TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


புலத்தில் விடுதலைச் செயற்பாடுகளைக் குறிவைக்கும் கே.பி.யின் ஆட்கள்’ என்னும் விசமப் பிரச்சாரம்!!

Go down

புலத்தில் விடுதலைச் செயற்பாடுகளைக் குறிவைக்கும் கே.பி.யின் ஆட்கள்’ என்னும் விசமப் பிரச்சாரம்!! Empty புலத்தில் விடுதலைச் செயற்பாடுகளைக் குறிவைக்கும் கே.பி.யின் ஆட்கள்’ என்னும் விசமப் பிரச்சாரம்!!

Post by piraba Sun Dec 26, 2010 7:28 am

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தகர்ப்பிற்குப் பின்,
உலகஅரங்கில் கடும் தொனியில் எதிரொலித்த ‘பயங்கரவாதத்திற்கெதிரான போர்’
என்ற முழக்கத்தில் உண்மையான பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதோ இல்லையோ,
பல தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள், நசிந்தும், மெலிந்தும்,
உயிர்பிரிந்தும் போயுள்ளன.

சிங்கள இனவாத
அரசும், இந்தப் பொதுப்பதத்தை தன் கையில் கெட்டியாகப் பிடித்தே, பல
நாடுகளின் ஆதரவைப் பெற்று தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு
எதிரான மூர்க்கத்தனமான, கோழைத்தனமான பெரும் போரை நடத்தி
முடித்திருக்கின்றது.

தமிழீழ மக்களின் தேசிய
விடுதலைக்கான ஆயுதப் போராட்டம், பெரும் இழப்புக்களைச் சந்தித்து,
முள்ளிவாய்க்காலில், ஆயுதங்கள் மௌனித்தபோதும், தமிழரின் விடுதலைப்
போராட்டம் புலத்தில் அரசியல் ராஜதந்திரத் தளங்களில் தன் அடுத்த கட்ட
நகர்வுகளில் முனைப்புக் கொண்டுள்ளது.

இத்தகு வீரியமிகு முனைப்புக்களை, முளையிலேயே கிள்ளியெறியும் செயற்பாடுகளும் கூடவே முனைப்புப் பெற்றுள்ளன.
இதற்கு அவர்கள் பாவிக்கும் பதம் ‘கே.பி.யின் ஆட்கள்.| என்பதாகும்.

கே.பி.
சிங்களச் சிறையில் இருக்கும் ஒரு கைதி. சிறீலங்காவின் வரலாற்றில் அதிகூடிய
குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட ஒருவர். அவர், தற்போது, சிங்கள அரசின்
சொற்படி பேசுகின்ற, கைப்பொம்மையாக செயற்படுகின்ற ஒருவர் என்பது, அறிவுக்
குறைச்சலான ஒருவருக்குக் கூட நன்கு புரிந்துவிடும்.

அப்படியிருக்க,
கே.பி.யோடு தொடர்புபடுத்தி, தமிழர்களின் நியாயமான விடுதலைச்
செயற்பாடுகளை, முடக்க இவர்கள் ஏன் முயற்சிக்கின்றார்கள்?
நாடுகடந்த
தமிழீழ அரசு மீதும், பிரான்சில் அண்மையில் உதயமான தமிழர் நடுவம் மீதும்,
தாயகவிடுதலைக்கு அர்ப்பணிப்போடு உழைத்தவர்கள் மீதும் இதே வசவுகள்
முன்வைக்கப்பட்டன. இது தொடரவே செய்யும்.

ஊடகப்
பணியில் பிரதான பணியாக இத்தகைய சேறடிப்புக்களை மாத்திரமே கொண்டிருக்கும்
குறிப்பிட்ட சில ஊடகங்கள். பிரான்ஸ் தமிழர் நடுவத்தின் மீது மேற்கொண்ட
வன்மம் மிக்க, பொய்யும் புனைகதையுமாக சோடித்து வெளியிட்ட செய்திகளுக்கு
பதில் சொல்வதைத் தவிர்க்கவே, விரும்புகின்றோம். இவர்களுடன் உரசி, எம்மை
அழுக்குப் படுத்திக்கொள்ள விரும்பவில்லை. நாம் மக்கள் மீதான கரிசனையின்
பேரில், தூய நோக்குடன் பயணப்படுகின்றோம்.

நாங்கள்
விரும்பாத, வெறுக்கின்ற, அசிங்கமான தளம் ஒன்றில், எம்மை நோக்கி
விரிக்கப்படுகின்ற சதிவலையில் சிக்கிக்கொள்ள நாம் விரும்பவில்லை.
இருந்தபோதும், இச்சந்தர்ப்பத்தில், எம்மக்களுக்கு எம்மைப் பற்றி எடுத்துக்கூறும் சந்தர்ப்பமாக இதனைக் கருதிக்கொள்கின்றோம்.

நாம்
எதனையும் அழிக்கப்புறப்பட்டவர்கள் அல்ல. ஆக்கப் புறப்பட்டவர்கள்.
பொறுப்பற்ற, சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகளால், தேசியத் தலைவர் சிறிகச்
சிறுகக் கட்டியமைத்த பெருங்கோட்டை சிதைந்தழிந்து போய்விடுமோ என்ற
பதைபதைப்பில், உந்துதலில், கைகோர்த்தவர்கள்.


உலகத் தமிழர்கள் அனைவரும் ஓரணியில் வரவேண்டும் என்று வலியுறுத்துபவர்கள்,
தேசியத் தலைவரின் பேரில் உண்மையான பற்றும் பாசமும், அவர் காட்டிய பாதையில்
உறுதியான ஈடுபாடும் கொண்ட யாவரும், இதனைத் தான் வலியுறுத்துவர். சிறு
குழுக்களாகப் பிரிந்துபோக யாரையும் அனுமதிக்கமாட்டார். சிதைவுகளை
ஏற்படுத்தவும் முனைய மாட்டார்கள்.
பொது இலக்கு நோக்கி, ஒத்திசைவாக நகருவதே பலம். திசைக்கொன்றாய் தான்தோன்றித்தனமாக செயற்படுவது வெற்றிக்கு இட்டுச்செல்லாது.

சில
ஊடகங்களும், சில தனிநபர்களும், இந்தச் சிதைவு முயச்சிகளையே தீவிரமாய்
மேற்கொள்ளுகின்றனர். தேசிய தலைவர் கட்டிவளர்த்த பலத்தைச் சிதைத்தல்,
செயற்பாடுகள் அற்ற தன்மையை உருவாக்குதல், இதன்மூலம் சிங்கள அரசின்
விருப்பத்திற்கு ஏற்ப, எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை முற்றாக
அழித்தல் என்ற, திட்டமிடலுடன்தான் இவர்கள் இயங்குகின்றார்களா? அல்லது,
தங்களது சொந்த நலன்கள் பாதிக்கப்பட்டுவிடும் என்ற, கீழ்த்தரமான சுயநல
அச்சமா?

இவர்களின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக
அவதானிக்கும் யாவரும், தெளிவான முடிவுக்கு வரமுடியும். விமர்சனங்கள்,
வசைபாடல்கள், பொய்யான குற்றச்சாட்டுக்களின் ஊடாக, போராட்டத்தின்
ஆதரவாளர்களை, அனுதாபிகளை, பங்காளிகளை எதிரிகளாகக் காண்பிப்பது. தூண்களாய்
நின்ற தேசாபிமானிகளை தேசத் துரோகிகளாகப் பிரச்சாரப்படுத்துவது.
தேசியத்தலைவரை தமது சூரியத் தேவனாய் வரித்துக்கொண்டவர்களையே, தலைவருக்கு எதிரானவர்கள் என முத்திரை குத்துவது.


எதிரியும்,
அதனைத்தான் கூறுகின்றான். இவர்களும் அதனைத்தான்
செய்கின்றார்கள்.உண்மையில், இவர்கள், போராட்டத்திற்கு மிகப்பெரும் கேடு
விளைவிக்கின்றனர்.
தேசியத் தலைவருக்கு வரலாறு மன்னிக்காத பெரும் துரோகத்தைப் புரிகின்றனர்.

‘நாம் நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் அல்ல’
‘கறையான் புற்றெடுக்க குடிகொண்ட பாம்புகளும் அல்ல நாம்’

விடுதலைப்
போராட்டம் ஓங்கி வளர்ந்து பெரு விருட்சமான வரலாற்றின் பக்கங்களில்,
தமிழர் நடுவத்தின் பிரதிநிதிகளின், வேர்வையும், உழைப்பும், நாட்டில்
போராடி, தொடர் அறாமல் இங்கு சளைக்காமல் உழைத்தவரின் பங்களிப்பும்,
கரிசனையும், உயிர்த்துடிப்புள்ள அர்ப்பணிப்பும் விரவிக்கிடக்கிறது.

குருட்டுத்தனமான
விமர்சனத்தை விட்டுவிட்டு, அறிவுக் கண்கொண்டு உண்மையை தேடிப்பாருங்கள்.
பெற்று வளர்த்த பெற்ரோருக்குத்தான் குழந்தையின் அருமை தெரியும். ஆதை
வெளியில் இருந்து பாத்தவர்களுக்கு குழந்தையின் அருமை தெரியா. தமிழர்
நடுவத்தின் பிரதிநிதிகளின் தகமை என்ன? தகுதி என்ன? என்பது குறித்து, யார்
எவர் அறிந்துவைத்திருக்கவேண்டுமோ அவர்கள் அறிந்தும் தெரிந்தும்
வைத்திருக்கின்றனர்.

கடந்த ஒன்றரை வருடகாலமாக
பொறுப்பில் இருந்தவர்கள் பொறுப்பற்ற முறையிலும,; சிறுபிள்ளைத் தனமாகவும்
செயற்பட்டதனாலேயே இந்த தமிழர் நடுவத்தை உருவாக்கும் நிலைக்கு நாங்கள்
தள்ளப்பட்டோம். இடையில் வந்தவர்களின் விமர்சனங்கள் குறித்து நாங்கள்;
அக்கறைப்படவுமில்லை, அலட்டிக்கொள்ளவும் இல்லை.
எமது செயற்பாடுகளே எம்மை மக்களுக்கு அடையாளப்படுத்தட்டும்.

அன்பான மக்களே!
தேசிய விடுதலைப் போராட்டத்தை புலத்தில், சிதைப்பதற்கான பொறுப்பையும்,
தேசியத் தலைவர் புலத் தமிழனிடம் எதனை எதிர்பார்த்தாரோ அதனை முற்றாகத்
தகர்க்கின்ற நாசத்திட்டத்தையும் கையிலெடுத்திருப்பவர்கள் குறித்து
உங்களுடையே பெரும் கேள்விகள் நிட்சயமாய் எழும்.

ஊகங்களின்
அடிப்படையிலான புனைகதைளையும் ஆய்வுகளையும் பரபரப்பு செய்திகளையும்
புனையும், திட்டமிட்டுப் பரப்பும், இவர்கள் யார்? இவர்களின் பின்னணி என்ன?
இவர்களின் நோக்கம்தான் என்ன? ஏன் இப்படி நடந்துகொள்ளுகின்றனர்.? என்பன
போன்ற பல கேள்விகள் உங்களிடம் ஏற்படக்கூடும்.
அதற்கான விடையை, அறிவின் துணைகொண்டு கண்டறியும் பொறுப்பையும் உங்களிடமே விட்டுவிடுகின்றோம்.


‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum