TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 11:34 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:07 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 2:33 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 7:28 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 6:45 am

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 5:22 am

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 5:19 am

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 5:14 am

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 5:08 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 5:56 am

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 2:45 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:01 am

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 8:49 am

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:28 am

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 2:56 am

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 12:45 am

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Thu Aug 11, 2022 11:58 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:18 am

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Thu Jul 21, 2022 10:44 pm

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Thu Jul 14, 2022 11:29 pm

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 2:46 am

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 2:37 am

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 4:17 am

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 2:34 am

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Sun Dec 12, 2021 5:14 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 9:44 am

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 2:39 am

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 3:15 am

» மனசு அமைதி பெற .......
by veelratna Sun Nov 07, 2021 10:43 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:41 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Sun Nov 07, 2021 10:36 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Sun Nov 07, 2021 10:34 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:28 pm

» புது வரவு விளையாட்டு
by veelratna Sun Nov 07, 2021 10:26 pm

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Mon Oct 25, 2021 11:21 pm

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Mon Oct 25, 2021 11:18 pm

» மெல்லிசை பாடல்
by veelratna Sun Oct 24, 2021 11:05 pm

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Sun Oct 24, 2021 11:01 pm

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:23 am


தமிழர்களை கெட்டவர்களா காட்டுவதை இந்த படத்திலும் தவறாமல் செய்திருக்கிறார்கள்அயூபிண்டே புஸ்தகம்: என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?

2 posters

Go down

தமிழர்களை கெட்டவர்களா காட்டுவதை இந்த படத்திலும் தவறாமல் செய்திருக்கிறார்கள்அயூபிண்டே புஸ்தகம்: என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? Empty தமிழர்களை கெட்டவர்களா காட்டுவதை இந்த படத்திலும் தவறாமல் செய்திருக்கிறார்கள்அயூபிண்டே புஸ்தகம்: என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?

Post by மாலதி Mon Nov 17, 2014 6:27 pm

சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் அலோஷி (ஃபஹத் பாசில்) எனும் கதாபாத்திரத்தை சுற்றி நடக்கும் கதைதான் ’அயூபின்டே புஸ்தகம்’. ஒளிப்பதிவாளராக மலையாளத் திரையுலகில் அறிமுகமாகி பின் இயக்குநரான அமல் நீரத் இயக்கியிருக்கும் படம்.
தமிழர்களை கெட்டவர்களா காட்டுவதை இந்த படத்திலும் தவறாமல் செய்திருக்கிறார்கள்அயூபிண்டே புஸ்தகம்: என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? 10sow  1900-ல் தொடங்குகிறது கதை. மூணார் பகுதியில் சொந்தமாக தேயிலைத் தோட்டம் வைத்திருக்கிறார் ஹாரிசன் எனும் ஆங்கிலேயர். அவரிடம் வேலை செய்யும் விசுவாசமான வேலைக்காரன் தான் அயூப் (லால்). ஒரு கட்டத்தில் ஹாரிசன் இறந்துவிட அவரின் மனைவி கழலியை (லீனா) துரத்தி அடித்துவிட்டு சொத்தை எல்லாம் தனதாகிக் கொள்கிறார் லால். லாலிற்கு மூன்று மகன்கள். முதல் இருவரும் முரடர்களாக வளர, கடைசி மகன் அலோஷி (ஃபகத்) மட்டும் நல்ல குணங்களுடன் வளர்கிறார். கழலியின் மகள் மார்த்தா (இஷா ஷர்வானி)வும் ஃபஹத்தும் நல்ல நண்பர்களாக இருக்கின்றனர். 

தன் தாய் அன்னம்மா (ரீனு மேத்தீவ்ஸ்) இறந்த பிறகு வீட்டைவிட்டு வெளியேறி பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்கிறார். இந்த காலகட்டத்தில் லால் தனது அதிகாரத்தால் பல இடங்களையும் தனதாக்கிக் கொள்கிறார். சில வருடங்கள் கழித்து பிரிட்டிஷ் ராணுவத்தில் கிளர்ச்சி செய்ததற்காக ஃபஹத்தும் அவரது நண்பரும் ராணுவத்தில் இருந்து நீக்கப்படுகிறார்கள். மீண்டும் தன் சொந்த ஊருக்கு வருகிறார். முக்கியமாக தன் சிறுவயது தோழி இஷா ஷர்வானியை சந்திப்பதற்காக ஆவலுடன் வருகிறார் ஃபஹத். அங்கு வந்த பிறகு தன் தந்தையால் நடந்திருக்கும் பல விஷயங்களால் மக்கள் பாதிக்கப் பட்டிருப்பதை அறிந்து கொள்கிறார். பின்பு அவர்களுக்காக போராடுகிறார். அவர் போராட்டம் ஜெயித்ததா என்பதே மீதிக்கதை!
தமிழர்களை கெட்டவர்களா காட்டுவதை இந்த படத்திலும் தவறாமல் செய்திருக்கிறார்கள்அயூபிண்டே புஸ்தகம்: என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? Iyo-pics_1
தான் ஒரு சிறந்த ஒளிப்பதிவாளர் என்பதை இந்தப் படத்திலும் நிரூபித்திருக்கிறார் படத்தின் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான அமல் நீரத். மூணாரின் குளுமையை முழு திரையிலும் பரவச் செய்து அழகாக்கியிருக்கிறார்.

தன் எஜமானனுக்காக கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவது என விசுவாசம் காண்பிப்பதும், பின் அவர் இடத்தில் தன்னை இருத்திக்கொள்ள வெறி கொள்பவனாக, வயோதிகத்தில் வலிமை இழந்திருக்கும் போது எங்கு தன்னை விஷம் வைத்துக் கொன்றுவிடுவார்களோ என பூனைக்கு கொடுத்து பின் தான் சாப்பிடும் பலவீனமானவனாக என அசத்தியிருக்கிறார் லால்.
தமிழர்களை கெட்டவர்களா காட்டுவதை இந்த படத்திலும் தவறாமல் செய்திருக்கிறார்கள்அயூபிண்டே புஸ்தகம்: என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? Iyobint
அவருக்கு அடுத்தபடியாக கவனத்தைக் கவர்வது ஃபஹத்தும், பத்மபிரியாவும் தான். ஒரு கதாநயகனாக கிடைத்த பெரிய காட்சிகளில் ஃபஹத் கவர்ந்தது இயல்பாகக் கடந்துவிடுகிறது. அளவான வசனங்கள், சில காட்சிகளில் பார்வைகள் மட்டும் தான் என வரும் பத்மபிரியா கவனத்தை ஈர்க்கிறார். தம்பியை உசுப்பேத்தி விட்டு அண்ணனைக் கொல்ல வைப்பது, அந்த தம்பியையும் கொல்ல இன்னொருவனை மயக்குவது, இறுதியில் துப்பாக்கியால் தன்னையே சுட்டுக்கொள்வது என மனதில் நிற்கிறார்.
தமிழர்களை கெட்டவர்களா காட்டுவதை இந்த படத்திலும் தவறாமல் செய்திருக்கிறார்கள்அயூபிண்டே புஸ்தகம்: என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? 07-iyob-6
மற்றபடி தமிழர்களை கெட்டவர்களா காட்டுவதை இந்த படத்திலும் தவறாமல் செய்திருக்கிறார்கள். மதுரைக்கார அங்குர் ராவுத்தர் கேரளாவில் மரங்களை வெட்ட வந்து பின் லாலைக் கொல்ல திட்டம் தீட்டுவது என வில்லன் தொடங்கி சாவு வீட்டில் ஒப்பாரி வைப்பவர்கள் கதாப்பாத்திரத்திற்கும் தமிழில் பாட வைப்பது என தேடித் தேடி சேர்த்திருக்கிறார்கள். என்னம்மா இப்பிடிப் பண்றீங்களேம்மா?

இவை தவிர்த்து படம் கொஞ்சம் நீளம் என்ற குறை இருக்கிறது. மற்றபடி ஒரு பீரியட் ஃபிலிமில் ஒரு கதாப்பாத்திரத்தை சுற்றி விரியும் பிரச்னைகளை வைத்து கதை நகர்த்தியிருப்பது அமல் நீரதின் திரைக்கதை சாமர்த்தியம்!

-பா.ஜான்ஸன்


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தமிழர்களை கெட்டவர்களா காட்டுவதை இந்த படத்திலும் தவறாமல் செய்திருக்கிறார்கள்அயூபிண்டே புஸ்தகம்: என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? Empty Re: தமிழர்களை கெட்டவர்களா காட்டுவதை இந்த படத்திலும் தவறாமல் செய்திருக்கிறார்கள்அயூபிண்டே புஸ்தகம்: என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?

Post by ஜனனி Tue Nov 18, 2014 6:53 pm

தமிழனை கண்டால் எப்படி இருக்கும் இவர்களுக்கு
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum