TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:01 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழர்களே நாமே தமிழை அழிக்கலாமா? தமிழ் வருடங்கள்,மாதங்கள் எவை? உண்மை என்ன?

2 posters

Go down

தமிழர்களே நாமே தமிழை அழிக்கலாமா? தமிழ் வருடங்கள்,மாதங்கள் எவை? உண்மை என்ன? Empty தமிழர்களே நாமே தமிழை அழிக்கலாமா? தமிழ் வருடங்கள்,மாதங்கள் எவை? உண்மை என்ன?

Post by sakthy Mon Sep 17, 2012 7:43 pm

தமிழர்களே நாமே தமிழை அழிக்கலாமா? தமிழ் வருடங்கள்,மாதங்கள் எவை? உண்மை என்ன?

சில தினங்களுக்கு முன்னர் வடமொழி வருடங்களும் அதன் செந்தமிழ் பெயர்களும் பற்றி இந்த இணையத்தில் படித்தேன்.
தமிழ் வருடங்கள் எது? என்ற கேள்விக்கு என்னுடைய பதில் வேறாக இருக்கிறது. அதற்கு முன் வட மொழி வருடங்களான பிரபவ முதல் அஷ்சய இறுதியான 60 வருடங்களும் எப்படி வந்தன?

ஒரு முறை நாரத முனிவர் கிருஷ்ணனிடம், நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கிறீரே எனக்கு ஒரு கன்னிகை தரலாகாதா என்று கேட்டு,பின் கண்ணன் இல்லா வீடு கிடைக்காததினால், கண்ணனிடம் வந்து அவர் திருமேனியில் மையல்கொண்டு, அவரை நோக்கி நான் தேவரீரிடம் பெண்ணாய் இருந்து புணர எண்ணங் கொண்டேன் என்றனர்.அதற்கு கண்ணன் யமுனையில் நாரதரை ஸ்நானஞ் செய்ய ஏவ, முனிவர் அவ்வகை செய்து ஒரு அழகுள்ள பெண்ணாயினர். இவளுடன் கண்ணன் அறுபது வருஷம் புணர்ந்து கிரீடித்து அறுபது குமாரரைப் பெற்றனர். இந்த அறுபது குமாரர்களின் பெயரே வடமொழி வருடங்கள் என வேதங்கள் கூறுகின்றன. (ரிக் மற்றும் வேதாகமங்களையும் நன்கு படிக்கவும்.)இப்படிப்பட்ட அருவருக்கத்தக்க வரலாற்றக் கொண்டுவந்து தமிழனின் தலையில் கட்டிவைத்து, இதுதான் தமிழ்ப் புத்தாண்டு என்று பறைசாற்றுவதில் உண்மையும் நேர்மையும் இருப்பதாகத் எனக்குத் தோன்றவில்லை?

இந்த சமயத்தில் ஒரு அற்புதமான நூலை உங்கள் முன் வைக்கின்றேன்.வாங்க முடியாதவர்கள்,நூலகத்திற்கு சென்று ஆறுதலாக அமைதியாக படிக்கலாம்.ஏனெனில் ஆ.சிங்காரவேலுமுதலியாரால் 1855 ற்குப் பின் தொகுக்கப்பட்ட அபிதான சிந்தாமணி என்ற இந்த இலக்கிய களஞ்சியம் 1634 பக்கங்களைக் கொண்டது.வெளியீடு... தில்லி ஏசியன் எடுகேஷனல் சர்வீஸஸ், இதுவரை 11 பதிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன.இதில் வேதம், திருமுறை, அரசர், முனிவர் முதலிய பிரிவுகள் பற்றிய செய்திகளை 48 தலைப்புகளிலும், சமயம், மடம், கோவில் பற்றிய செய்திகளை 15 தலைப்புகளிலும், ஜோதிடம் பற்றிய செய்திகளை 4 தலைப்புகளிலும் ஜாதி, நாடு பற்றிய செய்திகளை ஏழு தலைப்புகளிலும் அகரவரிசைகளில் அழகாக தொகுத்து வழங்குகிறது. இது ஒரு தமிழ் வரலாற்று என்சைகிளோப்பீடியா என்று சொல்லலாம்.சரி விசயத்திற்கு வருவோம்.

1921 ல் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில், தமிழ் தென்றல் வி.கல்யாணசுந்தரம், கெ.சுப்பிரமணியம்பிள்ளை,சச்சிதானந்தம்பிள்ளை,சோமசுந்தர பாரதியார்,என்.எம்.வெங்கடசாமி,விஸ்வனாதம் ஆகியோருடன் கூடி ஆராய்ந்து தை மாதம் முதல் திகதியை தமிழ் வருடப்பிறப்பாக அறிவித்தது. மாதம் நாட்களுக்கும் தமிழில் பெயரிடப்பட்டது.

ஞாயிறு,திங்கள்,செவ்வாய்,அறிவன்,வியாழன்,வெள்ளி,காரி என ஏற்றுக் கொண்டார்கள்.புதன் சனி தமிழ்ப்பெயராக அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்தக் குழு திருவள்ளுவர், ஜேசுவிற்கு 31 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக கூறி, திருவள்ளுவர் ஆண்டையும் அப்படியே ஏற்றுக் கொண்டது.(2012+31=2043).இதை 1972 ல் தமிழக அரசு ஏற்றுக் கொண்டது. ஆனால் திமுக அரசு செய்தது எல்லாவற்றையும் எதிர்க்க நினைக்கும் ஜெ அம்மா, அண்ணா வளைவு தவிர,அனைத்தையும் மாற்றினார்.

சிந்துவெளி நாகரீகம் முதல் தமிழர்கள் தை முதல் மார்கழி வரை தமிழ் மாதங்களாக ஏற்றுக் கொண்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்த கருத்தை இந்தக் குழு ஏற்றுக் கொண்டது.அதே சமயம் நாம் ஒன்றை, இல்லை ஜெ அம்மா கூட ஒருமுறை எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த புத்தாண்டு விசயம் இந்து புது வருடமானால்,இந்துக்களான குஜராத்தியர்கள், மராத்தியர்களும்,மற்றும் பல மொழி பேசுவோரும் ஏன் வெவ்வேறு மாதங்களில்,திகதிகளில் கொண்டாடுகிறார்கள்?இலங்கையில் சித்திரை 14 ஐ சிங்கள தமிழ் புத்தாண்டு என்று கூறுகிறார்கள். இந்து புத்தாண்டென்றோ அல்லது பௌத்த புத்தாண்டென்றோ கூறுவதில்லை.காரணம் உலகின் பல பாகங்களிலும் வாழும் புத்த சமயத்தவர்கள்,வெவ்வேறு காலங்களில் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள் என்பதுதான்.கன்னடரும் தெலுங்கரும் மார்ச் 16 ல் புத்தாண்டைக் கொண்டாடியது ஏன்?ஆக ஜேயின் எந்தக் காரணங்களும் ஒத்துப் போகவில்லை.கருணாநிதி ஒன்றே அவர் கண்களில் தென்பட்டது என்பது மட்டும் புரிகிறது.

"தைத் திங்கள் தண்கயம் போல்" – என்கிறது புறநாநூறு.இப்படி பல சங்க இலக்கியங்களிலும் கூறப்பட்டிருக்கிறது.

ஆக நாம் வடமொழியில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யலாமே தவிர, அவை தமிழர்களின் வருடங்களாக,மாதங்களாக,புத்தாண்டாக கொள்ள முடியாது. நாம் ஏன் நமது கலாச்சார பண்பாடுகளை,வரலாற்றை மறந்து வேறு இடத்திற்கு செல்கிறோம் என்பது புரியாத புதிராக இருக்கிறது. இல்லை வேறு காரணமா?நாம் வடமொழியை தமிழுக்கு மாற்ற வேண்டுமா இல்லை தமிழ் வரலாற்றை ஏற்றுக் கொள்ள வேண்டுமா? நாம் எழுதி,பேசி விட்டால் போதுமா இல்லை அவ்ற்றை நாமும் கடைப்பிடிக்க வேண்டுமா?இப்படி பல கேள்விகள் எழுகின்றன.முடிவு உங்களிடம்.

கேரளாவில் இராசிகளின் பெயரையே மாதங்களுக்கு வைத்திருக்கிறார்கள். ரொறன்ரோ மாநகரசபையின் முதல்வர் ரொப் போட் தமிழர்களின் புத்தாண்டு தை என அறிவித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். அப்துல்லா என்ற பெயரை மாற்றி விட்டால் எப்படி அவர் இந்துவாகவோ கிறிஸ்தவராகவோ மாற முடியாதோ அப்படியே, நாம் நம் வரலாற்றைப் பின் பற்ற வேண்டுமே தவிர, பெயர் மாற்றம் செய்து விடுவதால் அவை எல்லாம் தமிழ் ஆகி விடாது. இதை நான் சொல்லவில்லை.மறைமலை அடிகளார் தலைமையில் அமைந்த குழுவினரின் முடிவாகும்.

இருப்பினும் நம் வரலாற்றையும் சிறிது திரும்பிப் பார்த்தால் தான்,நான் சொல்வதற்கு சாட்சியம் கிடைப்பதுடன், உங்களிடம் என் கருத்தை திணிப்பதாக இல்லாமலும் இருக்க முடியும்.

தமிழர்கள் வளர்பிறை தேய்பிறை என்பதையும் பூரணையையும் வைத்து இலக்கியங்களில் பேசியதைக் காணமுடியும்.தலைவன் தலைவியிடம் வியாபாரத்தை முடித்து விட்டு திரும்பி வருவது பற்றி குறிப்பிடும் காட்சிகளில் இவற்றைக் காண முடியும்.அன்று சந்திரனை வைத்து கணக்கிடப்பட்டதால் தான் தமிழர் மாதங்களில் 27,30,31.32 நாட்கள் என வெவ்வேறுவிதமாக அமைந்தன. தமிழர்களிடம் வியாழ வருடம் என முன்னர் 60 வருடங்கள் இருந்ததாக சிலர் குறிப்பிட்டாலும், அவை பின்னர் பயன்படுத்தப்படவில்லை என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழர்கள் துல்லியமாக காலத்தைக் கணக்கிட்டிருந்தும் கூட,வருடங்களுக்குப் பெயர் எதுவும் வைக்காது இருந்தது ஏன் எனத் தெரியவில்லை.இன் நிலையில் வட மொழி மாதம்,வருடங்களை தமிழில் மொழிமாற்றம் செய்து விட்டு,நாம் அதை ஏற்றுக் கொள்வது சரியானதா?அப்படி மாற்றி விடுவதால் நாம் தமிழர்களாக,தமிழ் வரல்காற்று கலாச்சாரங்களை பின்பற்றியதாக ஆகி விடுவோமா?

பண்டைய நாட்களில் காலத்தைப் பெரும்பொழுது சிறுபொழுது என வகுத்தனர். இளவேனில் (சித்திரை, வைகாசி ) முதுவேனில் (ஆனி, ஆடி), கார் (ஆவணி, புரட்டாதி) கூதிர் (ஐப்பசி, கார்த்திகை) முன்பனி ( மார்கழி, தை, ) பின்பனி ( மாசி, பங்குனி) ஆறு பெரும் பொழுதாகும்.

சங்க இலக்கியங்களில் தமிழ் மாதப்பெயர்கள் காணக்கிடைக்கின்றன. தை, மாசி (பதிற்றுப்பத்து) பங்குனி (புறநானூறு) சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தொல்காப்பிய ஆசிரியர் இகரவீற்றுப் புணர்ச்சி, ஐகாரவீற்றுப் புணர்ச்சியை விளக்கும்போது ...திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன.....எனக் கூறுவதைக் காணலாம். எல்லாத் திங்கள்களின் பெயர்களும் இந்த இரண்டு எழுத்தில் (இ, ஐ) முடிந்தன என்கிறார். …..நாள்முன் தோன்றும் தொழில்நிலைக் கிளவி..... எனும் பாடல் நாள்மீன்(நட்சத்திரம்) பற்றி பேசுகிறது. ….திங்கள் முன்வரின் இக்கே சாரியை.... என்ற பாடல்வரி மாதத்தைப் பற்றியது. எனவே இன்றுள்ள 12 மாதங்களும் அவர் காலத்தில் இருந்து வருகின்றன எனத் துணியலாம்.

ஆக தொல்காப்பியரின் இலக்கணப்படி அன்றும் தை மாசி …..............மார்கழி என இருந்து வந்ததை அறிய முடிகிறது.இதனால் தான் மறைமலை அடிகளாரும் அவருடன் ஆய்வு நடத்திய மற்றையோரும்,வேறு 500 தமிழ் அறிஞர்களும் தை முதல் மார்கழியை தமிழ் மாதங்களாக ஏற்றுக் கொண்டனர்.
இதை விட மேலும் பல வரலாற்று ,இலக்கிய ஆதாரங்களைத் தர முடியும் என்றாலும் கட்டுரை நீண்டு விடுமாதலால் அதிகமாக வரலாற்று இலக்கியத்திற்கு செல்லாமல் விடுகிறேன்.

எனவே சிந்தியுங்கள். தமிழர்களின் நாள்,மாதம்,வருடங்களை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமா இல்லை ஆரியர்களின் வட மொழி பெயர்களை ஏற்று மொழி மாற்றம் செய்து பயன்படுத்த வேண்டுமா? என்னை விட தமிழ் அதிகம் தெரிந்த நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்..உங்களின் பெயரை செந்தமிழில் மாற்றி உங்களுக்கே சூட்டலாம். அப்படி இல்லாது அந்தப் பெயரை வேறு ஒருவருக்கு சூட்டி விட்டு அவர் தான் நான் என்று கூறப் போகிறீர்களா?

பத்தன்று நூறன்று பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தை முதல் நாள், பொங்கல் நன்னாள் …........எனவும்,
தையே முதல் திங்கள்
தை முதலே ஆண்டு முதல் …...................என்கிறான் பாரதிதாசன்.

சக்தி.

avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

தமிழர்களே நாமே தமிழை அழிக்கலாமா? தமிழ் வருடங்கள்,மாதங்கள் எவை? உண்மை என்ன? Empty Re: தமிழர்களே நாமே தமிழை அழிக்கலாமா? தமிழ் வருடங்கள்,மாதங்கள் எவை? உண்மை என்ன?

Post by ஜனனி Tue Sep 18, 2012 7:10 am

தமிழர்களே நாமே தமிழை அழிக்கலாமா? தமிழ் வருடங்கள்,மாதங்கள் எவை? உண்மை என்ன? 336442 தமிழர்களே நாமே தமிழை அழிக்கலாமா? தமிழ் வருடங்கள்,மாதங்கள் எவை? உண்மை என்ன? 336442 தமிழர்களே நாமே தமிழை அழிக்கலாமா? தமிழ் வருடங்கள்,மாதங்கள் எவை? உண்மை என்ன? 336442 தமிழர்களே நாமே தமிழை அழிக்கலாமா? தமிழ் வருடங்கள்,மாதங்கள் எவை? உண்மை என்ன? 523182 தமிழர்களே நாமே தமிழை அழிக்கலாமா? தமிழ் வருடங்கள்,மாதங்கள் எவை? உண்மை என்ன? 471843
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கொஞ்சம் தமிழ்,கொஞ்சும் தமிழ்,இனிக்கும் தமிழ்,இரசிக்கும் தமிழ்.தமிழ் என்ன சொல்கிறது? சிந்தனை களம் என்றால் என்ன?
» "தமிழ்" "திராவிடம்" இரண்டும் இன்று குழப்பமாக உள்ள பாதங்களாக இருகின்றனவா . உண்மை நிலை என்ன என்பதை முனைப்புடன் கூறும் ஒரு கடமை எனக்கும் உள்ளது
» ஒரு ஈமு கோழியை 16 மாதங்கள் வளர்த்தால் ரூ.2,750 தான் லாபம் கிடைக்கும்- உண்மை நிலவரம்!
» தமிழ் மாதங்கள் தமிழில்
» தமிழ் மாதங்கள் சூரிய மாதங்களாகும்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum