TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


போரின் இறுதியில், சீருடையில் இருந்த இராணுவ உயர் அதிகாரிகளிடமே தனது கணவனை ஒப்படைத்ததாக-அனந்தி சசிதரன்

Go down

போரின் இறுதியில், சீருடையில் இருந்த இராணுவ உயர் அதிகாரிகளிடமே தனது கணவனை ஒப்படைத்ததாக-அனந்தி சசிதரன்   Empty போரின் இறுதியில், சீருடையில் இருந்த இராணுவ உயர் அதிகாரிகளிடமே தனது கணவனை ஒப்படைத்ததாக-அனந்தி சசிதரன்

Post by Tamil Tue Jan 21, 2014 7:53 am

போரின் இறுதியில், சீருடையில் இருந்த இராணுவ உயர் அதிகாரிகளிடமே தனது கணவனான விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனை ஒப்படைத்ததாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

காணாமற் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இன்று திங்கட்கிழமை சாட்சியமளித்துள்ளார்.

தமது கணவர் காணாமற்போனமை தொடர்பில் அவர் ஏற்கனவே முறைப்பாடு செய்திருந்ததாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாஸ தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு இன்று சென்ற அனந்தி சசிதரன் ஆணைக்குழுவின் விசாரணைகளில் கலந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.

காணாமற் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் நடவடிக்கை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பொன்நகர், பாரதிபுரம் மற்றும் மலையாளபுரம் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் காணாமற்போனவர்கள் தொடர்பில் அவர்களது உறவினர்கள் இன்று சாட்சியமளித்து வருகின்றனர்.

கடந்த இரண்டு தினங்களாக கிளிநொச்சியைச் சேர்ந்த 129 முறைப்பாட்டாளர்களின் வாக்குமூலங்களை ஆணைக்குழு பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இவர்களிடம் தலா 25 நிமிடங்கள் தொடக்கம் 35 நிமிடங்கள் வரை விசாரணைகள் நடத்தப்பட்டு தகவல்கள் பதிவு செய்யப்பட்டதாக காணாமற்போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களும், சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகளும் முறைப்பாட்டாளர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காணாமற்போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நாளையும் கூடவுள்ளது

காணாமற்போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஏற்கனவே சுமார் 13,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதன் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாஸ தெரிவித்துள்ளார்.

இராணுவ அதிகாரிகளிடமே எனது கணவரை ஒப்படைத்தேன் – ஆணைக்குழு முன் அனந்தி சாட்சியம்.

போரின் இறுதிக்கட்டத்தில், சீருடையில் இருந்த இராணுவ உயர் அதிகாரிகளிடமே, தனது கணவனான விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனை ஒப்படைத்ததாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

காணாமற் போனோரைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்பாக இன்று சாட்சியமளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இன்று நடந்த விசாரணை அமர்வில் சாட்சியமளித்த அனந்தி சசிதரன்,

2009ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் நானும், எனது கணவன் மற்றும் பிள்ளைகளும் படையினரிடம் சரணடைந்தோம்.

அதையடுத்து, என்னையும் எனது பிள்ளைகளையும் தனியாகப் பிரித்து வவுனியாவுக்குக் கொண்டு சென்ற படையினர், எனது கணவனை விசாரணை செய்து விட்டு விடுதலை செய்வதாக தெரிவித்திருந்தனர்.

நானும் பிள்ளைகளும் செட்டிக்குளம் மெனிக்பாம் முகாமில் வலயம் 4ல் தங்கவைக்கப்பட்டோம்.

எனது கணவரின் நிலை பற்றி இதுவரையில் தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

இறுதியாக 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் எனது கணவரை ரயிலில் கொண்டு செல்வதைக் கண்டதாக உறவினர் ஒருவர் எனக்கு தெரிவித்தார்.

அதன் பிறகு என் கணவரைப் பற்றிய எவ்வித தகவல்களும் இல்லை.

நான் எனது கணவரை சிறிலங்கா படையினரிடம் ஒப்படைத்தபோது பூவும் பொட்டுடனும் சுமங்கலியாகவே இருந்தேன். அதேபோல் இன்றும் நான் அப்படியே இருக்கின்றேன். இனியும் நான் இப்படியே தான் இருப்பேன் என்றார் .

கேள்வி - உங்கள் கணவர் எவ்வளவு காலமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தார்?

பதில் - நான் அவரைத் திருமணம் செய்வதற்கு முன்னர் இருந்தே அவர் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்தார். நான் அவரை 1998ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ம் திகதி திருமணம் செய்தேன்.

கேள்வி - உங்கள் கணவரை ஒப்படைத்த இராணுவ அதிகாரியை அடையாளப்படுத்த முடியுமா?

பதில் - 'நான் எனது கணவனை ஒப்படைத்து 4 வருடங்கள் கடந்துவிட்டன. அன்றைய தினம் நான் அவரை ஒப்படைக்கும் போது யுத்தத்தின் அகோரத்தினால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தேன்.

இதனால் இராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தேன் என்பதை அவர்களின் உடைகளிலிருந்த சின்னங்கள் மூலம் உணரமுடிகிறதே தவிர அவர்களை என்னால் அடையாளப்படுத்த முடியாது.

காணாமற்போனோர் விடயத்தில் உள்நாட்டிலே தீர்வு காணப்பட வேண்டும்.

அதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் மனம்மாற வேண்டும்.

இதற்கு முன்னர் காணாமற்போனோருக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலம் எந்தப் பயனும் கிட்டவில்லை.

இந்த ஆணைக்குழுவினால் காணாமற்போனோர் தொடர்பாக தீர்வு கிடைக்கும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்தார்.

ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம - சுதந்திரமான விசாரணைகளுக்கு வழி ஏற்படுத்தப்படுவதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நீதியான முறையில் இந்த ஆணைக்குழுவினால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

போரின் இறுதியில், சீருடையில் இருந்த இராணுவ உயர் அதிகாரிகளிடமே தனது கணவனை ஒப்படைத்ததாக-அனந்தி சசிதரன்   Empty Re: போரின் இறுதியில், சீருடையில் இருந்த இராணுவ உயர் அதிகாரிகளிடமே தனது கணவனை ஒப்படைத்ததாக-அனந்தி சசிதரன்

Post by Tamil Tue Jan 21, 2014 7:55 am

எனது 4 மகன்களையும் தாருங்கள்! எனக்கு இந்த நஷ்டஈடுகள் வேண்டாம்!- கிளி. ஆணைக்குழுவிடம் தாயார்

கிளிநொச்சியில் காணாமல் போனோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் காணாமல் போனவர்களில் உறவினர்களிடம் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில் காணாமற்போனோரின் உறவுகளிடம் மரணச்சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவையும் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதன்போது, காணாமல் போனோரில் 23 பேருக்கு மரணச் சான்றிதழ் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அத்துடன், இங்கு பதிவுகளை மேற்கொள்ள வந்த மக்களிடம் நீங்கள் காணாமற்போனோர் தொடர்பில் நஷ;டஈடுகளைப் பெற விரும்புகின்றீர்களா எனக் கேட்டபோது அதற்கு காணாமற்போனோரின் உறவினர்கள் சம்மதிக்கும் பட்சத்தில், உதவிகளைப் பெறுவதற்கு மரணச் சான்றிதழினையும் பெற்றுக்கொள்ளுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள் எனக் கேட்கப்பட்டதாக காணாமற்போனாரின் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த நடமாடும் சேவையின் போது பல தாய்மார் நஷ்டஈடுகள் வழங்குவது எங்கள் பிள்ளைகளுக்கு ஒப்பானதல்ல எங்களுக்கு எங்கள் பிள்ளைகள் வேண்டும் எனக்கூறினர்.

நான் எனது 4 மகன்களையும் காணாமல் நித்தம் தவித்து கண்ணீர்விட்டு அழுதுகொண்டிருக்கின்றேன். எனது மகன்களைத் தாருங்கள் எனக்கு இந்த நஷ்டஈடுகள் வேண்டாமென்று தாயார் ஒருவர் கதறி அழுதார்.

இன்னுமொரு தாயார் நீங்கள் எனக்கு என் மகன் காணாமற்போனதிற்காக ஒரு லட்சம் ரூபா நஷ்டஈடு தருவதாகக் கூறுகின்றீர்கள். ஆனால் எனது மகன் எனக்கு ஒரு வருடத்தில் 10 இலட்சம் ரூபா உழைத்து தருவான் எனக்கு என் மகன்தான் வேண்டும் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

இவ்வாறு பலர் இந்த நடமாடும் சேவையினை புறக்கணித்து, தங்கள் காணாமற்போன உறவுகள் தான் வேண்டும் என்று கூறிவிட்டுச் சென்றதைக் காணமுடிந்தது.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» அனந்தி சசிதரன் அரசாங்க கட்சிக்கு மாறிவிட்டதாக போலிப் பிரசாரம்! மக்கள் குழப்பமடைய வேண்டாம் என அனந்தி அறிவிப்பு
» பிரான்சில், அனந்தி சசிதரன் அவர்களுடனான மக்கள் சந்திப்பு
» நடந்ததும் இன அழிப்பு..தொடர்வதும் இன அழிப்பே!! அனந்தி சசிதரன் சீற்றம்!!
» போரின் இறுதியில் விஸ்வமடுவில் 35 ஆயிரம் சடலங்கள்! - மன்னார் ஆயர் பிபிசிக்கு தகவல்
» போரில் வீட்டுக்கொருவரை இழந்த மக்களுக்கு மறுவாழ்வு தேவை - அனந்தி சசிதரன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum