TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:01 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் வீரச்ச்சாவு பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் ?

Go down

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் வீரச்ச்சாவு பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் ? Empty தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் வீரச்ச்சாவு பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் ?

Post by மாலதி Sat Mar 31, 2012 1:02 pm

கடந்த மூன்று ஆண்டுகளாக நீடிக்கின்ற…..:

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் “வீரச்ச்சாவு” பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும்……….?

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் வீரச்ச்சாவு பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் ? Prabakaran-dead-stories

அண்மையில் சனல் 4 இல் வெளியான தேசியத் தலைவரது வீரச்சாவு பற்றிய விபரணம் பற்றி உலகத் தமிழரின் மெளனம் ஏன் ?

புலிகள் பற்றி பலரின் முனுமுனுப்புக்கள்


  1. மக்களை வெளியேற விடாமல் தடுத்தது தாம் உயிர் தப்புவதற்கு !
  2. இறுதி யுத்தத்தில் புலிகள் மக்களைச் சுட்டார்கள் !
  3. சரண் அடையந்ததும் அடைய வைத்ததும் மகா தவறு அதிலிலும் பார்க்க தற்கொலை செய்திருக்கலாம்!
  4. பிரபாகரன் இனி வந்து ஒன்றும் செய்ய இயலாது இனி அவர் எதற்கு வந்தாலும் வராவிட்டாலும் ஒன்று தான்!
  5. பிரபாகரன் இன்னும் 2009 இருந்து ஆறு ஆண்டுகளில் படை திரட்டி வந்து தமிழீழம் பெற்றுத் தருவார்! 3 ஆண்டுகள் முடிவடைந்து விட்டன

இப்படி சொல்லுபவர்கள் முன்பு புலிகளுக்கு பந்தயம் கட்டி காசு கொடுத்த தேசிய வாதிகள் தான்


  • பிரபாகரன் செய்த மாபெரும் தவறு!

————

ஆரம்பத்தில் சிறிலங்காவால் நேரடியாகவோ மறைமுகமாகவோ வெளிவந்து
கொண்டிருந்த காட்சிகளும் காணொளிகளும் உலகத்தமிழ் அமைப்புக்களாலும்
தேசியவாதிகளாலும் ஆய்வாளர்களினாலும் விவாதிப்பட்டிருந்தன

அவை எல்லாம் பொய் போட்டோ ஷொப் தொழில் நுட்பம், இது அவரில்லை என்று
தட்டிக் கழிக்கப்படிருந்தது மட்டுமல்லாம் அதை ஆதரிப்பவர்களுக்கு துரோகிகள்
பட்டமும் கொடுக்கப்பட்டது அதில் நாமும் இவர்களை ஆதரித்து வந்ததும் யாவரும்
அறிந்த ஒன்று .

சனல் 4 காட்டும் கொடூரப் பதிவுகள்! ”வீடியோக்கள் உண்மை… எடுத்தது சிங்கள கமரா!”

சிங்கள இராணுவத்தினரால்
காட்டப்பட்ட அதே காட்சிகள், சனல் 4 தொலைக்காட்சியிலும் காட்டப்பட்டன.
ஆனால், இவை உண்மையில் பிரபாகரன்தானா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எந்த
தகவலும் சொல்லப்படவில்லை.

புலிகள் தொடர்பான எல்லா ஆதாரங்களும் சிங்கள இராணுவத்தால்
எடுக்கப்பட்டவையே தமிழர்களினாலோ சுயாதீனமானவர்களாலோ எடுக்கப்பட்டவை
எதுவுமில்லை

ஆனால் இது பிரபாகரன் தான் என்று சனல் 4 உறுதிப்படுத்தவில்லை என்றாலும்
படங்கள் போட்டோ ஷொப் தொழில் நுட்பம் அல்ல என்பது மட்டும் உறுதியாகின்றது

ஆக தமிழ்தேசியவாதிகளால் சொல்லிவந்த போட்டோ ஷொப் தொழில் நுட்பம் என்பது ஏற்றுக் கொள்ளமுடியாதது

அதன் பின்னர் அது வேறு ஒருவரின் உடல் என்று அங்க அடையாளங்களை வைத்து விவாதிக்கப்பட்டிருந்தது veltharma.blogspot இங்கே காணலாம்
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் வீரச்ச்சாவு பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் ? Channel%2B4%2Bprabakaran

தலைவர் என்று காண்பிக்கப்பட்ட ஆதாரத்தை
வேறு ஒருவர் என்று நிரூபிக்க முற்படுகின்றார்களே தவிர தலைவர் இருக்கின்றார்
என்று சொல்லுவதற்கு இது வரை எந்த ஆதாரமும் காண்பிக்கப்படவில்லை


சனல் 4 காட்டும் எல்லாம் சரி ஆனால் இது மட்டும் பிழை என்று வாதிடுவது எதற்கு ?

உங்கள் வாக்கு வேதவாக்கு அல்ல – தேசியத் தலைமையின் இருப்பை மறுத்து பேரனர்த்தம் விளைவித்துவிடாதீர்கள்.ஈழ அதிர்வு-14

தேசியத் தலைவரது இருப்பை மறுதலித்து நீங்கள் அறிக்கை விடுவதனால்
உலகத்தமிழர்கள் அதிர்ச்சியும் ஆவேசமும் அடைந்து துனிசியா,எகித்தை தொடர்ந்து
தமிழீழத்தை அமைப்பதற்கான கிளர்ச்சியில் ஈடுபடுவார்கள் என்று நீங்கள்
கருதுகிறீர்கள் என்றால் அதைவிட முட்டாள்தனம் வேறு ஒன்றும்
இருக்கப்போவதில்லை.

ஏன் என்றால் முள்ளிவாய்க்காலில் எமது
உறவுகள் கொத்துக் கொத்தாக உலக வல்லாதிக்க நாடுகள் துணையுடன் சிங்களம்
கொன்று குவித்து வன்னி வீதிகளை எமது சொந்தங்களின் பிணங்களால் நிரப்பிய
போதும் முள்ளிவாய்க்காலில் முடித்துவைக்கப்பட்ட தமிழினப் படுகொலையின் இறுதி
நாட்களில் நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட எமதருமை மக்கள் உயிருடன்
புதைக்கப்பட்ட போதும் தன்னிச்சையாக கிளர்ந்தெழுந்து புலம்பெயர் தமிழக
தெருக்களை வீதிகளை போர்க்களமாக்கி புரட்சிபடைக்காத போது இப்போது மாத்திரம்
எங்கிருந்து எதிர்பார்ப்பது…?


தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது இருப்பை
உறுதிப்படுத்தி நாமும் தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு தலைவர்களுடன் தொடர்ந்து
செய்திகளையும் கருத்துக்களையும் வெளியிட்டுவருவது வெறுமனே மக்களை
திருப்திப்படுத்தி நன்மதிப்பை பெறவேண்டும் என்பதற்காகவல்ல.

எமக்காகட்டும் தமிழகத்தில் உள்ள ஈழஆதரவு
தலைவர்களாகட்டும் அனைவரிற்கும் கிடைத்த உறுதியான தகவல்களின் அடிப்படையிலேயே
இக்கருத்தினையும் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றோம்.


———–

என்று சொல்லியவர்கள்

தமிழீழத் தேசியத் தலைவரின் உயிரிற்கு பங்கம் நேரவில்லை காலச்சக்கரத்தின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது ஈழதேசம்!!!

அண்மையில் ஈழதேசம் இணையம் காலச்சக்கரம் பார்த்து தலைவர் இருக்கின்றார் என்று ” அறிவிலித்தனமான ஆதாரம்” காட்டுகின்றார்கள்

இவர்கள் பாணியிலே சொன்னால் ……….

கடந்த மூன்று வருடங்களாக தலைவர் இருக்கின்றார் என்ற நம்பிக்கொண்டிருக்கின்ற மக்கள் என்ன இது வரை செய்து விட்டார்கள் ?

ஏன் என்றால் முள்ளிவாய்க்காலில் எமது உறவுகள் கொத்துக் கொத்தாக உலக
வல்லாதிக்க நாடுகள் துணையுடன் சிங்களம் கொன்று குவித்து வன்னி வீதிகளை எமது
சொந்தங்களின் பிணங்களால் நிரப்பிய போதும் முள்ளிவாய்க்காலில்
முடித்துவைக்கப்பட்ட தமிழினப் படுகொலையின் இறுதி நாட்களில்
நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட எமதருமை மக்கள் உயிருடன் புதைக்கப்பட்ட போதும்
தன்னிச்சையாக கிளர்ந்தெழுந்து புலம்பெயர் தமிழக தெருக்களை வீதிகளை
போர்க்களமாக்கி புரட்சிபடைக்காத போது இப்போது மாத்திரம் எங்கிருந்து
எதிர்பார்ப்பது…?

கடந்த மூன்று வருடங்களாக தலைவர்
இருக்கின்றார் என்ற நம்பிக்கொண்டிருக்கின்ற மக்கள் என்ன இது வரை செய்து
விட்டார்கள் ? ஆகவே தலைவரின் வீரச்சாவை அறிவித்தாலும் எதுவும்
நடக்கப்போவதில்லை


அப்படியிருக்கும் போது எதற்கு மூடி மறைக்கின்றார்கள்

எத்தனை மக்கள் இப்போது ஆர்ப்பரிக்கின்றார்கள் ?

அதிலும் பார்க்க இலங்கைக்கு உல்லாசப் பயணம் செய்யும் எண்ணிக்கை அதிகம்

————————-

சரி

இது தலைவர் இருக்கின்றார் என்று வைத்துக் கொள்ளுவோம்
———————————————————————————-
கேள்வி. 1
பிரிகேடியர் சொர்ணத்திற்கு பிற்பாடு யாரும் வீரச்சாவடையவில்லையா ? ஏன் அதன்
பின்னர் அறியப்பட்ட – நடேசன் , புலித்தேவன் , ரமேஷ் , சூசை என்று எவர்
பெயரும் குறிப்பிட்டு வீரவணக்கம் , நினைவுவலைகள் செலுத்தவில்லை ?

கேள்வி.2
பெயர் அறிந்த புலிகள் எவரும் உயிரோடு இல்லை என்ற பின்னர் தலைவர் மட்டும் தப்பிச் சென்றிருப்பாரா ?

அப்படிச் சென்றிருந்தாலும் மறைந்திருப்பதற்கு உலகில் தமிழருக்கு ஆதரவு கொடுக்கும் நாடு ஒன்றிருக்கின்றதா ?

கேள்வி.3
சனல் 4 தொடக்கம் எல்லோரும் புலிகள் போர்க்குற்றம் செய்தவர்கள் என்று
சொல்லும் போது இதுவரை யாரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை அப்படியானல்
பிரபாகரன் வந்தால் அவரும் போர்க்குற்றவாளி தானோ ?

———
ஈழத்திலும் சரி புலத்திலும் சரி ஒரு சில வீதம் தான் போராட்டத்தில் பங்களிப்பு மற்றவர்கள் எல்லாம் பார்வையாளர்கள் தான்

புலம் பெயர்ந்தவர்களில் எத்தனை பேர் தாம் அல்லது பிள்ளைகளை அடுத்த கட்ட போராட்டங்களுக்கு அனுப்புத் தயார் ?

தாய் நாட்டிற்காக தமது இளமைகாலங்களையும்
உயிர்களையும் அர்ப்பணித்த அந்த போராளிகள் ,மாவீரர்கள் போன்று
இல்லாவிட்டாலும் பரவாயில்லை தமது ஓய்வு நேரத்தைத் தானும் பல
புலம்பெயர்ந்தவர்கள் அரசியல் போராட்டங்களுக்கோ பரப்புரைகளுக்கோ செலவழிக்கத்
தயாரில்லை


எங்கேயும் ஒரு சிலர் தான் அதிலும் சிலர் பச்சோந்திகளும் , உளவாளிகளும்

சிங்களவனும் துரோகிகளும் இன்னும் அதே வீச்சுடன் எதிர்ப்பரப்புரைகளில்
ஈடுபட்டுக்கொண்டிருக்க தமிழர்கள் எதுவும் செய்வதில்லை என்றே சொல்லவேண்டும்

எங்கே பார்த்தாலும் எமக்கு எதிரான பின்னூட்டல்கள் தான் அதிகம்

இந்த இலட்சனத்தில் புலம்பெயர்ந்தவர்களாவது ? அடுத்த கட்டப்போராவது ?

உயிரை என்ன மயிரைக் கொடுக்கக் கூட யாரும் தயாரில்லை என்னும் போது

—-
அண்மையில் ஒரு கட்டுரை பார்த்தேன்

புலிகள் புலம்பெயர்ந்த தமிழர்களினூடாக வீறு கொண்டெழுவார்கள் என்று

ஆனால்

உண்மையில் புலிகளின் பணத்தை கொண்டு தான் பல புலம்பெயர்ந்தவர்கள் வீறு கொண்டெழுந்து கொண்டிருக்கின்றார்கள்

கனடாவில் மக்களால் உருவாக்கப்பட்டவையான CMR , CTR , TVI தனி மனித சொத்துக்களாகி விட்டன மற்றவற்றை பற்றிச் சொல்லத் தேவையில்லை

வியாபாரிகளால் வீழ்ந்த என் தலைவா வீரவணக்கம் என்று சாத்திரி என்பவர் தனது வலைப்பூவில் எழுதியது ஞாபகம் வருகின்றது

தமிழ்தேசிய அமைப்புக்கள் , ஊடகங்கள் என்று வேடம் தான் போடுகின்றன தாம்
சொல்வதும் , செய்வதும் மட்டுமே தமிழ்த்தேசியம் மற்றவை எல்லாம் வெத்துக்கள்
என்பது போல் செயற்படுகின்றன

அதிலும் பல வயிறு வளர்ப்பதிற்கே தேசியம் பேசுகின்றன

எது எப்படியோ இனியும் இவர்களின் வீரவசனங்களை நம்பத் தயாரில்லை

தமிழனைத் தலைநிமிர வைக்க முயன்று தோற்றுப்போன தேசியத் தலைவர் பிரபாகரன் ,
மாவீரர்கள்,போராளிகள் ,மக்களுக்கும் தலைதாழ்த்தி எனது வீரவணக்கத்தை
செலுத்திக் கொள்கின்றேன்

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் வீரச்ச்சாவு பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் ? Leader-Prabakaran-tribute

படம் இன்போதமிழ்

நன்றிகள்

எல்லாளன்

——————————-
வருவார்…. வருவார் என்று கூறிக் கூறியே: தலைவனை மறந்த தமிழினம்…..!

போரின் கதாநாயகனாக இருந்தவர் பிரபாகரன்.

ஆயிரமாயிரம் போராளிகளினதும், நாட்டுப்பற்றாளர்களினதும் மரணங்களுக்கு ஒரு அர்த்தத்தையும், மதிப்பையும் ஏற்படுத்தியவர் பிரபாகரன் தான்.

ஆனால் அவருக்காக ஒரு நினைவு நாளை நடத்த முடியாதளவுக்கு ஈழத்தமிழினம் பிளவுபட்டு நின்றது.

இதைவிட சோகமும், சோதனையும் வேறெந்தத் தலைவனுக்கும் வந்ததில்லை.

அவர் வருவார்…. வருவார் என்று கூறிக் கூறியே அவரது நினைவை மறக்கச் செய்து விட்டவர்கள் நாம்.

வரலாற்றில் அழியாத இடத்தைப் பிடிக்க வேண்டிய ஒருவரின் நினைவுகளை அழிக்கின்ற காரியத்தைத் தமிழினம் செய்து கொண்டிருக்கிறது.

இந்தச் சகதிக்குள் இருந்து மீண்டெழும் வரை தமிழருக்கு விடிவை நோக்கிய பயணம் ஒரு போதும் தொடங்கப் போவதில்லை.

இந்த ஒரு விடயத்தில் கூட சரியான முடிவை எடுக்க முடியாத தமிழினத்தால்,
எப்படி எதிர்கால வாழ்வு பற்றிய தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியும்?

இதனால் தான் இத்தனை அவலம் தமிழருக்கு மீணடும், மீண்டும் வந்து கொண்டிருக்கிறது.

நன்றி மறப்பது நன்றன்று.

ஆனால் நன்றி மறந்த இனமாக மாறிப் போன தமிழர்கள் எப்படி தமக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியும்?

தமிழருக்கே முகவரி கொடுத்த தலைவனின் முகவரியையே இல்லாமல் செய்யும்
அளவுக்கு தமிழினம் சிங்களதேசத்தின் புலனாய்வுச் சதிகளுக்குள் சிக்கிப்
போயுள்ளது.

இந்தநிலையில் எப்படி தமிழருக்கென நீதியான வாழ்வை நாம் எதிர்பார்க்க முடியும்?

————

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் வீரச்ச்சாவு பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் ? Veeravanakkam

சனல் 4 ஆவணப்படத்தில் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட விவகாரம் இடம்பெறுவதாக
முதல்முறையாக கடந்த 11ஆம் திகதி அதிகாலையில் தான் பிரிட்டனின் ‘தி
ரெலிகிராப்’ செய்தி வெளியிட்டது.

அதற்கு அரசதரப்பில் இருந்து உடனடியாக எந்தப் பதிலும் வரவில்லை.
பாலச்சந்திரன் கொலை செய்யப்படவில்லை என்றோ, அதில் படையினர் தொடர்புபடவில்லை
என்றால், அவர் எத்தகைய சூழலில் கொல்லப்பட்டார் என்ற விளக்கத்தையோ
அரசதரப்பு இதுவரை முறைப்படியாக வெளியிடவில்லை. ஆனால், 11ஆம் திகதி
பிரிட்டன் நேரப்படி மாலை 4.38 மணியளவில் டெய்லி மெயில் நாளிதழில் ஒரு
கட்டுரை வெளியானது. அதில் சனல் 4 வீடியோவில் விடுதலைப் புலிகளின் தலைவர்
பிரபாகரனின் மரணம் குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள் தொடர்பான ஆய்வும்
இடம்பெறும் என்று கூறப்பட்டிருந்தது.

தலைவர் பிரபாகரன் இறந்த பின்னர் வெளியிடப்பட்ட படங்களில் காணப்படும்
முரண்பாடுகள் குறித்தும், அவரது தலையில் ஏற்பட்டுள்ள பாரிய காயம்
குறித்தும் சனல் 4 ஆவணப்படம் ஆராயும் என்றும் அந்தக் கட்டுரை கூறியது.

இந்தக் கட்டுரை பிரிட்டனில் வெளியானபோது, இலங்கையில் நேரம் இரவு 10
மணியாகி விட்டது. மறுநாள் 12ஆம் திகதி, இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத்
ஜயசூரிய, இந்தியாவின் தென் பிராந்திய இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் அஜய்
சிங்கை இராணுவத் தலைமையத்தில் சந்தித்து விட்டு முல்லைத்தீவுக்குப்
பறந்தார்.

முல்லைத்தீவு படைத் தலைமையகம், அதன் கீழ் ஒட்டுசுட்டானில் உள்ள
64ஆவது டிவிஷன் தலைமையகம், புதுக்குடியிருப்பில் உள்ள 68ஆவது டிவிஷன்
தலைமையகம் ஆகியவற்றில் படையினரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். அத்துடன்
இறுதிப்போர் நடந்த பகுதிகளையும் அவர் பார்வையிட்டார். முல்லைத்தீவில்
படையினர் மத்தியில் உரையாற்றிய இராணுவத் தளபதி பிரபாகரனின் மரணம் தொடர்பாக
சனல் 4 ஒரு வீடியோவை வெளியிடப் போவதாக அறிவதாகவும், அதற்குப் பதிலளிக்கும்
வகையில் இராணுவம் ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்து வெளியிடவுள்ளதாகவும்
தெரிவித்திருந்தார். அங்கு அவர்,


உண்மையை உலகுக்கு காட்ட இராணுவம் விரும்புகிறது. எனவே இறுதிப்போர்
குறித்து முறையான, ஒத்திசைவான ஆதாரங்களின் அடிப்படையில் ஆவணப்படம் ஒன்றை
நாம் தயாரிக்கத் தொடங்கியுள்ளோம். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின்
மரணம் குறித்த உண்மைத் தகவல்களை இந்த ஆவணப்படம் கொண்டிருக்கும். அப்போது
அங்கிருந்தவர்களின் செவ்விகளும் அதில் இடம்பெறும். இதன் மூலம்,
நந்திக்கடலில் உண்மையில் என்ன நடந்தது என்பதை உலகம் அறிந்து கொள்ளும்
வாய்ப்புக் கிட்டும். 53ஆவது டிவிஷன் இந்த ஆவணப்படத்தை தயாரிப்பதாகவும்
அவர் குறிப்பிட்டிருந்தார். பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் பற்றிய
காட்சிகள் குறித்து செய்திகள் வெளியான போது அதை முறியடிப்பது குறித்து
இராணுவத்தரப்பு எதையும் கூறவில்லை. ஆனால், பிரபாகரன் விவகாரம் பற்றி அலசப்
போவதாகத் தகவல் வந்ததும், இராணுவத் தளபதி சில மணி நேரங்களிலேயே ஒரு பதில்
ஆவணப்படம் தயாரிக்கப்படுவதாக அறிவித்தார்.

இந்த விடயத்தில் மட்டும் அவர் ஏன் இத்தனை அவசரப்பட்டார் என்ற கேள்வி இப்போது உச்சம் பெற்றுள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம் பற்றிய கேள்விகளும்
சந்தேகங்களும் கடந்த மூன்று ஆண்டுகளாக நீடிக்கின்றன. இதன் காரணமாக,
பிரபாகரன் இன்னமும் உயிருடன் இருப்பதாக நம்பும் ஒரு தரப்பினரும் உள்ளனர்.

பிரபாகரனின் மரணம் பற்றி திடீரென அறிவிக்கப்பட்ட விதம், அவரது சடலத்தின்
தோற்றங்களின் மாறுபாடு, தலையில் உள்ள பாரிய காயம், அவரது மரணம் எப்போது
நிகழ்ந்தது என்று இன்னமும் உறுதியாக அறிவிக்கப்படாதது என்று பல
கேள்விகளுக்கான தீர்க்கமான பதில் இன்னமும் இல்லை. இந்தநிலையில், இராணுவத்
தரப்பு பிரபாகரனின் மரணம் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் வீடியோவை
தயாரிக்கின்ற நிலையில் அது சர்ச்சைக்குரிய விவகாரமாகியுள்ளது என்பது உறுதி.

ஆனால், சனல் 4 ஆவணப்படத்தில் இந்த விவகாரம் குறித்து அதிகம்
அலசப்படவில்லை. ஆனால் சனல் 4 ஆவணப்படம், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில்
கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் இராணுவத்துக்குள் குழப்பத்தை
ஏற்படுத்தியுள்ளது என்பதை உணர முடிகிறது.

கட்டுரையாளர் இன்போ தமிழின் இராணுவ ஆய்வாளர் சுபத்ரா
info@infotamil.ch

-இன்போ தமிழ் குழுமம் -


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
»  * * * * * * * தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 1)
»  * * * * * * * தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)
» தமிழீழத் தேசியத் தலைவரைப் பற்றிய சிறு குறிப்பு!
» தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனை தீர்த்துக்கட்ட சோனியா பிறப்பித்த ரகசிய உத்தரவு?
» தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களது கடந்த கால மாவிரர் தின உரைகள் காணொளியில் 1989 -2008

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum