TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சரியா, தப்பா!?

Go down

சரியா, தப்பா!? Empty சரியா, தப்பா!?

Post by piraba Fri May 07, 2010 7:57 am


சரியா, தப்பா!? Editinside





தற்போது
தொடங்கப்பட்டுள்ள மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பணியில், சாதிவாரி
கணக்கெடுப்புக்கு வாய்ப்பே இல்லை என்பதை மத்திய அரசு உறுதியாகத்
தெரிவித்துவிட்டது. இருப்பினும்கூட, இதுபற்றிய விவாதத்தை அரசியல்
தலைவர்கள் விட்டுவிடாமல் தொடர்ந்து பேசவும், மக்களவையில் தங்கள் வாதத்தைப்
பதிவு செய்யவும் முற்படுதல் தொடர்கிறது.விடுதலைக்கு முன்பு
வரை இந்தியாவில் சாதிகள் பற்றிய விவரம் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பதிவு
செய்யப்பட்டது. சர்தார் வல்லபபாய் படேல் இதுகுறித்து குறிப்பிடுகையில்,
விடுதலை பெற்ற இந்தியாவில் இத்தகைய சாதிவாரி கணக்கெடுப்பு தேவையுமில்லை,
அது விரும்பத்தக்கதும் அல்ல என்று கூறினார். விடுதலைக்குப் பின்னர்
இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நிறுத்தப்பட்டுவிட்டது.தற்போது
சாதிவாரி கணக்கெடுப்பு தேவை என்ற பேச்சு எழுந்துள்ளது.
தமிழ்நாட்டிலும்கூட, பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, பாட்டாளி மக்கள்
கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி
வருகின்றார். இதற்கு ஒரு சில அரசியல் கட்சிகளிலும் ஆதரவு பெருகி வருகிறது.காங்கிரஸ்
கட்சியின் தலைவர்களில் ஒருவரும், மத்திய சட்ட அமைச்சருமான வீரப்ப மொய்லி
இத்தகைய சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாக நிற்கிறார். அதேசமயம், இது
தேவையில்லை என்ற கருத்தை ப.சிதம்பரமும் வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா
போன்றவர்களும் கொண்டுள்ளனர். பாஜக மற்றும் இடதுசாரிகளும் இந்தக்
கோரிக்கைக்கு ஆதரவாகச் சேர்ந்துள்ள நிலையில் இக்கோரிக்கை வலுப்பெற்றுள்ளது
என்பதை மறுப்பதற்கில்லை.இன்னும் கூடுதலாக நெருக்கடி
கொடுப்பார்களேயானால், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பணி
தொடங்கிவிட்டபோதிலும்கூட, இதனைச் சேர்க்கவும், கணக்கெடுப்பு நடத்தப்பட்ட
ஊர்களில் இந்த ஒரு கேள்வி நிரலை மட்டும் மீண்டும் நிரப்பித் தரவுமான
நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்வது அப்படியொன்றும் இயலாத காரியமல்ல.ஆனால்,
எதற்காக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்? இதனால் பயனடையப்போவது
அந்த சாதியைச் சேர்ந்த மக்களா, அல்லது அரசியல் கட்சிகளா? இதுதான் சிக்கலான
பார்வையை விரிக்கிறது.குறிப்பாக, இந்தக் கோரிக்கையை முன் வைப்போர்
சொல்லும் ஒரு கருத்து என்னவெனில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான
நலத்திட்டங்கள் பலவற்றை அரசு மேற்கொண்டு வருவதால், இதில் பயன்
அடைந்தவர்கள் எத்தனை பேர் என்பதைக் கணக்கிடவும், சரியான பயனாளிகளைத்
தேர்வு செய்யவும் இத்தகைய கணக்கெடுப்பு உதவும் என்கிற வாதத்தை
முன்வைக்கின்றனர். இருப்பினும், இந்த விவரங்களை பிற்படுத்தப்பட்டோருக்கான
தேசிய நலவாரியம் செய்துகொள்ளட்டுமே, எதற்காக அதனை மக்கள்தொகைக்
கணக்கெடுப்பில் சேர்க்க வேண்டும் என்பது எதிர்தரப்பு வாதம்.மேலும்,
ஒரு மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பாகக் கருதப்படும் சாதி, இன்னொரு
மாநிலத்தில் அவ்வாறாக இல்லை. தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனச் சான்றிதழ்
பெறுவதில்கூட இத்தகைய குளறுபடிகள் இருக்கின்றன என்பதை பல போராட்டங்கள்
மூலம் காண முடிகிறது. இந்நிலையில் இத்தகைய கணக்கெடுப்பில் தேவையற்ற
குழப்பங்கள்தான் மிஞ்சும் என்ற வாதத்தை அரசு சொல்கிறது.சாதிவாரி
கணக்கெடுப்பைக் கோருவதன் அடிப்படை நோக்கமே அந்தந்த பகுதியில் உள்ள
சாதியினரின் எண்ணிக்கையைத் தெரிந்துகொண்டால், அதற்கேற்ப அரசியல் நடத்தவும்
அந்த சாதியிலிருந்து வேட்பாளரைத் தேர்வு செய்யவும் அரசியல் கட்சிகளுக்கு
மிக எளிது. இப்போதும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றாலும்,
இதையும் மிகத் துல்லியமாக கணக்கிட்டு செய்ய விரும்புகிறார்கள். இத்தகைய
கணக்கெடுப்பு உண்மையில் தேர்தல் நேரத்திற்கு மட்டுமே பயனுள்ளதாக
இருக்கும். மேலும், உள்ளூர் சாதி அரசியலைத் தூண்டிவிட்டு, தற்போது நிலவி
வரும் அமைதியைக் குலைக்க வழி வகுக்கும்.இந்த சாதிவாரி கணக்கெடுப்பு
நடத்தப்படுவது தவிர்க்க முடியாதது, இது மக்கள் நலனுக்கு அவசியம் என்று
சொல்லும் அரசியல் கட்சிகளுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், இந்தக்
கணக்கெடுப்பில் தெரியவரும் முன்னேறிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட
குடும்பங்களை (கிரீமி லேயர்) அரசின் இடஒதுக்கீடு மற்றும் உதவித்தொகை
சலுகைகளிலிருந்து விலக்கு அளிக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்ளுமா?அப்படியாக,
கிரீமி லேயரை வகைப்படுத்த இந்த சாதிவாரி கணக்கெடுப்பு உதவும் என்றால்
மட்டுமே, இந்த சாதிவாரி கணக்கெடுப்பு பயனுள்ளதாக இருக்கும். இதுவரை அரசின்
சலுகைகளால் பயன் அடையாத பிற்படுத்தப்படுத்தப்பட்ட சமூகத்தினரும் பயன்
அடைவர். அப்போதுதான் சமூக நீதி உண்மையிலேயே சமமாக இருக்க முடியும். கடந்த
70 ஆண்டுகளில் அரசின் சலுகைகளால் பயனடைந்த குடும்பத்தினர்தான் தற்போது
கல்வி வேலை வாய்ப்புகளிலும் அரசு தரும் சலுகைகளைத் தொடர்ந்து மீண்டும்
மீண்டும் பெறுகிறார்கள் என்பதும், அந்த சமூகத்து ஏழைகளுக்கு அவர்களே
தடையாக அமைந்துவிடுகிறார்கள் என்பதுமே உண்மை நிலை.பள்ளிக்
குழந்தைகள் தினமும் காலையில் பள்ளிகளில் உறுதியேற்கின்றன. இந்தியா என்
தாய்நாடு, இந்தியர் யாவரும் என் சகோதரர்....! ஆனால் அரசியல்வாதிகள்
சொல்லித் தர முனைகின்றனர், "நீ இந்த சாதி சகோதரன், நீ தலித் சகோதரன், நீ
பிற்படுத்தப்பட்ட சகோதரன், நீ மிகவும் பிற்படுத்தப்பட்ட சகோதரன் என்று!'தமிழ்நாட்டில்
தெருக்களில் சாதிப் பெயரை அழித்தோம். அவரவர் பெயர்களில் சாதிப் பெயரை
நீக்கினோம், போக்குவரத்துக் கழகங்களில் சாதி அடையாளங்களை ஒழித்தோம். ஆனால்
எல்லார் மனங்களிலும் சாதியை ஆழமாக விதைத்துவிட்டோம். "ஞானபானு'வில்
முதலில் பிரசுரமான "பாப்பாப் பாட்டு' கவிதையில் சாதிகள் இல்லையடி பாப்பா
என்று எழுதவில்லை மகாகவி பாரதி; சாதி பெருமையில்லை பாப்பா என்றே
எழுதியிருக்கிறார். இந்த விவாதத்தைப் புதுமைப்பித்தன்தான்
தொடங்கிவைத்தார். இப்போதும் இந்த விவாதம் தேவையாக இருக்கிறது. சாதிகள் இல்லையடி பாப்பா, சரியா,சாதி பெருமையில்லை பாப்பா, சரியா?
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum