TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 17, 2024 7:14 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 17, 2024 2:27 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 15, 2024 4:50 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மக்கள் திலகம் எம்ஜிஆர்....

2 posters

Go down

மக்கள் திலகம் எம்ஜிஆர்.... Empty மக்கள் திலகம் எம்ஜிஆர்....

Post by krishnaamma Sat Apr 19, 2014 9:55 pm

[You must be registered and logged in to see this image.]
ஜனவரி 17ம் தேதி மக்கள் திலகம் எம்ஜிஆரின் பிறந்த நாள்.
இது தொடர்பாக முகநூல் பக்கத்தில் அவரைப்பற்றிய அபூர்வ படங்கள் உலாவந்து கொண்டிருக்கிறது.
1982ம் ஆண்டு மதுரை சர்க்யூட் ஹவுஸ்க்கு முதல்வராக வந்திருந்த எம்ஜிஆரை பார்க்க திரண்டு நின்ற கூட்டத்தை எம்ஜிஆர் நின்று கொண்டும், நாற்காலியில் உட்கார்ந்து கொண்டும் பார்ப்பது போன்ற படமும் அதில் ஒன்று. உண்மையில் அது தினமலர் பேப்பர் கட்டிங்.அதை இந்த அளவு பாதுகாத்து வைத்திருந்தவரை இந்த நேரத்தில் பாராட்டத்தான் வேண்டும்.
நான் எடுத்த அந்த படம் எங்கெங்கோ பயணித்து விட்டு கடைசியில் என் பார்வைக்கே வந்து அந்த படத்தின் பின்னணி சுவராசியமானதாகும். காரணம் அன்று நடந்த சம்பவம் அப்படியே பசுமரத்தாணி போல பதிந்து போயிருப்பதுதான்.
"வழக்கமாக வருட பிறப்பு அன்று எம்ஜிஆர் சென்னையில்தான் இருப்பார் இப்போது மதுரையில் தங்கியுள்ளார், அவரை பார்க்க நிறைய பிரமுகர்கள் வருவார்கள். நம்மை உள்ளே விட மாட்டார்கள் அரசாங்க போட்டோகிராபரே எல்லா படமும் எடுத்து கொடுத்து விடுவார் எதற்கும் நீங்கள் அங்கே போய்விடுங்கள்" என்று என்னை அனுப்பியிருந்தனர்.
நான் போனபோது சர்க்யூட் ஹவுஸ் என்ற அந்த விருந்தினர் மாளிகை முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதிலும் சுற்றுப்பக்கம் உள்ள ஏழை, எளிய கிராம பெண்கள் திரளாக அதிகாலை முதலே வந்து காத்திருந்தனர். யாருக்கும் அனுமதியில்லை. எம்ஜிஆர் என்ன நினைப்பார் என்ன செய்வார் என்பது தெரியாத நிலையில் மக்களோடு மக்களாக நானும் நின்று கொண்டிருந்தேன்.
அறை எண் ஒன்றில் அவர் தங்கியிருந்தார், நேரமோ காலை 9 மணியிருக்கும். அறை வாசலில் அமைச்சர்கள், நகர பிரமுகர்கள், அதிகாரிகள் என்று வரிசையாக கோயில் பிரசாதம், மாலைகள், பூங்கொத்துகளுடன் நின்று கொண்டிருந்தனர். அந்த நீண்டு கிடந்த வரிசையைப் பார்த்தபோது இவர்கள் எல்லாம் ஒவ்வொருவராக உள்ளே போய் சாதாரணமாக பார்த்து விட்டு வந்தாலே மதியம் ஆகிவிடும் பாவம் இந்த கிராம மக்கள், இவர்கள் வெயிலில் காத்து கிடக்கிறார்கள், இப்படி இவர்கள் காத்து கிடப்பது பற்றிய தகவலாவது எம்ஜிஆருக்கு சொல்லப்பட்டு இருக்குமா? என்ற எண்ணத்துடன் நின்று கொண்டிருந்த எனக்கு அடுத்த சில நிமிடங்களில் ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது.
எம்ஜிஆரின் அறைக்கதவு திறந்தது. பிரமுகர்கள் தங்களை சரி செய்து கொண்டு உள்ளே போக தயரானபோது அவர்களை தடுத்த பாதுகாவலர் சிஎம் முதல்ல மக்களை பார்க்க வருகிறார் என்று சொல்லிவிட்டார்.
அவர் சொன்ன அடுத்த வினாடி சிரித்த முகத்துடன் கைகூப்பி வணங்கியபடி சவுக்கு கட்டை தடுப்பில் தேக்கி வைக்கப்பட்டிருந்த மக்களை நோக்கி வந்துவிட்டார். அப்போதுதான் எம்ஜிஆரை அவ்வளவு நெருக்கத்தில் நானும் பார்க்கிறேன்.
வந்தவர் சவுக்கு கட்டையின் மீது கையை வைத்துக் கொண்டு ஒவ்வொரு முகமாக பார்த்து சிரித்தபடி அவர்களது வாழ்த்தை பெற்றுக்கொண்டிருந்தார். இது எதிர்பாராத நிகழ்வு என்பதால் அரசு புகைப்படக்கலைஞர் உள்பட யாரும் அங்கு வரவில்லை.
வந்தவர் வழக்கமான தலைவர்கள் போல கையை காட்டிவிட்டு உள்ளே போய்விடுவார் என்று எண்ணினால் அப்படியே நின்றுவிட்டார். அங்கு இருந்த பல பெண்கள் சந்தோஷத்தில் அவரை நோக்கி கையை நீட்ட அவரும் கைகொடுத்து அவரை மகிழ்வித்தார். பிறகு என்ன நினைத்தாரோ உள்ளே இருந்த ஒரு நாற்காலியை கொண்டுவரச் செய்து அதில் உட்கார்ந்து கொண்டார்.
சில வினாடியாவது பார்க்க முடியுமா என்று எண்ணிய தங்கள் தலைவரை, இவ்வளவு நேரம் பார்க்க முடிந்ததே என எண்ணி பல பெண்கள் கண்ணீர்விட்டே அழுதேவிட்டனர். சவுக்கு கட்டையின் வழியாக தனது கரங்களை நீட்டி அவர்களின் கண்ணீர் துடைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். அவர்கள் கூறிய குறைகளையும் கேட்டார், கொடுத்த மனுக்களையும் வாங்கிக் கொண்டார். இந்த காட்சிகள் அனைத்தையும் கறுப்பு, வெள்ளையில் (ஆர்வோ பிலிம்) அனைத்தையும் பதிவு செய்தேன். அதன் அபூர்வம் இப்போதுதான் தெரிகிறது.
இப்படியே அன்று வந்திருந்த பெரும்பாலான மக்கள் அவரை நெருங்கி வந்து பார்த்துவிட்டு சந்தோஷத்துடன் சென்றனர். அவர்களுக்கு எல்லாம் அது மறக்கமுடியாத புத்தாண்டாகும்.
இப்படி நீண்ட நேரம் மக்களுடன் இருந்துவிட்டு திரும்ப அறைக்கு சென்றார். அவர் ஏன் மக்கள் திலகம் என்று கொண்டாடப்படுகிறார் என்பதற்காக சரியான விடையும் அன்று கிடைத்தது.

- எல்.முருகராஜ்
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

மக்கள் திலகம் எம்ஜிஆர்.... Empty மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வரலாறு

Post by krishnaamma Sat Apr 19, 2014 9:56 pm

[You must be registered and logged in to see this image.]
      
        எம்.ஜி.ஆர். என்ற மூன்று எழுத்தால் பாரெங்கும் புகழ்பெற்ற புரட்சித் தலைவர் மக்கள் திலகம் பாரத ரத்னா டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) என்ற மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் நாள் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தையின் மறைவுக்குப் பின் தாயும் மகனும் தமிழகத்தில் கும்பகோணத்தில் குடியேறினார்கள். குடும்ப சூழ்நிலை காரணமாக சிறுவயதிலேயே அவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் படிப்படியாக உயர்ந்து திரைப்படங்களில் நடிக்கத் துவங்கினார்.


     1936 ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், எம்.ஜி.ஆர். தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்கள் 135. இவற்றுள் அவர் கதாநாயகனாக நடித்த படங்களின் எண்ணிக்கை 115.

[You must be registered and logged in to see this image.]



     எம்.ஜி.ஆர். முதலில் தங்கமணி என்பவரை மணந்தார். அவர் நோயுற்று இறந்துவிடவே பின்னர் இரண்டாவதாக சதானந்தவதியை மணந்தார். இவரும் நோயுற்று இறந்து விட்டார். பின்னர் எம்.ஜி.ஆர். வி.என்.ஜானகியை மணந்து கொண்டார். துரதிர்ஷ்டவசமாக இவர்களுக்கு குழந்தைப்பேறு வாய்க்கவில்லை.

     எம்.ஜி.ஆர். ஆரம்ப நாட்களில் காங்கிரஸ் ஆதரவாளராகவும், நேதாஜி பக்தராகவும் இருந்தார். பின்னர் ராஜகுமாரி, மந்திரிகுமாரி படப்பிடிப்பு நாட்களில் கலைஞர் கருணாநிதியுடன் கொண்ட நட்பால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பால் ஈர்க்கப்பட்டார். பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராக திகழ்ந்தார். எம்.ஜி.ஆர். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். சி.என். அண்ணாதுரையின் மறைவுக்குப் பின், முதலமைச்சராக பதவி ஏற்ற கலைஞர் மு. கருணாநிதியுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக எம்.ஜி.ஆர். திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறினார். 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் துவங்கினார். 1977ல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். பின்னர் 1980ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் இரண்டாம் முறையாக முதல்வரானார். 1984ல் இவர் சிறுநீரகக் கோளாறு காரணமாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதற்கு சிகிச்சை பெற அமெரிக்காவின் புருக்ளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருக்கும் போதே தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றார். 1987ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்து பதவியிலிருக்கும் போதே 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் நாள் இயற்கை எய்தினார். அவரது மறைவிற்குப் பின் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. 

[You must be registered and logged in to see this image.]



     இன்றளவும் எம்.ஜி.ஆர். அவர்கள் தாம் நடித்த திரைப்படங்களுக்காக மட்டுமின்றி, தம் ஆட்சிக்காலத்தில் செயல்படுத்திய பல மக்கள் நல்வாழ்வு திட்டங்களுக்காகவும் மிகவும் போற்றப்படுகிறார். அவற்றுள் மிக முக்கியமானது பள்ளி மாணவர்களுக்காக அவர் கொண்டுவந்த சத்துணவுத் திட்டம் ஆகும். மேலும் ஈழ மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தமது இறுதிநாள் வரை பெரிதும் துணைநின்றார் எம்.ஜி.ஆர். அவர்கள்.


விருதுகள் மற்றும் கௌரவங்கள்

1960 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டும் இந்தியில் அதன் வாசகங்கள் இருந்ததால் ஏற்க மறுத்துவிட்டார்.
1972 ஆம் ஆண்டு ரிக்ஷாகாரன் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது
1987 ஆம் ஆண்டு மரணத்துக்கு பிந்தைய பாரத ரத்னா விருது
சென்னை பல்கலை மற்றும் அரிசோனா உலகப் பல்கலையின் டாக்டர் பட்டம்


[You must be registered and logged in to see this image.]


எம்.ஜி.ஆர். நடித்துள்ள படங்கள்

முப்பதுகளில்
1. சதி லீலாவதி - 1936 - மனோரமா பிலிம்ஸ் - எல்லிஸ் ஆர். டங்கன்
2. இரு சகோதரர்கள் - 1936 - பரமேஸ்வரி சவுண்ட் பிக்சர்ஸ் - எல்லிஸ் ஆர். டங்கன்
3. தட்ச யக்ஞம் - 1938 - மெட்ரோபாலிடன் பிக்சர்ஸ் - ராஜா சந்திரசேகர்
4. வீர ஜகதீஷ் - 1938 - வி.எஸ். டாக்கீஸ் - டி.பி.கைலாசம், ஆர் பிரகாஷ்
5. மாய மச்சேந்திரர் - 1939 - மெட்ரோபாலிடன் பிக்சர்ஸ் - ராஜா சந்திரசேகர்
6. பிரஹலாதா - 1939 - சேலம் சங்கர் பிலிம்ஸ் - பி.என். ராவ்

நாற்பதுகளில்
7. அசோக்குமார் - 1941 - முருகன் டாக்கீஸ் பிலிம் கம்பெனி - ராஜா சந்திரசேகர்
8. வேதவதி அல்லது சீதா ஜனனம் - 1941 - சியாமளா பிக்சர்ஸ் - டி.ஆர். ரகுநாத்
9. தமிழ் அறியும் பெருமாள் - 1942 - உமா பிக்சர்ஸ் - டி.ஆர். ரகுநாத்
10. தாசி பெண் அல்லது ஜோதி மலர் - 1943 - புவனேஸ்வரி பிக்சர்ஸ் - எல்லிஸ் ஆர். டங்கன்
11. அரிச்சந்திரா - 1943 - ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பிலிம் கம்பெனி - நாகபூஷணம்
12. மீரா - 1945 - சந்திரபிரபா சினிடோன் - எல்லிஸ் ஆர். டங்கன்
13. சாலிவாகனன் - 1945 - பாஸ்கர் பிக்சர்ஸ் - பி.என். ராவ்
14. ஸ்ரீ முருகன் - 1946 - ஜுபிடர் - எம். சோமசுந்தரம், வி.எஸ். நாராயண்
15. பைத்தியக்காரன் - 1947 - என்.எஸ்.கே. பிலிம்ஸ் - கிருஷ்ணன், பஞ்சு
16. ராஜகுமாரி - 1947 - ஜுபிடர் - ஏ.எஸ்.ஏ. சாமி - 160 நாட்கள்
17. அபிமன்யூ - 1948 - ஜுபிடர் - ஏ.எஸ்.ஏ. சாமி
18. மோகினி - 1948 - ஜுபிடர் - லங்கா சத்யம் - 133 நாட்கள்
19. ராஜ முக்தி - 1948 - நரேந்திரா பிக்சர்ஸ் - ராஜா சந்திரசேகர்
20. ரத்னகுமார் - 1949 - முருகன் டாக்கீஸ் பிலிம் கம்பெனி - கிருஷ்ணன், பஞ்சு
ஐம்பதுகளில்
21. மந்திரி குமாரி - 1950 - மாடர்ன் தியேட்டர்ஸ் - டி.ஆர். சுந்தரம், எல்லிஸ் ஆர். டங்கன் - 146 நாட்கள்
22. மருதநாட்டு இளவரசி - 1950 - ஜி.கோவிந்தன் அண்ட் கோ - 133 நாட்கள்
23. மர்ம யோகி - 1951 - ஜுபிடர் - கே. ராம்நாத் - 151 நாட்கள்
24. ஏக்தா ராஜா - 1951 - இந்தி (டப்பிங்) 
25. சர்வாதிகாரி - 1951 - மாடர்ன் தியேட்டர்ஸ் - 141 நாட்கள்
26. சர்வாதிகாரி - 1951 - தெலுங்கு (டப்பிங்) 
27. அந்தமான் கைதி - 1952 - ராதாகிருஷ்ணா பிலிம்ஸ் - வி. கிருஷ்ணன் - 133 நாட்கள்
28. என் தங்கை - 1952 - அசோகா பிக்சர்ஸ் - சி.எ. நாராயணமூர்த்தி - எம்.கே.ஆர். நம்பியார் - 181 நாட்கள்
29. குமாரி - 1952 - ஆர்.பத்மநாபன், ராஜேஸ்வரி - ஆர். பத்மநாபன் - 112 நாட்கள்
30. ஜெனோவா - 1953 - சந்திரா பிக்சர்ஸ் - எப். நாகூர் - 133 நாட்கள்
31. ஜெனோவா - 1953 - மலையாளம் (டப்பிங்)
32. நாம் - 1953 - ஜுபிடர், மேகலா - ஏ. காசிலிங்கம் - 84 நாட்கள்
33. பணக்காரி - 1953 - உமா பிக்சர்ஸ் - கே.எஸ். கோபாலகிருஷ்ணன் - 70 நாட்கள்
34. கூண்டுக்கிளி - 1954 - ஆர்.ஆர். பிக்சர்ஸ் - டி.ஆர். ராமண்ணா - 77 நாட்கள்
35. மலைக்கள்ளன் - 1954 - பக்ஷிராஜா - எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு - 150 நாட்கள்
36. குலேபகாவலி - 1955 - ஆர்.ஆர். பிக்சர்ஸ் - டி.ஆர். ராமண்ணா - 166 நாட்கள்
37. அலிபாபாவும் 40 திருடர்களும் - 1956 - மாடர்ன் தியேட்டர்ஸ் - டி.ஆர். சுந்தரம் - 168 நாட்கள்
38. மதுரை வீரன் - 1956 - கிருஷ்ணா பிக்சர்ஸ் - யோகானந்த் - 169 நாட்கள்
39. தாய்க்குப் பின் தாரம் - 1956 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம் - 147 நாட்கள்
40. சக்கரவர்த்தி திருமகள் - 1957 - உமா பிக்சர்ஸ் - பி. நீலகண்டன் - 140 நாட்கள்
41. மகாதேவி - 1957 - ஸ்ரீ கணேஷ் மூவிடோன் - சுந்தர் ராவ் நட்கர்னி - 117 நாட்கள்
42. புதுமைப்பித்தன் - 1957 - சிவகாமி பிக்சர்ஸ் - டி.ஆர். ராமண்ணா - 112 நாட்கள்
43. ராஜராஜன் - 1957 - நீலா புரொடக்சன்ஸ் - டி.வி. சுந்தரம் - 77 நாட்கள்
44. நாடோடி மன்னன் - 1958 - எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் - எம்.ஜி.ஆர். - 161 நாட்கள்
45. தாய் மகளுக்கு கட்டிய தாலி - 1959 - கல்பனா கலா மந்திர் - ஆர். ஆர். சந்திரன் - 86 நாட்கள்

அறுபதுகளில்
46. பாக்தாத் திருடன் - 1960 - சதர்ன் மூவிஸ் - டி.பி. சுந்தரம் - 112 நாட்கள்
47. மன்னாதி மன்னன் - 1960 - நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் - எம். நடேசன் - 93 நாட்கள்
48. ராஜா தேசிங்கு - 1960 - கிருஷ்ணா பிக்சர்ஸ் - டி.ஆர். ரகுநாத் - 77 நாட்கள்
49. அரசிளங்குமரி - 1961 - ஜுபிடர் - ஏ.எஸ்.ஏ. சாமி - 92 நாட்கள்
50. நல்லவன் வாழ்வான் - 1961 - அரசு பிக்சர்ஸ் - பி. நீலகண்டன் - 84 நாட்கள்
51. சபாஷ் மாப்பிள்ளை - 1961 - ராகவன் புரொடக்சன்ஸ் - எஸ். ராகவன் - 70 நாட்கள்
52. தாய் சொல்லைத் தட்டாதே - 1951 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம் - 133 நாட்கள்
53. திருடாதே - 1961 - ஏ.எல்.எஸ். - பி. நீலகண்டன் - 161 நாட்கள்
54. குடும்பத் தலைவன் - 1962 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம் - 108 நாட்கள்
55. மாடப்புறா - 1962 - பி.வி.என். புரொடக்சன்ஸ் - எஸ்.ஏ. சுப்புராமன் - 77 நாட்கள்
56. பாசம் - 1962 - ஆர்.ஆர். பிக்சர்ஸ் - டி.ஆர். ராமண்ணா - 84 நாட்கள்
57. ராணி சம்யுக்தா - 1962 - சரஸ்வதி பிக்சர்ஸ் - யோகானந்த் - 70 நாட்கள்
58. தாயைக் காத்த தனையன் - 1962 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம் - 140 நாட்கள்
59. விக்கிரமாதித்தன் - 1962 - பாரத் புரொடக்சன்ஸ் - டி.ஆர். ரகுநாத், என்.எஸ். ராம்தாஸ் - 79 நாட்கள்
60. ஆனந்த ஜோதி - 1963 - ஹரிஹரன் பிலிம்ஸ் (பி.எஸ்.வி.) - வி.என். ரெட்டி
61. தர்மம் தலைக்காக்கும் - 1963 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம் - 117 நாட்கள்
62. கலை அரசி - 1963 - சரோடி பிரதர்ஸ் - ஏ. காசிலிங்கம்
63. காஞ்சித் தலைவன் - 1963 - மேகலா பிக்சர்ஸ் - ஏ. காசிலிங்கம்
64. கொடுத்து வைத்தவள் - 1963 - ஈ.வி.ஆர். பிக்சர்ஸ் - பி. நீலகண்டன் - 91 நாட்கள்
65. நீதிக்குப் பின் பாசம் - 1963 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம்
66. பணத்தோட்டம் - 1963 - 84 நாட்கள்
67. பரிசு - 1963 - கௌரி பிக்சர்ஸ் - யோகானந்த்
68. பெரிய இடத்துப் பெண் - 1963 - ஆர்.ஆர். பிக்சர்ஸ் - டி.ஆர். ராமண்ணா
69. தெய்வத் தாய் - 1964 - சத்யா மூவிஸ் - பி. மாதவன்
70. என் கடமை - 1964 - நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் - எம். நடேசன்
71. படகோட்டி - 1964 - சரவணா பிலிம்ஸ், டி. பிரகாஷ் ராவ்
72. பணக்கார குடும்பம் - 1964 - ஆர்.ஆர். பிக்சர்ஸ் - டி.ஆர். ராமண்ணா
73. தாயின் மடியில் - 1964 - அன்னை பிலிம்ஸ் - ஆடூர்தி சுப்பா ராவ்
74. தொழிலாளி - 1964 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம்
75. வேட்டைக்காரன் - 1964 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம்
76. ஆசை முகம் - 1964 - மோகன் புரொடக்சன்ஸ் - பி.புல்லையா
77. ஆயிரத்தில் ஒருவன் - 1965 - பத்மினி பிக்சர்ஸ் - பி.ஆர். பந்துலு
78. எங்க வீட்டுப் பிள்ளை - 1965 - விஜயா கம்பைன்ஸ் புரொடக்சன்ஸ் - சாணக்யா - 236 நாட்கள்
79. கலங்கரை விளக்கம் - 1965 - சரவணா பிலிம்ஸ் - கே. சங்கர்
80. கன்னித் தாய் - 1965 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம்
81. பணம் படைத்தவன் - 1965 - ஆர்.ஆர். பிக்சர்ஸ் - டி.ஆர். ராமண்ணா
82. தாழம்பூ - 1965 - ஸ்ரீ பால முருகன் பிலிம்ஸ் - எஸ். ராமதாஸ்
83. அன்பே வா - 1966 - ஏ.வி.எம். - ஏ.சி. திரிலோகசந்தர்
84. நான் ஆணையிட்டால் - 1966 - சத்யா மூவிஸ் - சாணக்யா
85. முகராசி - 1966 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம்
86. நாடோடி - 1966 - பத்மினி பிக்சர்ஸ் - பி.ஆர். பந்துலு
87. சந்திரோதயம் - 1966 - சரவணா பிலிம்ஸ் - கே. சங்கர்
88. பறக்கும் பாவை - 1966 - ஆர்.ஆர். பிக்சர்ஸ் - டி.ஆர். ராமண்ணா
89. பெற்றால் தான் பிள்ளையா? - 1966 - ஸ்ரீ முத்துகுமரன் பிக்சர்ஸ் - கிருஷ்ணன், பஞ்சு
90. தாலி பாக்கியம் - 1966 - வரலக்ஷ்மி பிக்சர்ஸ் - கே.பி. நாகபூஷணம்
91. தனிப்பிறவி - 1966 - தேவர் பிலிம்ஸ் - என்.எஸ். வர்மா
92. அரச கட்டளை - 1967 - சத்யராஜா பிக்சர்ஸ் - எம்.ஜி. சக்ரபாணி
93. காவல்காரன் - 1967 - சத்யா மூவிஸ் - பி. நீலகண்டன்
94. தாய்க்கு தலைவணங்கு - 1967 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம்
95. விவசாயி - 1967 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம்
96. ரகசிய போலீஸ் 115 - 1967 - பத்மினி பிக்சர்ஸ் - பி.ஆர். பந்துலு
97. தேர் திருவிழா - 1968 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம்
98. குடியிருந்த கோயில் - 1968 - சரவணா ஸ்கிரீன்ஸ் - கே. சங்கர்
99. கண்ணன் என் காதலன் - 1968 - சத்யா மூவிஸ் - பி. நீலகண்டன்
100. ஒளி விளக்கு - 1968 - ஜெமினி - சாணக்யா
101. கணவன் - 1968 - வள்ளி பிலிம்ஸ் - பி. நீலகண்டன்
102. புதிய பூமி - 1968 - ஜே.ஆர். மூவிஸ் - சாணக்யா
103. காதல் வாகனம் - 1968 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம்
104. அடிமைப் பெண் - 1969 - எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் - கே. சங்கர்
105. நம் நாடு - 1969 - விஜயா இண்டர்நேசனல் - ஜம்பு


எழுபதுகளில்
106. மாட்டுக்காரன் வேலன் - 1970 - ஜெயந்தி பிலிம்ஸ் - பி. நீலகண்டன் - 156 நாட்கள்
107. என் அண்ணன் - 1970 - வீனஸ் பிக்சர்ஸ் - பி. நீலகண்டன்
108. தலைவன் - 1970 - தாமஸ் பிக்சர்ஸ் - பி.ஏ. தாமஸ்
109. தேடி வந்த மாப்பிள்ளை - 1970 - பத்மினி பிக்சர்ஸ் - பி.ஆர். பந்துலு
110. எங்கள் தங்கம் - 1970 - மேகலா பிக்சர்ஸ் - கிருஷ்ணன், பஞ்சு
111. குமரிக் கோட்டம் - 1971 - கே.சி. பிலிம்ஸ் - பி. நீலகண்டன்
112. ரிக்ஷாக்காரன் - 1971 - சத்யா மூவிஸ் - எம். கிருஷ்ணன் நாயர்
113. நீரும் நெருப்பும் - 1971 - நியூ மணி ஜே. சினி புரொடக்சன்ஸ் - பி. நீலகண்டன்
114. ஒரு தாய் மக்கள் - 1971 - நாஞ்சில் புரொடக்சன்ஸ் - பி. நீலகண்டன்
115. சங்கே முழங்கு - 1972 - வள்ளி பிலிம்ஸ் - பி. நீலகண்டன்
116. நல்ல நேரம் - 1972 - தேவர் பிலிம்ஸ் - எம்.ஏ. திருமுகம்
117. ராமன் தேடிய சீதை - 1972 - ஜெயந்தி பிலிம்ஸ் - பி. நீலகண்டன்
118. அன்னமிட்ட கை - 1972 - ராமசந்திரா புரொடக்சன்ஸ் - எம். கிருஷ்ணன்
119. நான் ஏன் பிறந்தேன் - 1972 - காமாட்சி ஏஜன்சிஸ் - எம். கிருஷ்ணன்
120. இதய வீணை - 1972 - உதயம் புரொடக்சன்ஸ் - கிருஷ்ணன், பஞ்சு
121. உலகம் சுற்றும் வாலிபன் - 1973 - எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் - எம்.ஜி.ஆர். - 203 நாட்கள்
122. பட்டிக்காட்டு பொன்னையா - 1973 - வசந்த் பிக்சர்ஸ் - பி.எஸ். ரங்கா
123. நேற்று இன்று நாளை - 1974 - அமல்ராஜ் பிலிம்ஸ் - பி. நீலகண்டன்
124. உரிமைக் குரல் - 1974 - சித்ரயுகா - சி.வி. ஸ்ரீதர்
125. சிரித்து வாழவேண்டும் - 1974 - உதயம் புரொடக்சன்ஸ் - எஸ்.எஸ். பாலன்
126. நினைத்ததை முடிப்பவன் - 1974 - ஓரியண்டல் பிக்சர்ஸ் - பி. நீலகண்டன்
127. நாளை நமதே - 1975 - கஜேந்திரா பிலிம்ஸ் - கே.எஸ். சேதுமாதவன்
128. பல்லாண்டு வாழ்க - 1975 - உதயம் புரொடக்சன்ஸ் - கே. சங்கர்
129. இதயக்கனி - 1975 - சத்யா மூவிஸ் - ஏ. ஜெகந்நாதன்
130. நீதிக்கு தலை வணங்கு - 1976 - ஸ்ரீ உமையாம்பிகை புரொடக்சன்ஸ் - பி. நீலகண்டன்
131. உழைக்கும் கரங்கள் - 1976 - கே.சி. பிலிம்ஸ் - கே. சங்கர்
132. ஊருக்கு உழைப்பவன் - 1976 - வீனஸ் பிக்சர்ஸ் - எம். கிருஷ்ணன்
133. இன்று போல என்றும் வாழ்க - 1977 - சுப்பு புரொடக்சன்ஸ் - கே. சங்கர்
134. நவரத்னம் - 1977 - சி.என்.வி. மூவிஸ் - ஏ.பி. நாகராஜன்
135. மீனவ நண்பன் - 1977 - முத்து எண்டர்பிரைசஸ் - சி.வி. ஸ்ரீதர்
136. மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் - 1978 - சோலீஸ்வர் கம்பைன்ஸ் - பி. நீலகண்டன்


நன்றி: பல இணையதளங்கள். 
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

மக்கள் திலகம் எம்ஜிஆர்.... Empty Re: மக்கள் திலகம் எம்ஜிஆர்....

Post by krishnaamma Sat Apr 19, 2014 9:57 pm

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்
தமிழக முன்னாள் முதலமைச்சரும் அஇஅதிமுக-வின் நிறுவனருமான மறைந்த எம் ஜி ராமச்சந்திரனின் 96-வது பிறந்த நாள் ஜன-17 அன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, தமிழகம் முழுவதும் அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட அஇஅதிமுக ஏற்பாடுகளை செய்துள்ளது.


1917-ஆம் ஆண்டு ஜனவரி 17-ம் நாள் இலங்கையில் கண்டி அருகே உள்ள நாவலபிடியாவில் பிறந்தது இந்த அழியா தாமரை. தந்தை கோபால மேனன், தாயார் மருதூர் சத்யபாமா.


மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் என்ற இயற் பெயரைக் கொண்ட இந்த சந்திரன், பின்னாளில் எம்ஜிஆர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். அது தவிர மக்கள் திலகம், இதயக்கனி, பொன்மனச்செம்மல், புரட்சித் தலைவர் என்ற பட்டங்களும் உண்டு.


சிறுவயதில், குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துரைக்குச் சென்றார். திரைப்படத்துரையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி பிரபலமான நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்ஜிஆர் சிறந்த திரைப்பட தயாரிப்பாளராகவும், இயக்குநராவார் கூட இருந்திருக்கிறார்.

மண வாழ்க்கை....



எம்ஜிஆர், தங்கமணி என்ற கிராமத்துப் பெண்ணை முதலில் திருமணம் செய்தார். ஆனால் அவர் உடல்நலமின்றி சிறிது நாட்களிலேயே இறந்துவிட, பின்னர் சதானந்தவதி என்ற பெண்ணை மறுமணம் செய்தார். அவரும் காசநோயால் இறந்துவிட இறுதியாக நடிகை வி.என்.ஜானகியை மணம் முடித்தார்.


திரை வாழ்க்கை....


அமெரிக்க இயக்குநர் எல்லீஸ் டங்கன் 1935ல் முதன்முதலில் தமிழில் இயக்கிய சதிலீலாவதி என்ற படத்தில்தான் எம்ஜிஆர் முதன் முதலில் அறிமுகமானார்.
1974ம் ஆண்டு வெளியான ராஜகுமாரி என்ற படம்தான் எம்ஜிஆருக்கு மிகம்பெரும் வெற்றியை ஈட்டித்தந்தது.
ரிக் ஷாக்காரன் திரைப்படம் எம்ஜிஆருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை பெற்றுத் தந்தது.
எம்.ஜி.ஆரே தயாரித்து இயக்கிய முதல் படம் நடோ டி மன்னன் இந்த படம் 1956ம் ஆண்டு வெளியானது.


ரசிகர் மன்றங்கள்


எம்.ஜி.ஆருக்கென்று ரசிகர் பெருங்கூட்டம் உறுதியான உச்சக்கட்டத்தில் அகில உலக எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம் நிறுவப்பட்டது. குக்கிராமங்களில் கூட அதற்கு கிளைகள் தோன்றின. அவை ஒருங்கிணைக்கப்பட்டு அதற்கென முழுநேர ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.


சுதந்திரம் பெற்ற பின்னர், கிராமங்களில் மின்சார வசதி பெருகி சினிமா பிரவேசிக்கத் தொடங்கியபோது தாங்கள் கர்ண பரம்பரையாகக் கேட்டுவந்த ராமன், பீமன், அர்சுனன் ஆகியோருக்கு இணையான மாவீரராகவும் ஏழை மக்களின் நண்பராகவும் எம்.ஜி.ஆரைக் திரையில் கண்டு கிராம மக்கள் மெய் சிலிர்த்தார்கள்.
தங்கள் மனம் கவர்ந்த எம்.ஜி.ஆர்.திரைப்படத்தில் மரணமடைவதாகக் காட்டப்படுவதைக் கூட மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. திரைப்படத்தை நிஜவாழ்க்கையின் ஒருபகுதியாக அல்லது தாங்கள் வாழ விரும்பும் ஒரு சமுதாய நிகழ்வாகவே மக்கள் கருதத் தொடங்கினர்.


நடிகர் சங்கம்


சென்னையில் செயல்பட்டு வந்த நடிகர் சங்கம் என்ற அமைப்பை மாற்றி தென்னிந்திய நடிகர் சங்கம் உருவாக காரணமாக இருந்தவர் எம்ஜிஆர். என்பது குறிப்பிடத்தக்கது.


அரசியலில்.........


திரையுலகை விட்டு அரசியலுக்கு வந்தபோது, திரைப்படங்களுக்கு வெற்றி தேடித்தந்த தமிழக மக்கள் அவரை ஏமாற்றவில்லை. அண்ணாவின் இதயக் கனியானஎம்.ஜி.ஆருக்கு, அரசியலிலும் வெற்றிக் கனியை கொடுத்தார்கள்.


ஆரம்ப நாட்களில் எம்.ஜி.ஆர் காங்கிரஸ் ஆதரவாளராகவும் நேதாஜி பக்தராகவும் இருந்தார். ராஜகுமாரி, மந்திரிகுமாரி படப்பிடிப்பு நாட்களில் கருணாநிதியோடு கனிந்த நட்பு இவரை தி.மு.கழகத்திற்கு கொண்டு சென்றது.


1967 பொதுத்தேர்தலில் வெற்றிபெற அண்ணாதுரை தலைமையில் தி.மு.கழகம் ஆட்சி அமைத்தது.


1967 ம் ஆண்டு எம்ஜிஆர் முதன் முதலில் எம்.எல்.ஏ வானார்.

அண்ணாவின் மறைவுக்குப் பின், தி.மு.கழக ஆட்சியின் மீது சிறிது சிறிதாக அதிருப்தி வளரத் தொடங்குவதைக் கண்ட எம்.ஜி.ஆர், 1972ம் ஆண்டு அதிமுகவை உருவாக்கினார்.



தேவை எனத் தோன்றியபோது தனியாக சொந்தக் கட்சியைக் தொடங்கினார். அவர் வாழ்ந்த காலம் வரை அவரது கட்சி தோல்வியைச் சந்தித்ததில்லை.
 தொடர்ந்து 1977ம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்ஜிஆர் 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி இறக்கும் வரை முதலமைச்சராக இருந்தார்.


எம்.ஜி.ஆரின் அ.இ.அ.தி.மு.கழகத்தின் உறுப்பினராக 1982 இல் சேர்ந்த ஜெயலலிதாவை தனது கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக 1983 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். நியமனம் செய்தார்


பொன்மனச் செம்மல்


எம்.ஜி.ஆர் என்னும் பொன்மனச் செம்மல் வாழ்ந்த காலத்தில் அவர் ஆற்றிய அளப்பரிய பணிகள் இன்றும் பலராலும் நினைவுகூரத்தக்கதாக இருப்பதை எவராலும் மறக்க முடியாது


எல்லோரும் தமது சம்பாத்தியத்தை தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் மட்டுமே பயன்படத்தக்க விதத்தில் அமைத்துக் கொள்ளும்போது, இவர் மட்டும் தன் வருமானத்தின் பலனை அனைவருக்கும் அளித்தார். எல்லோருடனும் அன்பாகப் பழகும் தன்மையைக் கொண்டிருந்தார். பல திருமணங்களுக்கு நேரில் சென்று அக்குடும்பத்தவர்களுக்கு தேவையான தொகையைப் பரிசாக வழங்கிவந்தார். ஈகை அவரது மிகப் பெரியபலம்.
முக்கிய பிரபலங்கள் சிலர்., அளித்த பேட்டியில், பொன்மனச் செம்மல் பற்றி கூறியவை..........


பாடகர் கே ஜே யேசுதாஸ்


கேள்வி: மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனின் 'உரிமை குரல்' படத்தில் அவருக்காக நீங்கள் பின்னணி பாடிய அனுபவம் பற்றி...


ஒருநாள் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் என்னை அழைத்து (அதுவரை அவருக்கு பாடியவர் டிஎம். செளந்தரராஜன்) அவரின் 'உரிமைக்குரல்' படத்தில் 'விழியே கதை எழுது' என்கிற பாடலை பாடச் சொன்ன போது நான் அதிகளவில் சந்தோஷம் அடைந்தேன். உரிமைக்குரல் படத்தில் நான் அவருக்காக பாட போகிறேன் என்றவுடன் எனக்கு ஒரே சந்தோஷம். அப்பாடலை நான் பாட, மிகப்பிரபலமானது எனக்கு மேலும் சந்தோஷத்தை தந்தது.


எம்.ஜி.ஆர் ஒரு பெரிய மகான். அவர் என்னை அழைத்து பாட வைத்தது எனக்கு மிகவும் சந்தோஷமான சமாச்சாரம். அது என்னுடைய பாக்கியம் என்றே சொல்வேன். பின்னாளில் நான் அவரைப் பற்றி நிறைய தெரிந்துகொண்டேன். -சைக்கு அவர் படத்தில் அதிகளவில் முக்கியம் கொடுத்தது மட்டுமல்லாமல், கலைக்கு அவர் கொடுத்த முக்கியம் மகத்தானது.


அதுமட்டுமல்லாமல் பகைவர்களையும் நண்பர்களாக்கி கொள்ளும் குணம் உடையவர். உதாணரமாக சொல்லப்போனால் அன்று கண்ணதாசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் அரசியல் ரீதியாக சில கருத்துவேறுபாடுகள் -ருந்த காலத்தில், படத்தில் ஒரு பாடலுக்கு பலர் பாடல் வரி எழுதிக்கொடுத்தும் திருப்தியாகவில்லை.


கடைசியில் அவரே ஏன் நாம் கண்ணதாசனை அழைக்கக்கூடாது என்று கூறினார். எல்லோரும் தயங்க அதெல்லாம் -ருக்கட்டும்... அவர் அவர்தான்... அவரிடம் சென்று கதைக்கான சூழலை சொல்லி பாடல் எழுதி வாருங்கள் என்றார். கண்ணதாசனும் அதற்குரிய பாடல் வரியை எழுதி அனுப்பினார். 'ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ' என்ற பாடல்.. அங்கு பகை ஓடியது.. கலைதான் நின்றது... அவர் -சைக்காக பிறந்தவர். 10 டியூன் போட்டு காண்பித்தால் அதை அவர் செலக்ட் செய்வார்...


பிரபல நடிகர் சிவகுமார்........


கேள்வி: எம் ஜி ஆர் பற்றி நீங்க என்ன சொல்றீங்க?
சிவகுமார்: உலகத்தின் மிக உயர்ந்த குணம் என்னவென்றால், அன்பு காட்டுவது என்கிறார்கள். பிற மனிதனை நேசிப்பதைவிட உயர்ந்த விஷயம் எதுவும் பண்ண முடியாது என்று சொல்கிறார்கள். அதாவது காசு பணம் கொடுப்பது வேறு. துணி மணிகள் அளிப்பது வேறு. ஒருவரை பார்த்தவுடன் உடனடியாகச் செய்வது அன்பு செலுத்துவது. 


அதை செய்தவர் எம் ஜி ஆர். அவரை மிகப் பெரிய நடிகர் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் எல்லோரையும் நேசித்த மிகப் பெரிய மனிதர். தான-தர்மம் பண்ணுவதில் அவர் என்எஸ்கே-யின் நேரடி வாரிசு.


தானம் என்பது அவருக்கு அன்னை சத்யபாமாவின் தாய்பாலிலிருந்து வந்திருக்கும். இப்ப உங்க கையில ஒரு ரூபாய் இருக்கும்போது, பத்து பைசா தானம் பண்ண மனசு வரலைன்னா, நீ ஒரு லட்சம் ரூபாய் வைச்சிருக்கும்போது நூறு ரூபாய் தானம் பண்ணவே மாட்ட. இருக்கற காச தானம் பண்ணக்கூடிய மனோபாவம் வேணும். அந்த மனோபாவம் எம்ஜிஆர்-கிட்ட இருந்தது.


என்னுடைய அனுபவத்தை சொல்கிறேன். முதன் முதலில் சந்தித்தபோது, சரியாஸனம் கொடுத்து என்னையும் பக்கத்தில் உட்கார வைத்தார். பேசும்போது நீயும் சின்ன வயசில் தந்தையை இழந்து, தாயாரால் வளர்க்கப்பட்டவன் என்று கேள்விப்பட்டேன். நானும் அப்படித்தான் என்றார். எங்க அம்மா ரொம்ப பாசத்தோட வளர்த்தாங்க. நானும் எம்ஜி சக்கரபாணியும் ஒரு தடவை பர்மாவுக்கு போலாம்னு கப்பலில் புறப்பட்டபோது, எங்கம்மா கடற்கரையில் நின்று கொண்டு அழுதாங்க. நாங்க அழுதோம், அவங்க அழுதாங்க. இப்படியெல்லாம் நிறைய துன்பப் பட்டிருக்கோம். அப்படீன்னு சொன்னாரு.


அப்படிப்பட்ட ஆள் வந்து பொது மருத்துவமனையில் படுத்திருக்கும்போது தமிழ்நாடே வருத்தத்தில தள்ளாடிக்கிட்டு இருந்தபோது நான் மூணு முறை முயற்சி பண்ணி அவரை பார்க்க முடியல. நாலாவது முயற்சியில ஆர் எம் வீரப்பன் என்னை பார்க்கறதுக்கு அனுமதி அளித்தார். அண்ணே சம்பவம் நடந்தபோது நான் ஊருக்கு போயிருந்தேன். அதான் முன்னாடியே வர முடியல அப்படீன்னு சொன்னேன்.
"ஊருக்கு போயிருந்தியா? அம்மா... அம்மா செளக்கியமா..? அப்படின்னு விசாரித்தார். அந்த மனிதன் மூன்று குண்டு பாய்ந்து செத்துப் பிழைத்திருக்கிறார். எத்தனையோ சம்பவங்கள் நடந்துவிட்டன. அப்படியும், எங்கம்மாவை நினைவில் வைத்துக் கொண்டு கேட்கிறார் என்றால், அப்படியொரு தாய்ப்பற்று எம்ஜிஆருக்கு உண்டு.
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்
இந்தியாவின் மிக உயரிய விருதான "பாரத ரத்னா" விருது அவரது மறைவுக்கு பின் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் திலகம், இதயக்கனி, பொன்மனச்செம்மல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஒரு யுக புருசனாக வாழ்ந்து கோடானு கோடி மக்களின் அன்புக்குரியவராக இன்றும் அவர்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

மக்கள் திலகம் எம்ஜிஆர்.... Empty Re: மக்கள் திலகம் எம்ஜிஆர்....

Post by மாலதி Sun Apr 20, 2014 8:04 am

உண்மையான மக்கள் தலைவன்


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

மக்கள் திலகம் எம்ஜிஆர்.... Empty Re: மக்கள் திலகம் எம்ஜிஆர்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்ஜிஆர் எம்ஜிஆர் எம்ஜிஆர் என்கிற மாமனிதரின் பெயரை மறந்துவிட முடியுமா ? —
» அதிசயப்பிறவி..... மக்கள் திலகம்..MGR
» மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு சென்னையில் கோவில், நேற்று கும்பாபிஷேகம்
» டிசம்பர் 24: முன்னாள் முதல்வரும், மக்கள் திலகம் என்று அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் நினைவு தினம் இன்று..
» மக்கள் திலகம் கொண்டாடிய ஒரே விழா பொங்கல் விழா.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum