TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அரசுக்கு சவால் விடும் "ரேஷன் மாபியா'க்கள்: அரிசி கடத்தல் ஒடுக்க அதிரடி அவசியம்

Go down

அரசுக்கு சவால் விடும் "ரேஷன் மாபியா'க்கள்: அரிசி கடத்தல் ஒடுக்க அதிரடி அவசியம் Empty அரசுக்கு சவால் விடும் "ரேஷன் மாபியா'க்கள்: அரிசி கடத்தல் ஒடுக்க அதிரடி அவசியம்

Post by ஜனனி Mon Nov 22, 2010 7:20 am

கோவை : தமிழக ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்தப்படுவதை தடுக்கும் நடவடிக்கை, அரசுக்கு பெரும் சவாலாகவே உருவெடுத்துள்ளது. பல ஆண்டுகளாக தொடரும் கடத்தலுக்கு தீர்வு காண, மாற்று நடவடிக்கை வழிமுறைகளை தமிழக அரசு அமல்படுத்துவது அவசியம். அரிசி மூட்டைகளில் அடையாள குறியீடு இடுவது, "புட்செல் சி.ஐ.டி.,' நிர்வாகத்தை சீரமைப்பது உள்ளிட்ட சில நடவடிக்கைகளை மேற்கொண்டால், ரேஷன் அரிசி கடத்தலை முடிவுக்கு கொண்டுவர முடியும்.

தமிழக ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு கிலோ ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் ரேஷன் அரிசி, அதிகளவில் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுகின்றன; கடத்தல் இரு வழிமுறைகளில் நடக்கிறது. ரேஷன் கடைகளில் முறைகேடாக அரிசி மூட்டைகளை வாங்கி பதுக்கும் நபர்கள், சரக்கு ஆட்டோ, வேன், டூவீலர் மற்றும் ரயிலில் கேரளாவுக்கு கடத்துகின்றனர்; இது, சிறிய அளவிலான கடத்தல். இரண்டாவது கடத்தல், பெரிய அளவில் திட்டமிட்டு, பலரை ஒருங்கிணைத்து நடக்கிறது. ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்ய வேண்டிய அரிசி மூட்டைகள் சிவில் சப்ளை குடோன்களில் இருந்தே நேரடியாக லாரிகளில் கடத்தப்படுகின்றன. இவ்வகையான கடத்தலில் லாரி டிரான்ஸ்போர்ட் கான்ட்ராக்டர்கள், சிவில் சப்ளை அதிகாரிகள், ரேஷன்கடை ஊழியர்களின் கூட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

ரேஷன் கடைகளுக்கு அரிசி மூட்டைகளை சப்ளை செய்வதற்கான டிரான்ஸ்போர்ட் கான்ட்ராக்ட் எடுத்துள்ள நபர்கள், ரேஷன் கடை ஊழியர்களிடம் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளனர். கடைக்கு சப்ளை செய்ய வேண்டிய அரிசி மூட்டைகளில் குறிப்பிட்ட சதவீதத்தை மாதம் தோறும் முறைகேடாக பதுக்குகின்றனர். பின்னர், லாரிகளில் ஏற்றி கேரளாவுக்கு கடத்திச் செல்கின்றனர். தமிழக - கேரள எல்லையோர செக்போஸ்ட்களில் இருக்கும் வணிகவரி, போக்குவரத்துத்துறை, போலீஸ் துறையினரை "சரிகட்டிவிட்டு' வெற்றிகரமாக கேரளாவுக்கு கடத்தி வருகின்றனர். அரிசி கடத்தல், உள்ளூர்ஸ்டேஷன் போலீசார் முதல் "புட்செல் சி.ஐ.டி.,' போலீசார் வரை அனைவருக்கும் தெரியும் என்ற போதிலும், "மாமூல்' காரணமாக கடமை உணர்வை மறந்துவிடுகின்றனர். தமிழகத்தில் இருந்து கடத்தப்படும் கிலோ ஒரு ரூபாய் ரேஷன் அரிசி கேரளாவில் கிலோ 8 ரூபாய் வரை விலைபோகிறது.

பின்னணியில் யார்?: ரேஷன் அரிசி கடத்தல் பின்னணியில் அரசியல்வாதிகள், கள்ளச்சந்தை ஏஜன்ட்கள், பெரும் வியாபாரிகள், இடைத்தரகர்கள் என பெரிய பட்டாளமே செயல்படுகிறது. கடத்தலின் போது போலீஸ் சோதனையில் அரிசி பிடிபட்டதும் லாரி டிரைவர், கிளீனர்கள் தப்பியோடிவிடுவதாக, வழக்கில் பதிவு செய்கின்றனர் போலீசார். ஆனால், "குற்றவாளிகள் போலீசாரால் திட்டமிட்டே தப்பியோட அனுமதிக்கப்படுகின்றனர்' என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதற்கும், பல காரணங்கள் உள்ளன. டிரைவர், கிளீனரை போலீசார் கைது செய்தால், விசாரணையை தீவிரப்படுத்தி, பின்னணியில் இருக்கும் அரசியல்வாதிகள், கள்ளச்சந்தை ஏஜன்ட்கள், வியாபாரிகளை கைது செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்; இதற்கு, மாதக்கணக்கில் கூட அலைய நேரிடலாம். அதற்குள் உயரதிகாரிகளின் கேள்வி குடைச்சல்களுக்கும் பதிலளிக்க வேண்டியிருக்கும் என்பதால், டிரைவர் மற்றும் கிளீனரை தப்பவிட்டு, அரிசியுடன் வாகனத்தை மட்டுமே கைப்பற்றி போலீசார் "கணக்கு' காட்டுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இதுபோன்ற முறைகேடுகளால், கடத்தல் கும்பலின் பின்னணியிலுள்ள மூல கிரிமினல்கள் சட்டத்தின் பிடியில் இருந்து எளிதாக தப்பிவிடுகின்றனர்; புது தெம்பு ஏற்பட்டு மீண்டும், மீண்டும் கடத்தலில் ஈடுபடுகின்றனர். அரிசி மூட்டைகள் கைப்பற்றப்படும் போது கடத்தல்காரர்களை தப்பவிடாமல் பிடித்து தீர விசாரித்தால் மட்டுமே, மூல குற்றவாளிகளை கைது செய்து, கடத்தல் தொடராமல் தடுக்க முடியும்.ஆனால், இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. தற்போது, தமிழக சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.,யாக இருக்கும் ராதாகிருஷ்ணன், இதற்குமுன் "புட்செல் சி.ஐ.டி.,'யில் பணியாற்றிய போது போலீசாருக்கு சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். "அரிசி கடத்தலில் ஈடுபடும் வாகனங்களை கைப்பற்றுவதுடன் கடமையை கைகழுவி விடக்கூடாது.

வாகனத்தின் அதன் பதிவு எண்ணுக்குரிய உரிமையாளர் யார்? அந்நபருக்கும் கடத்தலுக்கும் என்ன தொடர்பு? பின்னணியில் இருக்கும் ஏஜன்ட்கள் யார்? அதிகாரிகள் யார்? என பல கோணங்களிலும் விசாரணை நடத்தி, "முழு நெட்வொர்க்'கையும் கண்டறிய வேண்டும். கடத்தல் லாரி டிரைவர் மற்றும் கிளீனரை கைது செய்வதால் மட்டும் போதாது; பின்னணியில் இருக்கும் அனைவரையும் பிடிக்கவேண்டும்' என்பதே அந்த உத்தரவு.

இதன்படி, எண்ணற்ற வழக்குகளில் புலன்விசாரணை முடுக்கிவிடப்பட்டு, கடத்தலின் பின்னணியில் இருந்த முக்கிய நபர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் தொடர்ச்சியாக அரிசி கடத்தலில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டார். விளைவு, "கடத்தல் நெட்வோர்க்' கண்டறியும் விசாரணை நடவடிக்கையும் போலீசாரால் கைவிடப்பட்டது.ரேஷன் கடை ஊழியர்கள், போலீஸ், வருவாய்த்துறை, சிவில் சப்ளை துறையினரின் ஒத்துழைப்பு இல்லாமல், ஒரு மூட்டை அரிசியை கூட கேரளாவுக்கு கடத்த வாய்ப்பில்லை. எனவே, கடத்தலில் ஈடுபடுவோரை தடுக்க தமிழக அரசு மல்லுக்கட்ட தேவையில்லை. கடத்தல்காரர்களுடன் கைகோர்த்து மாமூல் பெறும் அதிகாரிகளை கண்டறிந்து, முதலில் களையெடுக்க வேண்டும்.

ரேஷன் அரிசியை கடத்தல்காரர்களுக்கு கைமாற்றும் அதிகாரிகள் மீதும் கிரிமினல் நடவடிக்கை பாய வேண்டும்; நிர்வாக ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மட்டுமே பயனளிக்காது.போலீஸ், அரசு துறைகளில் உள்ள "கருப்பு ஆடுகளை' கண்டறிந்து கைது செய்தால், கடத்தல்காரர்களுக்கு அரிசி சப்ளையாவது 50 சதவீதம் நின்றுவிடும். அதன்பின், கடத்தல்காரர்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டால், எஞ்சிய சதவீதத்தையும் எளிதாக எட்டிவிட முடியும். இதற்கான முயற்சி, நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் கடத்தல்காரர்களை மட்டுமே விரட்டிக்கொண்டிருப்பது, கண்துடைப்புக்காக எடுக்கப்படும் நடவடிக்கையாகவே மக்களால் கருதப்படும்; இதை உணர வேண்டியவர்கள், உணர்ந்தால் சரி.

குற்றவாளிகளை பிடிக்க அரிசி மூட்டையில் குறியீடு போடும் முறை தேவை : ரேஷன் அரிசி கடத்தலில்ஈடுபடும் வாகனங்களை பிடிக்கும் போலீஸ் மற்றும் பறக்கும்படை பிரிவு, வருவாய்த்துறை அதிகாரிகளால், "சோதனையின் போது பிடிபட்ட ரேஷன் அரிசி எந்த மாவட்டத்திலிருந்து, எந்த குடோனில் இருந்து கடத்தி வரப்பட்டது' என்ற விபரத்தை கண்டறியமுடிவதில்லை. காரணம், அரிசி மூட்டைகளில் அதற்கான அடையாள குறியீடு ஏதும் பதிக்கப்படுவதில்லை. இது, கடத்துவோருக்கு மிகவும் சாதகமாக உள்ளது.எனவே, மாவட்டம் தோறும் உள்ள சிவில் சப்ளை குடோன்களுக்கு ரேஷன் அரிசியை அரசு சப்ளை செய்யும்போதே, அந்த மூட்டைகள் எந்த மாவட்டத்துக்கு செல்கின்றன என்பதை குறிப்பதற்கான குறியீடுகளையும் மூட்டை மீது பதிக்கலாம். உதாரணமாக கோவை மாவட்டம், பூசாரிபாளையத்திலுள்ள சிவில் சப்ளை குடோனுக்கு அரிசி மூட்டைகள் சப்ளையாகிறது என்றால், ஒவ்வொரு மூட்டையின் மீதும் "சிபிஇ' என குறிப்பிட்டு, பூசாரிபாளையம் குடோனுக்கான குறியீட்டு எண்ணை (உதாரணமாக, சிபிஇ - 1) என்று பதிக்கலாம்.

இவ்வாறு அடையாளக்குறியீடுடன் கூடிய ரேஷன் அரிசி மூட்டைகள் கேரளாவுக்கு கடத்தப்படும்போது வழியில், வேறு மாவட்டம் அல்லது பகுதிகளில் பிடிபட்டால், அவை எந்த மாவட்டத்தில், எந்த குடோனில் இருந்து கடத்தி வரப்பட்டுள்ளது என்பதை எளிதாக, விரைவாக கண்டறிய முடியும். உடனடியாக, சம்பந்தப்பட்ட குடோனில் திடீர் சோதனை நடத்தி முறைகேடுகளை கண்டுபிடிக்க முடியும். கடத்தலுக்கு துணைபோன சிவில் சப்ளை அதிகாரிகள், டிரான்ஸ்போர்ட் கான்ட்ராக்டர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இவ்வாறான அடையாள குறியீடுகளை அரிசி மூட்டைகளில் பதிக்க அரசுக்கு பெரிய அளவில் செலவு ஏதும் ஏற்படாது. கடத்தலில் இழக்கும் ரேஷன் அரிசியின் மதிப்பை கணக்கிடும் போது, அடையாள குறியீடு பதிப்பதற்கான செலவு மிக, மிக சொற்பமே.

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் நடவடிக்கை பொறுப்பின் பெரும்பகுதி "புட்செல் சி.ஐ.டி.,' போலீசாரை சார்ந்தே உள்ளது. எனினும், இப்பிரிவில் போதிய எண்ணிக்கையில் போலீசார் இல்லை. இரண்டு, மூன்று மாவட்டங்களுக்கென ஒரு "புட்செல் சி.ஐ.டி.,' யூனிட் செயல்படுகிறது. தலா ஒரு யூனிட்டில் அதிகபட்சமாக அதிகாரிகள் உள்பட 10 போலீசாரே பணியாற்றுகின்றனர். இவர்களில் ஒருவர் அலுவலக எழுத்தர் பணி, இருவர் அதிகாரிகளின் வாகன டிரைவர் பணி, மற்றொருவர் கோர்ட் பணி என நான்கு பேர் போக, ஆறு பேர் மட்டுமே எஞ்சியிருப்பர். போலீசாரில் யாராவது அவசர கால விடுப்பு எடுத்துச் சென்றால் இந்த எண்ணிக்கையும் குறையும். ஐந்து, ஆறு போலீசாரால் இரண்டு, மூன்று மாவட்டங்களில் அரிசி கடத்தல் தடுப்பு கண்காணிப்பு பணியை மேற்கொள்வது சாத்தியமில்லாதது; யானைப்பசிக்கு சோளப்பொரி போடும் கதை போன்றது.

கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்குச் செல்ல 14 வழித்தடங்கள் உள்ளன. இவ்வழித்தடங்களில் தலா இரு போலீசாரை நியமித்து கண்காணிப்பதாக இருந்தால்கூட கோவை "புட்செல் சி.ஐ.டி.,' யூனிட்டு 28 போலீசார் தேவை. ஆனால், களப்பணியில் இருப்பதோ வெறும் ஆறு போலீஸ். இப்போலீசாரை கொண்டுதான் தமிழக - கேரள எல்லைச்சாலைகள் அனைத்தையும் கண்காணிக்கின்றனர்(!). பெயரளவுக்கு செயல்படும் புட்செல் சி.ஐ.டி.,யை பலப்படுத்த, போதிய எண்ணிக்கையில் கூடுதல் போலீசாரை நியமிப்பது அவசியம். நியமிக்கும் போது போலீசார், அதிகாரிகளின் கடந்த கால செயல்பாடுகள் எப்படி? முறைகேடு புகாருக்கு உள்ளானவர்களா? என்பதை தீவிரமாக ஆராய்வது அவசியம். தற்போது, இப்பிரிவில் பணியாற்ற போலீசார் மற்றும் அதிகாரிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. அரசியல்வாதிகள், போலீஸ் உயரதிகாரிகளின் சிபாரிசு பெற்று பலரும் "போஸ்டிங்' வாங்கிவிடுகின்றனர். இவர்களின் நோக்கம், தங்களது பணிக்காலத்தை பயன்படுத்தி சட்ட விரோதமாக, முறைகேடான வழிகளில் "வருவாய்' ஈட்டுவதாகவே உள்ளது. இதனால், போலீசார் நியமன விதிமுறைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.

ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum