TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:13 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அன்று பாம்பு பல்லி:இன்று கட்டில் மெத்தை:கோவை சிறையில் யாவரும் நலம்

Go down

அன்று பாம்பு பல்லி:இன்று கட்டில் மெத்தை:கோவை சிறையில் யாவரும் நலம் Empty அன்று பாம்பு பல்லி:இன்று கட்டில் மெத்தை:கோவை சிறையில் யாவரும் நலம்

Post by piraba Mon Aug 15, 2011 8:42 am

அன்று பாம்பு பல்லி:இன்று கட்டில் மெத்தை:கோவை சிறையில் யாவரும் நலம் Gallerye_051505720_294865
கோவை:"பாளையங்கோட்டை சிறையினிலே... பாம்புகள், பல்லிகள்
நடுவினிலே... அஞ்சாமல் இருந்தவர் யாரு...' என்ற பாடல் இப்போதும் கூட
தி.மு.க., பிரசார மேடைகளில் ஒலிக்கிறது; அந்த அளவுக்கு இந்த பாடல்
கட்சியினரிடையே மிக பிரபலம். இப்பாடலை கேட்கும் தொண்டன், "சிறை என்றால்
இப்படித்தான் இருக்கும் போலும்' என நினைத்து, தனது தலைவர்கள் சிறையில்
முன்பு அனுபவித்த கொடுமைகளை கண்முன் நிறுத்திப்பார்த்து ஒருகணம் ஆடிப்போய்
கவலை கொள்வதும் உண்டு. ஆனால், தற்போது நில அபகரிப்பு வழக்கில் சிக்கி
சிறைவாசம் அனுபவிக்கும் தி.மு.க., பிரமுகர்கள், சிறை என்பது சகல வசதிகளும்
நிறைந்த இடம் என்பதை அனுபவ பூர்வமாகவே உணர்ந் திருக்கின்றனர்.

கோவை மத்திய சிறையிலுள்ள வீரபாண்டி ஆறுமுகம், ஈரோடு மேயர் உள்ளிட்ட
தி.மு.க.,வினர் கட்டில், மெத்தை, படுக்கை விரிப்பு, மின் விசிறி, குளியலறை
என சகல வசதிகளையும் பெற்றுள்ளனர். இவர்களுக்கு பொங்கல், சாதம், பொரியல்,
சாம்பார், சப்பாத்தி, பால், முட்டை, சிக்கன் குழம்பு வழங்கப்படுகிறது.
போதாக்குறைக்கு, தங்களை காணவந்த உடன்பிறப்புகள், உற்றார் உறவினர் வழங்கிய
தின்பண்டங்களை சிறு, சிறு மூட்டைகளாக கட்டி அறை முழுவதும் அடைத்தபடி போட்டு
வைத்துள்ளனர். இவற்றை உட்கொண்டு தீர்க்கவே ஒரு மாதம் ஆகும் என்கின்றனர்,
சிறைக்காவலர்கள்.கோவை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணைக் கைதிகள்,
தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் என மொத்தம் 2,200
கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இரு மாதங்களுக்கு முன்வரை மத்திய சிறை வளாகம்
எவ்வித பரபரப்புமின்றி காணப்பட்டது.
அன்று பாம்பு பல்லி:இன்று கட்டில் மெத்தை:கோவை சிறையில் யாவரும் நலம் Gallerye_051227730_294865

நில அபகரிப்பு வழக்கில் "மாஜி' அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், ஈரோடு
மாவட்ட தி.மு.க., செயலாளர் ராஜா, ஈரோடு மாநகராட்சி மேயர் குமார் முருகேஷ்,
சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேனி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ.,
அன்பழகன், கோவை மாவட்ட தி.மு.க., துணைச் செயலாளர் ஆனந்தன் உள்ளிட்ட 14
தி.மு.க.,வினர் வந்தபின் மத்திய சிறையை பரபரப்பு
தொற்றிக்கொண்டது.சிறையிலிருக்கும் தி.மு.க., பிரமுகர்களுக்கு சிறை விதிகளை
மீறி சலுகை அளிக்கப்படுவதாக கிளம்பிய புகாரைத் தொடர்ந்து, சிறை அதிகாரிகள்
மற்றும் காவலர்களின் நடவடிக்கைகளை உளவு போலீசார் கூர்ந்து கவனிக்கின்றனர்.
சிறை நுழைவாயில், கைதிகளை வெளிநபர்கள் சந்திக்கும் நேர்காணல் அறை உள்ளிட்ட
பகுதிகளை கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.

தி.மு.க., பிரமுகர்களை யாரெல்லாம் சந்திக்கிறார்கள், பேசப்படும் விஷயம்
என்ன, தடை செய்யப்பட்ட பொருட்கள் சிறைக்குள் கைமாற்றப்படுகிறதா என,
கண்காணிக்க சிறப்பு பணி அடிப்படையில் உளவு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சிறைக்குள் நடக்கும் நிகழ்வுகள் குறித்த ஒற்றுத்தகவல் சேகரித்து,
மாநில தலைமையிடத்துக்கும் அவ்வப்போது அனுப்பி வருகின்றனர்.

துணை ஜெயிலர் டிரான்ஸ்பர்: நில அபகரிப்பு வழக்கில் சிறையிலுள்ள கோவை
மாவட்ட தி.மு.க., துணைச் செயலாளர் ஆனந்தனுக்கு சிறை விதிகளை மீறி அதிகாரி
ஒருவர் சலுகை அளித்ததாக புகார் எழுந்தது. விசாரணை நடத்திய சிறைத்துறை
இயக்குனர் அலுவலகம், துணை ஜெயிலர் (ஸ்டோர் பொறுப்பாளர்) வசந்தமோகன் என்பவரை
புதுக்கோட்டையிலுள்ள பார்ஸ்டல் பள்ளிக்கும், காவலர் கிருஷ்ணன் என்பவரை
கோபி கிளைச்சிறைக்கும் தூக்கியடித்தது. தொடர்ந்து, சிறைத்துறை இயக்குனர்
டோக்ரா சமீபத்தில் கோவை சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, கண்காணிப்பு
மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறும்,கைதிகளுக்கு சலுகை
அளிப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சிறை
அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை எச்சரித்து சென்றார்.


இந்நிலையில் மற்றொரு சிறை அதிகாரி, தி.மு.க.,வினருக்கு உதவியதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன. "செக்யூரிட்டி பிளாக்'கில் அடைக்கப்பட்டிருக்கும்
மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை, சிறை அதிகாரி ஒருவர் இரண்டு
நாட்களுக்கு முன் இரவு 8.00 மணியளவில் சந்தித்து பார்சல் ஒன்றை கொடுத்துச்
சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது நுழைவாயில் காவல் பணியில் இருந்த
காவலரிடம், தனது வருகை தொடர்பாக பதிவு எதும் (என்ட்ரி) செய்ய வேண்டாமென
அந்த அதிகாரி கேட்டுக் கொண்டதாகவும், அதையும் மீறி அந்த காவலர் "என்ட்ரி'
புத்தகத்தில் பதிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தகவலறிந்த
உளவுப் போலீசார் மாஜி அமைச்சரை சிறை அதிகாரி
தனியாகச் சென்று சந்திக்க வேண்டிய அவசியம் என்ன, கைமாற்றிய பார்சலில்
என்ன இருந்தது என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

ஒருபுறம் மேலிடத்தின் அடுத்தடுத்த உத்தரவுகள், மறுபுறம் உளவுப்
போலீசாரின் தீவிர கண்காணிப்பு என இருவிதமான நெருக்கடியில் சுழன்று
கொண்டிருக்கும் சிறை அதிகாரிகள் மொத்தத்தில் நிம்மதி இழந்துள்ளனர். "மத்திய
சிறையிலுள்ள 2,200 கைதிகளை நிர்வகிப்பதை காட்டிலும், தி.மு.க.,வினர் 14
பேரை நிர்வகிப்பதே பெரும் பிரச்னையாகிவிட்டது' என, புலம்புகின்றனர்.
"சிறைக்குள் தப்பித்தவறி தி.மு.க.,வினரிடம் பேச்சுக்கொடுத்தால்
விடிவதற்குள் வேறு இடத்துக்கு தூக்கியடிக்கப் பட்டு விடுவோமோ என, அச்சமாக
இருக்கிறது' என்கின்றனர், அதிகாரிகள். இதன்காரணமாக, சிறை வளாகத்தில்
கரைவேட்டிக்காரர்களை கண்டாலே, அதிகாரிகள் தூரம் ஓடுகின்றனர். அதேவேளையில்,
சிறையிலுள்ள தி.மு.க.,வினரோ, எவ்வித கவலையுமின்றி பொழு தை கழித்து
வருகின்றனர்.

என்னென்ன வசதிகள்: நில அபகரிப்பு வழக்கில் சிறையிலுள்ள 14 பேரில்
வீரபாண்டி ஆறுமுகம், ஈரோடு மாநகராட்சி மேயர், கோவை மாவட்ட தி.மு.க.,
துணைச் செயலாளர் ஆனந்தன் உள்ளிட்ட 10 பேருக்கு "ஏ வகுப்பு' சிறை வசதி
அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் "செக்யூரிட்டி பிளாக்' (இதை
மாட்டுக்கொட்டகை சிறை என்கிறார்கள்; இங்கு முன்பு மாட்டுக்கொட்டகை
இருந்தது) சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த பிளாக்கில் இரு கழிவறை,
குளியல் அறை, கட்டில், மெத்தை, டேபிள், மின் விசிறி உள்ளிட்ட வசதிகள்
உள்ளன. அங்கு அடைக்கப்பட்டுள்ளவர்கள் சிறையின் மற்ற பகுதிகளுக்கு செல்ல
முடியாதபடி, இரு நுழைவாயில்களில் காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்;
இவர்களின் கண்காணிப்பை மீறி அதிகாரிகள் கூட உள்ளே செல்ல முடியாது. அவ்வாறு
எந்த அதிகாரி சென்றாலும், நுழைவாயில் பதிவு புத்தகத்தில் குறிப்பு எழுதப்பட
வேண்டும் என்பது உத்தரவு.

நேர்காணலுக்கு வழிக்காவல்: தி.மு.க.,வினரை சந்திக்க தினமும்
நூற்றுக்கணக்கானோர் சிறைக்கு வருகின்றனர். ஒரே நேரத்தில் 10, 15 பேரை
பார்க்க அனுப்பினால் வீண் பிரச்னை ஏற்படும் எனக்கருதி, ஒரே நேரத்தில்
மூன்று பேர் பார்க்க மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

சமீபத்தில், மாஜி துணை முதல்வர் ஸ்டாலின் வந்திருந்தபோது 20க்கும்
மேற்பட்ட பிரமுக ர்கள் அவருடன் சேர்ந்து, கைதிகளை பார்க்க விண்ணப்பித்தனர்.
இதற்கு அனுமதி மறுத்த சிறை நிர்வாகம் ஸ்டாலின், மாஜி அமைச்சர் பழனிச்சாமி
உள்ளிட்ட மூவருக்கு மட்டுமே அனுமதி வழங்கியது; மற்றவர்கள் வெளியேற்றப்
பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சிக்காரர்கள், உறவினர்கள்
சிறைக்கு வந்து கைதிகளை நேர்காணல் செய்ய மனு அளித்ததும், அதுபற்றிய விபரம்
சிறைக் கண்காணிப்பாளருக்கு தெரிவிக்கப்பட்டு, செக்யூரிட்டி பிளாக்கில்
இருக்கும் தி.மு.க.,வினர், சற்றுதொலைவில் இருக்கும் நேர்காணல் அறைக்கு
நடந்தபடியே பாதுகாப்புடன் அழைத்து வரப்படுகின்றனர். உடன் பாதுகாப்புக்கு
அதிகாரிகள், சிறைக்காவலர்களும் செல்கின்றனர்.

நேர்காணல் முடிந்ததும் மீண்டும் பிளாக்கிற்கு அழைத்துச்
செல்லப்படுகின்றனர். வழியில் மற்றவர்களுடன் பேச, பொருட்களை வாங்க
அனுமதிக்கக்கூடாதென உத்தரவிடப்பட்டுள்ளது.அறை முழுவதும் பழம், தின்பண்டம்:
வீரபாண்டி ஆறுமுகம், ஈரோடு மேயர் உள்ளிட்ட 14 பேரும் செக்யூரிட்டி பிளாக்
என்ற ஒரே கட்டடத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒன்றுகூடி கலந்துரையாட
தடை ஏதுமில்லை. இதனால் கட்சி விவகாரங்கள், வெளியில் இருக்கும் தி.மு.க.,
பிரமுகர்களின் நிலை, அ.தி.மு.க., அரசின் அடக்கு முறை என பல்வேறு விஷயங்கள்
குறித்தும் விவாதித்த வண்ணம் உள்ளனர். காலை, மதியம் என இரண்டு வேளை
குளியல், பகலில் உரையாடல், கேலி, கிண்டல், இரவில் நிம்மதியான உறக்கம் என
இவர்களது பொழுது நன்றாகவே போகிறது.

உறவினர்களும், கட்சிக்காரர்களும் நேர்காணலின்போது கொடுத்துச் சென்ற
ஆப்பிள், ஆரஞ்சு, மாது ளை, திராட்சை, வாழைப்பழம் முறுக்கு, பிஸ்கட்,
பேரீட்சை என பல வகையான தின்பண்டங்கள் சிறு சிறு மூட்டைகளாக கட்டப்பட்டு
தி.மு.க.,வினரின் அறையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தங்களை
சந்திக்க வருவோரிடம் இருந்து எவ்விதமான பொருட்களையும் தி.மு.க.,வினர்
வாங்குவது இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அதேவேளையில், குடும்பத்தார்
கொண்டு வரும் பொருட்களை மட்டும் வாங்கிக் கொள்வதாக சிறை ஊழியர்கள்
தெரிவிக்கின்றனர்.

உள்ளே என்ன உணவு?சிறையில் தி.மு.க.,வினருக்கு காலை 7.00 - 8.00
மணிக்குள் பொங்கல் அல்லது ரவை உப்புமா வழங்ப்படுகிறது. சர்க்கரை, ரத்த
அழுத்த பாதிப்பு உள்ளவர்கள் பெரும்பாலும் ரவை உப்புமாவையே உட்கொள்கின்றனர்.
வீரபாண்டி ஆறுமுகம் தினமும் காலையில் ரவை உப்புமா, மதியம் சிறிது அரிசி
சாதம், இரவு சப்பாத்தியும் உடன் பழமும் உட்கொள்கிறார். மற்றவர்களுக்கு
தினமும் மதியம் 1.00 மணியளவில் அரிசி சாதம், சாம்பார், ஏதாவது ஒரு
காய்கறிப் பொரியல் வழங்கப்படுகிறது. இரவில் முன்பு, அரிசி சாதம்
வழங்கப்பட்டது. தி.மு.க.,வினர் பலரும் தங்களது உடல்நலம், வியாதியை காரணம்
காட்டி சப்பாத்தியும், பாலும் கேட்டனர். "ஏ வகுப்பு' கைதிகள் என்பதால் சிறை
நிர்வாகமும் அவர்கள் கேட்டபடியே வழங்கி வருகிறது. இவை தவிர, வாரத்தில்
மூன்று நாட்கள் சிக்கன் குழம்புடன் சாதம், முட்டை வழங்கப்படுகிறது.

சிறைக்குள் விதிமீறலா?கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் முருகேசன்
கூறியதாவது:சிறை விதிகளை மீறி, எந்தவொரு கைதிக்கும் சலுகை
அளிக்கப்படவில்லை. சமீபத்தில், சில குற்றச்சாட்டுகளின் பேரில் சிறை அதிகாரி
ஒருவரும், காவலரும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இதனால், மற்ற
அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உஷாரடைந்துள்ளனர். குறிப்பிட்ட கட்சியின்
பிரமுகர்கள் அடைக்கப்பட்டுள்ள பிளாக்கிற்கு, சிறை அதிகாரி ரகசியமாக சென்று
பொருட்களை கைமாற்றியது தொடர்பான தகவல் இல்லை; அதற்கான வாய்ப்பும் இல்லை.
அந்தளவுக்கு பாதுகாப்பு கெடுபிடிகள் செய்யப்பட்டு கண்காணிப்பும்
அதிகமாக்கப்பட்டிருக்கிறது. நில அபகரிப்பு வழக்கில் சிறையில் இருப்போரில்
10 பேர் "ஏ வகுப்பு'சிறை வசதி பெற தகுதியுடைவர்கள். அவர்களுக்கு கட்டில்,
டேபிள் வழங்க வேண்டுமென்ற விதிகள் உள்ளன. அவற்றை வழங்கவே போதிய
எண்ணிக்கையில் இல்லை. சிறைக்குள் மொபைல்போன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட
பொருட்கள் ஊடுருவிடாதபடி கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.இவ்வாறு,
முருகேசன் தெரிவித்தார்.

மொபைல் போன் ஊடுருவ வாய்ப்பு:சிறை விதிமுறைகளின்படி, சிறைக்குள்
நுழையும் நபர்கள் மற்றும் வாகனங்களை தீவிர சோதனையிட்ட பிறகே அனுமதிக்கப்பட
வேண்டும். கைதிகளுக்கான ரேஷன் பொருட்களை சப்ளை செய்யும் வாகனங்களும்,
தண்ணீர் லாரிகளும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், சமீப நாட்களாக
விதிமுறைகள் மீறப்படுகின்றன. நிலஅபகரிப்பு வழக்கில் சிறையில் உள்ள
தி.மு.க.,வினரை சந்திக்க வரும், கட்சி பிரமுகர்களின் வாகனங்கள் எவ்வித
சோதனைக்கும் உட்படுத்தப்படாமலே நுழைகின்றன. மெயின் நுழைவாயிலில் மத்திய
ரிசர்வ் போலீஸ்படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ள போதிலும், வாகன
சோதனை நடைமுறைகள் பெரும்பாலும் சிறைக்காவலர்களை கொண்டே
மேற்கொள்ளப்படுகிறது. காவலர்கள், கட்சி பிரமுகர்களின் காரை சோதனையிடாமலே
உள்ளே அனுப்புகின்றனர். இதனால் ஆப்பிள், ஆரஞ்சு பழக்கூடைகள், பெட்டிகளில்
மறைத்து மொபைல் போன் உள்ளிட்டவை கைதிகளுக்கு கைமாற்றப்படும் வாய்ப்புகள்
அதிகரித்துள்ளதாக உளவு போலீசார் மேலிடத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர்.
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum