TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சோனியா சொன்ன பேருண்மை- இன்றைய ஜோக்.

3 posters

Go down

சோனியா சொன்ன பேருண்மை- இன்றைய ஜோக். Empty சோனியா சொன்ன பேருண்மை- இன்றைய ஜோக்.

Post by sakthy Fri Aug 01, 2014 6:32 pm

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருமான நட்வர்சிங் ‘‘ஒன் லைப் இஸ் நாட் எனப்’’ என்ற பெயரில் புத்தகம் எழுதியுள்ளார். அதில் உள்ள தகவல்களை ஒவ்வொரு பகுதியாக வெளியிட்டு வருகிறார். முதல் நாள் வெளியிட்ட தகவலில் சோனியாவை பிரதமராக விடாமல் ராகுல் தான் தடுத்தார், என்று கூறியிருந்தார்.

நேற்று ராஜீவ் காந்தி இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பும் முடிவை அமைச்சரவை ஒப்புதல் பெறாமலேயே எடுத்தார் என்றும் இலங்கை தமிழர் பிரச்சனையை தவறாக கையாண்டதால் கொலை செய்யப்பட்டார், என்றும் கூறிய தகவல் வெளியிடப்பட்டது. அத்துடன் சோனியா தன்னை இழிவாக நடத்தினார். இது எந்த இந்தியனுக்கும் ஏற்படாத ஒன்று என்றும் நட்வர்சிங் குற்றம்சாற்றினார்.

இதுபற்றி காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘நான்
என் சுயசரிதையை புத்தமாக எழுதுவேன். அதில் உங்கள் கேள்விகளுக்கு பதில் இருக்கும். நான் உண்மைகளை மட்டுமே எழுதுவேன்’’ என்றார்.

இதற்கு நட்வர்சிங் பதிலளிக்கும் விதமாகக் கூறியதாவது:–

எனது புத்தகம் சோனியாவை மையப்படுத்தி எழுதப்பட்டது அல்ல. சோனியா மற்றும் ராகுல் காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து என்னால் எழுத முடியும். ஆனால் நான் அப்படி செய்யவில்லை.

எனது குற்றச்சாற்றுக்கு பதிலளிக்கும் விதமாக சோனியாவும் புத்தகம் எழுதினால் அதற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். இவ்வாறு நட்வர்சிங் கூறினார்.

இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். நட்வர்சிங் சொல்வது பொய் என்று சொல்லும் சோனியா,தான் சொல்வதை மக்கள் நம்ப வேண்டும் என்று சொல்கிறாரா? பொய்யிலே பிறந்து பொய்யிலே வாழும் அரசியவாதிகள் எப்படி உண்மை சொல்வார்கள். சோனியா உங்களை நாம் நம்பத் தயாராக இல்லை.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

சோனியா சொன்ன பேருண்மை- இன்றைய ஜோக். Empty Re: சோனியா சொன்ன பேருண்மை- இன்றைய ஜோக்.

Post by அருள் Fri Aug 01, 2014 7:53 pm

பொய்யிலே பிறந்து பொய்யிலே வாழும் அரசியவாதிகள் எப்படி உண்மை சொல்வார்கள். சோனியா உங்களை நாம் நம்பத் தயாராக இல்லை.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

சோனியா சொன்ன பேருண்மை- இன்றைய ஜோக். Empty கொழும்பில் ராஜீவ் எடுத்த முடிவு அவருக்கே முடிவுகட்டியது! - நட்வர் சிங் வெளியிட்டுள்ள பரபரப்புத் தகவல்கள்.

Post by மாலதி Sat Aug 02, 2014 7:02 am

கொழும்பில் ராஜீவ் எடுத்த முடிவு அவருக்கே முடிவுகட்டியது! - நட்வர் சிங் வெளியிட்டுள்ள பரபரப்புத் தகவல்கள்.
01 08 2014
அமைச்சரவையில் ஒப்புதல் பெறாமலே, இந்திய படைகளை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கைக்கு அனுப்பி வைத்ததாகவும், தொடக்கத்திலிருந்தே இலங்கை தமிழர் பிரச்சினை தவறாக கையாளப்பட்டு, இறுதியில் முற்றிலும் தோல்வியில் முடிந்ததாகவும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங் தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் இந்திரா - சோனியா குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் 'ஒரு வாழ்க்கை போதாது: ஒரு சுயசரிதை என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இதில் தனது அரசியல் வாழ்க்கையில் தான் சந்தித்த அனுபவங்கள் மற்றும் சம்பவங்களை தொகுத்து அவர் எழுதியுள்ள அந்த புத்தகத்தில், வெளியில் தெரியாமல் இருந்துவந்த பல்வேறு அரசியல் ரகசியங்கள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
சோனியா சொன்ன பேருண்மை- இன்றைய ஜோக். 1907395_808322515874413_7754609167979348662_n
குறிப்பாக காங்கிரஸ் கட்சி குறித்தும், முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி சோனியா காந்தி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் ஆட்சியிலும், கட்சியிலும் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புத்தகம் வெளியாவதையொட்டி, ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு நேற்று இரண்டாவது நாளாக அளித்துள்ள பேட்டியில் நட்வர் சிங் கூறியிருப்பதாவது:
கடந்த 1987 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள தனது சகாக்களுடனோ அல்லது உயரதிகாரிகளுடனோ கலந்தாலோசிக்காமலேயே இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி வைப்பதற்கான உத்தரவை பிறப்பித்தார். ராஜீவ் காந்தி அப்போது இலங்கைக்கு சென்றிருந்தார். அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தன அளித்த வரவேற்பில் கலந்து கொண்ட அவர், அங்கிருந்தபடியே எந்த ஒரு அதிகாரியின் ஆலோசனையையும் பெறாமல் இந்த முடிவை மேற்கொண்டார். தனக்கு எதிராக ஆட்சி கவிழ்ப்பு நடக்கக் கூடும் என அஞ்சிய ஜெயவர்த்தன, இந்திய படைகளை இலங்கைக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டதும் அவரது இந்த கோரிக்கைக்கு உடனே சம்மதம் தெரிவித்தார் ராஜீவ் காந்தி.
அந்த சமயத்தில் கொழும்பில் இருந்த நானும், பி.வி. நரசிம்மராவும் இலங்கைக்கு இந்திய படைகளை அனுப்பும் உத்தரவு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டு விட்டதை அறிந்து கொண்டோம். மேலும் யாழ்ப்பாணத்தில் இலங்கை ராணுவத்தின் முற்றுகைக்குள்ளான தமிழர்களுக்கு, இந்திய விமானப்படை விமானங்களை அதிரடியாக அனுப்பி உணவு பொட்டலங்களை போடும் முடிவையும் ராஜீவ் காந்தி மிகச்சாதாரணமான மற்றும் வீராவேச முறையிலும் மேற்கொண்டார். இது தொடர்பாக இலங்கை அதிபர் ஜெயவர்த்தனவுக்கோ, ஐக்கிய நாடு சபையில் உள்ள இந்திய பிரதிநிதிக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதைக் கூட ராஜீவ் காந்தியும், அவரது குழுவினரும் அறிந்திருக்கவில்லை. ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் ஒரு உறுப்பினர் என்ற அடிப்படையில் இலங்கை அரசு இதை வைத்து பிரச்னையை உருவாக்கும் என நான் சுட்டிக்காட்டிய பின்னரே, அவர்கள் இதுகுறித்து இருதரப்புக்கும் முன்கூட்டியே தகவல் தெரிவித்தனர்.
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை ராஜீவ் காந்தி மிகவும் நம்பினார். பிரபாகரனை ராஜீவ் காந்தி சந்தித்த பின்னர் ( இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் ராஜீவ் - ஜெயவர்த்தன ஒப்பந்தம் தொடர்பாக) "பிரபாகரனிடமிருந்து எழுத்துபூர்வமான உறுதி எதையும் வாங்கினீர்களா?" என நான் ராஜீவிடம் கேட்டேன். நான் இவ்வாறு கேட்டதும் எரிச்சலுற்ற ராஜீவ், " அவர் வார்த்தையால் உறுதி அளித்துள்ளார்" எனக் கூறினார். ஆனால் பிரபாகரன் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி உள்பட அனைவரிடமும் இரட்டை கலப்பு நிலையையே மேற்கொண்டிருந்தார்.
எந்த ஒரு நோக்கமோ அல்லது விவரணமோ தெரிவிக்கப்படாமலேயேதான் இந்திய அமைதிப்படை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. யாழ்ப்பாண தீபகற்பத்தின் பூகோள அமைப்பு குறித்தோ அல்லது விடுதலைப் புலிகளின் மறைவிடங்கள் குறித்தோ இந்திய அமைதி படைக்கு எதுவும் சொல்லப்படவில்லை. தொடக்கத்திலிருந்தே இலங்கை தமிழர் பிரச்னை தவறாக கையாளப்பட்டு, இறுதியில் முற்றிலும் தோல்வியில் முடிந்தது என அந்த பேட்டியில் கூறியுள்ளார் நட்வர் சிங்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

சோனியா சொன்ன பேருண்மை- இன்றைய ஜோக். Empty Re: சோனியா சொன்ன பேருண்மை- இன்றைய ஜோக்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum