TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


’மரணத்தை வென்று விட்டாள் மலாலா’ !: தாலிபான்களால் சுடப் பட்ட சிறுமியின் தந்தை!

2 posters

Go down

’மரணத்தை வென்று விட்டாள் மலாலா’ !: தாலிபான்களால் சுடப் பட்ட சிறுமியின் தந்தை! Empty ’மரணத்தை வென்று விட்டாள் மலாலா’ !: தாலிபான்களால் சுடப் பட்ட சிறுமியின் தந்தை!

Post by மாலதி Sat Oct 27, 2012 1:20 pm

பாகிஸ்தான் பள்ளி மாணவி மலாலா யூசுப்ஷாஸ் (14) பெஷாவரில் தலிபான்
தீவிரவாதிகளால் கடந்த மாதம் சுடப்பட்டார். பெண் கல்வியை ஆதரித்து பிரசாரம்
செய்ததால் ஆத்திரம் அடைந்த தலிபான்கள் இவரை சுட்டனர் என்று கூறப்
பட்டது.சுடப் பட்டதில் மலாலாவின் தலை மற்றும் கழுத்து பகுதியில் துப்பாக்கி
குண்டுகள் பாய்ந்தன.
’மரணத்தை வென்று விட்டாள் மலாலா’ !: தாலிபான்களால் சுடப் பட்ட சிறுமியின் தந்தை! Malala_பிரே-செய்யும்-பப்ளிக்
இந்த விஷ்யம் தெரிந்து உலகமே வேதனைப் பட்டது. அச்சிறுமி உயிருக்கு ஒன்றும்
ஆகக்கூடாது என்று சகல தரப்பினரும் பிரார்தனை செய்தனர். எனினும் உயிருக்கு
ஆபத்தான நிலையில் இருந்த மலாலாவை பாகிஸ்தான் ஆஸ்பத்திரியில் இருந்து மேல்
சிகிச்சைக்காக லண்டன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். அங்கு
அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இந் நிலையில் மலாலா
சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரிக்கு அவரது தந்தை ஜியாவுதீன் யூசுப்ஜாய் நேரில்
வந்து பார்வையிட்டார்.
’மரணத்தை வென்று விட்டாள் மலாலா’ !: தாலிபான்களால் சுடப் பட்ட சிறுமியின் தந்தை! Malala-Father_இன்-ஹாஸ்பிட்டல்
அப்போது அவர்,”” தனது மகளுக்கு சரியான நேரத்தில் சரியான இடத்தில் சரியான
சிகிச்சை அளிக்கப்படுக்கிறது .அத்துடன், மலாலா உடல்நிலையில் வேகமான
முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மறு படியும் மலர்ந்து விட்டாள் மலாலா. இனி அவள்
என் குழ்ந்தை மட்டுமல்ல. இப்போதெல்லாம் மலாலா எழுந்து நடக்கிறார்”” என்று
அவர் கண்ணீர் மலக தெரிவித்தார்.

She ‘will rise again’, says Malala Yousufzai’s father

**********************************************************
அது சரி.. ஏன் சுடப் பட்டாள் இந்த சிறுமி மலாலா என்று கேட்பவர்களுக்காக இந்த ரிப்போர்ட்!:

பாகிஸ்தானில் உள்ள வடக்கு வசிரிஸ்தான் பகுதி. அங்குள்ள ஸ்வாட்
பள்ளத்தாக்கு இயற்கை எழிலுக்குப் புகழ்பெற்றது. அதன் முக்கியமான நகரம்
மிங்கோரா.

அக்டோபர் மாதம் 15ம் தேதி. குஷாய் பப்ளிக் பள்ளியில் மாணவிகள் பள்ளிப்
பேருந்தில் ‘எங்கள் உயிரைக் கொடுத்தாவது தாய்நாட்டைக் காப்போம்’ என்று
சிறுமி மலாலா யூசப்சாயும் அவள் தோழிகளும், புஷ்கு மொழியில் உற்சாகமாகவே
பாடிக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். திடீரென்று பேருந்து
நிறுத்தப்பட்டது. கையில் ஏ.கே.47உடன் முகங்களை மூடிக்கொண்டு மூன்று தாலிபன்
தீவிரவாதிகள் பேருந்தில் உள்ளே ஏறினார்கள்.

யார் மலாலா?” என்று கர்ஜித்தார்கள். சிறுமிகள் யாரும் வாயைத்
திறக்கவில்லை. பயத்தில் கண்களை மூடிக்கொண்டு, நடுங்கிக்கொண்டு ப்ரேயர்
செய்யத் தொடங்கிவிட்டனர். ‘டுமீ’லென்று சத்தம். ‘அல்லா’ என்று
கத்திக்கொண்டு மலாலா ரத்தம் பீறிட்டு வழிய சரிந்தாள். ஒரு வெள்ளை ரோஜா
ரத்தச் சகதியில் சிவப்பானது. உடனடியாக உள்ளூர் மருத்துவமனை, பெஷாவர் ராணுவ
மருத்துவமனை என்று எடுத்துச் செல்லப்பட்ட மலாலா, இப்போது உயர் சிகிச்சை
பெறுவதற்காக இங்கிலாந்தின் பர்மிங்காம் மருத்துவமனைக்கு எடுத்துச்
செல்லப்பட்டிருக்கிறாள். மூளைப் பகுதியில் குண்டுகள் பாய்ந்த நிலையில்
உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாள் மலாலா.

அவளுக்கு ஆதரவாகவும், தாலிபன் பயங்கர வாதிகளுக்கு எதிராகவும்,
பாகிஸ்தான் முழுவதும், பெண்கள் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும்
கொந்தளித்துப் போராட்டம் நடத்தின. பள்ளிச் சிறுமிகள், ‘நாங்கள்
ஒவ்வொருவரும் மலாலாவாக உருவாவோம்’ என்று சூளூரைத்து, மலாலா உயிர் பிழைக்க
பிரார்த்தனை செய்தார்கள். இப்படி பாகிஸ்தான் மக்களின் ஒட்டுமொத்த அனுதாபத்தையும், ஆதரவையும் பெற்ற மலாலா யார்?
’மரணத்தை வென்று விட்டாள் மலாலா’ !: தாலிபான்களால் சுடப் பட்ட சிறுமியின் தந்தை! MalalaYousafzai-குளோஸப்-பிக்
2007, 2008ம் ஆண்டு பாகிஸ்தானின் எல்லை மாவட்டங்களில் பயங்கரவாதம்
உச்சகட்டத்தில் இருந்தது. ஸ்வாட் பள்ளத்தாக்கு முழுவதும் தாலிபன்
பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. பாகிஸ்தான் அரசின் சட்டம்
எதுவும் அங்கே செயல்படவில்லை. பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க
வேண்டும் என்று உத்தரவிட்டனர் தாலிபன்கள். பெண்கள் பள்ளிகள் மூடப்பட்டன.
பெண்களுக்குச் சமகாலக் கல்வி தேவையில்லை; அவர்கள் வீட்டுக்குள் அடைபட்டு
மார்க்கக் கல்வி கற்றால் போதும்’ என்று உத்தரவிட்டனர்.


மலாலா படிக்கும் பள்ளியில் சிறுமிகளின் எண்ணிக்கை படிப்படியாகக்
குறைந்து, இறுதியில் பள்ளி மூடப்பட்டது. அவர்களுக்குக் குரல் கொடுக்க
யாரும் இல்லை. துப்பாக்கிமுனையில் சுதந்திரம் பறிக்கப்பட்டது.

தன் படிப்பு முடக்கப்பட்டதால் மனமொடிந்து போனார் மலாலா. தம் மனக்குமுறலை
தினக் குறிப்புகளாக எழுதி ‘குல் மகாய்’ என்ற புனை பெயரில் சமூக
வலைத்தளங்களில் பதிவு செய்தார். அப்போது அவருக்கு வயது 11தான்.
தாலிபன்களின் மதவாத அடக்குமுறை ஆட்சியில் சமூகம் – குறிப்பாக பெண்கள் எந்த
அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தொடர்ந்து எழுதி வந்தார்
மலாலா.
’மரணத்தை வென்று விட்டாள் மலாலா’ !: தாலிபான்களால் சுடப் பட்ட சிறுமியின் தந்தை! MalalaVs_taliban__புக்ஸ்-vs-பாம்
இதன் காரணமாக ஸ்வாட் பகுதி மக்கள் தாலிபன்களால் அனுபவிக்கும் சித்ரவதைகள்
உலக மக்களின் கவனத்துக்கு வந்தது. பின்னர் பாகிஸ்தான் ராணுவம் அதிரடி
நடவடிக்கை எடுத்து தாலிபன்களை ஒடுக்கியது. மீண்டும் பெண்களுக்கான பள்ளிகள்
திறக்கப்பட்டன. சுதந்திரக் காற்றை மக்கள் சுவாசிக்கத் தொடங்கினர்.

மக்கள் எல்லோரும் பயந்து நடுங்கிய நிலையில் தாலிபன்களின் அக்கிரமங்களை
உலகுக்கு எடுத்துச் சொன்ன மலாலா, ‘ஸ்வாட்டின் குரல்’ என்று
அழைக்கப்பட்டார். சர்வதேசக் குழந்தைகளுக்கான அமைதி விருதுக்கு
பரிந்துரைக்கப்பட்டார். பாகிஸ்தானின் அறிவார்ந்த, உயர் மற்றும் நடுத்தர
மக்களுக்கு மலாலா ‘ஜோன் ஆப் ஆர்க்’காகவே தெரிந்தார். பெண் கல்விக்காக தமது
குரலைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வந்தார்.

எனவே, அவரது குரலை அடக்க முடிவு செய்தார்கள் தாலிபன்கள். மீண்டும்
ஸ்வாட் பள்ளத்தாக்கில் தாலிபன்கள் தலைதூக்கி யிருப்பதையே இந்தத் தாக்குதல்
சம்பவம் காட்டுவதாகச் சொல்கிறார்கள். பாகிஸ்தான் அரசு உடனடியாக நடவடிக்கை
எடுக்காவிட்டால் பழையபடி ஸ்வாட் பள்ளத்தாக்கு பயங்கர வாதிகள் கையில்
போய்விடும் என்ற அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள் மக்கள்.

இந்தியாவுக்கு எதிராக பயங்கர வாதிகளைத் தூண்டிவிடும்
பாகிஸ்தான், தமது நாட்டில் கட்டவிழ்த்து விடப்படும் பயங்கரவாதத்தை
இரும்புக்கரம் கொண்டு அடக்க முடியாமல் திணறுகிறது. அது போடும் இரட்டை
வேடத்தின் விளைவுதான் இது.


தகவல் :மழைக் காகிதம்!

கார்ட்டூன் நன்றி:satish acharya


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

’மரணத்தை வென்று விட்டாள் மலாலா’ !: தாலிபான்களால் சுடப் பட்ட சிறுமியின் தந்தை! Empty Re: ’மரணத்தை வென்று விட்டாள் மலாலா’ !: தாலிபான்களால் சுடப் பட்ட சிறுமியின் தந்தை!

Post by ஜனனி Mon Feb 04, 2013 10:06 pm

ஆஸ்லோ : பாகிஸ்தானில் பெண்களின் கல்வி உரிமைக்காக
குரல் கொடுத்ததால் தலிபான்களால் பயங்கரவாதிகளால் சுடப்பட்டு உயிர் பிழைத்த
பாகிஸ்தான் சிறுமி மலாலாவின் பெயர் நோபல் பரிசுக்கு
பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பள்ளி மாணவியான மலாலா யூசுப்சாய், அந்நாட்டு பெண்களின் கல்வி
உரிமைக்காக குரல் கொடுத்து வருபவர். தலிபான்களால் பெண்களின் கல்வி உரிமை
மறுக்கப்படுவதாக, அவர் இணைய தளத்தில் தெரிவித்ததால், ஆத்திரமடைந்த
தலிபான்கள் கடந்த ஆண்டு அவரை துப்பாக்கியால் சுட்டனர்.

படுகாயமுற்ற அவர் பிரிட்டனில் சிகிச்சை பெற்று, உடல் நலம் தேறி
வருகிறார். இந்நிலையில், இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு மலாலாவின்
பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. நார்வே நாட்டின் நாடாளுமன்ற
உறுப்பினர்கள் மலாலா பெயரை நோபல் பரிசுக்கு முன் மொழிந்துள்ளனர்.

மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் [You must be registered and logged in to see this link.]

Under Creative Commons License: Attribution
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum