TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:01 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


”இனம்” படத்தின் விமர்சனம்-

4 posters

Go down

”இனம்” படத்தின் விமர்சனம்- Empty ”இனம்” படத்தின் விமர்சனம்-

Post by krishnaamma Thu Mar 27, 2014 7:37 am

”இனம்” படத்தின் சிறப்பு திரையிடலுக்கு சென்ற தோழர் ஒருவரின் விமர்சனம்
”இனம்” படத்தின் விமர்சனம்- 1619289_763754260310695_1410430183_n
//ஒரு மளையாளியால் தமிழனாக சிந்திக்க முடியாது என்பதனை மீண்டும் நிருபித்திருக்கிறார் சந்தோஷ் சிவன்.

முன்னதாக படத்தில் ஏதேனும் குறை யிருந்தால் பார்த்து விட்டு கூறுங்கள், அதனை நீக்கிக்கொள்ளலாம் என 
லிங்குசாமி உறுதியளித்திருந்தார். அதன் பேரில் தோழர்கள் சிலர் பார்த்தோம்.

ஒளீப்பதிவு, இசை, படத்தொகுப்பு, ஒலிப்பதிவு என சகல விஷயத்திலும் தான் ஒரு சிறந்த கலைஞன் என 
நிருபித்துள்ளார். ஆனால் எந்த வித புரிதலுமின்றி அம்மக்களை அனுகியிருக்கிறார்.
(எனக்கென்னவோ ராஜபக்ஷ தான் பணம் கொடுத்திருப்பான் என தோன்றுகிறது).

அவர் எதற்காக இந்த படம் எடுத்தார், எதனை சொல்ல வந்தார் என என்னால் புரிந்துக்கொள்ள இயலவில்லை.

அகதியாக ஒரு சிறுமி வருகிறாள். இந்திய அதிகாரி அவளை விசாரிக்கிறார். அவள் நடந்ததை கூறுகிறாள்.
அவள் பார்வையில் கடந்த காலம் விரிகிறது. அவள் கதையை கேட்டு இறக்கம் கொள்ளும் அதிகாரி அவளை 
விட்டுவிடுகிறார். அவள் எழுந்து செல்கிறாள், யாதும் ஊரே யாவரும் கேளிர் என படம் நிறைவடைகிறது.

இலங்கை அகதியை சுதந்திரமாக விடும் அதிகாரி உள்ளானா? அது சாத்தியமா? அந்த இந்திய அதிகாரியின்
முகத்தை திரையில் காண்பிக்கவே இல்லை (அப்படி ஒருவன் இருக்க வாய்ப்பில்லை என குறிப்பால் உணர்த்துகிறாரோ?)

நிச்சயமாக என்னால் சொல்ல முடியும் இது திரைப்பட விழாக்களுக்கு அனுப்பிய, அனுப்ப போகும் படமாக இருக்க முடியாது.
நம் கண் முன் வைத்திருப்பதே edited versionஆக இருக்கும் என நினைக்கிறேன். ஆங்காங்கே இசை மற்றும் படத்தொகுப்பில் 
jumping தெரிகிறது. இவை ராஜபக்ஷ குழுக்களின் நவீன பிரச்சார உக்தி. ஆனால் ஒரு பாமர திரை ரசிகனால் இவை எதையும் 
நினைத்துப்பார்க்காமல், நமக்கான படமாகவே நினைக்க வாய்ப்புள்ளது, அதனுள் பொதிந்திருக்கும் அரசியல் மிக ஆபத்தானது.

ஒட்டு மொத்த கதையே ஆட்சேபத்திற்குறியதுதான். அதில் ந்மக்கு நான்கைந்து இடங்களில் சற்றும் உடன்பாடில்லை.

தலைப்பு ஆரம்பிக்கும் போதே அவன் சூழ்ச்சிகளை ஆரம்பிக்கிறான். டைட்டிலில் வரைந்த ஓவியங்களை காண்பிக்கிறான். அதில் ஒரு 
ஓவியத்தில் சீஷா விளையாட்டில் விளையாடுவது போல், இருவர் நேருக்கு நேர் அமர்ந்து ஒருவரை நோக்கி ஒருவர் துப்பாக்கியை 
நீட்டியபடி இருக்கின்றனர். இது உண்மையிலேயே அப்படி நடந்த சண்டையா? சிங்களவன் நேருக்கு நேர் தான் நம்முடன் மோதினானா?
(உணர்வுள்ளவனோ, உண்மையானவனோ எடுத்திருந்தால், ஒருவனுக்கு எதிரே ஒன்பது பேர் நிற்பதைப் போல் தான் வரைந்திருப்பான்)

முதல் கால் மணி நேரத்தில், நான்கைந்து இடங்களில் இனக்கலவரம், இனக்கலவரம் என்ற வார்த்தை திரும்ப திரும்ப பிரயோகிப்பதின் நோக்கமென்ன?
(உணர்வுள்ளவனோ, உண்மையானவனோ எடுத்திருந்தால், இனப்படுகொலை எனவே நிறுவியிருப்பான்)

போராளியாக சித்தரிக்கப்பட்ட ஒருத்தரும், பதின் பருவத்தை தாண்டாதவராகவே இருக்கின்றனர். ஒருத்தருக்கு கூட மீசை அரும்பாத வயது, சிறுவன், 
சிறுமிகளை மட்டுமே போராளிகளாக காட்டப்பட்டுள்ளனர்.

சிங்கள ராணுவ அடியாள் ஒருவன் இறந்து கிடக்கிறான். அவனது கையில் குழந்தையின் புகைப்படம் இருக்கிறது. இந்த காட்சியின் மூலம் பாசத்தை தான் இயக்குனர் 
காட்ட முற்பட்டாரானால், அந்த புகைப்ப்டம் ஏன் போராளியின் கைகளில் இருந்திருக்ககூடாது. அதை விட இது மக்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்க முடியுமே?
(இத்திரைப்படத்தை இவன் சிறீலங்காவிலா வெளியிடப்போடிறான், தமிழ் நாட்டில்தானே?)

கருணாஸ் குழந்தைகளுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார். அங்கே பெண் போராளிகள் வருகிறார்கள். அக்குழந்தைகளுக்கு போர்க்காட்சிகளை கானொளியில் போட்டு காண்பிக்கின்றனர்.
கருணாஸின் முகம் பல கோணகளில் நெளிகிறது. (மக்களுக்கு விருப்பமில்லாததை போராளிகள் செய்கிறார்களாம்) 

ஒரு தமிழ் சிறுவன் கூறுகிறான். "நான் கடைசிகட்ட போரில் அங்கே தான் இருந்தேன். லீடர் இறந்ததை என் கண்ணால் பார்த்தேன். அவர் கழுத்து அறுபட்டு கிடந்தது."
(இந்த வசனமும், மேலே கூறிய கருணாஸின் காட்சியும் திரைக்கதையில் ஒரு மயிரிழையளவும் தேவைப்பட்டதாக தெரியவில்லை, மற்றவை தேவையா என கேட்காதீர்கள்)

உச்சமாக அனுமதிக்கவே முடியாத காட்சி, போர் எல்லாம் முடிந்து, எல்லோரும் காட்டு வழியே பயணிக்கிறார்கள், வெளி நாடு செல்ல. அங்கே சிங்கள ராணுவத்தினர் அவர்களை பார்க்கிறார்கள்.
(அதாவது மே 19 வாக்கில், அந்த மூன்று நாட்களில் அவர்கள் கண்ணில் கண்டவனையெல்லாம் சுட்டார்கள் என்பது உலகத்திற்கே தெரியும். இந்த சந்தொஷ் சிவனிற்கு மட்டும் எப்படி தெரியாமல் 
போனதோ?) தமிழ பெண்களின் உடலை தடவி, அழுத்தி சோதனை செய்கிறார்கள். இதனை கண்ட கருணாஸ் பொங்கி எழுந்து கட்டையை கொண்டு துப்பாக்கி ஏந்தியவனை அடிக்கிறார். 
(மற்ற ராணுவத்தினர் வேடிக்கை பார்க்கிறார்களாம்.) இன்னொரு சிங்களவன் கருணாஸை அடிக்க துப்பாக்கியை தூக்கி வருகிறான். (துப்பாக்கியால் சுடாமல் அடிக்க தான் வருகிறானாம்). 
அந்தக் கூட்டத்தில் ஒரு பெண் போராளி துப்பாக்கியை கொண்டு சிங்களவனை சுடுகிறாள். அங்கே இரு தரப்புக்கும் சண்டை நடக்கிறது. (அதாவது இவர்கள் தாக்கியதால் தான் அவர்கள் 
தாக்கினார்களாம்) சண்டையில் இருதரப்பினரும் மறைந்து நின்று தாக்கிகொள்கிறார்கள். (இங்கே தான் வாங்கிய எச்சில் பணத்திற்க்கு, அவன் மிகுந்த விசுவாசமாய் காட்சியை வைக்கிறான்)
அதாவது, ஆயுதம் இல்லா பொதுமக்கள் அனைவரும் சிங்களவர்களின் பின்னால் மறைந்து நிற்கிறார்கள். அதில் ஒருவன் பொதுமக்களை பாதுகாப்பாக அப்புற படுத்துகிறான். போராளி
துப்பாக்கியிலிருந்து வந்த குண்டு சிங்கள ராணுவத்தின் பின்னால் இருக்கும் தமிழ் சிறுவன் காலை பதம் பார்க்கிறது.(அச்சிறுவன் கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவன்)
(சிங்கள ராணுவத்தினர் பொதுமக்களை பாதுக்காக்க சண்டையிட்டார்களாம், போராளிகள் தான் தாக்கினார்களாம்)

கதையில் வரும் எந்த கதாபாத்திரமும், ஈழத்தின் சூழல் தெரிந்து வாழ்பவர்களாக தெரியவில்லை. கதை நடைபெறும் காலம் போர்(இனப்படுகொலை) நடைபெறும் காலம். அதன் பிரதிபலிப்பு எந்த
கதாபாத்திரத்தின் செயலிலும், பேச்சிலும் தெரியவில்லை. காலம் செல்ல செல்ல அவரவர் வாழ்விடங்களை விட்டு, குறுகிய பகுதிக்குள் சுருங்கினார்கள். அப்படி ஒரு விடயமே படத்தில் இல்லை. 
மாறாக அனைவரும் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். அதில் 7 வயது சிறுவன் ஒரு சிறுமியை காதலிக்கிறான். 15 வயது சிறுவன் ஒரு சிறுமியை காதலிக்கிறான். கட்டிப்பிடிக்கிறார்கள், 
முத்தமிடுகிறார்கள். அச்சிறுமி வெட்ட வெளியில் சிறுவர்களுக்கு மத்தியில் குளிக்கிறாள். மூளை வளர்ச்சியில்லாத ஒருவனும் கடைசிவரை முத்தம் கேட்டுக்கொண்டே அலைகிறான். (போர்ச்சூழலில் 
இருக்கும் குழந்தைகள் உயிரை காக்க போராடுமா அல்லது இன்ப விளையாட்டுகளில் திளைக்குமா)

படத்தில் எல்லாருமே ஒரு கதாபாத்திரமாக காட்டப்பட்டு, ஒருவன் மட்டுமே மகாத்மாவாக சித்தரிக்கப்பட்டுள்ளான். அவன் சிங்கள ராணுவ கேப்டன்.

கடைசியில் போரில் உயிர் இழநத 40000 பேருக்கும், அடிபட்ட ஆயிரக்கணக்கான பேருக்கும் இப்படம் சமர்ப்பணம் என முடிகிறது.

(டேய் நாயே இது போரா? இல்ல இனப்படுகொலையா? செத்தவன் 40000 பேருன்னு உனக்கு யாருடா சொன்னது? ன்னு கேக்க தோனுது, யாருகிட்ட கேக்கலாம்?)
சந்தோஷ் சிவன? லிங்குசாமியா?

krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

”இனம்” படத்தின் விமர்சனம்- Empty Re: ”இனம்” படத்தின் விமர்சனம்-

Post by மாலதி Thu Mar 27, 2014 7:59 pm

”இனம்” படத்தின் விமர்சனம்- 10153116_574653969297820_1790784970_n


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

”இனம்” படத்தின் விமர்சனம்- Empty Re: ”இனம்” படத்தின் விமர்சனம்-

Post by sakthy Thu Mar 27, 2014 11:17 pm

பல போராட்டங்களை விரும்பியோ விரும்பாமலோ நடத்திய தமிழ் திரைப்படத் துறையினர் முகத்தில் சேற்றை வாரி வீசிய திரைப்படம்- இனம்.

மல்லி என்ற திரைப்படத்தில் தமிழ் பெண்களை படுமோசமாக சித்தரித்திருந்தார். ஒழுக்கக் கேடான முறையில் கர்ப்பமுற்ற தமிழ் பெண் மனிதவெடிகுண்டாக மாறுவதாக அந்தப் படத்தில் கதை அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது சந்தோஸ் சிவனால் எடுக்கப்பட்டுள்ள இனம் திரைப்படத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டமும் ஈழத்தமிழர்களின் வாழ்வியலும் மிக மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளதுடன, தமிழின அழிப்புப்பற்றியோ அல்லது சிங்கள படைகளின் தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் பற்றியோ எதுவும் கூறப்படவில்லை.

போரில் இருந்து தப்பிவரும் குழந்தைகளை அரவணைப்பவர்களாக, அவர்களுக்கு பரிவுகாட்டுபவர்களாக சிங்கள புத்த பிக்குகளை சித்தரித்துள்ள சந்தோஸ் சிவன் லிங்குசாமி ( மலையாளி தொலுங்கர் ) கூட்டணியினர். சிங்களபேரினவாத பிக்குகளால் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதையும் தமிழ் பெண்கள் சிறுமிகள் இன்றுவரை பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதையும் மறைக்க முனைவது ஏன்?

பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட தமிழ் பெண்ணொருவர் (கதை நாயகி) ஆற்று நீரில் தனது கறைகளை கழுவிச் செல்வதாக மிகவும் மோசமான அருவருப்பான காட்சியும் இன்னும் பல இழிவான காட்சிகளும் இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன..
சிங்கள அரசின் இனப்படுகொலையால் பெரும் அழிவுகளை சந்தித்தபடி நிர்க்கதியான நிலையில் சர்வதேச சமூகத்திடம் நீதி வேண்டி போராடிக்கொண்டிருக்கும் தமிழ் இனத்தையும் அவர்களின் போராட்டத்தையும் இழிவுபடுத்தும் வகையில் சந்தோஸ் சிவன் , லிங்குசாமி (மலையாளி தொலுங்கர் ) கூட்டணியினர் இந்தப்படத்தை எடுத்துள்ளனர்.
சிங்கள அரசின் படுகொலைகளையும் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பையும் மறைத்து சிங்கள அரசையும் படைகளையும் உத்தமர்களாக காட்டியுள்ளனர் இவர்கள். மகிந்த ராயபக்சவின் விசுவாசிகள் போன்று செயற்படுகின்றனர். தமிழ் திரையுலகம் என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதாரவாக எத்தனையோ அறப்போராட்டங்களை மேற்கொண்டுள்ளது.
சிங்கள ராஜபக்சேக்குக் கிடைத்த இன்னொரு நட்பு, இந்த சந்தோஸ் சிவன் , லிங்குசாமி கூட்டணி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

”இனம்” படத்தின் விமர்சனம்- Empty Re: ”இனம்” படத்தின் விமர்சனம்-

Post by piraba Fri Mar 28, 2014 6:56 am

யாரும் இந்த படத்தை பார்கதிங்க


”இனம்” படத்தின் விமர்சனம்- NEWIM_zps788c3e8e
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

”இனம்” படத்தின் விமர்சனம்- Empty Re: ”இனம்” படத்தின் விமர்சனம்-

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum