TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பிரமிட் மர்மங்கள்..!

3 posters

Go down

பிரமிட் மர்மங்கள்..! Empty பிரமிட் மர்மங்கள்..!

Post by அருள் Fri Aug 02, 2013 8:13 am

பிரமிட் மர்மங்கள்..! 21452_205887976240240_404936578_n
 பிரமிட் மர்மங்கள்..!

உலகின் தொன்மையான ஏழு அதிசயங்களில் ஒன்று பிரமிடு. சீனப் பெருஞ்சுவரைப் போலவே நிலவிலிருந்து பார்த்தால் தெரியக் கூடியது. கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு இயற்கைச் சீற்றங்களை எதிர்கொண்டும், அதனால் எந்தவித பாதிப்புகளும் அடையாமல், தொன்மை உலகின் மர்மமான ஒரு சரித்திரத்தின் அடையாளமாக இன்றளவும் நிமிர்ந்து நிற்கிறது பிரமிடு. இந்தப் பிரமிடுகளை உருவாக்கியது யார், என்ன காரணத்திற்காக இவற்றை உருவாக்கினார்கள், இந்தப் புதிரான கட்டிட அமைப்பில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன என்பது பற்றி விஞ்ஞானிகளிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. வரலாற்று ஆய்வாளர்கள் ஒன்றைக் கூற, விஞ்ஞானிகள் அதற்கு எதிராக ஒன்றைக் கூற என்று காலம் காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

’பிரமிடு’ என்றால் பலரும் சொல்வது, ”அது எகிப்தில் இருக்கும் ஒரு கட்டிடம். அதில் அக்காலத்தில் இறந்த மன்னர் போன்றவவர்களின் சடலத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். ‘மம்மி’ என்றழைக்கப்படும் அவற்றின் உடல்கள் இன்னமும் கெடாமல் இருக்கின்றன. அது தவிர பல்வேறு புதையல்களும் அங்கே இருக்கக்கூடும்” என்பதுதான்.

ஆனால் இவை மட்டும் தான் பிரமிடா? வெறும் உடலைப் பாதுகாக்கும் சமாதியாகத் தானா அவ்வளவு பெரிய கட்டிடங்களைக் கட்டியிருப்பார்கள்? – என்ற கேள்விகள் சிந்தனைக்குரியன.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தப் பிரமிடுகளைச் சுற்றி எந்தவிதமான மலைகளோ, பாறைகளோ, கற்குன்றுகளோ கிடையாது. நகரத்தின் அருகில் மட்டுமல்ல, தொலைவிலும் கூட இல்லை. ஒரு புறம் பாலைவனமும், மறுபுறம் கடலும் தான் இந்நகரைச் சுற்றி உள்ளது. அப்படியானால் இந்தப் பிரமிடை எப்படி உருவாக்கியிருப்பார்கள், இத்தனை லட்சம் கற்களை எங்கிருந்து கொண்டு வந்திருப்பார்கள், இவ்வளவு பெரிய உயரத்திற்கு அவற்றை எப்படி எழுப்பியிருப்பார்கள் என்றுதான் வரலாற்றாய்வாளர்களும், விஞ்ஞானிகளும் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த அளவுக்கு அருகில் பூமியில் எங்காவது கற்களைத் தோண்டி எடுத்து இவற்றைக் கட்டியிருப்பார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட, அவ்வாறு தோண்டி எடுத்த இடங்களில் மிகப் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் பலமைல் சுற்றளவிற்கு அப்படி எந்த ஒரு பெரிய பள்ளமும் இல்லை. ஆகவே எப்படி இவற்றை உருவாக்கியிருப்பார்கள் என்று இன்னமும் விஞ்ஞானிகள் மண்டையை உடைத்துக் கொண்டுதான் உள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் மாவீரராக இருந்த நெப்போலியன் இந்தப் பிரமிடுகளில் என்னதான் இருக்கிறது என்று பார்க்க ஆர்வம் கொண்டார். தனி ஆளாக ஓரிரவு முழுக்க இந்தப் பிரமிடில் தங்கினார். மறுநாள் காலை வெளிவந்த அவர், பிரமிப்பின் உச்சியில் இருந்தார். பிரமிடின் பல்வேறு ரகசியங்களைத் தெரிந்து கொண்டிருந்த அவர், அவற்றை முழுமையாக வெளியிடவில்லை. ”நான் சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள்” என்ற கருத்தை மட்டும் தெரிவித்தார்.

ஒரு சிலர் இந்தவகைப் பிரமிடுகள் மனிதர்களால் கட்டப்படவில்லை; மனிதர்களை விடப் பல்வேறு அதிசய ஆற்றல்கள் கைவரப் பெற்ற வேற்றுக் கிரக மனிதர்களால் கட்டப்பட்டவை என்றும் கூறுகின்றனர். இந்தக் கூற்றில் உண்மை இருக்கலாம் என்று கூறும் ரஷ்ய விஞ்ஞானிகள், ஸ்பிங்க்ஸ் பிரமிடைப் போன்ற ஓர் பிரமிடு உருவச்சிலை செவ்வாய்க் கிரக பிரமிடுகளுக்கு அருகே காணப்படுவதாகக் கூறியிருக்கின்றனர். அவர்கள், செவ்வாய்க் கிரகத்தில் சைடோனிக் எனக் குறிக்கப்படும் ஒரு பகுதியில் காணப்படும் பிரமிடு போன்ற அமைப்புகளுக்கும், எகிப்தின் பிரமிடுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கக் கூடும் என்றும் கருதுகின்றனர்.

பிரமிடுகளின் மர்மங்கள் தொடர்கின்றன.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

பிரமிட் மர்மங்கள்..! Empty Re: பிரமிட் மர்மங்கள்..!

Post by அருள் Fri Aug 02, 2013 8:14 am

பிரமிட் மர்மங்கள்..! 998699_203286766500361_2099383773_n
 கிசா பிரமிடு - மறைந்து கிடக்கும் வரலாறு!

புராதனச் சின்னங்களும், அதில் மறைந்து கிடக்கும் வரலாறும் எப்போதும் திகைப்போடு கலந்த ஓர் அமானுஷ்யம்தான். அப்படி ஓர் அமானுஷ்ய வரலாறு புதைந்துகிடக்கும் இடம்தான் எகிப்து.
எகிப்து... இந்தப் பெயரைக் கேட்டவுடனேயே குழந்தைகள் வரை உதட்டில் முனுமுனுக்கும் வார்த்தை மம்மிக்கள். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட மனித உடல் இன்று வரைக்கும் அழுகாமல் அப்படியே இருப்பதன் தொழில்நுட்பம் இன்றுவரை ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிர்தான். இந்தப் புரியாதப் புதிர் சினிமாக்காரர்களையும் விட்டுவைக்கவில்லை. மம்மி, அதைத் தொடர்ந்து மம்மி ரிட்டர்ன்ஸ் பார்ட் ஒன், டூ என்று பாகம் வாரியாக வசூலில் உலகம் முழுவதும் சாதனைப் படைக்க வைத்த இந்த பிரமிடுகளின் வரலாறு இன்றுவரை புதைப் பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு விளங்காத சிம்ம சொப்பணம்தான் என்று சொன்னால் மிகையாகாது.
எகிப்து நகரத்தின் மேற்கு நைல் நதிக் கரையோரம் அமைந்திருக்கும் மயான அமைதியுடன் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தொலைத்த வரலாற்றுச் சுவட்டை தன் மடியில் பிரமிடு வடிவில் தாங்கி நிற்கும் அந்த நகரம்தான் கிசா. இங்குதான் ஏழு உலக அதிசயங்களின் ஒன்றாகக் கருதப்படும் பிரமிடுக்கள் சிறிதாகவும் பெரிதாகவும், மனித உருவிலும் வரலாற்றைத் தாங்கி நிற்கிறது.

எகிப்தை ஆண்ட அரச குடும்பத்தினர் இங்குதான் புதைக்கப்பட்டிருக்கிறான். அவர்கள் மீண்டும் உயிர் பெற்று வருவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களுக்கு தேவையான பொருட்களுடன் இந்தப் பிரமிட்டில் இறந்தவர்கள் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது என்று எகிப்து பிரமிடு குறித்த கதைகளின் பட்டியல் நீள்கிறது. இந்தக் கதைகளில் பல விஷயங்கள் உண்மைதானா? என்று கேட்கும் அதே நேரத்தில் பிரமிட்டை உடைத்துப் பார்த்தால், நாட்டுக்கு நல்லதல்ல என்ற மூட நம்பிக்கை கதைகளும் உலவத்தான் செய்கிறது. கட்டுக்கதைகள், கற்பனைகள் இவற்றிற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கி.மு. 2566ஆம் ஆண்டில் எகிப்திய வம்சத்தின் நான்காவது அரசரான பாரோ குஃபூ, ஜிசாவில் அமைத்த மிகப்பிரம்மாண்டமான பிரமீட்டில்தான் 4500 ஆண்டுகள் கழித்து, பிரமிட்டின் மறைந்துகிடக்கும் ரகசியத்தை முழுமையாக அறிவதற்காக லண்டன் ஆராய்ச்சியாளர் வடிவமைத்த மைக்ரோ ஸ்நேக் என்ற அதிநுட்ப காமிராவுடன் மிகச்சிறிய ரோபோட் ஒன்று பிரமிட்டில் ஒரு சிறுதுளையிட்டு உள்ளே விடப்பட்டிருக்கிறது.

ரோபோவை அனுப்பி பிரமீட்டை ஆய்வு செய்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன் ஆய்வு செய்தது 1993ஆம் ஆண்டு. அப்போது உள்ளே சென்ற ரோபோ பிரமிட்டில் ஒரு கதவு இருப்பதை கண்டுபிடித்தது. அந்தக் கதவு உலோகங்களான ஒரு ஊக்கு மூலம் மாட்டப்பட்டதை கண்டுபிடித்தது. அந்த உலோகம் கதவை திறப்பதற்கு அல்லது மூடுவதற்கு சாவியாக இருக்கலாம் என்பதை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் நம்பினார்கள். இதன்மூலம் 2500 ஆண்டுகளுக்கு முன் எகிப்திய மக்கள் உலோகங்களை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்தார்கள்.

அதற்குப் பிறகு 2002ஆம் ஆண்டு, மற்றுமொரு ரோபோட் பிரமிட்டை படம் எடுத்து அனுப்பியது. அந்தப் படத்தில் பிரமிட்டின் உள்ளே ஒரு அறை இருப்பது போலவும், அந்த அறை ஒரு கல்லினால் அடைத்திருப்பதை உறுதி செய்தது. ஆனால், இந்த இரண்டு ரோபோக்களாலும், உறுதியாக உள்ளே இருப்பன பற்றி தெளிவாக படம் பிடிக்க முடியவில்லை.

ஆனால், கடந்த மாதம் பிரமிட்டின் உள்ளே அனுப்பப்பட்ட இந்த மைக்ரோ ரோபோ முதலில் அளித்த புகைப்படம் தொல்பொருள் ஆய்வாளர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. சிவப்பு நிறத்தில் எகிப்திய எழுத்துக்கள் பிரமிட்டின் சுவற்றில் எழுதப்பட்டிருந்தன. அந்த எழுத்துக்கள் மூலம் பிரமிட்டில் மறைந்துகிடக்கும் ரகசிய முடிச்சுகளை ஒவ்வொன்றாய் அவிழ்க்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கொண்டிருக்க, மிகச் சிறிய அளவில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்களில் என்ன விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை சரியாக கணிக்க முடியவில்லை. அந்த எழுத்துக்கள் மட்டும் புரிந்திருந்தால், பிரமிட்டின் முழு ரகசியமும் உலககுக்கு தெரிந்திருக்கும் என்கிறார்கள் அகழ்வாராய்ச்சியாளர்கள். எப்படியிருந்தபோதிலும் அந்த மைக்ரோ ரோபோ அனுப்பிய புகைப்படங்களால், பிரமிட்டின் வடிவத்தை ஓரளவிற்கு கணிக்க முடிந்திருக்கிறது.

பிரமிட்டில் ராஜாவுக்கு தனி அடுக்கு காணப்படுகிறது இதில் இருந்து வெளிவரும் இரண்டு இணைப்பு பிரமிட்டின் வெளி வரை நீட்டிக்கொண்டிருக்கிறது. ஒருவேளை காற்று செல்வதற்கான வழியாக இது இருந்திருக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. ராணிக்கு என்று தனியாக ஒரு அடுக்கும் இந்த பிரமிட்டுக்குள் அமைந்துள்ளது. இந்த அடுக்கில் இரண்டு சுரங்கப்பாதைகள் இணைக்கப்பட்டு, அதை இரண்டு கல் கதவுகளால் மூடப்பட்டுள்ளது. ஆய்வுகள் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆய்வு சரியான கோணத்திலும், ரோபோ பழுதாகாத பட்சத்தில் கண்டிப்பாக பிரமிடு எந்த ஆண்டு கட்டப்பட்டது, கற்களின் தன்மை, எவ்வளவு நாட்களில் இந்த பிரமிடு கட்டப்பட்டிருக்கலாம் போன்ற உறுதியான தகவல்கள் கிடைக்கும். தற்போது, பிரமிட்டின் அமைப்பு ஓரளவிற்கு ரோபோவின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல புதிர்கள் நிறைந்திருக்கும் இந்த பிரமிட்டின் வரலாற்றுக் கதவை திறப்பதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை என்கிறார்கள் அகழ்வாராய்ச்சியாளர்கள்.

எகிப்தின் பண்டைய பொருட்கள் விவகாரத் துறை அமைச்சர் சாகி ஹவாஸ் புகைப்படங்களை பார்த்தபோது, ராணியின் அறைக்குச் செல்லும் சுரங்கங்களின் அமைப்பை பார்க்கும்போது, இந்தச் சுரங்கம் வேறொரு வெளி உலகிற்குத் தெரியாத, மற்றுமொரு பிரமீட்டிற்கு இட்டுச் செல்லுமோ? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். ஆனால், அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எகிப்திய ஆராய்ச்சியாளர், கேட் ஸ்பென்ஸ் பிரமிட்டில் உள்ள சுரங்கங்கள் நட்சத்திரங்களோடு தொடர்புடையவை என்றிருக்கிறார்.

பிரமிடு குறித்து ஆராய்ச்சியாளர்களிலிருந்து ஆள்பவர்கள் வரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிந்தனை. உண்மையில் பிரமிட்டில் மறைந்து கிடக்கும் உண்மை என்ன?... ஒருவேளை அந்தக் கேள்விக்கான விடை இன்னும் ஒருசில வாரங்களிலோ, அல்லது ஒரு சில மாதங்களிலோ கிடைக்கும்போது, அந்த உண்மை ஆதிமக்களின் கலாசாரத்தை பறைசாற்றுமா? அல்லது ஒரு இனமே கூண்டோடு அழிந்துபோன வரலாற்றை வெளிக்கொணருமா.. அல்லது கோடி கோடிக்கணக்கான தங்கப் புதையலை வெளிக்கொணருமா? இந்த எல்லாக் கேள்விகளுக்கும், விடை பிரமிட்டின் அந்த மர்மக் கதவுக்குப் பின்னால்தான் மறைந்துகிடக்கிறது. எப்போது திறக்கும் கதவு?
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

பிரமிட் மர்மங்கள்..! Empty Re: பிரமிட் மர்மங்கள்..!

Post by Muthumohamed Fri Aug 02, 2013 10:07 pm

ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம் 
Muthumohamed
Muthumohamed
பண்பாளர்
பண்பாளர்

Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad

Back to top Go down

பிரமிட் மர்மங்கள்..! Empty Re: பிரமிட் மர்மங்கள்..!

Post by Tamil Thu Apr 10, 2014 7:45 am

அருமையான் கட்டுரை
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

பிரமிட் மர்மங்கள்..! Empty Re: பிரமிட் மர்மங்கள்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum