TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இனிய ஈகைத்திருநாள் : ரம்ஜான் ஸ்பெஷல்

Go down

இனிய ஈகைத்திருநாள் : ரம்ஜான் ஸ்பெஷல் Empty இனிய ஈகைத்திருநாள் : ரம்ஜான் ஸ்பெஷல்

Post by ஜனனி Fri Sep 10, 2010 7:02 am

உலக முஸ்லிம்கள் அனைவரும், ரமலான் மாதத்தில் 30 நாளும் நோன்பிருந்து,
அந்த உன்னத வழிபாட்டின் நிறைவாகக் கொண்டாடுவது தான் ஈகைத் திருநாள் விழா!
அதற்கு ஏன் அந்தப் பெயர் வந்தது? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், ஒருவர்
வந்து, "இறைத்தூதர் அவர்களே, இஸ்லாம் என்றால் என்ன?' என்று வினவினார்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ஒரே வார்த்தையில் விடை அளித்தனர்.
"பசித்தவருக்கு உணவளிப்பது தான் இஸ்லாம்!' "அண்டை வீட்டுக்காரர் பசியோடு
இருக்க, தாம் மட்டும் வயிறார உண்பவர், இறை நம்பிக்கையாளர் அல்லர்' என்று,
அண்ணலார் ஓங்கி முழங்கினார்கள். இதே வழிகாட்டுதல் தான், ரம்ஜான்
மாதத்திலும் பளிச்சிடுகிறது.
"ஒரே ஒரு பேரீச்சம் பழத்தைக் கொடுத்தேனும் நரக நெருப்பிலிருந்து விடுதலை பெறுங்கள்!'
"ஒரு மிடறு பாலைக் கொண்டாவது நோன்பாளிக்கு நோன்பு திறக்க உதவுங்கள்!'
"இறை வழியில் தானதர்மங்களை வாரி வழங்குங்கள்!'
"வசதியுள்ளவர்கள்
தங்களின் செல்வத்திலிருந்து ஜகாத்தைக் கணக்கிட்டு ஏழைகளுக்குக் கொடுத்தே
ஆக வேண்டும்!' இவை போன்ற எண்ணற்ற கட்டளைகள், நபிமொழி நூல்களில் நிரம்பி
வழிகின்றன. பெருமானார் (ஸல்) அவர்களின் அதே கட்டளை தான், ஈகைத்
திருநாளிலும் செயல் வடிவம் பெறுகிறது.
எப்படி? பெருநாளன்று, யாரும் பசி பட்டினியோடு இருக்கக்கூடாது
என்று, இஸ்லாம் விதித்துள்ளது. அந்த மகிழ்ச்சியான நாளில், யாரும் நோன்பு
கூட இருக்கக் கூடாது என்று அண்ணலார் கட்டளை இட்டுள்ளார்கள். எல்லாம் சரி,
ஆனால் கஞ்சிக்கே வழியில்லாத, கதியற்ற மக்களுக்கு ஏது பெருநாளும்,
திருநாளும்? அரிசிச் சோற்றுக்கு அவர்கள் எங்கே போவர்? இங்கு தான்
இஸ்லாமியச் சட்டம் மிக அருமையாக செயல்படுகிறது. பணக்காரர்கள் மட்டுமல்ல,
ஓரளவு வசதியுள்ள நடுத்தர மக்கள் கூட, பெருநாளன்று சிறப்புத் தொழுகைக்குப்
போவதற்கு முன்பாக, "பித்ரா' எனும் பெருநாள் தர்மத்தைக் கட்டாயம் தர
வேண்டும் என்பது மார்க்கச் சட்டம். நாம் சாப்பிடுவதற்கு என்ன அரிசியைப்
பயன்படுத்துகிறோமோ, அதே தரத்தில் ஏறத்தாழ இரண்டரை கிலோ அரிசியை அல்லது
அதன் கிரயத்தை, ஏழைகளுக்கு பெருநாள் தர்மமாக வழங்கிட வேண்டும். உங்கள்
குடும்பத்தில் ஆறு பேர் இருப்பதாக வைத்து கொள்வோம். ஆறு பேருக்கும் தலா
இரண்டரை கிலோ அரிசி எனக் கணக்கிட்டு 15 கிலோ அரிசியை ஏழைகளுக்கு வழங்கிட
வேண்டும். ஏழைகள், பணக்காரர்கள் பேதமின்றி இந்த ரம்ஜான் பண்டிகையை
கொண்டாடி மகிழ்வோம்.
இருவர் அல்ல... மூவர்...! ""ஒன்றே குலம், ஒருவனே தேவன்!'' நபிப்
பட்டம் பெற்ற பிறகு அண்ணல் முஹம்மது, மக்கா நகரில் இதை தான் உபதேசித்து
வந்தார். சிலை வணக்கமுடைய மக்கா நகர, "குறைஷி' மக்கள் கொதித்து எழுந்தனர்.
நபியை விட்டு வைப்பது ஆபத்து என்று நினைத்தனர். அவர்களுடைய சன்மார்க்கப்
பிரசாரத்தை தடுத்து நிறுத்த வேண்டுமானால், கொலை செய்வதை தவிர, வேறு
வழியில்லை என்ற முடிவில், சதித்திட்டம் வகுத்தனர்.
இறைவனும் திட்டம் வகுத்தான்! மக்கா நகரிலிருந்து மதீனா நகருக்கு நபிகள்
நாயகம் புறப்பட்டு செல்ல, இறைவனின் ஆணை கிடைத்தது. இரவு நேரம், நபிகளார்
தப்பிச் செல்லாத படி பார்த்து கொள்ள, உருவிய வாட்களுடன் குறைஷி வீரர்கள்,
இல்லத்தைச் சூழ்ந்து கொண்டிருந்தனர். ஆனால், அவர்களின் கண்ணில் படாதபடி,
நபிமணி வெளியேறி, நண்பர் அபூபக்கரையும் அழைத்துக் கொண்டு, மக்காவை விட்டு
புறப்பட்டார். நபிமணியும், அபூபக்கரும் மக்காவிலிருந்து மூன்று கல்
தூரத்திலுள்ள, "தவுர்' எனும் மலைக்குகையில் ஒளிந்து கொண்டனர். எதிரிகள்
அந்த இடத்திற்கு குதிரைகளில் வந்து சேர்ந்து விட்டனர். குகையில் இருந்த
அபூபக்கருக்கு குலை நடுக்கம். எதிரிகளின் பேச்சும், நடமாட்ட ஓசையும்
அவருக்கு பீதியை ஏற்றுகின்றது.
""நாயகமே! நம்மை தேடி வந்திருப்பவர்களோ பலர். ஆனால், இங்கே நாம் இருவர்
மட்டுமே இருக்கிறோம். யாராவது ஒருவன், குகையை எட்டிப் பார்த்தால் போதும்.
நாம் பிடிபட்டு விடுவோம். நம்மை காப்பாற்ற யார் இருக்கின்றனர்?'' என்று
அபூபக்கர் முறையிட்டார். ""நீங்கள் சொல்வது தவறு. நாம் இருவர்
மட்டுமல்ல... மூவர்...! அஞ்சாதீர்கள்... அல்லாவும் நம்முடன்
இருக்கிறான்...!'' என்று அபய மொழி கூறினார் நபிகள் நாயகம். அந்த
சமயத்தில், மலைக்குகை நுழைவாசலில் வியப்பான காட்சிகள்... முழு வாசலையும்
மூடும் விதத்தில், ஒரு பெரிய சிலந்தி வலை ஏற்பட்டிருக்கிறது. மலை
அடிவாரத்திலுள்ள ஒரு மரத்தின் பெரிய கிளை, நுழைவாயில் பக்கம்
தாழ்ந்திருக்கிறது. அங்கே காட்டு புறா, முட்டையிட்டு அடை காக்கிறது. குகை
அருகே வந்த கொலை வெறியர்களில் ஒருவன், "உள்ளே நுழைந்து பார்க்கலாமே...'
என்கிறான். ""அதற்கு அவசியம் இல்லை. எப்பொழுதோ பின்னப்பட்ட சிலந்தி வலை
இதோ இருக்கிறது. ஆகவே, சமீப காலத்தில் உள்ளே யாரும் சென்றிருக்க சாத்தியம்
இல்லை...'' என்கிறான் மற்றொருவன்.
குதிரைகளிலும், ஒட்டகங்களிலும் அங்கு வந்த எதிரிகள், அந்த இடத்தை
விட்டுத் திரும்பி விடுகின்றனர். அபூபக்கர் நிம்மதி பெருமூச்சு
விடுகிறார். "எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே!' என்று நன்றி சொல்கிறார்
நபிகள் நாயகம். மூன்று நாட்கள் வரை இருவரும், அந்த மலைக்குகையில் இருந்து
விட்டு, மதீனாவை நோக்கி பயணமாகின்றனர். ""அஞ்சாதீர்கள், ஆண்டவன் நம்முடன்
இருக்கிறான்!'' என்பது இன்றளவும் மந்திரச் சொல்லாக ஒலித்துக்
கொண்டிருக்கிறது. ""ஆபத்து நேரே தலையை நோக்கி வரும் போது, "கடவுள் துணை
செய்வார், எனக்கு பயமில்லை!' என்று சொல்வோன், உண்மையான தெய்வ பக்தன்.
கலங்காத நெஞ்சுடைய ஞானதீரமும், அழியாத நம்பிக்கையும் முஹம்மது நபியிடத்தே
இருந்தன. ஆதலால், அவருக்கு எடுத்த காரியம் யாவினும் வெற்றி, எங்கும்
வெற்றி, எதிலும் வெற்றி... வேண்டும் முன்னர் அருளினர் அல்லா,'' என்று
இச்சம்பவத்தை போற்றுகிறார் பாரதியார்.
இன்னொரு நிகழ்ச்சி: மதீனா நகர பள்ளிவாசலில் நபிமணி அமர்ந்து,
நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். ""இன்றைக்கு உங்களில் யாராவது
நோன்பு நோற்றிருக்கிறீர்களா?'' என்று வினவினார். ""ஆமாம்... நான் நோன்பு
வைத்திருக்கிறேன்'' என்றார் ஒரு தோழர். ""சரி... உங்களில் யாரேனும்
இன்றைக்கு, இறந்தவர்களை நல்லடக்கம் செய்வதற்காக சென்று வந்தீர்களா?''
என்று இரண்டாவது கேள்வியைத் தொடுத்தார். ""ஆம்... நாயகமே... நான் ஒரு
நல்லடக்கச் சடங்கில் கலந்து கொண்டேன் இன்றைக்கு...'' என்று பதிலளித்தார்,
அதே தோழர். ""சரி... பசித்து வந்தவர்களுக்கு உணவளித்து உதவியவர்கள்,
உங்களில் யாரேனும் உண்டா?'' நபிகள் நாயகத்தின் இந்த கேள்விக்கும், அந்த
நண்பர் ஆதரவான பதிலை தந்தார். ""ஆம்... நாயகமே... நான் அவ்வாறு
செய்தேன்!'' என்றார் அதே நண்பர். ""இந்த நான்கு நற்செயல்களையும் ஒரே
நாளில் செய்தவர், நிச்சயமாக சுவர்க்கம் செல்வார்...'' என்று நபிமணி
கூறினார். அந்த பெருமைக்குரிய நபி தோழர் தான் அபூபக்கர்.
நபி பெருமான் தோன்றிய மக்கா நகர குறைஷி குலத்தில் பிறந்து,
இளமையிலிருந்தே முஹம்மதுவிடம் அன்பும், நட்பும் கொண்டிருந்தவர் அபூபக்கர்.
ஒருமுறை வர்த்தக நிமித்தம், ஏமன் நாட்டுக்கு சென்று திரும்பிய
அபூபக்கரிடம், ""உங்கள் நண்பர் முஹம்மது, தம்மை நபி என்று சொல்லி புதிய
மார்க்கத்தை உபதேசித்து வருகிறாரே, தெரியுமா உங்களுக்கு?'' என்று மக்கா
நகரவாசிகள் கேட்டனர். உடனடியாக நபிகளாரிடம் சென்று, உண்மையை கேட்டறிந்து,
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் அபூபக்கர். ""அபூபக்கரே! நீர் தவுர்
மலைக்குகையில் என்னுடன் கூட்டாளியாக இருந்தீர்... மறுமை சுவனப்
பெருவாழ்விலும் நீர் என் கூட்டாளியாக இருப்பீர்...!'' என்று நபிமணியால்
புகழப்பட்டவர் அபூபக்கர்.
-ஜே.எம்.சாலி
பெருநாளும் முஹம்மது ரபியும்: மாபெரும் பாடகர் முஹம்மது ரபி,
இறை அச்சம் (தக்வா) மிகுந்தவர். அனைவரிடத்திலும் அன்பையும், பல
உதவிகளையும் செய்தவர். தர்ம குணம் படைத்தவர். "அல்லாஹ்வின் நண்பர்,
முஹம்மது ரபி' என, பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் பாராட்டி
புகழ்ந்துள்ளார். கடந்த 40 ஆண்டுகள், திரையுலகில் தனக்கு வேறு யாரும்
இணையில்லாத அளவிற்கு மிக உயரிய நிலையில் இருந்தாலும், எல்லாம் அல்லாஹ்வின்
அருள் என அடக்கத்துடன் எளிமையாக வாழ்ந்தவர். யார் எந்த உதவி நாடி அவரது
இல்லத்திற்கு சென்றாலும், அனைவரையும் ஆதரவளித்து கருணை உள்ளத்துடன்
உதவுவார். உண்மையான தேசபக்தர், மக்கள் நேசம் மிகுந்தவர், தேசிய பாடல்கள்
பல பாடியவர். அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு, முஹம்மது ரபிக்கு ஆயுள் கால
வருமான வரி விலக்கு அளித்து கவுரவித்தார். மதநல்லிணக்கத்திற்கு
முன்னோடியாக திகழ்ந்தார்.
ஜூலை 31, 1980ல் மாரடைப்பால் முஹம்மது ரபி காலமானார். ரமலான் மாதம்
17ம் நோன்பு இருந்த நிலையிலேயே, அல்லாஹ்விடம் சேர்ந்தார். தன் வாழ்நாள்
முழுவதும் பரிசுத்தமாக வாழ்ந்தவர். மது, மாது போன்ற எந்த தீய பழக்கம்
இல்லாதவர். சமாதி வழிபாட்டை (தர்கா) இவர் முழுக்க எதிர்த்தவர்.
அல்லாஹ்விடம் நேரடி தொடர்புள்ளவர் முஹம்மது ரபி. இறைவனுக்கு இணை
வைக்கவில்லை. அதனால் இறைவனும், அவருக்கு இணையாக இன்னொரு பாடகரை
உருவாக்கவில்லை. அவருடைய வீட்டில் ஒரு பகுதி பொது மக்களுக்காக மசூதியாக
இருக்க வேண்டும் என்ற அவரது ஆசையை, அவருடைய மகள் நஸ்ரின் நிறைவேற்றினார்.
கடைசியாக, பிரபல இந்தி நடிகர் தர்மேந்திராவுக்காக, "ஆஸ்பாஸ்' என்ற
படத்திற்கு பாடினார். 1972ல், மெக்கா ஹஜ் பயணம் மேற்கொண்டவர். அங்கேயே
இருந்து 1973ல், அன்றைய ஹஜ் நிறைவேற்றிய முதல் முஸ்ஸிம் என்ற சிறப்பு
உலகத்திலேயே அல்லாஹ் அவருக்கு அளித்தான்.
-முஹம்மத் அன்வார் (ஆதாரம்: இஸ்லாமிய கலைக் களஞ்சியம்)
ரம்ஜானின் சிறப்புக்கள்: ரம்ஜான் மாதம் என்றால், வெறும் நோன்பு
வைப்பது மற்றும் ஜகாத் கொடுப்பது என்று பலரும் நினைக்கின்றனர். அது
மட்டுமல்ல, அதை மீறிய பல வணக்க வழிபாடுகள், மிக முக்கியமானவையாக உள்ளன.
அதில் குறிப்பிடத்தக்கது, "இஹ்திகாப்' எனும் செயல். "இஹ்திகாப்' என்றால்,
மசூதியில் தங்குவது; இது ஒரு நபி வழி கன்னத். "இறைவனுக்காக, "இஹ்திகாப்'
இருக்கிறேன் நபி (ஸல்) முறைப்படி' என்று எண்ணி, மசூதியில் தங்க வேண்டும்.
வீண் பேச்சு பேசக் கூடாது; மசூதியை விட்டு அவசிய தேவை தவிர, மற்றவைக்காக
வெளியே வரக் கூடாது. தொழுகை, குர்-ஆன் ஓதுதல், ஜிகிர் செய்தல் என, பொழுதை
நல்ல வழியில் செலுத்த வேண்டும். "இஹ்திகாப்' இருப்பது ஒரு உயர்ந்த
நற்செயல். அச்சமயத்தில் நாம் இறைவனிடத்தில் கேட்கும் பிரார்த்தனைகள், உடனே
நிறைவேறும். இதை நான் கண்கூடாக அனுபவித்து இருக்கிறேன்.
ரம்ஜான் மாதத்தில் 20வது நோன்பில், "இஹ்திகாப்' இருக்க உட்கார்ந்தால்,
பெருநாள் பிறை பார்த்த பிறகு தான், மசூதியை விட்டு வெளியேற வேண்டும். ஒரு
நாள், இரு நாள் கூட சிலர், "இஹ்திகாப்' இருப்பர். அதுவும் கூடும்; தவறு
அல்ல. அவரவர் வசதிக்கேற்ப இருக்கலாம். ஆனால், நோன்பின் கடைசி 10 நாள்
முழுக்க இருக்கும் நோக்கம், உயரிய அந்த "லைலத்துல் கதர்' எனும் சிறப்பான
இரவை அடைந்து விட வேண்டும் என்பதே, அந்த ஒரு இரவின் வழிபாடுகள்,
பிரார்த்தனைகள், நற்செயல்கள், ஆயிரம் இரவுகளுக்கான வழிபாட்டுக்களை விட
மேலானது. முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் ஒரு நபராவது,
கட்டாயமாக அந்த பகுதியில் இருக்கும் மசூதியில், "இஹ்திகாப்' இருக்க
வேண்டும். கூடுதலாகவும் இருக்கலாம்; ஒருவர் கூட, "இஹ்திகாப்' இருக்கவில்லை
என்றால், அந்த சுமை அனைவர் மீதும் உண்டு. இறைவன், நம் அனைவருக்கும்,
"இஹ்திகாப்' இருக்கும் பாக்கியத்தை தருவானாக, ஆமின். இறைவன் நமக்கு,
"லைலத்துல் கதர்' இரவை அடைய வழி செய்வானாக, ஆமின்.
-முஹம்மத் ரியாஸ்
பிறை பாத்தாச்சு...: இன்று கடைசி நோன்பு. இப்தியார் செய்து,
(நோன்பு திறந்து) மக்ரிப் தொழுகை முடிந்து, மசூதியில் மக்கள் கூட்டம்
கூட்டமாக கூடினர். வானில் பிறை தெரிகிறதா என பார்க்கும் ஆவல். எங்கள்
வீட்டு மொட்டை மாடியிலும் பெண்களும், குழந்தைகளும் ஆசையுடன் பிறையை தேடி
வானை பார்த்தனர். திடீரென எங்கும் உற்சாக கும்மாளம்... ஆரவாரம்...
மகிழ்ச்சியில் முகங்கள் மலர்ந்தன. "பிறை பார்த்தாச்சு... பிறை
பாத்தாச்சு...' என்று ஆனந்த குரல்கள். ஆம்... விடிந்தால், ஈகைப் பெருநாள்
எனும் ரம்ஜான் பண்டிகை. அச்சமயம் பார்த்து, என்னை தேடி நண்பர் நாராயணன்
வந்தார். "பண்டிகைக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்' என்றார். நான் அதை
மனப்பூர்வமாக ஏற்று, அவருடன் கை குலுக்கினேன்.
எதிரே உட்கார்ந்தபடி, "எனக்கு ஒரு சந்தேகம்... இது என்ன பண்டிகை? ஏன்
கொண்டாடுகின்றனர்? ரொம்ப நாளாக கேட்கணும் நினைத்தேன்... தயக்கமாக
இருந்தது...' என்றார் நாராயணன். நான் அவரை பார்த்து புன்னகைத்தேன். "இதில்
என்ன தயக்கம்? மாற்று மத சகோதரர்களுக்கு நம் பண்டிகைகள் பற்றி தெரிவது
நல்ல விஷயம் தானே' என ஆரம்பித்து தொடர்ந்தேன். உலக முஸ்லிம்கள்
அனைவருக்கும், இரண்டு பண்டிகைகள் தான். ஒன்று: ரம்ஜான், இன்னொன்று:
பக்ரீத் எனும் தியாகத் திருநாள். இந்த ரம்ஜான் பண்டிகை, ரம்ஜான் மாதம்
முழுக்க நோன்பு வைத்த பிறகு, நோன்பு முடியும் கடைசி நாளின் மறுநாள்
கொண்டாடப்படுகிறது. "இதை, "ஈகை பெருநாள்' என்றும் அழைப்பர். ஏனெனில்,
இல்லாதவர்க்கு இயன்றதை செய்வோம் எனும் உன்னத லட்சியத்தை கொண்ட இஸ்லாம்,
அதை முழுக்க முழுக்க நடைமுறைப்படுத்துவது, ரம்ஜான் மாதத்தில் தான். "இந்த
நோன்பு காலத்தில் தான், செல்வந்தர்களின் செல்வங்கள் மீது 2.5 சதவீதம்,
"ஜகாத் வரி' கடமையாக்கப்பட்டிருக்கிறது. அதை அவர்கள் தங்கள் உறவினர்கள்,
நண்பர்கள், ஏன் அறிமுகமில்லாதவர்களில் கூட வசதியில்லாமல் இருப்பவர்களுக்கு
உதவி செய்ய பயன்படுத்துவர்...' என்றேன்.
நாராயணனின் முகத்தில் திருப்தி என்றாலும், லேசான சங்கடம் தெரிந்தது.
நெளிந்த படியே, "இருந்தாலும் இன்னும் நிறைய முஸ்லிம்கள் ஏழைகளாகவே
இருக்கின்றனர்?' என்றார். "நல்ல கேள்வி... அவர்கள் அப்படியே இருக்க
வேண்டும். வருஷா வருஷம் ஜகாத் வாங்கும் நிலையில் இருக்க வேண்டும் என்று,
சில இஸ்லாத்தை அறியாதவர்களால் ஏற்பட்ட கேடு இது. "ஒருவனுக்கு ஜகாத் மூலம்
உதவி செய்தால், அடுத்த ஆண்டு, அவன் வாங்கும் நிலையில் இருக்கக் கூடாது.
அதற்கடுத்த ஆண்டு, மற்றவர்களுக்கு ஜகாத் கொடுக்கும் அளவிற்கு அவன் நிலை
வளர வேண்டும். இது தான் இஸ்லாம் கூறும் உண்மையான சமத்துவம். இன்ஷா அல்லாஹ்
அந்த காலமும் கூடிய விரைவில் வரும்' என்றேன்.
நோன்பின் நோக்கம் என்ன? "காலையிலிருந்து மாலை வரை பசித்திருப்பது,
ஏழையின் பசியை உணர்வதற்கு தான் ஏழை எப்போதும் பசியிலேயே இருக்கிறான்.
ஆனால், இறைவனுக்காக நோன்பு வைப்பது என்பது, அவனுக்கு கூடுதல் ஆன்மபலம்.
பணக்காரர்கள் பசித்திருப்பது தான் சிறப்பு. அவர்கள் இந்த நோன்பின்
மேன்மையை உணர்ந்து விட்டால், "பசி' என்ற வார்த்தையே உலகில் இருக்காது.
"ஒருவர் நோன்பு வைக்கிறார். அந்நிலையில் வெளியே செல்கிறார். அவருக்கு
கடுமையான பசியும், தாகமும் ஏற்படுகிறது. தாங்க முடியாத களைப்பும்
உருவாகிறது. அவர் நினைத்தால் எதுவும் சாப்பிடலாம் அல்லது கொஞ்சம்
தண்ணீராவது குடிக்கலாம். ஆனால், அப்படி செய்வதில்லை. "ஏனென்றால், இறைவன்
தன்னை பார்த்து கொண்டிருக்கிறார் என்ற இறையச்சம் (தக்வா)! இந்த உணர்வு
எல்லா நிலையிலும், ஒவ்வொரு காலகட்டத்திலும் முஸ்லிம்களுக்கு வந்து
விட்டால், அவர்கள் நிச்சயமாக மாற்றத்திற்கும், முன்னேற்றத்திற்கும் உரிய
சமுதாயமாக மாறி விடுவர். உலக மக்கள் அனைவருக்கும், முன் மாதிரியான
சமுதாயமாக ஒருநாள் மாறுவர்...' என்றேன். "நிச்சயமாக அப்படி ஒரு மாற்றம்
வரும்...' என்ற நாராயணன், "உங்களுக்கு ஈத் முபாரக்...' என்று கூறி விடை
பெற்றார். அனைவருக்கும், பெருநாள் வாழ்த்துக்கள்!
- எம்.அப்துல் ரஹீம்dinamalar
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ரம்ஜான் ஹிந்துக்களின் கருப்பு தினம் :எதற்காக ஹிந்துக்கள் வாழ்த்து சொல்கிறீர்கள் என்று யோசிக்கவும்...
» ரம்ஜான் ஸ்பெஷலாக வருகிறது விஸ்வரூபம்
» இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்
» அனைவருக்கும் சிந்தனை களத்தின் சார்பாக ரம்ஜான் வாழ்த்துக்கள்
» மெகந் தீ - இது வதந் தீ ; பெண்கள் அச்சம் ; ரம்ஜான் நாளில் பொய் தகவல் பரபரப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum