TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தவளை, தேரை அறிவியல் உண்மைகள்

Go down

தவளை, தேரை அறிவியல் உண்மைகள் Empty தவளை, தேரை அறிவியல் உண்மைகள்

Post by மாலதி Tue Jun 10, 2014 7:32 am

தவளை, நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம். தங்களுடைய ஆரம்ப கால வாழ்க்கை முழுதும் நீரில் வாழும். வளர்ந்த பிறகு உடம்பை ஈரமாக்கிக் கொள்ள நீரில் இருக்கும்.

தவளைகளுக்கு பெரிய தலைகள், நீண்ட கால்கள். வால் கிடையாது.
தவளை, தேரை அறிவியல் உண்மைகள் P32

தவளைகள் நன்கு நீந்தக்கூடியவை. நிலத்தில், நடப்பதைவிட குதித்துக் குதித்துச் செல்லும்.

ஈரப்பதம் உள்ள எல்லா இடத்திலும் தவளைகள் இருக்கும். இவற்றால் கடல் போன்ற உப்பு நீரில் வாழமுடியாது.

உலகில் மிகப்பெரிய தவளையின் பெயர் கோலியாத். இது மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ளது. இதன் எடை மூன்று கிலோ. நீளம் 80 சென்டி மீட்டர்.

உலகின் மிகச்சிறிய தவளை பிரேஸிலில் உள்ளது. இதன் நீளம் 8.5 மில்லிமீட்டர் மட்டும்தான்.

தவளைகளின் இயல்பே குதிப்பதுதான். தவளைகளில் அதிக உயரம் குதிப்பவை தென்ஆப்பிரிக்காவின் ஊசி மூக்குத் தவளைகள். வெறும் ஆறு சென்டிமீட்டர் நீளம் இருக்கும் இந்தத் தவளைகள் அநாயாசமாக 5.35 மீட்டர் உயரத்தை ஒரே தாவலில் குதிக்கும்.

தவளைகளும் தேரைகளும் சேர்ந்து 2600-க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு.

தென் அமெரிக்காவின் விஷத்தவளைகளிடம் மிகுந்த விஷம் இருக்கும். இதன் விஷத்தை அம்புகளில் தடவி மிருங்களையும் எதிரிகளையும் கொல்ல உபயோகிப்பார்கள் அந்தப்பகுதி மக்கள். இவற்றின் பிரகாசமான நிறமே கொல்லவரும் மிருகங்களிடமிருந்து காப்பாற்றும்.

வட அமெரிக்காவின் சிறுத்தைத் தவளை, பெரும்பாலான தவளைகள் போல் இரவில்தான் சுறுசுறுப்பாக இருக்கும். எதிரி மிருகங்கள் துரத்தினால் ஒவ்வொரு குதிப்புக்கும் இடவலமாக மாறி மாறிச் சென்று மிருங்களைக் குழப்பும்.

பெரிய தவளைகள் எல்லாம் சின்னச் சின்ன மிருகங்களைக் கொன்று தின்னும். சில தவளைகள் தங்கள் நீளமான நாக்கை நீட்டிப் பூச்சிகளைப் பிடிக்கும். மற்றவை குதித்துப் பூச்சிகளைப் பிடிக்கும்.

இனவிருத்தி காலத்தில் ஆண் தவளைகளும், பெண் தவளைகளும் தகுதியான குளம், குட்டைகளுக்குப் போகும்.

பெண் தவளைகள் ஏகப்பட்ட முட்டைகள் போடும். இவை உடைந்து குட்டித் தவளைகள் வரும். குட்டித் தவளைகள் தங்களைத் தாங்களே பாத்துக்கொள்ள வேண்டும். சிறு தாவரங்களை உண்ண ஆரம்பித்து சில நாட்களில் சின்ன சின்ன நீர்வாழ் மிருகங்களை உண்ண ஆரம்பிக்கும்.

தவளைகள் சுவாசிக்க நுரையீரலை மட்டுமல்லாமல் தோலையும் பயன்படுத்தும். இதற்காக தோலில் சின்ன ஓட்டைகள் இருக்கும்.

ஆப்பிரிக்கா காட்டில் வாழும் புல்ஃப்ராக் வகைத் தவளைகள் கூர்மையான பற்களுடன் இருக்கும். குட்டிகளுக்கு யார் மூலமாவது ஆபத்து வந்தால் _ அது பாம்போ, மனிதனோ… உடனடியாக சண்டைக்குப் போய்விடும்.

ஒரு மில்லிமீட்டரில் இருந்து ஐந்து மில்லிமீட்டர் அல்லது அதற்கு மேலும் ஒன்றிரண்டு மில்லிமீட்டர் கூடிய அளவுகளில் முட்டையிடும். இவை ஆயிரக்கணக்கில் இருக்கும். ஆனால் பிழைப்பது பத்தோ, இருபதோதான்.

பூச்சிகள், புழுக்கள், மீன்கள், பிற குட்டித் தவளைகள் போன்றவை தவளைகளின் உணவு.

தவளை, தேரை

தேரைகள் தவளைகளின் சகோதர இனம். இவை பார்ப்பதற்கும், இவற்றின் வாழ்வு முறையும் ஓரிரு வித்தியாசங்களைத் தவிர தவளைகள் போல்தான்.

தேரைகளின் தோல் தவளைகளின் தோலைவிட ஈரப்பதம் குறைந்திருக்கும். தேரைகளுக்குப் பற்கள் இல்லை. இரண்டிற்கும் விலா எலும்புகள் வேறுபட்டிருக்கும்.

தேரைகளில் பெரிய தேரையின் பெயர் Marine Taod. 24 சென்டிமீட்டர் நீளமும், 1.3 கிலோ எடையும் இருக்கும்.

தேரைகளின் ஆயுட்காலம் முப்பது வருடங்களும் அதற்கு மேலும் அமையலாம்.

தேரைகள் சுமார் மூவாயிரம் முட்டைகள் இடும்.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum