TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பிரபாகரனை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டது டெல்லி! இந்திய தளபதி சொன்ன அதிர்ச்சி தகவல்!!

Go down

பிரபாகரனை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டது டெல்லி! இந்திய தளபதி சொன்ன அதிர்ச்சி தகவல்!! Empty பிரபாகரனை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டது டெல்லி! இந்திய தளபதி சொன்ன அதிர்ச்சி தகவல்!!

Post by அருள் Thu Jul 26, 2012 4:27 pm

பிரபாகரனை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டது டெல்லி! இந்திய தளபதி சொன்ன அதிர்ச்சி தகவல்!! Vaiko-12aஅருமைத்
தோழர்களே, நான் என்னுடைய சுயநலத்துக்காகப் பேசவில்லை. இந்த இனத்துக்காகப்
பேசுகிறேன். ஈழத்தில் இனக்கொலை, இதயத்தில் இரத்தம்’ என்ற தலைப்பில், நானே
ஒரு குறுவட்டு வெளியிட்டு இருக்கிறேன். தயாரிப்பு, இயக்கம், வெளியீடு -
வைகோ என்று போட்டு இருக்கிறேன். ஏன்? இந்தக் குறுந்தட்டை வைத்து
இருப்பவர்களைக் காவல்துறையினர் கைது செய்து விடக்கூடாது. எனவேதான்,
என்னுடைய பெயரைப் போட்டு இருக்கிறேன். வேண்டுமானால் என்னைக் கைது
செய்யட்டும்.
அதைப் பார்த்துவிட்டு நாங்கள் குடும்பத்தோடு அழுதோம் என்று
பல காவல்துறை அதிகாரிகள் என்னிடம் சொன்னார்கள். அதை ஒவ்வொருவரும், 100,
200 என் படிகள் எடுத்து, மக்களிடம் கொடுங்கள். நான் அதில் அரசியல்
பேசவில்லை. என் கட்சிக்கு ஆதரவு திரட்டவில்லை. ஈழத்தமிழர்களின் வரலாறைச்
சொல்லி இருக்கிறேன். அந்த மண்ணின் பூர்வீகக் குடிமக்கள் தமிழர்கள்தாம்
என்று, இந்திராகாந்தி அம்மையார் சொன்னார். அவர் சுட்டுக் கொல்லப்படுவதற்கு
முன்பு, நாடாளுமன்றத்தில் ஆற்றிய கடைசி உரையில் சொன்னார்: The Tamils of the north and east are not original inhabitants of that island என்று சொன்னார்.
அந்த பிரபாகரனை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டது டெல்லி! இந்திய தளபதி சொன்ன அதிர்ச்சி தகவல்!! Indira-gandhi-01இந்திரா
அம்மையார் சுட்டுக் கொல்லப்பட்டபோது, ஈழத்தில் தமிழர்கள் வீட்டில் சமையல்
கிடையாது. இந்திரா காந்தி படத்தை வைத்துக் கொண்டு ஊர்வலமாகச் சென்றார்கள்.
வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றினார்கள். அப்போது சிங்களத்துக்காரன்,
‘என்னடா இனி உங்களைக் காப்பத்த உங்க ஆத்தா வருவாளா?” என்றுக் கேட்டு,
அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டான்.
இன்றைக்கும் கூடச் சிலபேர்,
பிழைக்கப்போன தமிழர்களுக்கு நாடு எதற்கு? என்று கேட்கிறான். அவர்களுக்குத்
தெரிய வேண்டும் என்பதற்காகத்தான், இந்திரா காந்தி அம்மையார் சொன்னதை,
இந்தக் குறுவட்டில் முதலிலேயே பதிவு செய்து இருக்கிறேன். 18,19 ஆம்
நூற்றாண்டுகளில், தோட்டத் தொழிலாளிகளாகச் சென்றவர்கள்தாம், இங்கே இருந்து
சென்ற தமிழர்கள். அவர்களுள், பத்து இலட்சம் பேருக்கு இலங்கையில் குடி உரிமை
கிடையாது. வாக்கு உரிமை கிடையாது என்று சொல்லி விட்டான். அன்றைக்கும்
காங்கிரஸ் அரசு ஒன்றும் பேசவில்லை, அது, மத்திய மலை மாகாணங்களில்
இருக்கின்ற தோட்டத் தொழிலாளர்கள். வடக்கு கிழக்கில் இருப்பவர்கள், அந்த
மண்ணின் மைந்தர்கள். இலங்கை விடுதலை பெறுவதற்காகத் தியாகம் செய்தார்கள்,
ஆனால், விடுதலைக்குப் பின்னர், அதிகாரம் சிங்களவன் கையில் சென்று விட்டது.
பெளத்த
மதமே அரசு மதம்; சிங்கள் மொழிதான் ஆட்சி மொழி என்றான். தரப்படுத்துதல்
என்ற முறையில், கல்விக்கூடங்களில் தமிழ்க் குழந்தைகள், பின்னுக்குத்
தள்ளப்பட்டார்கள். வேலைவாய்ப்புகள் கிடையாது. அரசாங்க வேலைகளில் சுத்தமாக
வாய்ப்பு இல்லை. தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களை அழித்தான். தமிழ்ப்
பெண்களைக் கற்பழித்தான். தமிழர்களைக் கண்ட இடங்களில் தாக்கினான். அதை
எதிர்த்து, அறப்போர் நடத்தினார். ஈழத்துக் காந்தி தந்தை செல்வா. அதற்குக்
கிடைத்த பரிசு, குண்டாந்தடி அடிகள், துப்பாக்கிச் சூடு.
பிரபாகரனை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டது டெல்லி! இந்திய தளபதி சொன்ன அதிர்ச்சி தகவல்!! Prabhakaran-Theelepanஅப்போதுதான்,
ஒரு வீர வேங்கை வல்வெட்டித்துறையில் எழுந்தான். வேலுப்பிள்ளை, பார்வதி
அம்மையாரின் அருமைப் பிள்ளை. பிஞ்சுக் குழந்தைகளைக் கொதிக்கும் தாரில்
தூக்கிப் போட்டான் என்ற செய்தி வந்தபோது, அவனது நெஞ்சம் கொதித்தது.
அப்படியானால், பதிலுக்கு நாம் அடித்தால், ஆயுதம் ஏந்தினால்தான், தமிழனைக்
காப்பாற்ற முடியும் என்று முடிவு எடுத்தான். எந்த நாட்டின் உதவியும்
இல்லாமல் கடற்படை அமைத்தான். ஏன் புலிக்கொடியை தூக்கினார்? இதனை அவரிடம்
நான் ஒருநாள் கேட்டேன்.
அதற்கு அவர் சொன்னார்; ‘கரிகாலனும், இராஜராஜ
சோழனும் புலிக்கொடியை ஏந்தித்தானே இந்தக் கடலை ஆண்டார்கள், அதனால்தான்,
நாங்கள் புலிக்கொடியை ஏந்தினோம்’ என்றார்.
மின்னல் வேகத்தில் சீறிப்
பாய்ந்து கொழும்பில் போய்க் குண்டு வீசுகின்ற விமானத்தை, பிரபாகரனைத் தவிர
வேறு யாரும் தயாரிக்க முடியாது. தரைப்படை, கடற்படை, வான்படை எல்லாம்
அமைத்து, அவர்களுக்கென ஒரு நாட்டை அமைத்தார். அதை, இந்திய அரசு
பாழாக்கியது. சிங்களவனுக்கு ஆயுதம் கொடுத்தது. சீனாவும் ஆயுதம் கொடுத்தது.
தமிழா,
உன் தலைவிதியைப் பார்த்தாயா? இந்தியாவும், சீனாவும் எதிரிகள். ஆனால்,
ஈழத்தில் தமிழனைக் கொல்ல, இந்தியா-சீனாவின் ஆயுதங்கள். இந்தியாவுக்கும்
பாகிஸ்தானுக்கும் சண்டை. ஆனால், சிங்களவனுக்கு இரண்டு பேரும் ஆயுதம்
கொடுத்தார்கள். தமிழனைக் கொல்ல. இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் ஜென்மப் பகை,
ஆனால், ஈழத்தமிழர்களை அழிக்க, இஸ்ரேலின் கிஃபீர் ஜெட் விமானங்களில்,
ஈரானின் குண்டுகள். சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் கெடுபிடிப் போர்.
பிரபாகரனை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டது டெல்லி! இந்திய தளபதி சொன்ன அதிர்ச்சி தகவல்!! Kittu_ltte_14_copyஆனால்,
தமிழனுக்கு எதிராக, அணு ஆயுத வல்லரசுகளின் ஆயுதங்கள், நொடிப்பொழிதில்
உயிர்களைக் கருக்குகின்ற, உலகம் தடை செய்து இருக்கின்ற குண்டுகளை வீசினான்.
அதனால்தான், போர்க்களத்தில் புலிகள் பின்வாங்க நேர்ந்தது. சிங்களப்
படைகளைப் பின்னங்கால் பிடரியில் அடிபட கொழும்பு வரை விரட்டி அடித்தவர்
பிரபாகரன். யானை இறவில், 20,000 சிங்களப் படையை அழித்து, புலிக்கொடியை
வெற்றிக்கொடியாக உயர்த்தினார்.
தங்களுக்கென்று ஒரு நாட்டை அமைத்து,
வேளாண்துறை, மீன்துறை, ஆராய்ச்சிகள், கழிவு நீர் மறுசுழற்சி, கலால் துறை,
காவல்துறை, கல்வித்துறை, நீதித்துறையை உருவாக்கி, இனி சுதந்திர ஈழம் என்
பிரகடனம் செய்ய வேண்டியது ஒன்றுதான் பாக்கி என்ற நிலையில், பாவிகளே அதை
அழித்து விட்டீர்களே?
இந்திய அரசு செய்த துரோகத்தால், குமரப்பா,
புலேந்திரன் உள்ளிட்ட 12 புலிப்படைத் தளபதிகள் விஷக்குப்பி கடித்து
மாண்டனர். தீர்வில் மைதானத்தில் அவர்களின் உடல்கள் வைக்கப்பட்டபோது,
பிரபாகரன் அங்கே வந்தார். மீண்டும் பிஸ்டலை எடுத்து இடுப்பிலே சொருகிக்
கொண்டார். இலட்சக்கணக்கான இந்திய இராணுவத்தை எதிர்த்துப் போரிட்டு மடிவது
என்று உறுதி எடுத்துக் கொண்டார்.
துளி நீரும் பருகாமல் திலீபன்
உண்ணாவிரதம் இருப்பதற்கு முதல்நாள், இந்திய இராணுவத் தளபதி ஹர்கிரத்
சிங்கைத் தொலைபேசியில் அழைத்தான். இந்தியத் தூதராக இருந்த மாபாவி தீட்சித்.
பிரபாகரனை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டது டெல்லி! இந்திய தளபதி சொன்ன அதிர்ச்சி தகவல்!! Ipklf-12’உங்களைச் சந்திக்க பிரபாகரன் வருகிறாராமே?’
’ஆமாம்; நட்பு ரீதியில் அழைத்தோம். இன்று இரவு பார்க்க வருகிறார்’ என்றார்.
’நீங்கள் அவரைச் சுட்டுக் கொன்று விடுங்கள்’ என்றான் தீட்சித்.
அதிர்ச்சி
அடைந்த ஹர்கிரத் சிங், ‘நட்பு அடிப்படையில் நாங்கள் அழைத்தவரைச் சுட்டுக்
கொல்லும் வழக்கம் இந்திய இராணுவத்துக்கு இல்லை. அந்தத் துரோகத்தை நாங்கள்
செய்ய மாட்டோம்’ என்றார்.
இதை நான் சொல்லவில்லை. அவர் எழுதிய
புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். இன்றைக்கும் அவர் உயிரோடு தான்
இருக்கிறார். அநதப் புத்தகமும் தடை செய்யப்படவில்லை.
திரும்பவும் தீட்சித் சொன்னான்: இது என் உத்தரவு அல்ல. இது டெல்லியின் உத்தரவு என்று.
நான் கேட்கிறேன், டெல்லியின் உத்தரவு என்றால், அது யாருடைய உத்தரவு?
பிரபாகரனைச்
சந்தித்துப் பேச, ஜானியை, இந்திய உளவுத்துறை அனுப்பி வைத்தது. முதல் நாள்
கிட்டுவின் வீட்டில், நான் ஜானியைச் சந்தித்தேன். என்னை விட நான்கு
அங்குலம் உயரமாக இருப்பான். இரும்பு உலக்கை போன்ற கை. என்னால் பிடிக்க
முடியவில்லை. அப்போது கிட்டு சொன்னார். அண்ணே, ஜானி நெற்றியில் தழும்பு
பார்த்தீர்களா? ஆமாம், நெற்றியில் குண்டு பாய்ந்து யாரும் பிழைக்க
முடியாது. ஆனால், ஜானி, ஆறு மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுப்
பிழைத்தார். அவர்தான் இப்போது யாழ்ப்பாணத்தின் தளபதி என்றார்.
அந்த
ஜானியை, இந்திய உளவுத்துறை சென்னைக்கு அனுப்பி வைத்தது. அதற்கு முதல்நாள்
ஜானியையும், பொட்டு அம்மானையும், என் வீட்டுக்குச் சாப்பிட வாருங்கள் என்று
அழைத்து இருந்தேன். நான் அறிவாலயத்தில் இருந்து வீட்டுக்கு வருவதற்கு
உள்ளாக, அவர்கள் மோட்டார் பைக்கில் வந்து, நாங்கள் தேடி வந்தோம் என்று
சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். சாப்பிட அழைத்தோமே?
அவர்களுக்குச் சாப்பாடு கொடுக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டேன்.
பிரபாகரனை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டது டெல்லி! இந்திய தளபதி சொன்ன அதிர்ச்சி தகவல்!! War_crime-11bb_copyநான்கு
நாள் கழித்து என்ன நடந்தது? இங்கிருந்து புறப்படும்போது ஜானி கேட்டு
இருக்கிறார். வழியில் இந்திய இராணுவம் மறித்துக் கைது செய்தால் என்ன
செய்வது? எனக்குப் பாதுகாப்பு இல்லையே; என் கையில் ஆயுதம் எதுவும் இல்லையே?
ஒருவேளை சுட்டு விட்டால் என்ன செய்வது? என்று கேட்டு இருக்கிறார்.
’ஒன்றும்
ஆகாது, உங்கள் பெயரை மட்டும் சொல்லுங்கள். இந்திய அரசுதான் அனுப்பி
வைத்தது என்று சொல்லுங்கள் என்றார்கள். நான்கு நாட்களாகக் காட்டில் அலைந்து
திருந்து. பிரபாகரனைச் சந்தித்து விட்டு வந்தார். இரண்டு விடுதலைப்புலித்
தம்பிகள் உடன் வந்தார்கள். இந்திய இராணுவம் மறித்தது. உடனே, அவர் இரண்டு
கைகளையும் மேலே தூக்கிக் கொண்டு, நான் ஜானி இந்திய அரசுதான் என்னை அனுப்பி
வைத்தது என்று சொன்னார். அதற்குப்பிறகும், அவரை, உச்சந்தலை முதல்
உள்ளங்கால் வரை இயந்திரத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்கள். அருகில்
இருந்த இருவரையும் ஒன்றும் செய்யவில்லை.
இராணுவம் சென்றதற்குப் பிறகு,
காட்டுச் சுள்ளிகளைப் போட்டு ஜானியின் உடலைத் தீ வைத்து எரித்தார்கள்
அந்தத் தம்பிகள். இந்திய அரசின் துரோகத்தை, நாடாளுமன்றத்தில் நான்
கண்டித்துப் பேசி இருக்கிறேன். அதனால்தான், புலிகள் தயாரித்த கண்ணி
வெடிக்கு, ‘ஜானி மைன்ஸ்’ என்று பெயர் சூட்டினார் பிரபாகரன்.
கிட்டுவை,
நடுக்கடலில் வழிமறித்துக் கொன்றீர்கள். அங்கே உனக்கு என்ன வேலை? எதற்காக
அவர்களது கப்பலை மறித்தீர்கள்? விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற வழக்கில்,
நீதிபதி கேட்டார், நடுக்கடலில் சென்ற அவர்களது கப்பலை நீங்கள் எப்படி
வழிமறித்தீர்கள்? என்று செருப்பால் அடித்தது போலக் கேட்டார். மறித்தது
மட்டும் அல்ல, அந்தக் கப்பல் மீது, இந்தியக் கடற்படை குண்டு வீசி
இருக்கிறது. கிட்டு தற்கொலை செய்து கொள்ளவில்லை, இந்தியக் கடற்படைதான்
கொன்றது.
நன்றி: வைகோ (கருணாநிதி குடும்பமா? தமிழ்நாடா)
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆயுத பற்றாக்குறையில் இந்திய ராணுவம்; அதிர்ச்சி தகவல்!
» பிரபாகரனை சுட்டு கொள்ள இந்திய ராணுவத்திற்கு செப்டெம்பர் 15 1987 அன்று J N திட்சித் இந்திய தூதர் மூலம் சொல்லபட்டது
» பிரபாகரனை இலக்கு வைத்து 12 யுத்த விமானங்கள் ஒரே தடவையில் தாக்குதல் நடாத்தினதாம் – முன்னாள் விமானப்படைத் தளபதி
» கருணாநிதியின் சொத்து மதிப்பு : 1967-ல் ரூ.1.08 லட்சம்... தற்போது ரூ.92.88 கோடி - தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கிடைத்த அதிர்ச்சி தகவல்.
» பிரபாகரனை உயிருடன் பிடிக்க முயன்ற இலங்கை இராணுவம் -தப்பித்த பிரபாகரன் -விக்கிலீக்ஸ் பர பரப்பு தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum