TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:01 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அன்புடன் அந்தரங்கம்!

2 posters

Go down

அன்புடன் அந்தரங்கம்! Empty அன்புடன் அந்தரங்கம்!

Post by logu Sun Jul 07, 2013 7:27 am

அன்புள்ள சகோதரிக்கு —
நான் 34 வயதுபெண். +2 படித்துள்ளேன். தம்பி ஒருவன், அம்மா, அப்பா என்று அளவான, வளமான குடும்பம். எனக்கு எட்டு வருடங்களுக்கு முன் திருமணம் ஆனது. கொஞ்சம் கூட பொருத்தமில்லா வாழ்க்கை. கணவருக்கு குடி, சிகரட், சீட்டு என்று எல்லா கெட்ட பழக்கங்களும் இருந்தன. நிலையான புத்தி இல்லை. சந்தேகம், அடி, உதை. என்னுடன் பேசுவதில்லை. தாழ்வு மனப்பான்மை. ஹிஸ்டீரியா மாதிரி நடந்து கொள்வார். இதனால் பிரிந்து விட்டேன்.
இரண்டாவது திருமணத்திற்கு ஏற்பாடு செய்து, 50 மாப்பிள்ளைகளாவது என்னைப் பெண் கேட்டு வந்திருப்பர். நான் கருப்புதான். ஆனால், லட்சணமாக இருப்பேன்.
என் அப்பா நல்லவர், திறமையானவர். ஆனால், குடிப்பழக்கம் காரணமாக மூன்று வருடங்களுக்கு முன் ஹார்ட் அட்டாக்கில் இறந்தார். தம்பிக்கு கல்யாண வயசாச்சு! இந்த சூழ்நிலையில், 10 வயது பெண் குழந்தை உள்ள ஒருவர் ஜாதகம் வந்தது. பொருத்தம் பார்த்ததில் எல்லாம் சரியாக இருந்தது. ஆள் வைத்து விசாரித்த போதும் நல்ல விதமாக கூறினர்.
பெண் பார்த்த போது, ஒரு மணி நேரம் பேசினோம். அவரைப் பற்றி, குழந்தையைப் பற்றி, முதல் மனைவி இறந்தது, எதிர்காலம், நிகழ்காலம் என்று அனைத்தும் பேசினோம். அவருக்கு இரண்டு அண்ணன். ஒரு அக்கா. அவர்கள் சொத்து விஷயத்தில் இவரை ஏமாற்றி விட்டதாக கூறினார். முதல் மனைவி இறந்த சோகத்தில் இவர் இருந்த போது, பங்கு குறைவாகக் கொடுத்ததாகவும், குழந்தையை மூன்றரை வயதில் இருந்து அவரே கவனித்து வருவதாகவும், ஐந்து வருடமாக ரொம்பக் கஷ்டப்பட்டதாகவும் கூறினார்.
ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணினோம். கல்யாணம் நடந்து இரண்டு நாள் தான் சந்தோஷம். மூன்றாவது நாளிலிருந்து குடி ஆரம்பித்தது. திடீரென்று இரவு நேரங்களில் வீட்டுக்கே வருவதில்லை. பகலில் வெளியே போனால், மறுநாள் காலை தான் வருவார். இப்படியே ஒரு மாதம் போனது.
இரவு வராமலிருப்பதை பற்றி கேட்டால் பிரச்னைதான். அடி, உதை சித்ரவதை. "அப்படித்தான் போவேன், நீ யார் கேட்பதற்கு? நீ! எங்கிருந்தோ வந்த நாய்; நீ யார் என்னை கேள்விகேட்க! என் வீடு, என் சவுகரியம். என் இஷ்டத்துக்கு வருவேன், போவேன். நீ கேட்கக் கூடாது. உன் கூட குடும்பம் நடத்த உன்னை கல்யாணம் பண்ணலை. வேலைக்காரியா இருக்கத் தான். என் பிள்ளைக்கு சமையல் செய்து போட, அவளைக் கவனிக்கத் தான் உன்னை கட்டினேன்...' என்றார்.
என் சொந்தங்களுக்கு ஓரளவு அவர் குணம் புரிந்தது. "அவர் எங்கேயோ போகட்டும், வரட்டும். ஆடி அடங்கட்டும். விட்டு விடு, கண்டுக்காதே. வீட்டுக்கு சாமான்கள் வாங்கிப் போட்டால், சமையல் செய். அவனையும் சாப்பிடச் சொல். நல்லா கவனி. கண்டிப்பா மாறுவான்...' என்று கூறினர்.
அவருடைய உண்மையான சுயரூபம் இது தான்—
முதல் மனைவி இருக்கும் போதே! குடும்ப நண்பர் என்று சொல்லி ஒரு குடும்பத்துடன் பழகி, அந்தப் பெண் இவருடன் அந்தரங்கத் தொடர்பு வரை நெருங்கி விட்டது.
இதை முதல் மனைவி கேட்டதால் இவர் திட்ட, தற்கொலை செய்து கொண்டாள். பின் அந்தப் பெண் தாராளமாக வந்து போய் இருக்கிறாள். அவருடைய புருஷனுக்கு விஷயம் தெரிந்து அவன் கேட்கப் போக, இவர், அவனை அடித்து, உதைத்து விட்டார். தன் மனைவியை விட்டு அவன் பிரிந்து விட்டான். இப்போ அந்தப் பெண் வேறு ஊரில். கல்யாண வயதில் ஒரு மகன், அம்மா, தம்பி என்று சொந்தங்களுடன் இருக்கிறாள். இவர் அனைவருக்கும் தெரிந்தே அங்கு போக வர இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் என்னைக் கல்யாணம் செய்து கொண்டுள்ளார். அவர் திருந்தவும் இல்லை; திருந்த முயற்சிக்கவும் இல்லை. இனி மேல் அந்த உறவை விடுவதாகவும் இல்லை. இப்போ ஒருநாள் விட்டு ஒரு நாள் , அவளைத் தேடி அவள் ஊருக்கே போ# காலையில் வீட்டுக்கு வருகிறார்.
நானும் பொறுமையிழந்து கேட்ட போது, "புதுசா எனக்கு இன்னைக்கு உறவு கிடைச்சிருக்கறதால அவளை விட முடியாது. அவங்களுக்கு நான் நன்றிக்கடன் செய்யறேன். காலத்திற்கும் இப்படித்தான் இருப்பேன். உன்னால் என்ன செய்ய முடியும்! பார்த்துக்கிட்டு சும்மா இரு. உன்னை எனக்குப் பிடிக்கலை...' என்று கூறுகிறார்.
என் வாழ்க்கையை நாசம் பண்ணின இவங்க ரெண்டு பேரையும் அவமானப்படுத்தி போலீசில் புகார் கொடுக்கப் போகிறேன்.
முடிவு எதுவாக இருந்தாலும், சந்திக்கறது என்ற தீர்மானத்துடன் இருக்கிறேன். எல்லாரையும் முட்டாளாக்கின இவரை சும்மா விடக் கூடாது. இது தான் என் முடிவு.
இப்படிக்கு,
பெயர் வெளியிட விரும்பாத வாசகி.


அன்பு சகோதரிக்கு —
உன் கடிதம் கிடைத்தது. இரண்டாவது மணவாழ்க்கையும் தோல்வியுற்றது மிகவும் வருந்தத்தக்கது தான். குடிகாரராக இருந்தாலும், நல்ல குணமுடையவராக இருந்தால், நம்மால் முடிந்த அளவுக்குத் திருத்த முயற்சிக்கலாம் அல்லது குடியை மறப்பதற்கான சிகிச்சைக்கு அவரைச் சம்மதிக்க வைக்கலாம்.
ஆனால், முதல் மனைவியின் தற்கொலைக்குக் காரணமாயிருந்தது மட்டுமன்றி, தற்போது வேறு ஒரு பெண்ணுடன் ரகசியத் தொடர்பும் வைத்து, கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொள்ளும் மனிதருக்கு, எந்த சிகிச்சையும் பலனில்லை.
எனக்கு ஒன்றுதான் புரியவில்லை. அந்த மனிதனுக்கு முதல் மனைவி உயிருடன் இருக்கும் போதே - நண்பனின் மனைவியுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், அதைக் கேட்டதால் இந்த மனிதன் தன் மனைவியைத் திட்ட, அவள் தற்கொலை செய்து கொண்டதாகவும் எழுதியிருக்கிறாய்.
அப்படியானால், இவன் எதற்காக, இல்லை யாருக்கு பயந்து இரண்டாம் தாரமாக உன்னை மணக்க வேண்டும்? மகளுக்கு சமைத்துப் போட ஒரு சமையற்காரியை வேலைக்கு அமர்த்தியிருக்கலாமே... தனக்குத் தானே விலங்கு போட்டு, பூட்டிக் கொண்டது போல, உன்னை எதற்காக மணம் புரிந்தான்; யாராவது வற்புறுத்தினரா?
எதுவாயினும் சகோதரி, உன் ஆத்திரம் நியாயமானது. ஆனால், அதற்காக போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் என்னவென்று புகார் கொடுப்பாய்? உன் கணவன், அவளுடன் சேர்ந்து வாழ்வதாக நீ புகார் கொடுத்தாலும், அதற்கு ஆதாரம் எங்கே இருக்கிறது... உன்னிடம் சொன்னது போலவே, போலீசிலும் உன் கணவன் சொல்வான்...
"அவங்களுக்கு நான் நன்றி கடன்பட்டிருக்கேன். காலத்துக்கும் அவங்க குடும்பத்துக்கு உழைப்பேன். அது இவளுக்குப் பிடிக்கலே. சந்தேகப்பட்டு, உங்க கிட்ட புகார் கொடுத்திருக்கா. இப்படித்தான் முதல் புருஷனையும் கேவலப்படுத்தியிருப்பா போல... யார் கண்டது...!' என்பான்.
நன்றாக கவனி. அவன் வரையில் அவனது முதல் மனைவி இறந்து விட்டாள். அவள் உயிரோடு வந்து அவன் செய்த அக்கிரமங்களைச் சொல்லப் போவதில்லை. அவள் தற்கொலை செய்து கொண்டாளா அல்லது இயற்கையாகச் செத்தாளா என்பது கூட அதிகம் வெளியே தெரியாமல் இருக்கலாம்.
ஆனால், உன் முதல் கணவன் உயிரோடு இருக்கிறான். உங்களுக்குள் ஏற்பட்டுள்ள தகராறு கேள்விபட்டு, எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுவது போல, அவனும் உன் மேல் ஏதும் பழி சொல்லாமல் இருக்க வேண்டும். ஆதலால் நீ பேசாமல் உன் பிறந்த வீட்டுக்குப் போ. ஒரு வக்கீலைப் பார்த்து, விவாகரத்து வாங்கு. நடுவில் எத்தனை இடைஞ்சல்கள் வந்தாலும் தயங்காதே!
அனாவசியமாய் பழி வாங்கும் உணர்ச்சி வேண்டாம். முள் மீது போட்ட புடவையை கிழியாமல் எப்படி எடுக்கலாம் என்று பார்ப்பது தான் புத்திசாலித்தனம். பழிக்குப் பழி, சவாலுக்கு சவால் என்று கிளம்பினால், வீணாகச் சேற்றில் காலை வைத்த கதையாகி விடும்.
ஏனெனில், உன்னுடைய பழைய கணவனை நீ நியாயமானக் காரணங்களுக்காகப் பிரிந்திருந்தாலும், உன்னை அவமானப்படுத்துவதற்காகவாவது பழைய கதையைத் தோண்டி எடுத்து, கண், காது, மூக்கு வைத்து உன்னை கதற அடிப்பர்.
பிடிக்கவில்லையா... விலகு. மவுனமாய் புறக்கணி. பேசப்பேச உன் பக்கம் பலவீனமாகும். நீ பேசாமல் இருக்க இருக்க என்ன செய்யப் போகிறாயோ என்கிற பயம் எதிராளிக்குள் இருந்து கொண்டே இருக்கும். அந்த பயமே அவனுக்கு ஆயுள் தண்டனை.
விவாகரத்துக்கு காரணம் கேட்டால் உள்ளதை வளர்த்தாமல் சொல்...
"குடிச்சிட்டு வந்து அடிக்கறாரு; சாப்பாட்டுக்கு காசு தர மாட்டேங்கறாரு; அடி தாங்க முடியலே; அவருக்கு நிறைய பொண்ணுங்க சகவாசம் இருக்கு; அங்கேயே போகட்டும் என்னை விட்டுடட்டும்...'
விவாகரத்து கிடைத்ததும், உன் எதிர்காலத்துக்கு ஏதாவது நல்ல தொழில் கற்று, முன்னுக்கு வர முயற்சி செய்!
இப்படிக்கு அன்புடன்,
— சகுந்தலா கோபிநாத்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

அன்புடன் அந்தரங்கம்! Empty Re: அன்புடன் அந்தரங்கம்!

Post by Tamil Tue Jun 24, 2014 6:57 am

அன்புள்ள அம்மா அவர்களுக்கு —
[You must be registered and logged in to see this image.]
எனக்கு வயது, 30; திருமணம் ஆகி, 10 ஆண்டுகள் ஆகின்றன. கணவருக்கு ஆண்மைக் குறைவு என்பதை, திருமணமான அன்றே தெரிந்து கொண்டேன். அதிலிருந்து, அவர், என்னோடு உறவு கொள்வதில்லை; சுய இன்பம் செய்து வந்தார். இருந்தும், அவருடனே வாழ்ந்து வந்தேன். ஆனால், அவர் தன்னுடைய இந்த குறையை தீர்க்க, எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால், எங்களுக்குள் சண்டை அதிகமானது. வீட்டு பெரியவர்களுக்கு தெரிந்து, விவாகரத்து செய்ய சொல்லி என்னை வற்புறுத்தினர். ஆனால், அவர் மேல் கொண்டுள்ள அன்பு காரணமாக, ஒப்புக் கொள்ளவில்லை. அவரை, 'கவுன்சிலிங்' வர சொன்னேன்; மறுத்து விட்டார். தானாக சரியாகும் என்று கூறி, தன் வழியிலேயே, திருப்தி காண்கிறார். இதனால், என்னுடைய ஒவ்வொரு இரவும் கண்ணீரில் கரைகிறது. அவரிடம் பேசினால், 'இதுமட்டும் தானா வாழ்க்கை' என்று கூறுகிறார். இதனிடையில், என்னை செயற்கை முறையில் கருத்தரிக்க கூறினார். முதலில் மறுத்தாலும், பின் ஒரு குழந்தை வந்தால், அவர் என்மேல் அன்பு செலுத்துவார் என்று எண்ணி, சம்மதித்தேன். இப்போது, எனக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. ஆனால், அவர் மட்டும் மாறவே இல்லை.
தற்போது, நான், அவருக்கு ஒரு வேலைக்காரி மாதிரி தான் உள்ளேன். வீட்டை பராமரித்து, சமைத்து போட்டு, என் மகனை வளர்ப்பது மட்டும் தான் வேலை. எனக்கு என்று எந்த ஆசையும், எதிர்பார்ப்பும் இருக்கக் கூடாது என்பது தான் அவர் ஆணை. இதில், எங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். இருந்தும் அவரை விட்டு விலக எனக்கு மனமில்லை. என் தலையெழுத்து, இவ்வளவுதான் என்று, மனதை சமாதானப்படுத்தி வாழ துவங்கி விட்டேன். அவருக்கும், எனக்கும் எந்த அன்னியோன்யமும் இல்லை.
இப்போது என் பிரச்னை என்னவென்றால், என் தாம்பத்திய ஆசையை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒவ்வொருவரையும் பார்க்கும் போதும், என் மனதில் எழும் ஏக்கத்திற்கு அளவே இல்லை. எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனையை கொடுத்தாய் என்று, வேண்டாத தெய்வம் இல்லை. இப்போது இரண்டு ஆண்டுகளாக நானும் அவர் போலவே இன்பம் காண பழகி விட்டேன். இது, என் கோபம், ஏக்கத்தை குறைக்கும் வடிகாலாக இருக்கிறது. வேலைக்கும் சென்று பார்த்தேன். அங்கு மற்ற பெண்கள் அவர்கள் மணவாழ்க்கையைப் பற்றி பேசுவதால், என் வேதனை அதிகமாகிறது.
என் பிரச்னைகளை யாரிடமும் சொல்ல முடியாமல், மனதுக்குள் அழுகிறேன். என் கணவரோ... நம் அருகில், ஓர் உயிருள்ள ஜீவன் இருக்கிறது என்ற எண்ணம் இல்லாமல், உறங்குகிறார். என்னை பார்த்தாலே குப்புறப்படுத்து தூங்க ஆரம்பித்து விடுவார். இனி, அவரை மாற்ற முடியாது என்று தீர்மானமாக தெரிந்து விட்டது.
சுய இன்பம் காணும் பழக்கம் சரியா, நான் இதை எப்படி மாற்றிக் கொள்வது, என்னுடைய தாம்பத்திய ஆசைக்கு வடிகால் எது? என் கணவருடன் பேசுவது, கவுன்சிலிங் போவது, அவருக்கு பிடித்த மாதிரி நடப்பது, பெரியவர்களிடம் யோசனை கேட்பது, கோவிலுக்கு போவது என, இதைத் தவிர, வேறு ஆலோசனை கூறுங்கள் அம்மா. ஏனென்றால், பத்து ஆண்டுகளாக இவை அனைத்தும் செய்து, நான் தோற்றுவிட்டேன். அவர் மேல் உள்ள அன்பு மட்டும் இன்னும் மாறவில்லை. எனக்கு நிம்மதியாக வாழ வழி சொல்லுங்கள் அம்மா.
— இப்படிக்கு
உங்கள் அன்பு மகள்.

அன்புள்ள மகளுக்கு —
உன் கடிதம் கிடைத்தது; இப்பழக்கம் உள்ளவர்கள், ஓரின சேர்க்கையாளர்களைப் போல், அப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுவதால், அவர்களுக்கு தாம்பத்யம் இனிக்காது. சுயபழக்கங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலானோர் ஆண்மை குறைந்தவர்கள் அல்ல.
உன் கணவரை ஒரு நல்ல செக்ஸாலஜிஸ்டிடம் கூட்டிச் சென்று, ஆலோசனை வழங்க சொல்லலாம். அவர் மறுத்தாலும் பிடிவாதமாய், அவரை மருத்துவரிடம் கூட்டிச் செல்வது உன் சாமர்த்தியம். ஆண்மை எழுச்சிக்கு மிகச் சிறந்த மருத்துவம் அலோபதியிலும், சித்தாவிலும், ஹோமியோவிலும் உள்ளன. கவுன்சிலிங் போனால், உன் கணவர் நிச்சயமாக இப்பழக்கத்தை மறப்பார்.
மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நீயே கூட, உன் கணவருக்கு தொடர்ந்து கவுன்சிலிங் கொடுக்கலாம். இப்பழக்கம் உள்ளவர்கள் பெரும்பாலானோர் கற்பனைவாதிகள். மனதிற்கு பிடித்த பேரழகிகளுடன் தாம்பத்யம் மேற்கொள்வது போல், கற்பனை செய்து, இதில் ஈடுபடுவர். இதே கற்பனையை, தாம்பத்யம் செய்வதில் திருப்பி விடலாம்.
செயற்கை கருத்தரிப்பு மூலம், உன் கணவரின் குழந்தைக்கு தாயாகி உள்ளாய். தாம்பத்ய சுகம் தராத கணவனை மன்னித்து, அவன் மேல் பாசத்தை பொழியும் உனக்கு உண்மையில் பெரிய மனசு. கணவனின் குறையை காரணம் காட்டி, திருமண பந்தம் மீறிய உறவில் ஈடுபடாமல் இருப்பது, உன் மனக்கட்டுப்பாட்டை காட்டுகிறது.
மகளே... கடந்த இரண்டு ஆண்டுகளாக உனக்கும் இப்பழக்கம் வந்து விட்டதாக எழுதியிருக்கிறாய். இப்பழக்கத்தால், அவயத்தில் காயம் அல்லது நோய் தொற்று ஏற்படக்கூடும். மற்றபடி, இதில் பெரிய தப்பு ஏதுமில்லை. இப்பழக்கத்தால், கணவரின் மேல் கோபம் குறைந்து, உனக்குள் ஒரு அமைதி ஏற்படுவதாக எழுதியிருக்கிறாய். இது ஒரு தற்காலிக நிவாரணம் தான்.
ஆனால், ஒன்றை மறந்து விடாதே... கடவுள் நம் அவயங்கள் ஒவ்வொன்றயும், வெவ்வேறு செயல்களை செய்வதற்காகவே படைத்திருக்கிறார். அதை நாம் நம் விருப்பத்திற்கு மாற்ற நினைத்து, இயற்கைக்கு புறம்பாக நடப்பது, மேலும் பிரச்னைக்கு தான் வழி வகுக்கும்.
அதனால், உன் கணவனிடம் சண்டையிடுவதற்கு பதில், சமாதான கொடியை தூக்கு. சண்டையும், அழுகையும் உன் பிரச்னைக்கு தீர்வாகி விடாது. அதற்கு பதில், உன் கணவரிடம் நட்பு கொண்டாடு; அவர் ரசனை அறிந்து பேச்சுக் கொடு, அது எதைப் பற்றியதாகவும் இருக்கட்டும்.
உன்னிடம் எல்லாவற்றையும் மனம் விட்டு பேசும் அளவுக்கு முதலில் அவர் மனதில் இடம் பிடி. அலுவலகம் முடிந்ததும் சந்தோஷமாக வீட்டிற்கு ஓடிவரும் மனநிலைக்கு உன் கணவரை கொண்டு வா. பின், உன் தேவைகளை, கஷ்டங்களை, மிக மென்மையாக எடுத்துக் கூறி, மருத்துவரிடமோ, கவுன்சிலிங்கோ அழைத்துச் செல்.
மருத்துவம் மேற்கொண்ட பின், நீயும், உன் கணவனும் இரண்டாவது தேனிலவுக்கு செல்ல, 'அட்வான்ஸ்' வாழ்த்துகள்.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum