TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இலங்கைத் தரப்பை பதற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கும் இரசாயன ஆயுதங்கள் பற்றிய ஆவணப்பட குற்றச்சாட்டு!

Go down

இலங்கைத் தரப்பை பதற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கும் இரசாயன ஆயுதங்கள் பற்றிய ஆவணப்பட குற்றச்சாட்டு! Empty இலங்கைத் தரப்பை பதற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கும் இரசாயன ஆயுதங்கள் பற்றிய ஆவணப்பட குற்றச்சாட்டு!

Post by அருள் Fri Feb 07, 2014 9:23 pm

இலங்கைத் தரப்பை பதற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கும் இரசாயன ஆயுதங்கள் பற்றிய ஆவணப்பட குற்றச்சாட்டு!
This Land Belongs to the Army
கடந்த ஜனவரி 31 பெப்ரவரி 1 ம் தேதிகளில் லண்டனில் பிரித்தானிய தமிழர் பேரவை சார்பாக 'இலங்கை நடைபெறும் நில அபகரிப்பை பற்றிய சர்வதேச மாநாடு' நடைபெற்றது.
இதில் மேதா பட்கர், நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் டெனிஸ் ஹலேடெய் உட்பட உலகளவில் பல்வேறு தரப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் அண்மையில் இலங்கையில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட பத்திரிகையாளர் மகா.தமிழ்ப் பிரபாகரனும் கலந்து கொண்டு தனது ஆவணப்படத்தை வெளியிட்டார்.

இந்த ஆவணப்படத்தில் வெளியானவைகள் இப்பொழுது இலங்கைத் தரப்பை பதற்றத்துக்கு உள்ளாக்கி இருப்பதாக தெரிகிறது.

இது தொடர்பாக சிங்கள பத்திரிகையில் எழுதப்பட்டுள்ள செய்தியில்,

சமீபத்தில் பூநகரி பகுதியில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட தமிழ் பிரபாகரன், பிரித்தானியா பாராளுமன்றத்தில் 'இந்த நிலம் இராணுவத்துக்கு சொந்தமானது '(This Land Belongs to the Army) என்ற ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அது மட்டுமின்றி வன்னிப் போரில் இலங்கை இராணுவம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இவர் 'புலித்தடம் தேடி- இரத்த ஈழத்தில் 25 நாட்கள்' என்ற தொடரை எழுதி அதை அண்மையில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

இவர் பிரித்தானியா தமிழர் பேரவை, தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழு அழைப்பின் பேரிலேயே இதில் கலந்து கொண்டுள்ளார்.

இதே போல் இவர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி.களையும் அழைத்துள்ளனர் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நில அபகரிப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளையும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் மறுக்கிறது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

இலங்கைத் தரப்பை பதற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கும் இரசாயன ஆயுதங்கள் பற்றிய ஆவணப்பட குற்றச்சாட்டு! Empty Re: இலங்கைத் தரப்பை பதற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கும் இரசாயன ஆயுதங்கள் பற்றிய ஆவணப்பட குற்றச்சாட்டு!

Post by அருள் Fri Feb 07, 2014 9:27 pm

'எல்லாம் சரி என்றால் கேமரா கண்களுக்கு இலங்கை அஞ்சுவது ஏன்?'
முள்ளிவாய்க்கால் போரின்போது இலங்கை ராணுவம் தடை செய்யப்பட்ட ரசாயன குண்டுகளை பயன்படுத்தியது உள்ளிட்ட அத்துமீறல்களை இலங்கை வீரர் ஒருவரே ஒப்புக்கொள்ளும் 'இந்த நிலம் ராணுவத்துக்கு சொந்தமானது' This Land Belongs to Army) என்ற  தமிழக பத்திரிகையாளர் மகா. தமிழ்ப் பிரபாகரனனது ஆவணப்படம், இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் வெளியிடப்பட்டது.
இலங்கைத் தரப்பை பதற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கும் இரசாயன ஆயுதங்கள் பற்றிய ஆவணப்பட குற்றச்சாட்டு! Srilanka%20army%20300(1)
ராணுவமயமாக்கப்பட்ட பகுதிகளில் இன்றைய நிலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நில அபகரிப்பு பற்றியும் போரின் போது இலங்கை ராணுவம் எப்படி நடந்து கொண்டது என்பதை மையப்படுத்திய இந்த ஆவணப்படம், கடந்த ஜனவரி 30 - பிப்ரவரி 1 அன்று பிரிட்டன் தமிழர் பேரவை மற்றும் தமிழர்களுக்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழு ஏற்பாட்டில் நடைபெற்ற 'இலங்கையில் நடைபெறும் நில அபகரிப்பை பற்றிய சர்வதேச மாநாட்டில்'  வெளியிடப்பட்டது.

முதல் நாள் ஜனவரி 30 அன்று லண்டன் நாடாளுமன்ற வளாகத்தில் நடைப்பெற்ற நிகழ்வில் மூன்று நிமிடமும் , அடுத்த நாள் பிப்ரவரி 1 அன்று யூனிவர்சிட்டி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் முழு ஆவணப்படமும் திரையிடப்பட்டது. 

இந்த மாநாட்டில் இந்தியாவின் சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர், நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் டெனிஸ் ஹலிடேயும்,ஓக்லாந்த் நிறுவனத்தின் அனுராதா மிட்டல் இன்னும் பல்வேறு நாடுகளை சேர்ந்த மனித உரிமையாளர்களும்,பேராசிரியர்களும்,செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

சேனல் 4 வெளியிட்ட நோ ஃபயர் சோன் ஆவணப்படத்தின் இயக்குனர் கெல்லம் மெக்கரேவும் இதில் பங்கேற்றார். ( படம் கீழே)
இலங்கைத் தரப்பை பதற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கும் இரசாயன ஆயுதங்கள் பற்றிய ஆவணப்பட குற்றச்சாட்டு! Prabakaran%20with%20kellan
"ஒரு கிலோ மீட்டர் சுற்றளவை அழிக்கும் ஆயுதங்களை நாங்கள் பயன்படுத்தினோம்" என போரில் பங்கேற்ற இலங்கை ராணுவ சிப்பாய் ஒருவர் ஒப்புக்கொள்ளும் பேட்டி, இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள நிலையில், இலங்கை அரசு தரப்பில் வழக்கம்போல் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படத்தில் கூறப்படும் போரில் பயன்படுத்தப்படும் ரசாயன ஆயுதங்களை மையமாக வைத்துக்கொண்டு, இலங்கை ராணுவத்தை குற்றம் சுமத்த,இங்கிலாந்து நாடாளுமன்றத்தை இந்த ஆவணப்படத்தை உருவாக்கிய  தமிழ் பிரபாகரன் பயன்படுத்திக்கொண்டதாக இலங்கை அரசு குற்றம் சாட்டியுள்ளது. 

ஆனால் போருக்கு பின்னரான தமிழர் பகுதியில் காணப்படும் மனித அவலங்கள், தமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள இலங்கை ராணுவத்தினரின் அத்துமீறல்கள்,  அவர்களது கண்காணிப்புகள், தமிழ் பெண்களை உற்றுநோக்கும் வக்கிரபார்வை போன்றவற்றையும், போரின்போது நிகழ்ந்த கொடூரங்கள் மற்றும் நடந்த பேரழிவுகளுக்கு சாட்சியாய் நிற்கும் இடங்களை நேரில் சென்று பார்த்து, அவற்றை ஏற்கனவே பத்திரிகையில் தொடராக பதிவு செய்த தமிழ்ப்பிரபாகரன், இலங்கை அரசின் குற்றச்சாட்டை மறுக்கிறார். 

வடகிழக்கில் சுதந்திரத்தின் காற்று வீசுகிறது என்றால், அங்கு இன்னும் ஏன் சர்வதேச மனித உரிமையாளர்கள்- பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று கேள்வி எழுப்பும் அவர், " விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று சொல்லி எண்ணிலடங்கா அப்பாவி பொது மக்களை கண்மூடித்தனமாக இலங்கை ராணுவம் கொன்று குவித்ததை இலங்கையின் உள்நாட்டு போர் சம்பந்தமாக வெளியான பல்வேறு மனித உரிமை அறிக்கைகளும் ஆதாரங்களும் குறிப்பிடுகின்றன. போர் முடிந்து இன்றும் இலங்கையின் வடகிழக்கு பிரதேசம் ராணுவமயமாக்கப்பட்ட பகுதிகளாக உள்ளது என்பதையும் இவ்வறிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.

இலங்கைத் தரப்பை பதற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கும் இரசாயன ஆயுதங்கள் பற்றிய ஆவணப்பட குற்றச்சாட்டு! Srilanka%20army%20crime%20war%20200ரசாயன ஆயுதங்கள் விசயத்தையோ, ஒரு கிலோ மீட்டர் சுற்றளவை அழிக்கும் கிபீர் தாக்குதல் பற்றியோ நானாக குற்றம் சாட்டவில்லை, போரில் பங்குப்பெற்ற இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் தான் இதை இப்படத்தில் வெளியாகியுள்ள பிரத்யேக  பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.  அதுமட்டுமின்றி போருக்கு பிறகு இன்று நிலங்களை திருப்பி தமிழ் மக்களுக்கே கொடுப்பதாகவும் இந்த மாநாட்டில் வைக்கப்பட்ட நில அபகரிப்பு குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இல்லை எனவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிடுகிறது. 

ஆனால் நில அபகரிப்பின் அடிப்படை தொடங்கி, இன்று ராணுவமயமாக்கப்பட்ட வடகிழக்கு பிரதேசத்தில் எப்படி திட்டமிட்ட வகையில் தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்படுகிறது என்பதையும், ராணுவம் நிலத்தை மக்களுக்கு திருப்பிக்கொடுப்பதில் உள்ள உண்மைநிலை என்ன என்பதையும், இப்படி இன்னும் இன்னும் வடகிழக்கில் அரங்கேறி வரும் ராணுவ அத்துமீறல்களையும் இந்த ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவ நில அபகரிப்பு தொடர்பாக இப்படத்தில் எடுத்து கையாளப்பட்ட முக்கியமான ஆதாரங்கள் யாவும் இலங்கை அரசு நியமித்த எல்.எல்.ஆர்.சி. குழுவின் அறிக்கையிலிருந்துதான் எடுக்கப்பட்டது.

இலங்கை அரசின் கருத்துப்படி ராணுவம் பெரும்பான்மையாக நிலைக் கொண்டுள்ள வடகிழக்கில் சுதந்திரத்தின் காற்று வீசுகிறது என்றால், அங்கு இன்னும் ஏன் சர்வதேச மனித உரிமையாளர்கள்-பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை ? அங்கு பயணித்தபோது ராணுவ முகாம்களை படமெடுத்ததாக ஏன் நான் கைது செய்யப்பட்டு, மூன்று நாட்கள் தீவிரவாத புலனாய்வு விசாரணைப் பிரிவின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டேன் ?

ராணுவம் வடகிழக்கில் செய்வது நியாயம் என்றால், பாதுகாப்புகாகத்தான் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்றால் கேமிராவின் கண்களுக்கு இன்னும் இலங்கை ராணுவம் அஞ்சுவது ஏன் ? 

தவறுகள் உள்ள இடத்தில்தான் தடைகளும் கட்டுப்பாடுகளும் அஞ்சுதலும் பெருகி இருக்கும். அந்த தடைகளுக்கு அப்பால் உள்ள காட்சிகளையும், இன்றைய வடகிழக்கு நிலத்தின் எதார்த்தையும், போரின் போது இசைப்பிரியாவை போன்று  இன்னும் பிற தமிழ் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு படுகொலைச் செய்யப்பட்ட காட்சிகளையும்  'இந்த நிலம் ராணுவத்துக்கு சொந்தமானது' என்ற ஆவணப்படத்தின் மூலம் மனிதத்தை நேசிக்கும் மக்கள் முன் வைத்துள்ளேன்" என்கிறார். 

விளக்கம் அளிக்க வேண்டியது இலங்கை அரசுதான்! 


http://news.vikatan.com/article.php?module=news&aid=24288
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இரசாயன ஆயுதங்கள்
» ஹிந்திய - சிங்கள அரசுகளின் பயங்கரவாதத்திற்கான இறுதி யுத்தத்தில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டமைக்கான ஆதாரம்..
» இலங்கைப் படையினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக பிரித்தானியாவில் குற்றச்சாட்டு.
» இலங்கை போரில் இரசாயன ஆயுதங்கள்! 'ஒரு கி.மீ. சுற்றளவை அழிக்கும் ஆயுதங்களை பயன்படுத்தியது நாங்கள் தான்!- போரில் பங்கேற்ற இலங்கை படைச்சிப்பாய்
» தமிழ் இலக்கிய ஜாம்பவான் ஜெயகாந்தன் காலமானார்: அவரைப் பற்றிய ஆவணப்பட வீடியோ இணைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum