TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழக பட்ஜெட்: மளிகை பொருட்களுக்கு வரி விலக்கு

Go down

தமிழக பட்ஜெட்: மளிகை பொருட்களுக்கு வரி விலக்கு Empty தமிழக பட்ஜெட்: மளிகை பொருட்களுக்கு வரி விலக்கு

Post by piraba Fri Mar 19, 2010 6:07 pm

சென்னை : புதிய சட்டசபையில், தமிழக அரசின் வரும் நிதியாண்டுக்கான
பட்ஜெட்டை நிதியமைச்சர் அன்பழகன் இன்று காலை தாக்கல் செய்தார். விலைவாசி
உயர்வை கருத்தில் கொண்டு பருப்பு, மஞ்சள் உள்ளிட்ட மளிகை பொருட்களுக்கு
வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. காலை சரியாக 9.25 மணி அளவில் முதல்வர்
கருணாநிதியும், நிதி அமைச்சர் அன்பழகனும் , அமைச்சர்களும்,
எம்.எல்.ஏ.,க்களும் சட்டசபைக்கு வந்தனர். முதலாக மங்கள வாத்தியத்துடன்
துவங்கியது. கூட்டம் துவங்கியதும் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு
தெரிவித்து கோஷம் எழுப்பினர். தொடர்ந்து சபையில் இருந்து வெளிநடப்பு
செய்தனர்.

சபையில் முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டு : முதல்வர்
கருணாநிதிக்கு நிதி அமைச்சர் அன்பழகன் புதிய சட்டசபை கட்டடம் சிறப்பாக
கட்டியமைக்கு பாராட்டு தெரிவித்து பேசினார். இந்த கட்டடம் திராவிட
பாரம்பரிய கலை நுட்பத்துடன் உருவாக்கிட அரும்பாடுபட்ட முதல்வர்
கருணாநிதிக்கு இந்த சபையில் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். உலக
அளவில் பசுமை கட்டடமாக உருவாகி உலகம் போற்றும் தரம் பெற்றுள்ளது. என்றார்.
தொடர்ந்து பேசுகையில் விவசாயிகள் நலனில் தமிழக அரசு முழு அக்கறை
செலுத்துகிறது. விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்து உதவி செய்து
வருகிறது. இதன்படி வரும் இந்த நிதி ஆண்டிலும் வட்டியில்லா பயிர்க்கடன்
வழங்கப்படும் இதற்கு ரூ 140 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மொத்த வருவாய் : 63 ஆயிரத்து 91.74 கோடி ரூபாய் .


செலவினம்: 66 ஆயிரத்து 488.19 கோடி ரூபாய் .


பற்றாக்குறை : 3 ஆயிரத்து 396 .45 கோடி ரூபாய் .

கரும்பு டன் கொள்முதல் விலை உயர்வு : விவசாயிகள்
நலன் அக்கறையுடன் செயல்படும் தமிழக அரசு , நீண்ட காலமாக உள்ள கோரி்ககைகள்
தொடர்பாக ஏற்கப்பட்டு கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ஆயிரத்து 550
முதல் ஆயிரத்து 650 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விளைபொருட்களுக்கு இயற்கை
உரங்கள் பயன்படுத்தப்படும் நிலங்கள் ஏக்கர் மேலும் அதிகரிக்கப்படும்.
விவசாயிகள் கொண்ட சுய உதவிக்குழு அமைக்க ரூ. 10 கோடி ஒதுக்கீடு
செய்யப்படுகிறது.
நீர்ப்பாசனம் - வெள்ளத்தடுப்பு திட்டம்: தாமிரபரணி -
நம்பியாறு இணைப்பு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். தஞ்சாவூர், நாகை
கடலூர் பகுதிகளில் நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளத்தடுப்பு திட்டத்திற்கு
ரூ.. 376 கோடியும், கடலூர்- விழுப்புரம் வெள்ளத்தடுப்பு திட்டத்திற்கு ரூ.
164 கோடியும் மொத்தம் ரூ. 609 கோடி ஒதுக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும்
ஏரிகள் சீரமைக்க ரூ. 439 கோடி ஒதுக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் தூர்
வாரும் பணியை துரிதப்படுத்தப்படும். ராமநாதபுரம், மாவட்டத்தில் புதிய அணை
கட்டப்பட்டு புதிய கால்வாய் அமைக்கப்படும். இதன் மூலம் 4 ஆயிரத்து 200
ஏக்கர் நிலம் பயனடையும். இதற்கு ரூ. 18 கோடி ஒதுக்கப்படுகிறது.

கல்வி- பள்ளிகள் தரம் உயர்த்த முன்னுரிமை : தமிழக
அரசின் கோரிக்கையை ஏற்று நிதியை உயர்த்தி வழங்கிய மத்தியஅரசுக்கும், 13 ம்
நிதி பரிந்துரைக்குழுவுக்கும் தமிழக அரசு சார்பில் நன்றியை
தெரிவித்துக்கொள்கிறோம். பயங்கரவாதம் தடுப்பதில் முக்கியத்துவம்
அளிக்கப்பட்டு வருகிறது. இதன்படி காவல் துறை நவீனப்படுத்தப்படும்.
போலீசாருக்கு மேலும் 2 ஆயிரம் குடியிருப்புக்கள் அமைக்கப்படும். இதற்கென
ரூ. 120 கோடி ஒதுக்கப்படுகிறது. காவல் துறை சீரமைப்பிற்கு 2 ஆயிரத்து 962
கோடி ஒதுக்கப்படும். நீதித்துறை மேம்பாட்டுக்கு ரூ 256 கோடி
ஒதுக்கப்படுகிறது.
ஆசிரியர் நலன் காத்திட அரசு முழு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு
பதவியேற்றவுடன் ஒட்டு மொத்த ஊதியம் பெற்று வந்த 42 ஆயிரத்து 924
ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கியது. கடந்த 4 ஆண்டுகளில் 64
ஆயிரத்து 096 ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் புதிதாக நியமனம்
செய்யப்பட்டுள்ளனர். முல்லை பெரியாறு விஷயத்தில் தமிழகத்தின் தற்போதைய
நிலையே நீடிக்கும். புதிதாக 3 ஆயிரம் பஸ்கள் வாங்கப்படும். தமிழில்
பெயரிடப்படும் திரைப்படங்களுக்கு வரி்ச்சலுகை . அரவாணிகள் நலனுக்கு
ஒரு கோடி.

இலவச டிக்சனரி : வரும் நிதியாண்டில் 200
நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். 122 உயர்
நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக உயர்த்தப்படும். பள்ளிகள்
சீரமைப்பிற்கு ரூ. 250 கோடியும், அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் கல்விக்கு
ரூ 50 கோடி ஒதுக்கப்பட்டு வரும் கல்வி ஆண்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும்
கம்ப்யூட்டர் வழங்கப்படும். சம்சீர் கல்வி வரும் கல்வி ஆண்டில்
கொண்டுவரப்படும். ஆங்கில அறிவை பெருக்கும் விதமாக அரசு பள்ளிகளில்
படிக்கும் மாணவர்களுக்கு இலவச டிக்சனரி ( அகராதி ) வழங்கப்படும். இதற்கு
10 கோடி ஒதுக்கப்படும்.

கோவையில் புதிய சாலைகள் அமைக்க திட்டம்: கோவையில்
போக்குவரத்து நெரிசலை தீர்க்க முழு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி
ரூ. 284 கோடி செலவில் மேற்கு வெளி திட்ட சாலை அமைக்க
திட்டமிடப்பட்டுள்ளது. 26 கி. மீட்டர் தூர புதிய சாலை அமைக்கப்படும் .
மேலும் புதிய புறவழிச்சாலைகளும் அமைக்கப்படும். கோவை, நீலகிரி மாவட்ட
மக்களின் நீண்ட கால கோரிக்கையான கோவை- மேட்டுப்பாளையம்- 4 வழிச்சாலை
திட்டம் அமைக்க தமிழக துணை முதல்வர் மத்திய அரசிடம் எடுத்து சொல்லி நிதி
ஒதுக்கீடு பெற்றுள்ளார். இதன் படி இந்த பணிக்கு ரூ .50 கோடி ஒதுக்கப்பட்டு
சாலை அமைக்கும் பணி உடனடியாக துவக்கப்படும்.

இலங்க‌ை தமிழர் நலன் காத்திட 100 கோடி : இலங்க‌ை
தமிழர் நலன் காத்திட ரூ 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்கள் தேவைகள்
நிறைவேற்றப்படும். வரும் நிதியாண்டில் டிசம்பர் மாதத்திற்குள்
அனைவருக்கும் இலவச டி.வி.,க்கள் வழங்கப்பட்டு விடும். இதற்கு ரூ 500 கோடி
ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதுவரை 1 கோடியே 82 லட்சத்து 80 ஆயிரம் பேர்
டி.வி.,க்க்ள் பெற்றுள்ளனர். சென்னை பெருநகர வளர்ச்சி்ககும்,
போக்குவரத்துக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும். ஏழை மக்களுக்கு திருமண
உதவித்தொகை ரூ 25 ஆயிரமாக உயர்த்தப்படும். தமிழகத்தில் மேலும் 50 ஆயிரம்
சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்படும். குடிசை பகுதியில் சுய உதவிக்குழு
அமைக்க முன்னுரிமை வழங்கப்படும். 124 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஊனமுற்றோர் நலம் காத்திட கூடுதல் நிதி : தமிழக அரசு
ஊனமுற்றவர்கள் நலனில் முழு அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது. அவர்கள்
வாழ்வில் ஒளியேற்ற கடந்த காலத்தில் ஒதுக்கப்பட்ட நிதி 49 கோடியில் இருந்து
வரும் நிதியாண்டில் 176 கோடி ஒதுக்கப்படுகிறது. ஏற்கனேவே மாதம் 500 வீதம்
50 ஆயிரம் பேர் உதவி தொகை பெற்று வருகின்றனர். இதில் யானைக்கால் நோய்
கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம்தோறும் ரூ. 400 உதவித்தொகை
வழங்கப்படும். இதன் மூலம் அவர்கள் நலன் பேணி பாதுகாக்கப்படும். மாற்று
திறன் படைத்தோருக்கென தனி துறை உருவாக்கப்பட்டு முதல்வர் மேற்பார்வையில்
செயல்படும். முதியோர் உதவித்தொகை வழங்குவது தொடர்பான திட்டம் தொடர்ந்து
செயல்படுத்தப்படும்.


சிறுபான்மை- பிற்படுத்தப்பட்டோர் நலன் : சிறுபான்மை ,
பிற்படுத்தப்பட்டோர் நலன் காத்திட முழு நடவடிக்கை எடுக்கப்படும்.
பிற்படுத்தப்பட்டோர் நலன் காத்திட ரூ. 159 கோடி , மீனவர்கள் நலன் காத்திட
193 ஆதி திராவிடர் நலனுக்கு 19 விழுக்காடு நிதி கூடுதல் ஒதுக்கீடு
நெசவாளர் நலன் காத்திட 256 கோடி , குடிசைகள் இல்லா தமிழகம் உருவாக்கி
கலைஞர் கான்கிரீட் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி கொடுக்க
ரூ. ஆயிரத்து 800 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு
இலவச அயோடின் உப்பு வழங்கப்படும்.


கலைஞர் காப்பீட்டு திட்டம் : கலைஞர் காப்பீட்டு
திட்டத்தின் கீழ் 54 ஆயிரத்து 145 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இத்திட்டத்திற்கு கூடுதலாக ரூ 750 கோடி ஒதுக்கப்படுகிறது. 108 ஆம்புலன்ஸ்
திட்டத்தின் கீழ் இது வரை 16 ஆயிரத்து 620 பேர் உயிர் பிழைத்துள்ளனர்.
இந்த திட்டத்திற்கு மேலும் 74 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மதுரையில்
அண்ணா தொழில் நுட்ப கழகம் அமைக்கப்படும். எம்.ஏ., படிக்கும் மாணவர்களுக்கு
அரசு கல்லூரியில் கல்விக்கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. அரசு
ஆஸ்பத்திரியில் மயக்க மருந்து சிகிச்சை பிரிவு தரம் உயர்த்தப்படும்.
இயற்கை காக்கும் விதமாக தேசிய மூங்கில் வளர்ப்பு திட்டம்
விரிவுப்படுத்தப்படும். 22 தமிழ்‌சான்றோர்கள் நூல்கள்
நாட்டு‌டமையாக்கப்படும்.

வரிவிலக்கு எந்த எந்த பொருளுக்கு ? : சட்டபையில் நிதி
அமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் வரி விலக்கு அளிக்கப்பட்ட
விவரம் வருமாறு : நாட்டில் நிலவி வரும் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு
பருப்பு, பயறு, புளி, மிளகாய், மல்லி, மஞ்சள், கடுகு, பெருங்காயம், சீரகம்
உள்ளிட்டவைகளுக்கு நிபந்தனையுடன் கூடிய வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இது
‌‌போல மிளகு, சீரகம், சோம்பு ஆகியவற்றின் பொடி தயாரிக்கும் வகைக்கும்
மூலப்பொருட்களுக்கு வரி விலக்கு , வெல்லம், நாட்டு சர்க்கரைக்கு முழு வரி
விலக்கு அளிக்கப்படுகிறது. பருப்பு கொள் முதல் வரி விலக்கு
அளிக்கப்படுகிறது. வணிகச்சின்னம் இடப்பட்ட நெய் . வனஸ்பதி உலர்ந்த
திராட்சை, ஆகியவற்றுக்கு 12. 5 சத வீத வரியில் இருந்து 4 சதமாக
குறைக்கப்பட்டுள்ளது. மாவு அரவை இயந்திரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள்,
பருத்தியிலான தரை துடைப்பான், ஆணிகள், வணிகச்சின்னம் இல்லா காலணிகள், ஜூஸ்
வகைகள், அழகு சாதன பொருட்கள், கைத்தறிகள் துணியில் பயன்படுத்தப்படும்
ஜரிகை கொள்முதல் வரி குறைப்பு செய்யப்படுகிறது.
சோற்றுக்கற்றாழை மூலம் தயாரிக்கப்படும், பொருட்களுக்கும், இறக்குமதி
செய்யப்படும் சர்க்கரைக்கு ஒராண்டுக்கு வரி விலக்கு செய்யப்படுகிறது.
மக்கும் பொருட்கள் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் மரத்தினாலான தட்டுக்கள்
கோப்பைகள், ஆகியவற்றுக்கு வரி விலக்கு , இனிப்பு , கார வகைகள், கத்தரி,
பட்டன், மாவுப்பொருட்கள் ஆகியவற்றுக்கு 12. 5 சதவீதத்தில் இருந்து 4 சதமாக
குறைக்கப்படுகிறது. இந்த வரி விலக்கு வரும் 1. 4. 2010 முதல் நடைமுறைக்கு
வரும். வீடு கட்ட பயன்படும் பனைச்சட்டங்கள், மீனவர்கள் பயன்படுத்தும் ஐஸ்
கட்டிகள், இனிப்பு, கார வகைகள் வரி குறைக்கப்படும்.

மணி மண்டபத்திற்கு குறைவில்லை : நெல்லை மாவட்ட
கலைக்டர் ஆஷ் துரையை சுட்டு கொன்ற வாஞ்சிநாதன் வீரத்தை போற்றும் வகையில்
அவர் பிறந்த செங்கோட்டையில் மணி மண்டபம் , திண்டுக்கல் விருப்பாச்சி
மைசூர் மன்னம் திப்பு சுல்தானுடன் அருந்ததியினர் இனத்தை சேர்ந்த ஒண்டி
வீரனுக்கு நெல்லையில் மணி மண்டபம் அமைக்கப்படும். திண்டுக்கல்லில் கோபால்
நாயக்கருக்கு மணி மண்டபம். ஓமந்தூராருக்கு அவரது சொந்த ஊரில் மணி மண்டபம்
அமைக்கப்படும் என இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்லூரிகள்: தேனி , புதுக்கோட்டை மாவட்டத்தில்
புதிய அரசு கலைக்கல்லூரிகள் , திருவண்ணாமலையில் மருத்துவக்கல்லூரிகள்
திறக்கப்படும். ஆங்கிலம், தகவல் தொழில் நுட்ப திறன் மேம்படுத்த கூடுதல்
நிதி ஒதுக்கீடு, மகளிர் மேம்பாட்டுக்கு 12 கோடி, கர்ப்பிணிகளுக்கு ரூ. 350
கோடி.
ஜெ., வரவில்லை ; அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு :
சபை துவங்கியதும் அன்பழகன் பட்ஜெட்டை வாசிக்க துவங்கினார். புதிய சட்டசபை
திறப்பு விழாவுக்கு ஜெயலலிதாவுக்கு முறையான அழைப்பு வழங்கப்படவில்லை.
முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை சரியில்லை என்றும்
குறை கூறி கோஷங்கள் எழுப்பினர். அ.தி.மு.க., எம். எல். ஏ.,க்க்ள் கறுப்பு
நிற சட்டை அணிந்து வந்தனர். தொடர்ந்து அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். . இவருடன் ம.தி.மு.க.,
எம்.எல்.ஏ., க்களும் வெளிநடப்பு செய்தனர். எதிர்கட்சி தலைவர் ஜெயலலிதா
முதல் நாள் கூடும் புதிய சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பார் என
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை.

தர்மபுரிக்கு பொருந்தாது: பட்ஜெட் வாசித்து முடியும்
தருவாயில் அன்பழகன் தர்மபுரி மாவட்டம் குறித்து கூறியதாவது : பென்னாகரம்
இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் விதி முறைகள்
நடைமுறையில் இருப்பதால் இந்த பட்ஜெட் தர்மபுரி மாவட்டத்திற்கு பொருந்தாது
என்று கூறினார் .
பட்ஜெட் உரை வாசித்து முடிக்கப்பட்டதும், சட்டசபை அலுவல்ஆய்வுக்குழு
கூடி, எத்தனை நாட்கள் கூட்டத்தொடரை நடத்துவது, என்னென்ன தேதிகளில்
விவாதிப்பது என்பது பற்றி முடிவு செய்யப்பட்டது. சபை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை (26ம் தேதி) தான் கூடும் என்றும்
சபாநாயகர் ஆவடையப்பன் அறிவித்தார்.
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum