TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


திருக்குறள் கதைகள்

2 posters

Go down

திருக்குறள் கதைகள்  Empty திருக்குறள் கதைகள்

Post by ஜனனி Mon Dec 02, 2013 7:50 am

கடிவது மற
திருக்குறள் கதைகள்  524719_540139619412695_1705926483_n
ஒரு மனிதனின் பாவச்சுமைக்கு காரணமான வினை வழியானது மனம், மெய், மொழி மூலம் வந்தாலும் எண்பது சதவீதத்திற்கு மேலாக அவனது வாக்கு வழியாக அதாவது நாவினால் உரைக்கப்படுகின்ற சொற்குற்றத்தினால்தான் வருகின்றது.

எந்த நாவானது கடுமையான சொற்களை பேசி அவனை பாவியாக்கின்றதோ, அதே நாவானது நல்லவைகளை சொல்லி ஞானிகளை புகழை உரைக்குமானால் அந்த நாவே அவனை மேல்நிலைக்கு கொண்டு சென்று வளமுடன் வாழ வழி செய்திடும். மனிதன் வாழ்தும் வீழ்வதும் அவனது நாவடக்கத்தில் தான் பெரும்பகுதி உள்ளது. ஆதலால் ஒருவன் பேசும்போது நற்சொற்களை பயன்படுத்தி மென்யாக பேசவேண்டுமேயன்றி கடுமையாகி பேசி பிறர்மனம் புண்பட நடப்பானானால் அவன் பேசிய சொற்களே அவனை அழித்து மீண்டும் அவன் பிறப்பதற்கு அதுவே காரணமாக அமைந்து விடும்.

ஒருவன் சிந்தையால் செய்த குற்றங்களுக்கும், உடலால் செய்த குற்றங்களுக்கும் மன்னிப்புகளையும் பரிகாரங்களையும் செய்து காலத்தே மாற்றி விடலாம். ஆனால் ஒருவன் நாவினால் உரைத்த தீய சொல்லானது ஒருவனை பாதிக்குமானால் அது அவனது ஆன்மாவை தாக்கி அவனால் அதை மறக்கமுடியாமலும் பழிவாங்கும் உணர்ச்சியை தூண்டி பேசியவனை அழித்து இருவரையும் பாவியாக்கி விடும்.ஒருவர் மற்றவரைப் பாரத்து கோபமாக பேசுவதைத் தவிர்த்துவிட வேண்டும்.

"யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு" (குறள் - 127)

"தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு" (குறள் - 128)
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

திருக்குறள் கதைகள்  Empty Re: திருக்குறள் கதைகள்

Post by மாலதி Mon Dec 02, 2013 9:26 am

hmmm hmmm hmmm hmmm hmmm


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

திருக்குறள் கதைகள்  Empty Re: திருக்குறள் கதைகள்

Post by ஜனனி Wed Mar 26, 2014 9:17 pm

திருக்குறள் கதை ( 314 ) - பக்கத்து வீட்டுப் பொண்ணு
லட்சுமி எல்லா வேலைகளையும் முடித்து விட்டு படுக்கலாம் என்று நினைத்த போது காலிங் பெல் அடித்தது. வெளியே ஒரு நடுத்தர வயதில் ஒரு ஆணும் பெண்ணும் நின்றிருந்தனர். அந்தப் பெண் பேசினார் " அம்மா நாங்க பூங்குடி கிராமத்திலிருந்து வாறோம். அங்கே இருக்கும் ஜானகியம்மாவோட மருமகள் நான். அவங்கதான் என்னை உங்க கிட்ட அனுப்பினாங்க என்றார். உள்ளே வந்து உட்கார்ந்த பின் சொன்னார். இங்கே உங்க பக்கத்து வீட்டிலே கல்யாண வயதில் ஒரு பெண் இருப்பதாகக் கேள்விப் பட்டோம். என் பையனுக்கு பாக்கலாமான்னு உங்ககிட்ட கேட்டுட்டுப் போகலாம்னு வந்தோம் என்றார். .
பக்கத்து வீட்டுக்கு அந்தக் குடும்பம் குடி வந்ததில் இருந்து அந்த தெருவில் எல்லோருடனும் சண்டை. நேற்று கூட எங்க வீட்டுக்கு வந்த காய் வண்டிக்காரன் அவங்க வீட்டு வாசலில் வண்டியை நிறுத்திட்டான்னு ஒரே சண்டை. போன வாரம் எங்க வீட்டு கடிதத்தை அவங்க வீட்டிலே போஸ்ட்மேன் போட்டுட்டான்னு அதுக்கும் வாசலில் நின்று கத்தினார் அந்த அம்மா. அந்தத் தெருவில் யாருடனும் ஒட்டுதல் கிடையாது அவர்களுக்கு.
ஆனால் அந்த வீட்டில் இருக்கும் அந்த கல்யாண வயதுள்ள பெண்ணை அதிகமாக வெளியில் பார்க்க முடியாது. லட்சுமி கூட ஓரிரு முறைதான் அந்த பெண்ணை கோவிலில் பார்த்திருக்கிறாள். அவ்வளவு அமைதி. பெரும்பாலும் அந்த அம்மாவை அடக்கி உள்ளே கூட்டிச் செல்வதே அந்தப் பெண்ணாகத்தான் இருக்கும்.
லட்சுமி ஒரு முறைக்கு இரு முறையாக தீர யோசித்து சொன்னார் " நல்ல பொண்ணும்மா ! ரொம்ப அமைதியானவ ! நீங்க உங்க பையனுக்கு பாக்கலாம்"
ஒரு மாதம் கழித்து காலிங் பெல் அடித்தது. வாசலில் பக்கத்து வீட்டுப் பெண்ணும் அவருடைய மகளும் கையில் வெற்றிலைத் தட்டோடு நின்றிருந்தார்கள். அந்த அம்மா தழுதழுத்த குரலில் சொன்னார் " உங்க வார்த்தையிலேதாம்மா என் மகள் கழுத்திலே தாலி ஏறுது. நீங்க மனசால பெரியவங்க ! கட்டாயம் கல்யாணத்துக்கு வந்திருந்து வாழ்த்தணும்"
இதைத்தான் திருவள்ளுவர் 314 வது குறளில் இப்படி சொல்லியிருக்கிறார்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல் ( 314 )

பொருள் : தமக்கு துன்பம் தருபவர்களும் கூட வெட்கப்படும் படி அவர்களுக்கு நன்மை செய்வது தான் அவர்களுக்குக் கொடுக்கும் தண்டனையாகும்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

திருக்குறள் கதைகள்  Empty Re: திருக்குறள் கதைகள்

Post by ஜனனி Wed Mar 26, 2014 9:17 pm

காரை விட்டு இறங்கும் போதே காவேரி கவனித்து விட்டாள் அங்கே அடகுக் கடையில் நிற்பது ராஜிதான் என்று. வாழ்க்கையில் மறக்க முடியாத முகங்கள் சில உண்டு. ஒரு வருடம் முன்பு ராஜியின் கணவன் மாரிதான் காவேரியின் கணவன் சங்கரின் உயிரையே காப்பாற்றியவன். மாரி மட்டும் தன் உயிரைப் பணயம் வைத்து சாலையில் விழுந்து கிடந்த சங்கரை இழுத்துப் போடவில்லையென்றால், காவேரியின் கழுத்தில் தாலி நிலைத்திருக்காது. அந்த மணல் லாரி......... நினைத்துப் பார்க்கவே நடுங்குகிறது.
 
ராஜிக்கு இந்த அடகுக் கடையில் என்ன வேலை.என்று யோசித்துக் கொண்டே சென்ற காவேரி பக்கத்தில் சென்று ராஜியின் தோளைத் தொட்டாள்.
 
சற்றும் எதிர்பாராத ராஜி “அம்மா ! நீங்களா ! சௌக்கியமா ? என்றாள் ராஜி ! இங்கே என்ன பண்றே ? என்று கேட்டவுடன் அவள் கண்களில் நீர் முட்டியது. அவ புருஷனுக்கு நாளைக்கு ஒரு ஆபரேஷன் என்று சேர்த்திருக்கிரார்களாம். இன்றைக்குள் பணம் கட்ட கொஞ்சம் குறையுது அதான் நகையை அடகு வைக்க வந்தேன் என்றாள்.
 
ராஜி தன் சேலையில் முடிந்திருந்த நகையை எடுத்தாள். அது .... அவளுடைய தாலி... ராஜி ! அதை உள்ளே வை. எங்கிட்ட பணம் இருக்கு தரேன் ! என்றபோதும் பிடிவாதமாக மறுத்தாள். ஏதோ கௌரவம் பார்க்கிறாள் போல.
 
காவேரியும் விடவில்லை. சரி ராஜி ! நான் பணம் சும்மா தரல ! அந்த தாலியை என்கிட்ட குடுத்துட்டு நீ பணம் வாங்கிக்கோ அப்புறமா பணத்தைக் குடுத்துட்டு தாலியை வாங்கிக்கோ ! என்றதும் தயங்கித் தயங்கி ஒப்புக்கொண்டாள். காவேரி தாலியை வாங்கிக் கொண்டு பக்கத்தில் இருந்த ஏ.டி.எம்மில் இருந்து பணத்தை எடுத்து ராஜியிடம் கொடுத்தாள்.
 
மறு நாள் ஆபரேஷன் நல்லபடியாக முடிந்தது. மூன்றாவது நாள் ஜெனரல் வார்டுக்கு வந்த பின் காவேரியும் சங்கரும் சென்று பார்த்தார்கள். மாரியிடம் காவேரி சொன்னாள் " உங்க மனைவி தான் உங்களுக்காக ராப்பகலா ரொம்ப கஷ்டப்பட்டா ! உங்க கையாலேயே இதைப் போட்டு விடுங்க ! என்று சொல்லி ஒரு பொட்டலத்தைப் பிரித்தாள்.
 
அதில் இரண்டு பவுன் சங்கிலியில் ராஜியின் தாலி கோர்க்கப்பட்டிருந்தது. அம்மா ! இதெல்லாம் எதுக்கும்மா ? வேண்டாம்மா ! என்ற ராஜியின் கையப்பிடித்து கண் கலங்க காவேரி சொன்னாள் " ஒரு வருஷம் முன்னே உன் புருஷன் என் தாலியை காப்பாத்தலேயா ராஜி ?
 
இதைத்தான் திருவள்ளூவர் 102வது குறளில் இப்படி சொல்லியிருக்கிறார்.
 
காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாலப் பெரிது. (102)
 
பொருள் : தக்க சமயத்தில் செய்யப்படும் உதவி சிறியதாக இருந்தாலும் இந்த உலகை விட பெரியதாக எண்ணப்படும்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

திருக்குறள் கதைகள்  Empty Re: திருக்குறள் கதைகள்

Post by ஜனனி Wed Mar 26, 2014 9:18 pm

திருக்குறள் கதை (423) மெய்ப்பொருள் காண்ப தறிவு
இரண்டு நாளாகவே அந்த வெள்ளைப் பசு சரியாகச் சாப்பிடாமல் சுணங்கிப் போய் இருந்தது. மனைவி சொன்னாள் " என்னங்க ! பக்கத்து தெருவுல உங்க நண்பர் மாணிக்கம் வீட்டிலயும் இப்படித்தான் இருந்ததாம். அவருகிட்ட போய் கேட்டுட்டு வாங்க ! என்றார்.
மாணிக்கத்திடம் போய் கேட்டேன். " சார் ! உங்க பசு இரண்டு நாளா சரியாகச் சாப்பிடாமல் சுணங்கிப் போய் இருந்ததா ?
ஆமாம் !
நீங்க என்ன செஞ்சீங்க ?
அரை லிட்டர் வேப்பெண்ணையை எடுத்து, லேசா சுட வச்சு வாயிலே ஊத்தினேன்.
தேங்ஸ் ! என்று சொல்லி விட்டு வந்து அதே போல் அரை லிட்டர் வேப்பெண்ணையை லேசாக சுட வைத்து பசு மாட்டு வாயில் ஊற்றினேன்..
அரை மணி நேரம் கழித்து மாடு செத்துப் போனது.
நேரே மாணிக்கத்திடம் போனேன். சார் ! நீங்க சொன்ன மாதிரியே அரை லிட்டர் வேப்பெண்ணையை எடுத்து வாயிலே ஊற்றினேன் மாடு அரை மணி நேரத்தில் செத்துப் போச்சே ? என்றேன்.
அப்படியா ? என் மாடுங்கூடத்தான் அரை மணி நேரத்தில் செத்துப் போச்சு என்றார் மாணிக்கம்.
இதைத்தான் திருவள்ளுவர் 423 வது குறளில் இப்படி சொல்லியிருக்கிறார்.
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு ( 423 )

பொருள் : எந்தவொரு செய்தியையும் யார் சொன்னதாக இருந்தாலும் ஆராய்ந்து அதன் உண்மை நிலையை அறிவது தான் அறிவுடைமை.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

திருக்குறள் கதைகள்  Empty Re: திருக்குறள் கதைகள்

Post by ஜனனி Wed Mar 26, 2014 9:20 pm

அழுக்காறென ஒரு பாவி திருச்செற்றுத் 
                    தீயுழி உய்த்து விடும்
 

விளக்கம்: மற்றவர்கள் மீது பொறாமை கொள்ளும் ஒருவன், தன் செல்வத்தையெல்லாம் இழந்து தீய வழிகளில் செயல்பட்டு சீர்குலைவான்.

தர்மலிங்கம் திருநின்றவூரில் பல ஆண்டுகளாக ஒரு ஜவுளிக் கடை நடத்தி வந்தார். கடைத்தெருவில் அவருடைய ஜவுளிக்கடை மட்டுமே இருந்ததால், நகரத்து மக்கள் அவரது கடையிலிருந்தே துணிமணிகள் வாங்கி வந்தனர். தர்மலிங்கம் வியாபாரத்தை சிறப்பாக செய்து ஏராளமாக செல்வம் சேர்த்தார்.

ஒருநாள் அதே கடைத்தெருவில் அவருக்குப் போட்டியாக மாணிக்கம் என்ற வெளியூர் இளைஞன் ஜவுளிக்கடையைத் திறந்தான். இளைஞர்களையும், பெண்களையும் கவரும் படி புதிய வகை துணிகளை அவன் விற்பனை செய்ததால், மக்கள் அங்கு குவிந்தனர். தர்மலிங்கத்தின் வியாபாரம் மந்தமாகியது.

மாணிக்கத்தின் மீது பொறாமை கொண்ட  தர்மலிங்கம், அவன் வியாபாரத்தைத் தடுப்பதற்காக, விலை உயர்ந்த நவீன துணிமணிகளை இறக்குமதி செய்தார். கடையையும் பெரிதாக்கி, கண்கவரும் வகையில் அலங்காரம் செய்தார். சினிமா கலைஞர்களை வரவழைத்து தன் கடைக்கு விளம்பரம் செய்தார். இதனால் அவரது சொத்துக்கள் பெருமளவில் கரைந்தன. ஆனாலும் குறைந்த லாபத்தில் அதிக விற்பனை என்ற கொள்கையைக் கொண்டிருந்த மாணிக்கத்தின் கடையில் தான் அதிகமாக வியாபாரம் நடந்தது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

திருக்குறள் கதைகள்  Empty Re: திருக்குறள் கதைகள்

Post by ஜனனி Wed Mar 26, 2014 9:21 pm

தன் நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்
                               தன் நெஞ்சே தன்னைச் சுடும்.
 

விளக்கம்: மனமறிந்து பொய் பேசுவது தவறு. அப்படி பொய் பேசுபவனது மனசாட்சி அவனது வாழ்நாள் முழுதும் வாட்டி வதைக்கும்.

முனுசாமி வாடகை டாக்ஸி ஓட்டுபவன். குடும்பத்தை சிரமப்பட்டு நடத்தி வந்தான். வீட்டில் கலர் டிவி வாங்கித் தருமாறு அவன் மனைவி நச்சரித்து வந்தாள். ஆனால் போதுமான வருமானம் இல்லாததால், முனுசாமியால் டிவி வாங்க முடியவில்லை.


ஒருநாள் அவனது வண்டியில் பயணி ஒருவர் பதட்டத்துடன் ஏறினார். வண்டியை விரைவாக ஓட்டச் சொல்லி அவசரப்படுத்தியவர், வீடு வந்ததும் பணத்தைக் கொடுத்து விட்டு அவசரமாக இறங்கி உள்ளே சென்று விட்டார். சிறிது தூரம் சென்றதும் தேனீர் குடிப்பதற்காக ஓரிடத்தில் வண்டியை நிறுத்திய முனுசாமி, காருக்குள் பை ஒன்று இருப்பதைப் பார்த்தான்.



அது சற்று முன் அவசரமாக இறங்கிய பயணியின் பை என்பதை அறிந்து கொண்ட முனுசாமி, பைக்குள் சில மருந்துகளும்,  ரூபாய் நோட்டுக் கட்டு ஒன்றும் இருப்பதைப் பார்த்து, டிவி வாங்குவதற்கு பணம் கிடைத்து விட்டதாக எண்ணி மகிழ்ந்தான். உடனே அந்தப் பையை சீட்டுக்கு அடியில் மறைத்து வைத்தான்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

திருக்குறள் கதைகள்  Empty Re: திருக்குறள் கதைகள்

Post by ஜனனி Wed Mar 26, 2014 9:22 pm

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை

 
விளக்கம்: மக்கள் தன்னை ஏர் கொண்டு உழுதுக் காயப்படுத்தினாலும் அதைப் பொறுத்துக் கொள்ளும் பூமியைப் போல, தன் மீது குற்றம் சாட்டி இகழ்பவர்களின் செயல்களைப் பொறுப்பது ஒரு தலைமகனுக்கு அழகு தரும்!
 
திருக்குறள் கதைகள்  1257153188_1-2 மன்னர் புருஷோத்தமனுடைய மைத்துனன் மனோகரன் ஓர் அஞ்சா நெஞ்சன். தன் மனதில் தோன்றுவதை மறைக்காமல் எடுத்துரைப்பவன். மன்னர் சபையில் தனது அமைச்சர்களுடனும், உயர் அதிகாரிகளுடனும் கலந்துரையாடல் நிகழ்த்துகையில், மனோகரனும் அங்கு அமர்ந்து தனது கருத்துக்களை வெளியிடுவான். மன்னரின் கருத்துக்கு எதிரான கருத்துக்களைக் கூற மற்றவர்கள் தயங்கும் போது, மனோகரன் அது தவறெனத் தோன்றினால் அவரை எதிர்த்து பேச தயங்க மாட்டான்.
 
தனது சகோதரனின் போக்கு ராணிக்கு பிடிக்கவில்லை. பலமுறை அவள் மனோகரனைக் கண்டிக்கும் போது மன்னர் அவளைத் தடுத்து விடுவார். ஒருநாள் சபையில் புருஷோத்தமன் தனது அரசாட்சியில் இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பற்றி அமைச்சர்களுடன் விவாதித்தார். அப்போது, "வேலையற்ற இளைஞர்களுக்கு மாதம் 30 வராகன்கள் உதவித்தொகை அளிக்கலாம் என்று நினைக்கிறேன்" என்றார்.
 
அமைச்சர்கள் அதைக் கேட்டு "ஆகா, அற்புதமான யோசனை" என்று பாராட்டினார்கள். ஆனால் மனோகரன் மட்டும், " இது மதியற்ற செயல். உதவித்தொகை அளிப்பதால் அந்த இளைஞர்கள் சோம்பேறி ஆகிவிடுவார்கள். இதை விடுத்து, அவர்களுடைய நிரந்தர வருமானம் தரும் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்" என்று மன்னரின் கருத்துக்கு எதிர்மாறான கருத்தைக் கூறினான். அத்துடன் மன்னரின் மற்ற நலத் திட்டங்களையும் விமர்சனம் செய்தான்.
 
சபையில் நடந்ததைக் கேட்டு சினமுற்ற ராணி தன் சகோதரனைப் பார்த்து, "மன்னனை விமர்சிக்க உனக்கு என்ன தைரியம்? இந்த ராஜ்யத்தை விட்டு இப்போதே வெளியேறு" என சீறி விழுந்தாள்.
 
ஆனால் அவளைத் தடுத்த மன்னர், "அவனைக் கோபிக்காதே ராணி. அவன் மனதில் பட்டதைக் கூறுகிறான். தன் கருத்துப்படி தான் மற்றவர்கள் நடக்கவேண்டும் என்று மன்னன் நினைப்பது தவறு. புத்திசாலிகள் கூறும் ஆலோசனைகளை பரிசீலித்து மக்களுக்கான திட்டங்களை வகுக்க வேண்டும். மனோகரன் புத்திசாலி. பொறுமையாக அவன் கூறுவதைக் கேட்போம்" என்றார்.
 
அவர் பொறுமையிழக்காமல் மனோகரனின் நலத்திட்டங்களைக் கேட்டு, அதை அப்படியே நடைமுறைப்படுத்தினார். அது முதல் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் முற்றிலும் ஒழிந்தது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

திருக்குறள் கதைகள்  Empty Re: திருக்குறள் கதைகள்

Post by ஜனனி Wed Mar 26, 2014 9:25 pm

காதலக் காதல் அறியாமை உய்க்கிற்பின் 
                ஏதில ஏதிலார் நூல்

 
விளக்கம்: “தனது நோக்கத்தைப் பகைவர் அறிந்துகொள்ளாமல் செயற்படுபவரிடம் பகைவரின் சூழ்ச்சிகள் பலிக்காது.”
 
திருக்குறள் கதைகள்  1255346401_1-2 காஞ்சியை நோக்கித் தனது பெரும் படையுடன் போரிட வந்த புலிகேசி மன்னர், தனது பகைவரான மகேந்திர பல்லவரின் செய்கையைக் கண்டு வியப்புற்றார். வீரத்தில் சிறந்த மகேந்திரர் தன்னுடன் நேருக்கு நேர் மோதுவார் என்று எண்ணியதற்கு மாறாக, பல்லவச் சக்கரவர்த்தி கோட்டைக் கதவுளை மூடிவிட்டு உள்ளே பதுங்கிக் கொண்டது வியப்பை அளித்தது. மகேந்திரரின் செய்கை அவரது புதல்வரான நரசிம்மருக்கும் வியப்பை அளித்தது.
 
அவர் தனது தந்தையை நோக்கி, “தந்தையே! பகைவனுடன் நேருக்கு நேர் மோதாமல் கோட்டைக்குள் பதுங்கியிருப்பது கோழைத்தனம் இல்லையா?” என்று கேட்டான்.
 
இதைக் கேட்ட மகேந்திரர் தன் மகனை நோக்கி, “மகனே! இது கோழைத்தனம் அல்ல... இது ராஜதந்திரம்! புலிகேசியின் படையெடுப்பை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே, நம் நாட்டில் போர் என்பதே கிடையாது. இசையிலும், நடனத்திலும், இறைபக்தியிலும் பொழுதைக் கழித்த நான், படைகளைப் போருக்குத் தயாரான நிலையில் வைத்திருக்கவில்லை.
 
இந்த நிலையில் போருக்குச் சென்றால், நாம் தோற்பது உறுதி. வீரம் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை மாய்க்க நான் விரும்பவில்லை. நீ நினைப்பது போல் நாம் பதுங்கியிருக்கவில்லை. போருக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. நமக்கு உதவி செய்ய சோழ மன்னரையும், இலங்கை மன்னரையும் படைகள் அனுப்புமாறு ஓலை அனுப்பியுள்ளேன்.
 
அவர்களுடைய பல்லாயிரக்கணக்கான வீரர்கள் வந்து சேரும் வரையில், நாம் கோட்டைக்குள் பதுங்கியிருக்க வேண்டும். நமது பகைவன் நமது நோக்கத்தை அறிந்து கொள்ளாமல், அவனிடமுள்ள பயத்தால் நாம் பதுங்கியிருப்பதாக நினைத்துக் கொள்வான். ஆனால், நமக்கு வெளியிடங்களிலிருந்து படை பலம் கிடைக்கும் வரையிலும், நம்முடைய படைகளைத் தயார் செய்து கொள்ளும் வரையிலும், நாம் செயலற்றிருப்பதுபோல் நடிப்போம். தகுந்த நேரம் வந்தவுடன் அவர்களுடன் நேருக்கு நேர் மோதுவோம்!” என்றார்.
 
மகேந்திர பல்லவர் கூறியது போல், அவருடைய நோக்கத்தை அறியாமல் பல மாதங்கள் காஞ்சியை 
புலிகேசி மன்னர் முற்றுகையிட்டார். இறுதியில் மகேந்திரரின் ராஜதந்திரத்தில் சிக்கி, தன் முயற்சியில் தோற்று மகேந்திர பல்லவருடன் சமாதானம் செய்து கொள்ள நேரிட்டது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

திருக்குறள் கதைகள்  Empty Re: திருக்குறள் கதைகள்

Post by ஜனனி Wed Mar 26, 2014 9:26 pm

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்ற மாகும்  இறைக்கு

 
விளக்கம்: தன்னிடமுள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குற்றத்தை நோக்கும் தலைவனுக்குக் குறையேதும் ஏற்படாது.”
 
திருக்குறள் கதைகள்  1254982921_1-2 இரவில் மாறு வேடத்தில் தலைநகரத் தெருக்களில் உலவுவது மன்னர் நெடுஞ்செழியனுக்கு வழக்கம். அதுபோல் ஒருநாள் மாறுவேடத்தில் உலவும் போது, தன் ஒற்றர் தலைவன் சத்துருக்கனன் பகைவர்களின் நாட்டுப் போர் வீரன் ஒருவனுடன், ஒரு பாழடைந்த கோயிலில் உரையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு சினந்தார். தன்னுடைய உப்பைத் தின்று வாழும் ஒருவன் தன் நாட்டிற்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய துரோகச் செயலில் ஈடுபட்டிருந்ததைக் கண்டு, உருவிய வாளுடன் அவர்கள் மீது பாய்ந்தார்.
 
உடனே பகைவன் தப்பித்து ஓடிவிட, ஒற்றர் தலைவன் சத்துருக்கனன் தன்னைத் தாக்க வருவது மாறுவேடத்திலுள்ள தனது மன்னர்தான் என்று அறியாமல், தன் வாளை உருவிக் கொண்டு அவருருடன் சண்டையிட முற்பட்டான். இதைக் கண்டு ஓடி வந்த சிலர், சத்ருக்கனனுக்குத் துணையாக மன்னருடன் சண்டையிடத் தொடங்க, பலமுனைத் தாக்குதலை சமாளிக்க முடியாமல் மன்னருடைய வாள் கை நழுவி விழுந்தது.

மிகுந்த கோபத்திலிருந்த சத்ருக்கனன், மன்னருடைய கைகளைப் பிடித்துக் கொண்டு “முட்டாளே! காரியத்தைக் கெடுத்து விட்டாயே! பகைவர்களுடைய வீரனை தந்திரமாகப் பேசி இங்கு வரவழைத்து, அவர்களைப் பற்றிய ரகசியங்களை அறியத் திட்டமிட்டிருந்தேன். விஷயம் அறியாமல் நீ குறுக்கிட்டதால் அவன் ஓடி விட்டான். உன்னுடைய அறிவற்ற செயலால் நில்லதொரு வாய்ப்பினை இழந்தோம். மூடனே! யார் நீ?” என்று வசை பாடினான்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

திருக்குறள் கதைகள்  Empty Re: திருக்குறள் கதைகள்

Post by ஜனனி Wed Mar 26, 2014 9:27 pm

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
            மாடல்ல மற்றை யவை!

 
விளக்கம்: கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவுமில்லை.
 
திருக்குறள் கதைகள்  1253512911_1-2 கடலோரப் பகுதி கிராமமான நல்லூரில் வசித்து வந்த இரத்தினசாமி என்ற எளிய விவசாயிக்கு சொந்தமாக இருந்தது இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே! அவருக்கு மாணிக்கம், முத்து என்ற இரு மகன்கள் இருந்தனர். இருவரும் பள்ளிப் படிப்பை முடித்தனர்.
 
ஒருநாள் இருவரையும் அழைத்து, “எனக்கிருப்பது ஒரு வீடும், இரு ஏக்கர் நலமுமே! நீங்கள் உங்கள் கல்வியை இத்துடன் முடித்துக் கொண்டு என்னைப்போல் விவசாயத்தில் ஈடுபடுகிறீர்களா?” என்று கேட்டார்.
 
கல்வியில் பெரிதும் நாட்டம் கொண்டிருந்த மாணிக்கம், “அப்பா! நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்து, எனக்கு ஒரு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்புகிறேன்!” என்றான். இளையவன் முத்து, “எனக்கு படிப்பில் நாட்டமில்லை. விவசாயம் செய்யவும் விருப்பமில்லை. நான் வியாபாரம் செய்ய விரும்புகிறேன்!” என்றான்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

திருக்குறள் கதைகள்  Empty Re: திருக்குறள் கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum