண்ணெய்


முதலில் தினையை அரிசி சோறாக்குவது போல், 1க்கு இரண்டு பங்கு நீர்
விட்டு குக்கரில் வேக வைத்து எடுங்கள். வெந்த தினை சாதத்தை ஒரு விரிந்த
தட்டில் பரவலாக்கிடுங்கள்.

எள், மிளகாய்வற்றல், உளுத்தம்பருப்பு, பெருங்காயம் நல்லெண்ணெயில் வறுத்து எடுத்து பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, நிலக்கடலை
விட்டு தாளித்து எடுத்து, அதில் தினை சாதத்தை போடு மிக்ஸியில் பொடித்து
எடுத்த எள்ளு பொடியை தூவி இறக்கவும்.

தினை எள்ளோதரை பெண்ணுக்கேற்ற சிறப்பு உணவும் கூட


தினை கொழுக்கட்டைதினை,ராகி, கம்பு, சோளம்-எப்படி சாப்பிடலாம்?என்ன பயன்? Ragi%2Bball


1 கப் தினை

1 கப் தேங்காய் துருவல்

3 பச்சை மிளகாய்

5 கறிவேப்பிலை நன்கு அரிந்த்து

3 கப் நீர்

உப்பு தேவைக்கேற்றபடி


தாளித்தெடுக்க


1 தேக்கரண்டி கடுகு

1 தேக்கரண்டி சீரகம்

1 தேக்கரண்டி மிளகுத்தூள்

1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு

1 சிட்டிகை பெருங்காயம்

2 தேக்கரண்டி நல்லெண்ணெய்


1. தினையைக் கழுவி பின் மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். சீரகத்தையும் மிளகையும் பொடிசெய்து வைக்கவும்.

2. கடுகு, உளுத்தம்பருப்பு, நல்லெண்ணெயில் தாளித்து எடுத்து, பருப்பு
பொன்வருவலாக வரும் சமயம் அதில் மிளகாய் சட்னி, கறிவேப்பிலை போடவும். அதில்
தேங்காய் துருவலைப் போடவும்

3. கப் நீர் விட்டு கொத்திக்க வைக்கவும். நீர் சூடாகியதும் தேவையான அளவு உப்பு போடவும்.

4. சில நிமிடங்கள் சென்ற பின் ஊறிய தினையை அதில் போட்டு நீர் வற்றும் வரை வேக வைக்கவும்.

5. வெந்த தினை மாவு சற்று ஆறியதும் எலுமிச்சங்காய் அளவு உருட்டி வைத்து சூட்டுடன் சாப்பிடவும்.

6. தொட்டுக் கொள்ள சட்னி, சாம்பார், கொத்சு சூப்பர் காம்பினேஷன்!


ராகி உருண்டை


1 கப் முளை கட்டிய ராகி மாவு

¾ கப் வெல்லத்தூள்

4-5 ஏலம்

2-3 தேக்கரண்டி நெய்


ஒரு வாணலியில் ராகி மாவு நல்ல மணம் வரும் வரை வறுக்கவும். சூடான ராகி
மாவுடன் வெல்லத்தூளை கலக்கவும். ஏலரிசிபொடியை பின் சேர்க்கவும். பின்
அதில் சிறிது சிறிதாக நெய் விட்டு உருண்டையாகப் பிடிக்கவும்.


தினைப்பாயாசம்தினை,ராகி, கம்பு, சோளம்-எப்படி சாப்பிடலாம்?என்ன பயன்? Thinai%2Bpayasam

2 கப் தினை

11/2 கப் சர்க்கரை/வெல்லம்

250 மிலி காய்ச்சாறிய பால்

10 முந்திரிபருப்பு (உடைந்தது)

5 ஏலம்

10 உலர்ந்த திராட்சை (கிஸ்மிஸ்)

1 தேக்கரண்டி நெய்



1. ஒரு பாத்திரத்தில் 4 கப் நீர் விட்டு அதில் தினை அரிசியைப் போட்டு
நன்கு வேக வைக்கவும்.பின் அரிசி நன்கு வெந்த பின் வெல்லத்தூளை அதில்
போடவும்.

2. 10 நிமிடங்கள் மெல்லிய சூட்டில் அதை வேக விடவும். பின் பால் சேர்க்கவும்

3. முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ்-ஐ நெய்யில் வருத்து. அதில் போடவும்

4. அதை நன்கு கலக்கி, ஒரு கொதிவந்ததும், கடைசியில் இறக்கி வைக்கும் போது ஏலம் போடவும்

5. சூடாக பரிமாறுங்கள்.


தினை உப்புமாதினை,ராகி, கம்பு, சோளம்-எப்படி சாப்பிடலாம்?என்ன பயன்? Ragi%2Bidiappam


1 கப் தினை

2 நறுக்கிய பெரிய வெங்காயம்-1

3 நறுக்கிய பச்சை மிளகாய்-2

4.கொத்துமல்லி கறிவேப்பிலை இலைகள்

5. ஒரு தேக்கரண்டி கடுகு

6. இரண்டி தேக்கரன்டி உடைத்த உளுத்தம்பருப்பு

7. ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு

8. நான்கு கப் நீர்

9. மூன்று தேக்கரண்டி எண்ணெய்

உப்பு தேவையான அளவு


1. தினையை ரவை போல் திரித்து வைத்துக் கொள்ளவும்.

2. வெங்காயம் பச்சை மிளகாய், கடலைபருப்பு இவற்றை கடுகு உளுத்தம்பருப்புடன் எண்ணெயில் தாளிக்கவும்.

3. பின் நீர் விட்டு கொதிக்க விட்டு, நன்கு கொதி வந்ததும் தினை ரவையை அதில் போட்டு வேகவைத்து இறக்கி வைக்கவும்.தினை,ராகி, கம்பு, சோளம்-எப்படி சாப்பிடலாம்?என்ன பயன்? Ragi%2Bpoori

ராகிப்புட்டு

250 கிராம் ராகி மாவு

50 கிராம் தேங்காய் துருவல்

125 கிராம் சர்க்கரை அல்லது வெல்லம்

2 தேக்கரண்டி நெய்

சில தேக்கரண்டி நீர்

1 தேக்கரண்டி ஏலம்

2 தேக்கரண்டி வேகவைத்த பாசிப்பயறு


1. லேசாக நீர் விட்டு ராகி மாவை ஆவியில் புட்டுக்கு வேக வைப்பதுபோல் வேக வைக்க்கவும்

2.வெந்த ராகி புட்டை உடைத்து அதில் வெந்த பாசிப்பயறு தேங்காய்
துருவல்; வெல்லம்/சர்க்கரை போட்டு நன்கு கிளறி எடுக்கவும். மனதுக்கு
விருப்பமான வடிவங்களில் அதை உருட்டி தட்டில் வைக்கவும்.

3. இது சிறப்பானதொரு சிற்றுண்டி. குழந்தைகட்கு அற்புதமான காலை உணவும் கூட.


நம் மத்திய அரசு இந்தாண்டிற்கான தன் பட்ஜெட்டில் இந்த சிறு தானியங்களை
ஊக்குவிக்கப் பல சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. நாமும் இதை உணர்ந்து
வாரம் ஒருநாள் அரிசி ஒருநாள் கோதுமை என சாப்பிட்டுவிட்டு பிற நாட்கள் தினை
சோளம் கம்பு என சாப்பிட்டால் நமக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது!


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தினை,ராகி, கம்பு, சோளம்-எப்படி சாப்பிடலாம்?என்ன பயன்? Empty Re: தினை,ராகி, கம்பு, சோளம்-எப்படி சாப்பிடலாம்?என்ன பயன்?

Post by மாலதி Tue Nov 05, 2013 8:35 am

அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தினை,ராகி, கம்பு, சோளம்-எப்படி சாப்பிடலாம்?என்ன பயன்? Empty Re: தினை,ராகி, கம்பு, சோளம்-எப்படி சாப்பிடலாம்?என்ன பயன்?

Post by KAPILS Tue Nov 05, 2013 8:48 am

024 
மாலதி wrote:அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

தினை,ராகி, கம்பு, சோளம்-எப்படி சாப்பிடலாம்?என்ன பயன்? Empty Re: தினை,ராகி, கம்பு, சோளம்-எப்படி சாப்பிடலாம்?என்ன பயன்?

Post by அருள் Wed Dec 25, 2013 9:54 pm

நல்ல இருக்கு  நல்ல இருக்கு  நல்ல இருக்கு  நல்ல இருக்கு  நல்ல இருக்கு
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

தினை,ராகி, கம்பு, சோளம்-எப்படி சாப்பிடலாம்?என்ன பயன்? Empty மதயானைக்கூட்டம் விமர்சனம்

Post by Tamil Wed Dec 25, 2013 10:32 pm

நடிகர் : கதிர்
நடிகை :ஓவியா
இயக்குனர் :விக்ரம் சுகுமாரன்
இசை :எம்.ஆர்.ரகுநந்தன்
ஓளிப்பதிவு :ராகுல் தருமன்

தேனி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் நடக்கும் கதை. நாயகன் கதிரின் அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி விஜி தன்னுடைய கணவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால் அவரிடம் கோபித்துக் கொண்டு அவரை விட்டு பிரிந்து தன் பிறந்த வீட்டிலேயே வாழ்ந்து வருகிறார். அங்கு அவருக்கு ஆதரவாக அவருடைய அண்ணன் இருந்து வருகிறார். 

நாயகனுக்கு ஒரு தங்கை இருக்கிறாள். அவள் தேனியில் ஒரு கல்லூரியில் படித்து வருகிறாள். அங்கு கேரளாவில் இருந்து படிக்க வரும் ஓவியாவும், இவளும் தோழிகளாக இருக்கின்றனர். ஓவியாவைப் பார்க்கும் நாயகன் பார்த்தவுடனே அவள்மீது விருப்பம் கொள்கிறார். இந்நிலையில், கல்லூரியில் ரேக்கிங் அதிகமாக இருப்பதால் வெளியில் தங்க முடிவெடுக்கும் ஓவியாவை தன் தங்கையின் உதவியுடன் தன்னுடைய வீட்டிலேயே தங்கவைக்கிறார். 

இந்நிலையில், நாயகனின் அப்பா திடீரென இறந்துபோகிறார். இவருடைய இறுதிச்சடங்கை நடத்துவதற்காக முதல் மனைவி விஜி மற்றும் அவளது அண்ணன் ஆகியோர் ஊர் பெரியவர்களிடம் பேசி தங்களுடைய வீட்டுக்கு அவரது உடலை எடுத்துச் சென்றுவிடுகின்றனர். 

தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள நாயகனின் குடும்பத்தை அனுமதிக்க அவர்கள் மறுக்கிறார்கள். இந்நிலையில், முதல் மனைவி விஜியின் மகன் நாயகனின் குடும்பத்தின் மீது தனி பாசம் காட்டுகிறார். தன்னுடைய அப்பாவின் காரியத்தில் அவனை முன்னிறுத்தி கலந்துகொள்ள வைக்கிறார். 

இதனால் வெறுப்படைந்த விஜியின் அண்ணன் மகன்கள் அவனை வீட்டை விட்டு வெளியேறுமாறு தகராறு செய்கின்றனர். இதில், விஜியின் அண்ணன் மகன் ஒருவன் கொல்லப்படுகிறான். இதையடுத்து, நாயகன் அங்கிருந்து தப்பித்து தலைமறைவாகிறான். தன்னுடைய மகன் நாயகனால் கொல்லப்பட்டதால் அவனை எப்படியாவது கண்டுபிடித்து பழிக்கு பழி வாங்கவேண்டும் என விஜியின் அண்ணன் முடிவெடுக்கிறார். 

இதற்காக நாயகனைத் தேடி தன்னுடைய மற்ற மகன்களை அனுப்பிவைக்கிறார். இறுதியில் அவர்கள் நாயகனை கண்டுபிடித்து பழிதீர்த்தார்களா? நாயகன் தன்னுடைய குடும்பத்துடன் மீண்டும் இணைந்தாரா? என்பதே மீதிக்கதை. 

நாயகன் கதிர் புதுமுகம் என்றாலும் கதைக்குத் தகுந்தாற்போல் தன்னுடைய கதாபாத்திரத்தை வளைத்துக் கொடுத்து நடித்து கதையை வலுப்படுத்தியிருக்கிறார். நாயகி ஓவியா கதாநாயகி என்பதற்காக மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கிறார். மற்றபடி, படத்தில் இவருடைய கதாபாத்திரத்திற்கு வலுவில்லை. 

நாயகனின் அப்பாவுக்கு முதல் தாரமாக நடித்திருக்கும் ‘ஆரோகணம்’ விஜி தனது அனுபவ நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். கோபத்தில் இவர் காட்டும் ஆக்ரோஷம் பயத்தை ஏற்படுத்துகிறது. விஜியின் அண்ணனாக வரும் ராமமூர்த்தி வில்லன் கதாபாத்திரத்திற்கு அழகாக பொருந்தியிருக்கிறார். வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். 

தனது முதல் படத்திலேயே கிராமத்துக் கதை களத்தை விறுவிறுப்பாகவும், நேர்த்தியாகவும் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் விக்ரம் சுகுமாரன். ஒரு சமூகத்துக்கிடையே நடைபெறும் மோதலை அச்சு மாறாமல் தெளிவாக காட்டியிருக்கிறார். படத்தில் நகைச்சுவைக்கு இடம் கொடுக்காமல் விறுவிறுப்பாக கதையை நகர்த்துவதில் தனி முத்திரை பதித்திருக்கிறார். 

ராகுல் தருமன் படத்தின் கதைக்கேற்ப தன் வித்தியாசமான ஒளிப்பதிவினால் மேலும் விறுவிறுப்பை கூட்டியுள்ளார். என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் அவ்வளவாக பேசப்படாவிட்டாலும் பின்னணி இசையில் வெளுத்து வாங்கியிருக்கிறார். 

மொத்தத்தில் ‘மதயானைக்கூட்டம்’ மண்டியிடாத வீரம்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

தினை,ராகி, கம்பு, சோளம்-எப்படி சாப்பிடலாம்?என்ன பயன்? Empty Re: தினை,ராகி, கம்பு, சோளம்-எப்படி சாப்பிடலாம்?என்ன பயன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆடிப் பட்டத்திற்கேற்ற சிறு தானியப் பயிர்களான சோளம், கம்பு, ராகி, மக்காச்சோளத்தைக் குறைவான நீரைப் பயன்படுத்தி பயிரிட்டு அதிக வருவாய் ஈட்டலாம்.
» என்ன எப்படி சாப்பிடலாம்
» ரத்த அழுத்தமா... என்ன சாப்பிடலாம்? பதில் இதோ....
» எப்படி சாப்பிடலாம்?
» வயிறு , நெஞ்செரிச்சலுக்கு என்ன சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum