TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அக்பர் ,பீர்பால் கதைகள்

3 posters

Go down

அக்பர் ,பீர்பால் கதைகள்  Empty அக்பர் ,பீர்பால் கதைகள்

Post by Tamil Tue Nov 05, 2013 3:17 pm

அக்பர் சக்ரவர்த்திக்கு பீர்பால் எனும் மதியூக மந்திரி இருந்தார். அக்பரின் நல்ல நண்பரும், ஆட்சிக்கு வேண்டி நல்ல அறிவுரைகள் கூறுவதிலும் பீர்பால் வல்லவராக இருந்தார். 
அக்பர் ,பீர்பால் கதைகள்  563090_10201296716518467_1799282792_n
அக்பரிடம் ஒரு விஷயம் மட்டும் பீர்பாலுக்குப் பிடிக்கவில்லை. அதாவது அக்பரின் ஆராயாமல் கொடுக்கும் வள்ளல்தன்மை. பல முறை பீர்பால் அதை எடுத்துக் கூறியும் அதைப் பொருட்படுத்தாமல் அக்பர் தன விருப்பப் படி வாரி வழங்கிக் கொண்டு இருந்தார். இதானால் அக்பரின் கஜானா காலியாகும் நிலைமை ஏற்பட்டது. 

ஒருமுறை அக்பர் மாறு வேடத்தில் இரவு நேரம் தன சேனாதிபதி அஹமத் கானுடன் வந்து கொண்டு இருந்தார். 

நட்ட நடு இரவில் அவர் தெருவோரம் கண்ட ஒரு காட்சி அவரின் குதிரையை நிறுத்தி அவரை கவனிக்க வைத்தது. 

ஒரு 80 வயது முதிர்ந்த ஒரு பெரியவர் அந்த இ ரவில் ஒரு செடி நாட்டுக் கொண்டு இருந்தார். 

இதைக் கண்ட அக்பர் 'அய்யா பெரியவரே! இந்த நடு இரவில் இதை செய்ய வேண்டிய அவசியம் என்ன?' என்றார்.

அதற்கு அந்தப் பெரியவர் 'அய்யா வழிப் போக்கரே! இந்த செடி எனக்காக இல்லை. நாளைய சமூகத்திற்காக. பகலில் என் குடும்பத்திற்காக உழைக்கிறேன், இரவில் கிடைக்கும் சமயங்களில் இது போல செடி நடுகிறேன்' என்றார். 

'பெரியவரே! இந்த செடி வைப்பதால் உங்களுக்கு என்ன இலாபம்? உங்கள் வயதை கவனிக்கும்போது இந்த செடி வளர்ந்து பலன் தரும்போது நீங்கள் அதன் பலனை அடைய மாட்டீர்களே?' 

'அதனால் என்ன, வழிப் போக்கரே? இந்தச் செடியால் எனக்கு நன்மை விளையாவிட்டாலும் என் சந்ததியர் பலன் பெறுவார்களே!'

இதைக் கேட்டு வியந்த மன்னர் ' பெரியவரே! நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்! நான்தான் மன்னர் அக்பர்! உங்களின் உயர்ந்த சிந்தனைக்கு இதோ என் பரிசு 1000 பொற்காசுகள்' என்று கூறி ஒரு பொற்கிழியை அந்தப் பெரியவருக்குக் கொடுத்தார். 

அதை மகிழ்வுடன் பெற்றுக் கொண்ட அந்தப் பெரியவர், "மன்னா! நன்றி! பாருங்களேன், இந்த மரம் வைத்தபின் வளர்ந்து, காய்த்து, பழுத்து, பலன் தரும் சமயத்திற்கு முன்னமேயே, என் கையில் ஆயிரம் பொற்காசுகளை கொடுத்து விட்டதே! ஆகவே செடி வைத்தால் நல்ல பலன் உடனே கிடைத்து விட்டதே!!" என்றார். 

அது கேட்டு மகிழ்ந்த மன்னர், 'ஆஹா! இப்படியும் ஒரு சிந்தனையா? இந்தா பிடியுங்கள் இன்னும் ஒரு ஆயிரம் பொற்காசுகள்' என்று கூறி மீண்டும் ஒரு பொற்கிழியை அந்தப் பெரியவருக்குத் தந்து விட்டு அந்த இடம் நீங்கினார். 

மறுநாள் காலை அரசவைக்கு அந்த முதியவர் இரண்டு பொற்கிழிகளையும் கையில் எடுத்துக் கொண்டு அரசரைக் காண வந்தார். 

அகபர் அவரிடம் 'என்ன வேண்டும்?' என்று வினவினார். 

அதற்கு அந்தப் பெரியவர் ' மன்னா! இந்தாருங்கள் நீங்கள் கொடுத்த பொற்கிழிகள். இவை எனக்கு வேண்டாம்! காரணம், நீங்கள் இதைக் கொடுத்துச் சென்ற சில நிமிடங்களில் இருந்து என் சிந்தனை எல்லாம், எப்படி இந்த பணத்தை நான் செலவழிக்கப் போகிறேன் என்பது குறித்தே இருந்தது. இதனால் நான் இன்று காலை வேலைக்குப் போகவில்லை. அதனால் என் உடல் களைப்படைந்து விட்டது. வேலை செய்யாததால் எனக்குப் பசிக்கவில்லை. ஆகவே என் உடம்பிற்கு நோய் வந்துவிட்டது போல உணர்கிறேன். மேலும் நான் இன்றைக்கு எங்கே புதிய செடி வைக்கப் போகிறேன் என்று என் திட்டங்களை தீட்டாமலேயே இருந்துவிட்டேன். ஆகவே, என்னை சோம்பேறி ஆக்கிய இந்தப் பணம் வேண்டாம்' என்று கூறி அக்பரிடம் அந்தப் பணத்தைத் திருப்பித் தந்தார். 

விக்கித்துப் போன அக்பர், என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தபோது, தனது வயோதிக வேடத்தைக் களைத்த பீர்பால், தான் யாரென்று அக்பருக்குத் தெரியப் படுத்தினார். 

'மன்னா, நீங்கள் வாரிக் கொடுக்கும் பணம் மற்றவர்களை சோம்பேறி ஆக்கும் என்று உங்களுக்கு உணர்த்தவே இதை நான் செய்தேன். என்னை மன்னியுங்கள் மன்னா!' என்றார் பீர்பால்.

அது கேட்ட அக்பர்' ஹஹஹா! பீர்பால்.... நல்ல பாடம் புகட்டினீர்கள்.... இந்தாருங்கள் ..... அந்த இரண்டு பொற்கிழி களையும் , உங்களின் மதியூகத்திற்காக என் பரிசாக வைத்துக் கொள்ளுங்கள்' என்றார். 

பீர்பாலோ 'மன்னா! இந்தப் பணம் என்னையும் சோம்பேறி ஆக்கி விடாதா? இது இருக்க வேண்டிய இடம் நமது கஜானா! அது பல நல்ல காரியங்களுக்கு உபயோகப் பட வேண்டும். நீங்கள் எனக்கு இதுவரை செய்து கொடுத்துள்ள வசதிகளே போதும் மன்னா!' என்று கூறி பொற்கிழிகளை திருப்பித் தந்தார். 

நீதி: "உழைத்து வாழ வேண்டும்! பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே!" 
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

அக்பர் ,பீர்பால் கதைகள்  Empty Re: அக்பர் ,பீர்பால் கதைகள்

Post by Tamil Tue Nov 05, 2013 9:20 pm

பேரரசர் அக்பர், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். அமைச்சராக இருந்த பீர்பாலோ இந்து மதத்தைச் சேர்ந்தவர். இதனால் சில நேரங்களில் அவர்களிடையே விவாதங்கள் நிகழும்.
ஒரு முறை பீர்பாலிடம் அக்பர், ”எங்கள் இஸ்லாம் மதத்தில் ஒரே கடவுள்தான் உள்ளார். அதே போல கிறிஸ்தவ மதம், புத்த மதம் போன்றவற்றுக்கும் ஒரே கடவுள்தான் உள்ளார். ஆனால் உங்கள் இந்து மதத்தில் மட்டும் நிறையக் கடவுளர்கள் உள்ளார்களே?” என்று கேட்டார்.
அதற்கு பீர்பால், ”பேரரசர் அவர்களே! எல்லாக் கடவுளரும் ஒன்றுதான். அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப பல பெயரிட்டு அழைக்கிறார்கள்” என்றார்.
”நிறைய கடவுளர்கள் இருக்கிறார்களே… ஏன் என்று கேட்டேன். நீரோ, எல்லா கடவுளும் ஒன்று தான் என்று மழுப்பலாக பதில் தருகிறீர். பல கடவுளர்களும் ஒன்றுதான் என்பதை, நீர் நிரூபிக்க வேண்டும். அப்போதுதான் நம்புவேன்” என்றார் அக்பர்.

”இப்போதே நிரூபித்துக் காட்டுகிறேன்” என்றார் பீர்பால். தன் தலைப்பாகையை பேரரசரிடம் காட்டி, ”இது என்ன சொல்லுங்கள்?” என்று கேட்டார். ”இது என்ன கேள்வி? இது தலைப்பாகை” என்றார் அக்பர்.
தனது தலைப்பாகையை அவிழ்த்த பீர்பால் அதைத் தன் தோளில் போர்த்திக் கொண்டார். பிறகு, அருகிலிருந்த வீரனை அழைத்து, ”இது என்ன?” என்று கேட்டார். ”போர்வை!” என்றான் அவன்.

பிறகு அதைத் தன் இடுப்பில் கட்டிக் கொண்டார் பீர்பால். இன்னொரு வீரனை அழைத்து ”இது என்ன?” என்று கேட்டார். ”வேட்டி” என்று பதில் வந்தது.
”பார்த்தீர்களா, பேரரசே! நீங்கள் தலைப்பாகை என்றீர்கள். அதையே இந்த வீரர்கள் போர்வை என்றும், வேஷ்டி என்றும் சொன்னார்கள். உண்மையில் இது துணிதான். இடத்துக்குத் தக்கவாறு இதன் பெயர் மாறுகிறது. தலையில் இருந்தால் தலைப்பாகை. உடலைப் போர்த்தி இருந்தால் போர்வை. இடுப்பில் இருந்தால் வேஷ்டி. அதே போலத்தான் எங்கள் கடவுளர்களும், ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு பெயரால் அழைக்கப்படுகிறார்கள். படைக்கும் தொழில் செய்பவர் பிரம்மன்; காக்கும் தொழில் செய்பவர் திருமால்; அழிக்கும் தொழில் செய்பவர் சிவன். பெயர் மாறுகிறதே தவிர எல்லோரும் ஒருவர்தான்” என்று விளக்கம் தந்தார் பீர்பால். விளக்கத்தைக் கேட்டு அக்பர் சமாதானமானார்.
- ராணி மணாளன், கிருஷ்ணகிரி-1 (டிசம்பர் 2008)
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

அக்பர் ,பீர்பால் கதைகள்  Empty Re: அக்பர் ,பீர்பால் கதைகள்

Post by mmani Mon Jan 27, 2014 10:20 pm

அறிவிப்பு  அறிவிப்பு  அறிவிப்பு  அறிவிப்பு  அறிவிப்பு
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

அக்பர் ,பீர்பால் கதைகள்  Empty யார் பெரியவர்?

Post by logu Mon Oct 27, 2014 9:52 pm

யார் பெரியவர்?

அக்பர் சக்ரவர்த்தி தனது அவையிலே அமர்ந்திருந்தார். சபையில் அமர்ந்திருந்த அறிஞர்களை நோக்கி, “”அறிஞர் பெருமக்களே! நான் பெரியவனா, கடவுள் பெரியவரா? என்ற ஐயம் என் மனதில் எழுந்துள்ளது. இந்த வினாவுக்குத் தக்க காரணத்துடன் பதில் சொல்லுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.

அக்பரை விட கடவுள் பெரியவர் என்பதை சொல்லவே தேவையில்லை. ஆனால் அரசர் கோபித்துக் கொள்வாரே என எண்ணி மற்றவர்கள் மௌனமாக இருந்தார்கள்.

மதிநுட்பம் வாய்ந்த அறிஞரான பீர்பால் எழுந்து நின்றார்.

“”உமது கருத்து என்ன?” என அக்பர் கேட்டார்.

“”மன்னர் பெருமானே, இந்த விஷயத்தில் சந்தேகத்துக்கு என்ன இடம் இருக்கிறது? கடவுளை விடத் தாங்கள்தானே பெரியவர்?” என்று கேட்டார் பீர்பால்.

அக்பருக்கு வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

“”மதியூகி பீர்பாலே, உமது கூற்றைத் தக்க காரணத்துடன் விளக்கும்…” என்றார் அக்பர்.

“”சக்ரவர்த்தி அவர்களே, என்னைத் தங்களுக்குப் பிடிக்கவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனே என்னை நாடு கடத்திவிடத் தங்களால் முடியும்! ஆனால் கடவுளுக்கு என்னைப் பிடிக்காவிட்டாலும் என்னை நாடு கடத்த முடியாது” என்றார் பீர்பால்.

“”எப்படி?” என்று வினவினார் அக்பர்.

“”உங்கள் ஆட்சிக்குள் இருக்கும் பகுதிகள் ஓரளவுக்குத்தான்! அதனால் உங்களுக்குப் பிடிக்காதவரை அடுத்த நாட்டுக்கு விரட்டியடித்து விடலாம். ஆனால் கடவுளுடைய ஆளுகையோ பூமியில் மட்டுமன்றி அண்டசராசரங்களிலும் பரவியிருக்கின்றது. ஆகவே அவர் எவ்வாறு ஒருவனை நாடு கடத்த முடியும்? ஒருவனை கடவுள் எங்கே விரட்டியடித்தாலும் அவன் கடவுளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில்தானே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்க முடியும்?” என்று கேட்டார் பீர்பால்.

பீர்பால் தனக்குச் சரியான பாடம் கற்பித்துவிட்டார் என்பதை அக்பர் உணர்ந்தார். இருந்தாலும் பீர்பாலின் கூற்றிலுள்ள உண்மையை உணர்ந்து அவருக்குப் பரிசுகளை அளித்தார்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

அக்பர் ,பீர்பால் கதைகள்  Empty ஏன் நிறைய கடவுள்கள்?

Post by logu Mon Oct 27, 2014 9:53 pm

ஏன் நிறைய கடவுள்கள்?

பேரரசர் அக்பர், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். அமைச்சராக இருந்த பீர்பாலோ இந்து மதத்தைச் சேர்ந்தவர். இதனால் சில நேரங்களில் அவர்களிடையே விவாதங்கள் நிகழும்.

ஒரு முறை பீர்பாலிடம் அக்பர், ”எங்கள் இஸ்லாம் மதத்தில் ஒரே கடவுள்தான் உள்ளார். அதே போல கிறிஸ்தவ மதம், புத்த மதம் போன்றவற்றுக்கும் ஒரே கடவுள்தான் உள்ளார். ஆனால் உங்கள் இந்து மதத்தில் மட்டும் நிறையக் கடவுளர்கள் உள்ளார்களே?” என்று கேட்டார்.

அதற்கு பீர்பால், ”பேரரசர் அவர்களே! எல்லாக் கடவுளரும் ஒன்றுதான். அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப பல பெயரிட்டு அழைக்கிறார்கள்” என்றார்.

”நிறைய கடவுளர்கள் இருக்கிறார்களே… ஏன் என்று கேட்டேன். நீரோ, எல்லா கடவுளும் ஒன்று தான் என்று மழுப்பலாக பதில் தருகிறீர். பல கடவுளர்களும் ஒன்றுதான் என்பதை, நீர் நிரூபிக்க வேண்டும். அப்போதுதான் நம்புவேன்” என்றார் அக்பர்.

”இப்போதே நிரூபித்துக் காட்டுகிறேன்” என்றார் பீர்பால். தன் தலைப்பாகையை பேரரசரிடம் காட்டி, ”இது என்ன சொல்லுங்கள்?” என்று கேட்டார். ”இது என்ன கேள்வி? இது தலைப்பாகை” என்றார் அக்பர்.

தனது தலைப்பாகையை அவிழ்த்த பீர்பால் அதைத் தன் தோளில் போர்த்திக் கொண்டார். பிறகு, அருகிலிருந்த வீரனை அழைத்து, ”இது என்ன?” என்று கேட்டார். ”போர்வை!” என்றான் அவன்.

பிறகு அதைத் தன் இடுப்பில் கட்டிக் கொண்டார் பீர்பால். இன்னொரு வீரனை அழைத்து ”இது என்ன?” என்று கேட்டார். ”வேட்டி” என்று பதில் வந்தது.

”பார்த்தீர்களா, பேரரசே! நீங்கள் தலைப்பாகை என்றீர்கள். அதையே இந்த வீரர்கள் போர்வை என்றும், வேஷ்டி என்றும் சொன்னார்கள். உண்மையில் இது துணிதான். இடத்துக்குத் தக்கவாறு இதன் பெயர் மாறுகிறது. தலையில் இருந்தால் தலைப்பாகை. உடலைப் போர்த்தி இருந்தால் போர்வை. இடுப்பில் இருந்தால் வேஷ்டி. அதே போலத்தான் எங்கள் கடவுளர்களும், ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு பெயரால் அழைக்கப்படுகிறார்கள். படைக்கும் தொழில் செய்பவர் பிரம்மன்; காக்கும் தொழில் செய்பவர் திருமால்; அழிக்கும் தொழில் செய்பவர் சிவன். பெயர் மாறுகிறதே தவிர எல்லோரும் ஒருவர்தான்” என்று விளக்கம் தந்தார் பீர்பால். விளக்கத்தைக் கேட்டு அக்பர் சமாதானமானார்.

- ராணி மணாளன், கிருஷ்ணகிரி-1 (டிசம்பர் 2008)
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

அக்பர் ,பீர்பால் கதைகள்  Empty செல்வம் நம்மோடு இருக்கட்டும்

Post by logu Mon Oct 27, 2014 9:55 pm

செல்வம் நம்மோடு இருக்கட்டும்

அக்பர் சக்ரவர்த்தியின் அரண்மனையில் பாதுகாவலர்களில் ‘செல்வம்’ என்ற பெயருள்ள ஒருவன் இருந்தான். அவன் ஒரு நாள் ஏதோ தவறு செய்து விட்டான். அதனால் அவனை வேலையிலிருந்து நீக்கி விடும்படி உத்தரவிட்டார் அக்பர்.

செல்வம் ஏழைக் குடும்பத்தைச்சேர்ந்தவன்; வேலை நீக்க உத்தரவினால் அவன் மிகவும் பாதிக்கப்பட்டான். பீர்பாலிடம் சென்று தன் வறுமை நிலையைக் கூறி, தனக்கும் மீண்டும் வேலை அளிக்கும்படி மன்றாடிக் கேட்டுக்கொண்டான்.

பீர்பால் அவனுடைய ஏழ்மையைக் கருதி, மனம் இரங்கி அவனுக்கு ஒரு ஆலோசனை கூறினார்:

“நாளை அதிகாலையில் அரண்மனைக்குச் சென்று, அங்கே நின்று கொண்டு, ‘செல்வம் தலைவாசலில் இருக்கிறேன்; சக்ரவர்த்தி கட்டளையிட்டால் உள்ளே வருகிறேன்; இல்லாவிடில், நான் போகிறேன்,’ என்று சொல்லிக் கொடுத்து அவனுக்குத் தைரியமூட்டி அனுப்பி வைத்தார் பீர்பால்.

மறுநாள் அதிகாலையில், செல்வம் அரண்மனைக்குப் போய், ‘செல்வம் தலைவாசலில் நிற்கிறேன். உத்தரவு கொடுத்தால் உள்ளே வருகிறேன்; இல்லாவிடில் போகிறேன்’ என்று கூறிக் கொண்டிருந்தான்.

அரசருக்கு இந்தச் செய்தி எட்டியது.

தலைவாசலில் நின்று கொண்டிருந்த செல்வத்தை உள்ளே அழைத்து வரும்படி உத்தரவிட்டார்.

அவன், அரசரை மிகவும் பணிவோடு வணங்கிவிட்டு, மீண்டும் அதே சொற்களைக் கூறினான்.

அரசர் புன்னகை புரிந்தவாறு, ‘செல்வம் எப்பொழுதும் நம்மோடு நிரந்தரமாக இருக்கட்டும்!’ என்று சொல்லி, அவனை மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ளும்படி உத்தரவு பிறப்பித்தார்.

அரண்மனையில் உள்ள அனைவரும் இந்நிகழ்ச்சியை அறிந்து ஆச்சரியப்பட்டனார்.

இது பீர்பாலின் மதியூகத்தால் நிகழ்ந்தது என்பதை அக்பரும் உணர்ந்து மகிழ்ந்தார்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

அக்பர் ,பீர்பால் கதைகள்  Empty உபதேச மொழிகள் தேவையா?

Post by logu Mon Oct 27, 2014 9:56 pm

உபதேச மொழிகள் தேவையா?

சக்கரவர்த்தி அக்பருக்கு அமைச்சர் பீர்பாலிடம் எவ்வளவு மதிப்பும் பிரியமும் உண்டோ அதேபோல் கோபமும் அவரிடம் உண்டாகும். பிறகு சாமாதானம் ஏற்படும், இவ்வாறு அடிக்கடி நிகழ்வது சர்வ சாதாரணமானது.

ஒரு நாள் அக்பர் பீர்பால் மீது கோபம் கொண்டு, உடனே நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டு விட்டார்.

பீர்பாலும் அரசரின் உத்தரவுக்குப் பணிந்து, தம்முடைய விசுவாசமுள்ள பணியாளுடன் நாட்டை விட்டுப் புறப்பட்டார். வழியில் வேறு ஒரு நாட்டை அடைந்து அங்கே தங்கினார்கள்.

அந்நாட்டின் கடைத் தெருவைச் சுற்றிப் பார்த்து வர பீர்பால் பணியாளுடன் புறப்பட்டார்.

கடைத் தெருவில் நடைபாதையில் ஒருவன் உட்கார்ந்து கொண்டு, தெருவில், போவோர் வருவோரைப் பார்த்து, ‘ஒரு உபதேசத்துக்கு ஆயிரம் ரூபாய்; நான்கு உபதேச மொழிகள் எம்மிடம் உள்ளன. அதற்கு நான்கு ஆயிரம் ரூபாய்கள்!’ என்று விலை கூறிக்கொண்டிருந்தான்.

ஆயிரம் ரூபாய் பெருமானமுள்ள உபதேசமொழி என்னவென்றுதான் கேட்டுப் பார்ப்போமே என்று பீர்பாலுக்கு ஒரு ஆசை உண்டாயிற்று.

அவனிடம் சென்று, ஆயிரம் ரூபாயைக் கொடுத்து விட்டு உபதேச மொழியைச் சொல்லும்படி கேட்டார் பீர்பால்.

ரூபாயைப் பெற்றுக் கொண்டு அவன்:

“சிறிது பெரிதானாலும் அதைச் சிறிது என்று எண்ணி விடக் கூடாது!” என்று பகர்ந்தான் – இது முதல் உபதேச மொழி!

பீர்பால் மறுபடியும் ஆயிரம் ரூபாயைக் கொடுத்து, இரண்டாவது உபதேச மொழியையும் கேட்க ஆவலாக இருந்தார்.

மறுபடியும் ரூபாயைப் பெற்றுக்கொண்டு அவன்:

“யாரிடமாவது குற்றம் கண்டால் அதை வெளிப்படுத்தக் கூடாது!” என்று கூறினான் – இது இரண்டாவது உபதேச மொழி!

மறுபடியும் ஆயிரம் ரூபாய்களைக் கொடுத்து மூன்றாவது பொன்மொழிகயைக் கேட்கத் தயாரானார் பீர்பால்.

மூன்றாவதாக ஆயிரம் ரூபாய்களைப் பெற்றுக் கொண்டு அவன்:

“யாராயினும் விருந்துக்கு அழைத்தால், எத்தகைய அலுவல் இருந்தாலும் அதை விடுத்து விருந்துக்குச் செல்ல வேண்டும்” என்று மொழிந்தான் – இது மூன்றாவது உபதேச மொழி!

இன்னும் ஒன்றுதானே, அதையும் கேட்டுவிடுவோமே என்ற ஆவலில் மீண்டும் ஆயிரம் ரூபாய்களைக் கொடுத்து விட்டார் பீர்பால்.

நான்காவதாக, ஆயிரம் ரூபாய்களைப் பெற்றுக் கொண்டு அவன்:

“யாரிடமும் ஊழியம் செய்யக்கூடாது!” என்றான். – இது நான்காவது உபதேச மொழி!

இப்படியாக நான்கு ஆயிரம் ரூபாய்களைக் கொடுத்து நான்கு உபதேச மொழிகளையும் அறிந்து கொண்டார்.

அந்த நாட்டிலேயே பீர்பால் சில காலம் தங்கலானார்.

சில நாட்களில் அவருடைய ஊழியன் அவரை விட்டு விலகி விட்டான்.

பீர்பால் தனியாகக் காலம் கழிக்க வேண்டியதாயிற்று. கொண்டு சென்ற ரூபாய்கள் முழுதும் செலவழிந்து விட்டன. கடைசியில் சிரமத்துடன் போராடினார். வறுமையால் துன்புற்று, பசியோடு ஒரு மரத்தின் நிழலில் படுத்து உறங்கினார்.

முன்பு அக்பர் அரண்மனையில் ஊழியம் புரிந்த ஒருவன் அந்நகருக்கு அதிபதியாயிருந்தான். அவன் நகர்வலம் வரும்பொழுது மரநிழலில் படுத்திருந்த பீர்பாலை அடையாளம் கண்டு கொண்டு, அவரை சபைக்கு அழைத்து வரும்படி சேவகனை அனுப்பினான்.

சபையில் வந்து நின்ற பீர்பாலைப் பார்த்து, ‘என்னைத் தெரிகிறதா? நான் யார்?’ என்று கேட்டான்.

‘நீங்கள் இந்நாட்டின் அதிபதி’ என்றார் பீர்பால்.

தம்மை இந்நாட்டின் அதிபதி என்று கூறியதும், தம்மை இன்னார் என்று அறிந்து கொள்ளாததும் மட்டற்ற மகிழ்ச்சியாயிருந்தது அதிபதிக்கு. ஆகவே, உடனே தனக்கு அமைச்சராக் இருக்கும்படி பீர்பாலைக் கேட்டுக் கொண்டார். பீர்பாலும் தம்முடைய அப்போதைய நிலைமையைக் கருதிச் சம்மதித்தார்.

சில நாட்கள் சென்றன!

அரசாங்க அலுவல் காரணமாக, பீர்பால் அந்தப்புரத்துக்குச் செல்ல வேண்டியதாயிற்று. அப்பொழுது, காவல் அதிகாரி ஒருவனும் பணிப்பெண் ஒருத்தியும் குடிவெறியில் சுயநினைவற்று, ஆடைகள் இன்றி அலங்கோலமான நிலையில் காணப்பட்டனர். அதைக் கண்ணுற்ற பீர்பால், தம்முடைய சால்வையை எடுத்து அவர்கள் மீது போர்த்தி விட்டு அப்பால் சென்று விட்டார்.

சிறிது நேரம் கழித்து, காவல் அதிகாரி எழுந்து பார்த்தான்; வெட்கக்கேடான நிலையை உணர்ந்து அங்கிருந்து ஓடிவிட்டான். அடுத்து எழுந்த பணிப்பெண், முன்ஜாக்கிரதையாக அரசனிடம் சென்று, அமைச்சர் பீர்பால் தன்னை மானபங்கம் செய்துவிட்டதாகவும் அதற்கு அத்தாட்சி, இதோ அவருடைய சால்வை என்றும் காண்பித்து முறையிட்டாள்.

சாட்சியத்தோடு கூறிய அந்தப் பணிப்பெண்ணின் சொல்லை நம்பிய அரசன் பீர்பால் மீது கோபம் கொண்டான். மேற்கொண்டு விசாரணை எதுவும் செய்ய விரும்பவில்லை. ஆனால், தனக்குள் ஒரு முடிவு செய்து கொண்டான்.

அவசரமாக ஒரு கடிதம் எழுதி, அதைப் பீர்பாலிடம் கொடுத்து, இந்த ரகசிய கடிதத்தை உடனே சென்று, சேனாதிபதியிடம் சேர்ப்பிக்கும்படி கூறினான் அரசன்.

கடிதத்தைப் பெற்றுக்கொண்ட பீர்பால் சேனாதிபதியை நோக்கி விரைந்தார்.

நகரத்துப் பெரியவியாபாரி ஒருவர் வழியிலேயே பீர்பாலை நிறுத்தி, என் வீட்டில் ஒரு விருந்து, சிறிது நேரம் வந்து கலந்து கொண்டு செல்லலாம் என மிகவும் வற்புறுத்தினார். தான் ஒரு அவசர காரியமாக சேனாதிபதியைக் காணச் செல்வதாகவும் திரும்பி வரும்பொழுது கலந்து கொள்வதாகவும் கூறினார் பீர்பால். வியாபாரி அவரை விடுவதாக இல்லை. கடமையில் கருத்துடைய பீர்பால் வியாபாரியின் வேண்டுகாளை ஏற்று, அவர் வீட்டுக்குச் சென்று விருந்தில் கலந்து கொண்டார். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த பழைய காவல் அதிகாரி பீர்பாலை வணங்கி, நட்புக்கு இணங்குவதே பெருமை. நீங்கள் கொடுக்க வேண்டிய கடிதத்தைப் பத்திரமாகவும் அவசரமாகவும் சேனாதிபதியிடம் நான் கொடுத்துவிட்டு வருகிறேன். என்னை நம்பி ஒப்படையுங்கள் என்று வேண்டிக் கொண்டான். அவன் வேண்டுதலுக்கு இசைந்து, அவனிடம் கடிதத்தைக் கொடுத்தார் பீர்பால்.

விருந்து சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

கடிதம் கொண்டு சென்ற காவல் அதிகாரியின் தலைவெட்டப்பட்டு ஒரு தட்டில் வைத்து எடுத்துக்கொண்டு அவ்வழியாக வந்து கொண்டிருக்கிறார் சேனாதிபதி!

“இக்கடிதத்தைக் கொண்டு வருபவனின் தலையை உடனே வெட்டி தட்டில் வைத்து எடுத்துக்கொண்டு வரவும்” – இதுவே அந்தக் கடிதத்தில் அரசன் எழுதியிருந்த வாசகம்.

கடிதத்தைப் பீர்பாலிடமிருந்து வற்புறுத்தி வாங்கிச் சென்றவன் காவல் அதிகாரி.

சேனாதிபதியிடமிருந்து தட்டை வாங்கிக் கொண்டு அரசனிடம் சென்றார் பீர்பால். அதைக் கண்ட அரசன் பிரமித்துப் போனான்.

“உம்முடைய தலையை அல்லவா வெட்டும்படி எழுதியிருந்தேன். காவல் அதிகாரி தலை வெட்டுண்ட மர்மம் என்ன?” என்று பீர்பாலிடம் கேட்டான் அரசன்.

“இதுதான், இறைவன் கட்டளை!” உண்மையான குற்றவாளி கொல்லப்பட்டான்” என்று கூறி, தான் நாட்டை விட்டு வெளியேறி வந்தது முதல், அதுவரை நடந்தவை அனைத்தையும் ஒளிவு மறைவின்றி விவரித்தார் பீர்பால். “இனி இங்கு இருப்பது முறையல்ல, எனக்கு உற்ற நண்பரும் அரசர் பெருந்தகையுமான அக்பரிடம் நான் செல்ல வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

பீர்பாலை விட்டுப் பிரிய மனம் இல்லாத அரசன், விடை கொடுக்க மறுத்து, அங்கேயே தங்கும்படி வற்புறுத்தினான்.

நாலாயிரம் ரூபாய்கள் கொடுத்து தான் பெற்ற நான்கு உபதேச மொழிகளின் விவரத்தைக்கூறி, அவற்றில் மூன்றின் உண்மை சேதனை செய்யப்பட்டு விளங்கிவிட்டது. நான்காவது உபதேச மொழியான “யாரிடமும் ஊழியம் செய்யக்கூடாது” என்பதை நினைவு படுத்தி, இனி தன்னால் ஊழியம் புரிய இயலாது என்பதையும் எடுத்துக் கூறினார் பீர்பால்.

அரசனுக்கும் தன்னுடைய பழைய நிலைமை நினைவுக்கு வந்து வெட்கப்பட்டான். பீர்பாலிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவரை மரியாதையுடன் அனுப்பிவைக்க முற்பட்டான்.

இதன் மத்தியில், அக்பருக்கு பீர்பால் இல்லாத குறை, பெருங்குறையாகத் தோன்றியது. நாடெங்கும் பீர்பாலைத் தேடிக்கண்டு பிடித்து வருமாறு ஆட்களை அனுப்பி வைத்தார்.

அக்பருடைய சேவகர்கள், பீர்பாலை வழியில் சந்தித்து, அரசரின் கட்டளையைத் தெரிவித்தார்கள். அவர்களுடன் சக்கரவர்த்தி அக்பரைக் காணப் புறப்பட்டார் பீர்பால்.

நெடுநாள் பிரிந்திருந்த பீர்பாலைக் கண்டதும் அக்பர், ‘நான் இழந்த ரத்தினத்தை மீண்டும் பெற்றேன்’ என்று மனமாரக் கூறி, பீர்பாலைக் கட்டித் தழுவி வரவேற்றார்.

தான் கற்றுக்கொண்ட நான்கு உபதேச மொழிகளையும் அக்பரிடம் விவரித்துக் கூறினார் பீர்பால்.

நீரே மகா புத்திசாலி, உமக்கு வேறு உபதேச மொழிகள் தேவையா?’ எனக் கூறிப் புகழ்ந்தார் அக்பர்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

அக்பர் ,பீர்பால் கதைகள்  Empty இறைவன் அளித்த பரிசு

Post by logu Mon Oct 27, 2014 9:57 pm

இறைவன் அளித்த பரிசு

அக்பர் சபையில் அனைவரும் கூடியிருந்தனர்.

தினமும் பீர்பால் எதையாவது சொல்லுகிறார்; அதை அரசரும் உடனே ஆமோதித்துப் பாராட்டுகிறாரே எனப் பொறாமைக்காரர் ஒருவர், ‘இன்று, எப்படியாவது பீர்பாலை மட்டம் தட்டிப் பாராட்டுப் பெற வேண்டும்’ எனத் தீர்மானித்தவராகக் காணப்பட்டார்.

சபையில் பீர்பாலைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார் பொறாமைக்காரர். அதைக் கவனித்த அக்பர், அவரைப் பார்தது, சிரிப்பின் காரணம் என்னவெனக் கேட்டார்.

”அரசர் மிகுந்த சிவப்புநிறம்; மற்ற அமைச்சர் பிரதானிகள் அனைவரும் சிவப்பு நிறமாகவே இருந்தனர். பொறாமைக்காரரும் சிவப்பு நிறத்தவரே, ஆனால், பீர்பால் மட்டும் கருப்பு நிறமாகக் காணப்பட்டார்.

அரசர் பெருமான், மிகுந்த சிவப்பு நிறமாக மின்னும் பொழுது, பீர்பால் எல்லோரிலும் கருநிறமாகக் காட்சி அளிக்கிறாரே அதன் காரணம் என்னவென்று தெரியாமல் சிரித்தேன்” எனக் கூறினார்.

உடனே எழுந்த பீர்பால், ”இறைவன் தம்முடைய அடியார்களுக்குத் தம்முடைய பாக்கியங்களை வழங்கும் போது, நீங்கள் எல்லாரும் நிறத்தைக் கேட்டுப் பெற்றுக் கொண்டீர்கள்; நான் மட்டும் அறிவைக் கேட்டுப் பெற்றுக் கொண்டேன். யார் எதைக் கேட்டார்களோ, அது அவர்களுக்குக் கிடைத்துவிட்டதே காரணம்!” எனக் கூறினார்.

அக்பருக்கு மகிழ்ச்சி தாளவில்லை.

பொறாமைக்காரர் வெட்கித் தலை குனிந்ததோடு, பீர்பாலிடம் மன்னிப்புக் கோரினார்
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

அக்பர் ,பீர்பால் கதைகள்  Empty தந்தைக்கு குழந்தை பிறந்தது

Post by logu Mon Oct 27, 2014 10:02 pm

தந்தைக்கு குழந்தை பிறந்தது

அக்பர், பீர்பாலிடம் ‘நான் மருந்து சாப்பிட்டு வருகிறேன்; காளை மாட்டுப்பாலில் கலந்து சாப்பிடுமாறு மருத்துவர் கூறுகிறார் ஆகையால், எனக்குக் காளை மாட்டுப் பால் வேண்டும், என்று கூறினார்.

அப்படியே ஏற்பாடு செய்வதாகவும் அதற்கு ஒரு வாரம் அவகாசம் தேவைப்படும் எனவும் கூறினார் பீர்பால்.

‘எத்தனை நாளானாலும் சரி, எனக்குக் கிடைத்தால் போதும்’ என்றார் அக்பர்.

வீட்டுக்கு வந்தார் பீர்பால்; தம் மகளை அழைத்து ஏதோ சொல்லிவிட்டு, யார் என்ன கேட்டாலும் பதில் சொல்ல வேண்டாம் எனவும் அரசர் கேட்பதற்கு மட்டும் பதில் கூறுமாறும் சொல்லி அனுப்பினார்.

அக்பர் அரண்மனைக்கு அருகிலுருந்த யமுனை ஆற்றங் கரைக்குச் சென்று, துணிகளைப் படார், படார் என அடித்துத் துவைத்துக் கொண்டிருந்தாள். துவைக்கும் சத்தத்தில் அக்பரின் நித்திரை கலைந்தது; சேவகர்களை அனுப்பி துணிதுவைக்கும் நபரைக் கைது செய்து வருமாறு கட்டளையிட்டார்.

சேவகர்கள் சென்று பார்த்தார்கள்; பெண்ணொருத்தி துணிதுவைத்துக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். ‘இந்த அகால வேளையில், துணிதுவைத்து அரசரின் நித்திரையைக் கெடுத்து விட்டாயே நீ யார்’ என விசாரித்தார்கள்.

பதில் ஏதும் சொல்லாமல் அந்தப் பெண் மெளனமாயிருந்தாள். அவளைக் கைது செய்து அரசர் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

கோபத்தோடு இருந்த அக்பர் அந்தப் பெண்ணைப் பார்த்ததும் அமைதியாக, ‘உன்னைப்பார்த்தால் வண்ணாத்தி போலத் தோன்றவில்லையே? ஏன் இந்த இரவு வேளையில் இங்கே வந்து துவைக்கிறாய்? நீ யார்? எங்கே வசிக்கிறாய்?’ எனப் பலவாறு கேட்டார் அரசர்.

பதில் கூறாமல் நின்று கொண்டிருந்த பெண்ணை நோக்கி, ‘நீ செய்த குற்றத்தை மன்னித்து விடுகிறேன்; வாய் திறந்து பேசு; உண்மையைக் கூறு’ என வற்புறுத்திக் கேட்டார் அரசர்.

‘அரசே, என் தகப்பனாருக்கு இன்று ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது; அதனால், பகல் முழுதும் எனக்கு வீட்டில் வேலை அதிகமாக இருந்தபடியால், இப்பொழுதுதான் எனக்கு ஓய்வுகிடைத்தது; அதனால் இங்கே வந்து துவைத்தேன்’ என்றாள் அந்தப்பெண்.

‘என்ன சொன்னாய்? உன் தகப்பனாருக்குக் குழந்தை பிறந்ததா?’ என வியப்போடு கேட்டார் அரசர். ‘காளை மாட்டுப் பால் கிடைப்பது சாத்தியமானால், ஆணுக்குக் குழந்தை பிறக்க முடியாது என எவ்வாறு கூறமுடியும்?’ என்று திருப்பிக் கேட்டாள் அவள்.

இந்தப்பெண் பீர்பால் மகள் என்பது, அவள் சொற்களிலிருந்து புலப்படுகிறது என்பதை அக்பர் உணர்ந்து விட்டார்.

காளை மாட்டுப் பால் கொண்டு வரும்படி பீர்பாலைக் கேட்டதை நினைவுகூர்ந்தார். மேலும் அந்தப் பெண்ணைப் பார்த்து ‘நீ பீர்பாலின் மகள்தானே?’ எனக் கேட்டார்.

‘ஆம், அரசே! என் தந்தையின் சொற்படியே நான் இங்கே வர நேர்ந்தது’ என்பதை விவரமாகக் கூறினாள்.

அக்பர் தன் தவறை உணர்ந்ததோடு, தந்தையையும் மகளையும் வியந்து புகழ்ந்தார்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

அக்பர் ,பீர்பால் கதைகள்  Empty சிரிக்க வைத்தால் பரிசு

Post by logu Mon Oct 27, 2014 10:04 pm

சிரிக்க வைத்தால் பரிசு

ஒருநாள், அக்பருக்கு விசித்திரமான எண்ணம் தோன்றியது. பீர்பாலை அழைத்து, என்னைச் சிரிக்கும்படி செய்துவிட்டால், நீர் கேட்கும் பரிசை அளிப்பேன் என்று கூறினார்.

என்னனென்னவோ சொல்லி, முயன்று பார்த்தார் பீர்பால்.

அக்பர் சிறிதும் அசையாமல், சிரிக்காமல் அப்படியே உட்கார்ந்திருந்தார்.

கடைசியாக, ஒரு தந்திரத்தைக் கையாளத் தொடங்கினார் பீர்பால்.

அக்பருடைய காதில், ‘இப்பொழுது நீங்கள் சிரிக்காவிட்டால், நான் என்ன செய்வேன் தெரியுமா? உம். என் விரல்களால் உங்கள் விலா எலும்புகளை அழுத்தி, கூச்சத்தை உண்டாக்குவேன்’ என்று குசு குசு வென்று சொல்லத் தொடங்கினார் பீர்பால்.

உடனே அக்பருக்குச் சிரிப்பு அளவுக்கு மீறி வந்து விட்டது!

எப்படியோ முயன்று பீர்பால் வெற்றி பெற்றுவிட்டார்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

அக்பர் ,பீர்பால் கதைகள்  Empty சாதுர்யமான சிறுமி

Post by logu Mon Oct 27, 2014 10:05 pm

சாதுர்யமான சிறுமி

பீர்பாலின் மகள் ஐந்து வயதுப் பெண்; மிகவும் சாதுர்யமாகப் பேசுவாள். ஒரு நாள் தானும் அரண்மனைக்கு வருவேன் எனத் தந்தையிடம் அடம் பிடித்தாள்: பீர்பாலும் மறுக்க முடியாமல் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்.

அரசரைப் பார்ப்பது அதுவே முதல் முறை. ஆனாலும் சிறுமி மிகவும் மரியாதையோடு, அரசரை வணங்கிவிட்டு நின்று கொண்டிருந்தாள்.

அக்பர் பிரியத்தோடு சிறுமியை அருகில் அழைத்து, “குழந்தாய், உனக்கு ஏதேனும் சொல்லத் தெரியுமா?” என விசாரித்தார்.

“ஓ! எனக்கு நிறையவும் குறையவும் பேசத் தெரியுமே” என்று கூறினாள் சிறுமி.

“குறையவும் நிறையவும் என்றால் என்ன அர்த்தம்?” எனக் கேட்டார் அக்பர்.

“பெரியோர் முன் குறைவாகப் பேச வேண்டும்; சிறுவர் முன் நிறையப் பேச வேண்டும்’ என விளக்கம் கூறினாள் சிறுமி.

‘புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? தந்தையைப் போல மகளும்’ என்று இருவரையும் புகழ்ந்து பாராட்டியதோடு சிறுமிக்குப் பரிசுகள் அளித்தார் அக்பர்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

அக்பர் ,பீர்பால் கதைகள்  Empty உங்கள் பூமியில் நான் இல்லையே!

Post by logu Mon Oct 27, 2014 10:06 pm

உங்கள் பூமியில் நான் இல்லையே!

அக்பரும் பீர்பாலும் வழக்கம்போல் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது பீர்பால் கூறிய கருத்து அக்பர் ஏற்கக்கூடியதாக இல்லாததோடு கோபத்தையும் தூண்டிவிட்டது. உடனே பீர்பாலைக் கடிந்து கொண்டு உடனே நாட்டை விட்டு வெளியேறும்படி கண்டிப்பான கட்டளையிட்டு விட்டார்.

மன்னரின் கட்டளையை மீற முடியுமா? பீர்பால் சீனா தேசத்துக்குச் சென்றார். அங்கேயிருந்து சில மணல் மூட்டைகளைக் கொண்டு பழையபடி தம் நாட்டுக்கு திரும்பினார்.

வீட்டின் தளம் முழுவதிலும் சீனா தேசத்து மணலைப் பரப்பினார். தம்முடைய குதிரை வண்டியிலும் அந்த மணலைப் பரப்பி வைத்தார். இதன் காரணம் யாருக்குமே புரியவில்லை.

நாட்டை விட்டு வெளியேறியவர் மீண்டும் நாட்டிலே நடமாடுவதைப் பார்த்துப் பலர் வியப்படைந்தனர்.

ஒரு நாள் மணல் பரப்பிய தம்முடைய குதிரை வண்டியில் அமர்ந்து பீர்பால் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். வழியில் அக்பர் அவரைப் பார்த்து விட்டார். அவரை அருகில் அழைத்து,

“நாட்டை விட்டு வெளியேறும்படி நான் உத்தரவு போட்டிருக்கையில், என் உத்தரவை மீறி இப்பொழுது இங்கேயே இருக்கிறீரே; என் கட்டளைக்கு என்ன மதிப்பு” என்று கேட்டார்.

பெருமை மிக்க மன்னர் பெருமானே, உங்களிடமிருந்து வெளியேற்ற உத்தரவு எனக்குக் கிடைத்தவுடன் நான் சீனா தேசம் சென்று அங்கிருந்து மணல் கொண்டு வந்து என்வீடு முழுதும் பரப்பிவிட்டு அதன் மீதே நடமாடுகிறேன். மேலும், இப்பொழுது பாருங்கள்! என்னுடைய குதிரை வண்டியிலும்கூட சீனா தேசத்து மணலையே பரப்பி அதிலே அமர்ந்து செல்லுகிறேன். வெளியேற்ற உத்தரவு கிடைத்த நாளிலிருந்து மன்னர் பெருமான் பூமியை விட்டு விலகி அயல்நாட்டு மண்ணிலேதான் கால் வைத்து வாழ்ந்து வருகிறேன்” என்று பதில் அளித்தார் பீர்பால்.

பீர்பாலின் அறிவுத்திறனைப் பாராட்டி, அவருக்கு மன்னிப்பு அளித்து, அவரைத் தம்முடன் அழைத்துச் சென்றார் மன்னர்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

அக்பர் ,பீர்பால் கதைகள்  Empty குருடர்கள் எவ்வளவு?

Post by logu Mon Oct 27, 2014 10:07 pm

குருடர்கள் எவ்வளவு?

ஒரு நாள், மன்னர் அக்பர் ஒரு ஐயத்தை எழுப்பினார்.

”உலகத்தில் குருடர்கள் தொகை எவ்வளவு?”

இந்த வினாவுக்குச் சபைலிருந்தவர்களுள்பெரும் பகுதியினர், உலத்தில் குருடர்களின் தொகை எவ்வளவு என்பதைத் துல்லியமாகக் கூறுவது கடினம். ஆனால், கண் பார்வை உள்ளவர்களைவிட கண்பார்வையற்றவர்கள் தொகை மிகமிகக் குறைவாகத்தான் இருக்கும் என்னும் கருத்தைத் தெரிவித்தனர்.

அக்பர், ”பீர்பால் ! உம் கருத்து என்ன?” எனக் கேட்டார்.

பீர்பல் எழுந்து, ”மன்னர் பெருமானே ! இப்போது இங்கு சொல்லப்பட்ட கருத்தே குருட்டுத்தனமானதாகும். உலகத்தில் கண்பார்வையற்ற குருட்டுகளின் தொகைதான் மிகமிக அதிகம். குறிப்பாகச் சொல்வதானால், இந்த உலகத்தில் பெரும்பகுதியினர் குருடர்கள்தாம்” என்றார்.

”பீர்பால்! உமது கருத்து விநோதமாய் இருக்கிறதே ! உம் கருத்துப்படி இந்தச்சபையில் இருப்பவர்களுள் பெரும் பகுதியினர் குருடர்கள் தாம் என்று கூறுவீர் போலிருக்கிறதே?” என்றார் அக்பர்.

“அதிலென்ன சந்தேகம்?” என்றார் பீர்பால்

”அப்படியானால் நானும் ஒரு குருடானா?” என்றார் அக்பர்.

அதற்கு, ”பொதுவாக ஒரு மனிதனை என்ன காரணத்தைக்கொண்டு குருடன் என்று கூறுகிறோம்?” என்று வினா எழுப்பினார் பீர்பால்.

”ஒரு பொருளை, அது இன்ன பொருள்தான் என்று சரியாக அடையாளம் கண்டு கொள்ள முடியாதவனைப் பொதுவாகக் குருடன் என்று கூறுகிறோம் ” என அக்பர் மறுமொழி சொன்னார்.

”இப்போது ஒரு சோதனை செய்து பார்ப்போம் ” என்று கூறினார் பீர்பால். பிறகு ஒரு துணியை எடுத்து, “மன்னர் அவர்களே ! இது என்ன?” என்று கேட்டார்.

”அது ஒரு துண்டுத் துணி!” எனறார் மன்னர்.

பீர்பால், அதே துணியைத் தமது தலையில் ஒழுங்காகச் சுற்றிக் கட்டிக்கொண்டு, ”இது என்ன ?” என்று கேட்டார்.

”அது ஒரு தலைப்பாகை !” என்றார் மன்னர்.

பீர்பால் அதே துணியைக் கழுத்தில் தொங்க விட்டுக்கொண்டு, ” இப்போது இது என்ன?” என்றார்.

”அது கழுத்துக்குட்டை அல்லது சவுக்கம்” என்றார் அக்பர்.

பீர்பால், கழுத்துத் துணியை எடுத்து இடுப்பில் சுற்றிக் கட்டிக் கொண்டார்.

”இப்போது இது என்ன துணி” என்றார் பீர்பால்

”இப்போது அது லுங்கி அல்லது வேஷ்டி என்று கூறலாம்” என கூறினார்

பீர்பால் அக்பரை நோக்கிப் பணிவான குரலில், ” மன்னர் பெருமானே! என் கையில் இருக்கும் இந்தத் துண்டுத் துணியைப் பற்றி உங்களால் ஒரே மாதிரியான கருத்தைக் கூற முடியவில்லை. கண்களால் இதனை நன்றாகப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ஒரு பொருளைப் பற்றிப்பலவிதமான கருத்துக்களைக் கூறினீர்கள். ஒரு குருடனின் நிலையும் இதுதானே. தனக்கு பார்வையில்லாத காரணத்தால், ஒரு பொருளைப் பற்றித் தெளிவான கருத்தை அவனால் கூற முடியவில்லை. இப்போது தங்கள் நிலையும் அதுவாகத்தானே இருக்கிறது ? பார்வையுள்ளவர்கள் என்று கர்வப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் – என்னையும் சேர்த்துத்தான் கூறுகிறேன். கண் இருந்தும் குருடர்களாத்தான் இருக்கிறோம். இந்தக்கண்ணோட்டப்படி பார்த்தால், குருடர்களைவிடக் கண் பார்வையுள்ள குருடர்களின் தொகை மிகவும் அதிகம் என்று நாம் கருதலாமல்லவா?” என்று கூறினார்.

ஆழ்ந்த சிந்தனை வளத்துடன் கூடிய, உண்மைகள் நிறைந்த பீர்பாலின் அந்தச் சொற்களைக் கேட்டு, மிகவும் பாராட்டினார்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

அக்பர் ,பீர்பால் கதைகள்  Empty மாப்பிள்ளைகளை எல்லாம் தூக்கில் போடு!

Post by logu Mon Oct 27, 2014 10:10 pm

மாப்பிள்ளைகளை எல்லாம் தூக்கில் போடு!

அக்பர் கோபக்கனல் தெறிக்க சபையில் அமர்ந்திருந்தார். சபையோர் ஒருநாளும் அம்மாதிரி அவரைப் பார்த்ததில்லை.சபைக்கு அக்பரின் மருமகன் வந்திருந்தார். தம் மகளை அனுப்பி வைக்கும்படு அவரிடம் கேட்டுக் கொண்டார் அக்பர்.

ஆனால், மருமகன் அனுப்பிவைக்க மறுத்துவிட்டார்.

அக்பர் சொல்லி, யாருமே எதையுமே எப்பொழுதுமே மறுத்ததில்லை.

மருமகனின் மறுப்பு, அவரை புண்படுத்தியதோடு அவருக்கு அவமானமாகவும் −ருந்தது. அதனால்தான் கோபக்கனலோடு காணப்பட்டார்.

‘உலக முழுவதுமே என் சொல்லுக்குக் கீழ்படிகிறது. அந்த முட்டாள் என் சொல்லை மறுத்துவிட்டானே; −தை நான் எப்படி அனுமதிப்பது?’ என எண்ணி மனம் குமுறினார். அவனுக்குத் தகுந்த தண்டனை கொடுப்பதே சரியான முறை என்று தீர்மானமாக −ருந்தார்.

உடனே பீர்பாலை வரவழைத்துத, ராஜ்யத்திலுள்ள எல்லா மருமகன்களையும் தூக்கில் போடும்படி உத்தரவிட்டார்.

அக்பருடைய −ந்த உத்தரவைக் கேட்ட மக்கள் அனைவரும் திகிலடைந்தார்கள். ஏனென்றால், ராஜ்யத்திலுள்ள ஒவ்வொருவரும் யாருக்காவது எப்பொழுதாவது மருமகனாகத்தானே −ருப்பார்கள்.

அரசருடைய உத்தரவை நிறைவேற்றுவதற்காக, பீர்பால் வெகு தீவிரமாக ஏராளமான தூக்கு மரங்களை நிறுவிக் கொண்டிருப்பதாக மக்கள் நினைத்தார்கள்.

தூக்கு மரங்கள் யாவும் நிறுவி முடிந்தபின், பீர்பால் அரசரைக் காணச் சென்றார். எல்லா வேலைகளும் செய்தாகி விட்டதாகவும், நாளை தூக்கில் போட்டு விடலாம் என்றும் அதற்குள் அரசர் வந்து அந்த ஏற்பாட்டைப் பார்த்து விடும்படியும் கேட்டுக் கொண்டார் பீர்பால்.

அரசரும் பீர்பாலும் போய் பார்வையிட்டனர். நீண்ட வரிசையில் ஏராளமான தூக்கு மரங்கள் நிறுவப்பட்டிருந்தன. பீர்பால் செய்திருக்கும் ஏற்பாடுகள் யாவும் அரசருக்கு திருப்தியை அளித்தது. நீண்ட வரிசையின் முடிவில், −ரண்டு தூக்கு மரங்கள் தங்கத்தாலும் வெள்ளியாலும் நிறுவியிருந்ததைப் பார்த்த அக்பருக்குப் புரியவில்லை. −ந்த −ரண்டு விசேஷ தூக்கு மரங்கள் யாருக்காக அமைக்கப்பட்டிருக்கின்றன? எனக் கேட்டார் அக்பர்.

‘வெள்ளிமரம், தங்களுடைய விசுவாச மிக்க ஊழியனாகிய அடியேனுக்கு; தங்க மரம் மேன்மை தங்கிய சக்கரவர்த்தி அவர்களுக்கு!’ என்று கூறினார் பீர்பால்.

‘எனக்குத் தங்கமரமா?’ என்னை யார் தைரியமாக தூக்கில் போடுவது? என்று ஆச்சர்யப்பட்டார் அக்பர்.

‘நீங்களாகவே!’ என்றார் பீர்பால்.

‘எல்லா மருமகன்களையும் தூக்கில் போடும்படி நீங்கள் உத்தரவு போட்டீர்கள். அப்படி பார்க்கும்போது நீங்களும் நானும் உள்பட எல்லோரும் யாருக்காகிலும் மருமகன்களே. அதனால், தங்களுக்காக விசேஷமாக தங்கத்தினால் தயாரித்தேன். முதலாவதாக நீங்களும், அடுத்த படியாக நானும் நாளையே ஆரம்பிக்கலாம்; மற்றவர்களை அடுத்தபடியாக நிறைவேற்றலாம்” என்று கூறினார் பீர்பால்.

பீர்பார் கூறியவற்றைக் கேட்டதும் அக்பர் எத்தகைய முட்டாள்தனமான உத்தரவைப் போட்டு விட்டோம் என்பதை உணர்ந்ததோடு, அதை உடனடியாக அரண்மனைக்குத் திரும்பியதும் ரத்து செய்துவிடவும் தீர்மானித்தார்.

அக்பர் அரண்மனைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவரைக் காண அவருடைய அருமை மகள் அங்கே வந்து காத்திருந்தாள்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

அக்பர் ,பீர்பால் கதைகள்  Empty பழமும் இல்லை! தோலும் இல்லை!

Post by logu Mon Oct 27, 2014 10:12 pm

பழமும் இல்லை! தோலும் இல்லை!

அக்பர் அரசியாருடன் உணவருந்திக் கொண்டிருந்தார். அக்பருக்கு மிகவும் பிடித்தமான வாழைப்பழங்கள் அக்பரின் இலையில் கூடுதலாக வைக்கப்பட்டிருந்தது. உணவை சாப்பிட்டபின் இலையில் இருந்த அனைத்து வாழைப் பழங்களையும் சாப்பிட்டு முடித்தார். பழங்களை சாப்பிட்டுவிட்டு அதன் தோலை அரசியாரின் இலையில் ஒரு ஓரத்தில் வைத்து விட்டார்.

அக்பரிடம் முக்கியமான செய்தி ஒன்றினை கூறுவதற்காக பீர்பால் அங்கு வந்தார்.

‘பீர்பால், இப்பொழுதுதான் உங்களை நினைத்துக் கொண்டேன்! நீங்களே வந்து விட்டீர்கள் இங்கே பார்த்தீர்களா? இலையில் வைத்திருந்த அனைத்து வாழைப் பழங்களையும் அரசியார் சாப்பிட்டு விட்டார் என்றார் கேலியாக.

அக்பரின் பேச்சை கேட்ட பீர்பால் சிரித்துக்கொண்டே,’அரசே அரசியாரின் இலையில் இருக்கும் தோல்களை பார்க்கும் போது எல்லாப் பழங்களையும் அவரே காலி செய்திருக்கிறார் என்று தெரிகிறது என்றார். பீர்பால்.

‘அப்படி கூறுங்கள் பீர்பால்! எனக்கு ஒரு பழத்தைக் கூட வைக்காமல் அவளே தின்று தீர்த்து விட்டாள்!; என்றார் அக்பர்.

‘அரசே மன்னிக்க வேண்டும் அரசியார் பழங்களை மட்டும் தின்று விட்டு தோலை இலையிலேயே வைத்துவிட்டார் ஆனால் தாங்களோ பழத்திலுள்ள சதைமட்டுமில்லாமல் தோலையும் சேர்த்து சாப்பிட்டு இருக்கிறீர்கள் ஏன் என்றால் உங்கள் இலையில் தோல் எதுவும் இல்லையே இதை வைத்தே நீங்கள் தோலையும் சேர்த்து சாப்பிட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன் என்றார் பீர்பார்.

பீர்பால் கூறியதைக் கேட்டு அரசியார் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார், ‘தாங்கள் கூறுவது உண்மைதான் பீர்பால் நல்ல வேளை என் இலையில் இருந்த பழத்தோல்களையும் சேர்த்து அரசர் சாப்பிடாமல் விட்டு வைத்தாரே என்று அரசியார் கிண்டலாகக் கூறியதும் அக்பருக்கு என்ன கூறுவது என்று தெரியாமல் திகைத்து நின்றார்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

அக்பர் ,பீர்பால் கதைகள்  Empty ஆயிரம் முட்டாள்கள்

Post by logu Mon Oct 27, 2014 10:13 pm

ஆயிரம் முட்டாள்கள்

பீர்பால், டில்லியிலிருந்து அலகாபாத் நகருக்குச் சென்று சில நாட்கள் கழித்துத் திரும்பினார். வரும்பொழுது, ராணுவத்துக்குத் தேவைப்படும் என கருதி, கட்டுமஸ்தான் உடல் வலிமையுள்ள ஆயிரம் ஆட்களை அழைத்து வந்தார்.

வரும்போது, அரசர் இவர்களை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் என்ன செய்வது? உணவு, உடை, சம்பளம் இவற்றை எல்லாம் எவ்வாறு கொடுப்பது? என்ற கவலை சூழ்ந்தது பீர்பாலுக்கு.

அரண்மனைக்கு வந்த பீர்பாலை அக்பர் வரவேற்று உபசரித்து, ”நமக்காக என்ன கொண்டு வந்தீர்?” என்று கேட்டார்.

”ஆயிரம் முட்டாள்கள்” என்றார் பீர்பால்

”ஆயிரம் முட்டாள்கள் என்று எப்படிக் கூறுகிறீர்?” என்று கேட்டார் அக்பர்.

”நான் கூப்பிட்டவுடன் என் பின்னே ஓடி வந்து விட்டார்களே, இந்த பீர்பால், நமக்கெல்லாம் உடை, உணவு, சம்பளம் எவ்வாறு கொடுப்பார் என்று யோசிக்க வேண்டாமா? நானோ அரசரின் ஊழியன்; நான் எப்படி இவர்களைப் பராமரிப்பேன்? அதனால்தான் அவர்கள் முட்டாள்கள் என்று கூறுகிறேன்.

”நீர் கவலைப்படவேண்டாம். நாட்டின் பாதுகாப்புக்குப் பட்டாளம் அவசியமான தேவை அல்லவா? நீர் கூட்டி வந்திருப்பவர்கள் எல்லோரையும் நமது ராணுவத்தில் சேர்த்துக் கொள்வோம்” என்று கூறி, அதற்கான உத்தரவு போட்டார் அக்பர்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

அக்பர் ,பீர்பால் கதைகள்  Empty Re: அக்பர் ,பீர்பால் கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum