Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 3:08 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
கடற்கரும்புலி மேஜர் கணேஸ்
Page 1 of 1
கடற்கரும்புலி மேஜர் கணேஸ்
சாவுக்கு விலங்கிட்ட நெருப்பு மனிதர்கள்….
கிளாலிக் கடலின் அலைகள் நனைத்துச் செல்லும் கால்களின் , குருதிக் கரை பிசுபிசுத்த ஒவ்வொரு காலையின் போதும்….
பிணவாடையைக் காவிவரும் கடற்காற்றின் , ஒவ்வொரு வீச்சின் போதும்….
அவர்களுக்குள் இனம்புரியாத ஒரு ஆவேசம் கொதித்து எழும்.
கிளாலிக் களத்தில் தளபதி சாள்ஸ் விழ்ந்த பொது , அது அவர்களுக்குத் தாங்கமுடியாத பேரிழப்பாக ஆகிவிட்டது.
எல்லாவற்றுக்குமாக சேர்த்துப் பதிலடி கொடுக்க அவர்கள் துடிதுக்கொண்டிருந்தார்கள்.
வரதனுக்கும் – மதனுக்கும் முந்திய அந்த 60 நாட்கள்….
அவர்கள் சக்கை வண்டிகளோடு பகைவனை துரத்துவதும் , அவன் சண்டை பிடிக்காமலே தப்பி ஓடுவதும் , பின்னர் ஏமாற்றத்தோடு இவர்கள் திரும்பிச் செல்வதுமாக கழிந்த அந்த இரவுகள்.
அவர்களில் ஒருவருக்காக தனை அனுப்பிப் பார்க்குமாறு நச்சரித்துக்கொண்டிருப்பான் கணேஸ்.
” டோறா ” வை நெருங்குவதர்க்கான தாக்குதலின் திட்டம் தயாரிக்கப்பட்டபோது….
அந்தச் சாதனையின் சாதனையாளர்களுள் ஒருவனாகத் தான் போகவேண்டுமென்ற ஆதங்கம் அவனுக்கு.
பருத்தித்துறைக் கடலில் புவீந்திரனும் – மணியரசனும் 15 நாட்களுக்கு மேல் காத்திருந்த காலத்திலும் தி நச்சரிப்பு.
ஆனாலும் , கணேஸ் இல்லாமலேயே அந்த இரண்டு தாக்குதல்களும் வெற்றிகரமாக முடிந்த போதும் கூட , உற்சாகம் குன்றாமல் அடுத்த தாக்குதலுக்கான காத்திருப்புகளில் , வேட்கையோடு அவனது நாட்கள் நகர்ந்தன. கூடவே கோபியும் இன்னும் சில கரும்புலிகளும்….
ஏற்கனவே இரண்டு விசைப்படகுகளை இழந்துவிட்ட எதிரி பின்வந்த நாட்களில் அதிக அவதானத்துடனேயே இயங்கினான்.
வரதன் – மதனுக்குப் போல , கண்டபின் தப்பியோடும் தந்திரத்தை அல்லாமல் – இவர்களின் கண்களில் தட்டுபடுவதைத் தவிர்த்துவிடுவதையே தான் , எதிரி தனது யுத்தியாகக் கையாண்டான்.
இப்படியாக – இலக்கை அடையாத துயரோடு இவர்கள் திரும்பி வருவது கூட , பூநகரிக்குள் ” தவளைகள் ” நுழையும்வரைதான் நீடித்தது.
கடலில் இறைதேடிவிட்டுக் கரையேறும் சமயங்களில் , சக்கைவண்டிகளில் வரும் மற்றவர்கள் , எங்கள் சண்டைப் படகுக்களினூடு லாவகமாக வளைத்துத் திருப்பி அலை கிளப்ப ஓடிக்காடுகின்றபோது. கணேஸ் மட்டும் மெதுவாக ஓடி , ஓரமாக வந்து , அமைதியாகக் கரையேருவான்.
” இந்த மாதிரி ஓடு உன்னால ஏலாதா…? “ என்று யாராவது கேட்டால் ” எதிர்பாராம ஏதாவது நடந்திட்டால்…..” என இழுத்து….. ,
” அந்நியாயமாக எல்லோருமே சாகாமல் ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யவேணும் “ என்று தொடரும் , அவன் , “ சம்பவம் ஆகக்கூடாது மச்சான் “ சரித்திரம் ஆகோணும் ” என்று முடிப்பான்.
இப்போது……
” ஒப்பரேஷன் தவளை ” வரலாற்றுச் சமரில் , நாகதேவன்துறை கடற்படைத் தளம் மீதான தாக்குதலில் முக்கிய பங்கேற்ப்பு , அந்த வீரமகன் சரித்திரமாகிவிட்டான்…..!
அன்றைய காலம் இந்திய விச்தரிபுவாதிக்ளின் படைகளை எதிர்த்து தமிழீழம் போர்க்கோலம் பூண்டிருந்த எழுட்சி நாட்கள்.
அப்போது அவனுக்கு வயது பதின்நான்கு தான்.
சாற மடிப்பிற்குள் சேட்டை மறைத்துக் கட்டிக்கொண்டு , அம்மாவுக்கு போக்குக் காட்டிவிட்டு வெளியேறியவனை பற்றி ” தம்பி சந்தியில போஸ்ரர் ஒட்டிக்கொண்டு நிற்ப்பான் ” என்றோ. ” கடையில சாப்பிட்டுப் பார்சலுகள் கட்டிக்கொண்டு அந்தப் பக்கமாக போறான் “ என்றோ யாராவது சொல்லுவார்கள்.
அம்மாவின் இதயம் வேகமாகத் துடிக்கும்.
அம்மாவுக்கும் , நாகநாதி ஐயாவிற்கும் வாரிசாக , 21 வருடங்களுக்கு முன்னர் மாசி 13ம் நாளில் பிறந்தவன் ஜீவநேசன்.
இத்தனை வருடங்களாக பாசத்தைக் கொட்டி வளர்த்தெடுத்த தாயல்லவா….. அவள் துடித்துப் போனாள். அவள் தான் துடித்தாளே தவிர அவன் ஓய்ந்ததில்லை.
திடீரென ஒரு காலை , அவசர அவசரமாக ஓடிவந்து அயல்வீட்டுக்காரர் ஒருவர் , கடையில் சாப்பாட்டுப் பொதிகள் வாங்கிய ஜீவனை யாரோ காட்டிக்கொடுத்து , இந்தியர்கள் இழுத்துச் செல்கிறார்கள் என்ற செய்தியைச் சொன்னபோது , அம்மா இடிந்து போனாள். அந்தவீடு சாமவீடு போலாகிவிட்டது. அழுகுரல் நவரக்கிரி கிராமத்தை நிறைத்தது.
காங்கேசன்துறை இந்தியப்படைச் சிறையில் அடுத்த ஒரு வருடம் கழித்து. பார்க்கப் போகின்ற அப்பாவிடம் ஊர்ப்புதினங்களைத் தான் விசாரித்தானேயல்லாமல் , வீட்டுப் புதினங்களையல்ல. மிகவும் அமைதியானவனான அந்தச் சிறுவனின் உள்ளத்தில் , ஆவேசப் புயலொன்று அப்போதுதான் மையங்கொண்டது.
இந்தியர்கள் வெளியேற்றப்பட்டபோது , அவர்கள் விடுவித்து விட்டுப்போன கணேஷ் , ஐந்தாறு நாட்கள் அம்மாவோடு இருந்துவிட்டு , முழுமையாகவே இயக்கத்திற்குப் போய்விட்டான்.
அம்மா துயரத்தோடு கடவுளை நேர்ந்து கொண்டிருக்க , அந்த விடுதலைப்புலி துப்பாக்கியோடு ” போர் உலா ” வந்தான்.
வட தமிழீழப்போர் அரங்கின் அநேகமான எல்லா முனைகளிலும் , அவனுடைய துப்பாக்கி கண்டிருக்கிறது.
கோட்டை முற்றுகையிட்டிருந்த போது , அதை முறியடிக்க வந்தவர்களை மண்டைதீவில் எதிர்கொண்டபோது , மாங்குளத்தில் படைமுகாமை அழித்தபோது , ” வன்னி விக்கிரம ” என்று படையெடுத்தவர்களை தோல்வியுறச்செய்த போது , தாயகத்தின் இதயத்தைப் பாதுகாத்து மணலாற்றில் ” மின்னலை ” தெறிக்கச் செய்தபோது , ஆணையிரவில் ” பலவேகய ” வில் புறப்பட்டவர்களை ” ஆமை வேகய ” வில் நகரச் செய்தபோது , மன்னாரில் படையெடுத்தவர்களுக்கு படையெடுத்த பதுங்கித் தாக்குதலின்போது …. இப்படியாக எங்கும் , எல்லாச் சமர்களிலும் கணேஸ் சுவடு பதித்தான்.
அந்தக் காலத்திலேயே , ஒரு கரும்புலித் தாக்குதலுக்கான கனவு அவனது இதயத் துடிப்போடு கலந்திருந்தத்து.
இப்படியிருக்கையில் ஒரு நாள் …..
அது , கடந்த வருடத்தின் இறுதி. பலாலியிலிருந்து தெல்லிபளை நோக்கி முன்னேறிய ” ஒப்பரேஷன் பூமியதிர்ட்சி ” யை நிறுத்த நடந்த சண்டையின்போது – இடது முழங்காலுக்குக் கிழே துளைத்த ஒரு ரவை , முக்கிய நரம்போன்றை அறுத்துச் சென்றுவிட்டது.
சண்டைமுனையில் மருத்துவ வசதியின்மையால் – பெருமளவு இரத்தம் வெளியேறிவிட , மயக்கமுற்று எடுத்துச் செல்லப்பட்ட கணேஸ்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு , யாழ்பாணம் மருத்துவமனையின் கட்டிலொன்றில் , வெடிபட்ட இடத்திற்க்குக் கிழே அந்தக் கால் அகற்றப்பட்டுவிட்ட நிலையில் , அடக்கிக்கொள்ள முடியாத அழுகையோடு படுத்திருந்தான்.
போராட்டத்தில் காலை இழந்தமைக்காக அவன் கண்ணீரைச் சிந்தவில்லை. அருகில் நின்ற நண்பனின் கையைப் பற்றி அவன் விம்மினான்.
“ இனி எப்படியடா நான் சண்டைக்குப் போறது…..? ”
கணேஸ்….!
எவ்வளவு மென்மையானவனாக அவன் வாழ்ந்தான் ! எவரோடும் சச்சரவுக்குப் போகாமல் , எல்லோரையும் சமாளித்துக்கொள்வானே !
என்னதான் பிரசினையென்றாலும் , விட்டுக் கொடுத்துவிட்டு விலகிக்கொண்டானே தவிர , அவன் சண்டை பிடித்துப் பெரிதாக்கியிருக்கமாட்டான். அவன் எவ்வளவோ பொறுமைசாலியாக இருந்தான் ; எல்லா விடயங்களிலுமே.
அவனை மேலோட்டமாக பார்க்கிற எவரும் , எதுவுமே தெரியாத அப்பாவி என ஒரு கணிப்பீட்டை வைப்பார்கள்.
விஷயம் தெரியாத நாலுபேரை இருத்திவிட்டு , எல்லாம் தெரிந்த மேதாவிகளைப் போல புழுகித்தள்ளும் நண்பர்களைத் தன்னிடம் வசமாகச் சிக்கவைத்து _ ” தேவையில்லாம வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்டோமே ” என்று தலையைப் பிய்த்துக்கொண்டு எழுந்துபோகிற அளவுக்கு அவன் கொண்டுபோய்விடுவான்.
இருப்பினும் , தனக்குத் தெரியாத , அது தொடர்பான பூரண அறிவு இல்லாத , எந்த விடயங்களைப் பற்றியும் அவன் வாய் திறக்கவே மாட்டான். வெட்கப்படாமல் – விஷயம் தெரிந்தவர்களிடமிருந்து விசயங்களைத் தெரிந்து கொள்வதில்த்தான் அவனுக்கு ஆர்வம் அதிகம்.
தான் செய்ய நினைக்கும் காரியங்களை செய்துமுடிக்கும் வரை முயற்சி எடுப்பதும் , காலிழந்தவன் என்று கருணைகாட்டி மற்றவர்கள் உதவ முன்வந்தாலும் புன்சிரிப்போடு மறுத்துவிட்டு , தானே எல்லாவற்றையும் செய்துமுடிப்பதும் , ஒரு கால் இழந்தாலும் கூட முகாமிலிருக்கும் முழு மனிதர்கள் செய்யும் வேலைகளெல்லாம் தன்னையும் ஈடுபடுத்த எத்தனிப்பதும் அவனது சிறப்பான அம்சங்கள். அவை நாங்கள் அவனிடம் படிக்கவேண்டிய பாடங்கள்.
காயம் மாறி – ஜெய்ப்பூர் காலோடு துயரத்தையும் சுமந்து மருத்துவமனையிலிருந்து வந்தவனுக்கு , யாழ் மாவட்ட தாக்குதற் படைப்பிரிவில் நிதி வேலை கொடுக்கப்பட்டபோது , சண்டைக்குப் போகவேண்டுமென தளபதியோடு சண்டைபிடித்து ஆனையிறவுக்கு போனதும்…
அகன்ற பாத்திரத்தில் சோறு குழைத்து , ஐந்தாறு பேர் சேர்ந்து நாங்கள் சாப்பிடும்போது – வெறுமையாகும் பாத்திரத்தை நிரபிவர வேறேவரையும் பாராமல் தானே தூக்கிக்கொண்டு எழுவதும்….
” ஜெயராஜ் “ முகாமிலிருந்த ‘ அருக்கிருக்கை ‘ பொருத்திய B.S.A. மோட்டார் சைக்கிளில் அவனை இருத்தி நாங்கள் தள்ளி விளையாடுகையில் வளைத்து திருப்பி ஓட வீடு வசதி காணாதென்று முற்றத்திற்க்கிறக்கி , பின் முற்றமும் வசதிகாணாதேன்று வீதிக்கெடுத்தபோது , தளபதியைக் கண்டு நாங்கள் தடுமாற , வேலியோடு மோதி வண்டி கவிழ , தலையில் நல்ல அடிபட்ட அவன் எழுந்து பிடரியைச் சொறிந்துகொண்டு நின்றதும் , தண்டனை தந்தபோது , கும்மாளமிட்டபடி அவனும் சேர்ந்து செய்ததும்….
கிளாலியில் எம்மவர்களை வேட்டையாட வரும் எதிரியை நாங்கள் வேட்டையாடும் கடற்சண்டைகளில் , ” நேவி ” யைக் கலைத்து விரட்டும் புலிகளின் விசைப்படகுகளிற்கு அவன் ஒட்டியாய் இருந்ததும்….
ஐந்து நாள் ஓய்ந்து தந்து வீட்டுக்கனுப்ப ‘ இன்று படகுச்சேவை ‘ என்று நாளேட்டின் செய்தியைப் பார்த்துவிட்டு – பாதுகாப்பு பணியிலீடுபட இரண்டாம் நாளே புறப்பட்டு அவன் கிளாலிக்கு வந்ததும் ….
அப்போதெல்லாம் கரும்புலித் தாக்குதல் ஒன்று செய்யவேண்டுமென்ற வேட்கையை , தனது மனக்குகையினுள் அவன் சுமந்துகொண்டு திரிந்ததும்….
நாங்கள் அடிக்கடி அவனைப்பற்றி பேசிக்கொள்ள எங்களுக்குள் உயிர்வாழும் அவனது நினைவுகள்….
அவனது வீரம் ; அவனது தியாகம் ; அவனது முயற்சி ; அவனது விட்டுக்கொடுப்பு ; அவனது முன்மாதிரி ; ஒட்டுமொத்தமாக அவனே எப்போதும் நினைவுகொள்ளவேண்டிய எடுத்துக்காட்டுகள்.
கணேஸா…!
உனது வீட்டுக்குப் போய்வந்த அந்த இறுதிப் பயணம்.
அதை நினைக்கும் போதெல்லாம் உன் அம்மாவின் விழி ஓரங்களில் நீரின் கசிவு.
” பழஞ்சோறு குழைத்து தீத்தி விடணை ” என்று சாப்பிட்டாயாம்.
ஒருநாளுமில்லாதது போல , அப்பாவையும் – அம்மாவையும் கொண்டு நீர் அள்ளிக் குளித்தாயாம்.
” தலையெல்லாம் காஞ்சுபோய்க் கிடக்கு தேடா….. கொஞ்சம் எண்ணை வையன்ரா……. ” என்று ஆதரவாகக் கேட்ட அம்மாவிடம் , “: நாளைக்கு கடல் தின்னப்போற தலைதானேயணை….. ” என்று சிரித்தபடி சொன்னாயாம்.
முன்னர் யாரோ சொன்னது நினைவுக்குவர , இப்போது சாதுவாக சந்தேகமும் எழ , ஆச்சரியத்தோடும் – அச்சத்தோடும் , ” நீ கரும்புலியாய் போகபோபோறியாம் தம்பி…… உண்மையாவோடா….? ” என்று பரிதாபமாகக் கேட்ட அம்மாவை , சிரித்துக்கொண்டு வந்து கட்டிப்பிடித்துக் கொஞ்சி , “ உன்ரை விட்டுட்டுப் போவனோணை அம்மா ! ” என்று சொல்லிவிட்டுப் போனாயாம்.
இப்போது…..
கண்ணீரோடு அந்தத் தாய் , தன வீரமகனின் படத்திற்குப் பூப்போட்டுக் கொண்டிருக்கிறாள்.
” ஒப்பரேஷன் தவளை ” க்கான உற்சாகமான முன்னேற்பாடுகள்.
உறக்கமற்ற இரவுகள் ; ஓய்வற்ற நாட்கள்.
கடற்புலி வீரர்களின் கடுமையான கடற்பயிற்சி.
வெடிமருந்துப் படகினை எதிரியின் தளத்தோடு மோதும் செயல்முறையை , கணேஸ் சலிப்பின்றிக் களைப்பின்றி பயின்றான்.
அந்த நாள் வந்தது ….
சர்வதேச செய்தி நிறுவனங்களின் அலைவரிசைகளில் புலிகள் இயக்கத்தை முதன்மைப் படுத்திய நாள் அது.
சாமம் கழிந்த நள்ளிரா வேளை.
சமர் ஆரம்பித்துவிட்டது ; பூநகரியில் புயல்வீசத் தொடங்கிவிட்டது.
நாகதேவன்துறை கடற்படைத் தளத்தைச் சூழ்ந்த புலிகள் கடல் – தரை வழிகளிலான ஆக்ரோசமான பாய்ச்சல்.
அங்கிருந்த , ” றாடர் ” கோபுரமும் தகவல் பரிவர்த்தனை நிலையமும்தான் கணேசின் இலக்கு.
உரிய நேரம் வந்தது. உத்தரவுக்காகக் காத்திருந்தவன் , இதுதான் உரிய தருணம் என்பதைத் தானாகவே தீர்மானித்தான் ; புறப்பட்டான்.
நெருப்பாகி உயிர்ப்பூக்கள்
கடலில் – தனது தளத்தைச் சுற்றி – எதிரி அமைத்திருந்த முட்கம்பி வேலிகளை எகிறிக் கடந்து பாய்ந்தது கணேசின் வெடிமருந்துப் படகு.இலக்குப் பிசகாத தாக்குதல். தொடரும் வெடியோசைகளுக்கு நடுவே கடலைதிரும் குண்டோசை. கண்ணிமைக்கும் பொழுதில் பிரகாசித்த ஒளிப்பிழம்பு.
யாழ்ப்பாணக் கடல் நீரேரியில் , தமிழர்களின் பிணங்களை மிதக்கச் செய்தவர்களை அதே கடல் நீரேரியிலேயே பிணங்களாக மிதக்கச் செய்துவிட்டு , உப்பு நீராக உருமாறிப் போனான் அந்த வீரன் !
- விடுதலைப்புலிகள் இதழ் (மார்கழி – தை : 1994 )
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» "தமிழீழ தேசியத் தலைவருடன் கடற்கரும்புலி மேஜர் மங்கை, கடற்கரும்புலி லெப் கேணல் நளாயினி"
» "தளபதி சூசை மற்றும் தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் புவீந்திரன் - கடற்கரும்புலி கப்டன் மணியரசன்"
» கடற்கரும்புலி மேஜர் மங்கை
» கடற்கரும்புலி மேஜர் தணிகைமாறன்
» "கடற்கரும்புலி மேஜர் வரதன்"
» "தளபதி சூசை மற்றும் தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் புவீந்திரன் - கடற்கரும்புலி கப்டன் மணியரசன்"
» கடற்கரும்புலி மேஜர் மங்கை
» கடற்கரும்புலி மேஜர் தணிகைமாறன்
» "கடற்கரும்புலி மேஜர் வரதன்"
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|