TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Jun 04, 2024 3:05 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Jun 03, 2024 5:54 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 27, 2024 8:13 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


புலம்பெயர் தமிழர்களிடம் நாம் கேட்பது பசியாற எங்களுக்கு உணவு போடுங்கள் என்றில்லை...!!!

Go down

புலம்பெயர் தமிழர்களிடம் நாம் கேட்பது பசியாற எங்களுக்கு உணவு போடுங்கள் என்றில்லை...!!! Empty புலம்பெயர் தமிழர்களிடம் நாம் கேட்பது பசியாற எங்களுக்கு உணவு போடுங்கள் என்றில்லை...!!!

Post by logu Thu Jul 19, 2012 9:50 pm

புலம்பெயர் தமிழர்களிடம் நாம் கேட்பது பசியாற எங்களுக்கு உணவு போடுங்கள் என்றில்லை...!!!

புலம்பெயர் தமிழர்களிடம் நாம் கேட்பது பசியாற எங்களுக்கு உணவு போடுங்கள் என்றில்லை...!!! 599343_125528717590025_1758499384_n
"புலம்பெயர்ந்து பல்வேறுபட்ட துன்பங்களுக்கு மத்தியில் வாழும் என் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்"
என்னுடைய பெயர் செம்மலை நான் தமிழீழத்தில் வாழ்ந்து வருகிறேன் தலைவர்
காட்டிய பாதையில் தமிழீழ தனி அரசு உருவாகும் என்ற நம்பிக்கையுடன் இன்றும்
விடியலை நோக்கி பயணிக்கிறேன், அதன் அடிப்படையில் இங்கு நாள் தோறும்
நடந்துகொண்டிருக்கும் கொடுமைகளை வார்த்தைகளில் எழுதிவிட முடியாது என்பது
எனது நிலைப்பாடு.

முள்ளிவாய்க்களில் நடந்து முடிந்த இன அழிப்பை
விட இன்று தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் பல்வேறுவகையான
இனச் சுத்திகரிப்பை, சமூகச் சீர் கேடுகள் ஊடாக எமது இனம் சிதைந்து போவதை
பார்க்கும் போது எத்தனை இலச்சம்பேர் எங்கு வாழ்ந்தும் என்ன பயன் என்ற வேதனை
மட்டுமே மேலோங்கி நிற்கிறது. எங்கள் வேதனைகளைச் சொல்லி மண்டியிட்டு
அழுவதற்கு இங்கு மாவீரர்களின் கல்லறைகளும் இல்லை, மாவீரர்கள் துயிலும்
இல்லங்களுக்கு அருகில் செல்வதற்கு உரிமையும் இல்லை. துயிலும் இல்லங்களும்
இல்லை.

தடுப்பு முகாம்களில் சித்திரவதைகள் மூலம் எம்மவர்கள்
படுகொலை செய்யப்படுவது ஒன்றும் புதிதும் இல்லை. இருப்பினும் இவற்றுக்கு
நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பது மட்டுமே எனது ஆதங்கம் கேள்விகளாக
உங்களிடம் வருகிறது சில வார்த்தைப் பிரயோகங்களுக்கு????.

அன்று
குட்டிமணி தங்கத்துரை, சில நாட்களின் முன்னர் நிமலரூபன், இன்றுவரை
வெளித்தெரியாமல் சிறைகளில் நாளுக்கு நாள் படுகொலை செய்யப்படும் எம்மவர்கள்
பலர், நாளை கோமநிலையில் உள்ள தில்ருக்ஸன் என்று சிங்கள இனவெறி அரசினால்
மேற்கொள்ளப்படும் சிறைச் சாலைப் படுகொலைகள் நாள்தோறும் தொடர்ந்துகொண்டே
போகிறது. தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் தற்காலிகமாக இடை
நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து புலம்பெயர் தமிழர்களிடம் போராட்டம்
கையளிக்கப்பட்டதாக கூறி பெருமை பேசித் திரியும் புலம்பெயர் தமிழர்களும்,
அதன் இளைய சமூகமும் தமிழீழ விடுதலைக்கான ஏற்பாடுகள் எதையாவது ஒன்றை
உருப்படியாக செய்தது உண்டா?

புலம்பெயர் தேசத்தில் இருந்து
விடுமுறையில் தாயகம் வந்து குதூகலமாக இருந்துவிட்டுப் போவதும், போரினால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறு தொகை பணம் அனுப்பிவிட்டும், வாழைக்
குட்டிகளைக் கொடுத்துவிட்டும், சில பாடசாலைகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள்
வழங்குகிறோம் என்று குறிக்கொண்டு கரம் போட்டுக்களையும், மட்டைப்பந்து
விளையாட்டுப் பொருட்க்களையும் கொடுத்துவிட்டு இணையத்தளங்களில்
புகைப்படங்களையும் பரப்பிவிட்டு எங்கள் கடமை முடிந்துவிட்டது என்று
அப்படியே இருந்துவிடப் போகிறீர்களா?

இவற்றைச் செய்வதற்குத் தான்
ஆயுதங்களை அமைதியாக்கி அரசியல் ஜனநாயக போராட்டத்தை புலம்பெயர் தேசத்துக்கு
தலைவர் நகர்த்திச் சென்றாரா? இவற்றுக்காகவா இத்தனை உயிர் விலை
கொடுப்புக்கள்? சிங்களச் சிறைகளில் கொடூரமான சித்திரவதைகளின் மூலம் படுகொலை
செய்யப்பட்ட (மாவீரர்களான) குட்டிமணி, தங்கத்துரை, வரிசையில் இன்று இன்று
வெளிப்படையாகவே நிமலரூபன்,கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம். இந்த
படுகொலையைக் கண்டிக்கவும், அதனை உலக நாடுகளுக்கும் மனிதாபிமான
அமைப்புக்களுக்கும் உரியமுறையில் கொண்டுசென்று சேர்க்கத் தவறிய புலம்பெயர்
சமூகம், தமிழர்களின் விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்து போராடும் என்பதை
எவ்வாறு எம்மால் ஏற்றுக்கொள்ள முடியும்.

நாம் உங்களிடம் கேட்பது
பசியாற எங்களுக்கு உணவு போடுங்கள் என்று அல்ல, வந்தாரை வாழ வைத்த ஈழ பூமி
ஒரு வாய் சோற்றுகேனும் நாம் கையேந்தி நிற்க மாட்டோம் என்பதை நீங்கள்
முதலில் புரிந்துகொள்ளுங்கள். சிங்கள இனவெறியர்களால் பறிக்கப்பட்ட எமது
உரிமைகளை மீட்டு, எமது நிலத்தில் நாம் சுதந்திரமாக வாழ வழிசெய்யுங்கள்
என்பதையே நாங்கள் உங்களிடம் கேட்கின்றேம்! அதற்காக உங்களை ஆயுதம் ஏந்திப்
போராடுங்கள் என்று நாம் கேட்கவில்லை, அது உங்களால் முடியாது என்பதையும்
நாம் அறிவோம், அமைதியாக்கப்பட்ட ஆயுதங்களை மீண்டும் விடுதலைப் புலிகளே
ஆர்ப்பரிக்கச் செய்வார்கள் என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள். அதனைத்
தடுக்கவும் உங்கள் மத்தியில் காத்திருந்து குழிபறிக்கும் கஜவர்களின்
செயற்பாடுகளும் அதிகமாகவே உள்ளது.
தமிழீழம், தேசியத் தலைவர்,
தேசியக்கொடி, விடுதலைப் புலிகள் என்று பேசுவதற்கும், அதனைத் தடுப்பதற்கும்
புலம்பெயர் தமிழர் கட்டமைப்புக்களுக்குள் ஊடுருவிய, ஒழுக்காற்று
நடவடிக்கைகள் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து
நீக்கப்பட்டவர்களும், காட்டிக்கொடுப்புக்களையும்,
துரோகத்தனங்களையிம் செய்ததன் காரணமாக தண்டனைகள் வழங்கப்பட்டு அமைப்பில்
இருந்தும் தமிழீழ பகுதிகளில் இருந்தும் வெளியேற்றப்பட்டவர்கள் சிலர் இன்று
விடுதலைப் புலிகளையும், விடுதலைப் போராட்டத்தையும் மீண்டும் எழுச்சி
கொள்ளவிடாமல் தடுப்பதில் சிங்கள இந்திய புலனாய்வாளர்களுடன் இணைந்து
செயற்படுவது பல ஆதாரங்களுடன் எமக்கு கிடைத்துள்ளது.

இப்படிப்பட்டவர்களின் செயற்பாடுகள் புலம்பெயர் தேசத்தில் மட்டுமல்லாது,
தமிழர் தாயகப் பகுதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் தமது துரோக
காட்டிக்கொடுப்பு, கூட்டிக் கொடுப்பு போன்ற மிகவும் கீழ்த்தரமான இனச்
சீரழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்படியாக தமிழர்களின் இன
ஒற்றுமையை சீரழித்து, சிங்களத் தலைமைகளுடன் இணைத்து தமது உறவுகளை
வளர்த்துக்கொண்டு தொழிலதிபர்களாக தாயக நிலப்பரப்புகளிலும் சிறிலங்கா,உட்பட
உலக நாடுகளிலும் வலம்வரும் தமிழீழத்திற்கு எதிரான தீய சக்திகள்
முயற்ச்சிப்பதை நாம் நன்கு அறிவோம்.

இப்படியானவர்கள்
உங்களுடனே இருந்துகொண்டு உங்களுக்கு குழிபறிக்க முனைகின்றனர்
இப்படியானவர்களை இனம் கண்டுகொள்வதை விட்டுவிட்டு ஏதோ ஒரு புராணம்
பாடிக்கொண்டு ஆள் ஆளுக்கு முரண்பட்டுக்கொண்டு,உங்களுக்கு
முன்னாள் உள்ள கடமைகளை மறந்து ஆள் ஆளுக்கு ஒரு திசையில் ஒவ்வெரு
போராட்டம். தங்கள் பெயர்களை நிலைநாட்டவும் தாங்கள் தான் புலம்பெயர் தேசத்து
தமிழர் பிரதிநிதிகள் என்பதை வெளிக்காட்டவும் பலர் போட்டி போட்டுக்கொண்டு,
அனைத்தையும் நாமே செய்தோம், இனியும் நாமே செய்வோம் என்று விதண்டாவாதம்
பேசிக்கொண்டும் மக்களையும் குழப்பிவிடுகின்றனர். எதைச் செய்தாலும்
ஒன்றிணைந்து ஒருகொடியின் கீழ் அணிதிரண்ட மக்களை இன்று ஒருசில புல்லுருவிகள்
பிளவுபடுத்தி நிற்கின்றனர் என்பதை மட்டும் நாம் நன்கு அறிந்துள்ளோம்.

எப்பொழுது வந்தது இந்த நடைமுறை? யாரால் கொண்டுவரப்பட்டது? எதற்காக
கொண்டுவரப்பட்டது என்று யாரவது கேட்டது உண்டா? விடைகான முயற்ச்சியுங்கள்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் வழிகாட்டலில் உரிமைகளை வென்றெடுக்க அணிதிரண்ட
தமிழ் மக்களை அதே புலிகளால் தான் வழிநடத்த முடியுமே தவிர, சுயநலவாத
போக்குடையவர்களால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எவரையும் வழிநடத்த முடியாது.
செல்வந்தர்களாக பாதுகாப்பாக பதுங்கி இருந்துகொண்டு தமிழர்கள் ஓர் அணியில்
நிற்பதை விரும்பாத மாற்றுக் கருத்துடைய, மாற்றுக் குழுக்களில் இருந்த சிலர்
விடுதலைப் புலிகளின் கட்டமைப்புக்களில் ஒன்றை தம்வசப்படுத்த பெரும் பாடு
படுகின்றனர் என்பது மட்டும் தெளிவாகியுள்ளது. அதன் விளைவுகள் தான் கடந்த
மூன்று வருட காலமாக நடந்த கசப்பான உண்மைக்குப் புறம்பான பொய்ப்
பிரச்சாரங்கள் என்பதையும் தமிழ்மக்கள் விரைவில் புரிந்துகொள்வார்கள்.

பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிட்டுக் கொண்டிருக்கும்
சிலர் மக்களையும், செயற்பாட்டாளர்களையும் குழப்பி அதில் சுயலாபம்
தேடிக்கொள்ளவும் தமது பெயர்களில், தமது கண்காணிப்பில் இருக்கும் தேசிய
சொத்துக்களை தம்வசப்படுத்திக்கொள்ளவே தவிர வேறு எதற்காகவும் இல்லை.
அவர்களால் திட்டமிட்டு பரப்பப்படும் பொய்யான தகவல்கள் தான் விடுதலைப்
புலிகளின் கட்டமைப்புக்களுக்குள் பிளவு என்பது. பிளவுகள் என்று
கூறிக்கொண்டு தேசிய சொத்துக்களை சூறையாடும் கூட்டம் தாயக விடுதலை நோக்கிய
எந்தவொரு செயற்பாடுகளையும் முன்னெடுக்காமல் இருந்துகொண்டு, உரியவர்கள்
முன்னெடுக்கும் தாயகம் நோக்கிய செயற்பாடுகளுக்கும் தடைகளைப் போட்டுக்கொண்டே
தமது சொத்துச் சேர்க்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர்.


ஆகவே தமிழர்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் பிளவுபடுத்த முனையும்
நபர்களின் செயற்பாடுகளை இனம்கண்டு அவர்களைப் புறம்தள்ளி உரியவர்களைப்
பலப்படுத்துவதன் ஊடாக எமது அடுத்தகட்ட செயற்பாடுகளை நாம் முன்னெடுக்க
முடியும் என்பதை மக்களாகிய நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மாவீரர்களினதும், மக்களினதும் தியாகங்களை நெஞ்சில் சுமந்து தமிழீழ
விடுதலைக்காக உண்மையாக பாடுபடுவோம் என்று தமிழீழ தேசியத்தலைவர் மீதும்
மாவீரர்கள் மீதும் உறுதி எடுத்துக் கொள்வோம்.


புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்


செம்மலை-957.
தமிழீழம்
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» தரமற்ற உணவு தயாரிப்பு நிறுவனங்கள் அதிகரிப்பு: கேள்விக்குறியாகும் உணவு பாதுகாப்பு முறைகள்
» தரமற்ற உணவு : அரசு மருத்துவ மனை உணவு விடுதிக்கு சீல்
» நாம் நாட்டிற்காக பதக்கங்களை பெற்று கொடுத்த பெண்ணிற்கு நாம் உதவுவோம்
» "இனிய தமிழர் திருநாள்-தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். தொடர்ச்சியான இனஅழிப்பு மற்றும் இயற்கை அனர்த்தத்தின் மத்தியில் வரும் இத்திருநாளை நாம் ஏற்று, இனிவரும் காலத்தை நாம் எமதாக்க ஒன்றுபட்டு உழைப்போம் என மாவீரர்களின் மீது நாம் உறுதியெடுப்போ
» ராமதாஸ் சட்ட திருத்தும் கேட்பது எதனால் ?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum