TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பொன் மகளே வருக: பொருளை அள்ளித் தருக: நாளை அட்சய திரிதியை

Go down

பொன் மகளே வருக: பொருளை அள்ளித் தருக: நாளை அட்சய திரிதியை Empty பொன் மகளே வருக: பொருளை அள்ளித் தருக: நாளை அட்சய திரிதியை

Post by அருள் Sat May 15, 2010 7:36 am

பொன் மகளே வருக: பொருளை அள்ளித் தருக: நாளை அட்சய திரிதியை Tblfpnnews_66921633482







குண்டோதரன் பொம்மை ரகசியம் :
நம் வீடுகளில் குண்டாக இருக்கும் ஒருவரது பொம்மையை வைக்கிறோம். இவர்
இருந்தால் வீட்டில் செல்வம் வளரும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. இந்த
குண்டோதரன் பொம்மை யாருடைய அம்சம் தெரியுமா?சாந்தகுணம் கொண்ட தேவதைகளில்
லட்சுமி குபேரர் முதன்மையானவர்.


இவர் ராவணனின் தம்பி. அசுரனாகப் பிறந்தாலும்
சிவபக்தியில் சிறந்தவர். ராஜயோகத்தை அருளும் தனலட்சுமியும், வீரத்தை
அருளும் தைரியலட்சுமியும் இவரிடம் நித்யவாசம் செய்கின்றனர். வடக்கு
திசைக்குரிய அதிதேவதையாக இருக்கிறார். இவர் குடியிருக்கும் பட்டணம்
அழகாபுரம் எனப்படுகிறது. அங்குள்ள அத்தாணி மண்டபத்தில் தாமரைமலர் மெத்தை
மீது, மீன் ஆசனத்தில் அமர்ந்திருப்பார். யஜுர்வேதம் இவரை ராஜாதிராஜன்
என்று குறிப்பிடுகிறது. அட்சயதிரிதியை நாளில் லட்சுமி குபேரரை வழிபடுவதால்
வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்கும். வெள்ளிக்கிழமையிலும்,
சுக்கிரஹோரையிலும் குபேரரை வழிபாடு செய்வது சிறப்பானதாகும்.
ராஜராஜேஸ்வரிக்குரிய பஞ்சதசீ மந்திரத்தை எப்போதும் ஜபிக்கும் இவர்,
மகாலட்சுமியின் நிதிகளான சங்கநிதி, பதுமநிதி ஆகியவற்றை நிர்வகிக்கும்
தகுதி பெற்றார். இந்த நிதிகளை இரண்டு குண்டோதர வடிவங்களாக்கி
பாதுகாத்தார். சங்கநிதி என்பது திருமகளின் அம்சமான வெண்சங்கினையும்,
பதுமநிதி என்பது திருமகள் வீற்றிருக்கும் செந்தாமரை மலரையும் குறிக்கும்.
இவ்விருவரின் அருளால் அன்றாட உணவுக்கே அல்லல்படும் ஒருவன் கூட கோடிக்கு
அதிபதியாக வாழ முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்விருவரும்
குபேரனுடைய கட்டளைப்படி அவரவர் உழைப்பு, நம்பிக்கை, முன்வினைப்பயன்
ஆகியவற்றின் அடிப்படையில் பொருட் செல்வத்தை வழங்குவர். இதனால் தான்
இவர்களது அம்சமாக குண்டு பொம்மைகளை வீட்டில் வைக்கிறார் கள்.


அட்சயதிரிதியை பூஜை முறை :
அட்சயதிரிதியை நாளில் தெய்வங்களுக்கு ''யவை'' என்ற தானியம் நைவேத்யம்
செய்வது மிகவும் சிறப்பானது. பார்ப்பதற்கு சம்பா கோதுமை போல நீளமாக
இருக்கும். பூஜை சாமான்கள் விற்கும் கடைகளில் இது கிடைக்கும். இதை வேக
வைத்து படைக்கலாம். குபேரலட்சுமி, லட்சுமி நாராயணர், லட்சுமி நரசிம்மர்
படங்களின் முன்னால் இதை வைக்கலாம். கோதுமை மாவில் செய்த இனிப்பு
பலகாரங்களையும் படைக்கலாம். அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால்
ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலன் உண்டாகும். சிறியவர்கள்
பெரியவர்களிடம் ஆசி பெறுவதற்கு அட்சயதிரிதியை உகந்த நாள். இந்த நாளில்
பரசுராமர் அவதரித்தார். அதனால் அன்று பரசுராமரை வழிபடுவது சிறப்பு. விஷ்ணு
சகஸ்ரநாமம், ஆழ்வார் பாசுரங்களைப் பாராயணம் செய்வது மிகவும் நல்லது.


லட்சுமி கடாட்சம் என்றால் என்ன?
பொருள்வரவு, உடல்நலம், அன்பான மனைவி, சிறந்த பிள்ளைகள், நல்ல நண்பர்கள்,
கல்விச்செல்வம் இந்த ஆறும் குறைவின்றி பெற்றவர்களே லட்சுமி கடாட்சம்
பெற்றவர்கள் ஆவர். இந்த ஆறையும் பெற மகாலட்சுமியை 12 நாமங்கள் சொல்லி
வழிபட வேண்டும்.


ஸ்ரீதேவி- செல்வத்தை உடையவள்
பத்மா- தாமரையில் வாழ்பவள்
கமலா- தாமரையை வீற்றிருப்பவள்
முகுந்த மஹிஷீ- திருமாலின் மனைவி
லட்சுமி- லட்சணம் நிறைந்தவள்
திரிலோகேஸ்வரி- மூன்றுஉலகங்களையும் ஆள்பவள்
மகாகீர்த்தி- பெருமைக்குரியவள்
க்ஷிராப்திஸுதா- பாற்கடலில் பிறந்தவள்
விரிஞ்சஜனனி- உலகத்தைப் படைப்பவள்
வித்யா- அறிவைத் தருபவள்
ஸரோஜன்யாசனா- தாமரை ஆசனத்தில் இருப்பவள்
ஸர்வாபீஷ்டபலப்ரதா- சகலவிருப்பங்களையும் நிறைவேற்றுபவள்


தினமும் பணம் புழங்க ஸ்ரீஸ்துதி :
ஸ்ரீதேவி என்றால் திருமகள் என்னும் லட்சுமியைக் குறிக்கும். ஸ்ரீ என்றால்
'திரு'. லட்சுமியின் அருளைப் பெற்று ஆதிசங்கரர் பாடிய நூல் கனகதாராஸ்தவம்.
இத தங்க நெல்லிக்கனிகளை பொன்மழைபோல் வரவழைத்த பெருமை கொண்டது. அதுபோல
நிகமாந்த மகாதேசிகருக்கு திருமகள் தங்கக்காசுகளை வரவழைத்தாள்.நிகாமந்த
தேசிகர் தாயாரையும், பெருமாளையும் இடைவிடாது சிந்தித்துக் கொண்டே
இருந்தார். அவருடைய பக்தியின் பெருமை அறியாத சிலர் அவர்மீது பொறாமை
கொண்டனர். அவரை மட்டம் தட்ட சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து
காத்திருந்தனர். ஏழை ஒருவன் தன் மகளின் திருமணத்திற்கு பணம் வேண்டி
அலைந்து திரிந்தான்.


அவனிடம், ''தேசிகர் பெரிய தர்மப்பிரபு.
பார்ப்பதற்கு எளியவர் போல இருந்தாலும் இந்த ஊரிலேயே பெரும் செல்வந்தர்
அவர் தான். அதனால் அவரிடம் சென்றால் வேண்டிய பொருள் பெறலாம். உன் மகள்
திருமணம் விமரிசையாக நடக்கும்'' என்று சொல்லி அனுப்பினர். அந்த ஏழை அதை
நம்பி, நிகமாந்த தேசிகரிடம் சென்று அவரது கால்களைக் கட்டிக் கொண்டு,''ஐயா!
நீங்கள் உதவினால் அன்றி என் மகள் கல்யாணம் நடக்காது'' என்று அழுதான்.
ஊரார் திட்டம் போட்டு இவனை தன்னிடம் அனுப்பி இருப்பதை தேசிகர் உணர்ந்தார்.
இருந்தாலும், அவனுடைய நிலை அவருக்கு மனவேதனையைத் தந்தது.


''கவலைப்படாதே! நிச்சயம் உன் தேவைகளை லட்சுமி
தாயார் நிறைவேற்றி வைப்பார். வெள்ளிக்கிழமையான நாளை காலை தாயார்
சன்னதிக்கு வா,'' என்று சொல்லி அனுப்பினார். ஏழையும் தேசிகரும்
கோயிலுக்குச் செல்வதை அறிந்த மக்களும் கோயிலில் திரண்டனர். தேசிகர்
திருமகள் அருள் பெற வேண்டி


''ஸ்ரீஸ்துதி'' என்னும் 25 ஸ்லோகங்கள் கொண்ட
ஸ்தோத்திரத்தை ராகத்துடன் பாடினார். திருமகளும் தங்கக்காசுகளை அளித்து
மறைந்தாள். தேசிகரை அவமானப்படுத்த எண்ணிய பொறாமைக்காரர்கள் அவரிடம்
மன்னிப்பு கேட்டனர். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு பணத்தடை
ஏற்பட்டாலோ, தினமும் கையில் பணம் புழங்கவும் ஸ்ரீஸ்துதியின் 21வது
ஸ்லோகத்தைப் பாராயணம் செய்வது நல்லது.


இதோ அந்த ஸ்லோகம்.


ஸானுப்ராஸ ப்ரகடித தயை:
ஸாந்த்ர வாத்ஸல்ய திக்தை:
அம்ப! ஸ்நிக்தைர் அம்ருத லஹரீ
ளப்த ஸப்ரஹ்மசர்யை:
ங்கர்மே தாபத்ரய விரசிதே
காட தப்தம் க்ஷணம் மாம்
ஆகிஞ்சன்ய க்லபிதம் அங்கைர்
ஆத்ரியேதா கடாக்ஷை


இந்த ஸ்லோகத்தை சொல்ல இயலாதவர்கள் கீழ்க்கண்ட பொருளைச் சொல்லலாம்.


கருணை மிக்க லட்சுமி தாயே! தாயன்பைத் தருபவளே!
பக்தர்களுக்கு துணை செய்பவளே! அமிர்தம் போல் குளிர்ச்சிமிக்கதும்,
பரிசுத்தமானதுமான அருளைத் தருபவளே! கடும் வெயிலில் நடப்பவன் தாகத்தால்
தவிப்பது போல், பொருளில்லாமல் வாடும் என்னை ஒரு கணநேரம் உன் கடைக்கண்
பார்வையால் குளிரச் செய்வாயாக.


என்ன வாங்கலாம்? என்ன செய்யலாம்?
அட்சய திரிதியை அன்று என்ன வாங்கலாம் என்றால், சட்டென்று ' தங்கம்
வாங்கலாம், வெள்ளி வாங்கலாம், புத்தாடை வாங்கலாம். பலசரக்கு வகைகள்
வாங்கலாம்' என்று பதில் வரும். இவற்றை வாங்குவது மட்டுமல்ல! இன்னும்
பலபயனுள்ள விஷயங்களையும் இந்நாளில் செய்து கொள்வது நல்லது.
அட்சயதிரிதியையில் செய்யும் தானதர்மங்களுக்கு நூறு மடங்கு பலன் உண்டு.
குறிப்பாக தயிர்சாதம், குடை, காலணி தானம் செய்வதன் மூலம் மற்றவர்களின்
மனதைக் குளிர்வித்து அவர்களது ஆசியுடன் நமது செல்வநிலையைப் பெருக்கிக்
கொள்ளலாம். புனித நதி, கடல் தீர்த்தநீராடல், வீடு,மனை, கிணறு
புதுப்பிக்கத் தொடங்குதல், கல்வி,கலைகளைப் பயிலத் தொடங்குதல், பதவி
ஏற்றுக் கொள்ளுதல், சேமிக்கத் தொடங்குதல், புத்தகம் வெளியிடுதல்,
குழந்தைகளுக்குப் பெயரிடல், புதிய தொழில் துவங்குதல், பெற்றோர்,
மகான்களின் ஆசி பெறுதல், நண்பர்களைச் சந்தித்து பயனுள்ள பிரச்னைகளைப்
பேசுதல், விவசாயப்பணி தொடங்குதல் ஆகியவையும் செய்வதால் பல மடங்கு நன்மை
உண்டாகும்.


செல்வவளம் பெருக்கும் மகாலட்சுமி 108 போற்றி : அட்சயதிரிதியை
அன்றும், வெள்ளிக்கிழமைகள் மற்றும் திருவிழா நாட்களிலும் வீட்டில் லட்சுமி
படம் முன் விளக்கேற்றி இந்த போற்றியை பக்தியோடு சொல்லுங்கள். இந்த
போற்றியைச் சொன்னால், தினமும் கையில் பணம் புழங்க வழி வகை ஏற்படும் என்பது
நம்பிக்கை.


ஓம் அன்புலட்சுமியே போற்றி
ஓம் அன்னலட்சுமியே போற்றி
ஓம் அமிர்தலட்சுமியே போற்றி
ஓம் அம்சலட்சுமியே போற்றி
ஓம் அருள்லட்சுமியே போற்றி
ஓம் அஷ்டலட்சுமியே போற்றி
ஓம் அழகு லட்சுமியே போற்றி
ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி
ஓம் ஆகமலட்சுமியே போற்றி
ஓம் ஆதிலட்சுமியே போற்றி
ஓம் ஆத்மலட்சுமியே போற்றி
ஓம் ஆளும்லட்சுமியே போற்றி
ஓம் இஷ்டலட்சுமியே போற்றி
ஓம் இதயலட்சுமியே போற்றி
ஓம் இன்பலட்சுமியே போற்றி
ஓம் ஈகைலட்சுமியே போற்றி
ஓம் உலகலட்சுமி போற்றி
ஓம் உத்தம லட்சுமியே போற்றி
ஓம் எளியலட்சுமியே போற்றி
ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி
ஓம் ஒளிலட்சுமியே போற்றி
ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி
ஓம் கஜலட்சுமியே போற்றி
ஓம் கனகலட்சுமியே போற்றி
ஓம் கம்பீர லட்சுமியே போற்றி
ஓம் கானலட்சுமியே போற்றி
ஓம் கிரகலட்சுமியே போற்றி
ஓம் குணலட்சுமியே போற்றி
ஓம் குங்குமலட்சுமியே போற்றி
ஓம் குடும்பலட்சுமியே போற்றி
ஓம் குலலட்சுமியே போற்றி
ஓம் கேசவலட்சுமி போற்றி
ஓம் கோவிந்தலட்சுமியே போற்றி
ஓம் கோமாதாலட்சுமியே போற்றி
ஓம் சர்வலட்சுமியே போற்றி
ஓம் சக்திலட்சுமியே போற்றி
ஓம் சக்கரலட்சுமியே போற்றி
ஓம் சத்தியலட்சுமியே போற்றி
ஓம் சங்குலட்சுமியே போற்றி
ஓம் சந்தான லட்சுமியே போற்றி
ஓம் சாந்தலட்சுமியே போற்றி
ஓம் சிங்கார லட்சுமியே போற்றி
ஓம் சீலலட்சுமியே போற்றி
ஓம் சீதாலட்சுமியே போற்றி
ஓம் சுப்புலட்சுமி போற்றி
ஓம் சுந்தரலட்சுமியே போற்றி
ஓம் சூரியலட்சுமியே போற்றி
ஓம் செல்வலட்சுமியே போற்றி
ஓம் செந்தாமரை லட்சுமியே போற்றி
ஓம் சொர்ணலட்சுமியே போற்றி
ஓம் சொரூபலட்சுமியே போற்றி
ஓம் சவுந்தர்யலட்சுமியே போற்றி
ஓம் ஞானலட்சுமியே போற்றி
ஓம் தங்கலட்சுமியே போற்றி
ஓம் தனலட்சுமியே போற்றி
ஓம் தான்யலட்சுமியே போற்றி
ஓம் திரிபுரலட்சுமியே போற்றி
ஓம் திங்கள்முக லட்சுமியே போற்றி
ஓம் திலகலட்சுமியே போற்றி
ஓம் தீபலட்சுமியே போற்றி
ஓம் துளசிலட்சுமியே போற்றி
ஓம் துர்காலட்சுமியே போற்றி
ஓம் தூயலட்சுமியே போற்றி
ஓம் தெய்வலட்சுமியே போற்றி
ஓம் தேவலட்சுமியே போற்றி
ஓம் தைரியலட்சுமியே போற்றி
ஓம் பங்கயலட்சுமியே போற்றி
ஓம் பாக்கியலட்சுமியே போற்றி
ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி
ஓம் பார்கவி லட்சுமியே போற்றி
ஓம் புண்ணியலட்சுமியே போற்றி
ஓம் பொருள்லட்சுமியே போற்றி
ஓம் பொன்னிறலட்சுமியே போற்றி
ஓம் போகலட்சுமியே போற்றி
ஓம் மங்களலட்சுமியே போற்றி
ஓம் மகாலட்சுமியே போற்றி
ஓம் மாதவலட்சுமியே போற்றி
ஓம் மாதாலட்சுமியே போற்றி
ஓம் மாங்கல்யலட்சுமியே போற்றி
ஓம் மாசிலா லட்சுமியே போற்றி
ஓம் முக்திலட்சுமியே போற்றி
ஓம் மோனலட்சுமியே போற்றி
ஓம் வரந்தரும் லட்சுமியே போற்றி
ஓம் வரலட்சுமியே போற்றி
ஓம் வாழும் லட்சுமியே போற்றி
ஓம் விளக்குலட்சுமியே போற்றி
ஓம் விஜயலட்சுமியே போற்றி
ஓம் விஷ்ணுலட்சுமியே போற்றி
ஓம் விண்புகழ் லட்சுமியே போற்றி
ஓம் வீரலட்சுமியே போற்றி
ஓம் வெற்றிலட்சுமியே போற்றி
ஓம் வேங்கடலட்சுமியே போற்றி
ஓம் வைரலட்சுமியே போற்றி
ஓம் வைகுண்ட லட்சுமியே போற்றி
ஓம் நரசிம்ம லட்சுமியே போற்றி
ஓம் நலம் தரும் லட்சுமியே போற்றி
ஓம் நாராயண லட்சுமியே போற்றி
ஓம் நாகலட்சுமியே போற்றி
ஓம் நாத லட்சுமியே போற்றி
ஓம் நித்திய லட்சுமியே போற்றி
ஓம் நீங்காலட்சுமியே போற்றி
ஓம் ரங்கலட்சுமியே போற்றி
ஓம் ராமலட்சுமியே போற்றி
ஓம் ராஜலட்சுமியே போற்றி
ஓம் ஜெயலட்சுமியே போற்றி
ஓம் ஜீவலட்சுமியே போற்றி
ஓம் ஜோதிலட்சுமியே போற்றி
ஓம் ஸ்ரீலட்சுமியே போற்றி! போற்றி!
thanks:dinamalar
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum