TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி? நீரிழிவு நோய் என்பது என்ன?

2 posters

Go down

நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி? நீரிழிவு நோய் என்பது என்ன? Empty நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி? நீரிழிவு நோய் என்பது என்ன?

Post by ஜனனி Sat Jun 01, 2013 9:29 pm

நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி? நீரிழிவு நோய் என்பது என்ன?

அன்றாட அலுவல்களுக்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் குளுக்கோஸ்
(சர்க்கரை) தான் உடலிலுள்ள செல்களுக்குத் தேவை. நாம் சாப்பிடும் உணவுதான்
செரித்த பிறகு குளுக்கோஸாக மாறுகிறது. குளுக்கோஸ் இரத்த ஓட்டத்தில் கலந்து
உடலிலுள்ள வெவ்வேறு செல்களைச் சென்றடைகிறது. உடலிலுள்ள கணையம் உற்பத்தி
செய்யும் இன்சுலின் என்னும் ஹார்மோன்தான் உடலிலுள்ள செல்களைச் சென்றடையும்
குளுக்கோஸ்க்கு மிகவும் அத்தியாவசியமாகும். போதுமான இன்சுலின் சுரக்காத
போது, குளுக்கோஸ் செல்களுக்கு செல்ல இயலுவதில்லை. எனவே இரத்த ஓட்டத்தில்
குளுக்கோஸ் அதிக அளவில் தங்கிவிடுகிறது. இந்த நிலைதான் ஹைப்பார்க்ளைசீமியா
எனப்படும் நீரிழிவு நோய் ஆகும்.,

உங்களுக்கு நீரிழிவு நோய் உள்ளதா?,

கீழே இருக்கும் அறிகுறிகளையும் அதற்கு கொடுக்கப்பட்டுள்ள மதிப்பீடுகளையும் குறித்துக் கொள்ளுங்கள்.

1. அடிக்கடி சிறுநீர் கழித்தல் – 4,
2. எப்போதும் பசித்தல் – 2,
3. தண்ணீர் அதிகமாகக் குடிப்பது – 4,
4. எப்போதும் களைப்பாக இருக்கும் – 2,
5. ஆறாத புண் – 2,
6. பிறப்புறுப்பில் இன்பெக்சன் – 3,
7. உடலுறவில் ஈடுபாடு இல்லாதிருத்தல் – 2,
8. காரணமில்லாமல் எடை குறைதல் – 2,
9. இரத்த சொந்தங்களில் வேறு எவருக்கேனும் நீரிழிவு – 2,
10. மிகக் கூடுதல் எடை – 3,
11. கால் மரத்துப் போய் உறுத்துதல் – 2,
12. மங்கலான பார்வை – 2,

நீங்கள் உங்களுக்காகக் குறித்துள்ள மதிப்பீட்டின் கூட்டுத் தொகை 7-க்கு
அதிகமாக இருந்தால் உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கலாம். எனவே தகுந்த
மருத்துவரை அணுகி உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா? என்பதை
பரிசோதித்துக் கொள்ளுங்கள்., நீரிழிவை கவனிக்காததால் ஏற்படும் விளைவுகள்,
நீரிழிவை துவக்கத்திலேயே கவனிக்கவில்லை என்றால் நிலைமை மோசமாகிவிடும் .
கட்டுக்குள் இல்லாத நீரிழிவு ,பல முக்கியமான உடல் உறுப்புகளையும்
செயல்பாடுகளையும் பாதித்துவிடும். குறிப்பாக, * பார்வையை இழக்க நேரிடலாம்
அல்லது பார்வை மங்கலாம்., * சிறுநீரகங்கள் சேதமடையலாம், * இன்பெக்சன்
அடிக்கடி ஏற்படலாம், * காங்கரீன் எனும் புண், பாதத்தில் பிரச்சனைகள்
வரலாம்., * உடலுறவில் இயலாமை ஏற்படலாம், * மூளைச்சேதமும் ,மாரடைப்பும்
ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கலாம்., நீரிழிவு நோயைத் துவக்கத்திலேயேக்
கட்டுப்படுத்திவிட்டால் ,பல சிக்கல்கள் தடுக்கப்பட்டு நீங்கள் சாதாரண
வாழ்க்கை வாழ உதவும்.

நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி?, நீரிழிவு நோயின் சிகிச்சையில்,

1. உணவுமுறை,
2. உடற்பயிற்சி,
3. நோயின் தீவீரத்தைத் தவறாமல் கண்காணித்தல் மற்றும் மாத்திரைகள் எடுத்துக்கொள்தல்,
4. இன்சுலின் பயன்படுத்துதல்,

இந்த சிகிச்சைகளைத் தகுந்த மருத்துவர்களின் ஆலோசனைகள் மூலம் எடுத்துக்
கொள்வதால் நீரிழிவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். உங்களுக்கு
நீரிழிவு இருந்தால் அதைக் குணப்படுத்த முடியாது. எனவே குணப்படுத்துவதாகச்
சொல்லி ஏமாற்றுபவர்களின் வலையில் விழுந்து விடாமல் கவனமாயிருக்க வேண்டும்.

1. உணவு முறை, * சப்பாத்தி அல்லது கோதுமை ரொட்டி , அரிசி, கேழ்வரகு போன்ற
கார்போ- ஹைட்ரேட்கள் நிறைந்தவற்றைச் சாப்பிடுங்கள். இவைகளால்
செலவுகளுமில்லை. நீங்கள் பசியுடன் இருந்தாலும் இனிப்புப் பதார்த்தங்கள்
சாப்பிடும் பழக்கத்தை நிறுத்திவிடும்., * கொஞ்சமாகவும், நேரம் தவறாமலும்
சாப்பிடவும். சாப்பாட்டு நேர இடைவெளியில் குறிப்பிட்ட சில பழங்கள் அல்லது
காய்கறிகள் போன்ற சத்துள்ளவற்றைச் சாப்பிடவும்., * கொழுப்பு நீக்கப்பட்ட
பால் மற்றும் தாவர எண்ணெய்யைப் பயன்படுத்தவும்., * சமையல் முறையை மாற்றி,
வேகவைத்த, தீயில் வாட்டிய, நீராவியில் சமைத்த பதார்த்தங்களைச்
சாப்பிடுங்கள்.

* கொழுப்பு நிறைந்தவற்றை அதிகம் சாப்பிடக்கூடாது.
கொழுப்பு பதார்த்தங்களான நெய், வெண்ணெய், பொறித்தவைகளான பூரி, சமோசா
போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு மிக்க இறைச்சி, வெண்ணெய் மற்றும்
பொறித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்., * சர்க்கரை, வெல்லம்,தேன்,ஜாம்,
கேக்குகள் மற்றும் சாக்லேட்கள் போன்ற சர்க்கரைச் சத்து அதிகமுள்ள உணவு
வகைகளைத் தவிர்க்க வேண்டும்.,

மீன்,கோழி , பாலாடைக்கட்டி மற்றும்
ஸ்டார்ச் சத்துள்ள பதார்த்தங்களைக் குறைவாகச் சாப்பிட வேண்டும்., நீரிழிவு
நோய் உள்ளவர்கள் விரதம் இருக்கலாமா?, நீரிழிவு நோய்க் கட்டுப்பாட்டிற்குள்
இருந்த நீங்கள் விரதம் கடைப்பிடிக்க விரும்பினால் முதலில் உங்கள்
மருத்துவரை சந்தித்து ஆலோசிக்கவும். அவர் உடல்நிலைக்கேற்ப உணவு முறைகளையும்
மருந்துகளையும் தெரிவிக்கலாம்., நீரிழிவு நோய்க்கான உணவு வகைகள், உங்கள்
மருத்துவரிடம் உங்களுக்காக ஒரு உணவு அட்டவணையைத் தயார் செய்யச்
சொல்லுங்கள். அது திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான சலிப்படையச் செய்யும்
வகையில் இருக்காது. ஒருவருடைய தேவைக்கேற்பவும் விருப்பத்திற்கேற்பவும் பல
மாற்று உணவு வகைகளை நீங்கள் சேர்த்துக் கொள்ள முடியும்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி? நீரிழிவு நோய் என்பது என்ன? Empty சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்

Post by msv6000 Mon Jun 10, 2013 4:17 pm

சர்க்கரை வியாதி என்றவுடன் அனைவருக்கும் பொதுவாக பயம் தோன்றிவிடுகிறது.இது ஏதோ குணப்படுத்த முடியாத வியாதி என்று. ஆனால் இவ்வளவு பயம் கொள்ளுமளவிற்கு சர்க்கரை வியாதி ஒரு கொடும் வியாதியா?? என்றால் இல்லை என்று நான் உறுதிபடச் சொல்வேன்.அது மட்டுமல்ல பல சர்க்கரை வியாதியஸ்தர்களை நான் குணப்படுத்தியும் இருக்கிறோம்.சிறு வயதினருக்கு வரும் சர்க்கரை வியாதியையும் (JUVENILE SUGAR COMPLAINT ) குணப்படுத்தலாம்.எமது அனுபவத்திலேயே இது பார்த்தது.
சர்க்கரை வியாதி என்றால் ஆங்கில மருத்துவம் என்ன கூறுகிறது . இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 90 -140 வரை (நம் நாட்டு உணவுப்பழக்க வழக்கங்களுக்கு) எப்போதும் இருந்தால் சர்க்கரை நோய் இல்லை என்று கூறுகிறது . ஆனால் இதே அளவு இரத்தத்தில் சரியாக இருந்தும் , சர்க்கரை சிறுநீரில் வெளியேறினால் அதை சர்க்கரை வியாதி என்று எடுத்துக் கொள்வதில்லை.
சித்த மருத்துவமும் அக்கு பஞ்சரும் சர்க்கரை நோயைப் பற்றி என்ன கூறுகிறது .அதை எப்படி குணப்படுத்தலாம். ஆங்கில மருந்துகளை உட் கொண்டு வந்தாலும் சர்க்கரை நோயின் தாக்கத்திலிருந்து நோயாளர் தப்பிப்பது இல்லையே ???ஆங்கில மருந்துகளின் துணையோடு சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருந்தாலும், உள்ளுறுப்புக்கள் பாதிக்கப்படுவதோடு , இரத்த அழுத்தம் ,இரத்தத்தில் கொழுப்பின் அளவு கூடுவது , விளைவாக இருதயம் அதிக வேலைப் பழுவின் காரணமாக , இதயத் தாக்குதலுக்கு உள்ளாவது , போன்ற பிரச்சினைகள் ஏன் ஏற்படுகின்றன. முதலில் ஓரிரண்டு மாத்திரைகளில் ஆரம்பிக்கும் ,ஆங்கில மருந்துகள் , அடுத்தடுத்து பெருகி ஒரு டிபன் பாக்ஸ் ல் மாத்திரைகள் வைத்து சாப்பிடும் அளவிற்கு போவது ஏன்?????
முதலில் சர்க்கரை நோயைப் புரிந்து கொண்டால் இந்த நோயை குணமாக்குவதும் எளிது . சர்க்கரை நோய் என்பது மேகங்கள் 21 றனுள் ஒன்றான மது மேகம் என்று சித்த வைத்தியத்தில் அழைக்கப்படுகிறது . மேகங்கள் வானத்தில் ஒரு இடத்தில் நில்லாமல் எப்படி நிலையில்லாது அலைகிறதோ அதே போல சர்க்கரை வியாதியும் உடலில் பல இடங்களில் பல விதமான பிரச்சினையான குறி குணங்களை வெளிப்படுத்தும்.
சிறு நீரில் சர்க்கரை வெளியேறுவதால் ,சிறு நீர்ப் புற வழிகளில் கிருமித் தொற்று , ஆண்குறி , பெண்குறிகளில் அரிப்பு , மற்றும் சிவந்து போதல் , எரிச்சல் , போன்றவை உண்டாகும். கால்களில் நமைச்சல் , ஊசி வைத்து குத்துவது போல சுரீர் , சுரீர் என்ற வலிகள் , கால்களில் உணர்வு குன்றுவது ,பெரு விரல்களில் ஆறாத புண் , கால் பாதம் முழுவதும் ஆறாத ரணம் ( காங்கரீன் என்று ஆங்கில வைத்தியத்தில் அழைப்பார்கள் ) சிறு நீரக செயலிளப்பு , மண்ணீரல் கல்லீரல் கேடடைதல் , இரத்தம் சர்க்கரை போன்ற பொருட்களால் சாக்கடையாக ஆவதால் இரத்தம் கெட்டிப்பட்டு இதயம் அந்தக் கெட்டியான சாக்கடை இரத்தத்தை உடலுக்கு அனுப்ப மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகுவதால் இரத்த அழுத்தம் அதிகரிப்பது .
இதனால் இரத்தக் குழாய்கள் மூளையில் வெடிப்பதால் பக்க வாதம் வருதல் , அதீத வேலையினால் இதயத் தாக்கு (HEART ATTACK ) நேரிடுவது, கண்களில் இரத்தக் கசிவு , கண்களில் அழுத்தம் அதிகரித்தல் , குளுக்கோமா,காதுகளின் கேட்கும் திறன் பாதிக்கப்படுதல் , அதீத சர்க்கரை இரத்தத்தில் இருப்பதால் உடல் எப்போது சூடாகுதல் ,அந்தச் சூட்டைத் தணிக்க உடல் சேர்த்து வைக்கும் சளியால் சைனஸ் , பாரா சைனஸ் பள்ளங்களில் சளி நிறைதல் , விளைவாக முன்பக்க பின்பக்க தலைவலி கழுத்து வலி ,செர்விகல் ஸ்பாண்டிலோசிஸ் என்னும் கழுத்து எலும்புத் தேய்வு , அதன் விளைவாக தலைச் சுற்றல், அதிக தாகம் , அதிக பசி , அதிக சிறு நீர் கழித்தல் , உடலெங்கும் சொல்ல முடியாத அளவு வலி, உடலில் எங்கு காயம் பட்டாலும் ஆறாத நிலை , இவை போல இன்னும் பல நேரிடும்.
நம் உடலில் உள்ள இரத்தச் சிவப்பணுக்களில் உள்ள ஹீமோ குளோபின் , நுரையீரல்களுக்குச் சென்று ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு ஆக்ஸி – ஹீமோகுளோபின் ஆக மாறி மீண்டும் நம் தசையில் , உடலில் உள்ள செல்களுக்கு ஆக்ஸிஜனை கொடுத்துவிட்டு மீண்டும் ஹீமோகுளோபின் ஆக மாற வேண்டும் . ஆனால் சர்க்கரையின் அளவு அதிகரிப்பால் இந்த ஹீமோ குளோபினைச் சுற்றி சர்க்கரை ஒட்டி பிடித்துக் கொள்வதால் நுரையீரல்களுக்குச் சென்று ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு ஆக்ஸி – ஹீமோ குளோபின் ஆக மாறுவதைத் இந்தச் சர்க்கரை தடுத்துவிடுகிறது .
எனவே இரத்தம் நுரையீரல்களுக்கு போனாலும், பிறகு அங்கிருந்து உடலெங்கும் பரப்பப்பட்டாலும் பிராண வாயுவான ஆக்ஸிஜனை நுரையீரலில் இருந்து எடுக்கும் , பின் உடல் அணுக்களுக்கு கொடுக்கும் பணியைச் செய்யாமல் ஒப்புக்கு சப்பாணியாக ஓடிக் கொண்டேயிருக்கும் . விளைவு உடலெங்கும் உள்ள செல் அணுக்களுக்கு சரியாக ஆக்ஸிஜன் கிடைக்காமல் செல்கள் சாகும் .இதனால்தான் சர்க்கரை வியாதிக் காரர்கள் உடல் மெலிந்து போவது நிகழ்கிறது . (There are a number of different human hemoglobin (Hb) variants the most prevalent being HbA1, HbS and HbC. HbA1 is the most common variant making up approximately 97% of the total hemoglobin in normal adult red blood cells. HbS is a hemoglobin variant associated with sickle cell anemia which occurs predominantly in African Americans. HbC is another hemoglobin variant found in people of African ancestry including African Americans and West Indians. )
பொதுவாக சர்க்கரை வியாதி முற்றி மோசமாக இருப்பவர்களுக்கு இந்த (HbA1 )சர்க்கரை ஒட்டிக் கொண்டுள்ள ஹீமோ குளோபின் அளவு 14 % அளவில் இருக்கும். சித்த வைத்தியத்தில் இந்த வியாதியஸ்தர்களைக் குணமாக்கும் போது 5 லிட்டர் இரத்தத்தில் 900 மில்லிகிராம் சர்க்கரை இருக்கும் .ஹீமோ குளோபினில் ஒட்டிக் கொண்டுள்ள சர்க்கரையை சித்த மருந்துகள் உரிக்கும் போது அவை இரத்தத்தில் இருப்பதாகக் காட்டும்.சித்த மருந்துகள் சாப்பிட்டேன் சர்க்கரை அளவு கூடிவிட்டது என்று எண்ணி பயப்படுவார்கள். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை வைத்து சர்க்கரை நோயைக் கணிப்பதே தவறான முறையாகும்.
இது ஏன் என்று பார்க்கலாம் .அந்த விடயங்களுக்குப் போகுமுன்னர் ஆங்கில வைத்தியர்கள் உங்களிடம் கூறியுள்ள விடயங்கள் , உங்களை சர்க்கரை நோய் பற்றிய தெளிவான அறிவில்லாத முட்டாள்களாகவும் , அதன் மூலமாக சர்க்கரை நோயாளிகளாக உங்களை வைத்திருப்பதிலும் வெற்றி பெற்றுள்ளது என்பதைப் புரிந்து கொண்டு .அந்த முட்டாள்தனமான ஆங்கில வைத்திய முறை சொல்லும் பல விடயங்களை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு காலிக் கோப்பையாக வந்தால் மட்டுமே மேலும் நாம் கூறும் விடயங்கள் புரியும்.
அதிலுள்ள சில விடயங்களைக் கடைப்பிடித்தாலேயே சர்க்கரை நோயைக் குணமாக்கிவிடலாம்.
சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்

முதலில் சர்க்கரை நோய் என்ற ஒன்று வியாதியே கிடையாது . மேலும் இந்தக் கட்டுரையை படிக்கும் முன்னர் அலோபதி மருத்துவர்கள் சர்க்கரை வியாதி பற்றி உங்களுக்கு சொல்லியிருக்கும் அத்தனை குப்பைகளையும் தூக்கி உங்கள் தலையில் இருந்து வெளியே எறிந்துவிடுங்கள்.பின்பு தொடர்ந்து படியுங்கள்.
நாம் சகஜமாக பார்க்கும் இன்னோர் விடயம் , ”உங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறதா??? ஏன் மெலிந்து கொண்டே போகிறீர்கள்???” என்று கேட்டால் , சர்க்கரை வியாதியுள்ளவர் சொல்லும் பதில் ” என்ன என்று தெரியவில்லை . அலோபதி மருத்துவர் கொடுக்கும் எல்லா மருந்துகளையும் , முறையோடு எடுத்து சாப்பிட்டு வருகிறேன் . இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில்தான் வைத்திருக்கிறேன் .ஆனாலும் இதய வலி , கண்பார்வைக் குறைவு , சர்க்கரை நோயினால் உள்ளுறுப்புக்கள் பாதிப்புக்கள்,காலில் சுருக்,சுருக் என்று ஊசி வைத்து குத்துவது போன்ற வலி,கால் பெரு விரல்களில் புண், கால் பெருவிரல் நகம் செத்துப் போதல் என பல துன்பங்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளன .ஏன் என்றே தெரியவில்லை ”என்பார்.இது போன்ற அத்தனை கேள்விகளுக்கும் விடை இந்தக் கட்டுரைத் தொடரில் கிடைக்கும். இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள வழிகளால் பல வியாதிகளை குணமாக்கிக் கொள்ளலாம்.
முதலில் சரியாக ஜீரணமாகாமல் இருப்பதே சர்க்கரை வியாதி என்பதை புரிந்து கொள்ளுங்கள்.எனக்கு சரியாக ஜீரணம் ஆகிறது. உடனே எனக்குப் பசிக்கிறதே ??என்று சிலர் கேட்கும் போது எனக்கு சிரிப்புத்தான் வரும். உடலில் இரத்தத்தில் சர்க்கரை குறையும் போது உடலுக்கு சர்க்கரை தேவைப் படும்போது அதை சோதனை செய்து பிட்யூட்டரி சுரப்பி டோபாமைன்களை சுரந்து பசியை உணரச் செய்து நமக்கு சாப்பாட்டை சாப்பிட வைக்கிறது . சர்க்கரை வியாதிக்காரர்கள் உடலில் நிறைய சர்க்கரை இரத்தத்தில் ஓடிக் கொண்டிருக்கிறதே , பிறகேன் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு பசி யெடுக்கிறது. இரத்தத்தில் ஓடிக் கொண்டிருக்கும் அந்தச் சர்க்கரை முழுவதும் கெட்ட சர்க்கரை எனவே அதை உடலில் உள்ள செல் அணுக்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை.எனவேதான் பசி உண்டாகிறது.
ஜீரணம் என்றால் என்ன???? நாம் சாப்பிடத் தெரியாதவர்களாக உள்ளோம் .விளைவு ஜீரணக் குறைவு. ஜீரணக் குறைவின் காரணமாக , வயிறு , மற்றும் ஜீரண மண்டலம் சேர்ந்து உற்பத்தி செய்யும் சர்க்கரை தரத்தில் குறைவாகவும் ,கெட்ட சர்க்கரையாகவும் உற்பத்தி ஆகிறது . விளைவு உடல் அதை நிராகரிக்கிறது . நிராகரிக்கப்பட்ட சர்க்கரை சிறு நீரகம் சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது.அதைப் பார்க்கும் நாம் ஐயோ இவ்வளவு சர்க்கரை வெளியே போகிறதே என்று புலம்புகிறோம்.
கொழுப்பில் நல்ல கொழுப்பு (ஹெச் டி எல் ) , கெட்ட கொழுப்பு (எல் டி எல் ) என்றிருப்பதைப் போல நல்ல சர்க்கரை , கெட்ட சர்க்கரை என இரண்டிருக்கிறது.ஆனால் இதை சோதிக்க நம்மிடம், ஆங்கில மருத்துவத்தில் வழிமுறைகள் இல்லை. இதனால் அவர்களுக்கு இந்த உடல் நடை முறை தெரியாததால் ஆங்கில மருத்துவர்கள் செய்யும் குழப்பங்கள், சர்க்கரை வியாதியை மிகமிக மோசமாக உடலை நாசமாக்குகிறது .

அன்புடன்
வெங்கட்
9865824794

avatar
msv6000
உதய நிலா
உதய நிலா

Posts : 18
Join date : 14/09/2010

Back to top Go down

நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி? நீரிழிவு நோய் என்பது என்ன? Empty Re: நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி? நீரிழிவு நோய் என்பது என்ன?

Post by ஜனனி Mon Jun 10, 2013 6:16 pm

[You must be registered and logged in to see this image.]
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி? நீரிழிவு நோய் என்பது என்ன? Empty Re: நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி? நீரிழிவு நோய் என்பது என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum