TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கலப்பட பால் விற்பனை: மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு! -

2 posters

Go down

கலப்பட பால் விற்பனை: மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு! -  Empty கலப்பட பால் விற்பனை: மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு! -

Post by அருள் Tue Jul 02, 2013 10:05 pm

பாலில் கலப்படம் செய்வது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இது மிகத் தீவிர மற்றும் ஆபத்தான பிரச்னை என்றும், நாடு முழுவதுமே பாலில் கலப்படம் செய்து விற்கப்படுகிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை என்றும் கூறி, இதனை தடுக்க மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
கலப்பட பால் விற்பனை: மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு! -  Ju-1-ADULTERATED_MILK-1
உலகின் பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடாக இந்தியா விளங்குகிறது. இந்திய நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமல்ல, நாட்டு மக்களின் ஆரோக்கியத்தையும் நிர்ணயிக்கக்கூடிய காரணிகளில் ஒன்றாக பால் உற்பத்தி உள்ளது. ஆனால், அந்தப் பாலில் 68 சதவிகிதம் கலப்படம் உள்ளது என்கிற செய்தி வெளியாகி இந்திய மக்களையே பதற வைத்தது.
இந்திய உணவு மற்றும் தர நிர்ணய அமைப்பு, பாலில் கலப்படம் குறித்து தேசிய அளவிலான ஆய்வு ஒன்றை கடந்த ஆண்டில் நடத்தியது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்த ஆய்வில்தான் நுகர்வோரிடம் சென்றடையும் பாலில் 68 சதவிகிதம் கலப்படம் இருந்தது கண்டறியப்பட்டது. 33 மாநிலங்களில் 1,791 பால் மாதிரிகள் எடுக்கப்பட்டன. அதில், 1,228 மாதிரிகள் இந்திய தர நிர்ணய மதிப்பீடுகளுக்கு ஒப்பாக இல்லை.
மிசோரம், ஒடிசா, ஜார்கண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் விற்கப்படும் பாலில் நூறு சதவிகித கலப்படம் உள்ளது என்ற செய்தி அம்மாநில மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அதற்கு தமிழகம் கொஞ்சம் பரவாயில்லை. இங்கு உற்பத்தியாகும் பாலில் 12 சதவிகிதம்தான் கலப்படம் இருப்பது தெரிய வந்தது. ஆந்திரா பாலில் 6 சதவிகிதமும், டெல்லியில் 76 சதவிகிதமும் கலப்படம் இருந்ததாம். புதுச்சேரி மற்றும் கோவா மக்களுக்கு மட்டும்தான் சந்தோஷமான செய்தி. அந்த இரு மாநிலங்களிலும் நூறு சதவிகித தூய்மையான பால் தயாராகிறது என்று ஆய்வு குறிப்பிட்டு இருந்தது.
பாலில் உள்ள நடுநிலைக் காரணிகள், அமிலத் தன்மையின் சதவிகிதம், ஹைட்ரஜன் பெராக்சைடு, கார்பனேட்டர், சர்க்கரை, ஸ்டார்ச், யூரியா, உப்பு, சோப்பு, தண்ணீர், கொழுப்பு, கொழுப்பு அல்லாத திடப்பொருட்கள் (Solid Not Fat – SNF), பதப்படுத்தப்பட்ட பால் பவுடர், பார்மலின் மற்றும் தாவரக் கொழுப்பு ஆகியவை கலந்திருக்கும் விகித அடிப்படை போன்றவை கலப்படத்தை அறியும் காரணிகளாக எடுத்துக் கொள்ளப்பட்டன.
கிராமப்புறங்களில் 83.2 சதவிகித மாதிரிகளும், நகர்ப்புறங்களில் 68.6 சதவிகித மாதிரிகளும், நேரடியாக விற்பனை செய்யப்படும் பாலில் இருந்து எடுக்கப்பட்டவை. பால் மாதிரிகளில் அரசு மற்றும் தனியார் பால் இரண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது இந்திய அளவில் 31.5 சதவிகிதம் தூய்மையும், 68.5 சதவிகிதம் கலப்படமும் பாலில் இருப்பது ஆய்வில் தெரியவந்தது. மேலும் தமிழகத்தில் 74 மாதிரிகள் எடுக்கப்பட்டன. அதில், ஒன்பது மாதிரிகளில் கலப்படம் இருந்துள்ளது.
கலப்படத்துக்கு என்ன காரணம்?
இதற்கிடையில் பாக்கெட்டாக அல்லாமல், நேரடியாக விற்கப்படும் பாலில்தான் அதிகக் கலப்படம் உள்ளதென்று தெரிய வந்துள்ளது. குளம், குட்டை, ஆறு, ஏரி, போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் எடுத்து பாலில் கலக்கப்படுவதால், அதில் சோப்பு கலந்துள்ளது. பால் கெட்டியாக தெரிய வேண்டும் என்று குளுக்கோஸ், பால் பவுடர், மாவுப் பொருட்கள் ஆகியவை கலக்கப்படுகின்றன.
மேலும் மாட்டுத் தீவனத்திற்கு பற்றாக்குறையும், அதில் கலப்படமும் அதிகரித்துள்ளன. இதனால் மாடுகள் குறைவாக பால் சுரக்கின்றன. அதிகமாகப் பால் தர வேண்டும் என்பதற்காக மாடுகளின் மடியில் ஆக்சிடோசின் எனப்படும் ஹார்மோன் ஊசி போடப்படுகிறது. இதுவும் கலப்படங்களுக்கான காரணிகளில் முக்கியமானதாகும். கலப்படப் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிற பால்கோவா, சீஸ், ஐஸ்க்ரீம், தயிர், மோர், மைசூர்பா, லெஸ்ஸி, பன்னீர், குலோப்ஜாமூன், பால் பவுடர், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்களும் கலப்படம் மிகுந்ததாகவே உள்ளன.
கலப்பட பால் விற்பனை: மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு! -  Ju-2-milk-adultration-2
இது போன்ற கலப்படப் பால் பலவிதமான நோய்களையும் உருவாக்குகிறது.கலப்படப் பால் அருந்துவதால் வயிற்றுப் போக்கு, வாந்தி உள்ளிட்ட கோளாறுகள் உண்டாகின்றன. செரிமானக் கோளாறு, இதயக் கோளாறு, சிறுநீரகக் கோளாறு போன்ற உடல் உறுப்புகளைப் பாதிக்கக்கூடிய நோய்கள் வருகின்றன. புற்றுநோய் போன்ற அபாயத்திற்கும் வித்தாகிவிடக் கூடிய ஆபத்தும் உள்ளது” என்று எச்சரித்தார்கள் மருத்துவர்கள்
இந்நிலையில்தான் உத்தரகண்ட்டை சேர்ந்த, சுவாமி அச்சியுதானந்த் தீர்த் உள்ளிட்ட சில சமூக ஆர்வலர்கள், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில் “பொதுமக்கள் பயன்படுத்தும் பாலில், கலப்படம் செய்யப்படுகிறது. செயற்கை முறையிலும் பால் தயாரிக்கப்படுகிறது. இதை பயன்படுத்துவோருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.”என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.இதையடுத்து மத்திய அரசு தாக்கல் செய்தபதில் மனுவில்தான் மேலே தெரிவித்துள்ள விவரங்கள் வெளியானது.மேலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட சில மாதிரி பால்களில், குளுகோஸ், தண்ணீர் உள்ளிட்டவை, சேர்க்கப்படுகின்றன. பாலில் உள்ள அழுக்கை நீக்குவதற்காக, டிடெர்ஜென்ட் பவுடர்கள் சேர்க்கப்படுகின்றன.என்றெல்லாம் மத்திய அரசின் மனுவில் கூறப்பட்டு இருந்த நிலையில்  இன்றைய விசாரணையின் முடிவில் ,கலப்படம் செய்யப்பட்ட பால் விற்பனை செய்வதற்கு சுப்ரீம் கோர்ட் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. மேலும், இதனை தடுத்து நிறுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது மிகவும் முக்கியமானது. இது நாடு முழுவதும் நடக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது..
மேலும் பாலில் கலப்படம் செய்வது கவனிக்கப்பட வேண்டிய பிரச்னை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், பாலில் கலப்படம் செய்யப்படுவதைத் தடுக்க எந்த விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது குறித்து ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தர்காண்ட் மற்றும் தில்லி அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.அடுத்த வழக்கு விசாரணையை ஜூலை 31க்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கேட்கக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.
அது சரி..பாலில் கலப்படத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது?
பாலில் தண்ணீர் கலந்திருப்பதைக் கண்டுபிடிக்க வழவழப்பான செங்குத்தான தரையில் பாலை ஒரு சோட்டுவிட்டால் எந்த அடையாளமும் இல்லாமல் வழிந்தோடும். இதுவே தண்ணீர் கலக்காத பால் என்றால், வெள்ளைக் கோடிட்டதுபோல் வழியும் அல்லது லேக்டோ மீட்டர் மூலம் கண்டறியலாம். லேக்டோ மீட்டர் 1.026 எண்ணுக்குக் கீழே காட்டினால் அந்தப் பாலில் தண்ணீர்க் கலப்படம் உறுதி. அது மட்டுமின்றி பாலைக் காயவைத்து ஆற்றும்போது அதிகமாக நுரை பொங்கி வழிந்தால் சோப்புக் கலக்கப்பட்டிருக்கும்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கலப்பட பால் விற்பனை: மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு! -  Empty Re: கலப்பட பால் விற்பனை: மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு! -

Post by Muthumohamed Tue Jul 02, 2013 10:34 pm

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

செய்தி பகிர்வுக்கு நன்றி
Muthumohamed
Muthumohamed
பண்பாளர்
பண்பாளர்

Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad

Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குகளை விசாரிக்க விசேஷ கோர்ட்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» மருந்து விலைக்கட்டுப்பாட்டு உத்தரவு – சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு!
» காதலர்கள் கொலை அதிகரிப்பு : தடுக்க முடியாத மாநில அரசுகள் ; விளக்கம் கேட்கிறது சுப்ரீம் கோர்ட்
» ஸ்பெக்ட்ரம் வழக்கில் 5 பேருக்கு ஜாமீன் : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» பெங்களூரு கோர்ட்டில் ஜெ., ஆஜராக வேண்டும்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum