TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இந்தியா - பாக் ., பேச்சில் தலையிடவிரும்பவில்லை: ஒபாமா பதில்

Go down

இந்தியா - பாக் ., பேச்சில் தலையிடவிரும்பவில்லை: ஒபாமா பதில் Empty இந்தியா - பாக் ., பேச்சில் தலையிடவிரும்பவில்லை: ஒபாமா பதில்

Post by logu Mon Nov 08, 2010 7:25 am

மும்பை : ""இந்தியா - பாகிஸ்தான் இடையேயான
பேச்சுவார்த்தை விஷயத்தில், அமெரிக்கா எந்த விதமான நிபந்தனைகளும் விதிக்க
முடியாது. மும்பை மற்றும் நியூயார்க்கில் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்க
காரணமாக இருந்த சதிகாரர்களுக்கு எதிராக பாகிஸ்தான் எடுத்து வரும் ராணுவ
நடவடிக்கைகள் தொடர வேண்டும்,'' என்றும் அதிபர் பராக் ஒபாமா திட்டவட்டமாக
தெரிவித்துள்ளார்.
மும்பை செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில் மாணவர்களுடன்
கலந்துரையாடிய அதிபர் ஒபாமா, அங்கு மாணவர்கள் எழுப்பிய பல்வேறு
கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:இந்தியா வளர்ந்து கொண்டிருக்கும்
நாடல்ல; ஏற்கனவே வளர்ந்து விட்ட நாடு. உலக நாடுகளில் ஒரு மிகப்பெரிய
சக்தியாக உருவாகிக் கொண்டிருக்கிறது. அது அமெரிக்காவுக்கு மட்டுமின்றி,
ஒட்டு மொத்த உலகிற்கும் நல்லதே. இந்திய - அமெரிக்க உறவுகள் 21ம்
நூற்றாண்டில் பிரிக்க முடியாத ஒன்றாக இருக்கும். இருநாடுகளுக்கும்
இடையேயான கூட்டணியை புதிய ஒரு கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்
என்பதில் உறுதியாக உள்ளேன்.இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவுகளில்
அமெரிக்கா எந்த விதமான கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது. மும்பை
மற்றும் நியூயார்க்கில் தாக்குதல் நடக்க காரணமான சதிகாரர்களுக்கு எதிராக
பாகிஸ்தான் தற்போது எடுத்து வரும் ராணுவ நடவடிக்கைகள் தொடர வேண்டும்.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அதிக முக்கியத்துவம் இல்லாத பிரச்னைகளை,
இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகள் மூலமாக தீர்த்துக் கொள்ள வேண்டும்.
முதலில் சின்ன, சின்ன பிரச்னைகளை பேசித் தீர்த்து விட்டு, இறுதியாக
காஷ்மீர் பிரச்னைக்கு செல்ல வேண்டும். இதைத்தான் இந்தியாவும் தொடர்ந்து
சொல்லிக் கொண்டிருக்கிறது. அதன்படி, இரு நாடுகள் இடையேயான நம்பிக்கை
அதிகரித்து, பேச்சுவார்த்தைகள் தொடரும் என, நம்புகிறேன்.
பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இருந்தாலும், நாம் விரும்பும் அளவுக்கு அதில் வேகமான முன்னேற்றம் காண
முடியாது. பயங்கரவாதத்தை ஒழிக்க நாங்களும் பாகிஸ்தானுடன் சேர்ந்து
செயல்பட்டு வருகிறோம். பயங்கரவாதம் என்பது புற்றுநோய் போன்றது. அது ஒட்டு
மொத்த நாட்டையே அழித்து விடும். தலிபான்களுடன் தொடர்புடைய அமைப்புகள்,
அல்-குவைதா அல்லது லஷ்கர் - இ- தொய்பா பயங்கரவாத அமைப்புகள் மற்றும்
அவர்களுடன் தொடர்புடைய அமைப்புகளை, அதைச் சார்ந்த பயங்கரவாதிகளை எந்த
வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைள்
தொடர வேண்டியது அவசியமான ஒன்று.பாகிஸ்தானை ஏன் பயங்கரவாத நாடாக அறிவிக்கக்
கூடாது என, கேட்கிறீர்கள். இது நல்ல நல்ல கேள்வி. இப்படிப்பட்ட ஒரு கேள்வி
கேட்கப்படும் என, நான் எதிர்பார்த்தேன்.
பாகிஸ்தானில் அமைதி நிலவ வேண்டும். அந்நாட்டில் அரசியல்
நிலைத்தன்மையும், வளர்ச்சியும் தொடர வேண்டும் என, இந்தியாவே
விரும்புகிறது. இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றுக்கொன்று ஆதரவாக இருந்து
வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால், அது நாளையே நடந்து
விடாது. காலஅவகாசம் தேவைப்படும்.இந்தியா - அமெரிக்கா கூட்டாளியாக
இருப்பதன் மூலம் எல்லையற்ற ஆற்றலை பெறுவதோடு, இருநாட்டு மக்களின்
வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த முடியும். இந்தியா மற்றும் அமெரிக்கா
மட்டுமின்றி, ஒட்டு மொத்த உலகமும் பயன் பெறும் வகையில், இரு நாடுகளுக்கு
இடையேயான ஒத்துழைப்பை 21ம் நூற்றாண்டில் எப்படி முன்னெடுத்துச் செல்வது
என்பது குறித்து நாளை (இன்று) பிரதமர் மன்மோகன் சிங்குடன் விவாதிக்க
உள்ளேன்.எங்களின் பேச்சுவார்த்தைக்குப் பின், பயங்கரவாத தடுப்பு,
பிராந்திய பாதுகாப்பு, மாசற்ற எரிசக்தி போன்றவை தொடர்பாக குறிப்பிடத்தக்க
அறிவிப்புகள் வெளியிடப்படும்.இவ்வாறு ஒபாமா கூறினார்.
திணறடியுங்கள் : அதிபர் ஒபாமாவிடம் மாணவர்கள் கேள்விக் கணைகளைத்
தொடுக்கும் முன்னர், "அவரிடம் மிக கஷ்டமான கேள்விகளைக் கேட்டு
திணறடியுங்கள், அது அவரை இன்று பரபரப்பாக்கும்' என, மிச்சேல் கூறியது
அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதற்கும் சாமர்த்தியமாக ஒபாமா, "நான்
பொதுவாக மிச்சேலுக்கு அடுத்து பேசுவது கிடையாது. ஏன் என்றால் அவர்
பேச்சில் சாமர்த்தியசாலி, அவர் கிண்டலாக குறிப்பிட்டபடி சிரமமான
கேள்விகளாக இல்லாமல் லேசாக கேள்வி கேளுங்கள்' என்று நகைச்சுவையாகக்
கூறினார்.
மாணவ, மாணவியருடன் ஒபாமா, மிச்சேல் நடனம் : அமெரிக்க அதிபர்
பராக் ஒபாமாவும், அவரின் மனைவி மிச்சேல் ஒபாமாவும் பள்ளி மாணவ,
மாணவியருடன் நேற்று தீபாவளி கொண்டாடியதோடு, அவர்களுடன் சேர்ந்து
நடனமாடினர்.மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் பராக்
ஒபாமா, முதல் நாளான நேற்று முன்தினம் மும்பையில் பல்வேறு நிகழ்ச்சிகளில்
கலந்து கொண்டார்.இரவில் தாஜ் ஓட்டலில் தங்கிய அவர், நேற்று காலை 9.50
மணிக்கு தன் மனைவி மிச்சேலுடன், ஓட்டல் அருகே கொலபா பகுதியில் உள்ள, "ஹோலி
நேம்' உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றனர். அங்கு மெழுகுவத்தி ஏற்றி வைத்த
அவர், பள்ளி மாணவ, மாணவியருடன் கைகுலுக்கினார். பாரம்பரிய உடையணிந்து
அவர்களுக்கு வரவேற்பு அளித்த, பள்ளி மாணவர்கள், மொபைல் போன் மூலம் ஒபாமா
தம்பதியை படங்களும் பிடித்தனர். பின்னர் பள்ளி மாணவ, மாணவியரின் கலை
நிகழ்ச்சி நடந்தது. இதில், மாணவ, மாணவியர் பாரம்பரிய தியா நடனமாடினர்.இந்த
நடன நிகழ்ச்சியை ஒபாமாவும், அவரின் மனைவியும் மிகுந்த உற்சாகத்துடன்
ரசித்தனர்.
முதல் நடன நிகழ்ச்சி முடிந்ததும், இரண்டாவதாக மகாராஷ்டிர கோலி
பாடலுக்கு மாணவ, மாணவியர் ஆடினர். அப்போது, மாணவ, மாணவியிரில் சிலர்
ஒபாமாவையும், அவரின் மனைவியையும் தங்களுடன் வந்து ஆடும்படி
அழைத்தனர்.இதில், மிகுந்த உற்சாகமடைந்த மிச்சேல், உடன் எழுந்து சென்று
அவர்களுடன் ஆடினார். பின்னர் ஒபாமாவும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்.
இதனால், நிகழ்ச்சி நடந்த அறையில் இருந்தவர்கள் இடையே பலத்த கரவொலி
எழுந்தது.பள்ளிக் குழந்தைகளுடன் போட்டோ எடுத்துக் கொண்ட ஒபாமா தம்பதியர்,
அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தனர்.வெள்ளைநிற சட்டை மற்றும்
கறுப்பு நிற பேண்ட் அணிந்திருந்த 45 வயதான அதிபர் ஒபாமா, சட்டையின் கை
பகுதியை மடித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.ஆசிரியர்களும் அவர்களிடம்
ஆட்டோகிராப் வாங்கினர். ஒபாமாவும், அவரின் மனைவியும் நடன நிகழ்ச்சியை
பார்த்த அரங்கம், மிக பிரமாதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவர் கூறுகையில்,
""எங்களின் நடனத்தை ஒபாமா மிகவும் ரசித்தார். அது மிக நேர்த்தியாகவும்,
இனிமையாகவும், அழகாகவும் இருந்தது. அவர் எங்களுடன் நடனமாடினார். கோலி
நடனம் மட்டுமின்றி, தியா நடனமும் ஆடினார்,'' என்றார்.பின்னர் செயின்ட்
சேவியர்ஸ் கல்லூரிக்கு சென்ற ஒபாமா தம்பதியர், அங்கு பல்வேறு கல்லூரிகளின்
மாணவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ஹுமாயூன் நினைவிடத்தை பார்வையிட்டார் ஒபாமா : மும்பையிலிருந்து
நேற்று டில்லி வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, தெற்கு டில்லியில் உள்ள முகலாய
மன்னர் ஹுமாயூன் நினைவிடத்துக்கு, தனது மனைவி மிச்சேலுடன் சென்றார். இந்த
நினைவிடம் 450 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. மன்னர் ஹுமாயூன்
இறந்தவுடன், அவரது நினைவாக அவரது மனைவி உத்தரவுப்படி கட்டப்பட்டது.இந்த
நினைவிடத்துக்கு தான், அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று சென்றார். தொல்பொருள்
துறை, ஆராய்ச்சித் துறை அதிகாரிகள், ஒபாமாவுக்கும், அவரது மனைவிக்கும்,
ஹுமாயூன் பற்றியும், அந்த நினைவிடம் உருவானது குறித்த வரலாற்றையும்
விளக்கிக் கூறினர். அங்கு அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் வலம் வந்த ஒபாமா,
நினைவிடத்தின் அழகை ரசித்தார்.இதன்பின், நினைவிடத்தில் பணிபுரியும்
தொழிலாளர்களின் குழந்தைகளுடன் ஒபாமாவும், அவரது மனைவியும் சிறிது நேரம்
பேசினர்.
அந்த குழந்தைகளுக்கு பரிசுகளையும் வழங்கினர்.ஹுமாயூன் நினைவிடத்துக்கு
சென்ற முதல் அமெரிக்க அதிபர் ஒபாமா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒபாமாவின் டில்லி வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக பல
இடங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. நகரமே கோட்டை போல
காணப்பட்டது.
ஒபாமாவை வரவேற்றார் மன்மோகன் : மும்பையிலிருந்து டில்லி வந்த
அமெரிக்க அதிபர் ஒபாமாவை, பிரதமர் மன்மோகன் சிங், பாலம் விமானப் படைத்
தளத்திற்கு சென்று வரவேற்றார்.இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள
அமெரிக்க அதிபர் ஒபாமா, நேற்று மாலை மும்பையிலிருந்து டில்லி வந்தார்.
ஒபாமாவும், அவரது மனைவி மிச்சேலும் கைகளை அசைத்தபடியே, உற்சாகமாக
விமானத்தில் இருந்து இறங்கி வந்தனர்.பிரதமர் மன்மோகன் சிங், விமான
நிலையத்திற்கு நேரடியாக வந்து ஒபாமாவை வரவேற்றார். பிரதமரின் மனைவி
குர்சரண் கவுரும் உடன் வந்தார். விமானத்தை விட்டு இறங்கிய ஒபாமா, பிரதமர்
மன்மோகன் சிங்குடன் கை குலுக்கி, அவரை கட்டித் தழுவிக் கொண்டார்.
தம்பதியர் இருவரும் சில நிமிடங்கள் நலம் விசாரித்து, பேசிக் கொண்டனர்.
ஒபாமாவுக்கு இந்திய அதிகாரிகளை பிரதமர் மன்மோகன் சிங் அறிமுகப்படுத்தி
வைத்தார். மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், வெளியுறவு செயலர் நிருபமா
ராவ், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா சங்கர் ஆகியோரும் ஒபாமாவை
வரவேற்றனர்.இந்தியாவை பொறுத்தவரை, பிரதமர் பதவி வகிப்பவர், வெளிநாட்டு
தலைவர்களை விமான நிலையத்துக்கு நேரடியாக வந்து வரவேற்பது இல்லை என்ற மரபு
பின்பற்றப்படுகிறது. இருந்தாலும், மரபுகளை உடைத்தெறிந்துவிட்டு, பிரதமர்
மன்மோகன் நேற்று ஒபாமாவை வரவேற்றார்.இதற்கு முன் கடந்த 2006ல் அப்போதைய
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இந்தியா வந்திருந்தபோதும், சவுதி அரேபிய
மன்னர் அப்துல்லா வந்தபோதும், பிரதமர் மன்மோகன் சிங், விமான நிலையத்துக்கு
நேரடியாகச் சென்று அவர்களை வரவேற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.
ஒபாமாவுக்கு மன்மோகன் விருந்து :25 நிமிடம் இருவரும் தனியாக பேச்சு :
அமெரிக்க அதிபர் ஒபாமாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் நேற்றிரவு
விருந்தின் போது, சாதாரண முறையில் சந்தித்துப் பேசினர். இருவருக்கும்
இடையேயான முறையான சந்திப்பு மற்றும் பேச்சு வார்த்தை இன்று
நடக்கிறது.டில்லி வந்துள்ள அதிபர் ஒபாமாவுக்கும், அவரது மனைவி
மிச்சேலுக்கும் பிரதமர் மன்மோகன் சிங் நேற்றிரவு தனது இல்லத்தில் விருந்து
அளித்தார். இந்த தனிப்பட்ட விருந்து நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னதாக,
அதிபர் ஒபாமாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் 25 நிமிடங்கள் தனியாக
பேசினர். அப்போது, இரு தரப்பு உறவுகள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து
அவர்கள் விவாதித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இரு
தலைவர்களுக்கும் இடையேயான திட்டமிட்ட பேச்சு வார்த்தை இன்று நடக்கிறது.
அப்போது பொருளாதாரம், பாதுகாப்பு, விவசாயம், அறிவியல் மற்றும்
தொழில்நுட்பத் துறைகளில் இரு நாடுகள் இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது உட்பட
பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
இந்த பேச்சுவார்த்தைக்குப் பின், அமெரிக்க - இந்திய அரசு தரப்பில்
கூட்டறிக்கை வெளியிடப்படும். இதற்கிடையில், டில்லியில் ஒபாமா தம்பதியர்
தங்கவுள்ள ஐடிசி மவுரியா ஓட்டலில், நேற்று அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு
அளிக்கப்பட்டது. மணமகள் போல உடையணிந்த இரண்டு பெண்கள் அவர்களை வரவேற்றனர்.
அந்தப் பெண்களில் ஒருவர் லெகங்கா சேலையும், மற்றொருவர் பெங்காலி சேலையும்
அணிந்திருந்தனர். அந்த வரவேற்பை ஒபாமா தம்பதியர் ரசித்ததாக ஓட்டல்
அதிகாரிகள் கூறினர்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum