TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


முதுகுவலி தீர எளிய பயிற்சி

Go down

முதுகுவலி தீர எளிய பயிற்சி Empty முதுகுவலி தீர எளிய பயிற்சி

Post by மாலதி Sat Oct 04, 2014 10:20 pm


'Kona' என்றால் முழங்கை என்று அர்த்தம். ஆசணம் என்பது ஒரு கோணத்தில் ஒரு நிலைப்பாட்டோடு இருப்பது.இந்த கோணாசனம் முழங்கையிலிருந்து , முதுகெலும்பு மற்றும் பின்புறம் வரை செயலாக்கம் கொடுத்து பலனளிக்கும்.

செய்யும் முறை :

1. இருபுறமும் உங்கள் கைகளை ஆஸ்வாசப்படுத்தி நேராக நிற்கவும்.

2. உங்கள் உள்ளங்கைகள் தொடைகளை பக்கவாட்டத்தில் தொட்டுவாரு இருக்க வேண்டும்.

3. உங்கள் கால்களை குறைந்தது இரண்டு அல்லது மூன்று அடி அகலப்படுத்திகொள்ளவும்.

4. தோள்பட்டை அளவில் இரு கைகளையும் உயர்த்தி, கைகளை இணையாக வைக்கவும்.

5. மூச்சை உள்ளிழுக்க உங்கள் வலது காலை வலது கோணத்தில் வைத்து குனிய வேண்டும்.

6. வலது கையை கீழே நேராக வைத்து வலது காலை தொட்டு, இடது கையை நேர உயர்த்தவும்.

7. உங்கள் பார்வை மேலிருக்கும் இடது கை மீதே இருக்க வேண்டும்.

8. அதே சமயத்தில் இடது முட்டி வளையாமல் வைக்கவும்.

9. இப்போது நீங்கள் இருப்பது கோணாசனம், அதாவது உங்கள் உடல் கோண்லாக நிருத்திய கம்பத்தை போன்று இருக்கும்.

10. இந்த கோணத்தில் 10-15 நொடிகள் இருங்கள். பின்னர் மெதுவாக நின்று நிதானியுங்கள்

11. இதையே வலது காலுக்கும் பின்பற்ற வேண்டும். இடது புறமாக காலை சாய்த்து, இடது கையால் தொட்டவாரு வலது கையை உயர்த்த வேண்டும்.

நன்மைகள்:

• முதுகிற்கு வளைந்து கொடுக்கும் தன்மையை உருவாக்கும்
• உடல் சோர்வு நீங்கும்
• முதுகு வலிக்கு நிவாரணம் தரும்.

குறிப்பு:

அகண்ட விரிக்கையை பயன்படுத்தவும்.
முதல் முறை பொருமையுடனும் நிதானத்தை கடைபிடிக்கவும்
ஒரு வார பயிற்சிக்கு பிறகு 10 நொடிகளை 2 நிமிடமாக்களாம்.
ஆசனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு பிறகே உணவு அல்லது தூக்கம் என்பதை கடைபிடிக்க வேண்டும்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

முதுகுவலி தீர எளிய பயிற்சி Empty முதுகுவலி குணமாக வேண்டுமா?

Post by மாலதி Sat Oct 04, 2014 10:22 pm


பொதுவாக எல்லா நோய்களும் வயதானவர்களையே குறி வைத்துத் தாக்கும். ஆனால், இளம் மற்றும் நடுத்தர வயதினரைக் குறி வைத்துத் தாக்கக் கூடிய ஒருசில நோய்களில் முதன்மையானது முதுகுவலி. வலிக்கான காரணமாகப் பலரும் சொல்வது டிஸ்க் எனப்படுகிற முதுகெலும்பு சவ்வில் உண்டாகிற கோளாறு. அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு என சொல்லப்பட்ட இந்தப் பிரச்னையிலிருந்து அறுவையின்றி மீள முடியும்.
முதுகுவலியால் அவதிப்படுகிற இளம் மற்றும் நடுத்தர வயதினரில் 40 சதவிகிதம் பேருக்கு முதுகெலும்பு சவ்வில் உண்டாகிற கோளாறே காரணமாக இருக்கிறது. அறுவை சிகிச்சைதான் தீர்வு என்றால் என்ன செய்வது என மருத்துவரிடமே போகாமல், வலியைப் பொறுத்துக் கொண்டு, ஒரு கட்டத்தில் அதைத் தீவிரமாக்கிக் கொண்டு வழி தெரியாமல் நிற்கிறவர்களே அதிகம்.
முதுகெலும்பு சவ்வு தவறாக உபயோகப்படுத்தப்படுவது, அந்தப் பகுதியில் நீர் தன்மை குறைவது, இரண்டு முதுகெலும்புகளுக்கு இடையிலிருந்து சவ்வானது விலகி, நரம்புப் பகுதியை அழுத்துவது போன்றவையே இதற்கான காரணங்கள். ஆரம்பக் கட்டத்தில் சிறியதாக உண்டாகிற வலி, நாள்பட, நாள்பட அதிகமாகி, நிரந்தர முதுகுவலியை உண்டாக்குவதோடு, கால் வலியையும் சேர்த்துக் கொடுக்கும்.
முன்பு இருந்த மாதிரி இந்த வகையான முதுகுவலிக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு எனப் பயப்பட வேண்டாம். மிகவும் முற்றிய நிலையில் கவனிக்கப்படாமல் விடப்பட்ட முதுகுவலி சவ்வுப் பிரச்னைக்கு மட்டுமே அறுவை சிகிச்சை தேவைப்படும்.
ஊசியின் மூலம் ஓஸோன் செலுத்தி சவ்வை சுருங்க வைப்பது, ரேடியோ கதிர்களைச் செலுத்தி, சவ்வை அகற்றுவது என பலமுறைகளில் குணப்படுத்த முடியும். சிகிச்சை முடிந்து 3 முதல் 4 மணி நேரம் மட்டுமே மருத்துவமனையில் இருந்தால் போதும்.
அன்றிரவே சாதாரண வேலைகளைச் செய்யலாம். ஓய்வோ, கடுமையான கட்டுப்பாடுகளோ தேவையிருக்காது. எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட சவ்வுப் பிதுக்கம் உள்ளவர்களுக்கு, அறுவை சிகிச்சையிலிருந்து தப்பிக்க இது மிகப் பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும்..


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

முதுகுவலி தீர எளிய பயிற்சி Empty பெண்களுக்கு உண்டாகும் முதுகுவலி தடுக்கும் முறைகள்

Post by மாலதி Sat Oct 04, 2014 10:23 pm

நெடு நேரம் நின்றபடி பணி செய்ய வேண்டி இருந்தால், கால்களை மாற்றி மாற்றி தரையில் ஊன்றி பணி செய்தால், அதிக வலி ஏற்படாது.குதிக்கால் காலணி அணிவதை முற்றிலும் தவிர்க்கவும், உங்கள் கால்களுக்கு ஏற்ற வகையிலும், நடக்கும் போது உடல் எடை, கால் முழுவதும் சீராக பரவும் வகையிலும் செருப்பு அணிய வேண்டும்.


கைப் பையை ஒரே தோளில் தொடர்ந்து மாட்டிக் கொள்ளாமல், அடிக்கடி மாற்றிக் கொள்ள வேண்டும். இரு கைகளையும் பயன்படுத்தி, பாத்திரங்கள் தூக்குவது, பெருக்குவது, தரை துடைப்பது ஆகியவை முதலில் கடினமானவையாக தோன்றும். இந்த வேலைகளை பழக்கி கொண்டால் முதுகுத் தண்டு வடம் நல்ல முறையில் இயங்க இவை உதவும்.

உடலின் இரு பகுதிகளுக்கும் சமமாக வேலைகள் இருப்பது அவசியம். கர்ப்பிணிப் பெண்கள், குழந்தை பிறப்பதற்கு முன்னும், பிறந்த பிறகும் உடற்பயிற்சி செய்தால், முதுகுக்கு அதிக பிரச்சினை ஏற்படாது. நாம் கடினமான வேலைகளைச் செய்யும் போது தசை பிடிப்பு, மூட்டுவலி, முதுகுவலி ஏற்படுகிறது.

மூட்டு நழுவுவதாலும் முதுகு வலி ஏற்படலாம். இதற்கு எளிமையான பயிற்சியின் மூலம் தீர்வு காணலாம். முதுகுப்புறம் தரையில் படும்படியாக படுத்துக்கொண்டு, குதிகால்களை மடக்கி, நாற்காலி மேல் வைத்துக்கொள்ள வேண்டும்.

குதிகால்களுக்கு தலையணை வைத்துக்கொள்ளலாம். இப்படி ஒன்று அல்லது இரண்டு நாள்களுக்கு செய்து வரவும்.நீண்ட நேரம் இவ்வாறு செய்யாமல் சிறிது நேரம் நடந்து விட்டு பயிற்சி செய்யவும். மேலும் சூட்டு ஒத்தடம் 20-30 நிமிஷங்களுக்குக் கொடுத்தாலும் வலி குறையும்.

வலி குறைய உயரத்துக்கு ஏற்ற உடல் எடையைப் பராமரிப்பது அவசியம். உட்காரும் போதும் நிற்கும் போதும் தூங்கும் போதும் சரியான நிலைகளைக் கடைபிடிக்க வேண்டும்.குனிந்து எந்த ஒரு அதிக சுமையுள்ள பொருளையும் தூக்க வேண்டாம். மாறாக முழுங்காலை ஊன்றி, பிறகு தூக்க வேண்டும்.

நீண்ட தூரம் கார்களை ஓட்டுவோர், விட்டு விட்டு ஓய்வுக்கு பின் பயணம் செய்வது நல்லது. ரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு லேசாக இடது காலை மடக்கி, நெஞ்சுக்கு நேராகக் கொண்டு வரவும்.

ஐந்து வினாடிகள் அப்படியே இருக்கவும். பின் பழைய நிலைக்குக் கொண்டு வரவும். பின்பு வலது காலை மடக்கி இது போல் செய்யவும்.இப்படியே மாறி மாறி 10 முறை செய்தால், முதுகு வலி குறையும். புத்துணர்வு கிடைக்கும்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

முதுகுவலி தீர எளிய பயிற்சி Empty முதுகு வலி… முடிவுக்கு வழி !

Post by மாலதி Sat Oct 04, 2014 10:24 pm

நம்மில் அத்தனை பேருக்கும் முதுகுவலி வரும், போகும். ஆனால், 30 முதல் 40 சதவிகித மக்களுக்கு முதுகு வலி வரும்… ஆனால், போகாது. நம் வாழ்க்கை முறையால் முதுகு வலியில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நம்மில் பலருக்கு இந்த பிரச்சனையின் மூலமும் தெரியாது, அதை கையாளும் திறனும் கிடையாது. அதனால் முதுகு வலி நம்மை பாடாய் படுத்த விடலாமா? இங்கே, முதுகு வலி சில தீர்வுகள், சில முன் எச்சரிக்கைகள் உங்களுக்காக… டாக்டர்.பவானி பாலகிருஷ்ணன்: நம்மில் அத்தனை பேருக்கும் முதுகுவலி வரும், போகும். ஆனால், 30 முதல் 40 சதவிகித மக்களுக்கு முதுகு வலி வரும்… ஆனால், போகாது. இன்றைக்கு நேற்றல்ல… 2,000 ஆண்டுகளுக்கு முன்பே, முதுகுவலியின் பல்வேறு வகைகள் பற்றியும், காரணம் மற்றும் சிகிச்சைகள் பற்றியும் ஆயுர்வேத நூல்களில் விவரிக்கப்பட்ட பெருமை கொண்ட வியாதி இது! தவறான முறையில் அமர்ந்திருப்பது, அதிகப்படியான பணிச்சுமை, முதுமையின் தள்ளாமை, ஒரே மாதிரி வேலையைத் தொடர்ந்து செய்வது என முதுகுவலிக்குப் பல காரணங்கள்! முதுகுவலிக்கான பொதுவான காரணங்கள்: தொற்றுநோய்க் கிருமிகள், காயங்கள் மற்றும் கட்டிகள் ஆகியவற்றால் முதுகெலும்பில் ஏற்படும் பாதிப்புகள். வாழ்க்கை முறை, உடல் அமர்ந்திருக்கும் முறை அல்லது மன அழுத்தம் காரணமாகவும் வருகிறது. தற்போது மனிதனுக்கு ஏன் முதுகுவலி வருகிறது? இதற்கு 4 முக்கியக் காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நவீன வாழ்க்கை முறை தொடர்பானவை. பல வேலைகளுக்கு இயந்திரங்களை உபயோகிக்கப் பழகிக்கொண்டோம். அதனால் நம் உடல் உழைப்பு மிகவும் குறைந்துவிட்டது. முதுகெலும்பு தசைநார்கள் சரியாக உபயோகிக்கப்படாததால், நம் தசைநார்கள் பலவீனமடைந்துவிட்டன. தவறான முறையில் நிற்பது, உட்கார்வது அல்லது தூங்குவது போன்றவற்றால் தவறான தசைநார்களுக்கு அதிக வேலைப்பளு கொடுக்கிறோம். திடீரென உடற்பயிற்சிகள் செய்வதால் ஏற்படும் உடல் சேதங்கள் அதிக மன அழுத்தம் எப்படி மன அழுத்தம் முதுகெலும்புக்குச் சேதத்தை உண்டாக்குகிறது? உணர்ச்சிவசப்படுவது, மனஅழுத்தம், பரபரப்பு, பயம், கோபம், சோர்வு போன்ற காரணங்களால் மனதளவில் பதற்றம் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் நமது முதுகு மற்றும் கழுத்திலுள்ள தசைநார்கள் விரைப்பாகிவிடுகின்றன. அப்படி அந்த தசைநார்கள் விரைப்பாகும்போது, முதுகுத்தண்டில் அழுத்தம் அதிகரிக்கிறது. மேலும் இறுகிய தசைநார்களால் ரத்த ஓட்டம் குறைகிறது. இதனால் ஏற்படும் மாற்றத்தால் தசைநார்கள் வழக்கமற்ற முறையில் சுருங்குகிறது. இதனால் முதுகெலும்பு இணைப்புகளுக்கும் மற்றும் மென்மையான திசுக்களுக்கும் மேலும் சேதம் ஏற்படுகிறது. இப்படி தசைநார்கள் தொடர்ந்து இறுகும்போது மிகவும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. இந்தத் தசை நார்களின் இறுக்கம் சில நேரங்களில் அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் பொறுத்து நாட்கள், மாதங்கள் என்று நீடிக்கும். மன அழுத்தத்திலிருந்து அவர்கள் விடுபடும்போது தசை இறுக்கமும் சிறிது சிறிதாக நின்றுவிடும். ஆனால் முதுகெலும்புக்கு ஏற்பட்ட சேதம் நிரந்தரமாக இருந்து வலி கொடுக்கும். முதுகுவலியை எந்த முறைகளில் தடுப்பது? சரியான முறையில் நிற்பது, உட்கார்வது மற்றும் படுப்பது. தொடர்ந்த உடற்பயிற்சிகள் சரியான முறையில் மனஅழுத்தத்தை நிர்வாகம் செய்வது நோய் மிகக் கடுமையாக இருக்கும்போது..! வலிக்கும் பகுதிக்கு ஓய்வு கொடுக்கவும். அப்போதுதான் திசுக்கள் அல்லது எலும்பு ஆகியவற்றில் ஏற்பட்ட காயங்கள் வேகமாக ஆறும். அந்த நேரத்தில் வலி நிவாரணிகள், தசைகளுக்கு தளரச் செய்யும் மருந்துகள், ஒத்தடங்கள் மற்றும் ஓய்வாக இருப்பது ஆகியவை வலியிலிருந்து உங்களுக்கு நிவாரணம் அளிக்கும். முதுகு வலிக்கு யோகா எப்படி உதவுகிறது? யோகாவில் ஒவ்வொரு உறுப்புக்கும் தனித்தனியான சிகிச்சை என்பது கிடையாது. ஆனால் உள்நிலை வளர்ச்சிக்காக யோகாவைப் பின்பற்றும்போது, இயல்பாகவே உடல்நலமும் பெற முடிகிறது. யோகா என்பது ஓர் உடற்பயிற்சியல்ல. ஆனால், யோகாவைப் பொறுத்தவரை, உடல், மனம் மற்றும் மூச்சு ஆகியவை ஒத்திசைவில் இருப்பது அவசியம். உடலின் பலம், வளையும்தன்மை, சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை யோகா அதிகரிக்கிறது. மற்றும் யோகா மனத்துக்கு ஓய்வுநிலையை அளிப்பதுடன் உடலுக்கு உறுதியளிக்கிறது. யோக ஆசனங்கள் முதுகெலும்பை வலுப்படுத்துவதாலும் தசை நார்களை நீட்டித்து வளையும் தன்மையை அதிகரிப்பதாலும் முதுகு வலியால் அவதிப்படுபவர்களுக்கு நன்மையைத் தருகிறது. யோகாவின் ஒரு பகுதியான சுவாசப் பயிற்சியும் ஓய்வுத்தன்மையும், பதட்டத்தைக் குறைத்து தசைநார்கள் எளிதில் விரைப்படைவதைத் தடுக்கிறது. ஷக்தி சலனக் கிரியை போன்ற சில கிரியைகள் முதுகுத்தண்டுக்கு உறுதியளிப்பதுடன் வலியிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது! முதுகெலும்பு நரம்பியல் விஞ்ஞானத்தில் மூளையை முக்கிய உறுப்பாகவும் முதுகுத்தண்டை மூளையின் உப உறுப்பாகவும் பார்க்கின்றனர். ஆனால், யோகாவில் நாம் எப்போதும் முதுகுத்தண்டை மரமாகவும், மூளையை அந்த மரத்தின் மலர் போன்றும் பார்க்கின்றோம். நீங்கள் எப்படி முதுகெலும்பைப் பராமரிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் மனம் மற்றும் உணர்ச்சிகளின் இயக்கம் இருக்கிறது. மனதின் இயக்கத்தைப் பொறுத்து உங்கள் மூளையின் திறன் அமைகிறது. ஆன்மிகத்தில் முதுகெலும்புக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் பரு உடலின் எல்லைக்கு அப்பால் உங்கள் அனுபவத்தை எடுத்துச்செல்ல நீங்கள் விரும்பினால், உங்கள் அனுபவத்தில், முதுகெலும்பை இந்த முழுப் பிரபஞ்சத்தின் அச்சாணியாக உணர முடியும். யோகாவில் நாம் தெய்வீகத் தன்மை அடைவதற்கான ஏணியாக முதுகெலும்பைப் பார்க்கிறோம். முதுகெலும்புக்கு யோகா தரும் முக்கியத்துவத்தைத் துரதிர்ஷ்டவசமாக மருத்துவ விஞ்ஞானம் தருவதில்லை. பரிணாம வளர்ச்சியின்படி பார்த்தால்கூட, முதுகெலும்பின் உருவாக்கத்துக்குற்குப் பிறகுதான் மூளையின் உண்மையான வளர்ச்சி நடக்கத் துவங்கியது. பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கியப்படி என்னவென்றால், முதுகெலும்பற்ற பிராணியிலிருந்து முதுகெலும்புள்ள உயிரினமாக மாறியதுதான். அடுத்த பெரிய படி முதுகெலும்பு கிடை நிலையிலிருந்து நேர் நிலைக்கு மாரியதுதான். முதுகெலும்பு நேராக மாறிய பிறகுதான் மூளை மிகப் பெரிய வளர்ச்சியை அடைகிறது. ஒரு மாமரத்தின் அருகே சென்று நீங்கள் என்ன செய்தாலும் உங்களுக்கு மாங்கனி கிடைக்கப் போவதில்லை. நீங்கள் மாமரத்தின் வேரை போஷிக்க வேண்டும். வேரை நல்லபடியாக பார்த்துக் கொண்டால், பழம் எப்படியும் உங்களுக்குக் கிடைக்கும். முதுகெலும்பின் அடிப்பாகத்தை நீங்கள் செயல்படுத்தினால் அதே போல் மெதுவாக மூளையின் செயல்படும் திறனும் அதிகமாகும். உங்கள் முதுகெலும்பின் அடிப்பகுதி இயங்குமாறு பார்த்துக்கொள்வது மிக முக்கியமானது. இவ்வாறு தொடர்ந்து இயங்குமாறு பார்த்துக்கொண்டால் முதுகெலும்பின் வேர்ப்பகுதி போஷிக்கப்படுகிறது. நீங்கள் உங்கள் உடலைச் சரியாகப் பயன்படுத்தாதபோது உங்கள் முதுகெலும்பு விரைப்பாக ஆகிவிடுகிறது. தரையில் சம்மணமிட்டு உட்காரும்போது உங்கள் முதுகெலும்பின் அடிப்பகுதி நன்கு இயங்கத் தொடங்குகிறது. பதங்காசனா மற்றும் சிசுபாலாசனா போன்ற ஆசனங்கள் முதுகெலும்பின் வேர்ப்பகுதியை நன்கு போஷிக்கிறது. முதுகுவலி குறித்து சில குறிப்புகள்! எப்போதும் உங்கள் இரண்டு கால்களும் உங்கள் உடல் எடையைச் சமமாகத் தாங்கும்படி நிற்க வேண்டும். ஏதாவது ஒரு கால் அதிக எடையைத் தாங்க வேண்டி வந்தால், நம் கழுத்தும் பின்புறமும் பாதிப்புக்குள்ளாகி நாளடைவில் முதுகெலும்பில் வலி உண்டாகலாம். சமமற்ற தரையில் நீண்ட நேரத்துக்கு நிற்கக் கூடாது. நிற்கும்போது இரு கால்களுக்கும் சிறிது இடைவெளி இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். நன்றாகப் பொருந்தும்படியான செருப்புகள் அணியவும். பைகளைப் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை… உங்கள் இருபுறமும் பொருட்களின் எடை சமமாக இருக்கும்படி பொருட்களை பைகளில் வைத்து எடுத்துச் செல்லவும். ஒரே நேரத்தில் அதிக பொருட்கள் எடுத்துச் செல்வதைவிட இரண்டு மூன்று தடவைகளில் எடுத்துச் செல்லலாம். அதிகச் சுமையுள்ள பையை ஒரே தோளில் எடுத்துச் செல்வதைத் தவிர்க்கவும் ஒரே பட்டி உள்ள பையை நீங்கள் பயன்படுத்துவதாக இருந்தால், அந்த பட்டி அகலமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். உட்காரும்போது நீங்கள் கவனிக்க வேண்டியவை… முதுகை நேராக சாய்மானத்தில் வைத்து நிமிர்ந்து உட்காருங்கள். அலங்கோலமாக உட்காராதீர்கள். உங்கள் தலையும், தோள்பட்டையும், இடுப்பும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும். உங்கள் பாதம் தரையிலோ அல்லது மிதியடியிலோ நன்கு படிந்திருக்க வேண்டும். மிகவும் உயரம் குறைவான நாற்காலிகளைத் தவிர்க்கவும் சாய்மானம் இல்லாத நாற்காலியாக இருந்தால் நிமிர்ந்த நிலையில் உட்காரவும். எடை தூக்கும்போது கவனிக்க வேண்டியவை… எடை குறைவோ, அதிகமோ… ஒரு பொருளை எப்போதும், காலை நேராக வைத்த நிலையில் தூக்காதீர்கள். எதையாவது தூக்கும்போது, எப்போதும் உங்கள் முழங்கால்களை மடக்கிக் கொள்ளுங்கள். பொருளை உங்கள் உடலுக்கு நெருக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். இப்படிச் செய்யும்போது, உங்கள் கால்களின் பெரிய தசைநார்கள் அந்த வேலையின் பளுவை எடுத்துக்கொள்கிறது. முதுகின் சிறிய தசைநார்கள் பாதிப்படைவதில்லை!


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

முதுகுவலி தீர எளிய பயிற்சி Empty முதுகுவலி,மூட்டுவலி தொல்லை? ஏன்? தீர்வு?

Post by மாலதி Sat Oct 04, 2014 10:25 pm

[You must be registered and logged in to see this image.]
முன்பெல்லாம் முப்பத்தைந்து வயதுக்கு மேல்தான் இடுப்புவலி, மூட்டுவலி என்று அவதிப்பட்டார்கள். ஆனால், இப்போது சிறுவயதிலேயே ‘இடுப்பு வலிக்குது’ என்று புலம்புகிறார்கள். 

அதற்குக் காரணமே சிறுவயதிலேயே டூவீலர், கார் ஓட்டுதல், அதிக வெயிட் தூக்குதல், உடல் உழைப்பு இல்லாதது, சத்தான உணவு சாப்பிடாமல் இருப்பது, கம்ப்யூட்டர் முன் முறையாக உட்காராமல் இருப்பது போன்றவைதான்.
முதுகுத் தண்டுவடத்தில் எலும்புகள் மணி கோர்த்தது போன்று இருக்கும். வாகனங்களில் இருக்கும் ஷாக் அப்செர்ப் போல தண்டுவட எலும்புகளுக்கும் நடுவில் டிஸ்க்கு (வட்டுகள்)கள் இருக்கும். 
[You must be registered and logged in to see this image.]
மேற்கண்ட ஏதோ ஒரு காரணத்தினால் டிஸ்க்குகள் வலுவிழந்து பக்கத்திலிருக்கும் நரம்புகளை நசுக்குவதால்தான் முதுகுவலி ஏற்படுகிறது.

அதுவும் முக்கிய நரம்பான ‘Sciatica’ எனப்படும் நரம்பு நசுங்கினால் கால்குடைச்சல், கால் மரத்துவிடுதல், முதுகுவலி, கால் பலமிழந்து போதல் என வேதனைகள் புகுந்து இம்சிக்கும். இதை சிலர் `கேஸ் ப்ராப்ளமா இருக்கும்’ என்று அலட்சியமாக விட்டுவிடுவார்கள். இது தவறு.
வலி, பிடிப்பு இருந்தால் `ஆரம்பநிலை’யில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இதற்கு ரெஸ்ட் எடுத்தாலே போதும்.

ஆனால், ரெஸ்ட் எடுத்தும் திரும்பத் திரும்ப வலி, பிடிப்புகள் ஏற்பட்டால் `இரண்டாவது நிலை’
இதற்கு வலி மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்துக் கொள்ளலாம். இதில் கால்குடைச்சலும் சேர்ந்து கொண்டு உங்களை கதி கலங்க வைத்துவிடும். திரும்பத் திரும்ப மாத்திரைகள் சாப்பிட வேண்டிய சூழல் ஏற்படும்.

மூன்றாவது நிலை, தான் கொஞ்சம் அபாயகரமான நிலை. அதாவது தண்டுவடத்திலுள்ள `டிஸ்க்’கானது வலுவிழந்து அருகில் செல்லும் முக்கிய நரம்பை அதிகமாக அழுத்தினால் தாங்கவே முடியாத வலி ஏற்படும்.

கால் குடைச்சல், மரத்துப்போதல், நின்றால் நடந்தால் என வலியும் ஜாஸ்தியாகிக் கொண்டே இருக்கும். வலி மாத்திரைகள் ம்ஹூம்… சாப்பிட்டாலும் அப்படியேதான் இருக்கும்.
ஆக, இரண்டாவது நிலை, மூன்றாவது நிலையிலுள்ளவர்கள் பிஸியோதெரபி சிகிச்சை செய்துகொள்வது நல்லது.

இதற்கு பிஸியோதெரபியில் எப்படி ட்ரீட்மெண்ட் கொடுக்கப்படுகிறது என்கிறீர்களா?
முதலில் ரெஸ்ட், அப்புறம் எலக்ட்ரோதெரபி மின்னியல் சிகிச்சை செய்யப்படும். இதில் பிரச்னைக்கேற்ப அல்ட்ராசானிக், ஐ.எஃப்.டி (நடுத்தர மின்னோட்டம்), ஐ.ஆர்.ஆர். (அகச்சிவப்புக் கதிர்கள்) என சிகிச்சை செய்து டைட்டாகிப்போன மசில்ஸை லூஸாக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்தால்தான் வலி குறைய ஆரம்பிக்கும்.

இரண்டாவதாக, நரம்பு நசுங்கியிருந்தால் நரம்பை ரிலீஸ் பண்ண Traction (இழு கிசிச்சை) ட்ரீட்மெண்ட் ஒரு பத்துப் பதினைந்து முறை என இரண்டு வாரம் செய்தால் போதும். வலி படிப்படியாகக் குறையும்.

மூன்றாவதாக, ஸ்ட்ரென்த்தனிங் எக்ஸர்ஸைஸ். இதில் வீட்டிலேயே செய்யக்கூடிய ஹோம் எக்ஸர்ஸைஸ், கருவிகளைக் கொண்டு செய்யப்படும் ஃபிட்னஸ் எக்ஸர்ஸைஸ் என இருவகை உண்டு

சிகிச்சையெல்லாம் ஆர்வத்தோடு எடுத்துக்கொள்ளும் நோயாளிகள் பலர் இந்த உடற்பயிற்சி முறைகளை மட்டும் சரியாக கடைப்பிடிப்பதில்லை. என்னதான் மருந்து, மாத்திரைகள், சிகிச்சைகள் என்று செய்தாலும் அதற்கேற்ற உடற்பயிற்சியும் முக்கியம்

அதோடு கார்போஹைட்ரேட், ஃபேட் நிறைந்த உணவுகளை தவிர்த்துவிட்டு புரோட்டின், விட்டமின், மினரல்ஸ், பருப்பு, தானிய வகைகள், கீரை, காய்கறி, பழங்கள் கொண்ட உணவுகளைச் சாப்பிட்டால்தான் முன்பிருந்த பலத்தை திரும்பப் பெற முடியும். இல்லையென்றால் சிகிச்சையின் முழு பலனை பெற முடியாது.

மேலும் டூவீலர், கார்களில் செல்லும்போது கவனமாகச் செல்ல வேண்டும். குறிப்பாக டயரில் காற்று குறைந்திருப்பது, தேய்ந்துபோன டயர், ஷாக் அப்சர்ப்-ல் குறைபாடு, குஷன் மற்றும் சீட், ஹேன்ட்பார்கள் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்த்துக் கொள்ள வேண்டும். உடலமைப்புக்கேற்ற வண்டியாகவும் இருக்க வேண்டும்.

இன்றைய வேலைவாய்ப்பே கம்ப்யூட்டரில்தான் இருக்கிறது. ஆக, கம்ப்யூட்டரில் அமர்ந்து பணிபுரிபவர்கள் ஒரு மணி நேரத்துக்கொருமுறை எழுந்து சென்று ஐந்து நிமிடம் ரெஸ்ட் எடுத்துக் கொண்ட பிறகு சரியான பொஸிஷனில் வந்து அமர வேண்டும்.
[You must be registered and logged in to see this image.]
உட்காரக்கூடிய சேர் முதுகுப்பகுதிக்கு முழுவதுமாக சப்போர்ட்டாக இருக்க வேண்டும்.
லைட் வெளிச்சமானது நமது பின்புறத்தில் இருப்பது நல்லது. என்னதான் வாழ்க்கையில் பிஸியாக இருந்தாலும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி சிம்பிளான வாக்கிங்+உடற்பயிற்சிகள்; அதோடு அரைமணி நேரம் அவுட்டோர் கேம்ஸ் விளையாடுவது என வழக்கப்படுத்திக் கொண்டால் முதுகுவலி, மூட்டுவலி பிரச்னைகள் உங்களை நெருங்க யோசிக்கும்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

முதுகுவலி தீர எளிய பயிற்சி Empty இடுப்புவலி, முதுகுவலி குணமாக.

Post by மாலதி Sat Oct 04, 2014 10:26 pm

தமிழர்களின் மருத்துவ கண்டுபிடிப்புகள் ஒரு தீர்க்க தரிசனம் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த பல இயற்கை வைத்தியம், அன்றைய கால மனிதர்களுக்கு பெரிதும் தேவைப்பட்டு இருக்குமா ? என்பது சந்தேகமே. ஏனென்றால் நமது முன்னோர்கள் வாழ்க்கை முறை நம்மை போல் அல்லாமல் உடல் நலனிற்கு ஏற்றவாறு இருந்தது, ஆனால் இப்பொழுது நாம் அதை தவறவிட்டுவிட்டோம்,விவசாயம் பொய் கணினி முன்னே வேலையும்,வீர விளையாட்டுக்கள் போய், வீடியோ கேம் இல் மட்டும் விளையாட்டு என்று ஆகிவிட்டதால். சிறுவயதிலேயே பலருக்கு இடுப்புவலி, முதுகு வலி என்று வலி எடுக்க ஆரம்பித்துவிடுகிறது, இப்படி இப்பொழுது உருவாகும் இந்த வலிகளுக்கும், நோய்களுக்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மருந்து கண்டுபிடித்த நம் முன்னோர்களின் அறிவு தீர்க்கதரிசனம் என்றதில் தவறில்லையே ?





அறிகுரு :
         
             மூட்டுகளில் சோர்வை உணருதல்.
             அமர்ந்திருக்கும் பொழுது முதுகில் ஒரு அசௌகாரியத்தை உணருதல்.

தேவையான பொருள் :

                              வெற்றிலை .
                              தேங்காய் எண்ணை  

செய்முறை :
     
                              வெற்றிலை இலையை நன்கு கசக்கி அதன் சாற்றை எடுத்து சிறிது தேங்காய் எண்ணெயுடன் கலந்து வலி ஏற்ப்படும் மூட்டு, மற்றும் இடுப்பு, முதுகு பகுதிகளில் தடவி வர, அனைத்துவகையான இடுப்பு,மூட்டு, முதுகு வழிகள் தீரும்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

முதுகுவலி தீர எளிய பயிற்சி Empty Re: முதுகுவலி தீர எளிய பயிற்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum