TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஆவணி மாத ராசி பலன்கள்

Go down

ஆவணி மாத ராசி பலன்கள் Empty ஆவணி மாத ராசி பலன்கள்

Post by மாலதி Wed Aug 17, 2011 6:36 pm

ஆவணி மாத ராசி பலன்கள் Evening-Tamil-News-Paper_52672541142
1. மேஷம்

கிரக மாற்றம், சேர்க்கை, யோகம்
சாதகமாக இருப்பதால் மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். செல்வாக்கு,
சொல்வாக்கு உயரும். கன்னிப் பெண்களின் கனவு நனவாகும். பஞ்சமாதிபதி பலம்
காரணமாக திடீர் யோகம், அதிர்ஷ்டம் உண்டு. குழந்தை பாக்கியம் கிட்டும்.
திருமணத் தடை நீங்கும். மாமன் வகை உறவுகளால் மகிழ்ச்சி, ஆதாயம் உண்டு.
தேக்க நிலையில் இருந்த அரசாங்க விஷயங்கள் அனுகூலமாக முடியும்.
தாத்தாபாட்டியிடம் இருந்து மகிழ்ச்சியான தகவல் வரும். வீடு, கடையில்
பராமரிப்பு செலவு ஏற்படும். சமையல் அறைக்கு தேவையான சாதனங்கள்
வாங்குவீர்கள். கொடுக்கல், வாங்கலில் நிதானத்தை கடைபிடிக்கவும்.
உத்யோகத்தில் பயணங்கள், அலைச்சல் இருக்கும். பயணத்தால் ஆதாயம் உண்டு.
வியாபாரம் செழிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

அஸ்வினி: யோகமான மாதம்
பரணி: நிதானம் தேவை
கிருத்திகை: சுப செய்திகள்
பரிகாரம்: தினமும் கந்த சஷ்டி கவசம் படிக்கலாம். முருகன் கோயிலுக்கு விளக்கேற்ற
எண்ணெய் வாங்கித் தரலாம். நோயாளிகளுக்கு உதவலாம்.

2. ரிஷபம்
சாதக,
பாதகங்கள் இணைந்த மாதம். சொந்த வேலைகளுடன் மற்றவர் வேலையையும் பார்க்க
வேண்டி வரும். பெண்களுக்கு சோர்வு, மனசஞ்சலம் ஏற்பட்டு விலகும். தேவையற்ற
விஷயங்களில் கருத்து கூறுவதை தவிர்க்கவும். வெளிநாட்டில் இருந்து சாதகமான
செய்தி வரும். மாதக் கடைசியில் திடீர் செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. தாய்
உடல்நலனில் அக்கறை கொள்வது நலம். பழைய வண்டியை மாற்றி புது வண்டி
வாங்குவீர்கள். மாமன் வகை உறவுகளால் ஆதாயம் உண்டு. புதுமண தம்பதிகள்
குழந்தை பாக்கியம் எதிர்பார்க்கலாம். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி
வரும். வீடு மாறும் முயற்சி சற்று தாமதம் ஆகலாம். உத்யோகத்தில் சாதகமான
நிலை உருவாகும். உயர் அதிகாரியின் ஆதரவு உண்டு. வியாபாரம் லாபகரமாக
இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

கிருத்திகை: யோசித்து செயல்படவும்
ரோகிணி: மன அமைதியின்மை
மிருகசீரிஷம்: நல்ல வாய்ப்புகள்
பரிகாரம்:
தினமும் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் படிக்கலாம். விநாயகருக்கு கரும்புச்சாறு
அபிஷேகம் செய்யலாம். ஏழைகள் மருத்துவத்துக்கு உதவலாம்.

3. மிதுனம்

சுபயோக
பலன்கள் நிறைந்த மாதம். சுப காரிய நிகழ்ச்சிக்கான பிள்ளையார் சுழி
போடுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் நிலவும். மருத்துவ சிகிச்சையில்
இருந்தவர்கள் நலமடைவார்கள். தடைபட்ட கட்டிட வேலை தொடங்கும். ஸ்திரமான
முடிவுகள் எடுப்பீர்கள். நண்பர்களிடம் இருந்து சற்று விலகி இருப்பது
நல்லது. கர்ப்பிணிகள் கவனமாக இருப்பது அவசியம். கல்வி வகையில் திடீர்
செலவுகள் இருக்கும். கம்ப்யூட்டர், செல்போன் போன்ற சாதனங்கள்
வாங்குவீர்கள். கணவன், மனைவி இருவரும் மனம் விட்டு பேசி செயல்படுவது
நல்லது. வெளிமாநிலத்தில் உள்ள கோயில்களுக்கு சென்று வருவீர்கள்.
உத்யோகத்தில் தடைகள் நீங்கும். விரும்பிய மாற்றங்கள் வரும். வியாபாரம்
உச்சமடையும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வரவு, செலவுகளில் கவனமாக
இருப்பது நல்லது.

மிருகசீரிஷம்: குடும்ப செலவுகள்
திருவாதிரை: ஆலய தரிசனம்
புனர்பூசம்: நிதானம் தேவை
பரிகாரம்: ஸ்ரீரமணாய என்று
தினமும் 108 முறை சொல்லலாம். புதன்கிழமை சக்கரத்தாழ்வாரை வழிபடலாம். சாலையோரம் வசிப்பவர்களுக்கு ஆடை தானம் தரலாம்.

4. கடகம்

தன,
பஞ்சம ஸ்தான கிரக பலம் காரணமாக ஏற்றம், மாற்றம் உண்டு. குடும்பத்தில்
இருப்பவர்கள் ஒத்துழைப்பார்கள். பிள்ளைகளுக்கு தோஷம், தடை நீங்கி திருமண
யோகம் கூடிவரும். விலகி நின்ற சொந்தங்கள் நெருங்கி வந்து உறவாடுவார்கள்.
வரவேண்டிய பணம் கை வந்து சேரும். தந்தை உடல்நலத்தில் அக்கறை தேவை.
இடமாற்றம் சம்பந்தமாக நல்ல முடிவு வரும். எலக்ட்ரிக்கல் சாதனங்கள் செலவு
வைக்கும். சொத்து விஷயமாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். வங்கியில் சாதகமான
பதில் வரும். கன்னிப் பெண்கள் நிதானமாக போவது நல்லது. மாமன் வகை உறவுகளால்
ஆதாயம் இருக்கும். அலுவலகத்தில் வேலைச்சுமை உண்டு. புதிய பொறுப்பு ஏற்க
வேண்டி வரும். வியாபாரம் ஸ்திரமாக இருக்கும். பாக்கிகள் வசூலாகும்.
வேலையாட்களால் டென்ஷன் வரலாம்.

புனர்பூசம்: தடை விலகும்
பூசம்: உறவுகளால் மகிழ்ச்சி
ஆயில்யம்: அலைச்சல்
பரிகாரம்:
ஸ்ரீராம ஜெயராம என்று தினமும் 108 முறை சொல்லலாம். பவுர்ணமியில் அம்மன்
கோயிலுக்கு செல்லலாம். பக்தர்களுக்கு சுலோக புத்தகங்கள் வாங்கித் தரலாம்.

5. சிம்மம்

மாத
ஆரம்பமே யோகமாக அமையும். ராசிநாதன் சூரியன் பலத்தால் தொட்டது துலங்கும்.
கொடுக்கல், வாங்கலில் தேக்க நிலை நீங்கும். தடைபட்ட கட்டிட வேலை தொடங்கும்.
தந்தை உடல்நலத்தில் கவனம் தேவை. திடீர் செலவுகள் வரலாம். சகோதர உறவுகளால்
அலைச்சல், செலவு வந்து நீங்கும். மனைவியின் சொல்லுக்கு செவி சாய்ப்பது
நல்லது. உறவினர் நிகழ்ச்சிகளை முன்நின்று நடத்துவீர்கள். வசதியான
வீட்டுக்கு குடிபோகும் யோகம் உள்ளது. வெளிநாடு போவதற்கு கிரீன் சிக்னல்
கிடைக்கும். மாதக் கடைசியில் வெளியூர் பயணங்கள் இருக்கும். உத்யோகத்தில்
சூழ்நிலை அறிந்து நடப்பது நலம் தரும். உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.
வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் பாதகமில்லை. லாபம் அதிகரிக்கும்.
புதிய தொழில் தொடங்குவீர்கள்.

மகம்: டென்ஷன், திடீர் செலவு
பூரம்: சுபசெய்தி
உத்திரம்: அனுசரணை தேவை
பரிகாரம்:
நம சிவாய என தினமும் 108 முறை தியானிக்கலாம். புதன்கிழமை நரசிம்மர்,
குலதெய்வத்தை வழிபடுவது நலம். முதியோர் இல்லங்களுக்கு உதவலாம்.

6. கன்னி

அஷ்டம
ஸ்தான கிரக அமைப்பு, நிழல் கிரகங்களால் அலைச்சல், கோபம், இடையூறு ஏற்பட்டு
நீங்கும். குடும்ப விஷயங்களில் சற்று நிதானமாக போவது நல்லது. சொத்து
வழக்கு சம்பந்தமான சமாதான முயற்சி பலன் தரும். கர்ப்பிணிகள் கவனமாக
இருப்பது நல்லது. வேலை சம்பந்தமாக தேர்வு எழுதியவர்களுக்கு நல்ல தகவல்
உண்டு. மருத்துவ சிகிச்சையில் இருந்தவர்கள் குணமடைவார்கள். நெருங்கிய
உறவுகளால் திடீர் செலவு இருக்கும். வெளிமாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற
கோயில்களுக்கு செல்வீர்கள். புதிய வண்டி வாங்குவீர்கள். பெண்களுக்கு பிறந்த
வீட்டாருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். அலுவலகத்தில் சாதகமான திருப்பம்
உண்டு. குடும்பத்தை பிரிந்து வெளியூரில் தங்க வேண்டி வரலாம். வியாபாரம்
சூடு பிடிக்கும். வேலையாட்கள் சாதகமாக இருப்பார்கள்.

உத்திரம்: பண வரவு
அஸ்தம்: கோபதாபம்
சித்திரை: பயணங்கள்
பரிகாரம்: தினமும் 108 முறை ஸ்ரீராம ஜெயம் எழுதலாம். சிவாலயங்களில் அன்னதானம் தரலாம். ஏழை பெண்கள் திருமணத்துக்கு உதவலாம்.

7. துலாம்

உங்கள்
ராசிக்கு 2, 7, 8, 9, 10, 11, 12 என்று பரவலாக கிரக சேர்க்கை இருப்பதால்
இனம் புரியாத கவலை ஏற்பட்டு விலகும். வாக்குவாதம், வாக்குறுதி
தவிர்க்கவும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். மாப்பிள்ளையால்
டென்ஷன் வந்து நீங்கும். பெண்கள் சமையல் செய்யும்போது கவனமாக இருப்பது
அவசியம். வசதி படைத்த நண்பரின் உதவி கிடைக்கும். மருமகள் கர்ப்ப சம்பந்தமாக
நல்ல தகவல் உண்டு. தந்தை மூலம் நல்ல தகவல் வரும். வீடு, கடையில்
பராமரிப்பு செலவு ஏற்படும். எலக்ட்ரானிக் சாதனங்கள் வாங்குவீர்கள். புதிய
வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. குலதெய்வ பூஜைகள்
நிறைவேறும். உத்யோகத்தில் மனஉளைச்சல் நீங்கும். வெளியூரில் வேலை
செய்பவர்களுக்கு சொந்த ஊருக்கு மாற்றல் கிடைக்கும். தொழிலில் தொய்வு
நீங்கும்.

சித்திரை: அலைச்சல், செலவுகள்
சுவாதி: ஆதாயம், பணவரவு
விசாகம்: மனவருத்தம்
பரிகாரம்: தினமும் ஹரே கிருஷ்ணா என்று தியானிக்கலாம். பிரதோஷ விரதம் இருந்து சிவனை தரிசிக்கலாம். ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவலாம்.

8. விருச்சிகம்

ஏற்ற
இறக்கம், லாப நஷ்டம் கலந்த மாதம். ராகு, கேதுவால் மன உளைச்சல் ஏற்பட்டு
நீங்கும். சொந்த வேலைகளுடன், உறவினர் வேலைகளையும் பார்க்க வேண்டி வரும்.
கல்வி சம்பந்தமாக செலவுகள் உண்டு. மகள் பிரசவ சம்பந்தமாக அலைச்சல், செலவு
இருக்கும். பழைய வண்டியை மாற்றி புது வண்டி வாங்குவீர்கள். கன்னிப்
பெண்களின் எண்ணங்கள் நிறைவேறும். வழக்கு சம்பந்தமாக சாதகமான செய்தி வரும்.
பெண்கள் ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வார்கள். பணம் விஷயமாக நண்பர்களிடையே
மனவருத்தங்கள் வரலாம். தந்தை உடல்நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
வியாபாரம் செழிப்படையும். பழைய கடன்பாக்கிகள் வசூலாகும். புதிய வாய்ப்பு
உங்களை தேடி வரும்.

விசாகம்: பொருள் சேர்க்கை
அனுஷம்: திடீர் செலவு
கேட்டை: வாகன யோகம்
பரிகாரம்:
ஓம் நமோ நாராயணாய என்று தினமும் சொல்லலாம். முருகன் கோயிலுக்கு விளக்கேற்ற
எண்ணெய் வாங்கித் தரலாம். பார்வையற்றோருக்கு உதவலாம்.

9. தனுசு

ராசிநாதன்
நட்சத்திர பலம் காரணமாக எதிலும் ஏறுமுகமான நிலை உண்டு. குடும்பத்தில்
குதூகலம் நிலவும். பணப் பிரச்னை தீரும். கணவன்மனைவி இடையே பூசல்கள்
மறையும். கன்னிப் பெண்கள் எண்ணங்கள் நிறைவேறும். திசா புத்தி
சரியில்லாதவர்களுக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டு சரியாகும். வெளிநாடு
செல்லும் முயற்சிக்கு பலன் உண்டு. சொத்து சம்பந்தமாக முக்கிய முடிவு வரும்.
நிதானமாக செயல்படவும். மாமியார், நாத்தனாருடன் அனுசரித்து போகவும். புதிய
வீட்டுக்கு குடிபோவீர்கள். கல்வி சம்பந்தமாக செலவு இருக்கும். கம்ப்யூட்டர்
போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். அலுவலகத்தில் நிதானம் தேவை. சக ஊழியர்களை
அனுசரித்து செல்லவும். பதவி உயர்வு பற்றிய செய்தி வரலாம். வியாபாரம்
உச்சமடையும். புதிய தொழில் வாய்ப்பு வரும்.

மூலம்: சோர்வு, அலைச்சல்
பூராடம்: மகிழ்ச்சி, குதூகலம்
உத்திராடம்: பொருள் சேர்க்கை
பரிகாரம்: தினமும் விநாயகர் அகவல் படிக்கலாம். ஏழை முதியோர், விதவைகளுக்கு உதவலாம். தட்சிணாமூர்த்தியை வழிபடலாம்.


10. மகரம்


தனம்,
வாக்கு குடும்ப ஸ்தானங்கள் பலமாக இருப்பதால் மனதில் இருந்த சலனம், குறை
நீங்கி தன்னம்பிக்கை, தெளிவு பிறக்கும். சுக்கிர பலம் காரணமாக சுப காரியம்
கூடிவரும். பெண்கள் குடும்பத்தில் சகிப்புத் தன்மையுடன் நடப்பது அவசியம்.
பிள்ளைகள் உங்களை புரிந்துகொண்டு ஒத்துழைப்பார்கள். தந்தை உடல்நலத்தில்
அக்கறை தேவை. சகோதரர்கள் உதவுவார்கள். திடீர் செலவுகள் ஏற்பட்டு விலகும்.
குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. அடமான நகை,
பத்திரத்தை மீட்பீர்கள். புகழ்பெற்ற கோயில்களுக்கு சென்று வருவீர்கள்.
பேரன், பேத்திகளால் செலவுகள் இருக்கும். புது வண்டி வாங்குவீர்கள்.
உத்யோகத்தில் சாதக பாதகம் இருக்கும். தேவையற்ற பிரச்னைகளில் தலையிட
வேண்டாம். வியாபாரம் செழிக்கும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.

உத்திராடம்: நிதானம் தேவை
திருவோணம்: குறைகள் தீர்வு
அவிட்டம்: சமமான வரவு
பரிகாரம்:
ஸ்ரீமதே ராமானுஜாய என்று தினசரி 108 முறை சொல்லலாம். சனிக்கிழமை
ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வணங்கலாம். மாற்றுத் திறனாளிக்கு உதவலாம்.

11. கும்பம்


சாதக,
பாதகம் கலந்து இருக்கும். எதிலும் முன்யோசனை, நிதானம் தேவை. அவசர
வேலைக்காக கடன் வாங்க நேரலாம். சகோதர உறவுகளிடையே மனக்கசப்பு தீரும்.
வழக்கில் இருந்த தடைகள் விலகும். தந்தை மூலம் ஆதாயம் வரும். வெளிநாட்டில்
இருப்பவர்கள் சொந்த ஊர் திரும்புவார்கள். கர்ப்பிணிகள் கவனமாக இருப்பது
அவசியம். பயணங்களில் மாற்றம் வரலாம். வேலை சம்பந்தமாக எதிர்பார்த்த
நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும். மாமியார் உடல்நலத்தில் அக்கறை தேவை.
திடீர் செலவுகள் ஏற்படலாம். வண்டி வகையில் செலவுகள் இருக்கும். மாதக்
கடைசியில் முக்கிய சந்திப்புகள் நிகழும். உத்யோகத்தில் வேலைச்சுமை,
பயணங்கள், அலைச்சல் வந்து நீங்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். புது
ஆர்டர் கிடைக்கும். நெருங்கிய நண்பர் உதவுவார். பணவரவு உண்டு.

அவிட்டம்: தடைகள் நீங்கும்
சதயம்: அவசிய செலவுகள்
பூரட்டாதி: அலைச்சல்
பரிகாரம்:
தினமும் நவக்கிரக ஸ்தோத்திரம் படிக்கலாம். சனிக்கிழமை சிவ ஸ்தலங்களில்
அன்னதானம் தரலாம். வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு உதவலாம்.

12. மீனம்

கிரக
சஞ்சார அம்சங்கள் காரணமாக தடைகள் வரலாம். சிந்தித்து முடிவெடுக்கவும்.
எதிலும் அகலக்கால் வேண்டாம். நண்பர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது.
பயணத்தின்போது கவனம் தேவை. கைப்பொருளை இழக்க நேரிடலாம். புதுமணத் தம்பதிகள்
குழந்தை பாக்கியம் எதிர்பார்க்கலாம். நிலம் சம்பந்தமாக யோசித்து
செயல்படவும். வழக்கில் சமாதான முயற்சி பலனளிக்கும். பெண்களுக்கு பிறந்த
வீட்டில் இருந்து நல்ல செய்தி வரும். கன்னிப் பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி
மகிழ்வார்கள். குழந்தைகள் உடல்நலத்தில் கவனம் தேவை. தடைபட்ட குலதெய்வ
பரிகார பூஜை நிறைவேறும். எலக்ட்ரிக்கல் சாதனங்கள் செலவு வைக்கும்.
உத்யோகத்தில் நல்ல மாற்றங்கள் வரும். உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும்.
வியாபாரம் கை கொடுக்கும். போட்டிகள் குறையும்.

பூரட்டாதி: நிதானம்
உத்திரட்டாதி: சந்தோஷம்
ரேவதி: அவசிய செலவு
பரிகாரம்: தினசரி ஆஞ்சநேய கவசம் படிக்கலாம். ஞாயிற்றுக்கிழமை பைரவரை வழிபடலாம். ஏழை கர்ப்பிணிகளுக்கு உதவலாம்.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum