TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:48 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 11:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தியாக தீபம் திலீபன்*****முதலாம் நாள்****

2 posters

Go down

தியாக தீபம் திலீபன்*****முதலாம் நாள்**** Empty தியாக தீபம் திலீபன்*****முதலாம் நாள்****

Post by logu Sat Sep 15, 2012 8:07 am

தியாக தீபம் திலீபன்*****முதலாம் நாள்****
தியாக தீபம் திலீபன்*****முதலாம் நாள்**** Usetam16
1987 ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 15ம் திகதி. இது திலீபனுடன் முதலாம் நாள். (கவிஞர் மு.வே.யோ இன் உரையில் இருந்து)
_____________________________

தியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம்.....

காலை ஒன்பது மணியிருக்கும் பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனை
சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாக பேசுகிறார்.
வோக்கிடோக்கியில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த
மண்ணிற வாகனத்தை நோக்கி நடக்கிறார். எல்லோரும் பின் தொடர்ந்தோம். ஆம் அவரது
தியாகப்பயணம் ஆரம்பமாகிவிட்டது. மிக் மிடுக்காக நடந்து முன் ஆசனத்தில்
போய் ஏறினார்.

அவரது பக்கத்தில் சொர்ணம், அன்ரன் மாஸ்ரர், முரளி.
பின் ஆசனத்தில் காசி ஆனந்தன், ராஜன், நான் வேறும் சிலர்.வாகனம் நல்லூர்
கந்தசாமி கோவிலை நோக்கி ஓடுகிறது. பாதையின் இரு பக்கத்திலும் மாணவர்களும்,
பொதுமக்களும் கையசைத்து வழியனுப்புகிறார்கள். நல்லூர் கந்தசாமி கோவிலை
சென்றடைந்தோம். வாகனம் நின்றது. திலீபன் உண்ணாவிரத மேடை நோக்கிச்
செல்கிறார். நாங்களும் பின்னால் போய்க்கொண்டிருக்கிறோம்.

தமிழீழ தாயின் எதிர்பாராத ஆசியினை பெறுகின்றார்

எதிர்பாராத விதமாக அந்த நிகழ்ச்சி நடந்தது. வயதான ஓர் அம்மா. தள்ளாத
சிவந்த நிற மேனி. பழுத்த தலை. ஆனால் ஒளிதவளும் கண்களில் கண்ணீர் மல்க
திலீபனை மறித்து தன் கையில் சுமந்து வந்த அர்ச்சணை சரையில் இருந்து
நடுங்கும் விரல்களால் திரு நீற்றை எடுத்து திலிபனின் நெற்றியில்
பூசுகிறார். சுற்றியிருந்த கமராக்கள் எல்லாம் அந்த காட்சியை கிளிக்
செய்தது. வீரத்திலகமிடுகிறார் அந்தத் தாய். தாயற்ற திலீபன் அந்த தாயின் பாச
உணர்வில் மூழ்கிப்போனார்.

போராளி பிரசாத் இன் ஆரம்ப உரை (மேஜர் பிரசாத்)

காலை மணி 9.45 உண்ணாவிரத மேடையிலே நாற்காலியிலே திலீபனை அமர வைத்தோம்.
திலீபனின் அருகே நான், ராஜன், பிரசாத், சிறி ஆகியோர் அமர்ந்திருந்தோம்.
திலீபனின் தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது. அன்று பக்கத்திலிருந்த மேடையில்
பிரசாத்தின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. திரு. நடேசன், கவிஞர் காசி
ஆனந்தன் ஆகியோர் திலீபனின் உண்ணா விரதம் எதற்காக ஆரம்பிக்கப்படுகிறது
என்பதனைபற்றி விளக்கம் அளித்தார்கள். தமிழ் மக்களினதும், தமிழர்
தாயகத்தினதும் உரிமைகளை பேணும் நோக்கமாக இந்தியமக்களின் கவனத்தை ஈர்க்கும்
வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் முன் வைக்கப்பட்ட ஜந்து கோரிக்கைகளும்
விளக்கப்பட்டன.

ஐந்து அம்ச கோரிக்கை

1) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படல் வேண்டும்.

2) புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நாடாத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடணடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

3) இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்படல் வேண்டும்.

4) வடகிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

5) இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவல் படை என
அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு
தமி்ழ்க்கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடி கொண்டுள்ள இராணுவ , பொலிஸ்
நிலையங்கள் மூடப்படவேண்டும்.

பிரசாத் அவர்களால் மேற்படி ஜந்து
கோரிக்கைகளும் வாசிக்கப்பட்டன. இதே கோரிக்கையை இரண்டு தினங்களுக்கு முன்பு
இந்திய உயர்ஸ்தானிகரின் கையில் நேரடியாக கிடைக்கக்கூடியதாக அனுப்பி 24
மணித்தியால அவகாசமும் விடுதலைப்புலிகளால் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் 15
திகதி வரையும் தூதுவரிடமிருந்து எந்த பதில்களும் கிடைக்காத காரணத்தினால்
சாகும் வரை உண்ணாவிரதமும் மறியல் போராட்டமும் நடத்துவது என தமிழீழ
விடுதலைப்புலிகளின் பிரதேசப் பொறுப்பாளர்களின் கூட்டத்தில்
தீர்மானிக்கப்பட்டது.

வாசிப்பதற்கு புத்தகங்கள் கேட்ட திலீபன்

அதன்படிதான் இந்த தியாகச்செம்மலின் தியாகப்பயணம் ஆரம்பித்தது. பிற்பகல்
2.00 மணி இருக்கும் திலீபன் கம்பீரமாக வீற்றிருந்தார். உண்ணாவிரதம்
ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மணித்தியாலங்கள் முடிந்து விட்டன.
இரண்டாவதுமேடையிலே நடைபெற்றுக்பொண்டிருந்த உண்ணாவிரத விளக்கக் கூட்டம்
முடிவடைந்து விட்டது. படிப்பதற்கு புத்தகம் வேண்டும் என என்காதில்
குசுகுசுத்தார் திலீபன். நான் ராஜனிடம் சொன்னேன்.

15 நிமிடங்களில்
பல அரிய நூல்கள் மேடைக்கு வந்தன. விடுதலைப்போராட்டங்கள் பற்றி அறிவதற்கு
திலீபனுக்கு ஆர்வங்கள் எப்போதும் உண்டு. பிடல் காஸ்ரோ, சேகுவரோ,
கொஜுமின்,யசிர் அரபாத் போன்றவர்களின் வாழ்க்கையை பற்றிய நூல்களை நேரம்
கிடைக்கும் போதெல்லாம் படிப்பார். பலஸ்தீன மக்களி்ன் வாழ்க்கையை பற்றி
படிப்பதென்றால் அவருக்கு பலாச்சுழை மாதிரி பிடிக்கும். பலஸ்தீன கவிதை என்ற
நூலை அவரிடம் கொடுத்தேன்.

மாணவர்கள் இளையோர்களின் உணர்ச்சி கவிதைகள்

அதை மிகவும் ஆர்வத்துடன் படிக்கத்தொடங்கினார்.மாலை ஜந்து மணிக்கு பக்கத்து
மேடையில் மீண்டும் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயிற்று. பாடசாலை மாணவிகள் போட்டி
போட்டுக்கொண்டு கவிதைகளை வாசிக்கத்தொடங்கினர். சுசிலா என்ற மாணவி மிகவும்
உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தனது கவிதையை வாசித்துக்கொண்டிருந்தார். அப்போது
ஒரு கட்டத்தில் அவர் அழுதேவிட்டார். "அண்ணா திலீபா இளம் வயதில் உண்ணாமல்
தமிழினத்திற்காக நீ தவமிருக்கும் கோலத்தைக் காணும் தாய்க்குலத்தின்
கண்களில் வடிவது செந்நீர்." சுசிலாவின் விம்மல் திலீபனின் கவனத்தை
திருப்பியது.

கவிதைத்தொகுப்பை மூடிவைத்து விட்டு கவிதை மழையில்
நனைய தொடங்கினார். அவர் விழிகளில் முட்டிய நீர் தேக்கத்தை ஒருகணம் என்
கண்கள் காணத்தவறவில்லை. எத்தகைய இளகிய மனம் அவருக்கு இந்த இளம் குருத்து
இன்னும் எத்தனை நாட்களுக்கு ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் வாடி வதங்க
போகிறது. அகிம்சை போராட்டத்திற்கே ஆணி வேராக திகழ்ந்த அண்ணல் காந்தியடிகள்
கூட தன்னுடைய உண்ணா விரத போராட்டங்களை நீராகாரம் அருந்தித்தானே நடத்தினார்.

திலீபனின் தியாகபயணம் ஓர்..

ஐரிஸ் போராட்ட வீரர் பொபிஸ் ஆன்ஸ் என்ன செய்தார்? சிறைக்குள் நீராகாரம்
அருந்தித்தான் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து உயிர் நீத்தார். இந்த
உண்ணாவிரதம் அரசின் தலையீட்டினால் வெற்றி பெறுமானால் அந்த வெற்றி திலிபனையே
சாரும். அதுபோல் இந்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இறுதி உண்ணாவிரதம்
இருந்தே திலீபன் இறக்க நேரிட்டால் அதில் கிடைக்கும் தோல்வியும் திலீபனுக்கு
கிடைக்கும் மாபெரும் வெற்றிதான்.

நல்லூர் ஓர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம்

உலகின் புதிய அத்தியாயம் ஒன்றின் சிருஸ்டி கர்த்தா என்ற பெருமை அவனையே
சாரும். ஆனால் அதற்காக எங்கள் குல விளக்கை நாமே அணைக்க வேண்டுமா? இறைவா
திலீபனை காப்பாற்றிவிடு. கூடியிருந்த மக்கள் நல்லூர் கந்தனிடம் அடிக்கடி
இப்படி வேண்டிக்கொள்கிறார்கள். இதை நான் அவதானித்தேன். பழம் தமிழ்
மன்னனாகிய சங்கிலியன் அரசாண்ட நல்லூர் அரச தானியிலே, தமிழ்க்கடவுள் ஆகிய
குமரனின் சந்நிதியில் ஓர் இளம் புலி உண்ணாமல் துவண்டு கிடந்தது. ஒரு நல்ல
முடிவு கிடைக்க வேண்டும். இல்லையேல் உலகில் நீதி செத்து விடும். எனக்குள்
இப்படி எண்ணிக்கொண்டேன்.

அப்போது ஒர் மேடையில் முழங்கிக்கொண்டிருக்கிறான்.
திலீபன் அண்ணாவின் கோரிக்கைகள் மட்டுமல்ல, தமிழ் மக்களின் கோரிக்கைகளும்
இதுதான் இதை நிறைவேற்ற வேண்டியது இந்திய அரசின் கடமையாகும். அவர் தமிழீம்
தாருங்கள் என்பதற்காக உண்ணாவிரதம் இருக்கவில்லையே. இந்திய இலங்கை
ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஜந்தே ஜந்து கோரிக்கைகளை
நிறைவேற்றும்படி வற்புறுத்தித்தான் சாகும் உண்ணாவிரதத்தை
ஆரம்பி்த்திருக்கிறார்.

தமிழீழ தேசிய தலைவர் திலீபனை பார்க்க வருகின்றார்.

இந்தக்காரணத்தாலாவது இந்திய அரசு இதை நிறைவேற்ற தவறுமானால் திலீபன் அண்ணா
இறப்பது நிச்சயம். திலீபன் அண்ணா இறந்தால் ஒரு பூகம்பம் இங்கே வெடிக்கும்.
ஒரு புரட்சி இங்கே வெடிக்கும். இதுதான் என்னால் கூற முடியும். அவரின்
பேச்சு முடிந்ததும் அங்கு கூடியிருந்த மக்கள் அப்பேச்சை வரவேற்பதுபோல்
கைகளை தட்டி ஆரவாரித்தனர். அந்த ஒலி அடங்க வெகு நேரம் பிடித்தது. அன்று
இரவு 11.00 மணியளவில் தலைவர் பிரபாகரன் திலீபனை பார்ப்பதற்காக மேடைக்கு
வருகிறார்.

அவருடன் சொர்ணம், இம்ரான், அஜித், சங்கர், ஜொனி இப்படி
பலரும் வருகின்றனர். வெகுநேரம் வரை தலைவருடன் உரையாடிக்கொண்டிருந்தார்
திலீபன். யாரையும் அதிக நேரம் பேச அனுமதிக்க வேண்டாம் என்று போகும் போது
என்னிடம் கூறிவிட்டுச்சென்றார் தலைவர். நீர், உணவு உட்கொள்ளாத ஒருவர்
தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால் விரைவில் களைப்படைந்து விடுவார்.
இதனால்தான் தலைவர் அப்படி கூறிவிட்டுச்சென்றார்.

பத்திரிகையாளர் வருகை

அன்றிரவு பத்திரிகை நிருபர்களும் பத்திரிகை துறையை சார்ந்தவர்களும்
திலீபனை பார்க்க மேடைக்கு வந்திருந்தனர். முரசொலி ஆசிரியர் திருச்செல்வம்,
ஈழமுரசை சேர்ந்த பசீர் போன்றோருடன் திலீபன் மனம் திறந்து பேசினார். அவரை
கட்டுப்படுத்த எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அதிகம் பேசி உடம்பை
கெடுத்துக்கொள்ள போகிறாரே என்பதால் அவரை அன்பாக கடிந்து கொண்டேன். இரவு
11.30 மணியளவில் கஸ்டப்பட்டு சிறுநீர் கழித்து விட்டு 12.00 மணியளவில்
படுக்கைக்குச் சென்றார்.

முதல் நாள் முடிவு,அதிகாலை 1.30 இற்கு உறங்கினார்.

அவர் ஆழ்ந்து உறங்கத்தொடங்கியபோது நேரம் 1.30 மணி. அவரின் நாடித்துடிப்பை
பிடித்து அவதானித்தேன். நாடித்துடிப்பு 88. சுவாசத்துடிப்பு 20. அவர் சுய
நினைவோடு இருக்கும் போது வைத்திய பரிசோதனைக்கு அனுமதிக்க மாட்டார். தனக்கு
உயிர் மீது ஆசை இல்லை என்பதால் பரிசோதனை தேவை இல்லை என்று கூறுவார். அவர்
விருப்பத்திற்கு மாறாக உணவோ, நீரோ, மருத்துவமோ இறுதிவரை அளிக்கக்கூடாது
என்று முதல் நாளே என்னிடம் சத்தியம் வாங்கிவிட்டார்.

இந்த தியாக தீபத்தி்ன் உண்ணாவிரத போராட்டத்தின் முதல்நாள் முடிவு பெற்றது ..
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

தியாக தீபம் திலீபன்*****முதலாம் நாள்**** Empty Re: தியாக தீபம் திலீபன்*****முதலாம் நாள்****

Post by logu Sat Sep 15, 2012 8:17 am

தியாக தீபம் லெப். கேணல் திலீபனுடன் 12 நாட்கள்..
தியாக தீபம் திலீபன்*****முதலாம் நாள்**** Usetam18
(மு.வே.யோ.வா – வின். தொகுப்பிலிருந்து)

15.09.87 காலை மணி 8.30! தமிழீழப் போராட்ட வரலாற்றிலே வைரத் தூரிகை கொண்டு
பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள்.ஆம்,தமிழீழ விடுதலைப்
புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளரும்,தமிழினத்தின்
விடிவெள்ளியுமாகிய திலீபன் (இராசையா பார்த்திபன்) அவர்கள் நல்லூர் வடக்கு
வீதியிலுள்ள “கந்தன் கருணை” இல்லத்தில் நடுவராந்தாவில் அமர்ந்து
கொண்டு,புன்னகை தவழும் முகத்துடன்,நண்பர்களுடன் அளவளாவிக்
கொண்டிருக்கிறார்.

சொர்ணம்,அன்ரன்,கவிஞர் காசி ஆனந்தன் போன்றோர் அங்கு இருக்கின்றார்கள்.கறுப்புநிற ட்ரவுசர்,கோடு போட்ட வெள்ளை நிற(முழுக்கை) சேட்,கண்ணில் கண்ணாடி,திலீபன் அன்று மிகவும் எடுப்பாகக் காட்சியளிக்கிறார்.வழக்கமாக
கலைந்து கிடக்கும் தலைமுடியும்,அழுக்கேறிய உடையுமாகக் காட்சி தரும்
அவரை,எடுப்பான அந்தத் தோற்றத்தில் பார்த்தபோது ஆச்சரியமாக
இருந்தது.அன்பானவர்களை அணைத்து வரவேற்பதில் கிட்டுவும்,அவர் உருவாக்கிய
திலீபனும் கைதேர்ந்தவர்கள்.சாதாரண பொது மக்களும்,சிறுவர்களும்,பெண்களும் திலீபனை மிகவும் நேசித்ததற்குக் காரணம் அவரிடத்தில் குடிகொண்டிருந்த கனிவும்,பரிவும்,வார்த்தைகளின் இனிமையுமேயாகும்.

யாழ் மாவட்டத்திலுள்ள ஊரெழு என்னும் அழகிய பனைமரங்கள் கொஞ்சி விளையாடும்
கிராமத்தில் ஆசிரியர் திரு.இராசையா தம்பதிகளின் கடைசி(நான்காவது) மகனாகப்
பிறந்த (திலீபன்) பார்த்திபன் வாழ்வின் ஆரம்பத்திலேயே மிகவும்
துர்ப்பாக்கியசாலியாக இருந்துவிட்டான்.

பத்து மாதம் வரை
அன்புப்பால் ஊட்டி,சீராட்டி,பாராட்டி வளர்த்த அன்னையின் அரவணைப்பைப்
பத்தாவது மாத முடிவில் பறிகொடுத்துவிட்டான் திலீபன்.பிஞ்சுக் கால்களை ஊன்றி
அந்தக் குழந்தை தத்திதத்தி நடக்கவேண்டிய பருவத்தை,கொஞ்சி மகிழ்ந்த அன்னை
நெஞ்சில் மகிழ்வோடு பார்க்க முடியாமல் பரலோகம் போய்விட்டார்.

எத்தனை கொடுமை இது?
உறவினர்களின் அரவணைப்பில் வளர்ந்த பார்த்திபன்,தன் ஆரம்பக்கல்வியை
ஊரெழுவிலும்,யாழ் இந்துக் கல்லூரியிலும் கற்றான்.1974-ஆம் ஆண்டு தை மாதம்
யாழ் நகரில் நடைபெற்ற 2-ஆம் உலகத் தமிழாராய்ச்சி மகா நாட்டில் மிகவும்
ஆர்வத்துடன் கலந்துகொண்டான்.ஆனால் தமிழினத்தின் துரோகி ஒருவனின் கட்டளையின்
மூலம் அப்பாவி தமிழர்கள் அவன் கண் முன்னால் கொல்லப்பட்டதைக் கண்டு
பார்த்திபனின் இதயம் துடிதுடித்தது.தமிழன் சுதந்திரமாக வாழ வேண்டுமென்ற
விடுதலைக் தாகம் அந்த சிறு(10 வயதில்) வயதில் அவன் நெஞ்சில் நெருப்பாகப்
பற்றத் தொடங்கியது.

யாழ் இந்துவில் பயிலும் போது,படிப்பிலும் விளையாட்டிலும் மிகவும் திறமைசாலியாக விளங்கினான்.விளையாட்டுத்துறையின்
தலைவனாகவும்,சிறந்த சதுரங்க விளையாட்டு வீரனாகவும் திகழ்ந்தான்.1977-ஆம்
ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரத்தில் யாழ்ப்பாணம் நோக்கி வந்த தமிழ்
அகதிகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்தான்.அப்போது அவனுக்கு வயது
13.அந்த இனக் கலவரம் திலீபனின் நெஞ்சில் சுதந்திர தாகத்தை வெகுவாகக்
கிளப்பத் தொடங்கியது.அந்த வயதிலேயே விடுதலைப் புலிகளின் அதிரடித்
தாக்குதல்களை மானசீகமாக மகிழ்ச்சி ததும்ப வரவேற்றான் திலீபன்.


தமிழ்த்துரோகி துரையப்பா கொலை செய்யப்பட்டபோது ஆனந்தக் கூத்தாடியவன்
திலீபன்.1982-ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பத்திரப்
பரீட்சை(உயர்தரம்) யில் சகல பாடங்களிலும் சிறப்பான சித்திகளைப் பெற்று யாழ்
பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்குத் தெரிவானான்.ஆனால்,தமிழ் மக்கள்
கொடுமையான முறையில் கொலை செய்யப்பட்டது கண்டு அவன் மனம் தவித்தது.தமிழ்
மக்களைப் காப்பதற்காக தன் உயர்கல்வியை உதறித் தள்ளிய திலீபன்,விடுதலை
இயக்கத்தில் சேர்ந்து தமிழ் மண்ணிற்காகப் போராடத் தீர்மானித்தான்.


தமிழ் மக்களைக் காப்பதற்காக அல்லும் பகலும் போராடிக்கொண்டிருந்த தலைவர்
வே.பிரபாகரனுடன் எப்படியாவது இணைய வேண்டுமென்பதே அவன் கனவாகவும்
இலட்சியமாகவும் இருந்தது.தலைவர் பிரபாவைத் தன் மானசீகக் குருவாக
வரித்துக்கொண்ட பார்த்திபன்(திலீபன்) 1983-ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்
புலிகள் இயக்கத்தில் அங்கத்தவனாகச் சேர்ந்தான்.ஆரம்பத்தில் கப்டன்
பண்டிதருடன் இணைந்து பிரச்சார வேலைகளைப் கவனித்துவந்த அவன் பின்
மானிப்பாய்,வட்டுக்கோட்டைப் பகுதிப் பிரச்சாரப் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டான்.1983-ஆம்
ஆண்டின் கடைசிப் பகுதியில் தமிழ்ப் பகுதியில் பிரச்சார வேலைகளில் ஈடுபட்ட
விடுதலைப் புலிகளுக்கு தலைக்கு மேல் ஆபத்து இருந்தது என்பது எல்லோருக்கும்
தெரியும்.இந்த ஆபத்து இராணுவத்திடமிருந்து மட்டுமல்ல. வேறு பல வழிகளிலும்
உண்டு.இவைகளிலெல்லாம் எதிர்நீச்சல் போட்டு தன் பணியில் வெற்றி கண்டவன்
திலீபன்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ் பிராந்தியத்
தளபதியாகக் கடமையாற்றிய திரு.கிட்டு அண்ணா திலீபனின் செயற்றிறன்,அயராத
முயற்சியிலும் நம்பிக்கை வைத்தார்.கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு,உறுதி,உழைப்பு
எல்லாவற்றிலுமே திறமையாகத் திகழ்ந்த திலீபன் அவர்களை தமிழீழ விடுதலைப்
புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளனாக நியமிக்கும்படி தலைவர் பிரபாவிடம்
சிபாரிசு செய்தார் கிட்டு.

திலீபன் அந்த பொறுப்புக்கு
நியமிக்கப்பட்ட பின் தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றில் ஓர் புதிய
அத்தியாயம் ஆரம்பமாயிற்று.திலீபன் தமிழ் மக்களை அரசியல் மயப்படுத்துவதற்காக
அல்லும் பகலும் உழைத்த அதேவேளை,தளபதி கிட்டுவுடன் இணைந்து பல தாக்குதல்
திட்டங்களையும் வகுத்தான்.அநேக தாக்குதல்களில் தானே நேரடியாக ஆயுதமேந்திப்
போராடினான்.பலமுறை இராணுவத்திடம் பிடிபட்டுத் தப்பினான்.வல்வையில் ஏற்பட்ட
விடுதலைப் புலிகள் -இராணுவ நேரடி மோதல் ஒன்றில் வயிற்றில் குண்டு பாய்ந்து
சத்திர சிகிச்சைக்கு ஆளாக்கப்பட்டான்.அப்போது அவனது குடலின் 14 அங்குலம்
வெட்டி வீசப்பட்டது.மூன்று முறை சத்திரசிகிச்சை செய்யப்பட்ட அவன் மிகவும்
பலவீனமடைந்தான்.ஆனால் மன உறுதிமட்டும் தளரவில்லை.

“களத்தில்” என்ற
மாதப் பத்திரிகையை நடாத்தி தன் எண்ணங்களை எழுத்துருவில் வடித்தார்.இயக்கக்
கொள்கைகளை மிக எளிதாக மக்களுக்கு விளங்க வைத்தார்.கட்டுரைகளை எழுதும்போது
அவை மக்களுக்குப் புரியக் கூடியவாறு இருக்க வேண்டும் என்பதில் கவனமாக
இருந்தார்.திலீபனின் முயற்சியினால் பல உப-தாபனங்கள் தமிழீழ விடுதலைப்
புலிகளின் பண்ணையில் விளைந்து பல அதிக பலனைக் கொடுக்கத் தொடங்கின.அவற்றுள்
சில பின்வருவன.

1.தமிழீழ விடுதலைப் புலிகளின் மாணவர் இயக்கம்.
2.தமிழீழ மகளிர் அமைப்பு.
3.சுதந்திர பறவைகள் அமைப்பு.
4.தமிழீழ தேசபக்தர் அமைப்பு.
5.தமிழீழ விழிப்புக் குழுக்கள்.
6.தமிழீழக் கிராமிய நீதிமன்றங்கள்.
7.சுதேச உற்பத்திக் குழுக்கள்
8.தமிழீழ ஒலி ஒளி சேவைக் கட்டுப்பாட்டுச் சபை
9.தமிழர் கலாசார அவை மற்றும் சில தொழிற் சங்கங்கள்

(தொடரும்)
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

தியாக தீபம் திலீபன்*****முதலாம் நாள்**** Empty Re: தியாக தீபம் திலீபன்*****முதலாம் நாள்****

Post by ஜனனி Sat Sep 15, 2012 12:37 pm

வீர வணக்கம் தியாக தீபம் திலீபன்*****முதலாம் நாள்**** 917304
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

தியாக தீபம் திலீபன்*****முதலாம் நாள்**** Empty Re: தியாக தீபம் திலீபன்*****முதலாம் நாள்****

Post by ஜனனி Sat Sep 15, 2012 12:52 pm

தியாக தீபம் திலீபன்*****முதலாம் நாள்**** 377336_145150588961171_1431747956_n
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

தியாக தீபம் திலீபன்*****முதலாம் நாள்**** Empty Re: தியாக தீபம் திலீபன்*****முதலாம் நாள்****

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum