TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இதயம் காக்க... எளிய வழிகள்

Go down

இதயம் காக்க... எளிய வழிகள் Empty இதயம் காக்க... எளிய வழிகள்

Post by மாலதி Fri Oct 04, 2013 7:46 pm

கையளவு இதயத்தின் தாள லயமான சங்கீத ஒலிதான் 'லப்டப்... லப்டப்!’ நாளன்றுக்கு லட்சம் முறைக்கு மேல் துடிக்கிறது நம் இதயம். உடலில் இருக்கும் சுமார் ஒரு லட்சம் கிலோ மீட்டர் நீள ரத்த நாளங்களுக்கு, 15,000 லிட்டர் ரத்தத்தைச் செலுத்துகிறது. நாம் உறங்கினாலும், விழித்திருந்தாலும், சும்மா இருந்தாலும், சுறுசுறுப்பாக வேலை செய்தாலும் இடைவிடாது துடிப்பது இதயம் ஒன்றுதான். இதயம் நன்கு செயல்பட்டால்தான், உடலின் அனைத்து உறுப்புகளும் நல்ல நிலையில் இருக்கும்.
 ஓய்வில்லாமல் துடிக்கும் இதயம் தொடர்பான பல தகவல்களை நம்மிடையே பகிர்ந்துகொள்கிறார்கள் இதய நோய் நிபுணர் ஜே.கே.பெரியசாமி, இதய மருத்துவர் காஞ்சனா காசிநாதன் மற்றும் டாக்டர் டி.சதீஷ் காந்தி. இதய நோய்களுக்கான அறிகுறிகள், தடுப்பு முறைகள், சிகிச்சைகள் எனப் பல தகவல்களும் இந்த இணைப்பில் இடம்பெறுகின்றன. படியுங்கள்; பயன்பெறுங்கள்.
தாயின் கருவில் இருக்கும்போதே குழந்தையின் இதயத்தில் குறைபாடுகள் தோன்ற வாய்ப்பு அதிகம் இருக்கிறது. பிறவிக் குறைபாடுகள் மற்றும் வளர்ந்த பிறகு வருகின்ற நோய்கள் என இதய நோய்களை இரண்டு வகைப்படுத்தலாம்.
[You must be registered and logged in to see this image.]
பிறவிக் குறைபாடுகள்
[You must be registered and logged in to see this image.]  நெருங்கிய சொந்தங்களுக்கிடையே திருமணம், கர்ப்ப காலத்தில் ஏற்படும் நோய்கள், மருத்துவர் பரிந்துரைக்காமல் சாப்பிடும் மருந்துகள் போன்றவை பிறவியிலேயே இதயக் கோளாறுகள் ஏற்பட முக்கிய காரணங்கள்.
[You must be registered and logged in to see this image.]  அழும்போது குழந்தையின் நிறம் நீலமாக மாறுதல், அடிக்கடி சளி பிடிப்பது, அடிக்கடி நோய்வாய்படுவதால் உடல் எடை அதிகரிக்காமல் இருத்தல் போன்றவை, பிறவி இதய நோய்களின் அறிகுறிகள்.
[You must be registered and logged in to see this image.]
 இதயத்தின் மேல் அறைகளுக்கு இடையே சுவரில் துளை, ஏட்ரியம் எனப்படும் இதய மேல் அறைகளுக்கு இடையில் உள்ள சுவரில் துளை ஏ.எஸ்.டி என்று அழைக்கப்படும். பிறந்தவுடன் குழந்தைக்கு இந்த துளை கண்டறியப்பட்டால் பெரும்பாலும் இது 40 வயதுக்கு மேல்தான் தொந்தரவு தரும். இதைக் குணப்படுத்த எளிய அறுவை சிகிச்சை போதும்.
[You must be registered and logged in to see this image.]  இந்தத் துளையானது வலது, இடது வென்டரிக்கிள் எனப்படும் கீழ் அறைகளுக்கு இடையே காணப்பட்டால் வி.எஸ்.டி என்று அழைக்கப்படும். பெரும்பாலானவர்களுக்கு 12 வயதில் தானாகவே மூடிக்கொள்ளும்.
[You must be registered and logged in to see this image.]
எப்படிப்பட்ட குறையாக இருப்பினும் கவலைப்படத்தேவை இல்லை. நவீன மருத்துவத்தின் மூலம் குறைகள் நீக்க முடியும்.
வளர்ந்த பிறகு ஏற்படும் இதய நோய்கள்
பள்ளி செல்லும் வயதில் உள்ள குழந்தைகளைப் பாதிக்கும் நோய் 'சரவாங்கி’ (Rheumatic Heart Disease).வளர்ந்துவரும் நாடுகளிலும் மக்கள்தொகை அதிகம் உள்ள நாடுகளிலும் இந்த நோய் பரவலாக இருக்கிறது.
[You must be registered and logged in to see this image.]  தொண்டைக் கரகரப்பு, மூட்டுவலி, மூட்டு வீக்கம், லேசான காய்ச்சல், நெஞ்சு படபடப்பு, மூச்சுத்திணறல், அடிக்கடி சளி பிடித்தல் போன்ற அறிகுறிகள் தென்படும்.
[You must be registered and logged in to see this image.]  இந்த நோய் ஏற்பட்டால், இதய வால்வுகள் சுருங்கும். வால்வுகள் சரியாக மூட முடியாமல் கசிவு ஏற்படும். இதயத்தின் இடதுபுறம் உள்ள மேல் அறைக்கும் கீழ் அறைக்கும் இடையே இருக்கும் ஈரிதழ் வால்வு மற்றும் சுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் பிறைச்சந்திர வால்வு ஆகிய இரண்டும் பாதிப்படையும்.
சிகிச்சை முறை:
[You must be registered and logged in to see this image.] வால்வு சுருக்கத்தை அறுவைசிகிச்சை இல்லாமல் வால்வை விரிவுபடுத்தும் பலூன் மூலமே சரிப்படுத்திவிடலாம். மயக்கமருந்து கொடுக்கத் தேவை இல்லை.
[You must be registered and logged in to see this image.]
  வலது பக்கக் காலில் உள்ள சிரை மூலமாக ஒரு மெல்லிய (0.25 மிமீ) கம்பி போன்ற கருவியைச் செலுத்தி, அதன் வழியாக இதயத்தின் மேல் அறைகளுக்கு நடுவில் இருக்கும் குறுக்குச் சுவரின் வழியாக, பலூன் ஒன்று அனுப்பப்படும். சுருங்கிய வால்வில் இந்த பலூன் பொருத்தப்படும். பிறகு உடலின் வெளியில் இருந்தபடியே இரண்டு அல்லது மூன்று முறை பலூன் விரிவடையச் செய்யப்படும். சுருங்கிய வால்வும் விரிவாகி, இயல்பு நிலைக்குத் திரும்பும்.
[You must be registered and logged in to see this image.]  இந்த சிகிச்சையில் நெஞ்சில் தழும்புகள் ஏற்படாது.
[You must be registered and logged in to see this image.]  நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை. ஓரிரு நாட்களில் வீட்டுக்குத் திரும்பலாம்.
சிகிச்சைக்குப் பிறகு:
[You must be registered and logged in to see this image.]  40 வயது வரை தொடர்ந்து, மூன்று வாரத்துக்கு ஒருமுறை பென்சிலின் ஊசி மருந்தை போட்டுக்கொள்ள வேண்டும்.
[You must be registered and logged in to see this image.]
 சுத்தமான தண்ணீர், உணவு, சுகாதாரமான காற்று அவசியம் தேவை.
[You must be registered and logged in to see this image.]  தொண்டை வலி வராமல், பார்த்துக்கொள்ள வேண்டும்.
[You must be registered and logged in to see this image.] இது தொற்றுநோய் இல்லை என்றாலும், ஒரு முறை சரவாங்கி நோய் வந்தவர்களுக்கு மீண்டும் வர வாய்ப்பு உண்டு.
மாரடைப்பு நோய்
உயிர் இழப்புக்கு முக்கியக் காரணமாக இருப்பது மாரடைப்பு நோய். எல்லா வயதினரையும் எல்லாத் தரப்பினரையும் தாக்கும் நோய் இது. கிட்டத்தட்ட 40 சதவிகிதம் மனித உயிர் இழப்புக்குக் காரணமாவது மாரடைப்புதான். ஆண்டுதோறும் 50 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆனாலும் உரிய விழிப்பு உணர்வும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டால், மாரடைப்பின் பாதிப்பில் இருந்து நிச்சயம் நம்மைக் காத்துக்கொள்ளலாம்.
காரணங்கள்:
[You must be registered and logged in to see this image.]
மாரடைப்பு நோய் திடீரென்று தோன்றுவது அல்ல. 20 ஆண்டுகளானாலும் எந்த விதமான அறிகுறிகளும் இல்லாமலேயே இருக்கும் நோய்.
உயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்புச் சத்து, சர்க்கரை நோய், புகைபிடித்தல், மன அழுத்தம் போன்றவற்றால்கூட ரத்த நாளத்தின் உட்சுவர் பாதிக்கப்படுகிறது. உட்சுவர் கரடுமுரடாகி, அதன் மீது ரத்தத்தில் மிதக்கும் கொழுப்புத் திவலைகள் படிந்துகொண்டே வரும். ரத்த ஓட்டத்துக்கான பாதை குறுகலாகி, ரத்த ஓட்டம் தடைபடும். பிறகு இதய நாளத்தில் விறைப்பு அல்லது உறைகட்டி ஏற்பட்டால், ரத்த ஓட்டம் முழுவதுமாகத் தடைபடும். இதயத் தசைக்கு ரத்த ஓட்டம் தடைபடுவதால், அவை செயலிழக்கின்றன. புகைபிடித்தல், அதிகமாக உணர்ச்சிவசப்படுதல், அளவுக்கு அதிகமானக் கடின உழைப்பு போன்றவற்றால், இது ஏற்படலாம். அடைப்பு அதிகமாகும்போது, இறுக்கம் அல்லது தீவிர மாரடைப்பு ஏற்படுகிறது.
மாரடைப்பு நோய்க்கான அறிகுறிகள்:
ஒருவர் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும்போது, அவருடைய ரத்த நாளங்களில் 50 சதவிகிதம் அடைப்பு இருந்தால்கூட இதயத்துக்குத் தேவையான சுத்த ரத்தம் கிடைத்துவிடுகிறது. அதனால் அவருக்கு எந்த விதமான அறிகுறியும் தெரியாது.
[You must be registered and logged in to see this image.]
  கடினமான உழைப்பில் ஈடுபடும்போது குறுகிப்போன நாளங்கள் வழியாகப் போதுமான ரத்தம் இதயத்துக்குக் கிடைப்பது இல்லை. அப்போது மார்பு இறுக்கம் என்ற அறிகுறி தோன்றும். ஓய்வு எடுத்துக்கொண்டால், இதயத்துக்குத் தேவையான ரத்தமும் பிராண வாயுவும் கிடைக்கும். நெஞ்சு வலியும் மறைந்துவிடும்.
[You must be registered and logged in to see this image.]  மாரடைப்பு நோய்க்கு ஆரம்ப அறிகுறியே மார்பு இறுக்கம்தான். மார்பு இறுக்கம் மார்பின் நடுப்பகுதியில் நெஞ்சு எலும்புக்குப் பின்புறம் தோன்றும். இரு தோள்களில் - முக்கியமாக இடது தோளில் - ஆரம்பித்து கைகள், கழுத்து, தாடை, முதுகு போன்ற பகுதிகளுக்கும் வலி பரவலாம். சில சமயங்களில் குறிப்பிட்டப் பகுதியில் மட்டுமே வலி தோன்றலாம். பொதுவாக நோயாளிகள்  இதை வாயுக் கோளாறு என்று அசட்டையாக இருந்துவிடுவார்கள். இந்த மார்பு இறுக்கத்தால் இதயத் தசைகள் சேதம் அடைவதில்லை. ஆனால் எந்த நேரத்திலும் ரத்த நாளங்கள் தடைபட்டு மாரடைப்பு ஏற்படலாம். சாதாரண மார்பு இறுக்கமா அல்லது மாரடைப்பா என்று மருத்துவரால்தான் கண்டறிய இயலும்.
[You must be registered and logged in to see this image.]  கடுமையான மார்பு இறுக்கம் போன்ற வலி 15 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும்.
[You must be registered and logged in to see this image.]
  மார்பு வலியுடன் உடல் எங்கும் திடீர் வியர்வை, மூச்சுத்திணறல், வாந்தி, பலவீனம், தலைச்சுற்றல், மயக்கம், வேகமான நாடித்துடிப்பு ஆகியனவும் ஏற்படலாம்.
[You must be registered and logged in to see this image.]  அறிகுறிகளே இல்லாமல் மாரடைப்பு போன்றவையும் ஏற்படுவதும் உண்டு. இதை 'ஊமைதாக்குதல்’ என்பார்கள்.
பரிசோதனை முறைகள்
[You must be registered and logged in to see this image.]
முதலில் இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்படும்.அதன்பிறகே, தேவையான ஆய்வுக்கூடப் பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படும்.
ஈ.சி.ஜி (இதய மின் வரைபடம்)  
இதயம் சுருங்கும்போது ஒவ்வொரு துடிப்பிலும் மின் அலைகள் உடல் முழுவதும் பரவுகின்றன. இந்த மின் அலைகளைக் கருவி மூலம் பதிவு செய்வதே ஈ.சி.ஜி. இதயத் துடிப்பு சீராக இருக்கிறதா என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம். இதய நோய் உள்ள ஒரு சிலருக்கு ஈ.சி.ஜி - இல் மாறுபாடுகள் இல்லாமல்கூட இருக்கும்.
மார்பு எக்ஸ்ரே
இதயம் விரிந்துள்ளதா என்பதையும், நுரையீரலின் ரத்த ஓட்டம் மற்றும் செயலாற்றும் தன்மையையும் கண்டறியலாம்.
அடிப்படை ரத்தப் பரிசோதனைகள்
அடிப்படையான ரத்தப் பரிசோதனைகள் செய்வதன் மூலம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, கொழுப்பின் அளவு, ரத்த அணுக்களின் அளவு, ஹீமோகுளோபின் அளவு, யூரியா, கிரியாட்டின் ஆகியவற்றின் அளவுகள் பரிசோதிக்கப்படும். இவை மூலம் இதய நோய்களை உருவாக்கும் இதரக் குறைபாடுகள் உள்ளனவா என்பதையும், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் ஆகியன பாதிக்கப்பட்டு இருக்கின்றனவா என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.
[You must be registered and logged in to see this image.]
சிறப்பு ரத்தப் பரிசோதனைகள்
மாரடைப்பு நோயால் ரத்தத்தில் ஏற்படும் மாறுதல்களைக் கண்டறிய 'சி.பி.கே - எம்.பி’ ((cpk-mb - creatine phosphokinase myocardial band)என்ற பரிசோதனை செய்யப்படும். கிரியாட்டின் ஃபாஸ்போகைனேஸ் என்ற என்ஸைம் அளவு பரிசோதிக்கப்படும். மாரடைப்பு இருந்தால் இதன் அளவு ரத்தத்தில் அதிகரித்திருக்கும்.
இதேபோல ட்ரோபோனின் 'டி’ பரிசோதனையும், மாரடைப்பு நோய்க்கான குறிப்பிட்ட மாறுதல்கள் ஏற்பட்டு உள்ளனவா என்பதைக் கண்டறிய உதவும்.
எக்கோ கார்டியோகிராம் பரிசோதனை
[You must be registered and logged in to see this image.]
இதயத்தின் அமைப்பு மற்றும் அதன் செயல்திறன் கண்டுபிடிக்கப்படும். பிறவியிலேயே இதயத்தில் கோளாறுகள் இருந்தாலும் அவற்றைக் கண்டுபிடித்துவிடலாம்.
டிரட்மில் பரிசோதனை
சில நோயாளிகளின் இதயத்தில் உள்ள அடைப்புகள் அவர் வேகமாக நடப்பது போன்ற செயல்களில் ஈடுபடும்போதுதான் கண்டறிய முடியும். டிரட்மில் என்ற எந்திரத்தில் நோயாளியைச் செயற்கையாக நடக்கவைத்து இதயத் துடிப்பு மாறுதல்களை நுணுக்கமாக ஈ.சி.ஜி. மூலம் கண்டறியும் பரிசோதனை இது.
ஆஞ்சியோகிராம் பரிசோதனை
ரத்தக் குழாயில் ஏற்பட்டு உள்ள அடைப்புகள், சுருக்கங்கள் மற்றும் அவற்றின் நீளம் ஆகியவற்றைக் கண்டறியும் பரிசோதனை இது.
கை அல்லது தொடைப்பகுதியில் இருக்கும் ரத்தக் குழாய் வழியாக, சோதனைக் குழாயைச் செலுத்தி, இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்கள் எக்ஸ்-ரே உதவியுடன் படம் பிடிக்கப்படுகின்றன. தற்போது குறைந்த செலவில் பின்விளைவுகள் இல்லாத வகையில் அனைத்துத் தரப்பினருக்கும் செய்யப்படுகிறது. இந்தப் பரிசோதனையை மேற்கொண்டவர்கள் நான்கு மணி நேர ஓய்வுக்குப் பிறகு வீடு திரும்பலாம்.
கதிர் இயக்கப் பரிசோதனை
(நியூக்ளியர் ஸ்கேன்)
இதய நோயாளிகளுக்குக் கதிரியக்கம் உள்ள ரசாயனப் பொருட்களைக் கொடுத்து பரிசோதனை செய்யப்படும்.  இதன் மூலம் இதயத் தசைகள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கின்றன என்பதை அறியலாம். பழுதடைந்த தசைகளையும் நல்ல நிலையில் இயங்கும் தசைகளையும் பிரித்து அறியவும் முடியும். ரத்தக் குழாய் அடைப்பால் எந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதையும் கண்டுபிடித்துவிடலாம்.
முதலுதவி
சி.பி.ஆர். முதலுதவி
[You must be registered and logged in to see this image.] தீவிரமான மாரடைப்பு வருவதன் முதல் அறிகுறி, திடீர் மயக்கம்தான்.
[You must be registered and logged in to see this image.]
 மயக்கம் அடைந்தவரைச் சுற்றிக் கூட்டம்போடக் கூடாது. முகத்தில் தண்ணீர் தெளிப்பது கூடாது.
[You must be registered and logged in to see this image.] மார்பு அல்லது இடப்புறத்தோள்பட்டையில் மிக அதிக வலி, மூச்சிறைப்பு ஆகியவை மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம்.
[You must be registered and logged in to see this image.] இந்த அறிகுறி தெரிந்தவுடன், நோயாளியின் இறுக்கமான உடைகளைத் தளர்த்தி அவரை சமமான தரையில் படுக்கவைக்கவேன்டும்.
[You must be registered and logged in to see this image.]  நோயாளியை உடனடியாக ஆம்புலன்ஸ் அல்லது வேறு பாதுகாப்பான வாகனம் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது மிகவும் அவசியம்.
[You must be registered and logged in to see this image.] இதயத் துடிப்பையும் நாடித் துடிப்பையும் பரிசோதித்துப்பார்க்கவேண்டும். துடிப்பு இல்லை என்றால், மயக்கம் அடைந்தவரின் மார்பில் கையால் அழுத்தி 'கார்டியோபல்மோனரி ரிசஸிடேஷன்’ (Cardiopulmonary resuscitation - CPR) என்னும் முதலுதவி செய்ய வேண்டும். வாய் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கவும் முயல வேண்டும். குடும்பத்தில் ஒருவராவது சி.பி.ஆர். முதலுதவி தெரிந்து வைத்திருப்பது நல்லது.
தீவிர இதய சிகிச்சை
[You must be registered and logged in to see this image.]  நாடித் துடிப்பு, ரத்த அழுத்தம், ஈ.சி.ஜி. போன்ற பரிசோதனைகள் செய்யப்படும்.
[You must be registered and logged in to see this image.]
  மாரடைப்பு உறுதியானால் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை தொடங்கப்படும்.  
[You must be registered and logged in to see this image.]  மன அமைதிக்கும், ஓய்வுக்கும் தூக்க மருந்து மற்றும் ரத்தக் குழாயில் உள்ள அடைப்பு கரைய சக்திவாய்ந்த 'ஸ்ட்ரெப்டோகைனேஸ்’ (Streptokinase ) உடனடியாகச் செலுத்துவார்கள்.
[You must be registered and logged in to see this image.]  மாரடைப்பு வந்த முதல் ஒரு மணி நேரத்துக்குள் சிகிச்சை அளித்தால் இதயத் தசைகள் பழுதடையாமல் தடுக்க முடியும்.
 பலூன் சிகிச்சை முறை (ஆஞ்சியோபிளாஸ்டி)
ஒன்று அல்லது இரண்டு ரத்தக் குழாய்களில் ஒரு குறுகிய இடத்தில் அடைப்பு இருந்து, மாரடைப்பு ஏற்பட்டிருந்தால், அதை ஆஞ்சியோகிராம் மூலம் உறுதி செய்துகொண்டு, ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்வார்கள்.
  இந்த சிகிச்சையில் நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்கப்படுவது இல்லை.
[You must be registered and logged in to see this image.]
  இதயத்தில் உள்ள ரத்தக் குழாய் அடைப்பை 0.014 அங்குல தடிமன் உள்ள கம்பியினால் கடந்து, [You must be registered and logged in to see this image.]அதன் மேல் ஒரு பலூனைச் செலுத்தி, அடைக்கப்பட்ட ரத்தக் குழாய் விரிவுபடுத்தப்படும். இந்தக் குழாய் மீண்டும் சுருங்காமல் இருக்கவும், ரத்தக் குழாய் துவாரத்தை அதிகப்படுத்தவும் பாதிக்கப்பட்ட இடத்தில் ஒரு கம்பிவலை பொருத்தப்படும். இதற்கு 'ஸ்டென்ட்’ (stent )என்று பெயர்.
[You must be registered and logged in to see this image.]  இதனால் ரத்த ஓட்டம் சீராகி மீண்டும் மாரடைப்பு வராமல் தடுக்கப்படுகிறது.
[You must be registered and logged in to see this image.]  தழும்புகள் இருக்காது.
[You must be registered and logged in to see this image.]  இரண்டு அல்லது மூன்று நாட்களில் வீட்டுக்குத் திரும்பலாம். ஒரு வார காலத்துக்குப் பிறகு வழக்கமான பணிகளில் ஈடுபடலாம்.
அறுவைசிகிச்சை முறைகள்
மூன்று ரத்தக் குழாய்களில் அடைப்பு அதிகமாக இருந்தாலோ, இதயத்தின் பெரிய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு பலூன் சிகிச்சைக்கு உகந்ததாக இல்லாவிட்டாலோ, அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படும். மருந்துகள் மூலமாக, ஆஞ்சியோபிளாஸ்டி மூலமாக குணப்படுத்த முடியாத வேறு சிக்கல்கள் இருக்கும் நோயாளிகளுக்கும் அறுவை சிகிச்சையே ஏற்றது.
[You must be registered and logged in to see this image.]
பைபாஸ் அறுவைசிகிச்சை எவ்வாறு செய்யப்படுகிறது?
அடைபட்ட ரத்தக் குழாயின் அடைப்பைத் தாண்டி நல்ல பாகத்துடன், இதயத்தில் இருந்து ரத்தத்தை வெளியே எடுத்துப்போகும் மகா தமனிக்கு ஓர் ரத்தக் குழாய் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. இந்த இணைப்பு நாளம் காலில் இருந்தோ அல்லது இடது கையில் உள்ள ரத்தக் குழாயில் எடுக்கப்படும்.
சிகிச்சைக்குப் பிறகு கடைப்பிடிக்க வேண்டியவை
[You must be registered and logged in to see this image.]தீவிர சிகிச்சைப் பிரிவில் குறைந்தது 48 மணி நேரம் நோயாளி வைக்கப்படுவார். பிறகு வார்டில் பத்துப் பன்னிரன்டு நாட்கள்வைத்துக் கண்காணிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பப்படுவார்.
[You must be registered and logged in to see this image.] 
பழைய நிலைக்குத் திரும்ப நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை ஆகலாம்.
[You must be registered and logged in to see this image.]  குறைந்த கொழுப்புச் சத்துள்ள உணவுகளையே உண்ண வேண்டும்.
[You must be registered and logged in to see this image.]  நிறைய ஓய்வெடுக்க வேண்டும்.
[You must be registered and logged in to see this image.]  மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்துவர வேண்டும்.
செயற்கை இதயம்
இந்தியாவிலேயே, சென்னையில் மட்டும்தான் செயற்கை இதய வசதி உண்டு.  
[You must be registered and logged in to see this image.]
'எக்ஸ்ட்ரா கார்போரியல் மெம்பரேன் ஆக்சிஜனேஷன்’ என்பதன் சுருக்கம்தான் எக்மோ. உடலுக்கு வெளியே இருந்து இதயம் மற்றும் நுரையீரல் பணியைச் செய்வது என்று அர்த்தம்.  ரத்த அழுத்தக் குறைவு, மாரடைப்பு போன்ற சமயங்களில் இதயத்தின் செயல்பாடு பாதிக்கப்படும். சில மணி நேரங்களில் உயிரிழப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம் உருவாகும்போது, 'எக்மோ’ கருவியைப் பயன்படுத்தி உயிரைக் காப்பாற்ற முடியும்.  இந்த கருவியைப் பயன்படுத்தும்போது மூளை செயல்படும்.  மற்றவர்களுடன் பேசலாம்.  கருவி பொருத்தியிருக்கும் நேரத்தில் இதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கான சிகிச்சையும் அளிக்கப்படும்.  சிகிச்சை பலன் அளிக்காதபோது இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும்.  ஹார்ட்-லங் கருவி மூலம் மூன்று மணி நேரத்துக்கு மேல் ஒருவருக்கு ரத்த ஓட்டம் அளிக்க முடியாது. 'எக்மோ’ கருவியை மாற்று இதயம் கிடைக்கும் வரை பயன்படுத்தலாம்.
பேஸ்மேக்கர்
நம்முடைய உடல் முழுவதும் ரத்தத்தைக் கொண்டுசெல்ல இதயம் துடிக்க வேண்டும். இதயம் துடிக்க அதன் உள்ளேயே ஒரு மினி ஜெனரேட்டர் உள்ளது. இது இதயத்தின் ஒவ்வோர் அறைக்கும் மின்சாரத்தைக் கொண்டுசென்று இதயத்தைத் துடிக்கச் செய்யும். இதயத்தில் போதுமான அளவில் மின்சாரம் உற்பத்தியாகாவிட்டால், இதயத்துடிப்பு குறைந்துவிடும்.  இதனால் உடல் முழுவதும் ரத்தம் செல்வது பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். இந்த நிலையில் நோயாளிக்குச் செயற்கை இதயத் துடிப்பு அளிக்கும் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்படும். தற்போது நவீன வசதிகளுடன்கூடிய பேஸ்மேக்கர் கருவிகள் வந்துவிட்டன.
இதய நோயாளிகளுக்கான உணவு முறைகள்
சரியான உணவுக்கட்டுப்பாடு இல்லாததே மாரடைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கான முக்கியமான காரணங்கள். அதிகமான கொழுப்புச் சத்து உள்ள உணவுகளைச் சிறு வயதில் இருந்தே கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிட்டு வந்தவர்களுக்கு ரத்தத்தில் அதிகக் கொழுப்பு சேர்வதற்கு வாய்ப்பு உண்டு.
[You must be registered and logged in to see this image.]
  கட்டுப்பாடு இல்லாமல் உண்ணும் உணவில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் கொழுப்புச் சத்தாகவும் 25 சதவிகிதம் புரதமாகவும், 25 சதவிகிதம் மாவுச் சத்தாகவும் இருக்கும். கொழுப்புச் சத்தை 50 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும். மாவுச் சத்தை 50 சதவிகிதமாக அதிகரித்துக்கொள்ளலாம்.
[You must be registered and logged in to see this image.]  கொழுப்பை எவ்வளவு தவிர்க்க முடியுமோ, அவ்வளவு தவிர்க்கலாம்.
[You must be registered and logged in to see this image.]  சைவ உணவுப் பழக்கம்தான் இதயத்துக்கு மிகவும் நல்லது.
[You must be registered and logged in to see this image.] பச்சைக் காய்கறிகள், அதிக இனிப்பு இல்லாத பழ வகைகள், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதயம் காக்கும் உணவுகள்
கடைப்பிடிக்கவேண்டியவை:
[You must be registered and logged in to see this image.]  சரியான நேரத்துக்குச் சாப்பிடுங்கள்.
[You must be registered and logged in to see this image.]  நோ ஃபாஸ்டிங்... நோ ஃபீஸ்டிங்! (பட்டினியும் கூடாது. விருந்தும் வேண்டாம்!)
[You must be registered and logged in to see this image.]  காய்கறி சாலட் அவசியம் சாப்பிட வேண்டும்.
[You must be registered and logged in to see this image.]
  வயிறு முட்டச் சாப்பிட வேண்டாம்.
[You must be registered and logged in to see this image.]  ஆரோக்கியமான சுத்தமான புதிதாகச் சமைக்கப்பட்ட உணவுகளையே உட்கொள்ளுங்கள்.
[You must be registered and logged in to see this image.]  அதிகக் காரம், புளிப்பு, இனிப்பு, கொழுப்பைக் குறையுங்கள்.
[You must be registered and logged in to see this image.]  அதிகம் இனிப்பு இல்லாத கொய்யா, ஆப்பிள், ஆரஞ்சு போன்றவற்றைச் சாப்பிடலாம்.
[You must be registered and logged in to see this image.]  நார்ச்சத்து நிரம்பிய பயறு வகைகள், முளைகட்டிய தானியங்கள், கீரைகள், பழங்கள், வாழைப் பூ, வாழைத் தண்டு, புடலங்காய், முருங்கை, பீன்ஸ், பலாப்பழக் கொட்டை, ஓட்ஸ் போன்றவற்றை அதிகமாகச் சாப்பிடுங்கள்.
தவிர்க்க வேண்டியவை:
[You must be registered and logged in to see this image.] பேக்கிங் சோடா, அஜினோமோட்டொ, சில சாஸ் வகைகளில் நைட்ரோசைமன் என்ற வேதிப்பொருள் அதிகம் இருக்கும். இவற்றைத் தவிர்க்கவும்.
[You must be registered and logged in to see this image.] வறுத்த, பொரித்த உணவுகளை வெறுத்து ஒதுக்கிவிடுங்கள்.  
[You must be registered and logged in to see this image.]
 சமையலில் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயைத் திரும்ப திரும்பப் பயன்படுத்தக் கூடாது
[You must be registered and logged in to see this image.] செயற்கை இனிப்புகள் மற்றும் செயற்கைச் சாயம் ஏற்றப்பட்ட உணவுகளைத் தவிர்த்திடுங்கள்.
சீரான எடை சிறப்பான ஆரோக்கியம்!
[You must be registered and logged in to see this image.]  பாடி மாஸ் இண்டெக்ஸ் மூலம் உடல் எடை ஆரோக்கியமானதா என்று கணக்கிடலாம்.  பி.எம்.ஐ.புள்ளிகள் 25 அல்லது அதற்கு மேல் இருந்தால் ப்ளீஸ்... உஷார்!
[You must be registered and logged in to see this image.]  எடை மிகவும் அதிகமாக இருந்தாலோ அல்லது குடும்பத்தில் யாருக்கேனும் சர்க்கரை நோய் இருந்தாலோ, உடனடியாக சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.  ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.  
[You must be registered and logged in to see this image.]
  இடுப்பு அளவைக் கணக்கிடுங்கள்.  இதனால் கொழுப்பு எவ்வளவு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.  ஆண்களுக்கு எனில் சராசரியாக இடுப்பின் அளவு 40 இன்ச் அளவுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.  பெண்களுக்கு எனில் 35 இன்ச் அளவுக்கும் குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
[You must be registered and logged in to see this image.]  குறைந்த அளவிலான எடைக் குறைப்புகூட கூடுதலான பலனை அளிக்கும்.  உங்கள் எடையை பத்து சதவிகிதம் குறைத்தாலே, அது ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், ரத்தத்தில் கொழுப்பின் அளவைக் குறைக்கவும், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பையும் குறைக்கவும் செய்யும்.  
[You must be registered and logged in to see this image.]  பெரியவர்களுக்கு அதிக அளவு உடல் எடை கூடினால், அது தசை எடையாக இருக்காது கொழுப்பினால்தான் எடை கூடும்.  இதனால் உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகரிப்பது, சர்க்கரை நோய் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு வழி வகுப்பதுடன் மாரடைப்புக்கான வாய்ப்பையும் அதிகரிக்கும்.
இதமான உடற்பயிற்சிகள்
இதய நோயாளிகள் என்று உறுதி செய்யப்பட்டவர்களும், 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே உடற்பயிற்சிகளில் ஈடுபடவேண்டும்.
 [You must be registered and logged in to see this image.]
நடைப்பயிற்சி
வாரத்துக்கு 120 நிமிடங்கள் வேகமாக நடப்பது என்ற உடற்பயிற்சியே பொதுவாக மருத்துவரீதியாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
நடக்கும் ஒவ்வொரு நிமிடமும் வாழ்நாளில் ஒன்றரை நிமிடத்தை அதிகரிக்கிறது. தினமும் 20 முதல் 30 நிமிடம் நடந்தால், ஆண்டொன்றுக்கு சுமார் 4.5 கிலோ வரை கூடுதல் எடையைக் குறைக்க முடியும்.
'நடப்பதெல்லாம்’ நன்மைக்கே...
[You must be registered and logged in to see this image.] இதயம் மற்றும் நுரையீரல் வலுவடையும்.
[You must be registered and logged in to see this image.] ரத்த அழுத்தம் சீராகும்.
[You must be registered and logged in to see this image.] மூளையின் செயல்திறன் அத


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

இதயம் காக்க... எளிய வழிகள் Empty Re: இதயம் காக்க... எளிய வழிகள்

Post by மாலதி Fri Oct 04, 2013 7:48 pm

நடைப்பயிற்சி
வாரத்துக்கு 120 நிமிடங்கள் வேகமாக நடப்பது என்ற உடற்பயிற்சியே பொதுவாக மருத்துவரீதியாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
நடக்கும் ஒவ்வொரு நிமிடமும் வாழ்நாளில் ஒன்றரை நிமிடத்தை அதிகரிக்கிறது. தினமும் 20 முதல் 30 நிமிடம் நடந்தால், ஆண்டொன்றுக்கு சுமார் 4.5 கிலோ வரை கூடுதல் எடையைக் குறைக்க முடியும்.
'நடப்பதெல்லாம்’ நன்மைக்கே...
[You must be registered and logged in to see this image.] இதயம் மற்றும் நுரையீரல் வலுவடையும்.
[You must be registered and logged in to see this image.] ரத்த அழுத்தம் சீராகும்.
[You must be registered and logged in to see this image.] மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.
[You must be registered and logged in to see this image.] மன அழுத்தம் குறையும்.
[You must be registered and logged in to see this image.] நல்ல உறக்கம் கிடைக்கும்.
[You must be registered and logged in to see this image.] சர்க்கரை நோய் குறைகிறது.
[You must be registered and logged in to see this image.] கெட்ட கொழுப்புச் சத்து குறையும்.
[You must be registered and logged in to see this image.] புற்றுநோய்க்கான சாத்தியங்கள் குறையும்.
[You must be registered and logged in to see this image.] மூளை நாள வியாதிகள் வராமல் தடுக்கப்படும்.
ஏரோபிக் பயிற்சி
இதய நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின்பேரில் ஏரோபிக் எக்சர்சைஸ் எனப்படும் விரைவாக நடத்தல், சைக்கிள் சவாரி, நீச்சல், கைப்பந்து, டென்னிஸ் போன்றவற்றைச் செய்யலாம்.
[You must be registered and logged in to see this image.]
  லேசான பயிற்சிகளில் ஆரம்பித்து படிப்படியாகப் பயிற்சி நேரத்தை அதிகரிக்கலாம்.
[You must be registered and logged in to see this image.]  உடற்பயிற்சி செய்யும்போது சிரமம் இல்லாமல் பேச வேண்டும். அப்படி முடியாவிட்டால், உடனடியாகப் பயிற்சியின் அளவு மற்றும் வேகத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
[You must be registered and logged in to see this image.]  இந்தப் பயிற்சிகளால் ரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் அடைப்பு அதிகம் ஆகாமல் தடுக்கப்படும்.
[You must be registered and logged in to see this image.]  அடைப்பு இருந்தால் அதன் அளவும் குறையும்.
[You must be registered and logged in to see this image.]  உடலில் கொழுப்பின் அளவும் குறையும். நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும். இன்சுலின் ஏற்புத்தன்மை அதிகரிக்கும்.
[You must be registered and logged in to see this image.]  உடற்பயிற்சியின்போது நெஞ்சுவலி அல்லது தலைச்சுற்றல் ஏற்பட்டால், உடனடியாகப் பயிற்சியை நிறுத்திவிட்டு மருத்துவரைத் தொடர்புகொள்ளவும்.
சில சந்தேகங்களும், பதில்களும்
மாரடைப்புக்குப் பிறகு உடனே உடற்பயிற்சி செய்யலாமா?
மாரடைப்புக்குப் பிறகு உடற்பயிற்சியை மெதுவாகவும் சீராகவும் கூடுதலாக்கிக் கொள்ளலாம். முதல் ஒரு வார கால ஓய்வுக்குப் பிறகு தினமும் ஐந்து நிமிடங்கள் நடக்க முயற்சிக்கலாம்.
மாரடைப்பு நோயாளிகள் வாகனம் ஓட்டலாமா?
மாரடைப்பு ஏற்பட்ட ஒரு மாத காலத்துக்கு மோட்டார் சைக்கிள், கார் போன்ற வாகனங்கள் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
விமானத்தில் செல்லலாமா?
மருத்துவர் மற்றும் விமான முகவர்களிடம் கலந்து ஆலோசிக்கவேண்டும். சில விமான நிறுவனங்கள் மாரடைப்பு ஏற்பட்ட பிறகு, மூன்று மாதங்கள் வரை நோயாளிகளை வரவேற்பதில்லை.
மாரடைப்புக்குப் பிறகு தாம்பத்திய வாழ்வில் எப்போது ஈடுபடலாம்?
குறிப்பிட்ட கால அளவு ஏதும் இல்லை. சிரமம் இன்றி உடற்பயிற்சி செய்யும் நிலை ஏற்படும் வரை (உதாரணமாக இரண்டு மாடிகளில் ஏறி இறங்குவது) தாம்பத்ய வாழ்வைத் தள்ளிப்போடுவது நல்லது.
மாரடைப்புக்குப் பிறகு எப்போது வேலைக்குத் திரும்பலாம்?
பொதுவாக நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை ஓய்வில் இருப்பது நல்லது. கடினமான வேலை செய்பவர்கள் அலுவலகப் பணி செய்பவர்களைவிட அதிக நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும்.
யோகா
[You must be registered and logged in to see this image.]
ஆரோக்கியமான உடலையும் மகிழ்ச்சியான மனதையும் தருவது யோகாதான். ஆசனங்கள், மூச்சுப்பயிற்சி மற்றும் தியானம் போன்றவற்றை உள்ளடக்கிய யோகாவை முறையாகப் பயின்று பயிற்சி செய்துவந்தால் அற்புதமான நன்மைகளைப் பெறலாம்.
பலன்கள்:
[You must be registered and logged in to see this image.]  உடற்பயிற்சி இல்லாதபோது, உடலில் இதயம், நுரையீரல், கல்லீரல், கணையம் போன்ற பல பகுதிகளுக்கும் போதுமான அளவு ரத்தம் பாயாது. ஆனால் யோகா செய்யும்போது அனைத்து உறுப்புகளுக்கும் சீராக ரத்த ஓட்டம் கிடைக்கும்.
[You must be registered and logged in to see this image.]  சாதாரணமாக நாம் சுவாசிக்கும்போது, நுரையீரலின் கொள்ளளவில் ஆறில் ஒரு பங்கைத்தான் பயன்படுத்துகிறோம். யோகா பயிற்சி செய்யும்போது நுரையீரலின் பெரும்பகுதி பயன்படுத்தப்படுகிறது. இதனால், ஆக்சிஜன் அதிக அளவில் உடல் உறுப்புகளுக்குக் கிடைக்கிறது.
[You must be registered and logged in to see this image.]  இன்றைய சூழலில் டென்ஷன் எனப்படும் மன அழுத்தம் தவிர்க்க இயலாததாகிவிட்டது. ஒரு முறை கோபப்பட்டால் ஏற்படும் ரசாயன மாற்றங்களால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி பல மணி நேரத்துக்குப் பாதிக்கப்படுகிறது. தியானத்தால் மனதை அமைதிப்படுத்த முடியும்.  மனம் மகிழ்ச்சியில் துள்ளும். மனமும் உடலும் கட்டுப்பாட்டில் இருக்கும்.
[You must be registered and logged in to see this image.]  சிரிக்கும்போது கூடுதலாகப் பிராண வாயு உள்ளே இழுக்கப்படுகிறது. கூடுதலாக கார்பன் - டை - ஆக்ஸைடு வாயு வெளியேற்றப்படுகிறது. ரத்தம் நன்கு சுத்திகரிக்கப்படுகிறது. ரத்தம் சீராக உடல் எங்கும் பாய்கிறது. சிவப்பணுக்கள் அதிகரிக்கின்றன. முக்கியமாக இதயம் வலுவடைகிறது.
இதயம் காப்போம்... இன்பம் காண்போம்!
லதானந்த்,
படங்கள்:  தே.தீட்ஷித், பீரகா வெங்கடேஷ்


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum