TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 05, 2024 7:48 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பிழை கண்டுபிடிப்போர்க்கு நூல் பரிசென அறிவித்தவர்!

3 posters

Go down

பிழை கண்டுபிடிப்போர்க்கு நூல் பரிசென அறிவித்தவர்!  Empty பிழை கண்டுபிடிப்போர்க்கு நூல் பரிசென அறிவித்தவர்!

Post by தமிழநம்பி Sun Jul 04, 2010 10:49 pm


பிழை கண்டுபிடிப்போர்க்கு நூல் பரிசென அறிவித்தவர்!


பண்டைய கழக(சங்க)த் தமிழ்நூல்கள் பலவற்றைப் பெருமுயற்சியில் தேடிக் கண்டுபிடித்தவர்; ஏடுகள் செல்லரித்து அழிந்து போகாது மீட்டெடுத்துக் காத்தவர்; பிறகு அவற்றை ஒப்பிட்டுப் பார்த்துத் தேர்ந்து அச்சிட்டு அளித்தவர்.- இவ்வாறு, தமிழ் இலக்கியங்களையும் நூல்களையும் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பதிப்பித்த முன்னோடியான அந்த அறிஞரே, தாம் பதிப்பித்த நூல்களில் பிழைகள் கண்டுபிடிப்போர்க்கு நூல் பரிசளிப்பதாக அறிவித்தவர்

தமிழாசிரியராக, கல்லூரிப் பேராசிரியராக, கணக்காயராக, தமிழ் இதழாசிரியராக, வழக்கறிஞராக, நயனகராக (அறமன்றத் தலைவராக)ப் பணியாற்றியவர். தொல்காப்பிய ஆசான், பதிப்புச் செம்மல், செந்தமிழ்ச் செம்மல் என்று அறிஞர்களால் பாராட்டப் பட்டவர். ஆங்கல அரசால் இராவ்பகதூர் பட்டம் அளித்துச் சிறப்பிக்கப்பட்டவர்.

தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் வல்லவராயிருந்தவராகிய அவர்தாம், அரிய தமிழ்த்தொண்டு செய்து தமிழ் வளர்த்த தாமோதரம் ஆவார். அவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுப்பிட்டி என்ற ஊரில் பிறந்தவர். அவர் தந்தையின் பெயர் வைரவநாதர் என்பதாகும். எனவே அந்த அறிஞரின் பெயரைச் சி.வை.தாமோதரம் என்றனர்.

இவர் பதிப்பித்த நூல்களாவன :

1. தம் 20ஆம் அகவையில் 1852இல் நீதிநெறி விளக்கம்
2. 1868இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரையுடன்
3. 1881இல் வீரசோழியம்
4. 1883இல் தணிகைப் புராணம்
5. 1883இல் இறையனார் களவியலுரை
6. 1885இல் தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரையுடன்
7. 1887இல் கலித்தொகை
8. 1889இல் இலக்கண விளக்கம்
9. 1889இல் சூளாமணி
10. 1891இல் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரையுடன்
11. 1892இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரையுடன்

தாமோதரம் ஐயா, பண்டைத்தமிழ் நூல்களை ஆய்வு செய்துப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, தமது பதிப்புகளில் தவறுகள் காணப்படின் அவற்றைத் தமக்கு அறிவித்துதவும்படி அறிஞர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதழ்கள் வாயிலாக விடுத்த அவ் வேண்டுகோளில், பிழைகளை எழுதி அனுப்பினால், எழுதினோர் பெயர்களோடு அவை வெளியிடப் படுமென்றும் 50 பிழைகளைக் காட்டுவோர்க்கு ஒரு நூல் அன்பளிப்பாகக் கொடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். இச்செயல், அவருடைய பதிப்புகள் பிழையின்றி வரவேண்டும் என்பதில் அவர் கொண்டிருந்த அக்கறையைக் காட்டுகிறது.

இவர் இயற்றிய நூல்கள் :

1. கட்டளைக் கலித்துறை
2. சூளாமணி உரைநடை நூல்
3. சைவ மகத்துவம் (செய்யுளும் உரைநடையும் கலந்தது)
4. ஆறாம் பால பாடம்
5. ஏழாம் பால பாடம்
6. நட்சத்திரமாலை
7. ஆதியாகம கீர்த்தனம்
8. விவிலிய விரோதம்
9. காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி (புதினம்)

இவை தவிர, இவர் எழுதிய பதிப்புரைகள் ‘தாமோதரம்’ என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டது.

சி.வை.தா.வின் பணியைப் பாராட்டியுள்ள அறிஞர்களில் சிலர்:
1. பரிதிமாற் கலைஞர்
2. தெ.பொ.மீ.
3. பெரும் பாவலர் சுப்பிரமணிய பாரதியார்
4. பண்டிதமணி சி.கணபதியார்
5. புலவர் சொ.முருகேசனார்
6. பம்மல் சம்பந்தனார்
7. மயிலாடுதுறை வேதநாயகம்
8. உ.வே.சா.
9. நெவின்சு - சிதம்பரனார்
10. கறோல் – விசுவநாதனார்
11. பெர்சிவெல் திருத்தந்தையார்
12. தி.ரு வி.க.

“பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்குக் கால்கொண்டவர் ஆறுமுக நாவலர்; சுவர் எழுப்பியவர் தாமோதரம்; கூரை வேய்ந்தவர் உ.வே.சா.” என்று திரு.வி.க. பாராட்டியிருக்கிறார்.


-------------------------------------------------------------------------------------------
avatar
தமிழநம்பி
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 87
Join date : 20/06/2010

Back to top Go down

பிழை கண்டுபிடிப்போர்க்கு நூல் பரிசென அறிவித்தவர்!  Empty Re: பிழை கண்டுபிடிப்போர்க்கு நூல் பரிசென அறிவித்தவர்!

Post by ஜனனி Mon Jul 05, 2010 7:24 am

நல்ல தகவல் பிழை கண்டுபிடிப்போர்க்கு நூல் பரிசென அறிவித்தவர்!  135634
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

பிழை கண்டுபிடிப்போர்க்கு நூல் பரிசென அறிவித்தவர்!  Empty Re: பிழை கண்டுபிடிப்போர்க்கு நூல் பரிசென அறிவித்தவர்!

Post by தமிழநம்பி Mon Jul 05, 2010 8:05 am

janani wrote:நல்ல தகவல் பிழை கண்டுபிடிப்போர்க்கு நூல் பரிசென அறிவித்தவர்!  135634

நன்றி.
avatar
தமிழநம்பி
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 87
Join date : 20/06/2010

Back to top Go down

பிழை கண்டுபிடிப்போர்க்கு நூல் பரிசென அறிவித்தவர்!  Empty Re: பிழை கண்டுபிடிப்போர்க்கு நூல் பரிசென அறிவித்தவர்!

Post by அருள் Mon Jul 05, 2010 12:58 pm

வாழ்த்துக்கள் உங்களின் பதிவு தொடரட்டும் பிழை கண்டுபிடிப்போர்க்கு நூல் பரிசென அறிவித்தவர்!  254248
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

பிழை கண்டுபிடிப்போர்க்கு நூல் பரிசென அறிவித்தவர்!  Empty Re: பிழை கண்டுபிடிப்போர்க்கு நூல் பரிசென அறிவித்தவர்!

Post by தமிழநம்பி Mon Jul 05, 2010 5:25 pm

AARUL wrote:வாழ்த்துக்கள் உங்களின் பதிவு தொடரட்டும் பிழை கண்டுபிடிப்போர்க்கு நூல் பரிசென அறிவித்தவர்!  254248

அன்புக்கு நன்றி.
avatar
தமிழநம்பி
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 87
Join date : 20/06/2010

Back to top Go down

பிழை கண்டுபிடிப்போர்க்கு நூல் பரிசென அறிவித்தவர்!  Empty Re: பிழை கண்டுபிடிப்போர்க்கு நூல் பரிசென அறிவித்தவர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum