TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


குருப்பெயர்ச்சி பலன்கள் -‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

2 posters

Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் -‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் Empty குருப்பெயர்ச்சி பலன்கள் -‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

Post by அருள் Fri May 24, 2013 9:24 pm

குருப்பெயர்ச்சி பலன்கள்





‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்



ஜோதிடம்





விஜய வருடம், வைகாசி மாதம் 14-ம் தேதி செவ்வாய்க்கிழமை (28.05.2013)
கிருஷ்ணபட்சத்து, சதுர்த்தி திதி மேல்நோக்குள்ள உத்திராடம் நட்சத்திரம்,
சுப்பிரம் நாமயோகம், கௌலவம் நாமகரணம், நேத்திரம், ஜீவனம் நிறைந்த
சித்தயோகத்தில், ஏழாம் ஜாமத்தில் பஞ்ச பட்சியில் கோழி துயில் கொள்ளும்
நேரத்திலும், உத்தராயணப் புண்ய கால வசந்த ருதுவில் இரவு மணி 9.15-க்கு
பிரகஸ்பதி எனும் குருபகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்குள் சென்று
அமர்கிறார். 12.06.2014 வரை இங்கு அமர்ந்து ஆட்சி புரிவார்.

மேஷம்: கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு தன




வீடான 2-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு வசதி,
வாய்ப்புகளையும்,



குருப்பெயர்ச்சி பலன்கள் -‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் Meshe

அந்தஸ்தையும் கொடுத்து வந்த குருபகவான், 28.05.2013 முதல்
12.06.2014 வரை உங்களின் மூன்றாம் வீட்டில் அமர்ந்திருப்பார். இந்த
ஓராண்டு காலத்தில் திட்டமிடாமல் எதையும் செய்ய வேண்டாம். குடும்பத்தில்
கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். பணவரவு இருந்தாலும்,
சேமிக்க முடியாதபடி திடீர் செலவுகளும் அதிகரிக்கும். ஏழாம் வீட்டை குரு
பார்ப்பதால், உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். குருபகவான்
உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை
பாக்கியம் கிடைக்கும். குருபகவான் 11-ம் வீட்டைப் பார்ப்பதால், பழைய
பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளின்
உயர்கல்வி, திருமண விஷயத்தில் அவர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம்
கொடுங்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். சிலர் புது கிளைகள்
தொடங்குவீர்கள். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு சற்று தாமதமாக
கிடைக்கும்.


இந்த குரு மாற்றம் தொலைநோக்குச் சிந்தனை மற்றும் சகிப்புத் தன்மையால் உங்களை வளர்ச்சியடைய வைப்பதாக அமையும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்கு வியாழக்கிழமை தோறும் சென்று வாருங்கள்.



குருப்பெயர்ச்சி பலன்கள் -‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் Rishapaரிஷபம்:
கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்குள் அமர்ந்து கொண்டு ஆரோக்கியத்தில்
பாதிப்பை ஏற்படுத்தி, நிம்மதியைக் குலைத்து, பல வகையிலும் உங்களை
அலைக்கழித்த குருபகவான், 28.05.2013 முதல் 12.06.2014 வரை உள்ள
காலக்கட்டத்தில் உங்கள் ராசியை விட்டு விலகி, தன வீடான 2-ம் வீட்டில்
அமர்வதால், எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வாழ்க்கைத் துணைவர் உங்கள்
உணர்வுகளைப் புரிந்து கொண்டு கனிவாக நடந்து கொள்வார். குருபகவான் ஆறாவது
வீட்டை பார்ப்பதால், பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை
கிடைக்கும். வீட்டு உபயோக சாதனங்களை புதிதாக வாங்குவீர்கள். குருபகவான்
எட்டாவது வீட்டைப் பார்ப்பதால், திடீர் பயணங்கள் செய்ய நேரிடலாம்.
சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். பத்தாவது வீட்டையும்
குருபகவான் பார்ப்பதால், மகளுக்கு நல்ல மணமகன் அமைவார். வியாபாரத்தில்
தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். இரட்டிப்பு லாபம்
உண்டு. உத்யோகத்தில் ஏற்பட்ட வேலைச்சுமை, வீண் பழி, அவமானங்கள் விலகும்.
மேலதிகாரிகள் உங்கள் திறமையை மதிப்பார்கள்.

இந்த குரு மாற்றம் உங்களுக்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும் கொடுப்பதுடன் அதிரடி யோகத்தையும் அள்ளித் தரும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் சித்தர் பீடத்துக்கு சென்று நெய் விளக்கேற்றி தியானம் செய்யுங்கள்.



குருப்பெயர்ச்சி பலன்கள் -‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் Mithunaமிதுனம்: இதுவரை
உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்து வீண் செலவுகளையும், அலைச்சலையும்
தந்த குருபகவான் 28.05.2013 முதல் 12.06.2014 வரை உங்கள் ராசிக்குள்ளேயே
அமர்ந்து ஜென்மகுருவாக தொடர இருப்பதால், ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை
அதிகரிக்கும். முன்கோபத்தால் சிலரின் நட்பை இழக்க நேரிடலாம். ஜென்ம குருவாக
இருப்பதால், உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும். வெளி உணவுகளைத்
தவிர்ப்பது நல்லது. குடும்பத்துடன் வெளியூர் செல்வதாக இருந்தால் முக்கிய
ஆவணங்கள், தங்க நகைகள், பணத்துக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவிட்டு
செல்லுங்கள். குருபகவான் 7-ம் வீட்டையும் பார்ப்பதால், திறமைகளை
வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். குருபகவான் உங்களின் 5-ம் வீட்டை
பார்ப்பதால், பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். குரு
உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால், ஓரளவு பணவரவு உண்டு. பழைய பாக்கிகளை
போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். வேலைச் சுமை
அதிகமாக இருக்கும். என்றாலும், மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சம்பளம்
உயரும்.

இந்த குரு மாற்றம் உங்கள் வேலைச்சுமையை அதிகமாக்கினாலும், சிக்கனத்தால் கொஞ்சம் முன்னேற்றத்தை தருவதாக அமையும்.

பரிகாரம்: குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பொங்கல் வைத்து வழிபடுங்கள்.



குருப்பெயர்ச்சி பலன்கள் -‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் Kadakaகடகம்:
இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து ஓரளவு வசதி, வாய்ப்புகளைத்
தந்த குருபகவான், 28.05.2013 முதல் 12.06.2014 வரை உங்களின் விரய ஸ்தானமான
12-ம் வீட்டில் நுழைவது ஒரு வகையில் நல்லதுதான். உங்களின் பாதக ஸ்தானமான
11-ம் வீட்டை விட்டு குரு விலகுவதால், இழுபறியாக இருந்த வேலைகள்
முடிவடையும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். குருபகவான் உங்கள்
சுகஸ்தானத்தைப் பார்ப்பதால், அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும்.
சமையலறையை நவீனமயமாக்குவீர்கள். குரு 6-ம் வீட்டைப் பார்ப்பதால், உறவினர்
மத்தியில் மதிப்பு கூடும். குரு 8-ம் வீட்டைப் பார்ப்பதால், வெளிநாட்டில்
இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். உடன்பிறந்தவர்களின் உதவி உண்டு.
வியாபாரத்தில் புது சலுகைகளை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களைக்
கவருவீர்கள். கடையை விரிவுபடுத்தி, அழகுபடுத்துவீர்கள். உத்யோகத்தில்
உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள்.
பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். அதேசமயம், புது சலுகைகளும்
கிடைக்கும்.

இந்த குரு பெயர்ச்சி உங்களை மாற்றுப் பாதையில் சென்று முன்னேற்ற வைக்கும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் கோயிலில் வீற்றிருக்கும் ஸ்ரீசக்கரத்தாழ்வாரை சனிக்கிழமையில் சென்று வணங்குங்கள்.



குருப்பெயர்ச்சி பலன்கள் -‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் Simmaசிம்மம்:
இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு மன உளைச்சல்,
டென்ஷன், அவமானங்களை ஏற்படுத்திய குருபகவான், 28.05.2013 முதல் 12.06.2014
வரை உங்கள் ராசிக்கு லாப வீடான 11-ம் வீட்டில் அமர்வதால், இனி உங்கள்
இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். பழைய
சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை
கூடும். நீண்ட நாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். உங்கள்
ராசிக்கு 7-ம் வீட்டை குரு பார்ப்பதால், தோற்றப் பொலிவு கூடும். விலை
உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். உங்களின் 3-ம் வீட்டை குரு
பார்ப்பதால், அனுபவப்பூர்வமாக பேசி எல்லோரையும் கவர்வீர்கள். தைரியம்
கூடும். குரு, ஐந்தாம் வீட்டை பார்ப்பதால், பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை
அறிந்து செயல்படுவார்கள். பூர்விக சொத்து கைக்கு வரும். மகளின் திருமணத்தை
ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு செல்லும்
வாய்ப்பு வரும். வியாபாரத்தை, புது முதலீடு செய்து விரிவுபடுத்துவீர்கள்.
எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் இனி நிம்மதி உண்டு.
எதிர்பார்த்தபடி சம்பளம் உயர்வும், சலுகைகளும் கிடைக்கும்.

இந்த குரு மாற்றம், குடத்தில் இருந்த உங்களை குன்றின் மேல் ஒளிர வைக்கும்.

பரிகாரம்: அருகிலுள்ள சிவாலயத்தின் நந்தவனத்தை சீரமையுங்கள்.



குருப்பெயர்ச்சி பலன்கள் -‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் Kanniகன்னி: கடந்த
ஓராண்டு காலமாக 9-ம் வீட்டில் அமர்ந்திருந்து, ஏழரை சனியால் ஏற்பட்ட
பாதிப்புகளை ஓரளவு குறைத்ததுடன் புகழ், கௌரவத்தையும் உயர்த்திய குருபகவான்
28.05.2013 முதல் 12.06.2014 வரை உங்களின் 10-ம் வீட்டில் அமர்வதால்,
எதிலும் கொஞ்சம் கவனமாக செயல்படப்பாருங்கள். உங்கள் ராசிநாதனான புதனின்
மற்றொரு வீடான மிதுனத்தில் குரு அமர்வதால், எதையும் தாங்கும் மனவலிமை
கிடைக்கும். எடுத்த வேலைகளை முடிக்க அலைச்சல்பட வேண்டி வரும். சின்னச்
சின்ன கவலைகள் வந்து செல்லும். குடும்பத்தில் சலசலப்புகள் ஏற்படலாம். குரு
உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால், ஓரளவு பணவரவு உண்டு. வீட்டில்
கூடுதலாக ஒரு தளம் அல்லது அறை கட்டும் முயற்சி பலிதமாகும். குரு 9-ம்
பார்வையால் 6-ம் வீட்டை பார்ப்பதால், எதிர்ப்புகள் அடங்கும். உறவினர்கள்
உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் வழக்கமான லாபம்
உண்டு. வேலையாட்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். 10-ம்
வீட்டில் குரு அமர்வதால், உத்யோகத்தில் சின்ன சின்ன அவமானங்கள்,
மனக்கலக்கங்கள் வந்து போகும். மூத்த அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள்.

இந்த குரு மாற்றம், 'சகிப்புத் தன்மை இருந்தால் சாதிக்கலாம்’ என்பதை உங்களுக்கு உணர வைக்கும்.

பரிகாரம்: பைரவரை தேங்காய் தீபமேற்றி வணங்குங்கள்.



குருப்பெயர்ச்சி பலன்கள் -‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் Thulaதுலாம்: இதுவரை
8-ல் மறைந்து செலவுகளை இரட்டிப்பாக்கி, குடும்பத்தில் சலசலப்புகளை
ஏற்படுத்திய குருபகவான், 28.05.2013 முதல் 12.06.2014 வரை உங்களின் பாக்கிய
ஸ்தானமான 9-ம் வீட்டில் அமர்வதால், இனி எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை
பிறக்கும். பணவரவு உண்டு. ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிக்கத்
தொடங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். புது சொத்து, தங்க ஆபரணம்
வாங்குவீர்கள். உங்களை உதாசீனப்படுத்தியவர்களெல்லாம் வலிய வந்து
பேசுவார்கள். குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசியை பார்ப்பதால்,
வருமானம் உயரும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்து
கொள்வீர்கள். குருபகவான் உங்களின் 3-ம் வீட்டை பார்ப்பதால், சில முக்கிய
முடிவுகள் எடுப்பீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.
புது வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல பதில் வரும். உறவினர்,
நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அயல்நாட்டில் இருக்கும் தோழிகளால்
ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் வரவு உயரும். பாக்கிகள் வசூலாகும்.
உத்யோகத்தில் புது வாய்ப்புகளும், பொறுப்புகளும் தேடி வரும். சிலர்
அலுவலகம் தொடர்பாக அயல்நாடு சென்று வருவீர்கள்.

இந்த குரு மாற்றம், உங்களின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றித் தரும்.

பரிகாரம்: நந்திகேஸ்வரரை பிரதோஷ நாளில் வணங்குங்கள்.



குருப்பெயர்ச்சி பலன்கள் -‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் Viruchiவிருச்சிகம்: இதுவரை
உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் திறமைக்கு பரிசு, பாராட்டை
தந்த குருபகவான், 28.05.2013 முதல் 12.06.2014 வரை 8-ம் வீட்டில்
மறைவதால், எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள்
இருக்கும். யாரை நம்புவது என்ற மனக்குழப்பத்துக்கு ஆளாவீர்கள். முக்கிய
விஷயங்களில் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். குடும்பத்தினருடன் சின்ன
சின்ன வாக்குவாதங்கள் வந்து செல்லும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக
கையாளுங்கள். ஸ்திர ராசியில் பிறந்த உங்களுக்கு குருபகவான் உபய வீட்டில்
மறைவதால், அவ்வப்போது நல்லது நடக்கும். குருபகவான் 2-ம் வீட்டை
பார்ப்பதால், சமயோஜிதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். குரு உங்கள் சுக
ஸ்தானத்தைப் பார்ப்பதால் தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். புது வாகனம்
வாங்குவீர்கள். குரு உங்கள் 12-ம் வீட்டையும் பார்ப்பதால், நீண்ட நாட்களாக
போக நினைத்திருந்த புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வீடு கட்டும்
பணியைத் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். குரு 8-ல் மறைவதால்,
வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும்.
உத்யோகத்தில் புது சலுகைகளும், பதவிகளும் வரும்.

இந்த குரு மாற்றம் சலிப்பையும், அலைச்சலையும் தந்தாலும்... தொலைநோக்குச் சிந்தனையால் உங்களை முன்னேற வைக்கும்.

பரிகாரம்: ஸ்ரீஹயக்ரீவரை துளசி மாலை அணிவித்து வணங்குங்கள்.



குருப்பெயர்ச்சி பலன்கள் -‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் Dhanuதனுசு: ஏறக்குறைய
கடந்த ஓராண்டு காலமாக சகடை வீட்டில் அமர்ந்து உங்களைப் பகடைக் காயாக
உருட்டிய குருபகவான், 28.05.2013 முதல் 12.06.2014 வரை உங்கள் ராசிக்கு
7-ம் வீட்டில் அமர்ந்து உங்களை பார்க்க இருப்பதால், சோர்வு நீங்கி,
உற்சாகமாக செயல்படுவீர்கள். பல மாதங்களாக அரைகுறையாக நின்ற வேலைகள்
முடிவடையும். சிலர் புது வீட்டுக்கு மாறுவீர்கள். பிள்ளைகள் உங்களின்
உள்ளார்ந்த அன்பை புரிந்து கொள்வார்கள். வேலைக்கு விண்ணப்பித்து
காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். சிலருக்கு
வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும். குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால்...
அழகு, ஆரோக்கியம் கூடும். உங்களின் பலவீனங்களைத் திருத்திக் கொள்வீர்கள்.
குருபகவான் லாப வீட்டை பார்ப்பதால், உங்களின் புகழ், கௌரவம் உயரும்.
புதிதாக வீட்டு உபயோக சாதனங்கள் வாங்குவீர்கள். உங்கள் ராசிக்கு 3-ம்
வீட்டை குரு பார்ப்பதால், சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும்.
வியாபாரத்தில் நவீன விளம்பர யுக்திகளைக் கையாண்டு லாபத்தை பெருக்குவீர்கள்.
புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் உங்களுக்கு இனி முக்கியத்துவம்
கிடைக்கும். தடைபட்ட சம்பள உயர்வு, பதவி உயர்வை இப்போது எதிர்பார்க்கலாம்.
சக ஊழியர்களும் மதிக்கத் தொடங்குவார்கள்.

இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு முழு பலத்தை தருவதாக அமையும்.

பரிகாரம்: ஸ்ரீஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள்.



குருப்பெயர்ச்சி பலன்கள் -‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் Magaraமகரம்: இதுவரை
ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து உங்களின் புது முயற்சிகளில் வெற்றியைத்
தந்த குருபகவான், 28.05.2013 முதல் 12.06.2014 வரை 6-ம் வீட்டில் மறைவதால்,
சின்னச் சின்ன பிரச்னைகள் எழும். சகட குருவாக இருப்பதால், குடும்பத்தில்
சில சமயங்களில் காரசாரமான விவாதம் வரும். பணப்பற்றாக்குறை ஏற்படும்.
மகனுக்கு, மகளுக்கு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில்
அவசரம் காட்டாதீர்கள். உறவினர்களுடன் உரசல் போக்கு வந்து நீங்கும்.
யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். குருபகவான் உங்களின்
தன ஸ்தானத்தை பார்ப்பதால், கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சுப
நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். 10-ம் வீட்டை குரு பார்ப்பதால், புது
வேலை அமைய வாய்ப்பு உண்டு. 12-ம் வீட்டையும் குரு பார்ப்பதால், நீண்ட
நாட்களாக போக நினைத்த புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். தோழிகள்
உங்கள் நிலையறிந்து உதவுவார்கள். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல்
காலைவிடாதீர்கள். வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில்
வேலைச்சுமை இருக்கும். என்றாலும் மதிப்பு, மரியாதையும் குறையாது.
சலுகைகளையும், சம்பள பாக்கியையும் போராடி பெறுவீர்கள். பதவி உயர்வு தாமதமாக
வரும்.

இந்த குரு மாற்றம் உங்களுக்கு பணப்பற்றாக்குறையை தந்தாலும், திட்டமிடுதலால் நெருக்கடியிலிருந்து விடுபட வைக்கும்.

பரிகாரம்: ஸ்ரீவராஹி அம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவித்து வணங்குங்கள்.



குருப்பெயர்ச்சி பலன்கள் -‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் Kumbaகும்பம்:
இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்து உங்களை நாலா விதத்திலும்
பிரச்னைகளில் சிக்க வைத்து வேடிக்கை பார்த்த குருபகவான், 28.05.2013 முதல்
12.06.2014 வரை உங்களின் பூர்வ புண்ய ஸ்தானமான 5-ம் வீட்டில் அமர்வதால்,
விரக்தியிலிருந்து விடுபடுவீர்கள். மனதில் தன்னம்பிக்கையும், அமைதியும்
வரும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழி பிறக்கும். வர வேண்டிய பணம்
கைக்கு வரும். தூக்கமின்மை, உடல் உபாதை நீங்கும். குரு பகவான் உங்கள்
ராசியை பார்ப்பதால், தோற்றப் பொலிவு கூடும். எங்கு சென்றாலும் நல்ல
வரவேற்பு கிடைக்கும். குரு ஐந்தாம் பார்வையால் உங்களின் 9-ம் வீட்டை
பார்ப்பதால், அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். புது பொறுப்புகள்
தேடி வரும். பதினோராவது வீட்டை குரு பார்ப்பதால், வேலைக்கு முயற்சி
செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலர் புது வீட்டுக்கு மாறுவீர்கள்.
வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கும். சிலருக்கு சொந்த இடத்துக்கே கடையை
மாற்றும் யோகம் உண்டாகும். உத்யோகத்தில், சம்பளம் உயரும். சக ஊழியர்களால்
இருந்து வந்த ஈகோ பிரச்னைகள் நீங்கும். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு
முன்னுரிமை தருவார்கள்.

இந்த குரு மாற்றம் உங்களை வசதி, வாய்ப்புகளால் நிமிர வைக்கும்.

பரிகாரம்: நவக்கிரகத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீகுருபகவானை கொண்டைக்கடலை மாலை அணிவித்து வணங்குங்கள்.



குருப்பெயர்ச்சி பலன்கள் -‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் Meenaமீனம்: இதுவரை
உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்து முடிவுகள் எடுப்பதில்
குழப்பத்தையும், தடுமாற்றத்தையும், மனதில் அச்சத்தையும் தந்து கொண்டிருந்த
குருபகவான், 28.05.2013 முதல் 12.06.2014 வரை 4-ம் வீட்டில் அமர்வதால்,
எடுத்த வேலைகளை முழுமையாக முடிக்காமல் ஓயமாட்டீர்கள். புதிய நட்பால்
உற்சாகமடைவீர்கள். என்றாலும், உங்கள் ராசிநாதனும், ஜீவனாதிபதியுமான
குருபகவான், 4-ல் கேந்திர தோஷம் பெற்று அமர்வதால், திருமணம், கிரகப்
பிரவேசத்தை போன்றவற்றை போராடி முடிக்க வேண்டி வரும். குடும்பத்திலும்,
வெளிவட்டாரத்திலும் கொஞ்சம் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. சிலருக்கு
வீடு மாறுவது, ஊர் மாறுவது போன்ற சூழ்நிலை உருவாகும். நெருங்கிய தோழிகள்,
உறவினர்களாக இருந்தாலும், அவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
குருபகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால், புகழ் பெற்ற புண்ணிய தலங்கள் சென்று
வருவீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக்
கவர்வீர்கள். உத்யோக ஸ்தானத்தை குரு பார்ப்பதால், இடமாற்றம் சாதகமாக
அமையும். சிலருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் புது வேலை அமையும்.

இந்த குரு மாற்றம் உங்களை பலவிதங்களில் பந்தாடினாலும், இறுதியில் வெற்றி பெற வைக்கும்.

பரிகாரம்: ஸ்ரீபிரத்யங்கரா தேவியை குங்குமார்ச்சனை செய்து வணங்குங்கள்.







நன்றி - அவள் விகடன்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் -‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் Empty Re: குருப்பெயர்ச்சி பலன்கள் -‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

Post by ஜனனி Tue May 28, 2013 10:32 pm

குருப்பெயர்ச்சி பலன்கள் -‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் 471843 குருப்பெயர்ச்சி பலன்கள் -‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் 471843 குருப்பெயர்ச்சி பலன்கள் -‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் 471843
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் -‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் Empty Re: குருப்பெயர்ச்சி பலன்கள் -‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

Post by அருள் Wed May 29, 2013 7:42 am

குருப்பெயர்ச்சி பலன்கள் -‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் 28284 குருப்பெயர்ச்சி பலன்கள் -‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் 28284
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் -‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் Empty Re: குருப்பெயர்ச்சி பலன்கள் -‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

Post by அருள் Wed May 29, 2013 7:46 am

குருப்பெயர்ச்சி பலன்கள் -‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் P117

கண்மாய்கள் நிரம்பும்... காடு-கரை செழிக்கும்!



குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்!

நிகழும்
விஜய வருடம், வைகாசி மாதம் 14-ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை (28.5.13)
கிருஷ்ண பட்சத்து சதுர்த்தி திதி, மேல்நோக்கு உள்ள உத்திராட நட்சத்திரம்,
சுப்பிரம் நாமயோகம், கௌலவம் நாமகரணம், நேத்திரம் ஜீவனம் நிறைந்த சித்த
யோகத்தில், ஏழாம் ஜாமத்தில், பஞ்ச பட்சியில்- கோழி துயில் கொள்ளும்
நேரத்தில், உத்தராயன புண்ணிய கால வசந்த ருதுவில், இரவு 9.15 மணிக்கு
பிரகஸ்பதி எனும் குரு பகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்குள் சென்று
அமர்கிறார். 12.6.14 வரை இங்கு அமர்ந்து தனது கதிர் வீச்சை செலுத்துவார்.

எந்த ஒரு கிரகமும் நீசம் அடையாத, அனைத்து கிரகங்களும்
நட்பு பெறும் நடுநிலை வீடான புதன் கிரகத்தின் மிதுனத்தில் குருபகவான்
அமர்வதால், அனைத்து ராசியினருக்கும் மத்திம பலன்களே கிடைக்கும். அதாவது,
நற்பலன்கள் பெறப்போகும் ராசிக்காரர்களுக்கும் அளவாகவே நல்லது நடக்கும்.
அதேபோல், கெடு பலன்கள் ஏற்படப் போகும் ராசிக்காரர்களுக்கும் பாதிப்புகள்
குறைவாகவே இருக்கும்.

சமாதான வீட்டில் குரு அமர்ந்தாலும் உலகெங்கும்...
ஆட்சியாளர்கள், தலைமை பொறுப்பில் இருப்பவர்களின் பொறுப்பற்ற பேச்சு-
செயல்பாடுகளால் சண்டை-சச்சரவுகள் அதிகரிக்கும். வடக்கு மூலைக்கு அதிபதியான
புதனின் வீட்டில் தென்னக கிரகமான குரு அமர்வதால், பூமியில் வடக்குப்
பகுதியில் இருப்பவர்களும், தெற்குப் பகுதியில் வாழ்பவர்களும்
மோதிக்கொள்வார்கள். புதிதாக வானொலி, தொலைக்காட்சி சேனல்களும், நாள், வார,
மாதப் பத்திரிகைகளும் வெளியாகும். 28.5.13 முதல் 12.6.14 வரையிலும்
ஊடகங்களின் காலம் என்றே சொல்லலாம். வி.ஐ.பி-களின் கடந்தகால அந்தரங்க
விஷயங்களும், நிகழ்கால நிழல் சம்பவங்களும் வெளியாகி பரபரப்புகள்
பற்றிக்கொள்ளும். வித்யாகாரகன் புதனின் வீட்டில் குரு அமர்வதால், தேர்வு
முறையில் பல மாற்றங்கள் வரும். மாணவர்களை சுயமாக சிந்திக்கத் தூண்டும்
வினாக்கள் அதிகம் இடம்பெறும். கடந்த கால தேர்வு முறை குளறுபடிகள்
கண்டறியப்பட்டு, புகழ்பெற்ற கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் பாதிப்புக்கு
உள்ளாகும்.

குருப்பெயர்ச்சி பலன்கள் -‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் P118குரு
5-ஆம் பார்வையால் சனியையும் ராகுவையும் பார்ப்பதால் விலைவாசி ஓரளவு
குறையும். நாட்டில் பணப்புழக்கமும் மக்களின் வருமானமும் குறையும். தங்கம்,
வெள்ளி முதலான ஆபரணங்களின் விலை வீழ்ச்சியுறும் என்றாலும், 19.8.13-க்குப்
பிறகு, அவற்றின் விலை அதிகரிக்கும். பெட்ரோ கெமிக்கல்களின் விலையும்
சரியும். வாகன உற்பத்தி அதிகரிப்பால் வாகனங்களின் விலையும், டி.வி.,
ஃப்ரிட்ஜ், கம்ப்யூட்டர் மற்றும் செல்ஃபோன்களின் விலையும் குறையும்.
பாடப்புத்தகங்களின் விலை உயரும். ஆங்கில மோகம் அதிகமாகும். ஆசிரியர்
தேர்வு முறை சற்றே எளிதாகும். சாஃப்ட்வேர் துறையில் வேலை வாய்ப்புகளும்
ஊதியமும் குறைய வாய்ப்பு உண்டு. அயல்நாட்டில் இருப்பவர்களில் பலர் தாய்நாடு
திரும்புவர். 2-வதாக திருமணம் புரிவது அதிகரிக்கும்.

புத்திரகாரகன் குரு, பகை கிரகமான புதனின் வீட்டில்
அமர்வதால், கர்ப்பிணிகள் பாதிப்படைவர். குறிப்பாக 7-வது மாதத்தில் இருந்து
பாதிப்புகள் அதிகரிக்கும். பிறந்தது முதல் ஒன்றரை வயது வரை உள்ள குழந்தைகளை
புதிய நோய்கள் தாக்கும். குழந்தையின்மை அதிகமாகும். பங்குதாரர்களின் ஈகோ
பிரச்னையால் பல தொழிற் சாலைகள் விற்பனைக்கு வரும்; வீழ்ச்சியடையவும்
வாய்ப்பு உண்டு. விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவம் இல்லாமையால் பாரம்பரிய
குடும்பங்கள் நலிவடையும்.

தனகாரகன் குரு மிதுனத்தில் அமர்கிறார். எனவே, ரிசர்வ்
வங்கி அங்கீகரிக்காத நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம்.
ஏலச்சீட்டு திட்டங்களிலும் சேர வேண்டாம். வங்கிகளில் வாராக் கடன்
அதிகரிக்கும். கடன் பெற்றுவிட்டு, தவணைத் தொகை கட்டாமல் வங்கி
நடவடிக்கைக்கு பலரும் ஆளாவார்கள். கறுப்புப் பணம் அதிகம் பிடிபடும்.
தீவிரவாதிகள், தொலைத்தொடர்பு சாதனங்களை நவீனமாகப் பயன்படுத்தி விபத்துகளை
நிகழ்த்துவர். தொலைபேசி, அலைபேசி சேவைக் கட்டணங்கள் குறையும். அ, க, ஹ
(கி,ரி,பி) ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் ஊர்கள், மாவட்டங்கள்,
மாநிலங்கள், நாடுகள் மற்றும் நிறுவனங்கள் பாதிப்புக்கு உள்ளாகும். மேற்கண்ட
எழுத்துக்களை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் ஆரோக்கியத்திலும் பண
விஷயத்திலும் கவனமாக இருக்கவேண்டும். அனைத்து மத வழிபாட்டுக் கூடங்களும்
அசுர வேகத்தில் வளரும். வைணவ தலங்கள் பிரசித்தி அடையும். மூச்சுத் திணறல்,
மூளைக் காய்ச்சல், நுரையீரல் அழற்சி, சளித் தொந்தரவு, சிறுநீரகம் மற்றும்
பித்தப்பை கற்களால் அதிகம்பேர் பாதிப்படைவர்.

குருப்பெயர்ச்சியால் தென்மேற்கு பருவ மழை அதிகரிக்கும்.
விடியற்காலையில் அதிக மழை பொழியும். பசு-கன்றுகள், பயிர்- பச்சைகள்,
தோப்பு-தோட்டங்கள் வளம் அடையும். வன விலங்குகளும் அபிவிருத்தியாகும். ரியல்
எஸ்டேட் தொழில் சூடுபிடிக்கும். நிலங்களின் கைடு லைன் வேல்யூவை அரசு
குறைக்கும். மின் தட்டுப்பாடு குறையும். புன்செய் நிலங்கள், நீர் நிலை
ஆதாரங்களைப் பாதுகாக்க புதிய சட்டங்கள் வரும். பதுக்கல் தானியங்கள்
பிடிபடும். கள்ளப் பணம் தயாரிப்பவர்கள் கையும் களவுமாகப் பிடிபடுவர்.
பாரதத்தின் பகை நாட்டு உளவாளிகள், தீவிரவாதிகள் காவல் துறையினரால்
கண்டறியப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.

குருப்பெயர்ச்சி பலன்கள் -‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் P121மலையாள,
ஹிந்தி மொழியில் தயாராகும் திரைப்படங்கள் பிரபலமாகி விருதுகளைப் பெறும்.
விளையாட்டு வீரர்கள் பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவர். எழுத்தாளர்கள்
நலிவடைவார்கள். பாராளுமன்றத் தேர்தலில், தேர்தலுக்குப் பிறகு புதிய கூட்டணி
உருவாகி ஆட்சி அமைக்கும். மாநிலக் கட்சிகளின் செல்வாக்கு அதிகரிக்கும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

28.5.13 - 11.6.13 வரை மிருகசீரிடம் 3-ல்
2.6.13 - 25.6.13 வரை மிருகசீரிடம் 4-ல்
26.6.13 - 10.7.13 வரை திருவாதிரை 1-ல்
11.7.13 - 25.7.13 வரை திருவாதிரை 2-ல்
26.7.13 - 9.8.13 வரை திருவாதிரை 3-ல்
10.8.13 - 28.8.13 வரை திருவாதிரை 4-ல்
29.8.13 - 17.9.13 வரை புனர்பூசம் 1-ல்
18.9.13 - 19.10.13 வரை புனர்பூசம் 2-ல்
20.10.13 - 12.11.13 வரை புனர்பூசம் 3-ல்
13.11.13 - 30.11.13 வரை புனர்பூசம் 3-ல் வக்ர நிலை
1.12.13 - 2.1.14 வரை புனர்பூசம் 2-ல் வக்ர நிலை
3.1.14 - 26.1.14 வரை புனர்பூசம் 1-ல் வக்ர நிலை
27.1.14 - 11.3.14 வரை திருவாதிரை 4-ல் வக்ர நிலை
12.3.14 - 12.4.14 வரை திருவாதிரை 4-ல் இயல்பு நிலை
13.4.14 - 6.5.14 வரை புனர்பூசம் 1-ல்
7.5.14 - 25.5.14 வரை புனர்பூசம் 2-ல்
26.5.14 - 12.6.14 வரை புனர்பூசம் 3-ல்

பரிகாரம்:

குரு பகவான் சுய கௌரவம், தன்மானம், விடாமுயற்சி, கல்வி,
நுண்ணறிவு மற்றும் ஊடகங்களுக்கு உரிய கிரகமான புதனின் வீட்டில்
அமர்கிறார். எனவே, மற்றவர்களைச் சார்ந்திருக்காமல் சுய முயற்சியிலும்
உழைப்பிலும் முன்னேறப் பாருங்கள். பண வசதி இல்லாதவர்களின் உயர் கல்விக்கு
உதவுங்கள்; குருவின் திருவருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.



குருப்பெயர்ச்சி பலன்கள் -‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் Mesha%281%29சொல்வன்மை
மிகுந்தவர் நீங்கள். குரு பகவான் இப்போது 3-ஆம் வீட்டுக்கு அடியெடுத்து
வைக்கிறார். 28.5.13 முதல் 12.6.14 வரை, உங்களின் விரய-பாக்கிய
ஸ்தானாதிபதியான குரு, 3-ல் மறைவதால், எதையும் அறிவுப்பூர்வமாக அணுகுவது
நல்லது. எடுத்த காரியங்களை முடிக்க, அதிக முயற்சி தேவை. முக்கிய அலுவல்களை
மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். குடும்பத்தினர் கருத்துக்களை அமைதியாக
ஏற்றுக்கொள்ளுங்கள். பணம் வந்தாலும் சேமிக்க இயலாமல் செலவுகள் துரத்தும்.
வசதி-வாய்ப்புகளைக் கண்டு தவறானவர்களுடன் நட்புகொள்ள வேண்டாம். உணவுக்
கட்டுப்பாடு, மருந்து உட்கொள்ளும்போது மருத்துவ ஆலோசனை அவசியம்.

உங்களின் 7-ஆம் வீட்டை குரு பார்ப்பதால், திறமைகளை
வெளிப்படுத்த வாய்ப்புகள் கிட்டும். வி.ஐ.பி-கள் நட்பாவர். தம்பதிக்குள்
சச்சரவுகள் எழுந்தாலும் அந்நியோன்யம் குறையாது. குரு உங்களின் 9-ஆம்
வீட்டைப் பார்ப்பதால் பணவரவு உண்டு. கடன் கட்டுக்குள் வரும். தந்தையின்
உடல் நலன் சீராகும். அவருடனான கருத்துமோதல் விலகும். வழக்கு நெருக்கடிகள்
நீங்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குரு 11-ஆம் வீட்டைப்
பார்ப்பதால், கல்வியாளர்கள் நட்பால் தெளிவடைவீர்கள். பதவிகள் தேடி வரும்.
ஷேர் மூலம் பணம் வரும். அரசாங்க விஷயம் சாதகமாகும்.

குருபகவானின் சஞ்சாரம்:
28.5.13 முதல் 25.6.13 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாயின் மிருகசீரிட
நட்சத்திரத்தில் செல்வதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். திடீர் பணவரவு
உண்டு. தைரியமாக முடிவெடுப்பீர்கள். வீடு- மனை வாங்குவது, விற்பது லாபம்
தரும். வழக்கு சாதகமாகும். தாயாரின் உடல் நிலை சீராகும்.

26.6.13 முதல் 28.8.13 வரை; 27.1.14 முதல் 12.4.14 வரை
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்வதால், ஈகோ பிரச்னையால்
தம்பதிக்குள் பிரிவு, மனைவிக்கு சிறு அறுவை சிகிச்சை வந்துபோகும்.

29.8.13 முதல் 26.1.14; 13.4.14 முதல் 12.6.14 வரை,
உங்களின் பாக்கிய-விரயாதிபதியான குருவின் சாரத்திலேயே குரு செல்கிறார்.
நல்லது நடக்கும். குழந்தை பாக்கியம் உண்டு. வேலைக்கான முயற்சிக்கு நல்ல
பலன் கிடைக்கும். சொத்துப் பிரச்னை தீரும்.

13.11.13 முதல் 26.1.14 வரை புனர்பூசத்திலும், 27.1.14
முதல் 11.3.14 வரை திருவாதிரையிலும் குரு வக்ர கதியில் செல்வதால், வருமானம்
உயரும். மகளின் திருமணம் சிறப்பாக நடந்தேறும். மகனுக்கு நல்ல வேலை
கிடைக்கும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வீடு கட்டி
கிரகப்பிரவேசம் செய்வீர்கள்.

வியாபாரத்தில், சந்தை நிலவரம் அறிந்து செயல்பட
வேண்டும். புது சலுகைகளால் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். கடையை
விரிவுபடுத்துவது, மாற்றுவது குறித்த முயற்சிகளில் இறங்குவீர்கள்.
பங்குதாரர்கள், தங்களின் பங்கை கேட்டு தொந்தரவு தருவர். உணவு, டிராவல்ஸ்,
பப்ளிகேஷன், அழகு சாதனப் பொருட்களால் லாபம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில், உழைப்புக்கு ஏற்ற இலக்கை அடைய
முடியாமல் ஆதங்கப்படுவீர்கள். அதிகாரிகளின் ஆதரவு கூடும். பணிச்சுமை
அதிகரித்தாலும் சளைக் காமல் செய்து முடிப்பது நல்லது. விரும்பத்தகாத
இடமாற்றம் வரும். எதிர்பார்த்த பதவி, சம்பள உயர்வு சற்று தாமதமாகக்
கிடைக்கும்.

கன்னிப்பெண்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நல்ல
வரன் அமையும். மாணவர்கள், கூடா நட்பைத் தவிர்க்கவும். விரும்பிய கல்வி
நிறுவனத்தில் போராடி இடம் பிடிப்பீர்கள். கலைத் துறையினர்,
விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவார்கள். அரசியல்வாதிகள் சகாக்களிடம்
அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி பணிச் சுமையை தந்தாலும், மனப்பக்குவத்தால் உங்களை வெற்றி பெற வைப்பதாக அமையும்.

பரிகாரம்: பழநி
மலையில் அருள்பாலிக்கும் முருகப் பெருமானை மகம் நட்சத்திரம் நடைபெறும்
நாளில் சென்று தரிசியுங்கள். ஏழை மாணவனின் கல்வி கட்டணத்தை செலுத்துங்கள்.
குருவருள் கூடி வரும்.



குருப்பெயர்ச்சி பலன்கள் -‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் Rishapa%281%29தாரணப்
புருஷராக வாழ்ந்து காட்டுபவர் நீங்கள். குரு பகவான் 28.5.13 முதல் 12.6.14
வரையிலும் உங்கள் ராசியை விட்டு விலகி, தன வீடான 2-ல் அமர்வதால்,
எதிர்பார்த்த பணம் வந்து சேரும். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால்
வீட்டில் அமைதி தவழும். சுப நிகழ்வுகளால் வீடு களைகட்டும். பிரிந்த தம்பதி
ஒன்றுசேர்வர். வீண் பதற்றம், பயம் நீங்கும். பெரிய நோய் இருப்பது போன்ற
பிரமை நீங்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். காணாமல் போன முக்கிய
ஆவணங்கள் கிடைக் கும். எதிர்மறை எண்ணங்கள், கூடா நட்பு விலகும். பேச்சில்
கனிவு பிறக்கும்.

குரு 6-ஆம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்ப்புகள்
அடங்கும். நல்லவர்களது நட்பும், ஆலோசனைகளும் புதிய பாதையில் உங்களைப்
பயணிக்க வைக்கும். அதிக வட்டிக் கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள்.
சோர்வு நீங்கும். குரு 8-வது வீட்டைப் பார்ப்பதால் மூச்சுத் திணறல், சளித்
தொந்தரவு நீங்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். 10-வது வீட்டையும்
பார்ப்பதால், புது வேலை கிடைக்கும். தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பதவி
வாய்க்கும். வழக்கு சாதகமாகும்.

குருபகவானின் சஞ்சாரம்:
28.5.13 முதல் 25.6.13 வரையிலும் உங்களின் சப்தம - விரயாதிபதியான
செவ்வாயின் மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்கிறார். உங்களின்
பலவீனத்தை சரிசெய்வீர்கள். தம்பதிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
மாமனார்- மாமியார் உதவுவர். பூர்வீகச் சொத்து சம்பந்தமான வில்லங்கம்,
பேச்சு வார்த்தையால் சுமுகமாகும். மனைவிவழி உறவினர்களால் நன்மை உண்டு.
தடைப்பட்ட திருமணம் கூடிவரும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.

26.6.13 முதல் 28.8.13 வரை; 27.1.14 முதல் 12.4.14 வரை
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்கிறார். மறைமுக எதிரிகளை
வீழ்த்தும் வல்லமை உண்டாகும். ஷேர் மூலம் பணம் வரும். காரியங்கள் கைகூடும்.
சொத்து சேரும்.

29.8.13 முதல் 12.11.13 வரை உங்களின்
அஷ்டம-லாபாதிபதியான குரு, தமது நட்சத்திரமான புனர்பூசத்தில் செல்வதால் வேலை
அதிகரிக்கும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். புது பொறுப்புகள்- பதவிகளை
ஏற்க வேண்டாம். சிலர், உங்கள் மீது வீண்பழி சுமத்தலாம்.

குரு 13.11.13 முதல் 26.1.14 வரை புனர்பூசம் நட்சத்
திரத்திலும், 27.1.14 முதல் 11.3.14 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர
கதியில் செல்கிறார். வீண் செலவு, கவலைகள் வந்து போகும்.

வியாபாரத்தில், கடந்த கால நஷ்டங்களை சரி செய்வீர்கள்.
பற்று - வரவு உயரும். பாக்கிகள் வசூலாகும். அனுபவம், பொறுப்பு மிகுந்த
ஆட்களை பணியில் அமர்த்துவீர்கள். பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம்
செய்வீர்கள். பங்குதாரர்களுடன் மோதல்கள் விலகும். ரியல் எஸ்டேட், கணினி
உதிரி பாகங்கள், கெமிக்கல் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில், அவமானங்களும் ஏமாற்றங்களும் விலகும்.
உங்களின் உழைப்பை அதிகாரிகள் புரிந்து கொள்வர். சக ஊழியர்கள் மத்தியில்
இருந்த அதிருப்தி விலகும். பதவி உயர்வுக்காக உங்கள் பெயர்
பரிசீலிக்கப்படும். சிலருக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்திலிருந்து
புது வாய்ப்பு வரும்.

கன்னிப்பெண்களுக்கு தடைப்பட்ட திருமணம் கூடிவரும்.
சிலருக்கு வேற்று மாநிலத்தில் வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு
செல்லும் வாய்ப்பு வரும். மாணவர்கள், உயர்கல்வியில் அதிக மதிப்பெண்ணுடன்
வெற்றி பெற்று எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேர்வார்கள். கலைத்
துறையினரின் புதிய முயற்சிகள் மூத்த கலைஞர்களின் ஆதரவால்
வெற்றியடையும். அரசியல்வாதிகளுக்குப் பெரிய பொறுப்புகள் தேடி வரும்;
தேர்தலில் வெற்றி கிட்டும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உங்கள் வாழ்வின் அதிர்ஷ்ட அத்தியாயத்தைத் துவக்கிவைப்பதாக அமையும்.

பரிகாரம்: சுவாமிமலை
ஸ்ரீமுருகப் பெருமானை சஷ்டி திதி நடைபெறும் நாளில் சென்று தரிசியுங்கள்.
தந்தையால் கைவிடப்பட்டவர்களுக்கு உதவுங்கள். மேன்மேலும் வெற்றி
பெறுவீர்கள்.



குருப்பெயர்ச்சி பலன்கள் -‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் Mithunaனிவான
பேச்சால் காரியம் சாதிப்பவர் நீங்கள். குரு பகவான் 28.5.13 முதல் 12.6.14
வரையிலும் ஜென்ம குருவாக அமர்வதால், ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.
பெரிய நோய் இருப்பதைப் போன்ற பயம் வந்து போகும். மருத்துவப் பரிசோதனை
அவசியம். ஒரே நாளில் நான்கைந்து வேலைகளைப் பார்க்க வேண்டி வரும்.
எவருக்காகவும் வாக்கு தவறவேண்டாம். காசோலை தருவதற்குமுன் வங்கி கையிருப்பை
சரிபார்ப்பது நல்லது. வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. குடும்பத்தில்,
சாதாரணப் பிரச்னைகளைப் பெரிதுபடுத்தாதீர்கள். கர்ப்பிணிகள் பயணங்களைத்
தவிர்க்கவும். முக்கிய பத்திரங்களில் கையெழுத்து இடும்போது சட்ட ஆலோசகரை
ஆலோசிக்கவும். உறக்கமின்மை மன அழுத்தம் தரக்கூடும்.

குரு 7-ஆம் வீட்டை பார்ப்பதால் தம்பதிக்கு இடையே அன்பு
குறையாது. சுபச் செலவுகள் அதிகரிக்கும். அரசு காரியங்கள் நல்லவிதத்தில்
முடியும். குரு உங்களின் 5-ஆம் வீட்டைப் பார்ப்பதால் மழலை பாக்கியம்
கிட்டும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள்
சாதகமாகும். பூர்வீகச் சொத்துப் பங்கு கைக்கு வரும். சகோதரர்களால் அலைச்சல்
இருந்தாலும் ஆதாயமும் உண்டு. குரு உங்களின் 9-ஆம் வீட்டைப் பார்ப்பதால்
பணப்புழக்கம் கணிசமாக உயரும். தந்தையாருக்கு மருத்துவச் செலவுகள் குறையும்.
பிதுர்வழி சொத்துப் பிரச்னை நல்லவிதத்தில் முடியும். வழக்கு சாதகமாகும்.

குருபகவானின் சஞ்சாரம்:
28.5.13 முதல் 25.6.13 வரையிலும், உங்கள் சஷ்டம- லாபாதிபதியான செவ்வாயின்
மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால், மறைமுக எதிர்ப்பு, வீண்
செலவுகள், சிறு அவமானம் வந்து செல்லும். கை- காலில் அடிபடலாம். சொத்து
வாங்கும்போது தாய் பத்திரத்தைச் சரிபார்க்கவும். அரசு விவகாரங்களில்
அலட்சியம் வேண்டாம்.

26.6.13 முதல் 28.8.13 வரை; 27.1.14 முதல் 12.4.14 வரை
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்வதால் சிறு மனசஞ்சலம், வீண்
டென்ஷன், பிறர் மீது நம்பிக்கையின்மை வந்து செல்லும். பூர்வீகச் சொத்துப்
பிரச்னை வெடிக்கும்.

29.8.13 முதல் 12.11.13 வரை, உங்களின் சப்தம-
ஜீவனாதிபதியான குரு தனது நட்சத்திரமான புனர் பூசத்தில் செல்வதால்,
மனைவியுடன் விட்டுக்கொடுத்துப் போகவும். கடந்த காலத்தை நினைத்து
வருந்துவீர்கள்.உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும்.

13.11.13 முதல் 26.1.14 வரை புனர்பூசம்
நட்சத்திரத்திலும்; 27.1.14 முதல் 11.3.14 வரை திருவாதிரை
நட்சத்திரத்திலும் குரு வக்ர கதியில் செல்வதால் வீண் பழி, ஏமாற்றம், பணப்
பற்றாக்குறை வந்து செல்லும். சாட்சி- கேரண்டர் கையப்பமிட வேண்டாம்.
வியாபாரத்தில், போட்டிகளைச் சமாளிக்க கடுமையாக உழைக்க வேண்டி வரும்.
வேலையாட்களால் விரயம் ஏற்படும். அறிமுகம் இல்லாத தொழிலில் முதலீடு
வேண்டாம். பங்குதாரர்களுடன் சச்சரவுகள் வரும்.

உத்தியோகத்தில் வளைந்துகொடுத்துப் போகவும். கூடுதல்
நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டியது வரும். வீண் பேச்சுகளைத்
தவிர்க்கவும். நீங்கள் பார்த்த வேலைக்கு வேறுசில�� உங்களுக்கு வெற்றி
தருவதாக அமையும்.

பரிகாரம்:
காஞ்சிபுரம்-உத்திரமேருருக்கு அருகிலுள்ள திருப்புலிவனம் எனும் ஊரில்
அருள்பாலிக்கும் சிம்ம தட்சிணாமூர்த்தியை தரிசியுங்கள். பழைய கல்வி
நிறுவனத்தைப் புதுப்பிக்க உதவுங்கள். நிம்மதி கிட்டும்.



குருப்பெயர்ச்சி பலன்கள் -‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் Kadakaமயோசிதமாகவும்
சாதுரியமாகவும் செயல்படுபவர் நீங்கள். குருபகவான் இப்போது 28.5.13 முதல்
12.6.14 வரை உங்களின் விரய ஸ்தானமான 12-ல் நுழைவதால், சிக்கனமாக இருக்க
நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். ஷேர் மூலம் பணவரவும்
உண்டு. சுபச் செலவுகளும் தொடரும். தம்பதிக்கு இடையே விட்டுக்கொடுத்துப்
போவது நல்லது. இரவு நேரத்தில் சொந்த வாகனத்தில் பயணிப்பதைத் தவிருங்கள்.

எளிய காரியங்களையும் போராடி முடிக்க வேண்டியது
இருக்கும். எவரிடமும் குடும்ப அந்தரங்க விஷயங்களைச் சொல்லவேண்டாம். வங்கிக்
காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்க வேண்டாம். தங்க ஆபரணங்களை இரவல்
வாங்கவோ, தரவோ வேண்டாம். குரு, உங்கள் சுகஸ்தானத்தைப் பார்ப்பதால்
விபத்துகளில் இருந்து மீள்வீர்கள். தாயாரின் ஆரோக்கியம் சீராகும். வீட்டு
லோன் கிடைக்கும். தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குரு
6-ஆம் வீட்டைப் பார்ப்பதால், மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். வி.ஐ.பி-களின்
நட்பு கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குரு 8-ஆம் வீட்டைப்
பார்ப்பதால், வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். அரசால்
அனுகூலம் உண்டு. சிலருக்கு வெளி மாநிலம், அயல்நாட்டில் வேலை கிடைக்கும்.

குருபகவானின் சஞ்சாரம்:
28.5.13 முதல் 25.6.13 வரை உங்கள் பிரபல யோகாதிபதியான செவ்வாயின்
மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால், திடீர் யோகம் உண்டாகும்.
பணவரவு அதிகரிக்கும். புது பொறுப்புகள், பதவிகள் கிட்டும். மகளுக்கு நல்ல
வரன், மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, வேலை கிடைக்கும்.

26.6.13 முதல் 28.8.13 வரை மற்றும் 27.1.14 முதல்
12.4.14 வரை ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்வதால் கட்டட
வேலையைத் துவங்குவீர்கள். அரசாங்க விஷயம் முடியும். தாயாருக்கு சிறு சிறு
அறுவை சிகிச்சைகள் வந்து போகும். வாகன ஓட்டுநர் உரிமத்தை சரியான நேரத்தில்
புதுப்பித்துக் கொள்ளுங்கள்.

29.8.13 முதல் 12.11.13 வரை உங்களின் சஷ்டம-
பாக்கியாதிபதியான குரு, தனது சுய நட்சத்திரமான புனர்பூசத்தில் செல்வதால்
புகழ், கௌரவம் உயரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தந்தையின் உடல் நலம்
சீராகும். அவர்வழி உறவினர்களுடன் பிணக்குகள் நீங்கும். பூர்வீகச் சொத்துப்
பிரச்னை தீரும். 13.11.13 முதல் 26.1.14 வரை குரு புனர்பூசம்
நட்சத்திரத்திலும், 27.1.14 முதல் 11.3.14 வரை திருவாதிரையிலும் வக்ர
கதியில் செல்வதால், எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். சொத்து வாங்குவீர்கள்.
செல்வாக்கு உயரும்.

வியாபாரத்தில், மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள்
எடுக்க வேண்டாம். கடையை விரிவுபடுத்தி நவீனமயமாக்குவீர்கள். தொழில்
ரகசியங்கள் வெளியே கசியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். துணி, மின்னணு- மின்சார
சாதனங்கள், புரோக்கரேஜ் வகைகளால் லாபம் அடைவீர்கள். பங்குதாரர்களை
அனுசரித்து போங்கள். வேற்று மாநிலம், வெளிநாட்டில் இருப்பவர் களுடன் புது
ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத் தில் அலட்சியம் வேண்டாம். மற்றவர்
வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது வரும். இரண்டாம் கட்ட அதிகாரியால்
சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். விருப்பப்பட்ட இடமாற்றம் உண்டு.

கன்னிப்பெண்களின் கனவு நனவாகும். சிலருக்கு, தடைப்பட்ட
உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு வரும். வேலையின் நிமித்தம் பெற்றோரைப்
பிரிவீர்கள். திருமணம் தடைப்பட்டு முடியும். மாணவ-மாணவியர், திறமையை
வெளிப்படுத்தி பரிசு- பாராட்டு பெறுவர். கலைத் துறையினரே! சிறிய
வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள், கோஷ்டிப்
பூசலில் சிக்கிக்கொள்ள வேண்டாம்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, புதிய அனுபவங்களை தருவதுடன், ஓரளவு முன்னேற்றம் அளிப்பதாகவும் அமையும்.

பரிகாரம்:
திருச்சி அருகே திருவெறும்பூரில் அருளும் ஸ்ரீஎறும்பீஸ்வரரையும்,
ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் வியாழக்கிழமையில் சென்று தரிசியுங்கள்.
விபத்துக்குள்ளானவர்களுக்கு உதவுங்கள். மகிழ்ச்சி தங்கும்.



குருப்பெயர்ச்சி பலன்கள் -‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் Simmaதுவங்கியதை
முடிக்கும் வரை துவளாதவர் நீங்கள். குரு பகவான் 28.5.13 முதல் 12.6.14 வரை
உங்கள் ராசிக்கு லாப வீடான 11-ல் தொடர்கிறார். வெளிச்சத்துக்கு
வருவீர்கள். தொட்டதெல்லாம் துலங்கும். பல மாதங்களாக கிடப்பில் கிடந்த
வேலைகளையும் உற்சாகத்துடன் முடித்துக் காட்டுவீர்கள். அந்தஸ்து உயரும்.
தன்னிச்சையாக முடிவெடுப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும்.
சகோதரிக்குத் திருமணம் நிச்சயமாகும். புது பதவிகள், பொறுப்புகளுக்கு
தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டை குரு பார்ப்பதால்
சுறுசுறுப்பாவீர்கள். சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக செய்து
முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். புது வீடு கட்டி
குடிபுகுவீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டு பயணம் சாதக மாக
அமையும். உங்களின் 3-ஆம் வீட்டை குரு பார்ப்பதால், இளைய சகோதரர் வகையில்
உதவிகள் கிடைக்கும். ஆடை- ஆபரணம் சேரும். வழக்கில் வெற்றி உண்டு. குரு
5-ஆம் வீட்டைப் பார்ப்பதால் புதிய சிந்தனைகள் தோன்றும். குழந்தை பாக்கியம்
கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். பூர்வீகச் சொத்தை
புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனை
நிறைவேறும்.

குருபகவானின் சஞ்சாரம்:
28.5.13 முதல் 25.6.13 வரை உங்கள் சுக - பாக்யாதிபதியான செவ்வாயின்
மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால், வீட்டை விரிவுபடுத்துவீர்கள்.
வங்கி லோன் கிடைக்கும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள்.
கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும்.

26.6.13 முதல் 28.8.13 வரை; 27.1.14 முதல் 12.4.14
வரையிலும் ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்கிறார். பெரிய
திட்டங்கள் நிறைவேறும். தைரியமாக முடிவுகள் எடுப்பீர்கள். வழக்கில் வெற்றி
பெறுவீர்கள்.

29.8.13 முதல் 12.11.13 வரையிலும், உங்கள் பூர்வ
புண்ணிய-அஷ்டமாதிபதியான குரு தன் நட்சத்திர மான புனர்பூசத்தில் செல்வதால்,
பண வரவு உண்டு. சொத்து வாங்குவது-விற்பது லாபமாக முடியும். கர்ப்பிணிகள்
படிகளில் ஏறுவது- இறங்குவதோ, கடினப் பொருட்களைத் தூக்குவதோ கூடாது.
பூர்வீகச் சொத்துப் பிரச்னை வெடிக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம்
தேவை. கடன் தீர புது வழி கிடைக்கும்.

13.11.13 முதல் 26.1.14 வரை குரு, புனர்பூசம்
நட்சத்திரத்திலும்; 27.1.14 முதல் 11.3.14 வரை திரு வாதிரையிலும்
வக்ரகதியில் செல்கிறார். எவருக்கும் உறுதிமொழி தர வேண்டாம். மற்றவர்கள்
விவகாரத்தில் தலையிடாதீர்கள். காய்ச்சல், யூரினரி இன்ஃபெக்ஷன்
வந்துசெல்லும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

வியாபாரத்தில், புதிய முதலீடுகளால் போட்டியாளர் களை
திகைக்கவைப்பீர்கள். வி.ஐ.பி-கள் வாடிக்கை யாளர்கள் ஆவர். பெரிய
நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களால், உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும்.
வியாபார சங்கத்தில் முக்கிய பொறுப்பில் அமர்வீர்கள். பங்கு தாரர்களால்
இருந்த பிரச்னைகள் ஓயும். புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். கம்யூனிகேஷன்,
புத்தகம், ஷேர், கட்டுமானப் பொருட்களால் லாபம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி
வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
சம்பளம் உயர்வு, சலுகைகள் கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் நல்ல
வாய்ப்புகள் தேடி வரும்.

கன்னிப்பெண்களுக்கு தடைப்பட்ட திருமணம் கூடிவரும்.
மாணவர்களுக்கு உயர்கல்வியில் வெற்றி நிச்சயம். கலைத் துறையினரே!
அலட்சியப்படுத்திய நிறுவனம் உங்களை அழைத்து பேசும். கிசுகிசுத் தொல்லைகள்
நீங்கும். அரசு கௌரவிக்கும். அரசியல் வாதிகள் தலைமைக்கு நெருக்கம்
ஆவார்கள்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி வெற்றிகளையும் வசதி-வாய்ப்புகளையும் பெற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்: திருவையாறு
அருகிலுள்ள திருப்பழனம் எனும் ஊரில் அருள்பாலிக்கும்
ஸ்ரீஆபத்சகாயேஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் நெய் விளக்கேற்றி
வணங்குங்கள். கட்டிடத் தொழிலாளிக்கு உதவுங்கள்.



குருப்பெயர்ச்சி பலன்கள் -‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் Kanniசிறந்த
சிந்தனைவாதி நீங்கள். குரு பகவான் 28.5.13 முதல் 12.6.14 வரை உங்களின்
10-ஆம் வீட்டில் அமர்கிறார். உத்தியோகம், பதவி, கௌரவத்துக்கு பங்கம் வருமே
என்று கலங்கவேண்டாம். ஓரளவு நன்மையே உண்டாகும். வி.ஐ.பி-கள் ஆதரவு
கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டில் வேலை அமையும். சில தருணங்களில்,
வேலைகளை முடிக்க முடியாமல் மன இறுக்கத்துக்கு ஆளாவீர்கள். குரு உங்கள்
ராசிக்கு 2-ஆம் வீட்டைப் பார்ப்பதால், சாதுரியமான பேச்சால் காரியம்
சாதிப்பீர்கள். மழலை பாக்கியம் கிடைக்கும். கடனாகக் கொடுத்து ஏமாந்த பணம்
வசூலாகும்.

குரு 7-ஆம் பார்வையால் சுக வீட்டைப் பார்ப்பதால்
தாயாருடனான மோதல்கள் விலகும். அவரது உடல்நலன் சீராகும். வீடு-வாகனம்
வாங்குவதற்கு வங்கிக் கடன் கிடைக்கும். குரு 9-ஆம் பார்வையால் 6-ஆம்
வீட்டைப் பார்ப்பதால், வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பழைய கடன்
பிரச்னைகளில் ஒன்று தீரும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். அரசால்
ஆதாயம் அடைவீர்கள். மகனுக்கு, நல்ல பெண் அமைவாள்.

குருபகவானின் சஞ்சாரம்:
28.5.13 முதல் 25.6.13 வரை உங்கள் திருதியாதி பதியும்-அஷ்டமாதிபதியுமான
செவ்வாயின் மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால் முன்கோபம், திடீர்
செலவு, சொத்துப் பிரச்னை, சகோதர வகையில் வருத்தம் வந்து செல்லும். எவரையும்
எவரிடமும் சிபாரிசு செய்ய வேண்டாம். வாகனத்தை இயக்கும் போது கவனம் தேவை.
ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

26.6.13 முதல் 28.8.13 வரை; 27.1.14 முதல் 12.4.14 வரை
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு செல்வதால், தெளிவாக முடிவெடுக்க
முடியாமல் குழம்புவீர்கள்.பூர்வீகச் சொத்தை விற்க நேரிடும். கர்ப்பிணிகள்
பயணங்களைத் தவிர்க்கவும்.

29.8.13 முதல் 26.1.14 வரை; 13.4.14 முதல் 12.6.14 வரை
உங்களின் சுக-சப்தமாதிபதியான குரு, தனது நட்சத்திரமான புனர்பூசத்தில்
செல்கிறார். தம்பதிக்கு இடையே மனஸ்தாபம் வந்துபோகும். தாயாருடன்
மனத்தாங்கல் வரும். அவருக்கு மருத்துவச் செலவுகள்
வந்துபோகும்.

குரு பகவான் 13.11.13 முதல் 26.1.14 வரை புனர்பூச
நட்சத்திரத்திலும், 27.1.14 முதல் 11.3.14 வரை திருவாதிரை
நட்சத்திரத்திலும் வக்ரகதியில் செல்கிறார். பண வரவு, சொத்துச் சேர்க்கை
உண்டு. சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஷேர் மூலம் பணம் வரும். புது
வேலை கிடைக்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து முக்கிய முடிவுகள்
எடுப்பீர்கள்.

வியாபாரத்தில் பெரிய முதலீடுகளோ, பெரிய அளவில்
எவருக்கும் கடன் தரவோ வேண்டாம். அனுபவமிக்க வேலையாட்கள் திடீரென பணியை
விட்டு விலகுவர். புதியவர்களை நம்பி புதிய தொழிலில் இறங்க வேண்டாம்.
பங்குதாரர்கள் ஏடாகூடமாகப் பேசுவர். ஏற்றுமதி, இறக்குமதி, பெட்ரோ கெமிக்கல்
வகைகளால் லாபம் உண்டு.

உத்தியோகத்தில், உங்கள் உழைப்பை பயன்படுத்தி வேறு சிலர்
முன்னேறுவர். உங்களைவிட அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடம்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் -‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் Empty Re: குருப்பெயர்ச்சி பலன்கள் -‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum