TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தாது விருத்தி லேகியம்

4 posters

Go down

SOLVED தாது விருத்தி லேகியம்

Post by msv6000 Wed May 22, 2013 3:38 pm

தாது விருத்தி லேகியம்


இந்த  தாது விருத்தி லேகியம் ஆண்மையை விருத்தி செய்வதில் மிக வல்லமை மிக்கது.இது வெறும் ஆண்மை விருத்தி லேகியம் மட்டுமல்ல. நம் உடலில் உள்ள சப்த தாதுக்கள் நல்ல நிலையில் இருந்தால்தான் உடலின் ஆரோக்கியத்தன்மை நிலைநாட்டப்படும்.
சப்த தாதுக்கள் என்னும் ஏழு வகைத் தாதுக்களைப் பற்றி தெளிவாகத் தெரிந்து தெளியுங்கள்.இவை சரியாக இருந்தால் உங்கள் உடலில் நோய்கள் என்பதே இல்லை.மது மேகம் எனபது சப்த தாதுக்களின் குறைவால்தான் நேருகிறது .அதாவது சர்க்கரை வியாதியால் தாதுக்கள் நலிந்து, உடலுறவு என்பது வெறும் மனதின் ஆசையுடன் நின்று விடுகிறது,உடல் தன் இயலாமையால் ஒத்துழைப்பதில்லை.
இந்த உடல் உறவில் இயலாமை காரணமாக பல குடும்பங்கள் விவாக ரத்து வரை செல்லுகின்றன.அதை இந்த தாது விருத்தி லேகியம் 48 நாட்களில் சரி செய்யும். பல கூடாத பழக்க வழக்கங்களால்  (கைப்பழக்கம் , அதீத உடலுறவு , பர ஸ்திரீகளுடன்  அதீத பழக்கத்தினால் வாங்கிய வெட்டையினால் ஏற்பட்ட உடல் பாதிப்பு )  உடல் ரீதியாக பாதிப்புற்றவர்களையும் இது விரைவில் குணமாக்கும்.
சப்த தாதுக்கள் ஏழு வகைத் தாதுக்கள்
1. சாரம்: சுரப்பிகள் சுரக்கும் நீர்கள். இந் நிண நீர்கள் உடலையும் மனதையும் செம்மையாக வைத்திருக்க சுரப்பது.
2. இரத்தம்: உடல்முழுவதும் சத்துக்களையும் , பிராண வாயுவை எடுத்துச் சென்று வழங்கி, கழிவுகளை திரும்ப எடுத்து வருவது. அறிவு, வன்மை, ஒலி, ஒளி இவற்றை உடலில் நிலைத்திருக்க செய்வது.
3. தசை: உடலுக்கு உருவத்தையும்,அழகையும் , சரியான வடிவையும் , உடலியக்கத்திற்கும் எலும்புக்கும் ஆதரவாகவும் உள்ளது.
4.கொழுப்பு:உறுப்புக்களுக்கு சக்தியை வழங்கும் மிகு சேமிப்பு கிடங்கு இது,ஒரு வாரம் வரை உணவு வழங்கப்படாமல் இருந்தாலும் தான் கரைந்து  உடலை நன்றாக அப்படியே வாடாமல் பார்த்துக் கொள்ளும். ஒவ்வொரு உறுப்பும் தத்தம் வேலையை செய்யும்பொழுது சுலபமாக இயங்க அவற்றிற்கு நெய்ப்பசை ஊட்டி உதவுகின்றது.
5. எலும்பு: உடலை கட்டாக நிறுத்தி வைப்பது இந்த  எலும்புச் சட்டகம் தான் மென்மையான உறுப்புகளை பாதுகாத்தல் உடல் அசைவிற்கு அடிப்படையாக விளங்குதல் முதலிய செய்கைகளை செய்வது.
6. மஜ்ஜை: எலும்புக்குள் நிறைந்த இவைகள் இரத்தச் சிவப்பணுக்களை உற்பத்தி செய்வது , மற்றும் எலும்பை வளப்படுத்துவது ,அதன் மூலம் உடலை பாதுகாக்க செய்வது.
7. சுக்கிலம்/சுரோணிதம்: கருத் தோற்றத்திற்கு முக்கியமாக இருந்து உடலுக்கு வன்மையை தருவது.ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கையைத் தீர்மானிப்பதும் , பெண்களுக்கு கரு முட்டையைத் தோற்றுவித்தலைத் தீர்மானிப்பதும் இந்தத் தாதுவே. ஆண்களுக்கு ஆண்மையையும் , பெண்களுக்கு பெண்மைத் தன்மையையும் தருவது இதுவே.
ஆண்பாகத்தில் கலை 3 ஆணிடத்தில் ஆகாசம், பிரகிருதி, ஆன்மவுணர்ச்சி - இம்மூன்றும் ஒருமித்துச் சுக்கிலமாய், அறிவு சத்தி வித்து என்னும் பாகத்தோடு தடித்து ஓர் மணியாம்,பெண்பாகத்தில் கலை 4 , பெண்ணிடத்தில் பிருதிவி, அப்பு, தேயு, வாயு என்னும் சூரியன், சந்திரன், அக்கினி, இயமன் என்னும் உயிர் ஆக நான்கும் சேர்ந்து சுரோணித மாயிற்று., ஆகக் கலை 7. ஒவ்வொரு கலையில் ஒவ்வொரு தாது அணுவாய்ச் சேர்ந்து 7-வது கலையில் கரு சம்பூரணமாய்ச் சப்த தாதுக்களும் கூடியபின் பிண்டமாகும் அதாவது உடலாகும்.
சூரியன் தலை, சந்திரன் நுரையீரல்& சிறு நீரகம் , செவ்வாய் எலும்பு மஜ்ஜை & ரத்தம், குரு என்ற வியாழன் என்ற தேவ குரு இதயம் &வயிறு, சனி  நரம்புகள்,புதன் அண்டம்& தோல் ,சுக்கிரன் என்ற அசுர குரு சஞ்சீவினி வித்தை {இறந்தவரை உயிர்ப்பிக்கும் வித்தை}தெரிந்த அசுர குரு  இனப் பெருக்க உறுப்புகளைப் பார்த்துக் கொள்ளுகிறார்.எனெனில் இறக்கும் பல உயிர்களுக்கு உடலை வேறொரு மனித உடலில் உருவாக்கி உயிர் பிறக்கக் காரணமாகிறார் அல்லவா????
நவ கிரகங்களில் ராகுவும் , கேதுவும் நிழல்களே , அவை தவிர மற்ற ஏழு கிரகங்களும்தான் சப்த தாதுக்களுடன் தொடர்புடையவை . இப்படி சப்த தாதுக்களும் சப்த கிரகங்களுடன் தொடர்பு கொண்டவை யாதலால்  இந்த சப்த தாதுக்களை சரி செய்தால் சப்த கிரகங்களும் சரியாகும். இவை ஒவ்வொன்றிற்கும் உள்ள மூலிகைகளைச் சேர்ப்பதால் உடலும் மனமும் , வாழ்வும் சரியாகும்.நமது ஜாதகம் , நமக்குச் சாதகமாகத் திரும்பும்.
உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் இந்த தாது விருத்தி லேகியத்தில் என்னென்ன மருந்துப் பொருட்கள் கலந்து இருக்கின்றன அவை உடலில் என்ன நலம் புரிகின்றன என்ற விவரத்தை கீழே கொடுத்துள்ளேன்.
1)பூனைக்காலி விதை:- இதை சப்த தாதுக்களையும் வளப்படுத்த உதவும் எல்லா லேகியங்களிலும் சேர்க்கும் அளவு வன்மை வாய்ந்தது.குறி விரைப்பில்லாமல் இருக்கும் நிலையைச் சரி செய்யும்.இரத்தத்தை பெருக்கி விந்தணு உற்பத்தியைத் தூண்டும்.உடலுறவில் தளரா நிலையைத் தரக் கூடையது .சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.கருமை நிற பூனைக்காலி விதையினால், கற்றாழை நாற்றமும் , இரத்தக் கிரகணியும் , கரப்பானும் நீங்கும், தாது புஷ்டியுண்டாகும்.
2)அமுக்கராக் கிழங்கு:- இது அசுவகந்தி என்று வடமொழியில் அழைக்கப்படுகிறது. அசுவம் என்றால் குதிரை . குதிரை போல் வலுவும் , அழகான சதையமைப்பும் , வலுவான உடலையும் , நரம்புகளுக்கு ஊக்கமும் , நரம்புகளை முறுக்கேற்றவும் உதவுகிறது . உடலுறவில் தளரா நிலையைத் தரக் கூடையது .சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.
இதை சீனர்கள் இந்திய ஜின்செங் என்றழைக்கும் அளவிற்கு மிக , மிக வலுவைக் கொடுக்கும். விளையாட்டு வீரர்களுக்கு சதை உடைவு , சவ்வுக் கிழிவு நேரிடும் போது இதைக் கொடுக்க உடனே அவை சரி செய்வதால்தான் இதை குணமனைத்தும் கொடுக்கும் அமுக்கினாங்கிழங்கென்றும் அழைக்கிறார்கள்.சிறிது துவர்ப்புச் சுவையுள்ள அசுவகந்திக் கிழங்கான அமுக்கராக் கிழங்கினால் ஷயம் , வாதசூலை ,  வாத கரப்பான் , பாண்டு ,சுரம் , வீக்கம் , துர்நீர் , மேக அழலை , வெட்டை , கட்டிகள் , சலதோஷம் இவைகள் போகும். வியதாபேதகாரி, பித்தகாரி,உதரவாதஹரகாரி , ஜடராக்கினிவர்த்தினி , காமவிர்த்தினி ,சமன காரி.மாதர்மேல் இச்சையும் பசியும் உண்டாகும்.
3)பூமிச்சக்கரைக் கிழங்கு:- உடலுக்கு வலுவான வலுவைத் தந்து இரத்தத்தை பெருக்கி விந்தணு உற்பத்தியைத் தூண்டும். உடலுறவில் தளரா நிலையைத் தரக் கூடையது .சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.மேலும் இதனால் பிரமேகம்,அதி உஷ்ணம் , வெள்ளை வீழல் , சுரம்  , மூலம் இவைகள் போகும்  .தேகம் பூரிக்கும்.
4) திரிகடுகு:-திரிகடுகுச் சூரணம் என்பது  சுக்கு , மிளகு , திப்பிலி மூன்றும் சேர்ந்த அற்புதக் கலவை .உடலுக்கு நல்ல பசியைக் கொடுத்து உடலை உரமாக்கும்.
5)திரிபலாதி:-திரிபலாதிச் சூரணம் என்பது  கடுக்காய் ,நெல்லி வற்றல்  , தான்றிக்காய்  மூன்றும் சேர்ந்த அற்புதக் கலவை .உடலுக்கு நல்ல உரத்தைக் கொடுத்து உடலை இறுக்கி இரும்பு போலாக்கும்.
6)விஷ்ணுகிராந்தி:-
விஷ்ணு கிராந்தியின் பெருமை பற்றி நாம் ஏற்கெனவே எழுதியுள்ள நமது வலைப்பூ  இணைப்பு  இதோ கீழே!இதனால் தேகத்தில் உள்ள பல பிணிகள் போகும்.உஷ்ண பேதி , சீத பேதி இவைகள் நீங்கும்.
7)நிலப்பனங்கிழங்கு:-
நிலப் பனங்கிழங்கு உடலுக்கு வலுவான வலுவைத் தந்து இரத்தத்தை பெருக்கி விந்தணு உற்பத்தியைத் தூண்டும். உடலுறவில் தளரா நிலையைத் தரக் கூடையது .சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.மேலும் இதனால் பிரமேகம்,அதி உஷ்ணம் , வெள்ளை வீழல் , சுரம்  , மூலம் இவைகள் போகும் .
8)தண்ணீர் விட்டான் கிழங்கு:-
சதாவேரிக் கிழங்கு என்றழைக்கப்படும் தண்ணீர் விட்டான் கிழங்கு உடலுக்கு வலுவான வலுவைத் தந்து இரத்தத்தை பெருக்கி விந்தணு உற்பத்தியைத் தூண்டும். உடலுறவில் தளரா நிலையைத் தரக் கூடையது .சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.மேலும் இதனால் பிரமேகம்,அதி உஷ்ணம் , வெள்ளை வீழல் , சுரம்  , மூலம் இவைகள் போகும் .இளமையைத் தக்க வைக்கும் .தேகம் பூரிக்கும்.
9) ஒரிதழ்த்தாமரை:-
ஓரிதழ்த் தாமரை சுக்கிலத்தையும் , அழகையும் உண்ணாக்கும். மேக ரோகங்களையும் , கிரகணியையும் நீக்கும்.காமவிர்த்தினி , மூத்திரவர்த்தனகாரி .இதைத் தினம் உண்ண வெள்ளை , வெட்டை , நீர்ச்சுருக்கு , நீரெரிச்சல் முதலிய மேக சம்பந்தமான பிணிகள் நீங்கும். மோரில் கலக்கி உண்ண கிரகணி முதலிய நோய்கள் தீரும்.
10)நில ஆவாரை:-
பற்பல மூல வாயுக்கள் ,சுரம் , சீழ்ச்சிரங்குகள் , வயிற்று வலி , வயிற்றை உப்பச் செய்கின்ற மலக்கட்டை நீக்கும். இதனால் புரஸ்த கோளம் (  PROSTATE GLAND ENLARGEMENT )என்பதிலுண்டாகும் வீக்கம் வற்றும்.புரஸ்த கோளம் என்பது ஆண்குறியின் அஸ்திவாரம் போன்றது .இந்த சுரப்பியின் வழியாகத்தான் சிறு நீர்ப்பாதையும் , விந்து வெளியேற்றும் பாதையும் செல்கின்றன .  சிறுநீர் வெளியேற்றும் போது விந்து வரும் பாதையை மூடி வைக்கும் .அதே போல் விந்து வெளியேறும் போது சிறு நீர்ப்பாதையை மூடி வைக்கும். வயதாவதின் காரணமாக இந்தபுரஸ்த கோளம் என்பதிலுண்டாகும் வீக்கம்(  PROSTATE GLAND ENLARGEMENT ) காரணமாக சிறு நீர் வெளியாகும் பாதை நிரந்தரமாக அடைபடுவதால் கீழ்க்கண்ட பல துயர் உண்டாகும் .

Prostate gland enlargement is a common condition as men get older. Also called benign prostatic hyperplasia (BPH) and prostatic hypertrophy, prostate gland enlargement can cause bothersome urinary symptoms. Untreated prostate gland enlargement can block the flow of urine out of the bladder and can cause bladder, urinary tract or kidney problems.
Prostate gland enlargement varies in severity among men and tends to gradually worsen over time. Prostate gland enlargement symptoms include:
• Weak urine stream
• Difficulty starting urination
• Stopping and starting while urinating
• Dribbling at the end of urination
• Frequent or urgent need to urinate
• Increased frequency of urination at night (nocturia)
• Straining while urinating
• Not being able to completely empty the bladder
• Urinary tract infection
• Formation of stones in the bladder
• Reduced kidney function
அதை இந்த தாது புஷ்டி லேகியத்தில் சேர்க்கப்படும் மருந்துகள்(நெருஞ்சில் , நீர்முள்ளி விதை , நிலாவரை , சதாவரிக் கிழங்கு ) நிரந்தரமாகத் தீர்க்கும்.
11)நெருஞ்சில் விதைகள்:-
நல்ல நெருஞ்சில் விதைக்கு மூத்திரக்கட்டு , சதையடைப்பு , கல்லடைப்பு முதலியவைகள் நீங்கும்.பொதுவாக நெருஞ்சில் விதைகள் சிறு நீரைப் பெருக்கும் .சிறு நீரைப் பெருக்கும் தன்மை உள்ள சித்த மருந்துகள் ஆண்மைத் தன்மையை பெருக்கும் . ஆனால் சிறு நீரைப் பெருக்கும் தன்மை உள்ள அலோபதி  மருந்துகள் ஆண்மைத் தன்மையை கெடுத்து அறவே இல்லாமலாக்கும்.
ஆண்குறி விரைப்புத் தன்மை  குறைபாடு பற்றி பலருக்கு அதிகம் தெரிவதில்லை. அந்த சந்தேகங்களைத் தீர்க்க கீழே உள்ள ஒளிப்பட தொடர் காட்சியை  ( SLIDE SHOW ) கீழே உள்ள இணைப்பை சொடுக்கி தெரிந்து கொள்ளுங்கள். [You must be registered and logged in to see this link.]
Diagnosing ED(ERECTILE DYSFUNCTION): Lab Tests
Several lab tests can help diagnose male sexual problems. Measuring testosterone levels can determine whether there is a hormonal imbalance, which is often linked to decreased desire. Blood cell counts, cholesterol levels, and liver function tests can reveal medical conditions that may account for ED.
12) நீர்முள்ளி விதை:-
பொதுவாக நீர்முள்ளி விதைகள் சிறு நீரைப் பெருக்கும்.சப்த தாதுக்களையும் போஷிக்கும் .சிறு நீரைப் பெருக்கும் தன்மை உள்ள சித்த மருந்துகள் ஆண்மைத் தன்மையை பெருக்கும் .நீர்முள்ளி விதைக்கு பிரமேகம் , அதிசாரம் , சுபசோபை , ஆயாசம் இவைகள் நீங்கும்.சுக்கிலமும் சப்த தாதுக்களையும் விருத்தியாகும். அந்தர்ஸ்நிக்தகாரி , மூத்திரவர்த்தனகாரி , காம விர்த்தினி.
இந்த நீர்முள்ளி விதையின் சிறப்பை உணர்த்தும் இரு காணொளிக்காட்சிகளைக் கொடுத்துள்ளேன். பார்த்து அதன் சிறப்பை உணர்ந்து பயன் பெறுங்கள். இதை பல சித்த வைத்தியர்கள் டிவியில் செய்து காட்டி இருப்பதைப் பார்த்திருப்பீர்கள் .ஆனால் இதுதான் அந்த மூலிகை என்று கூற மாட்டார்கள். இதோ அதை வெளிப்படையாக நாம் காட்டியுள்ளோம் .

தொடரவும்.
13)ஜாதிக்காய்:-
இந்த ஜாதிக்காய் மட்டுமே உடலுறவிற்கும், ஆண்மை விருத்திக்கும், குறி விரைப்புக்கும் மிகப் பலமான பலம் அளிக்க வல்லது. ஒரு முருங்கை மரத்தில் சதுரமாக வெட்டி த் துளைத்து அதற்குள் ஒரு சாதிக்காயை வைத்து அதே முருங்கைக் கட்டையால் மூடி ஒரு துணியால் மூடி காற்றுப் புகாமல் கட்டி,  வைத்து 48 நாட்கள் கழித்து எடுத்து , அதில் ஒரு சிறு துண்டு எடுத்து 5 வெற்றிலை , சிறு துண்டு கொட்டைப் பாக்கு , தேவையான அளவில் சுண்ணாம்பு , ஒரு மொட்டு நீக்கிய கிராம்பு, சிறு துண்டு சாதிப் பத்திரி , வைத்து தாம்பூலம்  போட்ட பின் நன்கு சுண்டக் காய்ச்சிய பாலருந்தினால் அருமையான ஆண்மை எழுச்சியுண்டாக்கும்.
14) அதிமதுரம்:-அதிமதுரம் பெயரிலேயே மதுரம் கொண்டது. மதுரம் என்றால் இனிமையானது என்று பொருள்  அதி மதுரம் என்றால் அதீதமான இனிமையானது என்று பொருள்.இது உடலில் தனது மதுரத் தன்மையை பரவவிட்டு உடலை மிக,மிக இனிமையாகவும் வலுவாகவும் வைத்திருக்கும்.இந்த அதி மதுரம் ஆயுதங்களினால் உண்டான காயம் , வாதாதிகளாற் பிறந்த நிஜ விரணம் ,நாவறட்சி , வெண்குட்டம் , பயித்தியம் , நேத்திர நோய் , உன்மாதம் , விக்கல்  ஐந்து விதமான வலிகள் , பயித்தியம் ,எலும்புருக்கி , மூத்திர கிரிச்சரம் , கிரிச்சரம் , வெட்டை , மத மூர்ச்சை , பித்த விஷ பாகம் , சுரம் , வாத சோணிதம் , காமாலை , தாவர சங்கம விஷங்கள் , குய்ய ரோகம் , சுக்கில நஷ்டம் , புகையிருமல் ,முகவாதம்,சிர நோய் , ஓஷ்ட ரோகம் , சோம ரோகம் , ஸ்தன வித்திரிக் கட்டி (மார்பக புற்றுக்கட்டிகள் ) , இவைகள் போகும்.இது கபஹரகாரி , அந்தர்ஸ்நிக்தகாரி , இளகு மலகாரி , ரக்தஸ்தம்பனகாரி , ஸோணகாரி , பித்தகாரி , தாதுஷீணரோதி போன்ற செய்கைகள் கொண்டது .
15) பாதாம் பருப்பு:-
பொதுவாக விதைகள் , பருப்புக்கள், கொட்டைகள் ஆண்மை வீரியத்தைப்  பெருக்கும் .அதிலும் பாதாம் பருப்பு இதில் மிகச் சிறந்தது.இதை வாதுமைப்பருப்பு,அடப்பம் வித்து  என்றும் அழைப்பார்கள்.கலவியில் அதிக விருப்பம் உண்டாகும்.இது அந்தர்ஸ்நிக்தகாரி , காமவிர்த்தினி போன்ற செய்கைகள் கொண்டது .இரவில் தண்ணீரில் போட்டு ஊற வைத்து காலையில் 4 முதல் 6 பருப்புகள் வரை சாப்பிட்டு வர உடலிலும்  , இரத்தத்திலும் உள்ள அதீத கெட்ட கொழுப்பு குறையும்.உடல் உள்ளுறுப்புக்கள் சுத்தப்படுத்தப்படுவதுடன் , உள்ளழலையும் சாந்தப்படுத்தும் (உள் அழல் என்பது உள் உஷ்ணம் அதீதமான பெண் புணர்ச்சியால் வந்த வெட்டை , மற்றும் கட்டில்லாத கைப்பழக்கம் இவற்றால் அதிகப்பப்பட்டு உடலை சிதைக்கும் நிலையே இது ).தலை நரம்புகள் , மூளை , கண்கள் முதலியவை பலம் பெறும்.மார்பு எரிச்சல் , இருமல் , உள்வறட்சி , சுவாசம் , சூலை , உதிரச் சிக்கல் முதலியவை குணமாகும்.
16) பிஸ்தா பருப்பு:-

நீ பெரிய ஆளா?? என்று  கேட்பதற்கு பதிலாக  நீ பெரிய பிஸ்தாவா??? என்று கேட்பார்கள் .பருப்புக்களில் பிஸ்தா அவ்வளவுசிறப்பு வாய்ந்தது. இது பலகாரி , காமவிர்த்தினி . பிஸ்தாப் பருப்பை  உண்பவர்களுக்கு பலத்தையும் , விந்து கிளர்ச்சியும் ,காம விருத்தியை உண்டாக்கும்.
17) செம்பருத்திப் பூ:-செம்பருத்திப் பூ இதயத்துக்கு வலுவை ஊட்டி , உடலுறவின் போது இரத்த அழுத்தத்தை ஒரு நிலையில் வைத்து , உறுப்பின் விரைப்பை நிலைநாட்டுகிறது .பொதுவாக இதயத்தை சரி செய்யும் மருந்துகள் சப்த தாதுக்களையும் வளப்படுத்துகிறது .இதனால் உடலின் பொதுவான ஆரோக்கியம் மேம்படுகிறது.
18)வெண் தாமரை:- 19) வெளிமடக்கி:-தொட்டாற் சுருங்கிச் செடியை உடலில் எந்த விதமாகவாவது சேர்த்துச் சாப்பிட்டுவிட்டால் அதன் பின்னர் ஆண்குறியின் விரிவடையும் தன்மை பாதிக்கப்பட்டே இருக்கும்.சில பர ஸ்திரீப் பெண்கள் தொட்டாற் சுருங்கியை சாப நிவர்த்தி எடுத்து அதன் வேரை செய்து இடுப்பில் கட்டி கொள்வார்கள் .அவர்களைத் தொட்டாலே  குறி விரைப்பிருக்காது.அவர்கள் உன்னால் இது கூட முடியவில்லையா என்று கூறிவிட்டு பணத்தை வாங்கிக் கொண்டு கம்பி நீட்டிவிடுவார்கள்.அவர்கள் உடல் நோகாமல் பணம் சம்பாதிக்க இப்படியும் காரியங்கள் செய்கிறார்கள்.இவர்களிடம் போய் உடலுறவிற்கு முயற்சி செய்பவர்கள் மன ரீதியாக ’’நமக்கு  பெரும் ஆண்மைக் குறைவு ஏற்பட்டுவிட்டதோ என்று எண்ணுவார்கள்”.இது மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும்.உண்மை அதுவல்ல .
இது போன்று சக்தியுள்ள தொட்டாற்சுருங்கியை எதிர்த்து நிற்பது இந்த வெளி மடக்கி .இது தொட்டாற் சுருங்கிக்கு நேர் எதிரான செயல்பாட்டை உடையது . தொட்டாற் சுருங்கி உள்பக்கம் சுருங்கும்  வெளிமடக்கி நேர் எதிராக வெளிப்பக்கம் மடங்கும்  செயல்பாட்டை உடையது . தொட்டாற்சுருங்கியை சாப்பிட்டதால் உண்டான குறி சுருங்கிய பாதிப்பை இது போக்குவதோடு , தொட்டாற் சுருங்கி வேரை காப்புக் கட்டி தாயத்தில் அடைத்து வைத்திருக்கும் பெண்களின் பாச்சாவும் இதனிடம் பலிக்காது , உடலுறவின் போது திடீரென குறி சுருங்கிப்  போகும் பாதிப்பையும் இது போக்கும்.இது என்னவென்று தெரியாதவர்களுக்கு படத்துடன் ஒரு பதிவு இனிமேல் வெளிவரும் பாருங்கள்.
20) அத்தி விதை:-பொதுவாக விதைகள் , பருப்புக்கள், கொட்டைகள் ஆண்மை வீரியத்தைப்  பெருக்கும் .அதிலும் அத்தி விதை இதில் மிகச் சிறந்தது.அத்தி என்றால் யானை . யானை போல பலமும், விந்து விருத்தியும் , போக சக்தியையும் தர வல்லது.
21)அரச விதை:-பொதுவாக விதைகள் , பருப்புக்கள், கொட்டைகள் ஆண்மை வீரியத்தைப்  பெருக்கும் .அதிலும் அரச  விதை இதில் மிகச் சிறந்தது.மரங்களின் அரசன் இது . இதன் விதை விந்து விருத்தியையும்  தந்து , விந்தணுப் பெருக்கத்தையும்,தந்து குழந்தைப் பேற்றையும் தர  வல்லது.”அரச மரத்தைச் சுற்றி வந்து அடி வயிற்றைத் தொட்டுப்பார்”  என்று பெண்களுக்குச் சொல்வார்கள். அரச மரக் காற்றே பெண்களின் கர்ப்பப் பையில் உள்ள நுண்கிருமிகளைக் கொன்று , கரு முட்டை நன்கு வளர்ச்சியுற உதவி , கரு முட்டையை வெளிப்படுத்தி கர்ப்பப் பையை தயார் நிலையில் வைத்து குழந்தைப் பேற்றைத் தர வல்லது .பொதுவாக இம்மரத்தை வளர்த்தாலே குழந்தைப் பேறு கிட்டும் என்று விருட்ச சாஸ்திரம் சொல்கிறது .இந்த மரத்தை வெட்டினால் குழந்தைப் பேறு இருக்காது என்றும் அது கூறுகிறது .இவ்வளவு பெருமை வாய்ந்த அரச விதை அற்புதமான ஆண்மை விருத்தியைத் தர வல்லது .
22) ஆலம் விதை:-பொதுவாக விதைகள் , பருப்புக்கள், கொட்டைகள் ஆண்மை வீரியத்தைப்  பெருக்கும் .அதிலும் ஆல  விதை இதில் மிகச் சிறந்தது.மரங்களின் பெரிய மரம் இது . இதன் விதை விந்து விருத்தியையும்  தந்து , விந்தணுப் பெருக்கத்தையும்,தந்து குழந்தைப் பேற்றையும் தர  வல்லது.பொதுவாக இம்மரத்தை வளர்த்தாலே குழந்தைப் பேறு கிட்டும் என்று விருட்ச சாஸ்திரம் சொல்கிறது .ஒரு படையையே இந்த மரம் தன்னுடைய நிழலில் காக்கும் அளவு பெரியதாக வளரும் தன்மை படைத்தது .தன் விழுதுகளால் எளிதில் விழாமல் அழியாமல் வெகுநாள் வாழும் தன்மை வாய்ந்தது. இவ்வளவு பெருமை வாய்ந்த ஆல  விதை அற்புதமான ஆண்மை விருத்தியைத் தர வல்லது .
23) முருங்கை விதை:-பொதுவாக விதைகள் , பருப்புக்கள், கொட்டைகள் ஆண்மை வீரியத்தைப்  பெருக்கும் .அதிலும் முருங்கை   விதை இதில் மிகச் சிறந்தது.இதை பாக்கியராஜ் ஏற்கெனவே மிகப்பிரபலப் படுத்திவிட்டார்.இவ்வளவு பெருமை வாய்ந்த முருங்கை விதை அற்புதமான ஆண்மை விருத்தியைத் தர வல்லது .
24) முருங்கைப் பூ:-பொதுவாக முருங்கையின் அத்தனை பாகங்களும் ஆண்மை வீரியத்தைப்  பெருக்கும் .அதிலும் முருங்கைப் பூ இதில் மிகச் சிறந்தது.இதை பாக்கியராஜ் ஏற்கெனவே மிகப்பிரபலப் படுத்திவிட்டார்.இவ்வளவு பெருமை வாய்ந்த முருங்கைப் பூ அற்புதமான ஆண்மை விருத்தியைத் தர வல்லது .
25) மதன காமப் பூ:-பெயரிலேயே மன்மதன் பெயரை உடைய மதனகாமப் பூ மன்மதனை மிக எளிதாக துணைக்கு அழைக்கும்.அற்புதமான எழுச்சியையும் ,ஆண்மை விருத்தியையும்  தர வல்லது .
26) பசு நெய்:-பசு நெய் இந்த மருந்துப் பொருட்களின் மருந்துத் தன்மை கெடாமல் வைத்திருப்பதோடு , மருந்துகளின் வீரியத்தையும் அதிகரித்து , மருந்துகளை லேகிய பதமாக்கி வைக்கும்.
27) தேன்:-தேன் இந்த மருந்துப் பொருட்களின் மருந்துத் தன்மை கெடாமல் வைத்திருப்பதோடு , மருந்துகளின் வீரியத்தையும் அதிகரித்து , மருந்துகளை லேகிய பதமாக்கி வைக்கும்.
28) பனங் கருப்பட்டி:-பனங்கருப்பட்டி இந்த மருந்துப் பொருட்களின் மருந்துத் தன்மை கெடாமல் வைத்திருப்பதோடு , மருந்துகளின் வீரியத்தையும் அதிகரித்து , லேகிய பதமாக்கி வைக்கும்.
29) பால் மற்றும் தேங்காய்ப் பால்:-பால் மற்றும் தேங்காய்ப்பால்  இந்த மருந்துப் பொருட்களின் மருந்துத் தன்மை கெடாமல் வைத்திருப்பதோடு , மருந்துகளின் வீரியத்தையும் அதிகரித்து , லேகிய பதமாக்கி வைக்கும்.குறிப்பாக தேங்காய்ப்பால் மிக சிறப்பானது .குதம்பைச் சித்தர் தனது  பாடலில் “ மாங்காய்ப் பாலுண்டு மலைமேல் இருப்போர்க்கு தேங்காய்ப்பால் ஏதுக்கடி குதம்பாய் தேங்காய்ப்பால் ஏதுக்கடி ” என்பார் .அவ்வளவு சிறப்பானது தேங்காய்.
30)நத்தைச் சூரி:-31)அயக்காந்த செந்தூரம்:-அயம் என்றால் இரும்பின் தாது , காந்தம் என்றால் இரும்பின் காந்த சக்தியுள்ள தாது , இது அளவில் மிக சிறிய அளவு இந்த லேகியத்தில் சேர்க்கப்படுகிறது கிலோவிற்கு 10 கிராம் என்ற அளவில் சேர்க்கப்படுகிறது .இது இரத்தத்தை விருத்தி செய்து உடலிலுள்ள சப்த தாதுக்களையும் போஷிக்கும்.ஏனெனில் இரும்புச் சத்தை அடிப்படையாக வைத்தே இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் செயல்பாடு இருக்கிறது .
அதனடிப்படையில்தான் உடலுறுப்புக்களுக்கு பிராண வாயுவின் கடத்துதல் அமைகிறது. அயக்காந்தத்தை பலமுறை மூலிகைகளிலும் ( கரிசலங்கண்ணி , சீந்தில் கொடிச்சாறு ,சுத்த கங்கை இவற்றால் புடமிடப்படுகிறது ) இவற்றில் உலோகச் சத்து மட்டுமே உப்பாக மாற்றப்பட்டு இருக்குமே தவிர உலோகங்கள் இராது .இவை அற்புதமான உடல் பலத்தை வழங்க வல்லது .
32)சிறு செருப்படையில் செய்யப்பட்ட சிலாசத்து பற்பம்:- பொதுவாக  கிராமங்களில் “தேவடியாள் வீட்டிற்குப் போனவனை செருப்பாலடி” என்பார்கள் .அது செருப்பாலடிக்க வேண்டும் என்று பொருளல்ல. தேவடியாள் வீட்டிற்குப் போய் பால் வியாதிகளை (VENEREAL DISEASE  , V.D.R.L , SEXUALLY TRANSMITTED DISEASES ) வாங்கி வரும் இந்த நபர்களை சிறு செருப்படை என்னும் மூலிகையால் அடிக்க பால் வினை நோய்களெல்லாம் பறந்தோடும்.பொதுவாக பால் வினை நோய்கள் தவறு செய்தவர்களோடு போவதில்லை.
இதற்கு அலோபதியில் ஊசி மருந்தாக பெனாடியுர் - 6 லட்சம் , பெனாடியுர் - 10 லட்சம் ,பெனாடியுர் -20 லட்சம் , அமாக்சிலின் -500 போன்ற ஆண்டிபயாட்டிக் மருந்துகளில் ஏதாவதொன்றை கொடுத்து அறிகுறிகளை அடக்கிவிடுவார்கள் .ஆனால் அது அப்போதைக்கடங்கி இருந்து இரத்தத்தில் மேகமாக ஏறி விந்தில் சேர்ந்து 21 தலைமுறையை பாதிக்கும் .
எனவே சிறு செருப்படை அல்லது கடு புடு வாணம் கண்டிப்பாக இப்படி பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.இல்லாவிடில் அவர்கள் பரம்பரையே பாதிக்கப்படும்.இந்தச் சிறு செருப்படைச் சாற்றில் புடம் போடப்பட்ட சிலாசத்து (சிலா என்றால் மலை , மலையின் சத்து இது , இமய மலைப் பகுதிகளில் வெட்டி எடுக்கப்படுகிறது ) இந்தப் பால்வினை நோய்களை கதறி ஓடவைக்கும்.பால் வினை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இதை அதிகம் சேர்த்துக் கொடுக்கச் சொல்லுங்கள் .இது அளவில் மிக சிறிய அளவு இந்த லேகியத்தில் சேர்க்கப்படுகிறது கிலோவிற்கு 100 கிராம் என்ற அளவில் சேர்க்கப்படுகிறது .
இது இரத்தத்தை விருத்தி செய்து உடலிலுள்ள சப்த தாதுக்களையும் போஷிக்கும்.இயற்கையாக வெட்டி எடுக்கப்படு சிலாசத்தை டாபரில் ரா ஷீலாஜித்( RAW SHILAJIT ) என்று மாத்திரையாக கொடுக்கிறார்கள் .அது அவ்வளவு சிறப்பானதல்ல. பக்குவப்படுத்தப்பட்ட மருந்தே சிறப்பானது .சிலாசத்து பற்பம் சோற்றுக் கற்றாழையில் புடமிடப்பட்டது டாம்ப்கால் ( TAMPCOL ) நிறுவனத்தின் தயாரிப்புக்கள் கடையில் கிடைக்கும் .இது மிகச் சிறப்பானது .
இது வெட்டையின் அறிகுறிகளான மூத்திர கிரிச்சரம் , கல்லடைப்பு ,  சதையடைப்பு , புரஸ்த கோள வீக்கம் , சிறுநீரக வீக்கம் , சிறு நீரகத் தொற்று , சிறு நீர்ப்பாதைத் தொற்று , வெட்டை , வெள்ளைப் பாடு , வெள்ளை வீழல் , விந்து சிறு நீரோடு போதல் , விதைகள் தொற்றால் பாதிக்கப்பட்டு வீங்குதல் , விந்துப் பாதையில் கிருமித் தொற்று போன்றவைகளை அழகாக தொந்தரவில்லாமல் குணமாக்கும்.
பால் வினை நோய்கள் பற்றித் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட இணைப்புகளைப் பார்வையிடுங்கள்.
[You must be registered and logged in to see this link.]
33)சாரப்பருப்பு:-பொதுவாக விதைகள் , பருப்புக்கள், கொட்டைகள் ஆண்மை வீரியத்தைப்  பெருக்கும் .அதிலும் பாதாம் பருப்பு இதில் மிகச் சிறந்தது.சாரப் பருப்பு நல்ல சாரமுள்ள பருப்பு என்பதால்தான் இந்தப் பெயர் பெற்றுள்ளது .சாரப் பருப்பினால் சிறுநீரைப் பற்றிய கடுஞ்சுருக்கு , மூத்திரக் கடுப்பு , சலப் பிரமேகம் நீங்கும் , நீற்றுப் போன சுக்கிலம் (விந்து ) இறுகும்  , இரசகந்தகங்களைத் தின்றவர்களுக்கு அதன் அழலையை ஆற்றும் . மூத்திர வர்த்தனகாரி , காம விர்த்தினி , சமனகாரி போன்ற செய்கைகளை உடையது .
மேற்படி லேகியத்தை காலை மாலை வெறும் வயிற்றில் ஒரு பெரு நெல்லிக்காயளவு சுவைத்துச் சாப்பிட்டு , சுண்டக் காய்ச்சிய பாலை அருந்திவர மேலே கண்ட சுப பலன்கள் உண்டாகி நல்ல தாது விருத்தி உண்டாகும் . மேலான போக சக்தி தேவைப்படுபவர்கள் இரவு படுக்கப் போகும் முன் ஒரு பெரு நெல்லிக்காயளவு சாப்பிட்டு பேரீச்சம் பழம் , அத்திப்பழம் , கிஸ்மிஸ் பழம் ,அல்லது கருப்பு கிஸ்மிஸ் பழம்  (ஆங்கூர் திராட்சை ) பிய்த்துப் போட்டு சுண்டக் காய்ச்சிய பால் 100 மிலி குடிக்க அன்று மிகமிக நல்ல இரவாகும் .

என்றும் அன்புடன்,
ஹெர்பல் கண்ணன்.
9943205566.
கான்சாபுரம்,வத்திராயிருப்பு.சதுரகிரி மலை அடிவாரம்.
avatar
msv6000
உதய நிலா
உதய நிலா

Posts : 18
Join date : 14/09/2010

Back to top Go down

SOLVED Re: தாது விருத்தி லேகியம்

Post by Tamil Wed May 22, 2013 8:52 pm

நன்றி நன்றி ................. [You must be registered and logged in to see this image.]
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

SOLVED Re: தாது விருத்தி லேகியம்

Post by mmani Thu Jun 27, 2013 10:30 pm

yesyesyes
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

SOLVED Re: தாது விருத்தி லேகியம்

Post by மாலதி Thu Nov 07, 2013 8:05 am

hmmm hmmm hmmm hmmm


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

SOLVED Re: தாது விருத்தி லேகியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum