TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


”சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற திட்டம்!”- முதலவர் அறிவிப்பு!

Go down

”சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற திட்டம்!”- முதலவர் அறிவிப்பு! Empty ”சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற திட்டம்!”- முதலவர் அறிவிப்பு!

Post by மாலதி Mon Dec 17, 2012 7:33 pm

“”2015ம் ஆண்டுக்குள் சூரிய சக்தி வாயிலாக 3 ஆயிரம் மெகாவாட்
மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் திட்டம் போல்
சூரியஒளி மின்சார திட்டத்தையும் மக்கள் இயக்கமாக மாற்ற அரசு
திட்டமிட்டுள்ளது. இதற்கு மாவட்ட கலெக்டர்கள் துணையாக இருக்க வேண்டும்.”"
என்று முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளின் 3 நாள் மாநாடு
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று
தொடங்கியது. முதல்- அமைச்சர் ஜெயலலிதா மாநாட்டை தொடங்கி வைத்து
பேசும்போது,””மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் இன்றைய 2-வது
மாநாட்டில் உங்களை எல்லாம் சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த
ஆண்டு, முதல் மாநாடு நடந்தபோது மக்களுக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்க இந்த
அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று நான் சுட்டிக் காட்டியது
நினைவுக் கூற விரும்புகிறேன்.

இந்த மாநாட்டின்போது, நாம் அந்த திசையில் சென்று கொண்டிருக்கிறோமா
என்பதை நாம் பார்க்க வேண்டும். மக்கள் சரியான நேரத்தில் பயன்பெறுவதை
உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களையும் வேகமாக அமல்படுத்துவது
பற்றியும் ஆய்வு செய்ய வேண்டும்.
”சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற திட்டம்!”- முதலவர் அறிவிப்பு! C-m-meet-with-i-a-s-i-p-s1
தமிழக அரசு வெளிப்படையான, திறமையான, பொறுப்பான நிர்வாகத்தை அளிக்க
முழுமையாக தன்னை அர்ப்பணித்துள்ளது. எங்களது உறுதியான நடவடிக்கை காரணமாக,
மாநில மக்கள், இந்த அரசின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.எனவே ஏழைகள்
மற்றும் அடித்தட்டில் வாழும் மக்கள், நல்ல சிறப்பான வாழ்க்கை அமைத்துக்
கொள்ள உதவுவதை இந்த அரசு கடமையாகக் கொண்டுள்ளது.

சமுதாயத்தில் மக்கள் பொருளாதாரத்தில் நல்ல நிலைக்கு வருவதோடு
மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும். இதற்காக தொலைநோக்கு திட்டம்
உருவாக்கப்பட்டுள்ளது. அதை நனவாக்க வேண்டியது உங்கள் கடமையாகும்.

நான் முன்னணியில் இருந்து இந்த மாநில நிர்வாகத்தை நடத்திச் செல்கிறேன்.
அத்தியாவசியத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் மூலம் வறுமையை வேரறுத்தல்,
சமுதாய பாதுகாப்புத் திட்டங்களை அமல்படுத்துதல், சுகாதாரத்தை
மேம்படுத்துதல், கல்வி, வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல், சட்டம்- ஒழுங்கை நிலை
நாட்டுதல் என் கண்காணிப்பில் உள்ளன.

கடந்த 19 மாதங்களில் நாங்கள் ஏராளமான முன்னேற்றங்கள் ஏற்படுத்தி சாதனை
படைத்துள்ளோம் என்பதை பெருமையுடன் கூறி கொள்கிறேன். ஆனால் மேலும் பல
முன்னேற்றங்கள் செய்யப்பட வேண்டும். மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு மிக
சரியாக உள்ளது. மக்களின் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் மிகப்பெரிய
அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை.

தமிழ்நாட்டில் நக்சலைட் தீவிரவாதிகள் இல்லை. மத ரீதியில் எழும் செயல்கள்
தங்கள் கோர முகத்தை காட்டாதபடி எந்த விதத்திலும் அனுமதிக்கப்படுவதில்லை.
இன ரீதியில் ஏற்படும் மோதல் உடனுக்குடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
வரப்பட்டது. இத்தகைய சரியான நடவடிக்கை காரணமாக திருப்தியான அமைதி சூழ்நிலை
மாநிலத்தில் நிலவுகிறது. இவை அனைத்தும் பல்வேறு மாவட்ட கலெக்டர்கள் மற்றும்
போலீஸ் உயர் அதிகாரிகளின் திறமையான ஒருங்கிணைப்பு காரணமாகவே
செய்யப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் செய்யப்பட்ட தவறுகளுக்கு கடந்த 19 மாதங்களில்
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பல ஊர்களில் நிலம் அபகரிக்கப்பட்டிருந்தது
கண்டுபிடிக்கப்பட்டு, அவை மீட்டு உரியவர்களிடம் திருப்பி
ஒப்படைக்கப்பட்டது. அந்த வகையில் இதுவரை 1627 நில அபகரிப்பு வழக்குகள்
பதிவு செய்யப்பட்டு, ரூ. 835.94 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உரியவர்களிடம்
திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்
கொள்கிறேன்.

அதுபோல ரூ. 4 ஆயிரம் கோடி மதிப்புள்ள கிரானைட் சுரங்க மோசடி
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்ட விரோத சுரங்க தொழில் மூலம் சொத்து
குவித்தவர்களிடம் இருந்து ரூ. 9783 கோடி சொத்துக்களை கையகப்படுத்த அரசு
தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. இவையெல்லாம் சிறு உதாரணங்கள்தான்.

இவை தவிர ஏராளமான குற்ற வழக்குகளில் உண்மையை காவல் துறையினர் மிகத்
திறமையாக கண்டுபிடித்துள்ளனர். காவல் துறையில் எந்தவித தலையீடும் செய்யாமல்
அவர்களை சுதந்திரமாக பணிபுரிய விட்டதால்தான் காவல் துறையினரால் இதை
சாதிக்க முடிந்தது.

குற்ற நிகழ்வுகளை மேலும் குறைக்க சட்டத்தில் உள்ள தடுப்புப்பிரிவுகளை
பயன்படுத்த வேண்டியது அவசியம் என்பதை நான் இந்த நேரத்தில் தெரிவித்தக்
கொள்கிறேன். மாவட்ட கலெக்டர்களும், போலீஸ் உயர் அதிகாரிகளும் குற்ற
நடவடிக்கைகளின் போது சரியான, பொருத்தமான பிரிவுகளில் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.

இதுதான் மக்கள் மனதில் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை உணர்வை
ஏற்படுத்தும். மேலும் தவறு செய்பவர்கள் மனதிலும் இது பயத்தை ஏற்படுத்தும்.
மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் தாக்குவது
இன்னமும் தொடர்கிறது. என்றாலும் எனது தலைமையிலான அரசு கொடுத்த வலுவான
எதிர்ப்பு காரணமாக தாக்குதல் சம்பவங்கள் குறைந்துள்ளன.

விலை மதிப்பில்லா நம் மீனவர்கள் கடந்த காலங்களில் சிங்கள படையினரால்
தாக்கப்பட்டு உயிரிழந்தது போல தற்போது நிலமை இல்லை என்பது திருப்தி
தருகிறது. 2012-ம் ஆண்டு ஒரு மீனவர் கூட உயிரிழக்கவில்லை என் பதை
தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் ரேசன் கடைகள் மூலம் ஏழை,
எளியவர்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்காக
அரசு ரூ. 3,300 கோடி செலவிட்டுள்ளது. எனவே ரேசன் அரிசி கடத்தப்படுவதை
தடுக்க மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும்.

மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்குள் கள்ளச்சாராயம் கடத்தி
வருவது முழுமையாக தடுக்கப்பட வேண்டும். சாலை பாதுகாப்பை மேம்படுத்தி,
அப்பாவி மக்கள் விபத்துக்களில் உயிரிழப்பதை தடுக்க நீங்கள் கூடுதல் கவனம்
செலுத்த வேண்டும். நல்ல தரமான சாலை கள் அமைத்து, அதிகமான மக்கள் வேகமான
பயணம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

2003-ம் ஆண்டு நான் நெஞ்சாலைகளில் கண்காணிப்பு ரோந்து திட்டத்தை
அறிமுகம் செய்தேன். 80 வாகனங்களும், போதுமான பணியாளர்களும் அந்த பணியில்
ஈடுபடுத்தப்பட்டனர். 2002-ம் ஆண்டு அவசர விபத்து நிவாரண முகாம்களை
ஏற்படுத்தினேன். இந்த மையங்களை சரியானபடி இயங்க வைத்தல் வேண்டும்.

கடந்த மார்ச் மாதம் நான் தமிழ்நாடு 2023 என்ற தொலைநோக்கு திட்டத்தை
வெளியிட்டேன். இந்த திட்டத்துக்கு தொழில் துறையினரிடம் மிகுந்த வரவேற்பு
கிடைத்துள்ளது. இந்த திட்டம் காரணமாக தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும்
முதலீட்டாளர் களிடம் ஒருவித எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொலைநோக்கு
திட்டத்தில் வேளாண், மீன் துறை, கால்நடை பராமரிப்புத் துறைகளுக்கு அதிக
முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

2023 தொலை நோக்கு திட்டம் மூலம் மாநிலத்தின் ஒட்டு மொத்த உற்பத்தி
வளர்ச்சியை 11 சதவீதமாக உயர்த்த அரசு திட்ட மிட்டுள்ளது. இந்த நோக்கத்துடன்
வேளாண், மீன் துறைகளில் தமிழக அரசு அதிக முதலீடுகளை செய்து வருகிறது.
இதில் எந்த தடங்கலும் ஏற்படாதபடி திட்டமிடப்பட்டுள்ளது.

அதுபோல தமிழக அரசின் முன்னணி திட்டமான இலச ஆடு, மாடுகள் வழங்கும்
திட்டத்துக்கு அதிக முன்னுரிமை கொடுத்து அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த
திட்டம் மூலம் ஊரக பகுதிகளில் வாழும் பெண்கள் பொருளாதார ரீதியாக மேம்பாடு
பெறுவது நோக்கமாக உள்ளது.

இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டம் காரணமாக தமிழ்நாட்டில் பால்
உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் புதிதாக பால் உற்பத்தியாளர்கள்
கூட்டுறவு கழகங்கள் தொடங்கப்பட்டு இருப்பதாக நான் அறிகிறேன்.

தமிழக அரசு இந்த ஆண்டு தமிழ்நாடு மீனவ பல்கலைக்கழகம், மீன் தொழில்
நுட்பக் கழகம் ஆகியவற்றை தொடங்கியுள்ளது. இந்த நடவடிக்கைகள் காரணமாக
தமிழ்நாட்டில் இரண்டாவது பசுமை மற்றும் வெண்மை புரட்சி ஏற்படுவது உறுதி
படுத்தப்பட்டுள்ளது. இதில் மாவட்ட கலெக்டர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்.

வேளாண்துறையில் நவீன கருவிகளை பயன்படுத்துதல், மீன் துறையில், உற்பத்தி
துறையில் புதுமை புகுத்துதல் மூலம் ஊரக பகுதிகளில் வசிப்பவர்களின் வருமானம்
உயர்வது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை
உயர்வு கவலை அளிப்பதாக உள்ளது. தமிழக மக்களுக்கு உணவு பாதுகாப்பு அளிக்க
அரசு இலவச அரிசி வினியோக திட்டத்தை நடைமுறைப் படுத்தி வருகிறது.

இது தவிர பருப்பு, எண்ணை ஆகியவையும் ரேசன் கடைகளில் மானிய விலையில்
கொடுக்கப்படு கின்றன. அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வில் இருந்து மக்கள்
பாதிக் கப்படாமல் இருக்க ரூ. 50 கோடியில் நிதி வைப்பு வைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட கலெக்டர்கள் இந்த திட்டத்தை உணர்ந்து, அது அமல்படுத்தப்படுவதை
கண்காணிக்க வேண்டும். இதன் மூலம்தான் பயனாளிகள் பயன்பெற முடியும்.
அத்தியாவசியப் பொருட்கள் கடத்தப்படுவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க
வேண்டும். போலி ரேசன் கார்டுகளை ஒழிக்கவும் மாவட்ட கலெக்டர்கள் கவனம்
செலுத்த வேண்டும்.பயோமெட்ரிக் மூலம் கணக்கெடுப்பது எல்லா மாவட்டங்களிலும்
நடந்து வருகிறது. ஆதார் எண் தானாகவே இதில் இடம் பெற்று விடும். இந்த பணிகள்
முடிந்ததும் போலி ரேசன் கார்டுகள் முற்றிலும் ஒழிக்கப்படும்.

கூட்டுறவு சங்க சட்டத்தில் திருத்தம் வரப்பட உள்ளது. அதன் பிறகு
கூட்டுறவு சங்க தேர்தல்கள் சுமூகமாக நடப்பதை கலெக்டர்கள் உறுதிப்படுத்த
வேண்டும்.

அனைவருக்கும் சுகாதாரம் என்பது அரசின் லட்சியமாகும். இதற்காகவே மருத்துவ
காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் ரூ. 4 லட்சம் உதவி
வழங்கப்படுகிறது. ஏழை என்ற ஒரே காரணத்துக்காக ஒருவருக்கு மருத்துவ உதவி
மறுக்கப்பட்டு விடக்கூடாது. இதில் மாவட்ட கலெக்டர்கள் கூடுதல் கவனம்
செலுத்த வேண்டும்.இதற்காக தமிழக அரசு போதுமான நிதி ஒதுக்கியுள்ளது. எனவே
மாநிலத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக பரவிய டெங்கு காய்ச்சல் பற்றியும்
உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். டெங்குவை கட்டுப்படுத்த
ஏற்கனவே அரசு பல வழிகாட்டிகளை வெளியிட்டுள்ளது.இத்தகைய நோய் பரவலை
தடுப்பது முற்றிலும் மாவட்ட நிர்வாகத்தின் கையில்தான் உள்ளது. எனவே இது
தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி உடனுக்குடன் மருத்துவ
உதவிகள் கொடுத்து நோய் பரவுவதை தடுக்க தக்க நடவடிக்கைகள் எடுப்பீர்கள்
என்று நம்புகிறேன்.

கல்வி உரிமை சட்டம் காரணமாக 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்
பள்ளியில் இருந்து இடையில் நிற்பது தடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மேலும் பல
புதுமையான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம்
அனைவருக்கும் கல்வி என்ற லட்சியம் நிறைவேறும்.

பள்ளிகளில் மாணவிகளுக்கு சானிட்டரி வசதிகள் செய்து இருப்பதை உங்கள்
கவனத்துக்கு தெரிவித்து கொள்கிறேன். எனவே கலெக்டர்கள் குறிப்பிட்ட கால
இடைவெளியில் பள்ளிகள் மற்றும் விடுதிகளுக்கு சென்று பார்வையிட்டு
மாணவ-மாணவிகளுக்கு சுத்தமான குடிநீர் உள்பட எல்லா வசதிகளும் உள்ளதா? என்பதை
உறுதிப்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் பல உள்ளாட்சிகளில் கழிவுநீர் அகற்றுவதில் பிரச்சினைகள்
உள்ளது. மாநிலத்தில் உள்ள எல்லா உள்ளாட்சிகளிலும் பாதாள சாக்கடை திட்டத்தை
விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளேன்.இந்த திட்டத்துக்கு ரூ. 21,777 கோடி
தேவைப் படுகிறது. நான் இதுவரை ரூ. 273.96 கோடி அனுமதித்துள்ளேன்.

குப்பை அகற்றுவதும் முக் கியமான பிரச்சினையாகும். மாபெரும்
சுத்தப்படுத்துதல் திட்டம் மூலம் குப்பைகள் அகற்றப்படுவதற்கு மாவட்ட
கலெக்டர்கள் மிகுந்த முக் கியத்துவம் கொடுப்பீர்கள் என்று
எதிர்பார்க்கிறேன். நகரங்களில் இந்த நட வடிக்கை தொடர வேண்டும்.

தமிழ்நாடு தொலை நோக்கு 2023 திட்டப்படி 24 மணி நேரமும் குடிநீர் மற்றும்
குப்பை இல்லா சூழ்நிலையை உருவாக்க வரையறுக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில்
கொண்டு சென்னை மாநகராட்சிக்கு நான் ரூ. 1000 கோடி ஒதுக்கியுள்ளேன். மற்ற
மாநக ராட்சிகள், நகரசபைகள், டவுன் பஞ்சாயத்துகளுக்கு 2011-12 மற்றும்
2012-13ம் ஆண்டுக்கு ரூ. 1500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரோடுகள், தெரு விளக்குகள், குடிநீர் கழிவுநீர் அகற்றுதல்
போன்ற வற்றில் தரம் உயரும். தமிழ்நாட்டில் திறந்த வெளியில் மலம் கழிப்பதை
2015-க்குள் முற்றிலும் தடுக்க ரூ. 92.43 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டப்படி பொது கழிவறைகள் கட்டப்படும்.

தற்போதைய கழிவறைகள் சீரமைக்கப்பட்டு மேம்படுத்தப்படும். இதில் மாவட்ட
கலெக்டர்கள் கவனம் செலுத்தி, இந்த திட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும்.
தமிழக அரசு சமீபத்தில் ‘சூரிய ஒளி மின் கொள்கை 2012′ வெளியிட்டது. இந்த
கொள்கை பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக அரசு 2015-ம் ஆண்டுக்குள் சூரிய
ஒளி மூலம் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய
திட்டமிட்டுள்ளது.

மழை நீர் சேகரிப்பு திட்டத்தை எப்படி மக்கள் இயக்கமாக நாம் மாற்றினோமோ,
அது போல் சூரிய ஒளி மின் திட்டத்தையும் உருவாக்க அரசு விரும்புகிறது. சூரிய
சக்தி மூலம் மின் உற்பத்தி செய்வதில் உலகிலேயே தமிழகம் முதன்மையாக திகழ
தொலை நோக்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மக்கள் இயக்கமாக
மாற்றி வெற்றி பெற செய்ய வேண்டிய பொறுப்பு மாவட்ட கலெக்டர்கள் கையில்தான்
உள்ளது.

தமிழ்நாட்டில் புதிய தொழில் முனைவோர்களை ஏற்படுத்த
திட்டமிடப்பட்டுள்ளது. படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோர்களாக
மாற்ற பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பயிற்சி பெறுபவர்கள் புதிதாக
தொழில் தொடங்க உதவிகள் வழங்கப்படும். இதற்காக ரூ. 100 கோடி ஒதுக்கப்படும்
என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இதில் முதல் கட்டமாக தற்போது ரூ. 51.80 கோடி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத்
திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தில் பெண்கள்
பயன்பெற 50 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர்கள் இந்த திட்டம்
பற்றி விரிவாக விளம்பரம் செய்து, இதை வெற்றிகரமாக அமல்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளதால், இதை பயன்படுத்தி
அனைத்து மேம்பாட்டுத் திட்டங்களையும் திறம்பட செய்ய வேண்டும் என்று உங்களை
கேட்டுக் கொள்கிறேன்.””என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார்
» சூரிய கிரகணத்தை காண முடியாமல் சென்னை மக்கள் ஏமாற்றம்!
» குஜராத்தில் சூரிய ஒளி மெகா மின் உற்பத்தி திட்டம் ஆரம்பம்: துவக்கி வைத்தார் மோடி
» பிரதமர் ஜன் தன் யோஜனா ( மக்கள் நிதித் திட்டம் )
» நாட்டு மக்கள் தொகையை குறைக்க மோடி அவர்களின் புதுமையான திட்டம் :

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum