TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:13 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நாடு கடந்த தமிழீழ அரசைவிட்டுப் பிரிந்து செல்லும் எம் பிரியமானவர்களே!

Go down

  நாடு கடந்த தமிழீழ அரசைவிட்டுப் பிரிந்து செல்லும் எம் பிரியமானவர்களே!   Empty நாடு கடந்த தமிழீழ அரசைவிட்டுப் பிரிந்து செல்லும் எம் பிரியமானவர்களே!

Post by mmani Sun Mar 13, 2011 7:37 am

ஆண்ட பரம்பரை மீண்டும் தன்மானத்துடன் வாழ, நாதியற்று வாழும் எம்மக்களுக்கு
நீதி கிடைக்க ஓவ்வொரு தமிழனும் தனது பங்கைத் தவறாமல் செலுத்தி இறைமையும்,
சுதந்திரமும் கொண்ட தனிநாட்டை மீள் அமைப்போம் என சூளுரைத்துத் தொடங்கிய
நாடுகடந்த தமிழீழ அரசை, ஈழத்தமிழர்களின் கனவை, உலகத் தமிழரின் விருப்பை
ஊதாசீனம் செய்து பிரிந்து செய்வது சரியா, பிழையா, முறையா, நேர்மையானதா என
ஒரு கணம் சிந்தியுங்கள்.


தமிழரின் ஒற்றுமையை, அதன் தேவையை எடுத்துக்காட்டும் விதத்தில்
நடக்கவேண்டிய நாமே பிரிவினைக்குக் காரணமாகலாமா? பிரிவினை என்ற சொல்லை
தமிழ் அகராதியில் இருந்து அகற்றவேண்டிய நாமே பிரிவிணைக்கு வழிவகுக்கலாமா?
தேசியம் பேசிய நாம் இன்று பிரிந்து நின்று எம்மக்கள் எம்மீது வைத்த
நம்பிக்கையைச் சிதைக்கலாமா?

பிரிந்து சென்றதோடு நிறுத்தாமல், நாடுகடந்த தமிழீழ அரசு – ஜனநாய அணி என்ற
பெயருடன் ஏட்டிக்குப் போட்டியாக நீங்கள் தொடங்கியிருப்பது ஒற்றுமையை
வேண்டி நிற்போருக்கு ஒரு சவுக்கடியாகவும், எம் இனத்தின் எதிகாலத்துக்கு
ஒர் தடைக்கல்லாகவும அமைந்துவிட்டதே.

எமக்குள் யார் பிரிந்தாலும் இழப்புத் தமிழருக்கே என்ற உண்மையை
உணர்ந்தல்லவா நீங்கள் செயற்பட்டிருக்க வேண்டும். பேசித் தீர்க்க்க வேண்டிய
விடயத்தை பிரிந்து சென்று எதிரி விரிக்கும் வலைக்குள் நீங்களாகவே விழுந்து
விட்டீர்களே. பிரிந்து செல்லும் உங்கள் செயலுக்கும், இராஜபக்சாவின்
விருப்பத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லையே. இருவரும் வேண்டிநிற்பதும்
தவமிருப்பதும் நாடுகடந்த தமிழீழ அரசை அழிப்பது அல்லது பலவீனப்படுத்துவது
ஒன்றுமட்டுமே.

ஜனநாயகம் பற்றிப் பேசுகிறீர்களே, எது ஜயா ஜனநாயகம்? பிரிந்து நிற்கும்
முப்பது பேர் கூறுவதை மற்றய அறுபத்தட்டுப்பேரும் ஏற்றால்த்தான் ஜனநாயகமா?
அல்லது, அவர்கள் ஏற்கமறுததால் நீங்கள் பிர்ந்து செல்வதுதான் ஜனநாயகமா?

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்’ உடையாமல் காப்போம் சரியாயின்
தட்டிக்கொடுப்போம். தவறாயின் சுட்டிக் காட்டுவோம என்கிறீர்களே. நல்ல
விடையம். ஆனால் முதலில் பெரும்பான்மைக்கு மதிப்புக் கொடுத்து நடவுங்கள்.

உங்கள் விருப்பு நிறைவேறாததால் உண்மையைக் கூறமுடியாமல், வலுவில்லாத
காரணங்களை உலகுக்குக் கூறி, நாடுகடந்த தமிழீழ அரசை பலவீனப்படுத்தும்
நோக்குடன் நீங்கள் செயற்படுவது எந்த விதத்தில் எம் இனத்துக்கு நன்மை தரும்
என்பது எமக்கு விளங்கவில்லை.

சிறிய விடயங்களை பெரிதாக்கி, நாடுகடந்த தமிழீழ அரசை அழிக்க முயலும் உங்கள்
பரிதாப நிலை கண்டு வெட்கப்படுகிறேன், வேதனையடைகிறேன். நீங்கள் நினைப்பது
நடக்கவில்லை என்பதற்காக எம் இனம் பலியிடப் படவேண்டுமா என்பதை எண்ணிப்
பாருங்கள்.

உங்களைத் தேர்வு செய்த எம் மக்களைப் பற்றியோ, ஈழத்தில் வாடும் எம்
உறவுகளைப் பற்றியோ சிந்திக்காது நீங்கள் இப்படி நடப்பது தவறல்லவா? எம்
மக்கள் முட்டாள்க்களல்ல அரசியலை நன்கறிந்தவர்கள். எம் ஒவ்வொருவரையும்
மயிரிடை கூடத் தவறாமல் எடைபோட வல்லவர்கள்.

நானும் உங்களில் ஒருவன் என்பதை மற்ந்துவிடாதீர்கள். எமது மக்கள் உங்களை வெறுப்பதை நான் ஒருபோதும் விரும்பமாட்டேன்.

கனிவான உள்ளமும், பணிவான குணமும் கொண்டஉருத்திரகுமாரன் தேசியத் தலைவரின்
நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். நாடுகடந்த தமிழீழ அரசை வழிநடத்தவல்ல அந்த
உத்தமரை, திறமைசாலியை நீங்கள் கே. பி யுடன் இணைத்து அவரை
கேவவலப்படுத்துவது நீதியும், நியாயமுமற்ற செயலல்லவா?

தலைமையை அகற்றி, நாடுகடந்த தமிழீழ அரசைச் செயலிழக்க வைத்தால் அதனால் யார் நன்மை அடைவார்கள் என்பது கூட உங்களுக்கு விளங்கவில்லையா?

தமிழினத்தை அழிக்கக் கங்கணம் கட்டி நிற்கும் சிங்களத் தலைவர்களின்
ஒற்றுமையைப் பாருங்கள். அதேவேளை வாழ்வாதாரங்களை எல்லாம் இழந்து அல்லல்
படும் எம் உறவுகளின் வாழ்வை ஒர் முறை சிந்தித்துப் பாருங்கள்,
ஆண்டுக்கணக்காக சிங்களச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எம் உறவுகளை ஒரு
தரம் நினைத்துப் பாருங்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டுப்
பிரிந்து சென்று தனித்துப் போட்டியிட்ட கஜேந்திரகுமாரின் தோல்வி எமக்குத்
தந்த பாடத்தை மறவாதீர்கள்.

வரலாறு படைத்தவர்கள் சண்டாளர்களின் கையில் சிக்கி சிறைகளில் அல்லல்ப்
படும்போது, நாட்டை ஆளும் வல்லமை படைத்தவர்கள் நரக வாழ்க்கை வாழும்போது
நீங்கள் அணிகளை உருவாக்கி தமிழினத்தைக் கூறு போடுகிறீர்களே. இது சரியென
உங்களுக்குப் படுகிறதா?

எம் வீரத்தைக்கண்டு வியந்த உலகம் எமது ஒற்றுமை கண்டும் வியக்கவேண்டும்.
ஒன்றில் எம் இனத்தின் மானத்தைக் காக்க, அவர்களின் எதிர்காலத்தை வளமாக்க,
தேசியத் தலைவரின் இலட்சியத்தை தலைமேல் வரித்துச் செயற்படும் நாடுகடந்த
தமிழீழ அரசுடன் இணைந்து செயற்படுங்கள் அல்லது குழப்பம் விளைவிக்காது
அவர்களையாவது நிம்மதியாகச் செயற்பட விடுங்கள்.

எமது உற்வுகள் கோரமான சுனாமியால்ப் பாதிக்கப்பட்டு, கொடிய போரை
எதிர்கொண்டு, தாங்கொணா வெள்ளத்தால் தாக்கப்பட்டு மூன்று ஜென்மங்களை இந்தத்
தலைமுறையில் கடந்தவர்கள். எம் ம்களுக்குப் பிரிவும், வெளிநடப்பும்
புதிதுமல்ல, பெரிதுமல்ல. அவர்கள், ஒரு பலமான அரசியல் தளத்தை நாடுகடந்த
தமிழீழ அரசுக்கு நிட்சயம் தருவார்கள்.

எம் மக்களின உதவியுடனும் ஒத்தாசையுடனும் இறைமையும், சுதந்திரமும் கொண்ட
தனிநாடு விரைவில் மலரும். அந்த வேளை, நீங்கள் பார்வையாளர்களாக அல்லாது
அங்கு பங்காளிகளாக இருக்கவேண்டும். இதுவே என் ஆசை.

ஊடகங்கள் உங்களுக்கு சாதகமாக இருந்தால் மட்டும் போதாது. அவர்கள் ஆதரவு
தந்தால் பொய் உண்மையாகிவிடுமா? எமது மக்களை எவரலும் ஏமாற்ற முடியாது என்ற
உண்மையை டக்ளசும் கருணாவும் உணர்ந்தது போல் நீங்களும் உணரவேண்டுமா?

எம் இனத்தின் நன்மை கருதி நாடு கடந்த தமிழீழ அரசைத் தூற்றுவதை நிறுத்துங்கள். அது எதிரிக்குத்தான் நன்மையாக முடியும்.

காலத்தைக் கடத்தாமல், நாடுகடந்த தமிழீழ அரசு பெருந்தன்மையுடன் நீடித்த
மூன்று கிழமைக்குள் யாப்பினை ஏற்று, பராளுமன்ற் சட்டதிட்டங்களுக்கு அமைய
நடப்போம் என்று கையொப்பமிட்டு ஒன்றிணைந்து செயற்படுங்கள்.

யாப்பில், தமிழருக்கு நன்மைதரும் வேறு விடங்களும் சேர்க்கப்பட
வேண்டுமாயின் அடுத்த அமர்வில் அதையும் சேர்த்துச் செயற்படுவோம். அதற்கான
ஒத்துழைப்பை நான் உங்களுக்குத் தவறாது தருவேன். பாராளுமன்றம் தொடங்கி 50
ஆண்டுகள் சென்றாலும் தேவை வரும்போது யாப்பைத் திருத்துவதும் மாற்றுவதும்
வழமையான விடயம்தானே.

எம் இனத்தின் பெயரால் உங்களிடம் அன்பாகக் கேட்கிறேன், தயவாக வேண்டுகிறேன்,
மன்றாடி நிற்கிறேன் நீங்கள் தவறான பாதையில், தப்பாகச் செயற்படுவது
முறையல்ல. இறைமையும், சுதந்திரமும் கொண்ட தனிநாட்டை அமைக்கவல்ல நிலையில்
எம்மிடம் உள்ளது நாடுகடந்த தமிழீழ அரசு ஒன்றே. அதையும் அழித்துவிட்டால்
அல்லது பலவீனப் படுத்தினால் எம் உறவுகளின் நிலை என்ன என்பதை மீண்டும் ஒரு
முறை சிந்தித்துப் பாருங்கள்.

கலாநிதி ராம் சிவலிஙகம்
பிரதிப் பிரதமர் – நாடுகடந்த தமிழீழ அரசு
email: r.sivalingam@tgte.org
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நாடு கடந்த தமிழீழ அரசு ஏன்? நாடு கடந்த தமிழீழஅரசு தோழமை மையம் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் பிரதம அமைச்சர் திரு உருத்திரகுமாரன் உரை
» மே18 - தமிழீழ தேசிய துக்க நாள்! முன்னெடுப்புகள் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு!
» ஜேர்மனியில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல்கள்
» நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்காக பிரித்தானியாவில் 20 பிரதிநிதிகள் தெரிவு
» அவுஸ்திரேலியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum