TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Today at 7:12 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வங்கி கொள்ளையர் 5 பேர் சுட்டுக்கொலை.!!

2 posters

Go down

வங்கி கொள்ளையர் 5 பேர் சுட்டுக்கொலை.!! Empty வங்கி கொள்ளையர் 5 பேர் சுட்டுக்கொலை.!!

Post by மாலதி Thu Feb 23, 2012 1:55 pm

வங்கி கொள்ளையர் 5 பேர் சுட்டுக்கொலை.!! Bank_01

சென்னையை கலக்கிய 2 வங்கி
கொள்ளையில் ஈடுபட்டது, இன்ஜினியர் என்று தெரியவந்துள்ளது. அவன்தான்
கொள்ளைக் கும்பலின் தலைவன் என்றும், புறநகரில் தங்கி படித்ததும்
தெரியவந்துள்ளது. அவனது படத்தையும் வீடியோவையும் சென்னை போலீஸ் கமிஷனர்
வெளியிட்டார்.

இந்நிலையில் சென்னை வேளச்சேரி பகுதியில் வண்டிக்காரன் தெருவி்ல் உள்ள
வீடு ஒன்றில் இந்த வங்கி கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்கள்
பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது ‌நள்ளிரவில்
போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டனர். இதை அறித்த கொள்ளயைர்கள் தப்பியோட
நினைத்துள்ளதாக கூறப்படுகிது. அப்போது போலீசார் துப்பாக்கிச்சூடு
நடத்தியதில் 5 பேர் பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.

சென்னை பெருங்குடியில் பாங்க் ஆப் பரோடா வங்கியில் கடந்த மாதம் 23ம்
தேதி 4 கொள்ளையர்கள் பட்டப்பகலில் துப்பாக்கியுடன் புகுந்து ரூ.25
லட்சத்தை சர்வ சாதாரணமாக கொள்ளையடித்து சென்றனர். இந்த பரபரப்பு
அடங்குவதற்குள் கடந்த 20ம் தேதி 5 கொள்ளையர்கள் துப்பாக்கியுடன்
கீழ்க்கட்டளை மேடவாக்கம் பிரதான சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ்
வங்கிக்குள் பட்டப்பகலில் புகுந்து ரூ.14 லட்சத்தை கொள்ளையடித்து
சென்றுள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள கொள்ளையர்கள்
எந்தவித பயமும், பதட்டமும் இல்லாமல் வங்கிக்குள் புகுந்து கொள்ளையடித்து
சென்றது பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை கிளப்பியுள்ளது. இந்த 2 கொள்ளை
சம்பவத்தில் ரூ.39 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்தும் 35 தனிப் படை போலீசார் தீவிரமாக
விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையில் ஈடுபட்டவர்கள் இந்தியில்
பேசியதால், வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில்
விசாரணையை தொடங்கினர்.

மேலும், சென்னைக்கு வேலைக்கு வரும் வடமாநிலத்தவர்களையும் போலீசார்
கண்காணித்து வந்தனர். போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், பெருங்குடி,
கீழ்க்கட்டளை வங்கிகளில் கொள்ளையடித்தவர்கள் ஒரே கும்பல்தான் என்பது தெரிய
வந்துள்ளது.

கடந்த 20ம்தேதி கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நடந்த கொள்ளை
சம்பவத்தையடுத்து தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு சென்னை
புறநகர் பகுதிகளான தாம்பரம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, மேடவாக்கம்,
பெருங்குடி, துரைப்பாக்கம், நீலாங்கரை, திருவான்மியூர் பகுதிகளில்
வேலைக்காக சென்னை வந்து தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்கள் வீடுகளில் சோதனை
நடத்தினர்.

அதேநேரத்தில், மேடவாக்கம் பிரதான சாலையில் அனைத்து
வங்கிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கடந்த 23ம் தேதிக்குப் பிறகு
பதிவான காட்சிகள் அனைத்தும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது, ஒரு வங்கியில் மட்டும் வாடிக்கையாளர்கள் வந்து, தங்கள்
வேலைகளை முடித்து விட்டுச் சென்றனர். ஆனால் கட்டம்போட்ட சட்டைஅணிந்த
ஒருவன் வங்கியைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான். வங்கியில் யார்,
எங்கு உட்காருகிறார்கள். கேமரா உள்ளதா, செக்யூரிட்டி உள்ளதா என்பதை
கண்காணித்தபடி இருந்தான்.

அவன்மீது சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வீடியோவை கைப்பற்றி,
கொள்ளையர்களால் மிரட்டப்பட்ட, பெருங்குடி, கீழ்க்கட்டளை வங்கி
ஊழியர்களிடம் போட்டு காண்பித்தனர். அதைப் பார்த்த வங்கி ஊழியர்கள்
அதிர்ச்சி அடைந்தனர். இவன்தான் துப்பாக்கியுடன் வந்து கொள்ளையடித்து சென்ற
கொள்ளையன் என்றனர்.

பெருங்குடி ஊழியர்கள் கூறும்போது, வங்கிக்கு மீசை, தாடி இல்லாமல்
வந்திருந்தான். இப்போது மீசை, தாடி வைத்துள்ளான் என்றனர். இதையடுத்து,
அந்த வாலிபரின் முகத்தோற்றத்தை மீசை, தாடி இல்லாமல் கம்ப்யூட்டரில் படம்
வரைந்து, அதனையும் வங்கி ஊழியர்களிடம் காண்பித்தனர்.

அப்போது வங்கி ஊழியர்கள் இவன்தான் என்று உறுதியாக கூறினர். பின்னர்
போலீசார் கேமராவில் பதிவான படத்தை வைத்து விசாரித்தபோது, அவன் சென்னை அருகே
உள்ள தனியார் கல்லூரியில் 5 ஆண்டுகளுக்கு முன் இன்ஜினியரிங் படித்தவன்
என்று தெரியவந்தது.

இதனால் அந்த கல்லூரிக்கு சென்ற போலீசார்,
அவனைப் பற்றிய தகவல்களை தேடினர். அப்போது, விண்ணப்பத்தில் 9 ஆண்டுகளுக்கு
முன் எடுக்கப்பட்ட புகைப்படம் இருந்தது. அதை போலீசார் கைப்பற்றி, இப்போது
கிடைத்த படத்துடன் ஒப்பிட்டனர். இரண்டும் ஒன்று என்பதை உறுதிப்படுத்தினர்.

அவன் வடமாநிலத்தைச் சேர்ந்தவன். 9 ஆண்டுகளுக்கு முன் சென்னை வந்து
புறநகரில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தான். படிக்கும்போதே
நண்பர்களுடன் சேர்ந்து வட மாநில மாணவர்களை இன்ஜினியரிங் கல்லூரியில்
சேர்க்கும் புரோக்கர் வேலையும் செய்து வந்தான்.

இன்ஜினியரிங் படிப்பை முடித்த பிறகும், சென்னையில் தங்கி அதே புரோக்கர்
வேலையை செய்து வந்தான். அதில் குறிப்பிட்ட அளவு பணம் கிடைத்து வந்தது.

அதேநேரத்தில், புரோக்கராக இருந்தபோது, மாணவர்கள் பலருடன் மோதல் இருந்து
வந்தது. அப்போது சிலரை தாக்கியும் உள்ளான். சென்னையில் குறிப்பிட்ட அளவு
வருமானம் வந்ததால், இங்கேயே தங்கி விட்டான். பின் நண்பர்களுடன் சேர்ந்து
கொள்ளையில் ஈடுபட்டுள்ளான் என்பது போலீஸ் விசாரணையில் தெரிந்தது. .

இந்நிலையில், நேற்று நள்ளிரவு சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசை
காரில் வந்த மர்ம ஆசாமிகள் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்ப முயன்றனர்.
பதிலுக்கு போலீசார் சுட்ட தில் காரில் இருந்த 5 ஆசாமிகளும் குண்டு
பாய்ந்து பலியானார்கள்.

கொல்லப்பட்ட 5 பேரும் வங்கி கொள்ளையில் ஈடு பட்டவர்கள் என்று தெரிய
வந்துள்ளது. அவர்களது சடலங்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்
வைக்கப்பட்டுள்ளது.

சீரியல் நம்பர் மிஸ்ஸிங்

கமிஷனர்
திரிபாதி கூறுகையில், சென்னையில் 2 வங்கிகளில் கொள்ளையர்கள் கொள்ளையடித்த
பணம் ரூ.39 லட்சம். பொதுவாக வங்கிகளில் டெபாசிட் செய்கிற பணத்தின்
சீரியல் நம்பர்கள் குறித்து வைக்கப்படும்.

ஆனால் டெபாசிட் செய்யப்பட்டவுடனே இந்த நம்பர் குறித்து
வைக்கப்படவில்லை. பாதுகாப்பு பெட்டக அறையில் வைப்பதற்கு முன்பு தான்
குறித்து வைக்கப்படும். பெருங்குடியில் பாங்க் ஆப் பரோடா வங்கியில்
கொள்ளையர்கள் கொள்ளையடித்த ரூ.25 லட்சம் அன்று காலை முதல் டெபாசிட்
செய்யப்பட்ட பணம். எனவே அப்போது வந்த பணத்தின் சீரியல் நம்பர் வங்கி
ஊழியர்கள் குறித்து வைக்கவில்லை.

இதுபோல கீழ்கட்டளையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும்
கொள்ளையடிக்கப்பட்ட ரூ.14 லட்சம் பணத்தின் சீரியல் நம்பர்களையும் வங்கி
ஊழியர்கள் குறித்து வைக்கவில்லை. இதனை நன்கு தெரிந்து கொண்டு தான்
கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்று இருக்கிறார்கள் என்றார்.

மீண்டும் ஹாட்லைன்

கடந்த
சில ஆண்டுகளுக்கு முன்பு வங்கிகளிலும், போலீஸ் நிலையங்களிலும் ஹாட்லைன்
போன் வைக்கப்பட்டிருந்தது. இந்த போனில் டயல் செய்ய வேண்டிய அவசியமில்லை.
போனை எடுத்தவுடன் தகவல் சொல்லிவிடலாம். சில நொடிகள் காத்திருக்க வேண்டிய
அவசியமில்லை.

இது வங்கிகளிலும், போலீஸ் நிலையங்களிலும் வைக்கப்பட்டிருக்கும்.
கொள்ளையர்கள் புகுந்தால் உடனே போனை எடுத்து தகவல் சொல்லாம். நாளடைவில்
அலாரம் கொண்டு வரப்பட்டது. அது வங்கியின் மோலாளர் அறையில்
பொருத்தப்பட்டிருக்கும். கொள்ளையர்கள் புகுந்தாலோ அல்லது வேறு ஏதேனும்
அசம்பாவிதங்கள் நிகழ்ந்தாலோ அந்த அலாரத்தை அழுக்கி போலீசை வரவைக்கலாம்.

இந்நிலையில் கொள்ளையர்கள் வங்கிக்குள் நடப்பவைகளை நோட்டமிட்டு சுலபமாக
கொள்ளையடித்து சென்று விடுவதால் மீண்டும் ஹாட்லைன் போன் கொண்டு வர
போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதுபற்றி வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை
நடத்தியுள்ளனர்.

கொள்ளையர் தலைவனுக்கு வங்கிகள் முன்பு பேனர்

2
வங்கிகளில் ரூ39 லட்சத்தை கொள்ளையடித்த கொள்ளை கும்பல் தலைவன் அடையாளம்
காணப்பட்டுள்ளதை அடுத்து சென்னை போலீசார் சென்னை மாநகர், புறநகர்
பகுதிகளில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் என
அனைத்து வங்கிகள் முன்பு கொள்ளை கும்பல் தலைவன் படத்தை போட்டு பெரிதாக
அச்சிட்டு இவன் தான் கொள்ளை கும்பல் தலைவன் பொதுமக்கள் தகவல் தெரிவியுங்கள்
என்று வாசகம் போட போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக ஆயிரம் டிஜிட்டல் பேனர் தயார் செய்வதற்காக போலீசார் ஆர்டர்
கொடுத்து விட்டனர். இதற்காக வங்கிகளிடம் அனுமதி வாங்கப்பட்டு விட்டதாக
உயர் போலீஸ் அதிகாரி கூறினார்.

பொதுமக்களை நம்பியுள்ள போலீஸ்

கடந்த
மாதம் 23ம் தேதி பெருங்குடியில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கியில்
துப்பாக்கியுடன் புகுந்து ரூ25 லட்சத்தை 4 கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர்.
இதையடுத்து கொள்ளையர்களை நேரில் பார்த்தவர்கள் தந்த தகவல் அடிப்படையில்
போலீசார் 4 கொள்ளையர்களின் படத்தையும் கம்ப்யூட்டரில் வரைந்தனர். ஆனால் 1
கொள்ளையன் படம் மட்டும் சரியான தகவல் இல்லாததால் வரைய முடியவில்லை.

3 கொள்ளையர்கள் படத்தை வரைந்தனர். அந்த 3 கொள்ளையர்கள் படத்தையும்
போலீசார் கடந்த மாதம் 26ம் தேதி வெளியிட்டனர். மேலும் கொள்ளையர்கள் பற்றி
எந்த தகவலும் கிடைக்கவில்லை என்பதால் போலீசார் கொள்ளையர்கள் பற்றி தகவல்
சொன்னால் தக்க சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்தனர். தகவல் சொல்வதற்காக
98842 03821 என்ற எண்ணை அறிவித்தனர். ஆனாலும் அதிலும் எந்தவித
பலனுமில்லை.

இந்நிலையில் இந்த மாதம் 20ம் தேதி கீழ்க்கட்டளை
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 5 கொள்ளையர்கள் துப்பாக்கியுடன் போய் ரூ14
லட்சத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்

இந்த கொள்ளையர்கள் பற்றியும் நேரில் பார்த்தவர்கள் கொடுத்த தகவலின்
பேரில் கம்ப்யூட்டரில் படம் வரையப்பட்டு விட்டது. அதில் 2 கொள்ளையன் 2
கொள்ளை சம்பவத்திலும் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த கொள்ளையர்கள் பற்றி வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே
போலீசார் மீண்டும் சன்மானம் அறிவித்துள்ளனர். தகவல் கொடுத்தால் ரூ1 லட்சம்
வழங்கப்படும் என்றும் போலீசார் கூறியுள்ளனர். கொள்ளையர்கள் பற்றி
பொதுமக்கள் தகவல் தெரிவிப்பார்கள் என்று போலீசார் முழுவதுமாக
நம்பியுள்ளனர்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

வங்கி கொள்ளையர் 5 பேர் சுட்டுக்கொலை.!! Empty Re: வங்கி கொள்ளையர் 5 பேர் சுட்டுக்கொலை.!!

Post by ஜனனி Thu Feb 23, 2012 8:13 pm

வங்கி கொள்ளையர் 5 பேர் சுட்டுக்கொலை.!! Evening-Tamil-News-Paper_40402948857சென்னை : சென்னையில் 2 வங்கிகளில் ரூ.39 லட்சத்தை துப்பாக்கி முனையில்
கொள்ளையடித்து சென்ற 5 கொள்ளையர்கள் நள்ளிரவில் என்கவுன்டரில் சுட்டுக்
கொல்லப்பட்டனர். கொள்ளையர்கள் வாடகை வீட்டில் தங்கியிருப்பதாக வேளச்சேரியை
சேர்ந்த ஒரு பெண் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை
மேற்கொண்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் சில மாதங்களாக கொள்ளை, வழிப்பறி, செயின் பறிப்பு சம்பவங்கள்
அதிக அளவில் நடந்து வந்தன. கடந்த மாதம் 23-ம் தேதி பகல் 1.30 மணிக்கு
பெருங்குடியில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கிக்குள் 5 பேர் கொண்ட கும்பல்
புகுந்தது. 2 பேர் துப்பாக்கி முனையில் மேனேஜர், கேஷியரை மிரட்டி ரூ.25
லட்சத்தை கொள்ளையடித்தனர். மற்றவர்கள் துப்பாக்கியை காட்டி பொதுமக்களை
மிரட்டிக் கொண்டிருந்தனர். கொள்ளையர்கள் இந்தி மற்றும் தமிழ் கலந்து
பேசியது விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் வடமாநிலத்தவர்கள் என்பது
உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து வேறு வங்கிகளிலும் அவர்கள் கொள்ளை
அடிக்க முயற்சிக்கலாம் என்று போலீசார் கருதினர். இதனால் ரகசிய கேமரா,
காவலாளி இல்லாத வங்கிகளை போலீசார் கண்காணிக்க தொடங்கினர். போலீசாரின்
கண்காணிப்பில் சிக்காமல் திரிந்த கொள்ளையர்கள், கீழ்கட்டளை மேடவாக்கம்
நெடுஞ்சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், கடந்த 20-ம் தேதி
மீண்டும் கைவரிசை காட்டினர். பகல் 1.30 மணிக்கு வங்கிக்குள் புகுந்த 5
கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.14 லட்சத்தை கொள்ளை அடித்துக்
கொண்டு தப்பினர். ஒரு மணி நேரத்துக்கு மேல் வங்கியில் இருந்து பொதுமக்கள்,
ஊழியர்களை மிரட்டி கொள்ளை அடித்துள்ளனர்.

சென்னையில் ஒரே
மாதத்தில் அடுத்தடுத்து 2 வங்கிகளில் துப்பாக்கி முனையில் ரூ.39 லட்சம்
கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மக்களிடையே பரபரப்பையும் பீதியையும்
ஏற்படுத்தியது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்களை
சுட்டு பிடிக்கவும் தனிப்படைக்கு உத்தரவிடப்பட்டது. எந்தெந்த வங்கிகளில்
கேமரா இல்லை என்பதை அறிந்து அதன்பிறகே கொள்ளையர்கள் கைவரிசை
காட்டியுள்ளனர். இதற்காக பல வங்கிகளில் அவர்கள் நோட்டமிட்டிருக்கலாம் என்று
சந்தேகித்த போலீசார், மற்ற வங்கிகளின் கேமராக்களில் பதிவான காட்சிகளை
தீவிரமாக ஆய்வு செய்தனர். ஸ்டேட் பாங்க் கிளை ஒன்றின் கேமராவை ஆய்வு
செய்தபோது, ஒருவன் சந்தேகப்படும்படி வங்கியை சுற்றிச் சுற்றி வருவது
தெரிந்தது. அவன் மீது சந்தேகம் அடைந்த போலீசார், அந்த வீடியோ காட்சியை
கீழ்கட்டளை, பெருங்குடி வங்கி ஊழியர்களிடம் காட்டினர். அதை பார்த்த
ஊழியர்கள், அவன்தான் கொள்ளையன் என்பதை உறுதி செய்தனர். கொள்ளை நடந்தபோது
அவன் மீசை, தாடி இல்லாமல் இருந்தான். இப்போது மீசை, தாடியுடன் உள்ளான்
என்று தெரிவித்தனர்.

வீடியோவில் இருந்த அந்த ஆசாமி, சென்னை அருகே
உள்ள எஸ்.ஆர்.எம். இன்ஜினியரிங் கல்லூரியில் 9 ஆண்டுகளுக்கு முன்பு
படித்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்லூரிக்கு சென்று போலீசார்
விசாரணை நடத்தினர். விண்ணப்பத்தில் இருந்த போட்டோவை கைப்பற்றி, அவனது சொந்த
ஊருக்கு தனிப்படையை அனுப்பி வைத்தனர். வீடியோவில் இருந்த ஆசாமியின் படத்தை
பத்திரிகைகளுக்கும் போலீஸ் கமிஷனர் திரிபாதி வழங்கினார். கொள்ளையன் பற்றி
தகவல் தெரிவித்தால் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த
செய்தியும் கொள்ளையன் படமும் பத்திரிகை, டிவிக்களில் வெளியானது.
இந்நிலையில், வேளச்சேரி நேரு நகர் நேதாஜி ரோடு ஏ.எல்.முதலி 2-வது தெருவில்
வசிக்கும் பார்வதி என்ற பெண், கொள்ளையன் படத்தை டி.வி.யில் பார்த்து
அதிர்ச்சி அடைந்தார். அவரது வீட்டில் கீழ் தளத்தில் வியாபாரிகள் என்று
சொல்லி 5 பேர் தங்கியிருந்தனர். பார்வதி முதல் மாடியில் வசிக்கிறார். 2-வது
மாடியை 2 பேருக்கு வாடகை விட்டுள்ளார். கீழ் தளத்தில், வாடகைக்கு
இருந்தவர்களில் ஒருவன் நேற்று ஒரு சட்டை அணிந்திருந்தான். அதே சட்டையைதான்
போலீசார் வெளியிட்ட படத்திலும் அணிந்திருந்தான். இதை கவனித்த பார்வதி,
உடனடியாக கிண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணிக்கு போன் செய்தார். வங்கி
கொள்ளையர்களை பிடிக்க துணை கமிஷனர் சுதாகர் தலைமையில் அமைக்கப்பட்ட
தனிப்படையினர் நேற்றிரவு கிண்டி போலீஸ் நிலையத்தில் ஆலோசனை நடத்திக்
கொண்டிருந்தனர். அதில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியும் இருந்ததால், அவர் போனை
எடுக்கவில்லை. பரபரப்பு அடைந்த பார்வதி, தனது தம்பி முருகனிடமும் தகவலை
தெரிவித்துள்ளார். முருகன், நேரடியாக கிண்டி போலீஸ் நிலையத்துக்கு விரைந்து
சென்று, இன்ஸ்பெக்டரை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அங்கிருந்த
போலீஸ்காரர், ‘அவர் மீட்டிங்கில் இருப்பதால் பார்க்க முடியாது. என்ன
விஷயம்’ என்று கேட்டுள்ளார். அவரிடம் விஷயத்தை முருகன் தெரிவித்தார். அந்த
தகவலை துணை கமிஷனர் சுதாகரிடம் போலீஸ்காரர் தெரிவித்தார். இதையடுத்து,
முருகனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் வீட்டு முகவரி உள்ளிட்ட
விவரங்களையும் துணை கமிஷனர் சுதாகர் கேட்டறிந்தார். பின்னர், கமிஷனர்
திரிபாதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும், கூடுதல் கமிஷனர்
தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் ஆகியோரும் கிண்டி காவல்
நிலையத்துக்கு விரைந்து வந்தனர். கொள்ளையர்களை பிடிக்க அவசர அவசரமாக
வியூகம் வகுத்தனர். முருகன் அளித்த தகவலின்படி வீட்டின் வரைபடம்
வரையப்பட்டது. நள்ளிரவு 1 மணியளவில் ஆயுதங்களுடன் போலீசார் அந்த வீட்டை
சுற்றி வளைத்தனர். உள்ளே இருப்பவர்களை வெளியில் வர போலீசார் எச்சரித்தனர்.
ஆனால், வீட்டுக்குள் இருந்தவர்கள் திடீரென போலீசார் மீது துப்பாக்கியால்
சரமாரியாக சுட்டனர். இதில் 2 இன்ஸ்பெக்டர்கள் காயம் அடைந்தனர். உஷாரான
போலீசார் ஜன்னலை உடைத்து அதன் வழியாக சுட்டனர். அதே நேரத்தில்
தேனாம்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவி, துரைப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி
ஜெயசீலன் ஆகியோர் தலைமையிலான போலீசார் கதவை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள்
புகுந்தனர். இரு தரப்பிலும் நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில்
வீட்டுக்குள் இருந்த கொள்ளையர்கள் 5 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவர்களது உடல்களை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயம் அடைந்த இன்ஸ்பெக்டர்கள், ராயப்பேட்டை மருத்துவமனையில் உள்நோயாளிகளாக
சேர்க்கப்பட்டனர். சண்டை நடந்த இடத்துக்கு கமிஷனர் மற்றும் உயர் அதிகாரிகள்
வந்து பார்வையிட்டனர். காயம் அடைந்தவர்களையும் பார்த்து விசாரணை
நடத்தினர். தமிழகத்தையே கலக்கிய 2 வங்கி கொள்ளையில் சம்பந்தப்பட்ட
கொள்ளையர்கள் அதிரடியாக சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும்
பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


கொள்ளையர்கள் யார்
சுட்டுக்கொல்லப்பட்ட
கொள்ளையர்கள் பீகார் தலைநகர் பாட்னா மற்றும் மேற்குவங்கத்தை சேர்ந்தவர்கள்
என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் வினோத்குமார், சந்திர காரே, வினய்
பிரசாத், அபய்குமார், அரீஷ்குமார் என்று போலீசார் தெரிவித்தனர்.

கீ14 லட்சம் 5 துப்பாக்கி சிக்கியது

டிவியில்
காட்டப்பட்ட கும்பல் தலைவன் அணிந்திருந்த கட்டம் போட்ட சட்டை, ரத்த கறை
படிந்து வீட்டில் கிடந்தது. ஜன்னல், கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது.
பாத்திரங்கள், துணிகள் சிதறி கிடந்தன. வீட்டில் இருந்து கொள்ளையர்கள்
பயன்படுத்திய 5 துப்பாக்கி, துணி பேக்கில் கட்டுக் கட்டாக மறைத்து
வைத்திருந்த ரூ.14 லட்சம் பணத்தை கண்டெடுத்தனர்.

துப்பு துலக்க உதவிய தமிழ் முரசு

கொள்ளையனின்
படம் நேற்று மாலை ‘தமிழ் முரசு’ பத்திரிகையிலும், போஸ்டரிலும் வெளியானது.
வேளச்சேரி நேரு நகர் ஏ.எல்.முதலி தெருவில் வசிக்கும் பார்வதி என்ற பெண்,
தனது தம்பியை அழைத்து தமிழ் முரசு பத்திரிகையை வாங்கி வந்து
பார்த்துள்ளார். அதில் இடம் பெற்றிருந்த கொள்ளையனின் படம், தன் வீட்டின்
கீழ் தளத்தில் வாடகைக்கு இருக்கும் ஒருவனின் படம்போல இருந்ததால், அதிர்ச்சி
அடைந்தார். உடனடியாக தம்பி முருகன் மூலம் கிண்டி போலீசுக்கு தகவல்
தெரிவித்தார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அடையாளம் காணப்பட்ட வங்கி கொள்ளையர் உடல்களை வாங்க குடும்பத்தார் திடீரென மறுத்ததால் பரபரப்பு
» பெருங்குடி, கீழ்கட்டளையில் கைவரிசை காட்டிய வங்கி கொள்ளையர் அடையாளம் தெரிந்தது தனிப்படை போலீசார் வடமாநிலம் விரைவு
» மரம்வெட்டும் தமிழ் கூலித் தொழிலாளர்கள் 12 பேர் சுட்டுக்கொலை
» பாக்.விமானப்படை தளம் மீது தாக்குதல்: பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொலை; பதட்டம்
» சிரியா உள்நாட்டு சண்டையில் பிடிபட்ட 11 ஆயிரம் பேர் சுட்டுக்கொலை: அமெரிக்கா, ஐ.நா.வின் திகில் அறிவிப்பு...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum