TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


காலை உணவுத் திட்டம்!

Go down

காலை உணவுத் திட்டம்! Empty காலை உணவுத் திட்டம்!

Post by மாலதி Wed Sep 15, 2010 6:34 am


காலை உணவுத் திட்டம்! Editinside





ரசின்
உணவுக் கிடங்குகளில் வீணாகும் உணவு தானியங்களை ஏழை மக்களுக்கு விநியோகிக்க
வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க
தீர்ப்புக்குப் பின்னர் - 25 லட்சம் டன் தானியங்களை மத்திய அரசு மானிய
விலையில் ஏழைகளுக்கு விநியோகிக்க முடிவெடுத்த பின்னர் - வீணாகும்
தானியங்கள்பற்றி நாம் இன்னும் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆண்டுதோறும்
அறுவடைக்குப் பிந்தைய ரூ. 70 ஆயிரம் கோடி மதிப்புள்ள உற்பத்திப் பொருள்களை
இந்தியா வீணடித்துக்கொண்டிருக்கிறது.
உலக வங்கியின் கணக்குப்படி,
உலகின் எடைகுறைவான குழந்தைகளில் 49 சதவீதத்தினர்; ஊட்டச்சத்துக் குறைவால்
வளர்ச்சி தடைப்பட்டுள்ள குழந்தைகளில் 34 சதவீதத்தினர்; அடிக்கடி
நோய்வாய்ப்படும் குழந்தைகளில் 46 சதவீதத்தினர் இந்தியக் குழந்தைகளாக
இருக்கிறார்கள். உலகப் பட்டினிக் குறியீட்டில் இடம்பெற்றுள்ள 88 நாடுகளில்
இந்தியா 66}வது இடத்தில் இருக்கிறது.
கசக்கக்கூடிய ஓர் உண்மை
என்னவென்றால், பட்டினியின் அடையாளமாக நாம் பார்க்கும் பல ஆப்பிரிக்க
நாடுகளைவிடவும் மோசமான நிலையில் இருக்கிறது நம்முடைய பல மாநிலங்களின்
நிலை. இன்னமும் வறுமையும் பசியும் கோடிக்கணக்கான இந்தியக் குழந்தைகளை
பள்ளிக்கூடங்களை நெருங்கவிடாமல் செய்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில்,
நாம் ஏன் நம் நாட்டின் பயன்படுத்தப்படாத - வீணாகும் தானியங்களை நம்முடைய
குழந்தைகளின் பசியைத் தீர்க்கப் பயன்படுத்தக்கூடாது?
பள்ளிச்
சிறார்களுக்கு மதிய உணவு வழங்குவதன் மூலம், உலகின் மிகப்பெரிய உணவு
வழங்கும் திட்டத்தை இந்தியாதான் செயல்படுத்தி வருகிறது. நம் நாட்டில்
ஏறத்தாழ 12 கோடி குழந்தைகள் அரசின் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் உணவு
பெறுகிறார்கள். நாட்டிலேயே தமிழகத்தில்தான் இத்திட்டத்தின் கீழ் சிறப்பான
உணவு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஒரு குழந்தைக்கான உணவுக்கு
இங்கு அரசின் ஒதுக்கீடு எவ்வளவு தெரியுமா? தினமும் 100 கிராம் அரிசி, 15
கிராம் பருப்பு, 1 கிராம் எண்ணெய், 20 பைசா காய்கறிகள், 8.5 பைசா மளிகைப்
பொருள்கள். தவிர, வாரம் 3 மூட்டைகள்; வாரத்தில் ஒரு நாள் 16 பைசா
உருளைக்கிழங்கு, 20 கிராம் பாசிப்பயறு அல்லது கொண்டைக்கடலை, இவ்வளவுதான்.
இத்தகைய
ஒதுக்கீட்டில் முறைகேடுகள் போக எஞ்சும் பொருள்களைக் கொண்டு சமைக்கப்படும்
உணவின் தரத்தையும் ருசியையும் விவரிக்கத் தேவையில்லை. ஆனாலும்,
இந்தியாவில் மதிய உணவுக்கு 12 கோடி குழந்தைகள் பள்ளிக்கூடங்களை
நம்பியிருக்கின்றனர் என்றால், இது அவர்களுடைய வறுமையையும் பசியையும் தவிர
வேறு எதைக் காட்டுகிறது? இந்நிலையில், ஏன் நாம் இந்தக் குழந்தைகளுக்கு
காலை உணவும் வழங்கக்கூடாது?
தமிழகம் இந்த விஷயத்தில் முன்மாதிரியாக
இருக்கலாம். ஏனெனில், தமிழகத்தில் ஏற்கெனவே இந்தத் திட்டம்
அறிமுகமாகிவிட்டது. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலமாக மதுரை சௌராஷ்டிர
மேல்நிலைப் பள்ளியில் "ராஷ்டிரபந்து' எல்.கே. துளசிராமின்
வழிகாட்டுதலின்படி மதுரையைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இருந்துவரும்
மாணவர்களின் நலன்கருதி இதுபோன்றதொரு உணவுத் திட்டம் அங்கே செயல்பட்டு
வருகிறது. இதைப் பார்த்துத்தான் காமராஜ், மதிய உணவுத் திட்டத்தை
அறிமுகப்படுத்தியதாகக் கூறுவார்கள். திருச்சியிலுள்ள கி.ஆ.பெ.விசுவநாதம்
பள்ளியில், அங்கு பணியாற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் கடந்த 10
ஆண்டுகளுக்கும் மேலாக காலையில் உணவு வழங்குகிறார்கள். மிக எளிய உணவு:
பொன்னி குறுநொய்க் கஞ்சி; புதினா துவையல். இதன் அடுத்த பரிணாமமாக,
ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த கல்வியாளர் எஸ். சிவக்குமாரின் முன்முயற்சியில்,
தனியார் பங்களிப்புடன் திருச்சி பகுதியில் ஏறத்தாழ 38 பள்ளிகளில்
இன்றைக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அவரவர் வசதிக்கேற்ப
உணவு வழங்குகிறார்கள்.
தமிழகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும்
பின்தங்கிய பகுதிகளில் ஒன்றான புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிழக்கு
கிராமத்திலுள்ள அரசுப் பள்ளித் தலைமையாசிரியர் ர. கருப்பையன் இன்னும்
ஒருபடி மேலே போய் நாட்டுக்கே வழிகாட்டுகிறார். தனியார் பங்களிப்புடன்
அவருடைய பள்ளியைச் சுற்றியுள்ள பகுதியில் விளையும் தானியங்களைக் கொண்டு
தயாரிக்கப்படும் கஞ்சியை தன் மாணவர்களுக்கு காலை உணவாக அளிக்கிறார்.
பள்ளியில் படிக்கும் ஊட்டச்சத்துக்குக் குறைவான குழந்தைகள் உடல்நலத்தில்
நல்ல மாற்றத்தை இந்த உணவு ஏற்படுத்தியிருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.
காலை
உணவு வழங்கப்படும் அனைத்துப் பள்ளிகளிலுமே மாணவர்கள் சேர்க்கை, வருகைப்
பதிவு அதிகரித்திருப்பதாகவும் வகுப்பில் மாணவர்கள் கூடுதல் கவனம்
செலுத்துவதாகவும் கற்கும் திறன் மேம்பட்டிருப்பதாகவும் ஆசிரியர்கள்
கூறுகின்றனர். இந்நிலையில் தமிழகம் ஏன் காலை உணவுத் திட்டத்திலும்
முன்னோடியாக இருக்கக் கூடாது?
சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளிக்
குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கி 1923-ம் ஆண்டிலேயே மதிய உணவு வழங்கும்
திட்டத்துக்கு அச்சாரம் இட்டுவிட்டது சென்னை மாகாண அரசு. ஆனாலும், தமிழகம்
முழுவதும் முறைப்படுத்தப்பட்ட, முழுமையான புரட்சித் திட்டமாக மதிய உணவுத்
திட்டத்தை அறிமுகப்படுத்தும் வாய்ப்பையும் வரலாற்றில் இடம்பெறும்
பேற்றையும் காலம் பின்னாளில் முன்னாள் முதல்வர் காமராஜுக்குத்தான்
வழங்கியது. அதேபோன்ற இன்னொரு வாய்ப்பை - காலை உணவுத் திட்டம் மூலம் -
காலம் இப்போது முதல்வர் கருணாநிதிக்கு வழங்குகிறது.
அரசின்
உணவுதானியக் கிடங்குகளில் அரிசியும் கோதுமையும் வீணாவதை, பள்ளிக்
குழந்தைகளுக்குக் காலை உணவு வழங்கி பயன்படுத்திக் கொண்டால் என்ன?
சத்துணவில் குழந்தைகளுக்கு அதிகப்படியாக உணவு வழங்கலாமே? இதன்மூலம்
பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கை அதிகரிப்பது மட்டுமல்ல, பாதியில்
படிப்பை நிறுத்துவதும் குறைக்கப்படுமே? ஊட்டச் சத்துள்ள உணவு ஆரோக்கியமான
அடுத்த தலைமுறை உருவாக வழிகோலுமே.
மத்திய அரசு என்பது காங்கிரஸ்
அரசல்ல. தி.மு.க.வும் பங்குபெற்றுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு.
முதல்வர் நினைத்தால் இந்தியாவுக்கே வழிகாட்ட ஒரு முன்மாதிரித் திட்டத்தைத்
தமிழகம் நிறைவேற்றிக் காட்ட முடியும்!
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் 2011
» பள்ளி மாணவர்களுக்கு சுடசுட காலை உணவு: மத்திய அரசு திட்டம்
» ஏழை மாணவர்களுக்கு காலை டிபன் ரெடி ; கோவை மாநகராட்சி பளீச் திட்டம் அறிவிப்பு
» ஜெயா தொலைக் காட்சியில் காலை மலர் நிகழ்ச்சியில் 9.82011 காலை 8.15 மணிக்கு கவிஞர் இரா .இரவி நேர்முகம் கண்டு மகிழுங்கள்
» இறுதி கட்டத்தில் "மெகா' குடிநீர் திட்டம் : விறுவிறுப்படையும் ஒகேனக்கல் குடிநீர் திட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum