TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Empty கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்

Post by வாகரைமைந்தன் Thu Jun 17, 2021 11:54 am

வின்டோஸ் 10 க்கான மைக்ரொசொப்ட்டின் ஆதரவு 14 அக்தோபர் 2025 உடன் முடிவடைகிறது.

அடுத்து ச்வின்டோஸ் 10 க்கு அடுத்து விண்டோஸ் 11 வெளிவர இருக்கிறது.சில முன் படங்கள் இணைய வெளியில் கசிந்தன. முழு விபரங்களும் வெளிவராத நிலையில் வின்டோஸ் 10X போன்ற அமைப்பில் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Afc488ac

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் 84437a4d

இப்போது டஸ்க்பாரில் இருக்கும் வெதர் ஐகனில் உள்ள செய்தி இல் மாற்றம் இருக்கலாம்.

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் C7f38454

Tieda Baidu ஐ ஆதாரம் காட்டி வெளிவந்த செய்தியானதால் இதுவரை  மைக்ரொசொப்ட் உறுதிப்படுத்தவில்லை.

GMail... புதிய வசதிகளுடன் புதிய மின் அஞ்சலை செயல்படுத்தி உள்ளது. இந்த வசதிகள் தேவையில்லாதவர்கள் செட்டிங்ஸ் இல் சென்று நிறுத்தி விடலாம்.
அவர்களுடைய உத்தியோக தளத்தில் new Gmail என்ற தலைப்பில் சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ளது.பாதுகாப்பையும் அதிகப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கிறது கூகிள்.

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் New-gmail


Last edited by வாகரைமைந்தன் on Tue Mar 08, 2022 7:50 pm; edited 2 times in total
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1704
Join date : 23/05/2021

Back to top Go down

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Empty Re: கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்

Post by வாகரைமைந்தன் Sat Jun 26, 2021 12:23 pm

மைக்ரொசொப்ட் உத்தியோகபூர்வமாக வின்டோஸ் 11 இன் முன்னோட்டத்தை அடுத்த வாரம் அறிவிக்கிறது. சில இப்போதுள்ள செயல்பாடுகள் நீக்கப்படுகிறது.இந்த ஆண்டு இறுதிக்குள் வின்டோஸ் 11 உங்களுக்குக் கிடைக்கும்.அது உங்கள் கணினிகளில் இயங்குமா என்பதை தெரிந்து கொண்டு அப்கிரேட் செய்யலாம்.வின்டோஸ் 10 க்கான பாதுகாப்பு  ஆதரவு 2025 உடன் முடிகிறது என அறித்துள்ளது.

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் This-pc-cant-run-windows-11

Processor 1 gigahertz (GHz)?or?faster with 2 or more cores 
Memory 4 GB RAM
   • Storage 64 GB or larger storage device
   • System firmware UEFI, Secure Boot capable
   • TPM Trusted Platform Module (TPM) version 2.0
   • Graphics card DirectX 12 compatible graphics / WDDM 2.x
   • Display > 9" with HD Resolution (720p)
   • Internet connection Microsoft account and internet connectivity required for setup for Windows 11 Home

மேலதிக தகவல்களை மைக்ரொசொப்ட் பக்கத்தில் காண இந்த [You must be registered and logged in to see this link.] சொடுக்கவும்.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1704
Join date : 23/05/2021

Back to top Go down

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Empty Audacity

Post by வாகரைமைந்தன் Mon Jul 05, 2021 3:50 pm

பலரும் விரும்பிப் பாவிக்கும்   open source audio editor Audacity மென்பொருள் 2020 மே மாதம் முதல்   MuseGroup என்ற  புதிய  நிறுவனம் பொறுப்பேற்றுக் கொண்டது. அதைத் தொடர்ந்து தனிப்பட்ட கொள்கைகளில் வாட்ஸ் ஆப் போல் கொண்டு வந்துள்ளதாக ஜூலை 2021 இல் அறிவித்துள்ளது..( Desktop Privacy Notice ) பாவனையாளர்களின் விபரங்களை எடுத்து ரஷ்யா,அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு கொடுக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Audacity-privacy-note

இந்த மென்பொருளை பாவிப்பவர்கள் தனிப்பட்ட விபரங்களில் (Privacy ) அக்கறை உள்ளவர்கள்  தொடர்ந்து பாவிப்பதா அல்லது மாற்று மென்பொருளைப் பாவிப்பதா என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1704
Join date : 23/05/2021

Back to top Go down

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Empty You Tube

Post by வாகரைமைந்தன் Mon Jul 12, 2021 7:26 pm

You Tube காணொலிகள் திடீரென காணாமல் போவது ஏன்?



சில காணொலிகள் பதிவிட்ட சிறிது நாட்களில்/நேரத்தில் இப்படி காட்சி தரும்.
காணொலியை பதிவிடும் போது YouTube இல் YouTube  ToS or EULA ஐ ஏற்றுக் கொண்டே  பதிவிடுகிறோம்.அந்த விதிகளுக்கு உட்படாத காணொலிகள் இப்படி காட்சி தரும்.பொதுவாக சொந்த காணொலிகளை பதிவேற்றும்படி  YouTube அறிவுறுத்தும்.

மூன்றாம் தரப்பு காணொலிகள் (3rd party link) , காப்புரிமை பெற்ற காணொலிகளை பதிவேற்றம் செய்தால் (,copyright) ,youtube violence மூன்று கோடுகள் கொடுத்து   நீக்கப்படும்.
இதுதவிர சிலர் தங்கள் காணொலிகளை தனிப்பட்ட என (private) என மாற்றும் போது Video unavailable என்ற செய்தியுடன் கிடைக்காமல் போய் விடுகிறது.

Video unavailable
This video is no longer available because the YouTube account associated with this video has been terminated.

அல்லது

Video unavailable
This video is no longer available because the uploader has closed their YouTube account.


சமீபத்தில் சில பிரபலங்கள்  தங்களின் பல காணொலிகளை நீக்கியும்,தனிப்பட்ட என மாற்றியும் விட்டனர்.சில பாடல்களை தங்களின் சொந்த YouTube தளத்தில் அல்லது இணைய தளத்தில் மட்டும் பதிவிடுவார்கள்.இங்கிருந்து எடுத்து பதிவேற்றம் செய்யும் போது மூன்றாம் தரப்பாக மாறிவிடுகிறது.

அனுமதி பெறாமல் பணத்திற்காக பதிவிட்டால்( AdSense (or Google Ads) ) அது விதிகளுக்கு எதிரானதாக கருதப்படும்.( against the terms of service to run ads on a page that hosts stolen content.) இப்படி பதிவேற்றம் செய்யும் போது காணொலிகளை  நீக்கவோ அல்லது கணக்கை நீக்கவோ செய்வார்கள்.

Embed செய்யப்படும் காணொலிகளும் பார்வையாளர்கள் கணக்கில் எண்ணப்படுவதால்-View count-,அவையும் நீக்கப்படுகிறது.விளம்பர/பணத்திற்காக  embed செய்தாலும் குற்றமே.(Embedded videos that are identified as stolen can count, and might penalize your Google Ads account.)

மூன்றாம் தரப்பு காணொலிகளை பதிவேற்றம் செய்யும் போது எங்கிருந்து/ நன்றி என சேர்க்கப்படும் போது சில சமயம் உரிமையாளர்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள வாய்ப்புண்டு.குற்றம் சுமத்தும் போதே பிரச்சனைகள் வந்து சேருகிறது.அதுவரை திருடிக்கொண்டே இருக்கலாம்.

உண்மையிலேயெ அப்படியான  காணொலிகளை (தனிப்பட்ட,காப்புரிமையுள்ள ,YPP இல் அங்கம் வகிப்பவர்களின் காணொலிகள்) பகிரக் கூடாது என்று நினைப்பவர்கள்,YouTube இல் பதிவேற்றம் செய்யும் போது YouTube’sCopyright Match Tool கொண்டு சரிபார்த்து பதிவேற்றலாம்.அதற்கான வசதி YouTube Studio இலேயே உள்ளது.

அதேபோல் சினிமா,இசை,TV நிகழ்ச்சி போன்றவற்றை Content ID claim கொண்டு பதிவேற்றம் செய்திருப்பார்கள்.

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Main-qimg-5257fa00c0a35306a40dd426566bc3c1

அப்படி செய்யப்பட்டால் வேறு இணையத் தளங்களில் Embed முறையில் பகிர்வதை தடுக்கவோ ,சில நாடுகளில் பகிர்வதை தடுக்கவோ ,அல்லது முற்றாக நீக்கவோ செய்யலாம்.

(இதை தடுக்க  அந்தக் காணொலியை அப்படியே பதிவேற்றாமல் சிறிய பகுதியை வெட்டியோ,watermark ஐ நீக்கியோ,இசையை நிறுத்தி,மாற்றி பதிவேற்றலாம்.அதற்கும் YouTube இல் edit வசதி உண்டு.காப்புரிமையை மீறி பதிவிடும் போது Strike 1,strike 2,strike 3 என அறிவிக்கப்படும்.ஆறு மாதத்தில் மூன்று strikes வந்தால் பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து காணொலிகளுடன் கணக்கு முடிவுக்கு  வரும்.

எச்சரிக்கை வழங்கப்பட்ட பிறகு, மீண்டும் மீறுபவர் புதிய உள்ளடக்கத்தைப் பதிவேற்ற ஒரு வாரம் முடக்கம் பெறுவார், இது 90 நாட்களுக்குப் பிறகு காலாவதியாகும். 90 நாட்களில் இரண்டாவது- strike- எச்சரிக்கை கொடுக்கப்பட்டால்  இரண்டு வார முடக்கமும்,  90 நாள் காலத்திலும் மூன்றாவது எச்சரிக்கைக்குப்  பிறகு, YouTube சேனலை மூடிவிடும்.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1704
Join date : 23/05/2021

Back to top Go down

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Empty மின் அஞ்சலைக் கண்டு பித்தவர் யார்?

Post by வாகரைமைந்தன் Tue Jul 13, 2021 4:15 pm

சமூக வலைத்தளம், 1971 இல் qwertyuiop -என்ற செய்தியை முதலில் Ray Tomlinson ஆல் அனுப்பி தொடங்கி வைக்கப்பட்டது.அப்போது அவரை  ARPANET வேலைக்கு அமர்த்தி இருந்தது.

1970 இல் நியு ஜேர்சியில் மாணவனாக(New Jersey high school ) இருந்த போது மின் அஞ்சலை கண்டு பிடித்ததாக சிவா ஐயாத்துரை (வெள்ளையப்பா ஐயாத்துரை சிவா) அறிவித்திருந்தார்.1978 இல் EMAIL என்ற மென்பொருளை உருவாக்கியதாக அவர் கூறி இருந்த போதும் அதை ஏற்றுக் கொள்வதில் சிக்கல் இருப்பதாக தெரிவித்தது உலகம்.

சிவா ஐயாத்துரை மின் அஞ்சலைக் கண்டு பிடித்ததை 2012 பெப்வரியில்  Smithsonian National Museum of American History   உறுதி செய்ததைத் தொடர்ந்து பிரச்சனை முடிவுக்கு வந்தது. 30 வருடங்களுக்கு மேலாக ரே டொம்லின்சனுக்கும் ஐயாத்துரைக்குமான பிரச்சனை முடிவுக்கு வந்தது.

சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை ஆராய்ந்ததனர். முடிவில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதரங்களை ஏற்றுக் கொண்டு காப்பிரைட் (Copyright)  உரிமை சிவா ஐயாத்துரைக்கு வழங்கியதன் மூலம் மின் அஞ்சலைக் (eMail) கண்டுபிடித்தவர் அவரே என அறிவிக்கப்பட்டது.இணைய ஊடகங்கள்/இணையத்தளங்கள்/விக்கிபீடியா என தங்கள் பங்குக்கு மாற்றிக் கொண்டனர்.

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Vashiva_patent1_enl

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Vashiva_patent10_enl

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Vashiva_email_code

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Vashiva_patent3_enl

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Vashiva_patent6_enl

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Shiva-smithsonian1
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1704
Join date : 23/05/2021

Back to top Go down

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Empty வின்டோஸ் - 11

Post by வாகரைமைந்தன் Tue Jul 13, 2021 9:47 pm

வின்டோஸ் 11 விரைவில் ரோலப் ஆகும் நிலையில்,வின்டோஸ் 11 க்கு வின்டோஸ் 10 இல் இருந்து மாறுபவர்கள் 10 நாட்களுக்குள் திரும்ப வாய்ப்பிருப்பதாக மைக்ரோசொப்ட்டின்  [You must be registered and logged in to see this link.]  இல் குறிப்பிடப்பட்டுள்ளது.அதாவது வின் டோஸ் 11 க்கு அப்கிரேட் செய்த பின் விரும்பாவிட்டால் வின்டோஸ் 10 க்கு திரும்ப 10 நாட்கள் உண்டு. அதன் பின்னர் முடியாது.Go back option அதற்குப் பின்னர் செயல்படாது.

முதலிலேயே மூன்றாம் தரப்பு மென்பொருள் கொண்டு backup system files செய்து கொண்டால் எப்போது வேண்டுமானாலும் திரும்பலாம்.இலவசமாக கிடைக்கும் சிறப்பானவற்றில்[You must be registered and logged in to see this link.]ஒன்றாகும்.

தமிழில் கணினி பற்றிய மின் நூல்கள் சில பதிவிறக்கிப் படிக்க…

கணினி மின் நூல்கள்
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1704
Join date : 23/05/2021

Back to top Go down

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Empty QWERTY

Post by வாகரைமைந்தன் Wed Jul 14, 2021 11:27 am

நாம் பாவிக்கும் தட்டச்சு முறை QWERTY  1870 இல் Christopher Latham Sholes என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.இதைவிட வேறு முறைகளும் உண்டு.உதாரணமாக ஜேர்மன் தட்டச்சில் Y-Z இடம் மாறியிருக்கும்.முற்றாக மாறிய அதி வேகம் கொண்டதாக சொல்லப்படுவது,August Dvorak என்பவர் கண்டு பிடித்த DVORAK தட்டச்சு முறையாகும்.

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் 50231UB_ZOOM2


இணையம் ஊடாக 1969 அக்டோபர் 29 இல் முதல் சொல் ‚lo’ ARPANET இல் UCLA – SRI க்கு அனுப்பப்பட்டது.உண்மையில் கணினி நிபுணர்கள் login என்பதை அனுப்பும் போது கோளாறு காரணமாக lo எனப் போய் சேர்ந்தது. இது இணையம் மூலம் அனுப்பப்பட்ட  முதல் வார்த்தை ஆகும்.

அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்கள் தொடங்க ஆரம்பித்தன.

1978 இல் BBS– Bulletin Board System  தொடங்கியது. அடுத்து 1988 இல் IRC - Internet Relay Chat தொடங்கியது.ஆனாலும் தற்போதய சமூக வலைத்தளங்களுக்கு அடிப்படையாக  1994 இல் Geocities வித்திட்டது.

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Geocities-neighborhoods-social-network

அதன் பின் AOL Instant Messenger (தற்போதய தளங்களுக்கு உண்மையான முன்னோடி) ,SixDegrees (1997),Google+ (2011 - 13+), எனப் பல உருவாகியது.

இருப்பினும் தொடர்ந்து இருப்பிடத்தை தக்க வைத்துக் கொண்டவை LinkedIn (2003),முக நூல் (2004 -2270 ஆயிரம் கோடி-13+),Classmates (1995 – ஐந்து கோடிக்கு மேல் பயணர்கள் 18+), Friendzy, Hi-5,Twitter ,Tumblr,Pinterest   … என 600 க்கு மேற்பட செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Thefacebook-first-website1
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1704
Join date : 23/05/2021

Back to top Go down

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Empty Re: கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்

Post by வாகரைமைந்தன் Wed Jul 14, 2021 6:51 pm

ஒரே IMEI இலக்கத்துடன் பல கைபேசிகள் விற்பனைக்கு வருகிறது.எச்சரிக்கை    

அதுபோல் ஏமாற்றுகள் அதிகரித்து வருகின்றன.சிம் காட் அக்டிவ் செய்ய பல ஆயிரங்களை இழந்தது,வாட்ஸ் ஆப் மூலம் வங்கிக் கணக்கில் இருந்து பல ஆயிரங்களை இழந்தது , வங்கிகியில் இருந்து கடன் பெற்றுத் தருவதாக சொல்லி லட்சங்களை இழந்த கிராமத்துப் பெண் என சைபர் கிரைம் அறிக்கை தெரிவிக்கிறது. இங்கே ஏமாறுபவர்கள் அதிகமாக படித்தவர்களாக இருக்கிறார்கள்.


டுவிட்டாில் பிரபலங்களை போலி முகவாியில் பின்தொடா்கிறார்கள் என்பதை முன்னரே டுவிட்டர் தெரிவித்திருந்தது.இது லைக் பார்மிங்க் ஆகும்.தங்களை பலர் பின்தொடருகிறார்கள் என காட்டும் வகையில் இப்படி போலி கணக்குகள் தொடங்கப்படுகிறது.

ஆனாலும் சில பிரபலங்களின் பெயரில் பொய்யான கணக்குகளை சமூக வலைத்தளங்களில் உருவாக்கி தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.காவல்துறையில் முறையிட்டும் இருக்கின்றனர்.உங்கள் கணக்கிலும் முறைகேடுகள் நடைபெறாவண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள்.

இது மோசடி அல்ல லைக் பார்மிங்க்……..

பிரதமா் மோடி டிஜிட்டல் இந்தியா, டிஜிட்டல் பண வா்த்தகம் என தொடா்ந்து டிஜிட்டல் உலகத்தை பிரபலப்படுத்தி வருகிறாா். மக்களையும் டிஜிட்டல் உலகத்திற்கு இழுத்து செல்வதில் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறா்ா. இவா் சமூக வலைதளமாக டுவிட்டா் பக்கத்திலும் மிகவும் சுறு சுறுப்பாக செயல்படும் தலைவராக விளங்குகிறாா். 

அப்படிப்பட்ட பிரதமா் மோடியின் டுவிட்டா் பக்கத்தை 5 கோடிக்கு மேற்பட்டோர் பின் தொடா்கின்றனா். இவா்களில் 2 கோடியே 47 லட்சத்து 99 ஆயிரத்து 527 பேர் மட்டுமே  உண்மையான நபா்கள் என்றும், மீதமுள்ள கணக்குகள் அனைத்தும் போலி முகவாி என்றும் தொியவந்துள்ளது. 
இந்தப் போலிக் கணக்குகளை அவர்களே (அல்லது அவர்களின் ஆதரவாளர்களோ நிர்வகிப்பவர்களோ) உருவாக்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் 63297903

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் 63297916
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1704
Join date : 23/05/2021

Back to top Go down

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Empty தனியுரிமை

Post by வாகரைமைந்தன் Sat Jul 17, 2021 11:45 am

வாட்ஸ் ஆப், டுவிட்டர் தனியுரிமைக் கொள்கை மேம்படுத்தப்பட்டவுடன் ஆதரவாகவும் எதிராகவும் கருத்து மோதல்கள் ஏற்பட்டன. ஆனால்..

திறன்பேசி வாங்கியதும் தனியுரிமைக் கொள்கை ஒப்பந்தம் படித்துப் பார்க்காமலே ஓகே அழுத்தி விடுகிறோம். இருப்பிட கண்காணிப்பு மூலம் தனிநபர் ஜாதகத்தையே கண்டு கொள்ளலாம்.யாராவது, தனியுரிமைக் கொள்கை ஒப்பந்தம் ,வரைபடம் இவற்றின் மூலம் தகவல்களை கண்டறிய முடியும்,அவற்றை தேவையற்ற சமயங்களில் நிறுத்தி வைத்ததுண்டா?

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் 5daf58bd4af909686b533d72-1200

பயனர்கள் எங்கே வாழ்கிறார்கள், அவர்களின் பழக்கவழக்கங்கள், ஆர்வங்கள், தனிப்பட்ட புள்ளிவிவரங்கள் மற்றும் பயனர்களின் ஆளுமைகள் பற்றிய தகவல்கள்  எடுக்க முடியும் என்கிறார்கள் ஆய்வை நடத்திய  ஆய்வாளர்கள்  Mirco Musolesi (University of Bologna, Italy) and Benjamin Baron (University College London, UK)

இருப்பிட கண்காணிப்பு என்பது  பாவிக்கும் ஒவ்வொரு செயலியிலும் உண்டு.ஆனால் அவற்றை தேவையற்ற சமயங்களில் நிறுத்தி வைக்கும் வசதியும் உண்டு.உங்கள் உலாவியிலும் இதே இருப்பிட கண்காணிப்பு உண்டு.அவற்றை நாம் கண்டுகொள்வதில்லை.

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Bologna_25022021

இதேபோல் நாம் பாவிக்கும் உலாவிகளிலும் தடுப்பு வசதிகள் உண்டு.அவற்றை தடை செய்யாமல்/நிறுத்தி வைக்காமல் விடும் போது பல தகவல்களை உலாவியே எடுத்துக் கொடுத்து விடுகிறது.தனியுரிமையில் அக்கறையுள்ள சில உலவிகள் அதற்கு அதிக  முன்னுரிமை கொடுத்து பாதுகாப்பளிக்கிறது.

உலாவி எடுக்கும் தகவல்கள்- கணினி பற்றிய விபரங்கள்,உலவி,பாட்டரி,இருப்பிடம்,இணையத் தொடர்பு,சமூக வலத்தள தொடர்புகள்,தேடும் இணையத் தளங்கள்,குக்கிஸ்,HTTP referrer ,ஐபி இலக்கம்,mouse tracking,user agent,போன்ற பல தகவல்கள்-விபரங்களை எடுத்துக் கொள்கிறது.பிரவுசர் செட்டிங்ஸ் மூலம் இவற்றை தடுக்க முடியும்.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1704
Join date : 23/05/2021

Back to top Go down

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Empty Re: கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்

Post by வாகரைமைந்தன் Sun Jul 18, 2021 9:03 pm

1936 இல் ரூசிய நாட்டவர்,அன்றைய சோவிய யூனியன், Vladimir Lukyanov உருவாக்கிய நீர்க் கணினி ( water integrator) 1980 வரை பயன்பாட்டில் இருந்தது.

Vladimir Lukyanov’s water integrator  

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Lukyanov-water-integrator-4

1949 இல் இருந்த அனலோக் கணினி.

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் 1024px-Analog_Computing_Machine_GPN-2000-000354

1953 இல்

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் VCSE-1

.........................................
தனியுரிமை (privacy) காரணமாக வாட்ஸ் ஆப்பில் இருந்து டெலிகிராம் போன்றவற்றுக்கு மாறியது போல் கூகிள் குரோம் உலாவியில் இருந்து மொசில்லா பயர்பொக்ஸ் (Firefox) மற்றும் பிரேவ் (Brave) உலாவிக்கு மாறும் இணையப் பயனர்கள்.பெரிய நிறுவனங்களை விட்டு சிறந்த பாதுகாப்பான இடங்களை நோக்கி இணைய பயணர்கள் மாறி வருவது வரவேற்கத்தக்கது.தேடுபொறி கூகிள் இல் இருந்தும் கூகிள் குரோம் இல் இருந்தும் இணையப் பயணத்தில் பாதுகாப்பை தேடி வருகிறார்கள்.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1704
Join date : 23/05/2021

Back to top Go down

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Empty காப்புரிமை விதிகளை மதிக்காத கூகுள் நிறுவனத்துக்கு ரூ.4,405 கோடி அபராதம்!

Post by வாகரைமைந்தன் Tue Jul 20, 2021 4:26 pm

பிரான்ஸ் நாட்டின் செய்தி நிறுவனங்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கூகுள் நிறுவனத்துக்கு பிரான்ஸ் ஒழுங்குமுறை அமைப்பு ரூ.4,405 கோடி ( €500 million ($593 million) ) அபராதம் விதித்துள்ளது. கூகுள் நிறுவனம் தனது தளத்தில் மற்ற செய்தி ஊடகங்களின் செய்திகளைப் பயன்படுத்தும்போது அந்தச் செய்தி நிறுவனங்களுக்கு உரிய கட்டணம் அளிக்க வேண்டும் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் காப்புரிமை விதிகளில் ஒன்று.


ஆனால் கூகூள் இந்த உத்தரவை மதிக்காமல் செய்தி ஊடகங்களிடம் சரியாக கலந்தாலோசிக்காமலும் உரிய கட்டணம் செலுத்தாமலும் இருந்து வந்தது. இதையடுத்து கூகுள் மீது சந்தை போட்டிகளைக் கண்காணிக்கும் பிரான்ஸ் ஒழுங்குமுறை அமைப்பிடம் பிரான்ஸின் ஏஎஃப்பி, ஏபிக், எஸ்இபிஎ ஆகிய ஊடங்கங்கள் புகார் தெரிவித்தன. முன்னதாக இந்நிறுவனங்கள் தங்களின் செய்திகளை கூகுள் நிறுவனம் பயன்படுத்தும்போது “neighbouring rights” என்பதன் அடிப்படையில் உரிய பணப்பலன் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.

அதற்காக பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுத்தன.ஆனால், அதற்கு கூகுள் நிறுவனம் ஒத்துழைக்காத நிலையிலேயே புகார் கொடுத்தன. இந்தப் புகாரில் முகாந்திரம் இருந்ததால் கூகுள் நிறுவனத்துக்கு இந்திய மதிப்பில் ரூ.4405 கோடி அபராதமாக ஒழுங்குமுறை அமைப்பு விதித்துள்ளது. செய்தி வெளியீட்டாளர்களுக்கு எவ்வளவு தொகை கொடுக்கப்படும் என்று இன்னும் 2 மாதங்களுக்குள் தெரிவிக்காவிட்டால், நாள் ஒன்றுக்கு 9 லட்சம் யூரோ அதாவது ரூ.7.93 கோடி வீதம் அபராதம் கட்ட வேண்டும் என்று எச்சரித்துள்ளது. ( €900,000 ($1.1 million) each day. )

kmm/cmk (AP, AFP, dpa)

இது முதன்முறையல்ல.ஏற்கனவே 2013 இலும் 2019 இலும் அதற்கு முன்னரும் பிரான்ஸில் கூகிள் தண்டிக்கப்பட்டது. 2019 இல் பிரான்ஸ் இல் கூகிள் மீண்டும் அதன் மேலாதிக்க நிலையை தவறாக பயன்படுத்தியதற்காக 150 மில்லியன் யூரோ அபராதம் விதித்து தண்டிக்கிறது.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1704
Join date : 23/05/2021

Back to top Go down

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Empty பெகாசஸ் ஸ்பைவேர்: நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உளவு பார்க்கப்படலாம்

Post by வாகரைமைந்தன் Thu Jul 22, 2021 9:10 pm

பெகாசஸ் ஸ்பைவேர் மென்பொருள் பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள், ஏன் அரசியல் தலைவர்களையும் கூட உளவுப் பார்க்க பயன்படுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டின் மூலம், உளவுப் பார்த்தல் என்பது விற்பனைக்கான ஒன்று என்பது தெரிகிறது.

இந்த மென்பொருள் தயாரிப்புக்கு பின்னணியில் உள்ள என்எஸ்ஓ குழுமம், இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கிறது அதுமட்டுமல்லாமல் தங்களின் வாடிக்கையாளர்கள் கவனமாக மதிப்பீடு செய்யப்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த பெகாசஸ் விவகாரம் நமக்கு உணர்த்தும் மற்றொரு விஷயம் என்னவென்றால், ஒரு சில நாடுகளால் உளவுப் பார்க்க பயன்படுத்தப்பட்ட அதி நவீன தொழில்நுட்பங்கள் தற்போது பரவலாகி வருகிறது அதுமட்டுமல்லாமல் இன்றைய டிஜிட்டல் உலகில் நமது தனிமை மற்றும் பாதுகாப்பிற்கு அது சவலாகவும் உள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு ஒரு உளவு நிறுவனம் உங்களின் தனிநபர் தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அந்நிறுவனம் கடினமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உங்களின் அலைப்பேசியை டேப்கள் மூலம் ஒற்றுக் கேட்க வேண்டும் அல்லது யாருக்கும் தெரியாமல் உரையாடலை ரகசியமாக பதிவு செய்யும் நுண் ஒலிப்பதிவு கருவியை வீட்டில் மறைத்து வைக்க வேண்டும். அல்லது உங்களை பின் தொடர ஆட்களை ஏற்பாடு செய்ய வேண்டும். நீங்கள் யாரை தொடர்பு கொண்டீர்கள் அல்லது நீங்கள் எவ்வாறு வாழ்ந்தீர்கள் என்பதை கண்டறிய நேரமும் பொறுமையும் தேவை.

ஆனால் இப்போது நீங்கள் என்ன பேசுகிறீர்கள், எங்கு இருந்தீர்கள்? நீங்கள் யாரை சந்தித்தீர்கள்? உங்களின் விருப்பம் என்ன இது எல்லாமே நீங்கள் வைத்திருக்கும் கருவியின் மூலம் ஒருவர் அறிந்து கொள்ளலாம். உங்களின் அலைப்பேசியை யாரும் தொடாமலேயே தூரத்திலிருந்தும் அவற்றை ஹேக் செய்ய முடியும். அதே போன்று உங்களின் குரல் கேட்டு வேலை செய்யும் டிஜிட்டல் கருவிகள் யாருக்கேனும் உளவு வேலை பார்ப்பதற்கான கருவியாககூட இருக்கலாம்.

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் _119503867_pegasus

உங்கள் அலைப்பேசியை தூரத்திலிருந்து இயக்க சில நாடுகளால் மட்டுமே முடியும் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் நவீன உளவு பார்க்கும் வசதி தற்போது பல நாடுகளின் கையில் உள்ளது. நாடுகள் ஏன்? சிறு குழுக்கள், தனி நபர்கள் என அனைவரிடத்திலும் உள்ளது.

முன்னாள் அமெரிக்க உளவு பார்ப்பு ஒப்பந்ததாரர் எட்வேர்ட் ஸ்னோடென், சர்வதேச தொலை தொடர்பில் அமெரிக்க மற்றும் பிரிட்டனின் உளவு அமைப்புகளுக்கு இருக்கும் ஊடுறுவும் சக்தி குறித்து 2013ஆம் ஆண்டில் வெளியிட்டார்.

அந்த முகமைகள் எப்போதும் தங்களது திறமைகள் ஒரு ஜனநாயக நாட்டின் அங்கீகாரத்திற்கும், மேற்பார்வைக்கும் உட்பட்டது என தெரிவித்தன. ஆனால் சில சமயங்களில் இந்த அங்கீகாரம் வலுவற்றதாக இருந்தது ஆனால் அது நாளடைவில் வலுப்பெற்றது.

உளவு பார்த்தல்
எட்வேர்ட் வெளியிட்ட கருத்துக்கள் பிற நாடுகள் தங்களுக்கான வாய்ப்பை தேடும் சந்தர்ப்பத்தை உருவாக்கியது. பல நாடுகளும் இம்மாதிரியான உளவுப் பார்க்கும், பணியில் ஈடுபட நினைத்தன. எனவே அதுவரை வெளியில் பெரிதும் வெளிவராத குழுக்கள் தங்களின் விற்பனையை தொடங்கின.

இஸ்ரேல் எப்போதுமே உளவுப் பார்க்கும் வசதிகளில் சக்தி வாய்ந்த முதல் தர நாடாக இருந்து வருகிறது. அதன் நிறுவனங்களான என்எஸ்ஓ குழுமம் உளவு பார்க்கும் உலகத்தின் ஜாம்பவான்களால் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம் உளவுப் பார்க்கும் தொழில்நுட்பத்தை வர்த்தகம் ஆக்கியது.

என்எஸ்ஓ குழுமம் தங்களின் உளவு மென்பொருள், குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்துவதற்கு மட்டுமே விற்கப்படுகிறது என்று தெரிவிக்கிறது. ஆனால் அது எவ்வாறு வரையறுக்கபப்டுகிறது என்பதுதான் பிரச்னை.

ஏனென்றால் பல நாடுகள் பத்திரிகையாளர்கள், அரசுக்கு எதிரானவர்கள், மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களை குற்றவாளிகளாக சித்தரிக்கின்றன. அவர்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயல்படுவதாக தெரிவிக்கின்றன. எனவே இதன் மூலம் அவர்கள் கண்காணிப்பு வளைத்திற்குள் வரலாம் அல்லவா?

என்க்ரிப்ஷன் வசதி அதிகரித்ததும் (ஒரு தகவலை `கோட்`டாக மாற்றுவது) மக்களின் அலைப்பேசிகளில் அரசு ஊடுறுவது அதிகரித்துள்ளது. அலைப்பேசி உரையாடல் என்பது அத்தியாவசமான நிலையில் ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் அலைப்பேசி லைன் வசதியில் ஒயரை இணைக்க (wiretap) செய்ய சொல்வது என்பது எளிதானதே.

தற்போது தகவல்கள் என்க்ரிப்ட் செய்யப்படுவதால் அந்த கருவியினுள் நாம் ஊடுறுவ வேண்டும். ஆனால் கையில் உள்ள கருவி என்பது ஒரு தகவல் களஞ்சியம்.

சில சமயம் நாடுகள் இதை விவரமாக செயல்படுத்துகின்றன. அதற்கு ஒரு சமீபத்திய எடுத்துக் காட்டு அமெரிக்க ஆஸ்திரேலிய கூட்டு நடவடிக்கை. இந்த நடவடிக்கையில் அதீத பாதுகாப்பு என்று கருதிய அலைப்பேசிகள் குற்றவாளிகளுக்கு கொடுக்கப்பட்டன. ஆனால் அது அரசால் இயக்கப்பட்டன.

ஆனால் அலைப்பேசியை ஒட்டு கேட்பதை காட்டிலும் விஷயம் பெரிதாகி கொண்டிருக்கிறது.

ஆன்லைன் வர்த்தகத்தை ஹேக் செய்யும் வசதிகூட இப்போது எளிதானதாகிவிட்டது.

முன்னொரு காலத்தில் உங்களின் கம்ப்யூட்டரை ஹேக் செய்து அதை விடுவிக்க ஹேக்கர்கள் பணம் கேட்பார்கள் ஆனால் இன்றைய ’கள்ள ஆன்லைன்’ உலகத்தில் அது ஒரு சேவையாக விற்கப்படுகிறது.

ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தி லாபமாக ஒரு தொகை கொடுத்தால் இந்த மாதிரியான கருவிகளை விற்று விடுகிறார்கள். விற்ற பிறகு அதற்கான சேவை மற்றும் வழிகாட்டுதலுக்கு உதவி அழைப்பு எண்களும் வழங்கப்படுகின்றன.

அதேபோன்று ஒருவரின் இருப்பிடத்தை கண்டறிவது, ஒருவரின் செய்கை மற்றும் பழக்க வழக்கத்தை கண்டறிவது இதற்கெல்லாம் முந்தைய காலத்தில் பெரும் வசதி தேவை ஆனால் இப்போது இதற்கான கருவி எல்லாம் இலவசமாக உள்ளன.

உளவுப் பார்த்தல் என்பது நாடுகளால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை மட்டுமல்ல.

சில நிறுவனங்களும் நம்மை பற்றிய தகவல்களை சேகரிக்கின்றன. இதை ஒரு உளவு மென்பொருளை பொறுத்திதான் செய்ய வேண்டும் என்பதில்லை. நாம் சமூக வலைத்தளங்களில் எதை அதிகமாக பார்க்கிறோம் எதை அதிகமாக தேடுகிறோம் என நிறுவனங்கள் தகவல்களை சேகரித்து அதை வர்த்தகத்திற்கு பயன்படுத்துகின்றன.

இம்மாதிரியாக நிறுவனங்களால் சேகரிக்கப்படும் தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்படும் அபாயமும் உள்ளது.

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் _119525780_gettyimages-1269232851

சில உளவு பார்க்கும் கருவிகள் அல்லது வசதிகள் அனைவரும் வாங்க கூடியதாக உள்ளது. தங்களின் குடும்பத்தின் இருப்பிடத்தை தெரிந்து கொள்ள இம்மாதிரியான உளவு கருவியை வாங்குவோரும் உண்டு.

இது எல்லாவற்றையும் சேர்த்து பார்த்தால் நாம் யார் வேண்டுமென்றாலும் யாரை வேண்டும் மென்றாலும் உளவுப் பார்க்கலாம். அதே போன்று நம்மையும் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் உளவுப் பார்க்க நேரிடும்.
(BBC Tamil)
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1704
Join date : 23/05/2021

Back to top Go down

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Empty லத்தீஃபா, ஹயா: பெகாசஸ் ஸ்பைவேரால் வேவு பார்க்கப்பட்ட இரு துபாய் இளவரசிகள்

Post by வாகரைமைந்தன் Thu Jul 22, 2021 9:27 pm

பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் உலகம் முழுக்க பலர் வேவு பார்க்கப்பட்டதில் இரண்டு துபாய் இளவரசிகளின் செல்பேசி எண்கள் இருந்தது தெரிய வந்துள்ளது.

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் _119528997_562280c2-ab7c-4c99-8731-a7eb7fbb5fb0

துபாய் ஆட்சியாளரின் மகளான இளவரசி லத்தீஃபா மற்றும் அவரது முன்னாள் மனைவியான இளவரசி ஹயா பின்ட் அல்-ஹுசைன் ஆகியோரது செல்பேசிகள் வேவு பார்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தாம் பிணைக்கைதியாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் இளவரசி லத்தீஃபா பேசும் வீடியோவை கடந்த பிப்ரவரி மாதம் பிபிசி பனோராமா வெளியிட்டது.

இந்நிலையில் இளவரசி ஹயா கடந்த 2019ஆம் ஆண்டு தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக துபாயில் இருந்து தப்பி வெளியேறினார். இந்த இருவரின் குற்றச்சாட்டுகளை ஐக்கிய அரபு அமீரக அரசு மறுத்துவிட்டது.

ஓர் இஸ்ரேலிய நிறுவனத்தால் அரசாங்கங்களுக்கு விற்கப்பட்ட செல்ஃபோன் ஸ்பைவேரால் உலகம் முழுக்க உள்ள பல செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள் இலக்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அப்படி கண்காணிக்கப்படுவதாகக் கூறப்படும் தரவு தளத்திலிருந்து கசிந்த 50,000 எண்களில் இந்த இரு இளசரசிகளின் எண்களும் இருந்ததாக தெரிகிறது.

பெகாசஸ் எனப்படும் ரகசிய மென்பொருள், இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஒ எனும் இணையப் பாதுகாப்பு (சைபர் செக்யூரிட்டி) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. வங்கதேசம், மெக்சிகோ, சௌதி அரேபியா போன்ற பல நாடுகள், என்எஸ்ஒ நிறுவனத்திடம் இருந்து பெகாசஸ் மென்பொருளை வாங்கிப் பயன்படுத்துகின்றன.

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் _117069988_b865d4f3-fe9a-4fd2-856d-ac8f526c6f46

இந்த வேவு பார்க்கும் மென்பொருளை அரசுகள் பயன்படுத்துவது குறித்துப் பல முறை கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அத்துடன் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் என்எஸ்ஒ நிறுவனத்துக்கு எதிராக வழக்கும் தொடர்ந்துள்ளன.



துபாய் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமின் 25 குழந்தைகளில் ஒருவர் லத்தீஃபா. சேக் மக்தூம் துபாயை ஒரு மினுமினுப்பு மிகுந்த நகரமாகவும், வணிகத்தில் ஈடுபட விரும்புபவர்கள் வந்து குவியும் இடமாகவும், அப்பிராந்தியத்தில் இருப்பவர்கள் விளையாட விரும்பும் இடமாகவும் மாற்றியிருந்தார்.

ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தின் பெண்களுக்கு சட்டங்கள் மற்றும் பழக்கங்கள் அவர்கள் வாழ்க்கையை மிகவும் கட்டுப் படுத்தும் விதத்தில் இருந்தன.

துபாயில் இருந்து தப்பிக்கும் முயற்சியை லத்தீஃபா முன்னெடுத்தபோது, அவர் பிடிபட்டு அடைத்துவைக்கப்பட்டார்.

"நான் வாகனம் ஓட்ட அனுமதிக்கப் படுவதில்லை. துபாயில் பயணிக்கவோ, துபாயை விட்டு வெளியேறவோ, எனக்கு அனுமதி இல்லை," என்று அவர் தப்பிக்கும் முன்பு பதிவு செய்த காணொளி ஒன்றில் கூறியுள்ளார் லத்தீஃபா.

"2000மாவது ஆண்டு முதல் நான் நாட்டை விட்டு வெளியே செல்லவில்லை. நான் வெளியே சென்று பயணிக்க வேண்டும், படிக்க வேண்டும், ஏதாவது இயல்பானவற்றைச் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கேட்டு வருகிறேன் ஆனால் அவர்கள் என்னை விடவில்லை. நான் இங்கிருந்து செல்ல வேண்டும்," என்று அந்தக் காணொளியில் அவர் கூறியுள்ளார்.

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் _119528999_92a2b282-fbb6-46fc-985a-1c781f8c367e

இளவரசி லத்தீஃபாவுக்கு கடவுச்சீட்டு கிடையாது. அதுமட்டுமல்லாமல் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தார். அதன் காரணமாக அவர் துபாயில் இருந்து நழுவி வெளியேறி ஓமன் கடற்கரையோரம் வரவேண்டியிருந்தது.

ஒரு பாழடைந்த சிறு படகில் அவர்கள் சர்வதேச கடல் எல்லைக்கு வர பல மணி நேரங்கள் ஆகின. அன்று மாலை அவர்களை சுதந்திரத்திற்கு அழைத்துச்செல்ல இருந்த படகை அவர்கள் சென்றடைந்தனர்.

தனது நண்பர் ஒருவருக்கு அனுப்பிய வாட்ஸ்அப் செய்தியில் "நான் இப்போது சுதந்திரமாக இருக்கிறேன்," என்று லத்தீஃபா அறிவித்தார்.

இந்தியப் பெருங்கடலைக் கடந்து சென்று அதன் பின்பு அமெரிக்காவுக்கு விமானம் மூலம் செல்ல வேண்டும் என்பது அவர்களது திட்டம். அங்கு அரசியல் தஞ்சம் கோரலாம் என்று லத்தீஃபா எண்ணியிருந்தார்.

ஆனால் 8 நாட்கள் கழித்து அவர்கள் இந்திய கரையோரம் நெருங்கியபோது அவரது தப்பும் முயற்சி மிகவும் மோசமாகிப்போனது.

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் _119529000_18107b66-46fe-42e3-ad22-0f590af8902f

ஷேக் முகமது அல் மக்தூம் உடன் இளவரசி ஹயா

துபாயிலுள்ள தனது கணவரை விட்டு சென்ற இளவரசி ஹயா லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்.

துபாயை ஆளும் ஷேக் முகமது அல் மக்தூமின் மனைவியான இளவரசி ஹயா பின்ட் அல்-ஹூசைன், லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வருவதாகவும், தனது கணவரை விட்டு பிரிந்து சென்ற பின்னர் உயிருக்கு பயந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது,

தனது முன்னாள் கணவர் மீது கடத்தல், துன்புறுத்தல் போன்ற பல குற்றச்சாட்டுகளை முன்வைத்த இளவரசி ஹயா, கடந்த 2019ஆண்டு ஏப்ரல் மாதம் தனது இரண்டு குழந்தைகளோடு பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார். அவரது குற்றச்சாட்டுகளை பிரிட்டன் நீதிமன்றம் பதிவு செய்திருக்கிறது.

ஜோர்டானில் பிறந்து, பிரிட்டனில் கல்வி பயின்ற 45 வயதான இளவரசி ஹயா, கோடால்பின் குதிரை பந்தய திடலின் உரிமையாளரான ஷேக் முகமது அல் மக்தூமை 2004ம் ஆண்டு திருமணம் செய்து, அவரது ஆறாவது மற்றும் கடைசி மனைவியுமாக மாறினார்.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1704
Join date : 23/05/2021

Back to top Go down

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Empty Teleperformance Call Center

Post by வாகரைமைந்தன் Thu Aug 12, 2021 4:13 pm

Call center அனைவருக்கும் தெரிந்ததுதான். கொலொம்பியாவை தளமாகக் கொண்ட இந்தியா,பாகிஸ்தான்...என உலகில் பல நாடுகளில் செயல்படுகிறது.பல ஆயிரங்கள் முதல் பல லட்சங்களை சம்பளமாக பெறும் இந்த நிறுவனத்தில் 380.000 பேர் உலகம் முழுவதும் வேலை செய்கின்றனர்.இவர்களைவிட பல ஆயிரம் பேர் வாடகைக்கும்  அமர்த்தப்பட்டு வேலை செய்கின்றனர்.கொலொம்பியாவில் மட்டும் 39,000 பேர் வேலை செய்கின்றனர்.

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Teleperformance_01

பல முறை இந்தியர்கள் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் முறைகேடாக பயன்படுத்தி தண்டனையும் பெற்றுள்ளனர்.சென்ற வருடம் 22 அமெரிக்க வாழ் இந்தியர்கள் 20 வருடங்கள் வரை சிறைத் தண்டனையும் பெற்றனர்.

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் 692132-jobs-ss

இந்த நிறுவனத்தில் ஆப்பிள்,அமேசன்,ஊபர்..என பல பெரிய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர்.
கொலொம்பியாவில் சமீபத்தில் வீட்டில் இருந்து வேலை செய்பவர்களை கண்காணிக்க AI கமெராக்களை (செயற்கை நுண்ணறிவால் இயங்கும் கேமராக்கள்.) பொருத்த முடிவாகி உள்ளது.இந்த முறை மற்ற நாடுகளிலும் அந்த நாட்டு சட்டங்களுக்கு உட்பட்டு அமுலாக உள்ளது.முறைகேடுகளை தவிர்க்க இந்த முறை என கம்பனி அறிவித்துள்ளது.

[You must be registered and logged in to see this link.]தகவலின்படி வீட்டில் படுக்கை அறையில் வேலை செய்யும் ஒருவர் அதுவும் பெண் அலுவலர் பெரும் சிரமத்துக்கு உள்ளாக நேரிடும்.
தற்போது கோவிட்-19 காரணமாக பலர் வீட்டில் இருந்து வேலை செய்கின்றனர். Teleperformance Call Center நிறுவனத்தில் 240,000 பேர் வீட்டில் இருந்தே வேலை செய்கின்றனர்.
                                                                                                                                                                   
Teleperformance India


பல தொலைபேசி அழைப்புகள்,மின் அஞ்சல் போன்றவை மூலம் முறைகேட்டில் ஈடுபடுகிறார்கள்.அந்த அழைப்பு பல நாடுகள் மூலமாக வலம் வந்து இறுதியில் ஒரு அப்பாவியிடம் வந்து சேருகிறது.அவரும் அந்த அழைப்பில் சிக்கி பல லட்சங்களை இழந்து விடுகிறார்.

கணினி/மடிக்கணினி மூலமும்,வீட்டில் பொருத்தப்பட்ட பாதுகாப்பு காமெராக்கள் மூலமும் ஊடுருவிகள் நுழைந்து தகவல்களை திருடலாம்.



அமெரிக்காவின் மிக வயதான செவிலியர் nurse, Florence “SeeSee” Rigney,தனது 96 வது வயதில்,Tacoma General Hospital இல் இருந்து ஓய்வு பெறுகிறார்.கொரோனா காலத்தில் வேலை செய்த அவர் இதுவரை தடுப்பூசி எதையும் போடவில்லை.அவரையும் வாழ்த்துவோம்.

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1704
Join date : 23/05/2021

Back to top Go down

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Empty Re: கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்

Post by வாகரைமைந்தன் Fri Aug 13, 2021 11:46 am

செல்பி   உயிரிழப்பில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1704
Join date : 23/05/2021

Back to top Go down

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Empty eSIM

Post by வாகரைமைந்தன் Mon Aug 16, 2021 12:40 pm

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Kw1904_erstmalverstehen_esim_vergleich-Kopie-900x472

சில கணினி,மடிக்கணினி,கைகடிகாரம்...போன்றவற்றில் அமைக்கப்பட்டிருந்த eSim தற்போது கைபேசிகளிலும் அமைக்கப்படுகிறது.ஏற்கனவே சில சேவை வழங்குனர்கள் அதை ஏற்றுக் கொண்டு செயல்படுத்தத் தொடங்கி உள்ளனர்.இந்த eSim பாவனையால் கடைக்காரரிடம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை,அடிக்கடி சிம்மை மாற்ற மூடியைக் கழற்ற வேண்டிய அவசியமும் இல்லாமல் போகிறது. eSim மூலம் சுலபமாக கணினி/மடிக்கணினியில் இணைய இணைப்பை ஏற்படுத்தலாம். சுலபம்,மின்தடை இல்லை,மலிவானது.

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Samsung-Galaxy-Watch-eSIM

முதலில் சிம் கார்டு என்றால் என்ன?

SIM என்பது சந்தாதாரர் அடையாள தொகுதி (SIM - Subscriber Identity Module ) ஒவ்வொரு கைபேசி  சாதனத்தின் உள்ளே ஒரு தனிப்பட்ட அடையாளங்காட்டி, பயனருக்கு ஒதுக்கப்பட்ட தொலைபேசி எண்ணை  வழங்கி  உதவுகிறது. சிம் கார்டு உங்கள் தனிப்பட்ட தரவை சேமிக்கிறது மற்றும் சாதனத்தைப் பொறுத்து அவற்றை நீக்கக்கூடியதாக இருக்கலாம்.

சிம் கார்டு தொழில்நுட்பம் காலப்போக்கில்  சிறிய அளவிலான மைக்ரோ மற்றும் நானோ அளவிலான அட்டைகள் உற்பத்தியாளர்களுக்கு பேட்டரி அளவுகளை அதிகரிக்க அல்லது பிற அம்சங்களை சேர்க்க மொபைல் போனில் அதிக இடத்தை உருவாக்கியது. சிம் கார்டுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தைக் குறைக்கும் முயற்சியில், eSIM கள் உருவாக்கப்பட்டன.

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Esim_2

ஒரு eSIM அட்டை என்றால் என்ன?

ESIM இல் உள்ள "e" என்றால் (embedded. )உட்பொதிக்கப்பட்டது.அதாவது கைபேசி தாய்பலகையில்(Motherboard) ஒட்டி  ( solder)  இணைக்கப்பட்டுள்ளது.அதனால் சிம்களை திருட முடியாது.கைத்தொலைபேசியில் ஒரு eSIM அட்டை  புதிய செல்போன் மாடல்களில் நானோ கார்டுகளுக்கு மாற்றக மாறின.

சில செல்போன்களில் நீக்கக்கூடிய சிம் கார்டு மற்றும் இசிம் கார்டு இரண்டும் (Dual SIM) இருக்கலாம், இது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு தனி எண்கள் - தனிப்பட்ட எண் மற்றும் பணி எண் - ஒரு சாதனத்தில் இருக்க அனுமதிக்கிறது. இரட்டை சிம் அம்சம் (dual SIM  )பரவலான மொபைல் போன்களில் ஆதரிக்கப்படுகிறது.eSim கைபேசியில் ஒன்று eSim ஆக இருந்தால் மற்றது மாற்றக்கூடிய சிம் மாக இருக்கலாம்.

ஒரு eSIM அட்டை வைத்திருப்பது எனது தரவு பாதுகாப்பை மேம்படுத்துமா?

ஆம், குறிப்பிடத்தக்க பாதுகாப்பு நன்மைகள் உள்ளன. தொலைபேசியைத் திருடாமல் ஒரு eSIM கார்டைத் திருட முடியாது, அதேசமயம் நீக்கக்கூடிய சிம் கார்டுகள் சில நேரங்களில் திருடப்பட்டு, போர்ட் அவுட் மோசடிகளில் ( port out scams ) பயன்படுத்தப்படுகின்றன . பாதிக்கப்பட்டவர்களின் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைப் பெறுவதற்காக அடையாள திருடர்கள் ( identity thieves)திருடப்பட்ட சிம் கார்டுகளை வெவ்வேறு தொலைபேசிகளில் மோசடியாக மாற்றுகிறார்கள். திருடர்கள் சான்றுகளை மீட்டமைக்க முயற்சி செய்யலாம் மற்றும் பாதிக்கப்பட்டவரின் நிதி மற்றும் சமூக ஊடக கணக்குகளை அணுகலாம்.

செல்போனை மாற்றும்போது அல்லது மேம்படுத்தும்போது நுகர்வோர் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?

உங்கள் செல்போனை மாற்றவோ அல்லது புதிய மாடலுக்கு மேம்படுத்தவோ நேரம் வரும்போது, ​​உங்கள் பழைய தொலைபேசியை ஒரு  சிம் கார்டு இருக்கிறதா, ஒரு eSIM பயன்படுத்துகிறதா  கண்டுபிடிக்கவும். நீங்கள் மாற்றும் சாதனம் eSIM ஐப் பயன்படுத்தினால், சாதனத்தை அகற்றுவதற்கு அல்லது மறுசுழற்சி செய்வதற்கு முன் eSIM கார்டிலிருந்து எல்லா தரவையும் அழிக்கவும். தரவை எவ்வாறு சரியாகத் அழிப்பது என்பதற்கான வழிமுறைகளுக்கு உற்பத்தியாளர் மற்றும் உங்கள் சேவை வழங்குநரிடம் சரிபார்க்கவும். உங்கள் பழைய தொலைபேசியில் சிம் கார்டு இருந்தால், அதை நீக்க வேண்டும். நீங்கள் அதை பாதுகாப்பாக சேமிக்கலாம் அல்லது அழிக்கலாம், அதனால் அதில் உள்ள தரவு திருடப்படும் அபாயம் இல்லை.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1704
Join date : 23/05/2021

Back to top Go down

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Empty Re: கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்

Post by வாகரைமைந்தன் Wed Aug 18, 2021 1:06 pm

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் E6Rn-0qWUAQCMoZ-300x300

90 ஸ் கிட்ஸ் மட்டுமே அறிந்திருக்க கூடிய இணைய சேவையான கிளிப்பியை (Clippy ) மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த பேப்பர் கிளிப் சேவை, இமோஜியாக பயன்பாட்டிற்கு வர உள்ளது.

கிளிப்பி சேவையை மீண்டும் கொண்டு வர வேண்டுமா என மைக்ரோசாப்ட் நிறுவனம் டிவிட்டர் மூலம் நடத்திய போட்டியில், பயனாளிகளிடம் இருந்து கிளிப்பிக்கு ஆதரவாக லைக்குகள் குவிந்ததால், வழக்கமான பேப்பர் கிளிப்பிற்கு பதிலாக கிளிப்பியை இமோஜியாக அறிமுகம் செய்ய இருப்பதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

ஒரு பேப்பர் கிளிப்பிற்கு இத்தனை ஆர்பட்டமா? என வியப்பவர்கள், கிளிப்பி வரலாற்றை தெரிந்து கொண்டால், இந்த சேவையை கைத்தட்டி வரவேற்பார்கள். ஏனெனில் கிளிப்பி சாதாரண டிஜிட்டல் பேப்பர் கிளிப் மட்டும் அல்ல: இணைய உலகின் முதல் டிஜிட்டல் உதவியாளர் கிளிப்பி.

அது மட்டும் அல்ல, அந்த காலத்திலேயே ஏ.ஐ எனும் செயற்கை நுண்ணறிவின் அம்சங்களை கொண்டிருந்தது என்பதும் கூடுதல் சிறப்பு.

வளைந்து நெளிந்த பேப்பர் கிளிப் உடலில் மனித கண்களோடு, அழகான கார்ட்டூன் தோற்றம் போல அறிமுகமான கிளிப்பிட், பின்னர் கிளிப்பி என அழைக்கப்பட்டது.

கிளிப்பி வெறும் பேப்பர் கிளிப்பாக மட்டும் இருக்கவில்லை. ஒருவிதத்தில் அது புத்திசாலி பேப்பர் கிளிப்பாக இருந்தது. அதாவது பயனாளிகள், வேர்டு கோப்பில் டைப் செய்த்துவங்கும் போதே, கிளிப்பி பேப்பர் கிளிப் தானாக தோன்றி, அவர்கள் டைப் செய்யும் வார்த்தைகளுக்கு ஏற்ப பரிந்துரைகளை மேற்கொள்ளும்.

கிளிப்பியை திரையில் இருந்து தள்ளிவிடலாம் என்றாலும், மீண்டும் அது எட்டிப்பார்த்து, வேறு ஒரு பரிந்துரையை சொல்லும் அல்லது தவறு இருந்தால் சுட்டிக்காட்டும்.



>>>>>>>>>>>>>>>>
அசுடோஷ் கவுசிக் இணையம் தன்னை மன்னிக்க வேண்டும் என விரும்புகிறார். இதற்காக அவர் வழக்கும் தொடர்ந்திருக்கிறார். இணையத்தின் மன்னிப்பை வேண்டி எந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும் எனும் கேள்வி எழுவது நியாயம் தான். அசுடோஷ் உண்மையில், தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

அவரது வழக்கின் சாரம்சம் இணையம் தன்னை மறக்க வேண்டும் என்பது. இதன் மூலம் தான் மனிக்கப்பட்ட விடுவோம் என்றும் அவர் நம்புகிறார்.

அசுடோஷ் பலருக்கும் அறிமுகமானவர் தான். ரியாலிட்டி நட்சத்திரம் என குறிப்பிடப்படும் அசுடோஷ், 2007 ல் எம்டிவி ரோடீஸ் எனும் போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்று பின்னர் 2009 ல் பிக்பாசிலும் வெற்றி பெற்று பிரபலமானார். அசுடோஷ் இப்போது சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

ஆனால், அசுடோஷுக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. அவர் மறக்க விரும்பும் சர்ச்சை முகம். ஆம், 2009 ல் அசுடோஷ் குடி போதையில் பைக் ஓட்டி கைதாகியிருக்கிறார். இந்த சம்பவத்தின் போது காவலர்களோடு சண்டையும் போட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் மீது காவல்துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஒரு நாள் சிறையில் இருந்திருக்கிறார். அவரது ஓட்டுனர் உரிமமும் தற்காலிகமாக பறிக்கப்பட்டது.

ஆனால் இது பழைய அசுடோஷ். இப்போது அவர் புதிய மனிதனாகிவிட்டார். குடிபோதை சம்பவத்தை தனது கடந்த கால தவறு என்றும் ஒப்புக்கொள்கிறார். இதை மறக்கவும் விரும்புகிறார். பிரச்சனை என்னவென்றால், இணையம் இதை மறக்காமல் இருப்பது தான்.

ஆம், இப்போதும் இணையத்தில் அசுடோஷ் என தேடினால், அவர் குடி போதையில் சண்டையிட்ட வீடியோக்களும், புகைப்படங்களும் வருகின்றன. இது தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதாக அசுடோஷ் கருதுகிறார்.

இந்த மன உளைச்சலில் இருந்து விடுபட, இணையம் இந்த சம்பங்களை மறக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது, இந்த பழைய சம்பவம் தொடர்பான வீடியோக்களும், படங்களும் இணையத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும், இதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என அவர் கோரியிருக்கிறார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இத்தகைய உரிமை சட்டப்பூர்மாக்கப்பட்டுள்ளது. ஒன்றியத்தின் தரவுகள் பாதுகாப்பு சட்டம் இதற்கு இடமளிக்கிறது. அர்ஜண்டினா மற்றும் பிலிப்பைன்சிலும் இதற்கான சட்டம் இருக்கிறது. அமெரிக்காவில் இது பற்றி விவாதித்து வருகின்றனர். இந்தியாவிலும், நாடாளுமன்றத்தின் பரிசீலனையில் இருக்கும் தரவுகள் பாதுகாப்பு தொடர்பான சட்டத்தில் இதற்கான வாய்ப்பு இருக்கிறது.

.....................................................................
எப்படி சமைக்க வேண்டும் என வழிகாட்டுவதோடு, சமைக்கும் விதத்தில் ஏதேனும் தவறு செய்தால் அதை சுட்டிக்காட்டி திருத்தி நன்றாக சமைக்க உதவும் வகையில் ஒரு டிஜிட்டல் உதவியாளர் இருந்தால் எப்படி இருக்கும்?

குக்ஸி, இத்தகைய, டிஜிட்டல் சமையல் உதவியாளராக அறிமுகம் ஆகியிருக்கிறது.



hmmm  என்னமா யோசிக்கிறாங்க!!
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1704
Join date : 23/05/2021

Back to top Go down

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Empty Re: கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்

Post by வாகரைமைந்தன் Sat Aug 21, 2021 3:00 pm

இணையத்தில் சமூக வலைத்தளங்கள் மக்களை தவறாக அழைத்துச் செல்வதாகவும்,மனதளவில் பாதிக்கிறது என்றும்
குற்றம் சாட்டப்படு வரும் நிலையில்,.....

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் 75fa0c80f91d74285763f3112a827dd3

இன்ஸ்டாகிராம் புத்தம் புதிய கான்ஃபிடென்ஸ் பூஸ்ட் (confidence boost) செயல்பாட்டை வெளியிட்டது. இது குறைந்த வேனிட்டி உள்ள வாடிக்கையாளர்களை உடனடியாக தங்கள் சொந்த வாழ்க்கையை விட மிகவும் மோசமாக இருக்கும் நபர்களிடமிருந்து (அசிங்கமான அல்லது ஏழை அல்லது வெறுமனே  எதுவும் இல்லாத)இடுகைகளை வெளிப்படுத்துவதன் மூலம் தங்களைப் பற்றி உயர்வாக உணர அனுமதிக்கும்.

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் 62446abd8b9be3e7a455df7135728472
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1704
Join date : 23/05/2021

Back to top Go down

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Empty Re: கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்

Post by வாகரைமைந்தன் Wed Aug 25, 2021 12:43 am

கூகுள் குரோம் உலகளவில் 2 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. இது உலாவியை ஹேக்கர்கள் மற்றும் பிற இணையக் குற்றவாளிகளின் முக்கிய இலக்காக ஆக்குகிறது, துரதிருஷ்டவசமாக, பயனர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க பாதுகாப்பு அம்சங்கள் எப்போதும் போதாது. இந்த வார இறுதியில், கூகிள் தொழில்நுட்ப நிறுவனமானது இரண்டு மாதங்களில் அதன் நான்காவது அவசர புதுப்பிப்பை வெளியிட்டது.

பாதுகாப்பான உலாவிகளைப் பார்க்கத் தொடங்க வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன்.கூகிள் குரோம் உலாவியில் இருந்து பாதுகாப்பான உலாவிக்கு மாறுவதுதான் உங்களைப் பாதுகாப்பதற்கான ஒரே வழி.

உங்கள் உலாவியை சோதனை செய்தால்..இப்படி முடிவு வரவேண்டும்.
கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் You-are-not-tracked.png?q=50&fit=crop&w=750&dpr=1

அப்படி வராமல் இப்படி வந்தால்..உங்கள் உலாவி பல தகவல்களை வெளிப்படுத்தி தனிப்பட்ட பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்குகிறது எனப் பொருள் கொள்ளலாம்.
கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் You-are-tracked.png?q=50&fit=crop&w=750&dpr=1
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1704
Join date : 23/05/2021

Back to top Go down

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Empty விண்டோஸ் -11

Post by வாகரைமைந்தன் Wed Sep 01, 2021 11:57 am

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Windows-11-Insider-Preview-Build-22000.100-Search-interface-position-left-aligned

மைக்ரோசாப்டின் வரவிருக்கும் விண்டோஸ் 11 இயங்குதளத்தின் வெளியீட்டு தேதி அக்டோபர்  5, 2021 என மைக்ரோசாப்ட் நேற்றைய தினம்  விண்டோஸ்  வலைப்பதிவில் தேதியை அறிவித்தது. விண்டோஸின் புதிய பதிப்பு ,இணக்கமான விண்டோஸ் 10 சாதனங்களுக்கும், மற்றும் மடிக்கணினிகள் போன்ற சாதனங்களில் முன் ஏற்றமாகவும் கிடைக்கும். இப்போது கிடைக்கும் எல்லா சாதனங்களும் மைக்ரோசாப்டின் விண்டோஸ் 11 இயங்குதளத்துடன் ஒத்துப்போகவில்லை என்பதால், விண்டோஸ் 11 உடன் புதிய பிசி அல்லது லேப்டாப் இணக்கமாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்ய மைக்ரோசொப்ட் வெளியிட்டுள்ள  வழிகாட்டியைப் பார்க்கவும்.

அனைத்து விண்டோஸ் 10 சாதனங்களும் விண்டோஸ் 11 க்கு மேம்படுத்தும் வாய்ப்பை பெறாது, ஏனெனில் மைக்ரோசாப்ட் மேம்படுத்தல்களை சிறப்பாக கண்காணிக்க ஒரு கட்ட ரோல்அவுட்டை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. மைக்ரோசாப்ட் படி, புதிய சாதனங்கள் முதலில் மேம்படுத்தல் வழங்கப்படும். இந்த சாதனங்கள் விண்டோஸ் 11 சிஸ்டம் தேவைகளை பூர்த்தி செய்தால், அது படிப்படியாக மற்ற சாதனங்களுக்கும்  கிடைக்கும்.

மேம்படுத்தலுக்கு தகுதியான அனைத்து விண்டோஸ் 10 சாதனங்களும் விண்டோஸ் அப்டேட்ஸ் மூலம் பெறுவதற்கு 2022 நடுப்பகுதி வரை ஆகும் என்று மைக்ரோசாப்ட் மதிப்பிடுகிறது. விண்டோஸ் 10 பயனர்கள் நிறுவனத்தின் சொந்த பிசி ஹெல்த் செக் கருவியை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

அப்படி ஒத்துப் போகாத கணினிகளில் விண்டோஸ் 11 ஐ இயக்க விரும்புபவர்கள் தாமாகவே தரவிறக்கி பயன்படுத்தலாம். வழமையான விண்டோஸ் அப்டேட் மூலம் தகுதியற்ற கணினிகளுக்கு அப்டேட் கிடைக்காது.

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1704
Join date : 23/05/2021

Back to top Go down

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Empty Aurora 7

Post by வாகரைமைந்தன் Sun Sep 05, 2021 1:09 pm

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Expanscape-aurora-3  
           
எக்ஸ்பான்ஸ்கேப் அரோரா 7   ( expanscape Aurora 7) முன்மாதிரி உலகின் முதல் ஏழு திரை மடிக்கணினியாக விற்பனை செய்யப்படுகிறது, இது 17.3 அங்குல  ஐடி வல்லுநர்கள் மற்றும் உள்ளடக்க படைப்பாளர்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

அரொரா-7 மடிக்கணினி ஏழு மடிப்புகள் கொண்டது.17.3 அங்குல திரைஅமைப்பு அளவுடைய இந்த மடிக்கணினியில் 4 திரைகள் 4K யும் மூன்று திரைகள் FHD திரையும் கொண்டவை.

மடிக்கணினி Intel Core i9-9900K processor (அல்லது AMD's Ryzen 9 3950X / Intel's Core i9-10900K வேண்டியதை தெரிவு செய்யலாம்) , 64GB of DDR4-2666 RAM, NVIDIA GeForce GTX 1060 கொண்டவை.இரண்டு பாட்டரிகள் கொண்ட கணினி பாட்டரி ஆயுட்காலம் 140 நிமிடங்கள்.





வாழும் நாட்டை விட் வேறொரு நாட்டில் உள்ள இணையத்தளங்களை பார்க்க விரும்பினால் கூகிள் அனுமதிக்காது.அப்படி போக விரும்பினால், கூகிள்.கொம் சென்று வலது கீழ் மூலையில் உள்ள settings-search settings இல் விரும்பிய நாட்டை மாற்றி பார்க்க முடியும். இது தற்காலிக தீர்வுதான்.

அல்லது அட்ரஸ் பாரில் தேடும் சொல்லுடன் &gl=jp என்பதை சேர்த்து தேடினால் விரும்பிய நாட்டை காணலாம். jp என்பது ஜப்பானைக் குறிக்கும்.ஜேர்மனி-de,அமெரிக்கா-us,தென் கொரியா-kr இப்படிக் கொடுத்து தேடலாம்.

news &gl=us என அமெரிக்க செய்திகளை அமெரிக்க தளங்கள் ஊடாக தேடலாம்.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1704
Join date : 23/05/2021

Back to top Go down

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Empty மூடுபனி கணினி( fog computing) என்றால் என்ன?

Post by வாகரைமைந்தன் Wed Sep 08, 2021 12:55 pm

என்ற கேள்வி நம்மனைவர் மனதிலும் எழும் நிற்க.ஆரம்ப நாட்களில், கணினிகள் மிகப்பெரியதாகவும் அதிகவிலை உயர்ந்ததாகவும் இருந்தன. அதனால் நாம் வாழும் இவ்வுலகில் ஒரு சிலரே அவற்றினை பயன்படுத்தி கொண்டிருந்தனர், மேலும் அவர்கள் அவ்வாறானதொரு கணினியை செயல்படுத்திடு வதற்காக வென  அதிக நேரத்தை ஒதுக்கி துளையிடப்பட்ட அட்டைகளை( punch cards) பயன்படுத்த வேண்டியிருந்தது  (நேரடியாக காண்பிக்க வேண்டியிருந்தது). இதுவே  mainframes  எனஅழைக்கப்பட்டது. இவ்வமைப்புகள் பல்வேறு கண்டுபிடிப்புகளைச் செய்தன மேலும் முனைமங்களில் (மேசைக்கணினிகள் போன்றவை, ஆனால் அவைகளில் சொந்த CPU இல்லாமல்) நேரத்தைப் பகிர்ந்துகொள்கின்ற பணிகளை செயல்படுத்தின.

அதனை தொடர்ந்து பல்வேறுஆராய்ச்சிகளின் பயனாக மேம்படுத்தபட்டு தற்போது சக்திவாய்ந்த கணினியானது மிகவும் மலிவாகவும், கடனட்டையை விட பெரியதாக இல்லாத வாறும்  முன்னேற்றங்கண்டு பயன்பாட்டிலுள்ளது, அதிலும் தற்போதைய  நம்முடைய நவீன வாழ்க்கையில் அனைத்து தரவுகளையும் சேகரித்து செயலாக்குகின்றவாறும் நாம் பயன்படுத்துகின்ற மிகச் சிறிய சாதனங்களையும் செயல்படுத்துகின்றவாறும் மாறிவிட்டன. என்பவையே இந்த கணினிகளின் தொகுப்பைப் பற்றிய தற்போதைய நிலையாகும், மேலும் இந்த சாதனங்கள் அனைத்தும்  கடற்கரையிலுள்ள  மணல் துகள்கள் போன்றவை அல்லது வானத்திலுள்ள கருமேகத்தின் தண்ணீர்துளிகள் போன்றவை என கற்பனை செய்துகொள்ளலாம்.

“மேககணினி(cloud computing)” என்ற சொல் ஏற்கனவே ஆக்கிரமித்துவிட்டது, எனவே பொருட்களுக்கான இணையம் (Internet of Things (IoT))என்பதற்கும் முடிவுசெய்கின்ற திறனுடையதாக அமைந்துள்ள பிற சேவையகங்களை உள்ளடக்கிய பிணையத்திற்கும் ஒரு தனித்துவமான பெயர் இருக்க வேண்டும் அல்லவா. தவிர,  தரவுகளின் மையங்களின் முனைமங்களைக் குறிப்பதற்காக ஏற்கனவே மேககணினி என ஒன்று இருப்பதால், அந்த மேககணினிக்கு வெளியே பொதுமக்களை ஒன்றிணைக்கின்ற முனைமங்களில் தனித்துவமான ஒன்று இருக்கிறது அதுவே மூடுபணிகணினியாகும்( fog computing).

மூடுபனி கணினியின்  ( fog computing)வருகை

மேககணினியானது இணையத்திற்கான  சேவைகளை வழங்குகிறது. ஆனால் மேககணினியை உருவாக்குகின்ற தரவுகளின் மையங்கள் அவற்றின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது மிகப்பெரியவை களாகவும் ஒப்பீட்டளவில் மிகவும்குறைவாகவும் உள்ளன. மேகக்கணிக்கும் அதனுடைய பல்வேறு பயனாளர் களுக்கும் இடையில் தரவுகள் முன்னும் பின்னுமாக அதற்கான பாதைகளில் அனுப்பப்படும் போது அவைஒரு  குறுகிய பாதைவழியாக செல்வதால் தரவுகளின் போக்குவரத்தில் தடைகளை (சிக்கல்களை)உருவாக்குகின்றன.

இதற்கு மாறாக  மூடுபணி கணினியானது,அதன் வாடிக்கையாளர்களுடனான தரவுகளின் போக்குவரத்திற்கான பாதையானது குறுகிய பாதையாக இல்லாமல் தரவுகளின் போக்குவரத்தில் எந்ததடைகளையும் (சிக்கல்களையும்) ஏற்டுத்தாமல் எந்தவொரு இடையூறுக்கும் ஆளாகாமல்  செயல்படுகின்றது, ஏனெனில் இதில் பயன்படுத்தி கொள்ளப்படும் சாதனங்களே தரவுகளின் சேகரிப்பினை அல்லது கணக்கீட்டின் பெரும்பகுதியைச் செய்கின்றன. இவ்வாறான மேககணினியின் வெளிப்புற “விளிம்புநிலை(edge)”, ஆனது வானத்திலுள்ள கருமேகமானது தரையை தொடுகின்றபகுதி (அடிவானம்)போன்று விளங்குகின்றது.

மூடுபனிகணினியும்  ( fog computing)விளிம்புநிலை கணினியும் (edge computing)

மூடுபனி கணினி , விளிம்புநிலை நிலைகணினி ஆகிய இரண்டும் அடிப் படை யில் ஒத்தவைகளாகும். இவ்விரண்டும் மேககணினி, பொருட்களுக்கான இணையம்(IoT) ஆகிய இரண்டிலும் வலுவான தொடர்புகளைக் கொண்டுள்ளன மேலும் இவை ஒரே கட்டமைப்பு அனுமானங்களை உருவாக்குகின்றன:இவை தங்களுடைய பணியைச் செய்யும் CPU உடன் நெருக்கமாக இருப்பதால், தரவுகளின் பரிமாற்றமானது மிகவிரைவாக இருக்கின்றன.

லினக்ஸைப் போலவே, சிறிய, அதே நோக்கத்துடன் கட்டமைக்கப்பட்ட கணினிகளைக் கொண்டிருப்பதற்கு ஒரு வலுவான நன்மை இருக்கிறது, அது “ஒரேயொரு செயலை செய் அதையும் சிறப்பாகச் செய்.” (நிச்சயமாக, இந்த சாதனங்கள் உண்மையில் குறிப்பிட்ட ஒருசெயலைவிட அதிகமாகவே செய்கின்றன, ஆனால் ஒரு உயர் மட்ட பார்வையில், நம்முடைய உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்க நாம் வாங்கி நம்முடைய கையில் கட்டி பயன்படுத்திகொள்கின்ற திறன்கடிகாரமானது அடிப்படையில் “ஒரேயொரு” செயலை மட்டுமே செய்கிறது.)

பொதுவாக இவை செயல்படும்போது இணையத்துடன் இணைப்பில்லாமல் இருப்பது தவிர்க்க முடியாத நிலையாகும், ஆனால் ஒரு நல்ல சாதனம் இணைய இணைப்பில்லாத இடைக்காலத்திலும்கூட திறம்பட செயல்படுகின்றது, பின்னர் மீண்டும் இணையத்துடன் இணையும்போது தரவுகளை நிகழ்நிலை படுத்தி கொள்வதற்காக ஒத்திசைவாக செயல்படுகின்றது.  பெரியஅளவிலான தரவுகளின் மையங்களை விட வளாக சாதனங்கள் எளிமையாகவும் மலிவாகவும் இருக்கின்றன

 விளிம்பு நிலைகணினியில் வலைபின்னல்

மூடுபனி கணினியானது மேககணினியிலிருந்து முற்றிலும் தனித்து செயல்படுமாறு தூண்டுகிறது, ஆனால் அவை மொத்தத்தில் இரண்டு பகுதிகளே. பொது மேககணினி வழங்குநர்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், தங்களுடைய சொந்த சேவைகளை இயக்குகின்ற சிறப்பு நிறுவனங்கள் உட்பட எண்ணிம(digital ) நிறுவனத்தின் உள்கட்டமைப்பு ஆனது மேகக்கணிக்கு தேவையாகும். மேககணினி யின்உள்ளகத்திற்கும்(core ) அதனுடைய மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கும் இடையில் வழித்தடங்களை வழங்க உள்ளூர்மயமாக்கப்பட்ட சேவைகள் மிக முக்கியமாகும்.

பொதுவாக மூடுபனி கணினியானது, மேககணினியின் விளிம்பில் அமைந்துள்ளது, ஆயினும் இது வாடிக்கையாளர்கள் எங்கிருந்தாலும் ஒன்றிணைக்கிறது. ஒருசில நேரங்களில், இதுநம்முடைய சொந்த வீடு அல்லது மகிழ்வுந்து வண்டி போன்ற நுகர்வோர் அமைப்பாகவும் திகழ்கின்றது, மற்ற நேரங்களில், இது ஒரு சில்லறை விற்பனை கடையில் விலை கண்காணிப்பு சாதனங்கள் அல்லது ஒரு தொழிற் சாலையில் உள்ள முக்கிய பாதுகாப்பு உணர்விகள்(sensors) போன்ற வணிக செயல்பாடாகவும் அமைந்துள்ளன.

மூடுபனி கணினி நம்மை சுற்றி உள்ளது:நடைமுறையில் மூடுபனி கணினி என்பது நம்முடைய  வாழ்வில் இணைக்கப்பட்ட அனைத்து சாதனங்களாலும் கட்டமைக்கப் பட்டுள்ளது: drones, கைபேசிகள், கைக்கடிகாரங்கள், உடற்பயிற்சி கண்காணிப்பாளர்கள், பாதுகாப்பு கண்காணிப் பாளர்கள், வீட்டு தானியங்கி கருவிகள், கையடக்க விளையாட்டு சாதனங்கள், வீட்டுதோட்டங்களில் பயன்படுத்தி கொள்ளப்படும் தானியங்கி சாதனங்கள், வானிலைஉணர்விகள், காற்று-தர கண்காணிப்பான்கள்  போன்ற பல்வேறு சாதனங்கள் இந்த மூடுபனி கணினியின் அடிப்படையிலேயே செயல்படக்  கூடியவைகளாகும். , இது வழங்குகின்ற தரவுகள் சிறந்த, தகவலறிந்த எதிர்காலத்தை உருவாக்க உதவுகின்றன.

உடல்நலனையும் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்து வதற்காக அல்லது நம்முடைய வாழ்க்கையை இன்னும் கொஞ்சம் சுவாரசிய மாக்குவதற்கு ஏராளமான வகையில் பெரியபெரிய திறமூல செயல்திட்டங்கள் இந்த மூடுபணியின் வாயிலாக செயல்படுவதற்கு தயாராக உள்ளன – இவையனைத்தும் இந்த மூடுபனிகணினி, மேககணினி ஆகிய வற்றிற்கு நன்றி செலுத்த கடமைபட்டுள்ளன. எது எவ்வாறாயினும்,  இவை திறமூல(கட்டற்ற) நிலையில் இருப்பதை உறுதி செய்கின்றன என்பதே இதன்சிறப்பாகும்.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1704
Join date : 23/05/2021

Back to top Go down

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Empty விசைப்பலகையிலுள்ள ஆங்கிலத்தின்பெரியஎழுத்துகளுக்கான வரலாறு

Post by வாகரைமைந்தன் Wed Sep 08, 2021 1:04 pm

முந்தைய நாட்களில், பெரும்பாலான தட்டச்சுப்பொறிகள் ஆங்கிலத்தின்பெரிய எழுத்துக்களை மட்டுமே உருவாக்கம் செய்தன. 1870 களில், தட்டச்சுப்பொறி உற்பத்தியாளரான ரெமிங்டன் என்பவர் ஆங்கில பெறிய எழுத்துக்களையும் சிறிய எழுத்துக்களையும் ஒருங்கிணைந்து தட்டச்சு செய்வதற்கான எளிய வழிமுறையைக் கண்டுபிடித்தார். ஒவ்வொரு தட்டச்சுப்பொறியிலும் இரண்டு சின்னங்கள் அல்லது எழுத்துக்களை (பெரிய எழுத்து,சிறியஎழுத்து போன்றவை) வைப்பதன் மூலம் உலோகத் துண்டு காகிதத்தில் அழுத்தி இரண்டுவகையான எழுத்துகளையும் தட்டச்சுசெய்திடுமாறு கட்டமைக்கப்பட்டது

இவ்விரண்டுஎழுத்துகளுக்கும் இடையில் மாறிடுவதற்காக, ஷிப்ட்(Shift) எனும் விசையைப் பயன்படுத்திடுவோம், இது பட்டி வகை கருவிமுழுவதையும் இயல்பாக நகர்த்தியது. இது தட்டச்சுப்பொறியின் வேறுபட்ட பகுதியை நாடாவை அழுத்தி வெவ்வேறு எழுத்துகளை உருவாக்க உதவியது.

இந்த ஷிப்ட் விசையைப் பயன்படுத்துவதற்கு ஒப்பீட்டளவில் பெரிய அளவிலான இயந்திர சக்தி தேவைப்படுவதால், எல்லா பெரியஎழுத்துகளையும் தட்டச்சு செய்ய அதை தொடர்ந்து கீழே அழுத்தி பிடித்து வைத்திருப்பது அதிக மனச்சோர்வு ஏற்படுத்துவதாகவும் தொந்தரவாகவும் இருந்துவந்தது. இதை சரிசெய்ய, ஷிப்ட் லாக்( Shift Lock) எனும் புதிய விசை கண்டுபிடிக்கப்பட்டது. இது அடிப்படையில் மாற்று பொறிமுறையில் செயல்படுகின்ற ஒரு பூட்டினை திறப்பதற்கான தாழ்ப்பாளை போன்ற விசையாக இருந்தது, . இதனை பெரும்பாலோனார்களால் Lock என்று பெயரிடப்பட்டது.

ஷிப்ட் லாக் ஆனது Caps Lock ஆன வரலாறு
தட்டச்சுப்பொறிகளில், ஷிப்ட் லாக் ஆனது ஆங்கிலத்தில் சிறிய எழுத்துகளை பெரிய எழுத்துகளாகவும் அத்துடன் எண்களை குறியீடுகளாகவும் ஒவ்வொரு விசையின் செயல்பாட்டையும் மாற்றியமைத்தது,

கணினி சகாப்தத்தில், தட்டச்சுப்பொறிகளில்இருந்து விசைகள் அனைத்தும் அப்படியே மாறுதல் எதுவும் இல்லாமல் கணினியின் இயல்புநிலை விசைப்பலகைகளாக பயன்படுத்தி கொள்ளப்பட்டது, எனவே தட்டச்சு பொறியின் Lock எனும் விசையையும் கணினி விசைப்பலகையிலும் கொண்டுவரப்பட்டது. அதாவது ஒரு சில முனைமத்திலும் கணினி விசைப்பலகைகளிலும் ஷிப்ட் லாக், கேப்ஸ் லாக் ஆகியஇரு விசைகளையும் தக்க வைத்துக் கொண்டன, . இந்த விசையானது சிறிய எழுத்துக்களை பெரிய எழுத்திற்கு மட்டுமே மாற்றியது மேலும் வேறு எந்த விசைகளையும் பாதிக்கவில்லை

இந்த கேப்ஸ் லாக்இற்கான காப்புரிமை 1968 வழங்கப்பட்டுள்ளது இது Douglas A. Kerr of Bell Labs கண்டுபிடித்த மின்னணு முனைம விசைப்பலகைக்கு பொருந்தும்.ஆனால் காப்புரிமைகள் எப்போதும் உண்மையான தயாரிப்புகளாக மொழிபெயர்க்காது. வணிக உற்பத்தியில் உண்மையான கேப்ஸ் லாக் விசையை நாம் காணக்கூடிய முந்தைய பதிவு LA36 DECwriter II முனைமம் / தொலைநிலைஅச்சிடுதலில் கட்டப்பட்ட விசைப்பலகை ஆகும். 1974 இல் அறிவிக்கப்பட்டது, இது ஒரு தொலைநிலைதட்டச்சு மற்றும் கணினி அச்சுப்பொறி ஒன்றில் உருட்டப்பட்டது.

1970 களில் ஆப்பிள் II மற்றும் டிஆர்எஸ் -80 மாதிரி 1 போன்ற பல ஆரம்பகால வீட்டு கணினிகள் சிறிய எழுத்துக்களை ஆதரிக்கவில்லை, எனவே கேப்ஸ் லாக் தேவையில்லை. இருப்பினும், ஐபிஎம் தேர்வு தட்டச்சுப்பொறி தளவமைப்பிலிருந்து பெருமளவில் கடன் வாங்கிய ஐபிஎம் முனைமங்கள் பெரும்பாலும் ஷிப்ட் லாக் மற்றும் கேப்ஸ் லாக் விசையை உள்ளடக்கியது

1981 ஆம் ஆண்டில் ஐபிஎம் தனது தனிப்பட்ட கணினியை உருவாக்கியபோது,அதில் கேப்ஸ் லாக் விசையும் இருந்தது, ஆனால் ஐபிஎம் அதை விண்டோ வெளியீட்டுப் பட்டியின் வலதுபுறத்தில் நிலைநிறுத்தியது-ஒப்பீட்டளவில் வெளியேற்றவில்லை. A விசையின் இடதுபுறத்தில், அதற்கு பதிலாக இந்த கட்டுப்பாட்டு விசையை காணலாம்

1984, ஐபிஎம் அதன் விசைப்பலகை தளவமைப்பை 101-விசைகளானவை விரிவாக்கப்பட்ட விசைப்பலகைக்கு மாற்றியபோது, அது கேப்ஸ் லாக் விசையை A இன் இடதுபுறத்தில் வைத்தது

கேப்ஸ் லாக் பற்றி பலர் புகார் செய்தாலும், மற்றவர்கள் நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்த அதை பயன்படுத்துகின்றனர். மிகவும் பொதுவான பயன்பாடுகளில் சில:
தலைப்புகள்: வெவ்வேறு எழுத்துருக்கள் கிடைக்காத தட்டச்சுப்பொறி சகாப்தத்திற்கு இது ஒரு கொடையாகும்.
வரிசை அல்லது விண்டோ எண்கள்: இவற்றில் பல பெரிய எழுத்துக்களை மட்டுமே கொண்டிருக்கின்றன.
சட்ட ஒப்பந்தங்கள்: தட்டச்சுப்பொறி காலத்திலிருந்து சட்டப்பூர்வ ஆவணங்களில் வக்கீல்கள் அனைத்து எழுத்துகளையும் பயன்படுத்தினர்.

கட்டடக்கலை திட்டங்களில் கூறுகளை வெளிடுவதற்கு: கையால் எழுதப்பட்ட கடிதங்களின் நாட்களில் இருந்து கட்டிடக் கலைஞர்கள் இதைச் செய்துள்ளனர். இன்றும், அவர்கள் சிஏடி திட்டங்களில் கையெழுத்து போன்ற கட்டடக்கலை எழுத்துருக்களைப் பயன்படுத்துகின்றனர்.

Caps Lock ஐ பயன்படுத்தாமல் எழுத்துகளை பெரிய எழுத்தாக மாற்றியமைத்தல்

எம்எஸ் வேர்டில் பெரிய எழுத்தாக மாற்றவேண்டிய உரைகளை தெரிவுசெய்து கொண்டு Ctrl+Shift+A ஆகிய மூன்று விசைகளை அழுத்தினால் போதும்

அவ்வாறே Google Docsஇல் பெரிய எழுத்தாக மாற்ற விரும்பும் உரைகளை தெரிவுசெய்து கொண்டு பட்டியின் பட்டையில் உள்ள Format > Text > Capitalization > UPPERCASE என்றவாறு வாய்ப்புகளை தெரிவுசெய்து சொடுக்குக

மேலும் Pagesஇல் பெரிய எழுத்தாக மாற்ற விரும்பும் உரைகளை தெரிவுசெய்து கொண்டு பட்டியின் பட்டையில் உள்ள Format > Font > Capitalization > All Caps என்றவாறு வாய்ப்புகளை தெரிவுசெய்து சொடுக்குக
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1704
Join date : 23/05/2021

Back to top Go down

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Empty Windos 11 - TPM

Post by வாகரைமைந்தன் Mon Sep 13, 2021 1:15 pm

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் 00WRcIsF5qAdtZ3gMHuKutN-3.1624642902.fit_lim.size_1600x900

விண்டோஸ் 11 அக்தோபர் 5 இல்  இருந்து அப்கிரேட் செய்ய தொடங்குவதாக மைக்ரோசொப்ட் தெரிவித்திருந்த நிலையில்,..விண்டோஸ் 10 ஐ விட 11 வேகம் கூடியதாக இருக்கும் என அறிவித்து,விண்டோஸ் 11 க்கு மேம்படுத்த TPM (Trusted Platform Module  ) இருக்க வேண்டும் எனவும்,TPM 1.2 இல் சரியாக வேலை செய்யாது எனவும்,TPM 2.0 இருக்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறது.

இந்த TPM என்றால் என்ன>                                                                                                                                                      
TPM (Trusted Platform Module  ) -TPM 2.0 technology என்பது அக்தோபர் 2016 இல் வெளியானது.இது கணினியில் உள்ள  BIOS (basic input/output system ) சிறிய சிப் ஆக அல்லது CPU இல் சேர்ந்தே இருக்கலாம்..AMD இல் fTPM எனவும் Intel இல் IPTT எனவும் BIOS இல் காட்டப்பட்டிருக்கும்.

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் 05DC5crEegMTwyajgV3e6zw-3.fit_lim.size_1017x

(ஒவ்வொரு முறையும்  கதவில்- சிமாட் டோர்- பாதுகாப்பு அலாரம் அல்லது உங்கள் வங்கிக் கணக்கில் உள்நுழைய, உங்கள் தொலைபேசியில்  கணினியில் பயன்படுத்தும் அங்கீகார பயன்பாடு-  உங்கள் கணினியை இயக்குவது உங்கள் வீட்டின் முன் கதவைத் திறப்பது அல்லது உள்நுழைவு பக்கத்தில் உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடுவது போன்றது. ஒரு குறுகிய காலத்திற்குள் நீங்கள் குறியீட்டை உள்ளிடவில்லை என்றால், அலாரங்கள் ஒலிக்கும் அல்லது உங்கள் பணத்தை நீங்கள் அணுக முடியாது.)
 
அதேபோல், முழு வட்டு குறியாக்கம் (full-disk encryption ) மற்றும் டிபிஎம் பயன்படுத்தும் புதிய கணினியில் நீங்கள் ஆற்றல் பொத்தானை (power button)அழுத்தினால், சிறிய சிப் கிரிப்டோகிராஃபிக் விசை (cryptographic key) எனப்படும் தனித்துவமான குறியீட்டை வழங்கும். எல்லாம் சாதாரணமாக இருந்தால், இயக்கி குறியாக்கம் (drive encryption  )திறக்கப்பட்டு உங்கள் கணினி தொடங்கும்.  சிக்கல் இருந்தால் - ஒருசமயம்   ஹேக்கர் உங்கள் மடிக்கணினியை திருடி உள்ளே உள்ள மறைகுறியாக்கப்பட்ட இயக்ககத்தை சேதப்படுத்த முயன்றால்- உங்கள் கணினி துவக்கப்படாது.இந்த வேலையை TPM செய்கிறது.சில கணினி பையஸ் இல் டிசபிள் செய்திருந்தால் enable செய்து கொள்ள வேண்டும்

இது கட்டாயம் எனவும் கணினி பாதுகாப்புக்காகவே இந்த முடிவு எனவும் சொல்லப்படுகிறது.

உக்ரேனியாவைச் சேர்ந்த Glib Oleksandr Ivanov-Tolpintsev என்பவர் மால்வெயர் botnet மூலம் வாரத்துக்கு 2000 லாக்கின்-பாஸ்வேர்ட் களை திருடி விற்ற குற்றத்திற்காக அமெரிக்க நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்.அவருக்கு 17 வருடம் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
ஐந்து முதல் ஏழு வருடங்களுக்கு முந்தைய கணினியாக இருந்தால் TPM இருக்க வாய்ப்பில்லை. எப்படித் தெரிந்து கொள்வது?

 Start > Settings (விண்டோஸ் கீ+I ) >Update & Security > Windows Security > Device Security
இங்கே TPM இல்லையானால் Security Processor என்பது இருக்காது.

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Windows-10-device-security-tpm

இன்னொருமுறை..
 Windos key +R ..அங்கே Type ‘ tpm.msc’ செய்தால்...அங்கே TPM எந்த version என்பதுடன்  காணலாம்.
கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் CKjL4o4iEXQdcDLrRkZ4ZM-970-80.jpg

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Check-tpm-2.0-support-windows

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1704
Join date : 23/05/2021

Back to top Go down

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Empty Re: கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்

Post by வாகரைமைந்தன் Thu Sep 16, 2021 8:32 pm

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Microsoft-passwordless-account

மைக்ரோசாப்ட் இன்று தனிப்பட்ட மைக்ரோசாஃப்ட் கணக்குகளுக்கான புதிய கடவுச்சொல் இல்லாத கணக்கு அம்சத்தை அறிவித்திருக்கிறது. இந்த அம்சம் வரவிருக்கும் மாதங்களில் அனைத்து தனிப்பட்ட மைக்ரோசாஃப்ட் கணக்கு வாடிக்கையாளர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Set-up-passwordless-account

மைக்ரோசாப்ட் கணக்குகள், இணையம் போன்ற  பெரும்பாலான பயனர் கணக்குகளைப் போலவே, பாதுகாப்பிற்கு கடவுச்சொல் தேவைப்படுகிறது. மைக்ரோசாப்டின் அங்கீகார பயன்பாடு அல்லது பிற வழிகளைப் பயன்படுத்தி இரண்டு-படி சரிபார்ப்பை இயக்குவதன் மூலம் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பை மேம்படுத்தலாம்.

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Password-removed

இன்று முதல், வாடிக்கையாளர்கள் கடவுச்சொல் இல்லாத கணக்கை கணக்கில் உள்நுழையச் செய்யலாம், எ.கா. விண்டோஸ் சாதனங்கள் அல்லது மைக்ரோசாப்ட் வலைத்தளங்களில், கணக்கு கடவுச்சொல்லை வழங்காமல் உள்நுழைய முடியும்.

கூகிள் குரோம் உலாவியைப் பாவிப்பவர்கள், சமீபத்தைய  இணைய பாதிப்புகளான ரன்சம்வெயர்,சீரோ டே ( zero-day vulnerabilities )பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பதற்காக   CVE-2021-30632 /CVE-2021-30633  உட்பட 11  பாதுகாப்பு அப்டேட்களை செய்திருக்கிறது. உலாவி தொடங்கும் போது தானாகவே குரோம் உலாவி அப்டேட் செய்து கொள்ளும்.அப்படி செய்யாவிட்டால் உடன் பாதுகாப்பு அப்டேட்களை செய்து கொள்வது நல்லதாகும்.(Chrome menu > Help > About Google Chrome)
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1704
Join date : 23/05/2021

Back to top Go down

கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள் Empty Re: கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum